search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டிஎன்பிஎல்"

    • 3 முறை சாம்பியனான சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 5-வது முறையாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.
    • குவாலிபயர் ஆட்டத்தில் நெல்லை ராயல் கிங்ஸ்-கோவை கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.

    சேலம்:

    6-வது டி.என்.பி.எல். போட்டியில் நெல்லை ராயல் கிங்சை வீழ்த்தி சேப்பாக் சூப்பர் கில்லீஸ் 5-வது முறையாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.

    சேலத்தில் நடந்த "குவாலிபயர் 1" ஆட்டத்தில் முதலில் விளையாடிய நெல்லை ராயல் கிங்ஸ் அணி 20 ஓவரில் 140 ரன்னில் ஆல் அவுட் ஆனது. இதனால் சேப்பாக் சூப்பர் கில்லீசுக்கு 141 ரன் இலக்காக இருந்தது.

    பாபா அபராஜித் அதிக பட்சமாக 33 ரன்னும் (2 பவுண்டரி, 2 சிக்சர்), ஷாஜகான் 13 பந்தில் 25 ரன்னும் (3சிக்சர்) எடுத்தனர். மணிமாறன் சித்தார்த், சோனு யாதவ், சந்தீப் வாரியர் தலா 2 விக்கெட்டும், சாய்கிஷோர் 1 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

    பின்னர் ஆடிய சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 19.2 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 141 ரன் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

    சாய் கிஷோர் 27 பந்தில் 43 ரன்னும் (2 பவுண்டரி ,4 சிக்சர்) கேப்டன் கவுசிக் காந்தி 46 பந்தில் 40 ரன்னும் (1பவுண்டரி, 2 சிக்சர்), ஆர்.சதீஷ் 19 பந்தில் 31 ரன்னும் (4 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்தனர். கார்த்திக் மணிகண்டன் 3 விக்கெட்டும், அதிசயராஜ் டேவிட்சன் 2 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

    3 முறை சாம்பியனான சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 5-வது முறையாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. இந்த வெற்றி குறித்து சேப்பாக் சூப்பர் கில்லீஸ் கேப்டன் கவுசிக் காந்தி கூறியதாவது:-

    தொடர்ச்சியாக 6 போட்டிகளில் வென்றது மகிழ்ச்சியாக உள்ளது. இன்னும் ஒரே ஒரு போட்டி மட்டும் தான் உள்ளது என்பதால் எதையும் வித்தியாசமாக செய்யாமல் அதிகம் வெற்றி பெற மட்டுமே முயற்சிப்போம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஆட்டநாயகன் விருது பெற்ற சேப்பாக் சூப்பர் கில்லீஸ் வீரர் சாய்கிஷோர் கூறும்போது, 'மிகுந்த நம்பிக்கையுடன் என்னை தயார்படுத்திக் கொண்டே இருந்தேன். கிடைக்கும் தருணத்தில் ஷாட்களை அடித்தேன்" என்றார்.

    தோல்வி குறித்து நெல்லை ராயல் கிங்ஸ் கேப்டன் பாபா இந்திரஜித் கூறும்போது, 'நாங்கள் இன்னும் 20 ரன்கள் கூடுதலாக எடுத்து இருக்க வேண்டும். எங்களின் பந்து வீச்சாளர்கள் முடிந்தவரை போராாடினார்கள். இன்னும் ஒரு வாய்ப்பு இருப்பதால் அதில் வென்று மீண்டும் எங்கள் பயணத்தை தொடருவோம்' என்றார்.

    கோவையில் நாளை இரவு 7.15 மணிக்கு நடைபெறும் 'குவாலிபயர் 2' ஆட்டத்தில் நெல்லை ராயல் கிங்ஸ்-கோவை கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. இதில் வெற்றி பெறும் அணி இறுதிப் போட்டிக்கு 2-வது அணியாக தகுதிபெறும்.

    • முதலில் விளையாடிய நெல்லை அணி 140 ரன்கள் அடித்தது.
    • சேப்பாக் அணி வீரர் சாய் கிஷோர் 43 ரன்கள் குவித்தார்.

    டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. 8 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் லீக் சுற்று முடிவில் நெல்லை ராயல் கிங்ஸ், நடப்பு சாம்பியன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ், மதுரை பாந்தர்ஸ், கோவை கிங்ஸ் அணிகள் 'பிளே-ஆப்' சுற்றுக்கு முன்னேறின.

    இந்த நிலையில் சேலத்தில் இன்று நடைபெற்ற முதலாவது தகுதிச் சுற்று போட்டியில் பாபா இந்திரஜித் தலைமையிலான நெல்லை ராயல் கிங்ஸ், கவுசிக் காந்தி தலைமையிலான சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிகள் விளையாடின.

    டாஸ் வென்ற சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து முதலில் ஆடிய நெல்லை அணி, 20 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 140 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக பாபா அபராஜித் 33 ரன்கள் சேர்த்தார்.

    ஷாஜகான் 25, சஞ்சய் யாதவ் 21, கேப்டன் பாபா இந்திரஜித் 20, சூர்யபிரகாஷ் 19 ரன்கள் எடுத்தனர். சேப்பாக் சூப்பர் கில்லீஸ் தரப்பில் மணிமாறன் சித்தார்த், சந்தீப் வாரியர், சோனு யாதவ் தலா 2 விக்கெட் எடுத்தனர்.

    இதையடுத்து 141 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பின்னர் விளையாடிய சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியில் கேப்டன் கவுசிக் காந்தி 40 ரன் குவித்த நிலையில் ஆட்டமிழந்தார். ஜெகதீசன், ராதாகிருஷ்ணன் ஆகியோர் டக் அவுட்டானார்கள். சாய் கிஷோர் அதிகபட்சமாக 43 ரன்கள் எடுத்தார். சசியாதவ் 4 ரன்னுடன் வெளியேற பின்னர் ஜோடி சேர்ந்த ராஜகோபால் சதீஷ், ஹரிஷ்குமார் ஜோடி அணியின் வெற்றிக்கு போராடியது.

    அதிரடி காட்டிய சதீஷ் 19 பந்துகளில் 31 ரன்கள் குவித்ததுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். ஹரீஷ்குமார் 13 ரன்கள் அடித்து களத்தில் இருந்தார். இதனையடுத்து சேப்பாக் அணி 19.2 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 141 ரன்கள் குவித்ததுடன் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று டி.என்.பி.எல்.இறுதி ஆட்டத்திற்கு தகுதி பெற்றது.

    • முதலில் ஆடிய நெல்லை அணி 20 ஓவர்களில் 140 ரன்கள் சேர்த்தது.
    • அதிகபட்சமாக பாபா அபராஜித் 31 பந்துகளில் 33 ரன்கள் சேர்த்தார்.

    சேலம்:

    டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. 8 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் லீக் சுற்று முடிவில் நெல்லை ராயல் கிங்ஸ், நடப்பு சாம்பியன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ், மதுரை பாந்தர்ஸ், கோவை கிங்ஸ் அணிகள் 'பிளே-ஆப்' சுற்றுக்கு முன்னேறின.

    இந்த நிலையில் சேலத்தில் இன்று நடைபெறும் முதலாவது தகுதிச் சுற்று போட்டியில் பாபா இந்திரஜித் தலைமையிலான நெல்லை ராயல் கிங்ஸ், கவுசிக் காந்தி தலைமையிலான சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிகள் விளையாடுகின்றன.

    இப்போட்டியில் டாஸ் வென்ற சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் ஆடிய நெல்லை அணி, 20 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 140 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக பாபா அபராஜித் 33 ரன்கள் சேர்த்தார். ஷாஜகான் 25, சஞ்சய் யாதவ் 21, கேப்டன் பாபா இந்திரஜித் 20, சூர்யபிரகாஷ் 19 ரன்கள் எடுத்தனர். சேப்பாக் சூப்பர் கில்லீஸ் தரப்பில் மணிமாறன் சித்தார்த், சந்தீப் வாரியர், சோனு யாதவ் தலா 2 விக்கெட் எடுத்தனர்.

    இதையடுத்து 141 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி களமிறங்குகிறது.

    • இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெறும் அணி நேரடியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறும்.
    • தோல்வி அடையும் அணி வெளியேறாது.

    சேலம்:

    டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டி சேலத்தில் நடந்து வருகிறது. 8 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் லீக் சுற்று முடிவில் நெல்லை ராயல் கிங்ஸ், நடப்பு சாம்பியன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ், மதுரை பாந்தர்ஸ், கோவை கிங்ஸ் அணிகள் 'பிளே-ஆப்' சுற்றுக்கு முன்னேறின.

    இந்த நிலையில் இன்று இரவு 7.15 மணிக்கு நடைபெறும் முதலாவது தகுதி சுற்று போட்டியில் பாபா இந்திரஜித் தலைமையிலான நெல்லை ராயல் கிங்ஸ் அணி, கவுசிக் காந்தி தலைமையிலான சேப்பாக் சூப்பர் கில்லீசை சந்திக்கிறது. நெல்லை அணி தனது முதல் 6 ஆட்டங்களில் தொடர்ச்சியாக வென்று கடைசி லீக் ஆட்டத்தில் 5 ரன் வித்தியாசத்தில் கோவையிடம் தோற்று 12 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து பிளே-ஆப் சுற்றுக்குள் நுழைந்தது.

    சேப்பாக் சூப்பர் கில்லீஸ் முதல் 2 ஆட்டங்களில் (நெல்லை, மதுரை அணிகளிடம்)தோல்வியை சந்தித்தது. அதன் பிறகு எழுச்சி பெற்று தொடர்ச்சியாக 5 வெற்றிகளை குவித்து 10 புள்ளிகளுடன் 2-வது இடத்தை தனதாக்கி அடுத்த சுற்றுக்குள் அடியெடுத்து வைத்தது. நெல்லைக்கு எதிரான முதலாவது லீக் ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி சூப்பர் ஓவரில் தோல்வி கண்டது.

    அந்த தோல்விக்கு பதிலடி கொடுத்து முதல் அணியாக இறுதிபோட்டிக்கு நுழைய சேப்பாக் சூப்பர் கில்லீஸ் வியூகம் வகுக்கும். அதேநேரத்தில் தனது ஆதிக்கத்தை தொடர நெல்லை அணி வரிந்து கட்டும். வலுவான இரு அணிகளும் மோதும் இந்த ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெறும் அணி நேரடியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறும். தோல்வி அடையும் அணி வெளியேறாது. மேலும் ஒரு வாய்ப்பாக 2-வது தகுதி சுற்றில் கோவை கிங்சுடன் மோதும்.

    • சதுர்வேதி தலைமையிலான மதுரை பாந்தர்ஸ்-ஷாருக்கான் தலைமையிலான கோவை கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.
    • வெற்றி காணும் அணி முதலாவது தகுதி சுற்றில் தோற்கும் அணியுடன் மோதும்.

    6-வது டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டியில் லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடித்த நெல்லை ராயல் கிங்ஸ், நடப்பு சாம்பியன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ், மதுரை பாந்தர்ஸ், கோவை கிங்ஸ் அணிகள் பிளே-ஆப் சுற்றுக்கு முன்னேறின.

    இன்று இரவு 7.15 மணிக்கு சேலத்தில் நடக்கும் எலிமினேட்டர் ஆட்டத்தில் சதுர்வேதி தலைமையிலான மதுரை பாந்தர்ஸ்-ஷாருக்கான் தலைமையிலான கோவை கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. இதில் தோற்கும் அணி வெளியேறும். வெற்றி காணும் அணி முதலாவது தகுதி சுற்றில் தோற்கும் அணியுடன் மோதும்.

    • சேலத்தில் நாளை நடக்கும் வெளியேற்றுதல் சுற்றில் மதுரை-கோவை அணிகள் மோதுகின்றன.
    • 27-ந் தேதி நடக்கும் இறுதிப்போட்டிக்கான முதலாவது தகுதி சுற்றில் நெல்லை- சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

    சேலம்:

    6-வது டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டி சேலத்தில் நடந்து வருகிறது. இதில் நேற்று மாலை நடந்த 27-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் மதுரை பாந்தர்ஸ் அணி, 36 ரன்கள் வித்தியாசத்தில் திருச்சி வாரியர்சை வீழ்த்தி வெற்றி பெற்றது.

    இரவில் நடந்த மற்றொரு ஆட்டத்தில் சேலம் ஸ்பார்டன்ஸ் அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் திண்டுக்கல் டிராகன்சை சாய்த்தது. முதல் 6 ஆட்டங்களில் தொடர்ச்சியாக தோற்றிருந்த சேலம் அணிக்கு கடைசி லீக்கில் முதல் வெற்றி கிடைத்திருக்கிறது.

    நேற்றுடன் லீக் சுற்று முடிவடைந்து விட்ட நிலையில் புள்ளி பட்டியலில் டாப்-4 இடங்களை பிடித்த நெல்லை ராயல் கிங்ஸ், நடப்பு சாம்பியன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ், மதுரை பாந்தர்ஸ், கோவை கிங்ஸ் ஆகிய அணிகள் பிளே-ஆப் சுற்றுக்கு முன்னேறியுள்ளன.

    சேலத்தில் நாளை (செவ்வாய்க்கிழமை) நடக்கும் வெளியேற்றுதல் சுற்றில் மதுரை-கோவை அணிகள் மோதுகின்றன.

    அதைத் தொடர்ந்து 27-ந் தேதி நடக்கும் இறுதிப்போட்டிக்கான முதலாவது தகுதி சுற்றில் நெல்லை- சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. 2-வது தகுதி சுற்று 29-ந்தேதியும், இறுதிப்போட்டி 31-ந்தேதியும் கோவையில் நடக்கிறது.

    • சேலம் அணி வீரர் கணேசன் பெரியசாமி 3 விக்கெட்களை கைப்பற்றினார்.
    • திண்டுக்கல் வீரர் விமல் குமார் அதிகபட்சமாக 43 ரன்கள் அடித்தார்.

    வாழப்பாடி:

    6-வது டி.என்.பி.எல். டி20 ஓவர் கிரிக்கெட் தொடரின் கடைசி கட்ட லீக் ஆட்டங்கள் சேலத்தை அடுத்த வாழப்பாடியில் உள்ள சேலம் கிரிக்கெட் பவுண்டேசன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

    இன்று நடைபெற்ற 28-வது லீக் ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ், சேலம் ஸ்பர்டன்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற சேலம் அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி, சேலம் அணி முதலில் களமிறங்கியது. திண்டுக்கல் அணியினர் துல்லியமாக பந்து வீசியதால் சேலம் அணியினரின் விக்கெட்டுகள் சீரான இடைவெளியில் வீழ்ந்தன.

    அந்த அணியின் டேரில் பெராரியோ மட்டும் ஓரளவு தாக்குப்பிடித்து 38 ரன்னில் அவுட்டானார். மற்றவர்கள் விரைவில் வெளியேறினர். இறுதியில், சேலம் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 124 ரன்களை மட்டுமே எடுத்தது. பிரனவ் குமார் 25 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார். திண்டுக்கல் அணி சார்பில் சிலம்பரசன், விவேக் ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 125 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் திண்டுக்கல் அணி களம் இறங்கியது. அந்த அணி கேப்டன் நிஷாந்த் டவுக் அவுட்டானார். விமல் குமார் அதிகபட்சமாக 43 ரன்கள் குவித்தார். முகுந்த், ஹரிகரன் ஆகியோர் ரன் எதுவும் எடுக்காமல் வெளியேறினர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்னுக்கு அவுட்டானார்கள்.

    20 ஓவர்கள் முடிவில் திண்டுக்கல் அணி 9 விக்கெட் இழப்பிற்கு 106 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 18 ரன் வித்தியாசத்தில் சேலம் அணி வெற்றி பெற்றது. அந்த அணி சார்பில் கணேசன் பெரியசாமி 3 விக்கெட்களும், அஸ்வின், கார்த்திகேயன் தலா 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

    • டாஸ் வென்ற சேலம் ஸ்பர்டன்ஸ் அணி பேட்டிங் தேர்வு செய்தது.
    • அதன்படி, முதலில் ஆடிய சேலம் அணி 124 ரன்களை எடுத்தது.

    சேலம்:

    6-வது டி.என்.பி.எல். டி20 ஓவர் கிரிக்கெட் தொடரின் கடைசி கட்ட லீக் ஆட்டங்கள் சேலத்தை அடுத்த வாழப்பாடியில் உள்ள சேலம் கிரிக்கெட் பவுண்டேசன் மைதானத்தில் நடக்கிறது.

    இன்று நடைபெறும் 28-வது லீக் ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ், சேலம் ஸ்பர்டன்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற சேலம் அணி பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, சேலம் அணி முதலில் களமிறங்கியது. திண்டுக்கல் அணியினர் துல்லியமாக பந்து வீசியதால் சேலம் அணியினரின் விக்கெட்டுகள் சீரான இடைவெளியில் வீழ்ந்தன.

    அந்த அணியின் டேரில் பெராரியோ மட்டும் ஓரளவு தாக்குப்பிடித்து 38 ரன்னில் அவுட்டானார். மற்றவர்கள் விரைவில் வெளியேறினர்.

    இறுதியில், சேலம் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 124 ரன்களை மட்டுமே எடுத்தது. பிரனவ் குமார் 25 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்.

    திண்டுக்கல் அணி சார்பில் சிலம்பரசன், விவேக் ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 125 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் திண்டுக்கல் அணி களமிறங்குகிறது.

    • முதலில் ஆடிய மதுரை பாந்தர்ஸ் அணி 136 ரன்களை எடுத்தது.
    • அடுத்து ஆடிய திருச்சி 100 ரன்களில் சுருண்டது.

    சேலம்:

    6-வது டி.என்.பி.எல். டி20 ஓவர் கிரிக்கெட் தொடரின் கடைசி கட்ட லீக் ஆட்டங்கள் சேலத்தை அடுத்த வாழப்பாடியில் உள்ள சேலம் கிரிக்கெட் பவுண்டேசன் மைதானத்தில் நடைபெற்றது.

    இன்று நடைபெற்ற 27-வது லீக் ஆட்டத்தில் மதுரை பாந்தர்ஸ், ரூபி திருச்சி வாரியர்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற திருச்சி அணி பவுலிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட்டிங் செய்த மதுரை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 136 ரன்களை எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக அனிருத் 34 ரன்கள் எடுத்தார். ஆதித்யா 26 ரன்னிலும், ஜெகதீசன் கவுசிக் 22 ரன்னிலும் வெளியேறினர்.

    கடைசி கட்டத்தில் சன்னி சந்து 8 பந்துகளில் 3 சிக்சர், ஒரு பவுண்டரி உள்பட 24 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் உள்ளார்.

    திருச்சி அணி சார்பில் பொய்யாமொழி 2 விக்கெட் வீழ்த்தினார்.

    இதையடுத்து, 137 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் திருச்சி அணி களமிறங்கியது. ஆரம்பம் முதல் மதுரை வீரர்கள் கட்டுக்கோப்பாக பந்து வீசினர். இதனால் திருச்சி அணி ரன்கள் எடுக்க முடியாமல் திணறியது.

    இறுதியில், திருச்சி அணி 100 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அந்த அணியின் சந்தோஷ் ஷிவ் 31 ரன்னும், அமித் சாத்விக் 23 ரன்னும் எடுத்தனர்.

    இதன்மூலம் மதுரை அணி 5வது வெற்றியை பதிவு செய்துள்ளது. ரன்ரேட் அடிப்படையில் புள்ளிப் பட்டியலில் 3-ம் இடத்தைப் பிடித்தது.

    மதுரை அணி சார்பில் ஜெகதீசன் கவுசிக் 4 விக்கெட்டும், கிரண் ஆகாஷ், வருண் சக்கரவர்த்தி ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

    • டாஸ் வென்ற ரூபி திருச்சி வாரியர்ஸ் அணி பவுலிங் தேர்வு செய்தது.
    • முதலில் ஆடிய மதுரை பாந்தர்ஸ் அணி 136 ரன்களை எடுத்தது.

    சேலம்:

    6-வது டி.என்.பி.எல். டி20 ஓவர் கிரிக்கெட் தொடரின் கடைசி கட்ட லீக் ஆட்டங்கள் சேலத்தை அடுத்த வாழப்பாடியில் உள்ள சேலம் கிரிக்கெட் பவுண்டேசன் மைதானத்தில் நடக்கிறது.

    இன்று நடைபெறும் 27-வது லீக் ஆட்டத்தில் மதுரை பாந்தர்ஸ், ரூபி திருச்சி வாரியர்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற திருச்சி அணி பவுலிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட்டிங் செய்த மதுரை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 136 ரன்களை எடுத்துள்ளது. அந்த அணியில் அதிகபட்சமாக அனிருத் 34 ரன்கள் எடுத்தார்.

    அனிருத் , ஆதித்யா ஜோடி 2வது விக்கெட்டுக்கு 58 ரன்கள் சேர்த்தது. தொடக்க ஆட்டக்காரர் ஆதித்யா 26 ரன்னில் அவுட்டானார். அருண் கார்த்திக் 5 ரன்னிலும், ரித்திக் ஈஸ்வரன் 2 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். கேப்டன் சதுர்வேதி 15 ரன்னிலும், ஜெகதீசன் கவுசிக் 22 ரன்னிலும் வெளியேறினர்.

    கடைசி கட்டத்தில் சன்னி சந்து 8 பந்துகளில் 3 சிக்சர், ஒரு பவுண்டரி உள்பட 24 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் உள்ளார்.

    திருச்சி அணி சார்பில் பொய்யாமொழி 2 விக்கெட் வீழ்த்தினார். இதையடுத்து, 137 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் திருச்சி அணி களமிறங்குகிறது.

    • டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் தொடரின் கடைசிகட்ட லீக் ஆட்டங்கள் சேலத்தில் நடைபெறுகின்றன.
    • நெல்லை ராயல் கிங்ஸ், சேப்பாக் சூப்பர் கில்லீஸ், மதுரை பாந்தர்ஸ் ஏற்கனவே பிளேஆப் சுற்றுக்கு முன்னேறின

    சேலம்:

    6-வது டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கடந்த 23-ந் தேதி நெல்லையில் தொடங்கியது. அங்கு 6 ஆட்டங்கள் நடந்தது. அதை தொடர்ந்து திண்டுக்கல்லில் 7 போட்டிகளும் , கோவையில் 8 ஆட்டங்களும் நடை பெற்றது. தற்போது சேலத்தில் போட்டிகள் நடைபெற்று வருகிறது.

    நேற்று நடந்த ஆட்டத்தில் கோவை கிங்ஸ் 5 ரன்னில் நெல்லை ராயல் கிங்சை தோற்கடித்து 4-வது அணியாக பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றது. நெல்லை ராயல் கிங்ஸ், சேப்பாக் சூப்பர் கில்லீஸ், மதுரை பாந்தர்ஸ் ஆகிய அணிகள் ஏற்கனவே முன்னேறி இருந்தன.

    இதுவரை 26 ஆட்டங்கள் முடிந்துள்ளன. இன்றுடன் லீக் போட்டிகள் முடிகிறது. இரண்டு ஆட்டங்கள் இன்று நடக்கிறது.

    மாலை 3.15 மணிக்கு நடைபெறும் முதல் போட்டி யில் மதுரை பாந்தர்ஸ்-திருச்சி வாரியர்ஸ் அணிகள் மோதுகின்றன.

    மதுரை அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்று விட்டது. 8 புள்ளிகளுடன் இருக்கும் அந்த அணி 5-வது‌ வெற்றி ஆர்வத்தில் உள்ளது. திருச்சி வாரியர்ஸ் வாய்ப்பை இழந்து விட்டது. 3-வது வெற்றி கிடைக்குமா? என்ற எதிர்பார்ப்பில் அந்த அணி இருக்கிறது.

    இரவு 7.15 மணிக்கு நடைபெறும் 2-வது ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ்-சேலம் ஸ்பார்டன்ஸ் அணிகள் மோதுகின்றன.

    பிளே-ஆப் சுற்று வாய்ப்பை ஏற்கனவே இழந்து விட்ட திண்டுக்கல் அணி 3-வது வெற்றி வேட்கையில் இருக்கிறது.

    6 ஆட்டத்திலும் தோல்வி அடைந்த சேலம் அணி தனது கடைசி போட்டியிலாவது வெற்றி பெறுமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி இன்று தனது கடைசி லீக் ஆட்டத்தில் விளையாடுகிறது.
    • இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற்றால் பிளே-ஆப் சுற்றை சேப்பாக் சூப்பர் கில்லீஸ் உறுதி செய்து விடும்.

    சேலம்:

    8 அணிகள் பங்கேற்றுள்ள 6-வது தமிழ்நாடு பிரிமீயர் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தொடர் நடந்து வருகிறது.

    சேலத்தில் இன்று நடக்கும் 25-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ்-திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்த ஆட்டம் இரவு 7.15 மணிக்கு தொடங்குகிறது.

    கவுசிக்காந்தி தலைமையிலான சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 6 ஆட்டத்தில் 4 வெற்றி, 2 தோல்வியுடன் 8 புள்ளிகள் பெற்று 2-வது இடத்தில் உள்ளது. அந்த அணி இன்று தனது கடைசி லீக் ஆட்டத்தில் விளையாடுகிறது.

    இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற்றால் பிளே-ஆப் சுற்றை சேப்பாக் சூப்பர் கில்லீஸ் உறுதி செய்து விடும். இதனால் அடுத்த சுற்றுக்கு முன்னேறும் முனைப்பில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் உள்ளது.

    அந்த அணியில் ஜெகதீசன், சசிதேவ், ராதா கிருஷ்ணன், ஹரீஷ்குமார், சாய்கிஷோர், சித்தார்த், அலெக்சாண்டர்,. சந்தீப் வாரியர் ஆகிய வீரர்கள் உள்ளனர். சேப்பாக் சூப்பர் கில்லீஸ் தொடர்ந்து 4 வெற்றி பெற்றுள்ளதால் அந்த உத்வேகத்துடன் களம் இறங்குகிறது.

    அனிருதா தலைமையிலான திருப்பூர் தமிழன்ஸ் அணி 6 ஆட்டத்தில் 3 வெற்றி, 3 தோல்வியுடன் 6 புள்ளிகளுடன் 5-வது இடத்தில் உள்ளது. அடுத்த சுற்று வாய்ப்பில் நீடிக்க திருப்பூர் அணி இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற வேண்டும்.

    அந்த அணியில் அரவிந்த், சுப்பிரமணியன், ஆனந்த், மான்பாப்னா, எம்.முகமது, அஸ்வின் கிறிஸ்ட், ராஜ்குமார், மணிகண்டன், மோகன் பிரசாத் ஆகிய வீரர்கள் உள்ளனர்.

    ×