search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வாகனங்கள்"

    • பள்ளி வாகனங்களை ஆய்வு செய்ய சிறப்பு முகாமை போக்குவரத்துதுறை நடத்தியது.
    • பஸ்கள், மினி பஸ்கள், வேன்கள் என 300-க்கும் மேற்பட்ட வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டது.

    புதுச்சேரி:

    புதுவையில் கோடை விடுமுறை முடிந்து நாளை மறுநாள் பள்ளிகள் திறக்கப்படுகிறது.

    இதையொட்டி பள்ளி வாகனங்களை ஆய்வு செய்ய சிறப்பு முகாமை போக்குவரத்துதுறை நடத்தியது. மேட்டுப்பாளையம் கனரக ஊர்தி முனையத்தில் 2 நாட்களாக முகாம் நடந்தது.

    முகாமில் பல்வேறு கல்வி நிறுவனங்களை சேர்ந்த மாணவர்களை ஏற்றிச் செல்லும் பஸ்கள், மினி பஸ்கள், வேன்கள் என 300-க்கும் மேற்பட்ட வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டது.

    இதில் வாகனங்களில் ஐகோர்ட்டு வகுத்துள்ள விதிமுறைகள் பின்பற்றப்படுகிறதா? வாகனங்கள் முறையாக பராமரிக்கப் பட்டுள்ளதா? மாணவர்களின் பயணத்துக்கு பாதுகாப்பாக உள்ளதா? என போக்குவரத்து ஆணையர் சிவக்குமார் தலைமையில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

    2 நாள் ஆய்வில் 273 வாகனங்களுக்கு அனுமதிக்கான மஞ்சள் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டது. 185 வாகனங்களில் ஜி.பி.எஸ். கருவி, முதலுதவி பெட்டி மற்றும் சரியான பராமரிப்பு இல்லாததால் அனுமதி அளிக்கப்படவில்லை.

    இந்த வாகனங்களில் குறைகளை நீக்கி மீண்டும் ஒரு வாரத்துக்குள் அனுமதி பெற வேண்டும். இல்லாவிட்டால் அனுமதி பெறாத வாகனங்கள் பெர்மிட் முடக்கப்படும் என அதிகாரிகள் எச்சரித்தனர்.

    • நடவடிக்கை எடுப்பதற்காக 7 சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டது.
    • குமரியில் ஒரே மாதத்தில் 109 வாகனங்கள் பறிமுதல் ரூ.42 லட்சம் அபராதம் வசூல்

    கன்னியாகுமரி:

    குமரி மாவட்டத்தில் விதிமுறை மீறி கனிமங்கள் ஏற்றிச்செல்லும் வாகனங்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்காக 7 சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டது.

    31-ந்தேதி வரை தனி தாசில்தார்கள் தலைமை யிலான 7 சிறப்பு குழுவினரால் மாவட்டம் முழுவதும் திடீர் சோதனை மேற் கொள்ளப்பட்டது. மொத்தம் 273 வாகனங்களை சோதனை செய்ததில் 29 கனரக வாகனங்களில் அனுமதிக்கப்பட்ட அளவிற்கும் கூடுதலாக கனிமங்கள் ஏற்றப்பட்டிருந்தது கண்டறியப்பட்டதால் அவை கைப்பற்றப்பட்டு நாகர்கோவில் மற்றும் மார்த்தாண்டம் வட்டார போக்குவரத்து அலுவலர்களிடம் இருந்து அபராத நடவடிக்கை எடுக்க ஒப்படைக்கப்பட்டது.

    கனிமவளத்துறை துணை இயக்குநர் தலைமையிலான மதுரை மண்டல பறக்கும் படையினர் மே 1-ந்தேதி முதல் 31-ந்தேதி வரை மாவட்டத்தில் பல பகுதிகளிலும் கனிமங்கள் ஏற்றி சென்ற 195 வாகனங்களை சோதனை செய்ததில் 41 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு வட்டார போக்குவரத்து அலுவலர்களி டம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

    உரிய அனுமதி சீட்டு இல்லாமல் சட்டவிரோதமாக கனிமங்கள் எடுத்து சென்ற 9 வாகனங்கள் போலீசாரால் கைப்பற்றப்பட்டு தொடர்புடைய நபர்கள் மீது தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் அனுமதிக்கப்பட்ட அளவிற்கு கூடுதலாக கனிமங்கள் எடுத்து சென்ற 27 வாகனங்கள் போலீசாரால் கைப்பற்றப்பட்டு அபராத நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    அந்த வகையில் மாவட் டத்தில் கடந்த ஒரு மாத காலத்தில் காவல் துறை வாயிலாக 40 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு ரூ.10 லட்சத்து 47 ஆயிரத்து 710-ம், மதுரை மண்டல பறக்கும் படை வாயிலாக 40 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு ரூ.17 லட்சத்து 41 ஆயிரம், தனி தாசில்தார்கள் தலைமையிலான சிறப்பு குழு வாயிலாக 29 வாகனங்கள் என மொத்தம் 109 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு ரூ.14 லட்சத்து 17 ஆயிரம் என்று மொத்தம் ரூ.42 லட்சத்து 5 ஆயிரத்து 710 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என்று கலெக்டர் ஸ்ரீதர் தெரிவித்துள்ளார்.

    • அதிகாரிகளும், போலீசாரும் நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை
    • குமரி மாவட்டத்தில் உள்ள வளங்கள் பாதிக்கப்படுகிறது

    நாகர்கோவில் :

    குமரி மாவட்டத்தில் இருந்து கேரளாவுக்கு தினமும் 500-க்கும் மேற்பட்ட கனரக வாக னங்களில் கனிம வளங்கள் கடத்தப்படுவதாக புகார்கள் உள்ளன. படந்தாலுமூடு, கோழிவிளை, சூழால் ஆகிய சோதனை சாவடிகள் வழியாகத்தான் இந்த கனரக வாகனங்கள் செல்கின்றன.

    அதிக பாரத்துடன் செல்லும் வாகனங்களால் சாலைகள் பெரும் அளவில் சேதம் அடைந்துள்ளன. இதனை தொடர்ந்து கடத்தல் வாகனங்களை கட்டுப்படுத்த சமூக ஆர்வலர்கள் வலி யுறுத்தினர். இதனை தொடர்ந்து கனிம வளங் களை கடத்தும் வாகனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் எச்சரிக்கை விடுத்தார். இருப்பினும் கடத்தல் சம்பவங்கள் தொடர் கதையாகவே உள்ளது.

    தற்போது கனரக வாக னங்களில் கனிம வளங்களை கேரளாவுக்கு கடத்துவதற்கு மிகவும் சுலபமாக பைபாஸ் ரோடு கிடைத்திருக்கிறது. அதாவது படந்தாலுமூடு சோதனை சாவடியை தாண்டி கோழிவிளை சோதனை சாவடி வழியாக செங்கவிளை வந்து 4 வழி சாலை வழியாக கேரளா வுக்கு கனிம வளங்கள் கடத்தப்படுகிறது. இது, தமிழ்நாடு-கேரளா எல்லை பகுதி் என்பதால் சுலபமாக கேரளாவுக்கு கடத்துவதற்கு வசதியாக இருக்கிறது.

    இதனால் குமரி மாவட்டத்தில் உள்ள வளங்கள் பாதிக்கப்படுகிறது. காவல் துறையினர் சோதனை சாவடியில் பணியில் இருக்கும் போது கனரக வாகனங்களில் கனிம வளங்கள் ஏற்றிக்கொண்டு வந்தாலும் அவர்கள் கை கட்டி வேடிக்கைதான் பார்த்துக் கொண்டிருக் கிறார்கள் என பொது மக்களும், சமூக ஆர்வ லர்களும் வேதனை தெரி விக்கின்றனர்.

    இதனை விடுத்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

    • காஞ்சிபுரத்தில் கோவில்கள் அருகே வாகனங்களை நிறுத்தும் வசதி உள்ள இடங்களை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
    • கோவில் அருகிலேயே வாகனங்களை நிறுத்த இடம் தேர்வு செய்து இருப்பது வரவேற்கத்தக்கது.

    காஞ்சிபுரம்:

    கோவில் நகரமான காஞ்சிபுரத்தில் பிரசித்தி பெற்ற காமாட்சி அம்மன், வரதராஜ பெருமாள்கோவில், உலகலந்த பெருமாள் கோவில், வழக்கறுத்தீஸ்வரர்கோவில், ஏகாம்பரநாதர் கோவில், கைலாசநாதர் கோவில், குமரகோட்டம் முருகன்கோவில் உள்ளிட்ட சிறப்பு பெற்ற தலங்கள் உள்ளன. தினந்தோறும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்கிறார்கள்.

    இந்த கோவில்கள் அருகே பக்தர்களின் வாகனங்களை நிறுத்த போதிய இடவசதி இல்லை. இதனால் கோவில் திருவிழாக்கள் மற்றும் முக்கிய நாட்களில் பக்தர்கள் கூட்டம் அதிகம் வரும்போது வாகனங்களை நிறுத்த முடியாத நிலை நீடித்து வருகிறது. மேலும் பக்தர்கள் சாலையோரங்களில் வாகனங்களை நிறுத்துவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது. இதைத்தொடர்ந்து கோவில்கள் அருகேயே பக்தர்களின் வாகனங்களை தனியாக நிறுத்த இடம் அமைக்க வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது.

    இதைத்தொடர்ந்து காஞ்சிபுரத்தில் கோவில்கள் அருகே வாகனங்களை நிறுத்தும் வசதி உள்ள இடங்களை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். தற்போது வாகனம் நிறுத்தும் இடங்களை கண்டறிந்து தேர்வு செய்து உள்ளனர்.

    வரதராஜப் பெருமாள் கோவிலின் உள்பகுதியில் உள்ள இடம், நகரேஸ்வரர் கோவிலுக்குச் சொந்தமான மைதானம், உலகளந்த பெருமாள் கோவில் பின்புறம் உள்ள மைதானம், ஒலி முகமதுபேட்டையில் உள்ள இடங்கள் வாகனங்களை நிறுத்த தேர்வு செய்யப்பட்டுள்ளன. இதில் வரதராஜப் பெருமாள் கோவிலில் உள்ள தோட்டத்தை சுத்தம் செய்யும் பணி தொடங்கி உள்ளது. மற்ற இடங்களிலும் பணி விரைவில் தொடங்கும்.

    இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறும்போது, கோவில் நகரமான காஞ்சிபுரத்திற்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்வதால், வாகனங்களை நிறுத்த போதிய இட வசதி இல்லாதது பெரும் பிரச்னையாக இருந்தது. சாலையோரங்களில் வாகனங்களை நிறுத்துவதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. எனவே தற்போது கோவில் அருகிலேயே பக்தர்களின் வாகனங்களை நிறுத்த இடம் தேர்வு செய்யப்பட்டு உள்ளது. இதனால் காஞ்சிபுரத்தில் இனி நெரிசல் குறையும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதுகுறித்து பக்தர்கள் கூறும்போது, கோவில் அருகிலேயே வாகனங்களை நிறுத்த இடம் தேர்வு செய்து இருப்பது வரவேற்கத்தக்கது. நீண்டநாள் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டு உள்ளது. ஒலி முகமதுபேட்டையில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு வாகன நிறுத்துமிடம் திறக்கப்பட்டது. இங்கு 250 வாகனங்கள் மட்டுமே நிறுத்த முடியும். இங்கு வாகனங்களை நிறுத்திவிட்டு, பக்தர்கள் நீண்ட தூரம் நகருக்குள் செல்ல வேண்டிய நிலை உள்ளது என்றனர்.

    • உடுமலை நெடுஞ்சாலை சாலை போக்குவரத்திற்கு முக்கிய பங்கு வகித்து வருகிறது.
    • சாலையை ஆக்கிரமிப்பு செய்து கார், பைக் உள்ளிட்ட வாகனங்களை நிறுத்தி விடுகின்றனர்.

    உடுமலை :

    உடுமலை நகராட்சிக்கு உட்பட்ட பிரதான சாலைகளில் பொள்ளாச்சி- உடுமலை நெடுஞ்சாலை சாலை போக்குவரத்திற்கு முக்கிய பங்கு வகித்து வருகிறது. இந்த சாலையின் இரண்டு புறங்களிலும் பல்வேறு தரப்பட்ட கடைகள், அலுவலகங்கள், வணிக வளாகங்கள் இயங்கி வருகிறது.

    ஒருவழிப்பாதையான இந்த சாலையின் வழியாக கோவை, பொள்ளாச்சி, ஆனைமலை, கேரளா, திருமூர்த்தி மலை, அமராவதி, மூணாறு மற்றும் சுற்றுப்புற கிராமங்களுக்கு வாகனங்கள் செல்கின்றது. இதனால் பொள்ளாச்சி- உடுமலை சாலை எப்போதும் பரபரப்பும் வாகன நெருக்கமும் நிறைந்தே காணப்படும். இந்த சூழலில் சாலையில் ஓரத்தில் அமைந்துள்ள கடைகளுக்கு வருகை தருகின்ற பொதுமக்கள் சாலையை ஆக்கிரமிப்பு செய்து கார், பைக் உள்ளிட்ட வாகனங்களை நிறுத்தி விடுகின்றனர். இதனால் சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில்: - பரபரப்பு நிறைந்த உடுமலை- பொள்ளாச்சி சாலையை பகுதி அளவுக்கு கார், பைக் உள்ளிட்ட வாகனங்கள் ஆக்கிரமித்து வருகிறது. இந்த சாலையின் இரண்டு புறங்களிலும் அமைந்துள்ள கடைகளுக்கு வருகின்ற பொதுமக்கள் வாகனங்களை நிறுத்தி வருகின்றனர். பார்க்கிங் வசதி செய்யப்படாமல் வணிக வளாகங்கள் கட்டப்பட்டதே அதற்கு காரணமாகும். கட்டிட கட்டுமான பணிகளின் போது நகராட்சி நிர்வாகம் உரிய முறையில் ஆய்வு செய்து இருந்தால் அதன் உரிமையாளர்கள் பார்க்கிங் வசதியுடன் கட்டிடங்களை கட்டி இருப்பார்கள். அனுமதி பெறுவதற்கு வரும் போதாவது அதிகாரிகள் ஆய்வு செய்திருக்க வேண்டும். அதிகாரிகளின் அலட்சியம் காரணமாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருவதுடன் பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் பாதிப்புக்கு உள்ளாகி வருகிறார்கள். அது மட்டுமின்றி நோயாளிகளை ஏற்றிக் கொண்டு செல்லும் அவசரகால ஆம்புலன்ஸ் சேவை பாதிக்கப்படும் சூழலும் உள்ளது.

    போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண்பதற்கும் அதிகாரிகள் முன்வருவதில்லை.எனவே பொள்ளாச்சி- உடுமலை சாலையில் போலீசார் ரோந்து சென்று வாகனங்களை நிறுத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அது மட்டும் இன்றி சாலையின் இரு புறங்களிலும் கட்டப்பட்டுள்ள வணிக வளாகங்களில் பார்க்கிங் வசதி ஏற்படுத்துமாறு அதன் உரிமையாளர்களுக்கு அறிவுறுத்த வேண்டும் என்று தெரிவித்தனர்.

    • சாலை விரிவாக்கம் செய்யப்பட்டும் சாலைகளில் போதிய இடவசதி இன்றி உள்ளது.
    • டீக்கடை முன்பு வாகனங்கள் தாறுமாறாக நிறுத்தப்படுகின்றன.

    பல்லடம் :

    பல்லடம் போலீஸ் நிலையம் எதிரே தாறுமாறாக நிறுத்தப்படும் வாகனங்களால் விபத்துக்கள் அபாயம் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள்,சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர். இது குறித்து பொதுமக்கள் கூறியதாவது:- பல்லடத்தில் தற்போது சாலை விரிவாக்கம் செய்யப்பட்டு சாலைகளில் போதிய இடவசதி இன்றி உள்ளது. இந்த நிலையில் சாலைகளில் தாறுமாறாக நிறுத்தப்படும் வாகனங்களால் விபத்துக்கள் நேரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக போலீஸ் நிலையம் எதிரே அமைந்துள்ள டீக்கடை முன்பு வாகனங்கள் தாறுமாறாக நிறுத்தப்படுகின்றன.

    இதனால் விபத்துக்கள் ஏற்படும் அபாயம் உள்ளது .எனவே தாறுமாறாக நிறுத்தப்படும் வாகனங்களை ஒழுங்குபடுத்தி விபத்துக்கள் ஏற்படாத வண்ணம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • வாகன ஆய்வாளர் மீனாகுமாரி மேட்டூரில் பல்வேறு இடங்க ளில் வாகன தணிக்கையில் ஈடுபட்டார்.
    • தகுதிச் சான்றிதழ் பெறாமலும், இன்சூரன்ஸ் இல்லாமலும் இயக்கப்பட்ட 7 சரக்கு வாகனங்களை கண்டறிந்து அந்த வாகனங்களை பறிமுதல் செய்தார்.

    மேட்டூர்:

    சேலம் மாவட்டம் மேட்டூர் வட்டார போக்கு வரத்து அலுவலர் பாஸ்க ரன் உத்தரவின்பேரில், மேட்டூர் மோட்டார் வாகன ஆய்வாளர் மீனாகுமாரி மேட்டூரில் பல்வேறு இடங்க ளில் வாகன தணிக்கையில் ஈடுபட்டார். அப்போது, வாகனத்திற்கு உரிய வரி செலுத்தாமலும், தகுதிச் சான்றிதழ் பெறாமலும், இன்சூரன்ஸ் இல்லாமலும் இயக்கப்பட்ட 7 சரக்கு வாகனங்களை கண்டறிந்து அந்த வாகனங்களை பறிமுதல் செய்தார்.உரிய ஆவணமின்றி இயக்கப்பட்ட

    7 சரக்கு வாகனங்கள் பறிமுதல்

    • கடலுார் மாவட்டத்தில் மதுபான கடத்தலுக்கு பயன்படுத்தபட்ட மொத்தம் 50 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
    • கடலூர் புதுநகர் போலீஸ் நிலைய வளாகத்தில் மதுவிலக்கு போலீசார் மற்றும் மதுவிலக்கு துறையினர் மூலம் ஏலம் விடப்பட்டது.

    கடலூர்:

    கடலுார் மாவட்டத்தில் உள்ள தாலுக்கா போலீஸ் நிலையங்கள் மற்றும் மதுவிலக்கு அமல்பிரிவில் இருந்து மதுவிலக்கு சம்மந்தமாக பதிவு செய்யபட்ட வழக்கில், மதுபான கடத்தலுக்கு பயன்படுத்தபட்ட நான்கு சக்கர வாகனங்கள்8, மூன்றுச்சக்கர வாகங்கள் 4, மற்றும் இரண்டு சக்கர வாகனங்கள்38 என மொத்தம் 50 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த 50 வாகனங்களையும் அரசுக்கு ஆதாயம் வரும் பொருட்டு கடலூர் மாவட்ட கலெக்டர் உத்தரவின்படி இன்று (4 ந்தேதி) காலையில் கடலூர் புதுநகர் போலீஸ் நிலைய வளாகத்தில் மதுவிலக்கு போலீசார் மற்றும் மதுவிலக்கு துறையினர் மூலம் ஏலம் விடப்பட்டது. ஏராளமான வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் பொது ஏலத்தில் கலந்து கொண்டனர். பின்னர் தங்களுக்கு தேவையான வாகனங்களை ஏலம் மூலமாக எடுத்தனர். தொடர்ந்து ஏலம் நடைபெற்று வருகிறது.

    • டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி தாறுமாறாக ஓடத்தொடங்கியது.
    • வாகன ஓட்டிகள் அங்கிருந்து அலறியடித்து ஓடினர்.

    திருப்பூர் :

    திருப்பூரின் முக்கிய சாலையாக குமரன் சாலை உள்ளது. திருப்பூர் பழைய பஸ் நிலையம், காங்கயம் ரோடு, தாராபுரம் ரோடு உள்பட பல்வேறு பகுதிகளுக்கு செல்ல இந்த வழியாகத்தான் வாகனங்கள் செல்ல வேண்டும். இதனால் திருப்பூர் அந்த சாலை எப்போதும் போக்குவரத்து நெரிசல் நிறைந்து பரபரப்பாக காணப்படும்.

    தாறுமாறாக ஓடிய லாரி : இந்தநிலையில் இன்று மதியம் 12-45 மணியளவில் விறகுகளை ஏற்றிக்கொண்டு பழைய பஸ் நிலையம் நோக்கி லாரி ஒன்று வந்தது. திருப்பூர் குமரன் சாலை வழியாக வரும் போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி தாறுமாறாக ஓடத்தொடங்கியது. அப்போது முன்னால் சென்ற வாகன ஓட்டிகள் மீது மோதியது. இதனால் அதிர்ச்சியடைந்த வாகன ஓட்டிகள் அங்கிருந்து அலறியடித்து ஓடினர். டிரைவர் லாரியை நிறுத்த முயன்றும் முடியவில்லை.

    இதனால் டிரைவர் லாரியை சாலையோரமாக திருப்பிய போது அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 10க்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிள்கள், 5க்கும் மேற்பட்ட கார்கள் மீது மோதியது. பின்னர் அங்குள்ள டிரான்ஸ்பார்மரில் மோதியதுடன் அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த வாகன ஓட்டிகள் மீதும் மோதியது.

    ஒருவர் பலி : இதில் ஒருவர் லாரியின் அடியில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்றொருவர் பலத்த காயமடைந்து உயிருக்கு போராடினார். மேலும் இந்த விபத்தில் 10க்கும் மேற்பட்டோர் காய மடைந்தனர்.

    இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்த தகவல் அறிந்ததும் திருப்பூர் வடக்கு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் காயமடைந்த அனைவரையும் மீட்டு சிகிச்சைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    விபத்து காரணமாக திருப்பூர் குமரன் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. விபத்துக்கான காரணம் குறித்து லாரி டிரைவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது பிரேக் பிடிக்காததன் காரணமாக டிரைவர் லாரியை தாறுமாறாக ஓட்டியதாக தெரிவித்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வாகனங்கள் சேதம் :லாரி மோதியதில் குமரன் சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 10 மோட்டார் சைக்கிள்கள், 10க்கும் மேற்பட்ட கார்கள் சேதமடைந்தன. சேதமடைந்த மோட்டார் சைக்கிள்கள் சாலையில் சிதறி கிடந்தன. அதனை போலீசார் அங்கிருந்து அப்புறப்படுத்தி போக்குவரத்தையும் சீர் செய்தனர்.

    சம்பவ இடத்திற்கு மேயர் தினேஷ்குமார், செல்வராஜ் எம்.எல்.ஏ., ஆகியோர் சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும் விபத்தில் காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க தேவையான ஏற்பாடுகளை செய்தனர்.

    திருப்பூர் குமரன் சாலையில் அடிக்கடி விபத்து நடந்து வருகிறது. போக்குவரத்து நெரிசலும் நிறைந்து காணப்படுகிறது. எனவே இதனை தடுக்க போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

    • பரமத்திவேலூர் மோட்டார் வாகன ஆய்வாளர் சரவணன் ஆகியோர் கொண்ட குழுவினர் திடீர் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர்.
    • தனியார் கல்லூரி பஸ் உட்பட 5 வாகனங்களுக்கு தகுதி சான்று புதுப்பிக்காமலும், வாகன வரி செலுத்தாமலும், பொது‌சாலையில்‌ இயக்கப் பட்டது கண்டறியப்பட்டு அந்த வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா, ஜேடர்பாளையம் மற்றும் கபிலர்மலை பகுதிகளில் நாமக்கல் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் முருகன், உமா மகேஸ்வரி மற்றும் பரமத்திவேலூர் மோட்டார் வாகன ஆய்வாளர் சரவணன் ஆகியோர் கொண்ட குழுவினர் திடீர் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர்.

    அப்போது அந்த வழியாக வந்த அனைத்து வாகனங்களையும் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். இதில் தனியார் கல்லூரி பஸ் உட்பட 5 வாகனங்களுக்கு தகுதி சான்று புதுப்பிக்காமலும், வாகன வரி செலுத்தாமலும், பொதுசாலையில் இயக்கப் பட்டது கண்டறியப்பட்டு அந்த வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

    மேலும் சொந்த பயன்பாட்டுக்கு பயன்படுத்தி வரும் வாகனங்களை, பலர் வாடகை வாகனங்களாக இயக்குவதாக மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா சிங்கிடம் அளிக்கப்பட்ட புகார் மனு அடிப்படையிலும் சிறப்பு தணிக்கை மேற்கொள்ளப் பட்டது.

    இதே போல் திடீர் ஆய்வு நடத்தி வரி ஏய்ப்பு செய்யும் வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என மோட்டார் வாகன ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.

    • ஏலம் எடுக்க விருப்பம் உள்ளவர்கள் சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையங்களுக்கு சென்று அந்த வாகனங்களை பார்வையிடலாம்.
    • மே 17-ந் தேதி காலை 10 மணிக்குள் ஆதார் அடையாள அட்டையுடன் ரூ.5 ஆயிரம் முன் வைப்புத் தொகை செலுத்தி வாகனத்தை பெற்றுக்கொள்ளலாம்.

     காங்கயம்:

    காங்கயம் போலீஸ் நிலையம் சார்பில் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:-

    காங்கயம் காவல் உட்கோட்டத்திற்குப்பட்ட காங்கயம் மற்றும் வெள்ளகோவில் போலீஸ் நிலையங்களில் பல்வேறு வழக்குகளில் பதிவு செய்யப்பட்ட வாகனங்கள் போலீஸ் நிலையங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

    வழக்குகள் தொடர்பாக மொத்தம் 79 இருசக்கர வாகனங்களுக்கு யாரும் உரிமை கோரப்படாததால் அவை காங்கயம் வட்ட நிர்வாக நடுவர் மற்றும் தாசில்தாரால் வருகிற மே 17-ந் தேதி காலை 11 மணிக்கு காங்கயம் போலீஸ் நிலைய வளாகத்தில் பொது இடத்தில் ஏலம் விடப்படும் என அறிவிக்கப்படுகிறது.

    ஏலம் எடுக்க விருப்பம் உள்ளவர்கள் சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையங்களுக்கு சென்று அந்த வாகனங்களை பார்வையிடலாம். காங்கயம் போலீஸ் நிலையத்தில் 62 வாகனங்களும், வெள்ளகோவில் போலீஸ் நிலையத்தில் 17 வாகனங்களும் என மொத்தம் 79 இருசக்கர வாகனங்கள் ஏலம் விடப்பட உள்ளன. ஏலம் எடுப்பவர்கள் அடுத்த மாதம் மே 17-ந் தேதி காலை 10 மணிக்குள் ஆதார் அடையாள அட்டையுடன் ரூ.5 ஆயிரம் முன் வைப்புத் தொகை செலுத்தி வாகனத்தை பெற்றுக்கொள்ளலாம்.மேலும் விவரங்களுக்கு சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையங்களை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • இந்த பகுதியில் காலை மற்றும் மாலை வேளைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
    • காவலரை பணியில் ஈடுபடுத்த வேண்டும் என்ற கோரிக்கை மக்களிடம் எழுந்துள்ளது.

    கோத்தகிரி,

    கோத்தகிரி டானிங்டன் எம்ஜிஆர் சிலை சதுக்கம் பகுதியில் உள்ள சாலைகள் கோத்தகிரி நகரின் முக்கிய பகுதியாக உள்ளது.

    கோத்தகிரியின் முக்கிய சுற்றுலா தலமான கொடநாடு காட்சி முனையை பார்ப்பதற்காக சமவெளிப்பகுதியில் இருந்து சுற்றுலா பயணிகள் ஏராளமான வாகனங்களில் வருகின்றனர்.

    அவ்வாறு வரும் வாகனங்கள் அனைத்தும் டானிங்டன் எம்ஜிஆர் சதுக்கம் பகுதிக்கு வந்து, அதன் பின்னரே பிரிந்து செல்ல வேண்டும்.

    இதனால் இந்த பகுதியில் எப்போதும் மக்கள் கூட்டமும் வாகன நெரிசலும் காணப்படும். இதுபோக உள்ளூர் மக்கள் பணி முடிந்து பஸ்சுக்காக காலை மற்றும் மாலை வேளைகளில் அதிக அளவில் திரண்டு நிற்பார்கள்.

    இப்படி எப்போதும் பரபரப்பாகவும், வாக னங்கள் சென்று கொண்டி ருக்கும் இந்த சாலையின் அருகே டீக்கடை, மளிகை கடை, உணவகங்களும் உள்ளன.

    இந்த கடைகளுக்கு வரும் பொதுமக்கள் தங்கள் வாகனங்களையே சாலை யிலேயே நிறுத்திவிட்டு செல்கின்றனர்.

    மேலும் இப்பகுதியில் தேநீர் அருந்த வரும் உள்ளூர் வாசிகள் தங்களின் நான்குசக்கர வாகனங்களை மணிக்கணக்கில் சாலையில் நிறுத்திவிட்டு வாகனத்தி னுள் அமர்ந்து தேநீர் அருந்திக்கொண்டு இருப் பர்.

    இதனால் இந்த பகுதியில் காலை மற்றும் மாலை வேளைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

    சில சமயம் பஸ் நிறுத்த இடமில்லாமல் சாலையின் நடுவிலேயே நிற்பதால் பின்னால் வரும் வாக னங்கள் ஒலி எழுப் பிக்கொண்டே இருக்கும். அப்போது பெண்கள் குழந்தைகள் பஸ்சில் ஏறுவதற்கு முன்பாகவே பஸ் நகர்ந்து விடும்.

    அந்த சமயங்களில் அவர்கள் கீழே விழுந்து விபத்தில் சிக்கும் அவல நிலையும் காணப்படுகிறது. இதுகுறித்து பல முறை சமூக ஆர்வலர்கள் கோத்த கிரி போக்குவரத்து போலீ சாருக்கு தகவல் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என தெரிகிறது. எனவே இனியாவது சம்மந்தப்பட்ட போக்கு வரத்து போலீசார் இந்த பகுதியில் நிரந்தரமாக ஒரு காவலரை பணியில் ஈடுப டுத்த வேண்டும் என்ற கோரிக்கை மக்களிடம் எழுந்துள்ளது.

    ×