search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 184225"

    • தங்கம், வெள்ளி, வெளிநாட்டு பணங்களும் குவிந்தன
    • உண்டியல்கள் அனைத்தும் 2 மாதங்களுக்கு ஒருமுறை திறந்து எண்ணப்படுவது வழக்கம்.

    கன்னியாகுமரி:

    உலகப்புகழ் பெற்ற கோவில்களில் கன்னியா குமரி பகவதி அம்மன் கோவிலும் ஒன்று.

    இந்தக் கோவில் வளாகத்துக்குள் மொத்தம் 17 நிரந்தர உண்டியல்கள் வைக்கப்பட்டுஉள்ளன. இந்த உண்டியல்கள் அனைத்தும் 2 மாதங்களுக்கு ஒருமுறை திறந்து எண்ணப்படுவது வழக்கம்.

    இது தவிர இந்த கோவிலின் வாடா விளக்கு மண்டபத்தில் வைக்கப்பட்டு உள்ள அன்னதான உண்டியல் மட்டும் மாதந்தோறும் திறந்து எண்ணப்பட்டுவருகிறது. ஆனால் இதில் நிரந்தர உண்டியல்கள் மட்டும் கடந்த 3மாதங்களாக திறந்து எண்ணப்படாமல் இருந்து வந்தது. இந்த நிலையில் 3மாதங்களுக்கு பிறகு கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் உள்ள 17 நிரந்தர உண்டியல்களும்நேற்று திறந்து எண்ணப்பட்டன.

    குமரி மாவட்ட திருக்கோவில்களின் இணை ஆணையர் ஞானசேகர், நாகர்கோவில் இந்து சமய அறநிலைய ஆட்சித் துறை உதவி ஆணையர் தங்கம், நாகர்கோவில் தேவசம் தொகுதி கோவில்களின் கண்காணிப்பாளரும் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் மேலாள ருமான ஆனந்த், இந்து சமய அறநிலைய ஆட்சித்துறை ஆய்வாளர்தர்மேந்திரா ஆகியோர் முன்னிலையில் திறந்து எண்ணப்பட்டது.

    இந்த உண்டியல் எண்ணும் பணி காலை 9 மணிக்கு தொடங்கியது.மாலை4மணி வரை நடந்தது. இந்த உண்டியல் எண்ணும் பணியில் குமரி மாவட்டத்தில்உள்ள திருக்கோவில் பணியா ளர்கள், மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி செவ்வாடை பெண் பக்தர்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாண வர்கள் ஈடுபட்டனர்.

    இதில் உண்டியல் மூலம் ரூ.28 லட்சத்து 39 ஆயித்து 163 ரொக்கபணம் வசூலாகி உள்ளது. இதுதவிர 11 கிராம் தங்கமும் 193 கிராம் 600 மில்லி கிராம் வெள்ளியும் மற்றும் வெளிநாட்டு பணமும் காணிக்கையாக வசூலாகிஉள்ளது. இது தவிர கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் வாடா விளக்கு மண்டபத்தில் வைக்கப்பட்டுள்ள அன்னதான திட்டத்துக்கான அன்னதான உண்டியலும் திறந்து என்னபட்டது.

    இந்த அன்னதான உண்டியல் மூலம் ரூ.1 லட்சத்து 58 ஆயிரத்து 866 வசூல் ஆகி உள்ளது. ஆக மொத்தம் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் உண்டியல் மூலம் ரூ.28 லட்சத்து 32 ஆயிரத்து 346 ரொக்க பணம் காணிக்கை யாக வசூல் ஆகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்க தாகும்.

    • சுற்றுலா பயணிகள் ஆச்சரியம்
    • பொங்கல் பண்டிகை அன்று சுற்றுலாப் பயணிகள் சிலையை பார்வையிட அனுமதிக்கப்படுவார்கள்

    கன்னியாகுமரி:

    சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் கடல் நடுவில் அமைந்து உள்ள பாறையில் 133 அடி உயர திருவள்ளுவர் சிலை எழுப்பப்பட்டுஉள்ளது.

    இந்த சிலையில் 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை பராமரிப்பு செய்யப்படுவது வழக்கம். அதன்படி தற்போது பராமரிப்புபணிகள் நடை பெற்றுவருகின்றன. இதன் ஒரு பகுதியாக சிலை முழுவதும் காகித கூழ் ஒட்டப்பட்டு வருகிறது. இதனால் எப்பொழுதும் கருப்பு நிறத்தில் காணப்படும் சிலை தற்போது வெள்ளை நிறத்தில் இருப்பதால் சுற்றுலா பயணிகள் மிகுந்த ஆச்சரியத்துடன் கண்டுகளிக்கின்றனர்.

    சிலையின் பராமரிப்பு பணி முடிவடைந்து வரு கின்ற பொங்கல் பண்டிகை அன்று சுற்றுலாப் பயணிகள் சிலையை பார்வையிட அனுமதிக்கப்படுவார்கள் என்று சுற்றுலாத்துறை வட்டாரங்கள் தெரிவிக் கின்றன.

    • கார்த்திகை தீபத்திருவிழாவை யொட்டி 6-ந்தேதி ஏற்றப்படுகிறது
    • சிறுவர்கள் இரவு நேரங்களில் சுக்குநாரி புல், தீப்பந்தங்கள் போன்றவைகளை கொளுத்தி விளையாடுவார்கள்.

    கன்னியாகுமரி:

    ஆண்டு தோறும் கார்த்திகைமாதம் கிருத்திகை நட்சத்திரத்தன்று கார்த்திகை தீபத்திருவிழா கொண்டாடப்படுவது வழக்கம்.

    அதே போல இந்த ஆண்டு கார்த்திகை மாதம்கிருத்திகை நட்சத்திரமான வருகிற 6-ந்தேதி கார்த்திகை தீபத்திருவிழா கொண்டாடப்படுகிறது. இதையொட்டி அன்று மாலை 6 மணிக்கு கன்னியாகுமரி அருகே உள்ள பொற்றையடி வைகுண்ட பகுதியில் அமைந்துஉள்ள 1800 அடி உயர மருந்துவாழ் மலை உச்சியில் "மகாதீபம்" ஏற்றப்படுகிறது.

    முன்னதாக மருந்துவாழ் மலையில் உள்ள பரமார்த்த லிங்க சுவாமி கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி காலையில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகமும் அதைத்தொடர்ந்து விசேஷ பூஜைகளும் சிறப்பு வழிபாடுகளும் அன்னதானமும் நடக்கிறது. பரம்பரை தர்மகர்த்தா மந்தாரம்புதூரை சேர்ந்த பெரியசாமி தேவர் குடும்பத்தினர் பரமார்த்தலிங்க சுவாமி கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துஉள்ளனர்.

    முன்னதாக மருந்துவாழ் மலை உச்சியில் ஏற்றப்படும் மகா தீபத்துக்கான எண்ணெய் கன்னியாகுமரி சுற்றுவட்டார பகுதியில் உள்ள அனைத்து கோவில்களிலும் குடங்களில் காணிக்கையாக பெறப்பட்டு வருகிறது. அந்த எண்ணெய் குடங்கள் அனைத்தும் 6-ந்தேதி மதியம் பொற்றையடியில் அமைந்துஉள்ள ஸ்ரீதேவி முத்தாரம்மன் கோவிலுக்கு எடுத்துவரப்படுகிறது.

    பின்னர் அங்குஇருந்து மருந்துவாழ்மலை தெய்வீகப் பேரவை சார்பில் எண்ணெய் குடங்கள் மருந்துவாழ் மலைஉச்சிக்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படுகிறது. மாலை 6 மணிக்கு மருந்துவாழ் மலை உச்சியில் "மகா தீபம்" ஏற்றப்படுகிறது மருந்துவாழ்மலை உச்சியில் ஏற்றப்படும் இந்த மகா தீபம் கன்னியாகுமரி சுற்றுவட்டார பகுதியில் சுமார் 30 கிலோ மீட்டர் தூரம் தெரியும்.

    3 நாட்கள் இரவு- பகலாக தொடர்ந்து இந்த மகா தீபம் எரிந்து கொண்டே இருக்கும். மருந்துவாழ் மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்ட பிறகுவீடுகளில்உள்ள வாசல் முன்பு பெண்கள் வண்ண கோலமிட்டு அகல் விளக்குகள் ஏற்றி கார்த்திகை தீபத் திருவிழாவை கொண்டாடுவார்கள்.

    வீடுகள்தோறும் கொழுக்கட்டை, அப்பம், திரளி, போன்றவைகளை தயார்செய்து இறைவனுக்கு படைத்து வழிபட்டு பின்னர் உண்டு மகிழ்வார்கள். கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி குமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும் தீபம் ஏற்றி சிறப்பு வழிபாடுகள் நடக்கிறது. சிறுவர்கள் இரவு நேரங்களில் சுக்குநாரி புல், டயர், தீப்பந்தங்கள் போன்றவைகளை கொளுத்தி விளையாடுவார்கள்.

    • 78 கடைகள் அரசு நிர்ணயித்த தொகையை விட குறைந்த அளவுக்கு ஏலம் கேட்கப்பட்டதால் மறு ஏலத்துக்கு ஒத்தி வைக்கப்பட்டது
    • .கார் பார்க்கிங் ரூ.20 லட்சத்துக்கு ஏலம் போனது

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரியில் சபரிமலை அய்யப்ப பக்தர்கள் சீசன் கடந்த 17-ந் தேதி தொடங்கியது. இந்த சீசனையொட்டி கன்னியாகுமரியில் நடைபாதைகளில் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் சீசன் கடைகள் தனியாருக்கு ஏலம் விடப்படும்.

    இந்த ஆண்டு கன்னியா குமரி சன்செட் பாயிண்ட் கடற்கரைக்கு செல்லும் சிலுவை நகர் பகுதி, குமரி மாவட்ட சுற்றுலா அலுவலகம் முதல் அரசு விருந்தினர் மாளிகை முன்பு வரை உள்ள மெயின் ரோடு பகுதி, கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு செல்லும் சன்னதி தெருவில் உள்ள விவேகானந்தா ராக் ரோடு ஆகிய பகுதிகளில் மொத்தம் 125 சீசன் கடைகள் அமைக்க பேரூராட்சி நிர்வாகம் அனுமதி அளித்துஉள்ளது.

    இந்த125 சீசன் கடை கள் ஏலம் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நேற்று கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி அலுவலகத்தில் நடந்தது. நாகர்கோவில் ஆர்.டி.ஓ. சேதுராமலிங்கம் தலைமையில் குமரி மாவட்ட பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் விஜய லட்சுமி, நாகர்கோவில் மாநகராட்சி பொறியாளர், கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி செயல் அலுவலர் ஜீவநாதன், அகஸ்தீஸ்வரம் தாசில்தார் ராஜேஷ் ஆகியோர் முன்னிலையில் இந்த சீசன் கடைகள் ஏலம் நடந்தது.

    சீசன் கடை ஏலம் எடுப்ப தற்காக உள்ளூர் மட்டுமின்றி வெளியூர்களில் இருந்தும் ஏராளமான வியாபாரிகள் வந்து குவிந்திருந்தனர். சீசன் கடைகளை வியாபாரிகள் போட்டி போட்டு ஏலம் எடுத்தனர். இதில் மொத்தம் 47 சீசன் கடைகள் மட்டும் ஏலம் போனது. இந்த 47 சீசன் கடைகளும் ரூ.33 லட்சத்து 55 ஆயிரத்து 10-க்கு ஏலம் போனது. மீதி உள்ள 78 கடைகள் அரசு நிர்ணயித்த தொகையை விட குறைந்த அளவுக்கு ஏலம் கேட்கப்பட்டதால் மறு ஏலத்துக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

    முன்னதாக கன்னியா குமரிக்கு வரும் சுற்றுலா வாகனங்களை நிறுத்துவதற்கான கார் பார்க்கிங் கட்டணம் வசூலிக்கும் உரிமையை தனியாருக்கு ஏலம் விடும் நிகழ்ச்சி நடந்தது. இதில் 5 பேர் பங்கேற்றனர். இறுதியாக சூரப்பள்ளத்தைச் சேர்ந்த கோவிந்தன் என்பவர் கார் பார்க்கிங் கட்டணம் வசூலிக்கும் உரிமையை ரூ.20 லட்சத்து 22 ஆயிரத்து 222க்கு ஏலம் பிடித்தார். மேலும் சிலுவை நகர் பகுதியில் உள்ள கட்டண கழிப்பறை ரூ.1லட்சத்து 60 ஆயிரத்துக்கு ஏலம் போனது. சீசன்கடைஏலத்தையொட்டி கன்னியாகுமரி போலீஸ் டி.எஸ்.பி. ராஜா, போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தி ஆகியோர் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

    • வெளியூர் வியாபாரிகள் குவிந்தனர்
    • இந்த ஆண்டு சபரிமலை அய்யப்ப பக்தர்கள் சீசன் கடந்த 17-ந் தேதி தொடங்கியது.

    கன்னியாகுமரி:

    இந்தியாவின் தென்கோடி முனையில் அமைந்துள்ளது கன்னியாகுமரி. இது ஒரு உலகப்புகழ்பெற்ற சர்வதேச சுற்றுலா தலம் ஆகும். இங்குவருடம் முழுவதும் சுற்றுலா பயணிகள் வந்து சென்றாலும் நவம்பர், டிசம்பர், ஜனவரி ஆகிய 3 மாதங்களும் சுற்றுலா பயணிகள் மட்டுமின்றி சபரிமலைக்கு செல்லும் அய்யப்ப பக்தர்களில் பெரும்பாலானவர்களும் வந்து செல்வார்கள். இதனால் இந்த 3 மாத காலமும் இங்கு சீசன் காலமாக கருதப்படுகிறது. இந்த ஆண்டு சபரிமலை அய்யப்ப பக்தர்கள் சீசன் கடந்த 17-ந் தேதி தொடங்கியது.

    இந்த சீசனையொட்டி கன்னியாகுமரியில் நடை பாதைகளில் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் சீசன் கடைகள் தனியாருக்கு ஏலம் விடப்படும். இந்த ஆண்டு கன்னியாகுமரி சன்செட் பாயிண்ட் கடற்கரைக்கு செல்லும் சிலுவை நகர் பகுதி, குமரி மாவட்ட சுற்றுலா அலுவலகம் முதல் அரசு விருந்து மாளிகை முன்பு வரை உள்ள மெயின் ரோடு பகுதி, கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு செல்லும் சன்னதி தெருவில் உள்ள விவேகானந்தா ராக் ரோடு ஆகிய பகுதிகளில் மொத்தம் 125 சீசன் கடைகள் அமைக்க பேரூராட்சி நிர்வாகம் அனுமதி அளித்துஉள்ளது. இந்த சீசன் கடைகள் ஏலம் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் இன்று காலை 11 மணிக்கு கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி அலுவலகத்தில் நடந்தது. நாகர்கோவில் மாநகராட்சி ஆணையாளர் ஆனந்த மோகன் தலைமையில் நாகர்கோவில் ஆர்.டி.ஓ. சேதுராமலிங்கம், குமரி மாவட்ட பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் விஜயலட்சுமி, கன்னியாகுமரிசிறப்பு நிலை பேரூராட்சி செயல் அலுவலர் ஜீவநாதன் ஆகியோர் முன்னிலையில் இந்த சீசன் கடைகள் ஏலம் நடந்தது.

    இந்த சீசன் கடை ஏலம் எடுப்பதற்காக உள்ளூர் மட்டுமின்றி வெளியூர்களில் இருந்தும் ஏராளமான வியாபாரிகள் வந்து குவிந்திருந்தனர். சீசன் கடைகளை வியாபாரிகள் போட்டி போட்டு ஏலம் எடுத்தனர். இதையொட்டி கன்னியாகுமரி போலீஸ் டி.எஸ்.பி. ராஜா, போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தி ஆகியோர் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. கன்னியாகுமரி பேரூராட்சி அலுவலகம் முன்பு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர். இந்த சீசன் கடைகளை ஏலம் எடுக்க வெளியூர் வியாபாரிகள் நேற்று முதலே கன்னியாகுமரியில் வந்து குவிந்த வண்ணமாக இருந்தனர். ஏலம் எடுக்க சென்ற வியாபாரிகள் போலீசாரின் கடுமையான சோதனைக்கு பிறகே பேரூராட்சி அலுவலகத்துக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

    • இவர் உக்ரைன் நாட்டில் மருத்துவ படிப்பு இறுதியாண்டு படித்த போது போர் ஏற்பட்டதால் இந்தியா திரும்பினார்.
    • இந்தியாவில் மற்றொரு தேர்வு எழுதுவதற்காக டெல்லியில் தங்கி பயின்று வந்தார்.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி அருகே உள்ள அகஸ்தீஸ்வரம் பகுதியை சேர்ந்தவர் ஆல்வின் நாயகம். இவர் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். இவரது மகன் வில்லியம்.

    இவர் உக்ரைன் நாட்டில் மருத்துவ படிப்பு இறுதியாண்டு படித்த போது போர் ஏற்பட்டதால் இந்தியா திரும்பினார். இதுதொடர்பாக இந்தியா வில் மற்றொரு தேர்வு எழுதுவதற்காக டெல்லியில் தங்கி பயின்று வந்தார்.

    இதற்கிடையே தனது நண்பர்கள் 6 பேருடன் இருசக்கர வாகனத்தில் இமாச்சலபிரதேசத்துக்கு சுற்றுலா சென்றார். அப்போது அங்கு எதிர்பா ராத விதமாக ஏற்பட்ட இருசக்கர வாகன விபத்தில் மாணவன் வில்லியம் பரிதா பமாக பலியானார். இதுபற்றி தகவல் அறிந்த அவரது தந்தை வெளி நாட்டிலிருந்து தாயகம் வருகிறார். இந்த சம்பவம் அந்தப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி யுள்ளது. விபத்தில் பலி யான மாணவர் வில்லியமின் தாயார் ஒரு வருடத்திற்கு முன்பு இறந்து போனார் என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்

    • துக்கம் தாழாமல் அழுது கொண்டே இருந்த நிலையில் அவர் நேற்று காலை திடீரென மயங்கி விழுந்தார்.
    • வெளிநாட்டில் வேலை பார்க்கும் அவரது மகன் வந்ததும் பகவதி அம்மாள் உடல் தகனம் செய்யப்படும்.

    கன்னியாகுமரி:

    குமரி மாவட்டம் இரணி யல் அருகே உள்ள காற்றாடி மூடு பகுதியைச் சேர்ந்த வர் வேலம்மாள் (வயது 78), ஓய்வு பெற்ற அரசு பள்ளி ஆசிரியர்.

    இவருக்கு பகவதி அம்மாள் (57) என்ற மகளும் 2 மகன்களும் உள்ளனர். தற்போது வேலம்மாள், மகள்-மருமகன் ராதா கிருஷ்ணன் வீட்டில் வசித்து வந்தார். இந்த நிலையில் வயது முதிர்வு காரணமாக நோய்வாய்ப்பட்டு இருந்த வேலம்மாள் நேற்று முன் தினம் இறந்தார். அவரது உடலை மறுநாள் (நேற்று) தகனம் செய்ய உறவினர்கள் முடிவு செய்தனர்.

    இதையடுத்து அவரது இறுதிச் சடங்கிற்கான ஏற்பாடுகளை உறவினர்கள் செய்து வந்தனர். அப்போது தாயின் உடல் அருகே பகவதி அம்மாள் துக்கம் தாழா மல் அழுது கொண்டே இருந்தார்.

    இந்த நிலையில் அவர் நேற்று காலை திடீரென மயங்கி விழுந்தார். உடனடி யாக அவரை உறவினர்கள் மீட்டு அருகில் உள்ள தனி யார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு பரிசோதித்த டாக்ட ர்கள் பகவதி அம்மாள் ஏற்கனவே இறந்து விட்ட தாக தெரிவித்தனர்.

    தாய் இறந்த சோகத்தில் மகளும் இறந்த சம்பவம் உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது. பகவதி அம்மாள் உடலை வீட்டிற்கு எடுத்து வந்த உறவினர்கள், ஏற்கனவே தகனத்திற்காக வைத்திருந்த வேலம்மாள் உடல் அருகே வைத்தனர்.

    இறந்த பகவதி அம்மா ளுக்கு காயத்ரி (30) என்ற மகளும், அஜித் (27) என்ற மகனும் உள்ளனர்.

    ஒரே நேரத்தில் தாய்-மகள் இறந்ததை எண்ணி அங்கு வந்திருந்த பலரும் கண்ணீர் விட்டனர். தொடர்ந்து வேலம்மாள் உடல் மட்டும் நேற்று தகனம் செய்யப்பட்டது.

    பகவதி அம்மாளின் மகன் அஜித், வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். அவர் வந்ததும் பகவதி அம்மாள் உடல் தகனம் செய்யப்படும் என உறவி னர்கள் தெரிவித்தனர்.

    • கேரள போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை
    • திருவனந்தபுரம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    கன்னியாகுமரி:

    களியக்காவிளை அருகே தமிழக-கேரள எல்லைப் பகுதியில் உள்ள மாந்தறை பகுதியை சேர்ந்தவர் சஜித் (வயது 39), மீன் பிடி தொழிலாளி.

    இவரது நண்பர் அதே பகுதியை சேர்ந்த சுதீர். 2 பேரும் ஒன்றாக தான் கடலுக்கு மீன் பிடிக்க செல்வார்கள். இவர்க ளுக்கு மது அருந்தும் பழக்கம் உண்டு.

    நேற்று 2 பேரும் கட லுக்கு சென்று திரும்பி யதும் ஒன்றாக அமர்ந்து மது அருந்தி உள்ளனர். அப்போது 2 பேருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டது.

    அப்போது ஆத்திர மடைந்த சுதீர், தான் மறைத்து வைத்திருந்த வெட்டு கத்தியை எடுத்து நண்பர் என்றும் கூட பார்க்காமல் சஜீத்தை சரமாரியாக வெட்டினார். இதில் அவரது 2 கைகளின் மணிக்கட்டு பகுதிகளும் துண்டானது. சஜீத்தின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடி வந்தனர்.

    அவர்களை பார்த்ததும் சுதீர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். சஜீத்தை அக்கம் பக்கத்தினர் மீட்டு மாந்தறை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக திருவ னந்தபுரம் அரசு மருத்துவ மனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து அயரூர் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது.போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். சுதீர் மீது வழக்கு பதிவு செய்து அவரை தேடி வருகின்றனர். மது தகராறில் நண்பரின் 2 கைகளையும் வாலிபர் வெட்டி துண்டாக்கிய சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • அவர் 21-ந்தேதி இரவே தவறி கடலில் விழுந்திருக்கலாம் என கூறப்படுகிறது.
    • கடலில் மாயமான சுனிலுக்கு பேபி என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர்.

    கன்னியாகுமரி:

    தேங்காய்பட்டணம் அருகே உள்ள தூத்தூரை சேர்ந்த பாஸ்டின், சொந்தமாக விசைப்படகு வைத்து கடலில் மீன்பிடி தொழில் செய்து வருகிறார்.

    இவரது படகில் குமரி மாவட்டம் மற்றும் பாண்டிச்சேரி, ஆந்திரா, கேரளாவை சேர்ந்த தொழிலாளர்களும் மீன்பிடி தொழிலாளர்களாக வேலை பார்த்து வருகின்றனர். வழக்கம்போல் இவரது படகில் 16 தொழிலாளர்கள் கடந்த 21-ந்தேதி மாலை தேங்காய்பட்டணம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து மீன் பிடிக்க சென்றனர்.

    இதில் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை சேர்ந்த சுனில் (வயது 41) என்பவர் முதன்முதலாக மீன்பிடித்தொழிலுக்கு சேர்ந்திருந்தார்.படகு மறுநாள் தேங்காய்பட்டணம் கடல் பகுதி 50 நாட் டிங்கல் கடல் மைல் தூரத்தில் மீன் பிடித்து கொண்டி ருக்கும்போது படகிலிருந்த சுனிலை காணவில்லை. அவர் 21-ந்தேதி இரவே தவறி கடலில் விழுந்திருக்கலாம் என கூறப்படுகிறது. உடனே உடன் சென்ற தொழிலாளர்கள் மாயமான சுனிலை தேடும் பணியில் ஈடுபட்டனர். 4 நாட்கள் கடலில் தங்கி தேடியும் சுனில் குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை.இதனால் மீனவர்கள் நேற்று கரை திரும்பினர். பின்னர் இந்த சம்பவம் குறித்து படகு ஓட்டுனர் வர்கீஸ் குளச்சல் மரைன் போலீசில் புகார் செய்தார்.

    மரைன் சப் - இன்ஸ் பெக்டர் சுரேஷ் வழக்குப் பதிவு செய்து மாயமான மீனவர் சுனிலை தேடி வருகிறார்.கடலில் மாயமான சுனிலுக்கு பேபி என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர்.

    இச்சம்பவம் அப்பகுதி யில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • திருவள்ளுவர் சிலை உப்புக்காற்றினால் பாதிக்கப்படாமல் இருப்பதற்காக 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை பாலி சிலிக்கான் என்ற ரசாயன கலவை பூசப்பட்டு வருகிறது.
    • திருவள்ளுவர் சிலையில் இன்னும் ஓரிரு மாதங்களில் ரசாயனக்கலவை பூசும் பணி நிறைவுபெறும் என்று கூறப்படுகிறது.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரியில் கடலின் நடுவே அமைந்துஉள்ள பாறையில் சுவாமி விவேகானந்தர் மண்டபமும் அதன் அருகில் உள்ள மற்றொரு பாறையில் 133 அடி உயர திருவள்ளுவர் சிலையும் எழுப்பப்பட்டு உள்ளன.

    திருவள்ளுவர் சிலை உப்புக்காற்றினால் பாதிக்கப்படாமல் இருப்ப தற்காக 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை பாலி சிலிக்கான் என்ற ரசாயன கலவை பூசப்பட்டு வருகிறது. கடந்த 2017-ம் ஆண்டு ரசாயனக் கலவை பூசப்பட்டது. இதை தொடர்ந்து கடந்த 2021-ம் ஆண்டு ரசாயனக் கலவை பூச அரசு நடவடிக்கை மேற்கொண்டது. ஆனால் கொரோனா பரவல் காரணமாக இந்தப்பணிகள் நடைபெறவில்லை.

    இந்த நிலையில் கொரோனா பரவல் குறைந்ததையடுத்து உயர் மட்ட குழுவினர் திருவள்ளு வர் சிலையை சென்று பார்வையிட்டனர். பின்னர் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் ரூ.1 கோடி திட்ட மதிப்பில் ரசாயனக் கலவை பூசுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது. இதையடுத்து ரசாயானக்கலவை பூசும்பணி கடந்த ஜூன் மாதம் 6-ந் தேதி தொடங்கியது.

    முதல்கட்டமாக திருவள்ளுவர் சிலையில் சுண்ணாம்பு கலவை பூசப்பட்டது. தொடர்ந்து தண்ணீரால் சிலை சுத்தம் செய்யப்பட்டது. அதன்பிறகு காகித கூழ் பூசும் பணி தொடங்கியது. இதற்கிடையில் தொடர்ந்து மழை பெய்ததால் காகித கூழ் கரைந்து நாசமானது. இதைத் தொடர்ந்து மழையினால் காகித கூழ் பூசும்பணி நிறுத்தப்பட்டது. இந்தநிலையில் மழை ஓய்ந்ததை தொடர்ந்து தற்போது சிலையின் தலைப்பாகத்தில் காகிதக்கூழ் பூசும் பணி தொடங்கி தீவிரமாக நடைபெற்று வருகிறது. தொடர்ந்து 15 நாட்கள் காகிதக்கூழ் பூசப்பட்டு மீண்டும் தண்ணீரால் சிலை சுத்தம் செய்யப்படும்.

    இதைத்தொடர்ந்து பாலி சிலிக்கான் என்னும் ரசாயனக்கலவை பூசும்பணி நடைபெறும். இங்கு பராமரிப்புப் பணிகள் நடைபெற்று வருவதால் படகு சேவை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் கன்னியாகுமரிக்கு வந்து செல்லும் சுற்றுலாப் பயணிகள் விவேகானந்தர் மண்டபத்தை மட்டும் நேரில் பார்வையிட்டுச் செல்கின்றனர். திருவள்ளுவர் சிலையில் இன்னும் ஓரிரு மாதங்களில் ரசாயனக்கலவை பூசும் பணி நிறைவுபெறும் என்று கூறப்படுகிறது. இதையடுத்து திருவள்ளுவர் சிலைக்கு படகுப் போக்குவரத்து தொடங்கப்படும் என்று தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிகழக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • தினசரி நூற்றுக்கணக்கான லாரிகளில் பெரிய பாறைகளை உடைத்து கேரளாவுக்கு கடத்துகின்றனர்
    • சட்ட விரோதமாக பாறைகள் உடைத்து கடத்தப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டுமென அரசியல் கட்சியினர் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்தும், வெளி மாவட்டங்களி லிருந்தும் தினசரி நூற்றுக்கணக்கான லாரிகளில் பெரிய பாறைகளை உடைத்து கேரளாவுக்கு கடத்தப்படு வதாக குற்றச்சாட்டு எழுந்து வருகிறது.

    இந்த லாரிகள் இரவு பகலாக சாலையில் செல்வ தால் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுவதோடு தொடர் விபத்துகளும் ஏற்பட்டு வருகிறது. இதனால் தினசரி கனிம வளங்கள் கொண்டு செல்லப்படுகின்ற லாரிகளால் காலை நேரத்தில் மாணவர்கள் பள்ளிக்கு செல்ல முடியா மலும் பணியாளர்கள் குறித்த நேரத்தில் வேலைக்கு செல்ல முடியாமலும் அவதிக்குள்ளாகி வருகின்ற னர்.

    கேரளாவுக்கு கனிம வளங்கள் கொண்டு செல்வதை தடுக்க கோரியும், குமரி மாவட்டத்தில் சட்ட விரோதமாக பாறைகள் உடைத்து கடத்தப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டு மெனவும் அரசியல் கட்சியினர் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இதையடுத்து இன்று அதிகாலையில் மார்த்தாண்டம் வழியாக அதிக பாரத்துடன் கேரளாவுக்கு கனிமவளம் கொண்டு செல்லப்பட்ட நான்கு கனரக லாரிகளை போலீசார் பறிமுதல் செய்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

    மேலும் இந்த கனிம வளங்கள் எங்கிருந்து கொண்டு வரப்படுகிறது. இதன் உரிமையாளர் யார் என்ற விவரமும் சேகரிக்கப்பட்டிருக்கிறது. இது தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

    • செல்போன் பேசி கொண்டிருந்தபோது பரிதாபம்
    • சுசீந்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

    கன்னியாகுமரி:

    நாகர்கோவில் அருகே என்.ஜி.ஓ. காலனி குஞ்சன் விளையைச் சேர்ந்தவர் மகேஷ் வயது 32 வெல்டிங் வேலை செய்து வருகிறார். இவர் நேற்று வழக்கம்போல் வேலைக்கு சென்று விட்டு இரவு வீட்டிற்கு வந்தார். வீட்டின் 2-வது மாடியில் நின்று மகேஷ் செல்போனில் பேசிக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக அவர் தவறி கீழே விழுந்தார். ரத்த வெள்ளத்தில் கிடந்த அவரை மீட்டு சிகிச்சைக்காக அவரது உறவினர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர் தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார்கள்.

    இதையடுத்து மகேஷ் உடல் பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது. இதுகுறித்து சுசீந்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×