search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிறுமி"

    • 16 வயது சிறுமி நேற்று வயிற்று வலி
    • ஆஸ்பத்திரிக்கு வந்து சிறுமியிடம் விசாரணை

    சேலம்:

    சேலம் அன்னதானப்பட்டி பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமி நேற்று வயிற்று வலி காரணமாக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது பரிசோதித்த டாக்டர்கள், சிறுமி 8 மாத கர்ப்பிணியாக இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். சிறிது நேரத்திலேயே சிறுமிக்கு ஆண் குழந்தை பிறந்தது.

    இதையடுத்து மருத்துவமனை நிர்வாகம் சார்பில் டவுன் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார், ஆஸ்பத்திரிக்கு வந்து சிறுமியிடம் விசாரணை நடத்தினர். அதில் பெற்றோரை இழந்த சிறுமி, உறவினர் ஒருவரை காதலித்து வந்துள்ளார். இந்த விவகாரம் உறவினர்களுக்கு தெரிந்த நிலையில் உரிய வயதை எட்டியவுடன் இருவருக்கும் திருமணம் செய்து வைப்பதாக கூறியுள்ளனர். இந்த நிலையில் காதலனுடன் நெருங்கி பழகியதில் சிறுமி கர்ப்பமடைந்து தெரியவந்தது.இதையடுத்து சிறுமியின் காதலன் மற்றும் உறவினர்களிடம் டவுன் மகளிர் போலீசாரும், மாவட்ட குழந்தைகள் நலக்குழும அதிகாரிகளும் விசாரணை நடத்தி வருகின்றனர். அதே சமயம் சிறுமிக்கும், அவரது குழந்தைக்கும் ஆஸ்பத்திரியில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    • 8-ம் வகுப்பு படித்து வரும் 13 வயது சிறுமி, அடிக்கடி பாட்டி வீட்டிற்கு சென்று வருவது வழக்கம்,
    • ஆனந்தராஜ் (வயது 30). தனியார் நிறுவன ஊழியர் சிறுமியை தனது வீட்டிற்குள் அழைத்து சென்று ஆசை வார்த்தை கூறி, அடிக்கடி உல்லாசமாக இருந்துள்ளார்.

    கடலூர்:

    ஸ்ரீமுஷ்ணம் அருகேயுள்ள கிராமத்தில் 13 வயது சிறுமி 8-ம் வகுப்பு படித்து வருகிறார். இவரது பாட்டி வீடு அதே ஊரில் உள்ள மற்றொரு வீதியில் உள்ளது. சிறுமி அடிக்கடி பாட்டி வீட்டிற்கு சென்று வருவது வழக்கம், பாட்டி வீட்டின் அருகில் வசிப்பவர் ஆனந்தராஜ் (வயது 30). தனியார் நிறுவன ஊழியர். இவருக்கு திருமணமாகி இரட்டை பெண் குழந்தைகள் உள்ளன. இவர் பாட்டி வீட்டிற்கு வரும் 13 வயது சிறுமியை அடிக்கடி அழைத்து நட்பாக பேசி வந்தார். 7 மாத கர்ப்பம் நாளடைவில் சிறுமியை தனது வீட்டிற்குள் அழைத்து சென்று ஆசை வார்த்தை கூறி, அடிக்கடி உல்லாசமாக இருந்துள்ளார். இதில் அச்சிறுமி கருவுற்றார். தான் கருவுற்றதை கூட அறியாத அச்சிறுமி தொடர்ந்து பள்ளிக்கு சென்று வந்தார். இந்நிலையில் அச்சிறுமி மயங்கி விழுந்தார். இதனால் பதறிப்போன அவரது பெற்றோர். சிறுமியை டாக்டரிடம் அழைத்து சென்றனர். அவரை பரிசோ தித்த டாக்டர், சிறுமி 7 மாத கர்ப்பமாக இருப்பதாக கூறினார். இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர், சிறுமியிடம் விசாரித்தனர். சிறுமி கொடுத்த தகவலி ன்படி, அவரது பெற்றோர் விருத்தாசலம் அனைத்து மகளிர் போலீசாரிடம் புகார் கொடுத்தனர். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் ரேவதி தலைமையிலான போலீசார் போக்சோ வழக்கு பதிவு செய்து ஆனந்தராஜை கைது செய்தனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர். இரட்டை பெண் குழந்தைகளுக்கு தந்தையாக உள்ள நபர், 13 வயது சிறுமியை 7 மாத கர்ப்பிணியாக்கிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • அதிகாரிகள் விடுதியில் தங்கி படிக்கிறாயா? என்று கேட்டபோது ஒப்புகொண்டு விடுதியில் தங்கி படிப்பதாக கூறினாள்.
    • காலில் ஊனமுற்ற விமலுக்கு அரசு உதவி கிடைக்க சேலம் மாவட்ட கலெக்டரை சந்தித்து மனு கொடுக்குமாறு வலியுறுத்தினார்.

    காடையாம்பட்டி:

    சேலம் மாவட்டம் காடையாம்பட்டி அருகே தும்பிப்பாடி ஊராட்சி முள்ளிசெட்டிப்பட்டி அருந்ததியர் காலனியை சேர்ந்தவர் விமல் (வயது 30). கூலி தொழிலாளி. இவரது மனைவி அஞ்சலை (28). இந்த தம்பதிக்கு 10 வயது மற்றும் 2 வயதில் 2 குழந்தைகள் உள்ளனர்.

    விமல் கட்டிட வேலை செய்து வந்தார். கடந்த 2 மாதங்களுக்கு முன்பு காலில் அடிபட்டு வேலைக்கு செல்ல முடியாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். இதனால் மனைவி அஞ்சலை, கரும்பாலையில் வேலைக்கு சென்று குடும்பம் நடத்தி வருகிறார்.

    இந்நிலையில் இவர்களது மூத்த மகள் தனது தந்தையும், தாயும் தன்னை அடித்து கொடுமை செய்வதாக கூறி, 10 வயது சிறுமி, வீட்டை விட்டு வெளியேறி அழுது கொண்டே பாட்டி வீடான பொட்டியபுரம் கிராமத்திற்கு வந்தாள். இதையறிந்த அப்பகுதி மக்கள் சிறுமியிடம் விசாரித்தபோது என்னை வீட்டுக்கு அனுப்பி விடாதீர்கள், தந்தை குடித்து விட்டு வந்து கால்களை கட்டிபோட்டு அடித்து கொடுமைபடுத்துகிறார் என கண்ணீர் விட்டு கதறி அழுதாள். மேலும் தன்னை பள்ளிக்கு அனுப்பாமல் தந்தை அடிப்பதாகவும், தாய் வீட்டு வேலை செய்யக்கூறி அடித்து கொடுமை செய்வதாகவும், அதனால் தன்னை சேலத்தில் உள்ள பாட்டி வீட்டில் விடுமாறு கூறினாள்.

    இதையடுத்து, அப்பகுதி மக்கள் சிறுமியின் உறவினர்களுக்கு தகவல் தெரிவித்து, சிறுமியை தாயுடன் அனுப்பி வைத்தனர். அப்போது சிறுமி, தனது தாயை கட்டிபிடித்துக்கொண்டு அம்மா, நான் வீட்டுக்கு வரமாட்டேன் என கதறி அழுதார். அப்போது தாய் , மகளின் கைகளை பிடித்து வீட்டுக்கு அழைத்து செல்ல முற்பட்டபோது, சாலையில் உட்கார்ந்து சிறுமி அழுது புரண்டாள். இனிமேல் அடிக்கமாட்டேன் என தாய் அஞ்சலை சமாதானப்படுத்தி வீட்டிற்கு அழைத்து சென்றார்.

    இந்த சம்பவம் குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானது. இதை தொடர்ந்து சேலம் மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு செல்வன், ஓமலூர் டி.எஸ்.பி. சங்கீதா, மாவட்ட குழந்தைகள் நல அலுவலர், சமூக நலத்துறை அதிகாரிகள் முள்ளி செட்டிப்பட்டி கிராமத்திற்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர்.

    அங்கு சிறுமியின் தந்தை விமல் நடக்க முடியாமல் படுக்கையில் இருந்தார். அவர், தன்னால் சுவற்றை பிடித்து எழுந்து நிற்க முடியும், தனியாக நடக்க முடியாது, எனது மகளை அடிக்கவில்லை, மகள் 5-ம் வகுப்பு படித்து வருகிறார், தற்போது பள்ளி விடுமுறை என்பதால் குழந்தையை பார்த்துக்கொண்டு, வீட்டில் சிறு சிறு வேலைகள் செய்து வந்ததாக அதிகாரிகளிடம் கூறினார். மேலும், மகள் அவ்வப்போது இப்படித்தான் ஏதாவது கூறிக்கொண்டு செல்வாள், பின்னர் வீட்டிற்கு வந்து விடுவாள் என தெரிவித்தார்.

    இது பற்றி அதிகாரிகள், சிறுமியிடம் கேட்டபோது, அடிக்கடி என்னை அடிப்பார்கள், வீட்டு வேலை செய்வேன், தனது தாய்க்கு சாப்பாடு கொண்டு செல்வேன் என கூறினாள். அப்போது அதிகாரிகள் விடுதியில் தங்கி படிக்கிறாயா? என்று கேட்டபோது ஒப்புகொண்டு விடுதியில் தங்கி படிப்பதாக கூறினாள்.

    இதையடுத்து பெற்றோரிடம் இனிமேல் சிறுமியை அடிக்க கூடாது, துன்புறுத்த கூடாது, சித்ரவதை செய்வதாக இனிமேல் புகார் வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரித்து, காலில் ஊனமுற்ற விமலுக்கு அரசு உதவி கிடைக்க சேலம் மாவட்ட கலெக்டரை சந்தித்து மனு கொடுக்குமாறு வலியுறுத்தி சேலம் வந்து செல்ல ரூ.500 உதவியும் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு வழங்கினார்.

    தொடர்ந்து சிறுமியை ஓமலூர் நகரில் விடுதியுடன் கூடிய பள்ளியில் 6-ம் வகுப்பு சேர்க்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

    • 17 வயது பள்ளி மாணவி, 12-ம் வகுப்பு தேர்வு எழுதி வீட்டில் இருந்து வருகிறார். இவர் வீட்டின் அருகே 16 வயது சிறுவன் குடியிருந்து வந்துள்ளார்
    • சிறுவன் மாணவியை திருமணம் செய்து கொள்வதாக கூறி பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.

    கடலூர்:

    கடலூரை சேர்ந்த 17 வயது பள்ளி மாணவி தற்போது 12-ம் வகுப்பு தேர்வு எழுதி வீட்டில் இருந்து வருகிறார். இவர் வீட்டின் அருகே கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு 16 வயது சிறுவன் குடியிருந்து வந்துள்ளார். இந்த நிலையில் பள்ளி மாணவி வீட்டில் தனியாக இருந்த போது சிறுவன் மாணவியை திருமணம் செய்து கொள்வதாக கூறி பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இந்த நிலையில் மாணவி உடல்நிலை சரியில்லை என உறவினர்களிடம் தெரிவித்ததை தொடர்ந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அப்போது 8 மாதம் கர்ப்பமாக இருந்து வருவதாக தெரிகிறது. இது குறித்து கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீசார் சிறுவன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • மதுரை அருகே சிறுமியை கர்ப்பமாக்கியவர் கைது செய்யப்பட்டார்.
    • இது தொடர்பாக மதுரை தெற்கு அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    மதுரை

    பழங்காநத்தம் நேரு நகர் முருகன் மகன் கார்த்தீசுவரன் (23). இவர் அதே பகுதியில் வசிக்கும் சிறுமியை திருமணம் செய்துள்ளார். அவர் சிறுமி என்பது தெரிந்தும் கட்டாயமாக வல்லுறவு செய்தார்.

    இதன் காரணமாக அந்த சிறுமி கர்ப்பமடை ந்தார். அவருக்கு மதுரை ஆஸ்பத்திரியில் குழந்தை பிறந்தது. இது தொடர்பாக மதுரை தெற்கு அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கார்த்தீசுவரனை கைது செய்தனர்.

    • மோட்டார் சைக்கிள் மீது கார் மோதியது. இதில் நவீன் உள்பட 4 பேரும் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தனர்.
    • குழந்தை பலியான சம்பவம் உறவினர்களிடம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    கன்னியாகுமரி :

    நாகர்கோவில் அருகே உள்ள ஈத்தாமொழி தெற்கு வள்ளியாவிளையை சேர்ந்தவர் ஆண்டி. இவரது மகன் நவீன் (வயது 23). என்ஜினீயரிங் மாணவரான இவர், கடந்த 30-ந்தேதி தனது உறவினர் ரமேஷின் மனைவி அஜிதா (37), அவரது மகள்கள் ரக்சனா (13), லாவனீஸ் (11) ஆகியோருடன் மோட்டார் சைக்கிளில் குளச்சல் பள்ளிமுக்கு பூங்காவுக்கு சென்றுள்ளார்.

    பின்னர் அங்கிருந்து வீட்டிற்கு திரும்பி வந்த போது, வெட்டுமடை பகுதியில் பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் மீது கார் மோதியது. இதில் நவீன் உள்பட 4 பேரும் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தனர்.

    அவர்களை அப்பகுதியினர் மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் சிறுமிகள் லாவனீஸ், ரக்சனா ஆகியோர் மேல் சிகிச்சைக்காக திருவனந்தபுரம் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். நவீன், அஜிதா குளச்சல் பகுதியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இந்நிலையில் திருவனந்தபுரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த சிறுமி ரக்சனா நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தாள். அவரது சகோதரி லாவனீசுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்தில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வந்த குழந்தை பலியான சம்பவம் உறவினர்களிடம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    விபத்து தொடர்பாக காரை ஓட்டி வந்த பாலப்பள்ளம் படுவூரை சேர்ந்த இனிகோ சகாய ராஜ் மீது குளச்சல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மோட்டார் சைக்கிளில் இருந்து இறங்கி வந்து சிறுமியிடம் தக்கலை செல்ல வழி கேட்டுள்ளார்
    • வழி சொல்லிக்கொண்டிருக்கும் போது கழுத்தில் கிடந்த 2 பவுன் தங்க சங்கிலியை பறித்துள்ளார்

    கன்னியாகுமரி :

    இரணியல் அருகே உள்ள கண்டன்விளையை அடுத்த சடையமங்கலம் இறுங்கன் விளாகத்துவீடு பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன், தொழிலாளி. இவருடைய 13 வயது மகள் நேற்று காலை 7.30 மணிக்கு பக்கத்தில் உள்ள வீட்டிற்கு பால் வாங்க நடந்து சென்றார். அப்போது எதிரே மோட்டார் சைக்கிளில் ஒரு வாலிபர் வந்துள்ளார். அவர், மோட்டார் சைக்கிளில் இருந்து இறங்கி வந்து சிறுமியிடம் தக்கலை செல்ல வழி கேட்டுள்ளார். சிறுமி வழி சொல்லிக்கொண்டிருக்கும் போது அந்த வாலிபர், சிறுமி கழுத்தில் கிடந்த 2 பவுன் தங்க சங்கிலியை பறித்துள்ளார். மேலும் சத்தம் போட்டால் கொலை செய்து விடுவேன் என மிரட்டி விட்டு மோட்டார் சைக்கிளில் தப்பிச்சென்று விட்டாராம்.

    சம்பவம் குறித்து சிறுமி, வீட்டில் தெரிவித்தார். இதனைத்தொடர்ந்து அவரது தந்தை மணிகண்டன், இரணியல் போலீசில் புகார் அளித்தார். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 13 வயது சிறுமியை திருமணம் செய்வதாக ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்ததாகத் தெரிகிறது.
    • சிறுமியின் பெற்றோா் கடந்த 2022ல் உடுமலை மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா்.

    திருப்பூர் :

    திருப்பூா் மாவட்டம், உடுமலை அமராவதி நகரைச் சோ்ந்தவா் கோகுலகண்ணன் (வயது 21). இவா் அதே பகுதியைச் சோ்ந்த 13 வயது சிறுமியை திருமணம் செய்வதாக ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்ததாகத் தெரிகிறது. இதனால் அந்த சிறுமி கா்ப்பமடைந்துள்ளாா். இதுகுறித்து சிறுமியின் பெற்றோா் கடந்த 2022ல் உடுமலை மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா்.

    இந்தப் புகாரின் பேரில் போக்சோ பிரிவின்கீழ் வழக்குப் பதிவு செய்த போலீசார் கோகுலகண்ணனை கைது செய்தனா். இந்த வழக்கானது திருப்பூா் மாவட்ட மகளிா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கின் மீதான இறுதிக்கட்ட விசாரணை நிறைவடைந்து நீதிபதி பாலு தீா்ப்பு வழங்கினாா். இதில், கோகுலகண்ணனுக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும் ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்தாா். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்கவும் பரிந்துரை செய்தாா். இந்த சிறுமிக்கு தற்போது குழந்தை உள்ளது குறிப்பிடத்தக்கது.

    • பண்ருட்டி அடுத்த பனப்பாக்கம் சேர்ந்த 17 வயது சிறுமி, பிளஸ்-2 படித்து முடித்து விட்டு கடலூரில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்ததார்.
    • பல இடங்களில் தேடியும் எங்கும் கிடைக்கா ததால் சிறுமியின் தாயார் புதுப்பே ட்டை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

    கடலூர்:

    பண்ருட்டி அடுத்த பனப்பாக்கம் சேர்ந்த 17 வயது சிறுமி, பிளஸ்-2 படித்து முடித்து விட்டு கடலூரில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்ததார். இவர் கடந்த 24-ந்தேதி வேலைக்கு சென்றவர் நள்ளிரவு வரை வீடு திரும்ப வில்லை. பல இடங்களில் தேடியும் எங்கும் கிடைக்கா ததால் சிறுமியின் தாயார் புதுப்பே ட்டை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.   புகாரில், அதே ஊரைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் அருணா ச்சலம் (24) என்பவர் கடத்தி சென்று விட்டதாக கூறியுள்ளார். இதுகுறித்து புதுப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெ க்டர் நந்தகுமார் வழக்கு பதிவு செய்து காணாமல் போன சிறுமியை தேடி வருகிறார்.

    • சிறுமியை திருமணம் செய்த வாலிபர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளது.
    • சிறுமி கர்ப்பமானார்.

    மேலூர்

    மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள உடன்பட்டியை சேர்ந்தவர் குமார்(வயது27), வெளிநாட்டில் வேலை பார்க்கிறார். ஒரு வரு டத்திற்கு முன்பு இவருக்கும், மாங்கு ளப்பட்டியை சேர்ந்த ஒரு சிறுமிக்கும் திருமணம் நடந்துள்ளது. இதைத்தொடர்ந்து சிறுமி கர்ப்பமானார். இந்த நிலையில் பிரசவத்திற்காக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

    அப்போது அவருக்கு 18 வயது பூர்த்தியாகமலேயே திருமணம் நடந்தது தெரியவந்தது. இதுகுறித்து டாக்டர்கள் கொட்டாம்பட்டி சமூகநல அலுவலர் பஞ்சு விற்கு தகவல் தெரிவித்தனர். அவர் மேற்கொண்ட விசார ணையில் சிறுமிக்கு குழந்தை திருமணம் செய்து வைத்தது தெரியவந்தது.

    இதையடுத்து மேலூர் மகளிர் காவல் நிலையத்தில் சிறுமிக்கு நடந்த திருமணம் குறித்து பஞ்சு புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் கவிதா, இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) சாந்தி சிறுமியை திருமணம் செய்த குமார், உடந்தையாக இருந்த தாய் சின்னம்மா, உறவினர் செல்வி ஆகியோர் மீது போக்சோவில் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ராட்சத அலையில் டாக்டர் ராஜாத்தி, சாய்கோபிகா சிக்கிக் கொண்டனர்.
    • உடனடியாக மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலத்திற்கு தினமும் ஏராளமானோர் சுற்றுலா வந்து செல்கின்றனர். இந்நிலையில் தமிழகத்தின் தஞ்சாவூரைச் சேர்ந்த 3 குடும்பத்தினர் சுற்றுலா வந்தனர்.

    கேரளாவின் பல்வேறு பகுதிகளுக்குச் சென்ற அவர்கள், நேற்று திருவனந்தபுரம் விழிஞ்சம் வந்தனர். அவர்கள் அங்குள்ள சுற்றுலா விடுதியில் தங்கி இருந்தனர். இந்த நிலையில் சுற்றுலா வந்த தஞ்சாவூரைச் சேர்ந்த டாக்டர் ராஜாத்தி (வயது 45) தனது உறவினர் மகள் சாய்கோபிகா (9) மற்றும் சிலருடன் கடற்கரையில் நடைபயிற்சி சென்றார்.

    அவர்கள் கடல் அலை யில் கால் நனைத்தபடி நடந்து சென்ற போது, ராட்சத அலை வந்தது. அந்த அலையில் டாக்டர் ராஜாத்தி, சாய்கோபிகா ஆகியோர் சிக்கிக் கொண்ட னர். அவர்களை அங் கிருந்தவர்கள் உடனடியாக மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு தீவிர சிகிச்சை அளித்தபோதும் பலனின்றி டாக்டர் ராஜாத்தி, சாய்கோபிகா பரிதாபமாக இறந்தனர். இந்த சம்பவம் சுற்றுலா வந்தவர்களிடம் சோகத்தை ஏற்படுத்தியது.

    • போக்சோ வழக்கில் சிறுமியின் தந்தைக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது.
    • ஆனந்தன் வச்சக்காரப்பட்டி போலீசில் புகார் செய்தார்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் பெத்துசெட்டிபட்டியை ேசர்ந்தவர் ஆனந்தன் (வயது44). இவருக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். இவரது மகள் பிளஸ்-2 முடித்து விட்டு வீட்டில் இருந்தார். இந்த நிலையில் கடந்த ஆண்டு ஏப்.28-ந்தேதி வீட்டில் இருந்து மாயமானார். இதுகுறித்து வச்சக்கா ரப்பட்டி போலீஸ் நிலையத்தில் ஆனந்தன் புகார் செய்திருந்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். அதில் சிவகாசி அருகே உள்ள புதுக்கோட்டையை சேர்ந்த தமிழரசன் (20) என்பவர் ஆனந்தன் மகளை கடத்தி சென்று திருமண ஆைச காட்டி பாலியல் பலாத்காரம் செய்து வந்தது தெரியவந்தது.

    போலீசார் சிறுமியை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர். மேலும் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து தமிழரசனை கைது செய்தனர். இதுகுறித்த வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் போக்சோ கோர்ட்டில் நடந்து வருகிறது. விசாரணையில் சாட்சியம் அளிப்பதற்காக ஆனந்தன் தனது மகளை அழைத்து சென்றுவிட்டு ஊருக்கு திரும்பி வந்தார். இந்த நிலையில் அவர் தனது வீட்டின் அருகே நின்று கொண்டிருந்தபோது, தமிழரசன் மற்றும் தனது நண்பர் வீரபாண்டியுடன் மோட்டார் சைக்கிளில் அங்கு வந்து வழக்கை வாபஸ் வாங்க கூறி ஆபாசமாக பேசி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

    இதுகுறித்து ஆனந்தன் வச்சக்காரப்பட்டி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×