search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டிஎன்பிஎல்"

    • திண்டுக்கல் நத்தத்தில் உள்ள என்.பி.ஆர். கல்லூரி மைதானத்தில் இன்று இரண்டு போட்டிகள் நடக்கிறது.
    • மதுரை அணி முதல் ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீசை 4 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது.

    திண்டுக்கல்:

    6-வது டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கடந்த 23-ந் தேதி தொடங்கியது. நெல்லையில் 6 லீக் ஆட்டங்கள் முடிந்த நிலையில், எஞ்சிய ஆட்டங்கள் திண்டுக்கல், கோவை, சேலம் ஆகிய இடங்களில் நடக்கிறது.

    2 நாள் இடைவெளிக்கு பிறகு திண்டுக்கல் நத்தத்தில் உள்ள என்.பி.ஆர். கல்லூரி மைதானத்தில் இன்று இரண்டு போட்டிகள் நடக்கிறது.

    பிற்பகல் 3.15 மணிக்கு நடைபெறும் முதல் ஆட்டத்தில் பாபா இந்திரஜித் தலைமையிலான நெல்லை ராயல் கிங்ஸ்- ஹரி நிஷாந்த் தலைமையிலான திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் மோதுகின்றன. 

    நெல்லை அணி தொடக்க ஆட்டத்தில் சூப்பர் ஓவரில் நடப்பு சாம்பியன் சேப்பாக் சூப்பர் கில்லீசையும், அடுத்த ஆட்டத்தில் 5 விக்கெட் வித்தியாசத்தில் சேலம் ஸ்பார்டன்சையும் தோற்கடித்தது. அந்த அணி 'ஹாட்ரிக்' வெற்றி ஆர்வத்தில் உள்ளது.

    திண்டுக்கல் அணி தனது முதல் ஆட்டத்தில் திருச்சி வாரியர்சிடம் 8 விக்கெட் வித்தியாசத்தில் தோற்றது. 2-வது போட்டியில் 5 விக்கெட்டில் கோவை கிங்சை வீழ்த்தியது. 2-வது வெற்றி வேட்கையில் அந்த அணி இருக்கிறது.

    இரவு 7.15 மணிக்கு நடைபெறும் 2-வது ஆட்டத்தில் சதுர்வேத் தலைமையிலான மதுரை பாந்தர்ஸ்-ஷாருக்கான் தலைமையிலான கோவை கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.

    மதுரை அணி முதல் ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீசை 4 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது. கோவை அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் திண்டுக்கல் டிராகன்சிடம் தோற்றது. மதுரை அணி 2-வது வெற்றிக்காகவும், கோவை முதல் வெற்றிக்காகவும் காத்திருக்கின்றன.

    • டோனி தலைமையில் ஐ.பி.எல். போட்டியில் நான் விளையாடிய போது அவரிடமிருந்து நிறையக் கற்றுக்கொண்டுள்ளேன்.
    • டோனிபோல் நான் அமைதியான அணுகுமுறையை எனது தலைமையில் பின்பற்றத் தொடங்கி உள்ளேன்.

    நெல்லை:

    டி.என்.பி.எல். போட்டியில் திருச்சி வாரியர்சை வீழ்த்தி திருப்பூர் அணி வெற்றியுடன் கணக்கை தொடங்கியது.

    நெல்லை சங்கர் நகர் மைதானத்தில் நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் விளையாடிய திருச்சி வாரியர்ஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 157 ரன் எடுத்தது.

    முரளி விஜய் 16 பந்தில் 34 ரன்னும் (6 பவுண்டரி ,1 சிக்சர் ), அமித் சாத்விக் 21 பந்தில் 26 ரன்னும் (4 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்தனர். அஸ்வின் கிறிஸ்ட் 2 விக்கெட்டும், மோகன் பிரசாத், எம். முகமது, லட்சுமி சத்யநாராயணன் ஆகியோர் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

    பின்னர் ஆடிய திருப்பூர் தமிழன்ஸ் 18.5 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 158 ரன் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    துஷ்கர் ரகேஜா 26 பந்தில் 46 ரன்னும் (4 பவுண்டரி, 2 சிக்சர்), சுப்பிரமணியன் ஆனந்த் 26 பந்தில் 35 ரன்னும் (2 பவுண்டரி, 2 சிக்சர்), எம். முகமது 15 பந்தில் 29 ரன்னும் (2 பவுண்டரி, 2 சிக்சர்) எடுத்தனர். சரவணகுமார் 3 விக்கெட்டும், மதிவாணன் 2 விக்கெட்டும், பொய்யாமொழி 1 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

    திருப்பூர் தமிழன்ஸ் அணி ஒரு கட்டத்தில் 14.1 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 98 ரன் என்ற பரிதாப நிலையில் இருந்தது.

    7-வது விக்கெட்டான துஷ்கர் ரகேஜா-எம்.முகமது ஜோடி சிறப்பாக ஆடி அணியை வெற்றி பெற வைத்தது. இந்த வெற்றி குறித்து திருப்பூர் அணியின் கேப்டன் ஸ்ரீகாந்த் அணிருதா கூறியதாவது:-

    டோனி தலைமையில் ஐ.பி.எல். போட்டியில் நான் விளையாடிய போது அவரிடமிருந்து நிறையக் கற்றுக்கொண்டுள்ளேன். அவரைப்போல் நான் அமைதியான அணுகுமுறையை எனது தலைமையில் பின்பற்றத் தொடங்கி உள்ளேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஆட்டநாயகன் விருது பெற்ற எஸ்.முகமது கூறும்போது, "எந்த சூழலிலும் நான் நெருக்கடியை உணரவில்லை இறுதிவரை களத்தில் நின்றால் வெற்றி பெற முடியும் என்று உறுதியோடு நம்பினோம். அதற்கான பலன் எங்களுக்கு கிடைத்தது" என்றார்.

    திருச்சி அணி முதல் தோல்வியை தழுவியது. தோல்வி குறித்து அந்த அணி கேப்டன் ராஹில் ஷா கூறும்போது, "எங்களது பேட்டிங்கில் இன்னும் 15-20 ரன்கள் கூடுதலாக எடுத்திருக்கலாம். அதே நேரத்தில் எங்களுக்கு கிடைத்த வெற்றிக்கான தருணத்தை நாங்கள் தவறவிட்டு விட்டோம்" என்றார்.

    நெல்லையில் டி.என்.பி.எல். ஆட்டங்கள் முடிந்து விட்டன. இன்றும், நாளையும் ஓய்வு நாளாகும்.

    30-ந் தேதியில் இருந்து திண்டுக்கல்லில் போட்டிகள் நடக்கிறது. அன்று நடைபெறும் ஆட்டங்களில் நெல்லை ராயல் கிங்ஸ்-திண்டுக்கல் டிராகன்ஸ் (மாலை 3.15), மதுரை பாந்தர்ஸ்-கோவை கிங்ஸ் (இரவு 7.15) அணிகள் மோதுகின்றன. * * * திருச்சி அணியின் தொடக்க வீரர் முரளி விஜய் தன்னை அவுட் செய்த திருப்பூர் தமிழன்ஸ் வேகப்பந்து வீச்சாளர் எம்.முகமதுவை பாராட்டினார்.

    • தொடக்க ஆட்டத்தில் நெல்லை ராயல் கிங்ஸ் அணி சூப்பர் ஓவரில் சேப்பாக் சூப்பர் கில்லீசை தோற்கடித்தது.
    • திருப்பூர் அணி வெற்றியுடன் கணக்கை தொடங்கும் வேட்கையில் இருக்கிறது.

    நெல்லை:

    6-வது டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி நெல்லை சங்கர் நகர் மைதானத்தில் நடந்து வருகிறது.

    இதில் நடப்பு சாம்பியன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ், நெல்லை ராயல் கிங்ஸ், மதுரை பாந்தர்ஸ், திண்டுக்கல் டிராகன்ஸ், திருச்சி வாரியர்ஸ், திருப்பூர் தமிழன்ஸ், சேலம் ஸ்பார்டன்ஸ், கோவை கிங்ஸ் ஆகிய 8 அணிகள் பங்கேற்றுள்ளன.

    ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் 'பிளே-ஆப்' சுற்றுக்கு தகுதி பெறும்.

    தொடக்க ஆட்டத்தில் நெல்லை ராயல் கிங்ஸ் அணி சூப்பர் ஓவரில் சேப்பாக் சூப்பர் கில்லீசை தோற்கடித்தது. 2-வது போட்டியில் திருச்சி வாரியர்ஸ் 8 விக்கெட் வித்தியாசத்தில் திண்டுக்கல் டிராகன்சை வீழ்த்தியது.

    3-வது ஆட்டத்தில் மதுரை பாந்தர்ஸ் 4 விக்கெட்டில் சேப்பாக் சூப்பர் கில்லீசையும் , 4-வது போட்டியில் நெல்லை ராயல் கிங்ஸ் 5 விக்கெட்டில் சேலத்தையும் தோற்கடித் தன.

    நேற்று நடந்த 5-வது ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ் 5 விக்கெட் வித்தியாசத்தில் கோவையை வீழ்த்தி முதல் வெற்றியை பெற்றது. முதலில் ஆடிய கோவை கிங்ஸ் 8 விக்கெட் இழப்புக்கு 188 ரன் குவித் தது. பின்னர் விளையாடிய திண்டுக்கல் டிராகன்ஸ் 19.2 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 190 ரன் எடுத்தது.

    இன்று இரவு 7.15 மணிக்கு நடைபெறும் 6-வது லீக் ஆட்டத்தில் ரஹில்ஷா தலைமையிலான திருச்சி வாரியர்ஸ்-அணிருதா தலைமையிலான திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் மோதுகின்றன.

    திருச்சி அணி 2-வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் உள்ளது. திருப்பூர் அணி வெற்றியுடன் கணக்கை தொடங்கும் வேட்கையில் இருக்கிறது.

    • நெல்லை ராயல் கிங்ஸ் 14 பந்துகள் மீதமிருந்த நிலையில், இலக்கை எட்டியது.
    • அஜிதேஷ் 25 பந்துகளை எதிர்கொண்டு 1 பவுண்டரி, 5 சிக்சர்களுடன் 48 ரன்கள் குவித்தார்.

    டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று இரவு நெல்லை சங்கர் நகர் மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் சேலம் ஸ்பார்டன்ஸ், நெல்லை ராயல் கிங்ஸ் அணிகள் விளையாடின. முதலில் ஆடிய சேலம் அணியில் கவின் 48 ரன்களும், டேரில் பெராரியா 60 ரன்களும் விளாச, அந்த அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 149 ரன்கள் சேர்த்தது. நெல்லை அணி தரப்பில் அதிசயராஜ் டேவிட்சன், ஹரிஷ் தலா 2 விக்கெட் எடுத்தனர்.

    இதையடுத்து 150 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நெல்லை ராயல் கிங்ஸ் 14 பந்துகள் மீதமிருந்த நிலையில் இலக்கை எட்டியது.

    துவக்க வீரர் பிரதோஷ் ரஞ்சன் பால் ஒரு ரன்னில் ஆட்டமிழந்த நிலையில், மற்றொரு துவக்க வீரர் சூரியபிரகாஷ்- பாபா அபராஜித் இருவரும் பொறுப்புடன் விளையாடி, ஸ்கோரை உயர்த்தினர். சூரிய பிரகாஷ் 35 ரன்களும், அபராஜித் 32 ரன்களும் அடித்தனர். பாபா இந்திரஜித் 15 ரன்கள் சேர்த்தார். அதன்பின்னர் அஜிதேஷ் அதிரடியாக ஆடி பந்துகளை சிக்சர்களாக பறக்கவிட்டார். அஜிதேஷ் 25 பந்துகளை எதிர்கொண்டு 1 பவுண்டரி, 5 சிக்சர்களுடன் 48 ரன்கள் (நாட் அவுட்) குவித்தார். ஜிதேந்திர குமார் ஆட்டமிழக்காமல் 10 ரன்கள் சேர்த்தார்.

    இதனால் நெல்லை அணி 5 விக்கெட் இழப்பிற்கு 152 ரன்கள் எடுத்து, 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த சீசனில் நெல்லை அணி 2வது வெற்றியை பதிவு செய்துள்ளது. தனது முதல் ஆட்டத்தில், நடப்பு சாம்பியனான சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியை வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது. 

    • ஒருபுறம் விக்கெட்டுகள் மளமளவென சரிந்த நிலையிலும், பெராரியோ நிலைத்து நின்று நம்பிக்கை அளித்தார்.
    • நெல்லை அணி தரப்பில் அதிசயராஜ் டேவிட்சன், ஹரிஷ் தலா 2 விக்கெட் எடுத்தனர்.

    டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று இரவு நெல்லை சங்கர் நகர் மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் சேலம் ஸ்பார்டன்ஸ், நெல்லை ராயல் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற ராயல் கிங்ஸ் அணி பீல்டிங்கைத் தேர்வு செய்ய, சேலம் அணி முதலில் பேட்டிங் செய்தது.

    துவக்க வீரர்கள் ஜமால் (11), கோபிநாத் (10) ஆகியோர் விரைவில் ஆட்டமிழந்த நிலையில், அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய கவின் 37 பந்துகளில் 3 பவுண்டரி, 3 சிக்சர்களுடன் 48 ரன்கள் விளாசினார். அதன்பின், டேரில் பெராரியோ, நெல்லை பந்துவீச்சை நேர்த்தியாக எதிர்கொண்டு ரன் சேர்த்தார்.

    மறுமுனையில் விக்கெட்டுகள் மளமளவென சரிந்த நிலையிலும், பெராரியோ நிலைத்து நின்று நம்பிக்கை அளித்தார். அவர் 44 பந்துகளில் 2 பவுண்டரி, 2 சிக்சர்களுடன் அரை சதம் கடந்தார்.

    இதனால் சேலம் அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 149 ரன்கள் சேர்த்தது. பெராரியோ 60 ரன்களுடன் களத்தில் இருந்தார். நெல்லை அணி தரப்பில் அதிசயராஜ் டேவிட்சன், ஹரிஷ் தலா 2 விக்கெட் எடுத்தனர். ஆர்யா யோகன் மேனன், சஞ்சய் யாதவ் தலா ஒரு விக்கெட் எடுத்தனர்.

    இதையடுத்து 150 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் நெல்லை ராயல் கிங்ஸ் அணி களமிறங்குகிறது. நெல்லை ராயல் கிங்ஸ் அணி தனது முதல் ஆட்டத்தில், நடப்பு சாம்பியனான சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியை வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது. 

    • முதலில் ஆடிய சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியில் ஹரிஷ் குமார், சசி தேவ் சிறப்பாக ஆடினர்.
    • மதுரை அணி 11 பந்துகள் மீதமிருந்த நிலையில் 6 விக்கெட்டுகளை இழந்து இலக்கை எட்டியது.

    டிஎன்பிஎல் கிரிக்கெட் போட்டியில் இன்றைய ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ்-சீசம் மதுரை பாந்தர்ஸ் அணிகள் மோதின. முதலில் ஆடிய சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி துவக்கத்தில் விக்கெட்டுகளை வரிசையாக இழந்து திணறியது.

    51 ரன்களுக்குள் 7 விக்கெட்டுகளை இழந்த நிலையில், ஆல் ரவுண்டர் ஹரிஷ் குமார், சசி தேவ் ஜோடி சிறப்பாக ஆடி அணியை சரிவில் இருந்து மீட்டனர். இதனால் 20 ஓவர் முடிவில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 8 விக்கெட் இழப்பிற்கு 135 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக சசி தேவ் 58 ரன்கள் விளாசினார். ஹரிஷ் குமார் 39 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    இதையடுத்து 136 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மதுரை அணி, 11 பந்துகள் மீதமிருந்த நிலையில் 6 விக்கெட்டுகளை இழந்து இலக்கை எட்டியது. இதனால் 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய அனிருத் 58 ரன்கள் (நாட் அவுட்) குவித்தார். அருண் கார்த்திக் 31 ரன்கள், ராஜ்குமார் 19 ரன்கள் எடுத்தனர். 

    • சிறப்பாக ஆடிய சசி தேவ் அரை சதம் அடித்தார்.
    • மதுரை அணி தரப்பில் வருண் சக்கரவர்த்தி, கிரண் ஆகாஷ் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

    நெல்லை:

    டிஎன்பிஎல் கிரிக்கெட் போட்டியில் இன்றைய ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ்-சீசம் மதுரை பாந்தர்ஸ் அணி மோதுகிறது. இதில் டாஸ் வென்ற மதுரை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கவுசிக் காந்தி- ஜெகதீஷன் களமிறங்கினர்.

    ஆரம்பமே சேப்பாக் அணிக்கு அதிர்ச்சியாக அமைந்தது. தொடக்க ஆட்டக்காரர்கள் கவுசிக் காந்தி 1, ஜெகதீஷன் 1 என அடுத்தடுத்து வெளியேறினர். அடுத்து வந்த சுஜய் 11, சோனு யாதவ் 9, ராஜகோபால் சதிஷ் 4, ஸ்ரீனிவாஸ் 0, மணிமாறன் சித்தார்த் 2 என சொற்ப ரன்னில் விக்கெட்டுகளை இழந்தனர்.

    51 ரன்களுக்குள் 7 விக்கெட்டுகளை இழந்து தவித்த நிலையில் சேப்பாக் அணியின் ஸ்கோர் 100 ரன்னை தாண்டுமா? என சந்தேகம் எழுந்தது. அப்போது ஆல் ரவுண்டர் ஹரிஷ் குமாருடன் சசி தேவ் ஜோடி சேர்ந்து அணியை சரிவில் இருந்து மீட்டனர்.

    சிறப்பாக ஆடிய சசி தேவ் அரை சதம் அடித்தார். இதில் 6 பவுண்டரிகளும் 2 சிக்சரும் அடங்கும். நிதானமாக ஆடிய ஹரிஷ் குமார் தனது பங்குக்கு அவ்வபோது சிக்சர்களையும் பறக்க விட்டார். கடைசி ஓவரில் சசி தேவ் அவுட் ஆனார். அவர் 58 ரன்கள் விளாசினார். ஹரிஷ் குமார் 39 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    இதனால் 20 ஓவர் முடிவில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 8 விக்கெட் இழப்பிற்கு 135 ரன்கள் எடுத்தனர். 

    மதுரை அணி தரப்பில் வருண் சக்கரவர்த்தி, கிரண் ஆகாஷ் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இதையடுத்து 136 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மதுரை அணி களமிறங்குகிறது.

    • டாஸ் வென்ற சீசம் மதுரை பாந்தர்ஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
    • தொடக்க ஆட்டத்தில் நெல்லை ராயல் கிங்ஸ் அணி சூப்பர் ஓவரில் நடப்பு சாம்பியனான சேப்பாக் சூப்பர் கில்லீசை தோற்கடித்தது.

    நெல்லை:

    தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் டி.என்.பி.எல் போட்டியின் 6-வது சீசன் நெல்லையில் நேற்று முன்தினம் தொடங்கியது. தொடக்க ஆட்டத்தில் நெல்லை ராயல் கிங்ஸ் அணி சூப்பர் ஓவரில் நடப்பு சாம்பியனான சேப்பாக் சூப்பர் கில்லீசை தோற்கடித்தது. நேற்று நடந்த 2-வது ஆட்டத்தில் திருச்சி வாரியர்ஸ் 8 விக்கெட் வித்தியாசத்தில் திண்டுக்கல் டிராகன்சை வீழ்த்தியது. டி.என்.பி.எல் போட்டியின் 3-வது நாளான இன்று நெல்லை சங்கர்நகர் மைதானத்தில் 2 ஆட்டங்கள் நடக்கிறது.

    முதல் ஆட்டத்தில் கவுசிக் காந்தி தலைமையிலான சேப்பாக் சூப்பர் கில்லீஸ்-சதுர்வேத் தலைமையிலான சீசம் மதுரை பாந்தர்ஸ் அணிகள் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற சீசம் மதுரை பாந்தர்ஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

    • நான் நம்பிக்கையுடனும் விளையாடுவதற்கு உடல் தகுதியுடன் இருப்பதாக உணர்கிறேன்.
    • முரளி விஜய் 2019 டிசம்பரில் ரஞ்சி டிராபியில் தமிழ்நாட்டிற்காக விளையாடினார்.

    திருநெல்வேலியில் நடைபெற்று வரும் தமிழ்நாடு பிரீமியர் லீக்கில் ரூபி திருச்சி வாரியர்ஸ் அணிக்காக முரளி விஜய் விளையாடினார். இரண்டு வருட இடைவெளிக்கு பிறகு திண்டுக்கல் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் களமிறங்கிய அவர் 13 பந்துகளில் 8 ரன்னில் ரன் அவுட் மூலம் ஆட்டமிழந்தார்.

    38 வயதான முரளி விஜய் முடிந்தவரை விளையாட விரும்புவதாகவும் சொந்த காரணங்களுக்காக ஓய்வு எடுத்ததாகவும் கூறினார்.

    இடைவெளிக்கு பிறகு விளையாடிய முரளி விஜய் கூறியதாவது:-

    எனக்கு ஒரு குடும்பம் உள்ளது. அவர்களைக் கவனித்துக் கொள்ள விரும்பினேன். நான் இப்போது எனது கிரிக்கெட்டை ரசிக்கிறேன். மேலும் நான் நம்பிக்கையுடனும் விளையாடுவதற்கு உடல் தகுதியுடனும் இருப்பதாக உணர்கிறேன். எனது அணிக்காகவும் டிஎன்பிஎல் போட்டிக்காகவும் என்னால் முடிந்ததைச் செய்ய முடியும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    முரளி விஜய் 2019 டிசம்பரில் ரஞ்சி டிராபியில் தமிழ்நாட்டிற்காக விளையாடினார். 2020-ல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடினார். கடந்த இரண்டு சீசன்களில், அவர் தனது மாநில அணிக்காக எந்த உள்நாட்டு கிரிக்கெட்டிலும் விளையாடவில்லை. மேலும் உள்ளூர் டிஎன்சிஏ லீக்கையும் அவர் புறக்கணித்தார்.

    • டி.என்.பி.எல் போட்டியின் 3-வது நாளான இன்று நெல்லை சங்கர்நகர் மைதானத்தில் 2 ஆட்டங்கள் நடக்கிறது.
    • சேப்பாக் சூப்பர் கில்லீஸ் முதல் ஆட்டத்தில் சிறப்பாக விளையாடி ‘டை’ செய்து சூப்பர் ஓவரில் தோற்றது.

    நெல்லை:

    தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் டி.என்.பி.எல் போட்டியின் 6-வது சீசன் நெல்லையில் நேற்று முன்தினம் தொடங்கியது.

    8 அணிகள் பங்கேற்றுள்ள இந்த போட்டி ஜூலை 31ந் தேதி வரை திண்டுக்கல், கோவை, சேலம் ஆகிய இடங்களில் நடக்கிறது.

    தொடக்க ஆட்டத்தில் நெல்லை ராயல் கிங்ஸ் அணி சூப்பர் ஓவரில் நடப்பு சாம்பியனான சேப்பாக் சூப்பர் கில்லீசை தோற்கடித்தது.

    நேற்று நடந்த 2-வது ஆட்டத்தில் திருச்சி வாரியர்ஸ் 8 விக்கெட் வித்தியாசத்தில் திண்டுக்கல் டிராகன்சை வீழ்த்தியது.

    டி.என்.பி.எல் போட்டியின் 3-வது நாளான இன்று நெல்லை சங்கர்நகர் மைதானத்தில் 2 ஆட்டங்கள் நடக்கிறது.

    இன்று மாலை 3.15 மணிக்கு நடைபெறும் முதல் ஆட்டத்தில் கவுசிக் காந்தி தலைமையிலான சேப்பாக் சூப்பர் கில்லீஸ்-சதுர்வேத் தலைமையிலான சீசம் மதுரை பாந்தர்ஸ் அணிகள் மோதுகின்றன.

    3 முறை சாம்பியனான சேப்பாக் சூப்பர் கில்லீஸ் முதல் ஆட்டத்தில் சிறப்பாக விளையாடி 'டை' செய்து சூப்பர் ஓவரில் தோற்றது. இதனால் இன்றைய போட்டியில் மதுரை அணியை வீழ்த்தி முதல் வெற்றியை பெறும் ஆர்வத்துடன் இருக்கிறது.

    சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியில் கேப்டன் கவுசிக் காந்தி, ஜெகதீசன், சோனு யாதவ், ஹரீஷ்குமார், சசிதேவ், அலெக்ஸ்சாண்டர் உள்ளிட்ட சிறந்த வீரர்கள் உள்ளனர்.

    மதுரை அணி தனது முதல் ஆட்டத்தில் வெற்றி பெற வேண்டும் என்ற வேட்கையில் இருக்கிறது. அந்த அணியில் அருண் கார்த்திக் உள்ளிட்ட சிறந்த வீரர்கள் உள்ளனர்.

    இரவு 7.15 மணிக்கு நடைபெறும் 2-வது ஆட்டத்தில் முருகன் அஸ்வின் தலைமையிலான சேலம் ஸ்பார்டன்ஸ்-பாபா இந்திரஜித் தலைமையிலான நெல்லை ராயல் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.

    முன்னாள் சாம்பியனான மதுரை அணி முதல் போட்டியிலேேய வெற்றி பெற வேண்டும் என்ற வேட்கையில் உள்ளது. முருகன் அஸ்வின், விஜய் சங்கர் உள்ளிட்ட வீரர்கள் அந்த அணியில் உள்ளனர்.

    நெல்லை ராயல் கிங்ஸ் தொடர்ந்து 2-வது வெற்றியை பெறும் ஆர்வத்துடன் உள்ளது. அந்த அணி தொடக்க ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீசை தோற்கடித்து இருந்தது.

    ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலில் இந்த போட்டிகள் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது. 

    • தொடக்க வீரராக களம் இறங்கிய ஜெகதீசன் 15 பந்தில் 25 ரன் எடுத்தார்.
    • நிலைத்து நின்று விளையாட முயற்சிக்கும் சமயத்தில் ரன்-அவுட் செய்யப்பட்டது சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிக்கு பின்னடைவாக அமைந்தது.

    டி.என்.பி.எஸ். கிரிக்கெட்டில் நெல்லை கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் பேட்ஸ்மேன் ஜெகதீசன் ரன்-அவுட் செய்யப்பட்டார்.

    பாபா அபராஜித் பந்துவீச ஓடி வந்தபோது, அந்த முனையில் நின்றிருந்த ஜெகதீசன் முன்னோக்கி நகர்ந்து சென்றார். அப்போது அவரை பாபா அபராஜித் ரன்-அவுட் செய்தார். இதனால் ஜெகதீசன் அதிருப்தியுடன் வெளியேறினார். இதுபோன்ற அவுட் மன்கட் முறை என்று அழைக்கப்பட்டு வந்தது. அதில் ஐ.சி.சி. திருத்தம் செய்து புதிய விதியை வெளியிட்டது.

    41.16 விதிப்படி, பந்து வீச்சாளர் சாதாரணமாக பந்தை விடுவிப்பார் என்று எதிர்பார்க்கும் வரை எந்த நேரத்திலும், அந்த முனையில் இருக்கும் வீரர் கிரீசை விட்டு வெளியே இருந்தால் ரன்-அவுட் செய்யப்படலாம்.

    அதேபோன்ற சூழ்நிலையில் பந்து வீச்சாளர், பந்தை ஸ்டெம்பு மீது வீசுவதன் மூலமோ அல்லது கையால் பந்தை பிடித்து ஸ்டெம்பை அடிப்பதன் மூலமோ ரன்-அவுட் ஆகலாம் என்பதாகும். "ஆனால் பாபா அபராஜித் பந்து வீசிய சமயத்தில் ஸ்டெம்ப் அருகே வந்தபோது ஜெகதீசனின் கால் கிரீஸ் மீது இருந்தது.

    அபராஜித் பந்தை கையில் இருந்து விடுவிப்பதற்கான ஆக்‌ஷன் செய்த போது ஜெகதீசனை பார்த்தபடி திடீரென்று பந்து வீசுவதை நிறுத்தினார். அவர் பந்தை ஸ்டெம்ப் அருகே கொண்டு செல்லும் போதும்கூட ஜெகதீசனின் பேட் கிரீஸ் மீது இருந்தது. பின்னர் ஜெகதீசன் கிரீசை விட்டு சிறிது நகர்ந்ததும் அவரை அபராஜித் ரன்-அவுட் செய்தார். இதனால் இந்த ரன்-அவுட் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும் விதிப்படி இந்த ரன்-அவுட் சரியானதா? என்ற கேள்வியும் எழுந்திருக்கிறது.

    தொடக்க வீரராக களம் இறங்கிய ஜெகதீசன் 15 பந்தில் 25 ரன் எடுத்தார். அவர் நிலைத்து நின்று விளையாட முயற்சிக்கும் சமயத்தில் ரன்-அவுட் செய்யப்பட்டது சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிக்கு பின்னடைவாக அமைந்தது.

    • சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 184 ரன் எடுத்தது.
    • ஒரு வீரர்களாக இப்போட்டியை அனுபவித்து விளையாடினோம்.

    நெல்லை:

    6-வது தமிழ்நாடு பிரிமீயர் லீக் (டி.என்.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தொடர் நேற்று நெல்லையில் தொடங்கியது. 8 அணிகள் பங்கேற்றுள்ள இப்போட்டியில் தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ்-நெல்லை ராயல் கிங்ஸ் அணிகள் மோதின.

    முதலில் பேட்டிங் செய்த நெல்லை அணி 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 184 ரன் எடுத்தது. சஞ்சய் யாதவ் 87 ரன் எடுத்தார்.

    பின்னர் விளையாடிய சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிக்கு சீரான இடைவெளியில் விக்கெட் வீழ்ந்தாலும் இலக்கை நெருங்கியது.

    கடைசி பந்தில் 5 ரன் தேவைப்பட்ட போது ஹரீஷ் குமார் பவுண்டரி அடித்தார். இதனால் ஆட்டம் சமன் ஆனது.சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 184 ரன் எடுத்தது. கேப்டன் கவுசிக் காந்தி 64 ரன் எடுத்தார்.

    ஆட்டம் சமன் ஆனதால் சூப்பர் ஓவர் முறை கடைப்பிடிக்கப்பட்டது. முதலில் பேட்டிங் செய்த சேப்பாக் சூப்பர் கில்லீஸ் ஒரு விக்கெட்டுக்கு 9 ரன் எடுத்தது.

    10 ரன் இலக்கை நோக்கி அடுத்து விளையாடிய நெல்லை அணி ஒரு விக்கெட்டை இழந்து 5-வது பந்தில் இலக்கை எடுத்து வென்றது.

    பரபரப்பான ஆட்டத்தில் தோல்வி அடைந்தது குறித்து சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி கேப்டன் கவுசிக் காந்தி கூறியதாவது:-

    ஆட்டத்தில் ஏற்ற, தாழ்வு இருந்தது. ஒரு வீரர்களாக இப்போட்டியை அனுபவித்து விளையாடினோம். மொத்தத்தில் போராடி தோற்றதால் எந்த வருத்தமும் இல்லை.

    ஒவ்வொரு போட்டி தொடரிலும் முதல் ஆட்டத்தில் தோற்பதை வெளிப்படையாக செய்ய விரும்புவதில்லை. இதை ஒரு நல்ல சகுனம் என அழைப்பதா என்று தெரியவில்லை.

    இத்தொடர் வேகமாக செல்லும் என்பதில் உத்வேகத்தை பெறுவது முக்கியம். இதனால் அடுத்த போட்டிக்கு தயாராகும் வகையில் எங்களது திறமையில் மேலும் முன்னேற்றத்துக்கான பணிகளை செய்ய வேண்டும்.

    நான் விளையாடிய விதத்தால் மகிழ்ச்சி அடைந்தேன். ஆனால் நாங்கள் வெற்றி பெறாததால் அதை கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    சேப்பாக் சூப்பர் கில்லீசின் பந்து வீச்சாளர் சித்தார்த் கூறும்போது, "நாங்கள் சிறப்பாக விளையாடினாலும் ஒருகடினமான தோல்வியை சந்தித்துள்ளோம். ஆனாலும் இதில் இருந்து சில பாடங்களைக் கற்றுக்கொண்டு அடுத்தப் போட்டியில் கண்டிப்பாக மீண்டெழுந்து வெற்றிக்கான பாதையில் பயணிப்போம்" என்றார்.

    நெல்லை ராயல் கிங்ஸ் வீரர் அதிசயராஜ் டேவிட்சன் கூறும்போது, "போட்டியின் கடைசி ஓவர் மற்றும் சூப்பர் ஓவரை வீசி அணியின் வெற்றிக்கு பங்களித்தது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. எனது சொந்த மக்கள் முன்பு வெற்றி பெற்றதும், விளையாடியதும் எனக்கு மகிழ்ச்சியளித்தது" என்றார்.

    ×