search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உறுப்பினர்"

    தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் தேர்தல் கல்விக்குழு உறுப்பினர்களுக்கான பயிற்சி கலெக்டர் சந்தீப் நந்தூரி தலைமையில் நடந்தது.
    தூத்துக்குடி:

    இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுரையின்படி, தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் பள்ளி மற்றும் கல்லூரிகளை சேர்ந்த தேர்தல் கல்விக் குழு உறுப்பினர்கள், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள், தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் தேர்தல் தொடர்பான அலுவலர்களுக்கு தேர்தல் கல்விக்குழு தொடர்பான பயிற்சி நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி தலைமை தாங்கினார்.

    அப்போது அவர் பேசியதாவது;-

    இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவு படி, தூத்துக்குடி மாவட்டத்தில் முதற்கட்டமாக 67 பள்ளி மற்றும் கல்லூரிகளை சேர்ந்த தேர்தல் கல்விக் குழு உறுப்பினர்கள், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு தேர்தல் தொடர்பான பயிற்சி வருகிற 25-ந் தேதி நடைபெற உள்ளது.

    18 வயது பூர்த்தியடைந்த இளைஞர்களை வாக்காளர் பட்டியலில் இணைக்க வேண்டும். வாக்காளர்களிடம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து, தேர்தல் கல்விக் குழு உறுப்பினர்கள், தொடர்பு அலுவலர்கள் உள்ளிட்ட அலுவலர்கள் போதிய விழிப்புணர்வு ஏற்படுத்திட வேண்டும். மேலும், கட்டுப்பாட்டு எந்திரம், வாக்குப்பதிவு எந்திரம் செயல்பாடுகளை தெரிந்து கொண்டு, இளைஞர்களுக்கு பயிற்சி வகுப்புகள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திட வேண்டும்.

    பள்ளி, கல்லூரிகளில் உள்ள தேர்தல் கல்விக்குழுவின் செயல்பாடுகளை தொடர்பு அலுவலர்கள், தேர்தல் நடத்தும் அலுவலர்கள் ஆகியோர் கண்காணித்து குழுவின் செயல்பாடுகளை ஆய்வு செய்ய வேண்டும். எதிர்வரும் தேர்தலில் தகுதிவாய்ந்த அனைவரையும் வாக்காளர் பட்டியலில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பல்வேறு விழிப்புணர்வுகள் மூலம் 100 சதவீதம் வாக்குப்பதிவினை செய்திட நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கு சம்பந்தப்பட்ட அலுவலர்கள் போதிய விழிப்புணர்வு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    நிகழ்ச்சியில், திருச்செந்தூர் உதவி கலெக்டர் கோவிந்தராசு, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) தியாகராஜன், தேர்தல் தாசில்தார் நாகராஜன், அனைத்து தேர்தல் நடத்தும் அலுவலர்கள், மாநகராட்சி உதவி பொறியாளர் ரூபன் சுரேஷ் பொன்னையா, உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள், பள்ளிக்கல்லூரி தேர்தல் குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர். 
    காவிரி மேலாண்மை ஆணையத்துக்கான அறிவிப்பு மத்திய அரசிதழில் வெளியிடப்பட்டதை அடுத்து, ஆணையத்துக்கான உறுப்பினர்களை நியமிக்குமாறு தமிழக அரசுக்கு மத்திய நீர்வளத்துறை கடிதம் எழுதியுள்ளது. #CauveryManagementAuthority
    புதுடெல்லி:

    காவிரி நதிநீர் பங்கீட்டு பிரச்சனையில் மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டு இருந்தது. அதன்படி, மத்திய அரசு செயல் திட்டத்தை தாக்கல் செய்தது. மத்திய அரசு தாக்கல் செய்த வரைவு திட்டத்தை சுப்ரீம் கோர்ட் ஏற்றுக்கொண்டது.

    இதனை உடனே அரசிதழில் வெளியிட வேண்டும், பருவமழை தொடங்குவதற்குள் மேலாண்மை ஆணையத்தை அமைக்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டது.

    இந்நிலையில், சுப்ரீம் கோர்ட் உத்தரவின்படி மத்திய அரசு அமைத்த காவிரி மேலாண்மை ஆணையம் குறித்த அறிவிப்பு நேற்று மாலை மத்திய அரசிதழில் வெளியிடப்பட்டது.

    காவிரி ஆணையம் அமைக்கும் உத்தரவில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கையெழுத்திட்டுள்ளார். மேலும், ஆணையத்தின் தற்காலிக தலைவராக நீர்வளத்துறை செயலாளர் யூ.பி.சிங் செயல்படுவார் என்றும் ஆணையத்திற்கு நிரந்தர தலைவர் நியமனம் குறித்து விரைவில் அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

    இந்நிலையில், காவிரி மேலாண்மை ஆணையத்துக்கான உறுப்பினர்களை நியமிக்குமாறு மத்திய நீர்வளத்துறை தமிழக அரசுக்கு கடிதம் அனுப்பியுள்ளது. நீர்வளத்துறை சார்ந்த நிர்வாக செயலர் அந்தஸ்தில் ஒருவரையும், காவிரி நீர் ஒழுங்காற்று குழுவிற்கு தலைமை பொறியாளர் அந்தஸ்தில் ஒருவரையும் உறுப்பினராக நியமிக்குமாறு கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    இதேபோல, கர்நாடகா, கேரளா மற்றும் புதுச்சேரி மாநில அரசுகளும் உறுப்பினர்களை நியமிக்குமாறு, மத்திய நீர்வளத்துறை அமைச்சகம் கடிதம் எழுதியுள்ளது. #CauveryManagementAuthority
    ×