search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அணை"

    • தடுப்பணை கட்டுவதற்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்த வழக்கில் ஏதேனும் பின்னடைவு ஏற்பட்டிருக்கிறதா? என்ற ஐயம் எழுகிறது.
    • சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு தொடர்ந்த வழக்கில் என்ன நடந்தது? என்பது பற்றி அரசு விளக்கம் அளிக்க வேண்டும்.

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    ஆந்திர மாநிலம் குப்பம் பகுதியில் பாலாற்றின் குறுக்கே புதிய தடுப்பணைக் கட்டுவதற்கு அம்மாநில முதல்-அமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி இன்று அடிக்கல் நாட்டுகிறார்.

    அதைவிட அதிர்ச்சியளிக்கும் உண்மை, தடுப்பணை தொடர்பான தமிழக அரசின் வழக்கில் சிக்கல் தீர்ந்துவிட்டது என்று ஆந்திர அமைச்சர் கூறியிருப்பது தான்.

    அதனால் புதிய அணையை கட்டப்போவதாகவும் ஆந்திர அரசு கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

    அப்படியானால், ஆந்திராவில் தடுப்பணை கட்டுவதற்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்த வழக்கில் ஏதேனும் பின்னடைவு ஏற்பட்டிருக்கிறதா? என்ற ஐயம் எழுகிறது. குறைந்தது ஒரு வாரத்திற்கு முன்பாக இத்தகைய பின்னடைவு ஏற்பட்டிருந்தால் தான் ஆந்திர அரசால் புதிய தடுப்பணைக்கு இன்று அடிக்கல் நாட்ட முடியும். எனவே, ஆந்திராவில் புதிய தடுப்பணைகளை கட்ட அனுமதிக்கக் கூடாது என்று சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு தொடர்ந்த வழக்கில் என்ன நடந்தது? என்பது பற்றி அரசு விளக்கம் அளிக்க வேண்டும்.

    பாலாற்று நீரைப் பயன்படுத்துவது குறித்து அப்போதைய சென்னை மாகாணத்திற்கும், மைசூர் ராஜதானிக்கும் இடையே 1892-ம் ஆண்டு கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தத்தில் கடைமடை பாசன மாநிலத்தின் ஒப்புதல் இல்லாமல் புதிய அணைகளைக் கட்டக்கூடாது என்று தெளிவாகக் கூறப்பட்டிருக்கிறது.

    அதற்கு மாறாக ஆந்திர அரசு புதிய தடுப்பணைகளைக் கட்டுவதும், ஏற்கனவே கட்டப்பட்ட அணைகளின் உயரத்தை அதிகரிப்பதும் சட்டவிரோதமாகும். இதை அனுமதிக்கக்கூடாது.

    ஒரு காலத்தில் பால் போல் தண்ணீர் ஓடிய பாலாறு, இப்போது வறண்டு போய் காட்சியளிக்கிறது. இதனால் பாலாற்று தண்ணீரை நம்பி பாசனம் செய்து வந்த விவசாயிகளில் பெரும்பான்மையானோர் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். இந்த நிலையில் பாலாற்றின் குறுக்கே உடனடியாக ஒரு தடுப்பணையும், தேர்தலுக்குப் பிறகு மேலும் இரு தடுப்பணைகளும் கட்டப்பட்டால், ஆந்திரத்தில் வெள்ளம் ஏற்பட்டால் கூட தமிழ்நாட்டிற்கு பாலாற்றில் தண்ணீர் வராது. அப்போது பாலாறு பாலைவனமாகவே மாறி விடக்கூடும்.

    பாலாற்றை நிரந்தர பாலைவனமாக்க ஆந்திரம் திட்டமிட்டு மேற்கொள்ளும் இந்த சதியை தமிழக அரசு முறியடிக்க வேண்டும். குப்பம் பகுதியில் பாலாற்றின் குறுக்கே புதிய தடுப்பணை கட்டுவதற்கான ஆந்திர அரசின் முயற்சிகளை தடுத்து நிறுத்த வேண்டும்.

    அதுமட்டுமின்றி, ஆந்திர தடுப்பணைகளுக்கு எதிராக சுப்ரீம்கோர்ட்டில் தொடரப்பட்டுள்ள வழக்குக்கு உயிர் கொடுப்பதுடன், அந்த வழக்கைப் பயன்படுத்தி பாலாற்றின் குறுக்கே இனிவரும் காலங்களில் அணைகள் கட்டப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • கடந்த சில நாட்களாக மழைப்பொழிவு இல்லாததால் அணைக்கு நீர்வரத்து குறைந்து வருகிறது.
    • அணைகளின் நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வருவது குறிப்பிடத்தக்கது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது.

    இந்நிலையில் நீர்ப்பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப்பகுதியில் கடந்த சில நாட்களாக மழைப்பொழிவு இல்லாததால் அணைக்கு நீர்வரத்து குறைந்து வருகிறது. அதேநேரம் அணைக்கு வரும் நீர்வரத்தை விட பாசனத்திற்கு அதிக அளவில் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருவதால் அணையின் நீர்மட்டமும் தொடர்ந்து குறைந்து வருகிறது.

    இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 72.19 அடியாக குறைந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 287 கனஅடியாக நீர் வந்து கொண்டிருக்கிறது. கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்கு 2,000 கன அடியாக திறக்கப்பட்ட தண்ணீர் இன்று முதல் 1,800 கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது. தடப்பள்ளி-அரக்கன்கோட்டை பாசனத்திற்கு 700 கனஅடி, குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 100 கனஅடி என மொத்தம் 2,600 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

    குண்டேரிப்பள்ளம் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 39. 61 அடியாகவும், பெரும்பள்ளம் அணையின் நீர்மட்டம் 2.42 அடியாகவும், வரட்டுப்பள்ளம் அணையின் நீர்மட்டம் 29.46 அடியாகவும் குறைந்து உள்ளது. மழை பொழிவு இல்லாததாலும், நீர்வரத்து குறைந்ததாலும் மாவட்டத்தில் உள்ள அணைகளின் நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வருவது குறிப்பிடத்தக்கது.

    • பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
    • மழை பெய்யாததால் அணை நீர்மட்டம் மெல்ல மெல்ல குறைந்து வருகிறது.

    உடுமலை:

    திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே அமைந்துள்ள அமராவதி அணை 90 அடி உயரம் கொண்டது. இந்த அணையின் மூலம் திருப்பூர், கரூர் மாவட்டங்களில் 55 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன.

    நூற்றுக்கணக்கான கிராமங்கள் பயன்பெறும் வகையில் கூட்டு குடிநீர் திட்டங்களும் செயல்படுத்தப்படுகின்றன. தென்மேற்கு பருவ மழை காலமான ஜூன் முதல் செப்டம்பர் வரையும் வடகிழக்கு பருவ மழை காலமான அக்டோபர் முதல் டிசம்பர் வரையும் அமராவதி அணைக்கு நீர் வரத்து இருக்கும்.

    கடந்த ஆண்டு வடகிழக்கு பருவ மழை முடியும் தருவாயில், டிசம்பர் மாதம் இறுதியில் எதிர்பாராத விதமாக கனமழை கொட்டியது . வினாடிக்கு 10 ஆயிரம் கன அடிக்கும் அதிகமாக நீர்வரத்து இருந்ததால் அணை நீர்மட்டம் வேகமாக உயர்ந்து முழு கொள்ளளவையும் எட்டியது. இதனால் உபரி நீர் திறந்து விடப்பட்டது.

    தற்போது பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. மேலும் மழை பெய்யாததால் அணை நீர்மட்டம் மெல்ல மெல்ல குறைந்து வருகிறது. அணையில் கடந்த 30-ந் தேதி நீர்மட்டம் 86 அடியாக இருந்த நிலையில் இன்று நீர்மட்டம் 82.52 அடியாக குறைந்துள்ளது.

    • பாபநாசம் அணைக்கு வரும் நீரின் அளவு 883 கனஅடியாக அதிகரித்தது.
    • மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ள குற்றாலம் அருவி பகுதிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது.

    நெல்லை:

    நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் நேற்று காலையில் தொடங்கி இரவு வரையிலும் ஒரு சில இடங்களில் மழை பெய்தது.

    நெல்லையில் நேற்று மாலை மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள பிரதான அணையான பாபநாசம் அணையின் நீர்பிடிப்பு பகுதியில் மழை பெய்தது. அங்கு 5 மில்லி மீட்டரும், சேர்வலாறு அணை பகுதியில் 2 மில்லி மீட்டரும் மழை பதிவாகியது.

    இதனால் பாபநாசம் அணைக்கு வரும் நீரின் அளவு 883 கனஅடியாக அதிகரித்தது. அணையில் இருந்து பாசனத்திற்காக வினாடிக்கு 1,054 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. 143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணையின் நீர்மட்டம் 140.50 அடியாக உள்ளது. கொடுமுடியாறு அணையில் 11 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது.

    118 அடி கொண்ட மணி முத்தாறு அணை பகுதியில் நேற்று 14.50 மில்லிமீட்டர் மழை பெய்தது. இந்த மழையின் காரணமாக அணை இந்த வடகிழக்கு பருவமழை காலத்தில் 3-வது முறையாக நிரம்பியது.

    தாமிரபரணி ஆற்றில் உபரி நீர் 720 கனஅடி திறக்கப்பட்டுள்ளது. கன்னடியன் கால்வாய் பகுதியில் சாரல்மழை தொடர்ந்து பெய்து வந்தது. அங்கு 8.2 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. களக்காட்டில் 9.2 மில்லி மீட்டரும், சேரன்மகாதேவியில் 4 மில்லி மீட்டரும் மழை பெய்துள்ளது.

    மாவட்டத்தில் நாங்குநேரி, அம்பை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் நேற்று பரவலாக மழை பெய்தது. நாங்குநேரியில் அதிகபட்சமாக 12 மில்லி மீட்டரும், அம்பையில் 6 மில்லி மீட்டரும் மழை பெய்துள்ளது. ராதாபுரத்தில் 3 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது. ஊத்து, நாலுமுக்கு, மாஞ்சோலை, காக்காச்சி உள்ளிட்ட எஸ்டேட்டுகளிலும் தொடர்ந்து 2-வது நாளாக மழை பெய்து வருகிறது. அதிகபட்சமாக ஊத்து பகுதியில் 12 மில்லி மீட்டரும், நாலுமுக்கில் 8 மில்லி மீட்டரும், மாஞ்சோலையில் 7 மில்லி மீட்டரும் மழை பதிவாகி உள்ளது.

    தென்காசி மாவட்டத்தில் ராமநதி, கடனா நதி மற்றும் குண்டாறு அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளில் சாரல் மழை நீடிக்கிறது. அதிகபட்சமாக கடனா நதியில் 7 மில்லி மீட்டரும், ராமநதியில் 6 மில்லி மீட்டரும் மழை பெய்துள்ளது. குண்டாறு அணை தனது முழு கொள்ளளவான 36 அடியை அடைந்து நிரம்பி வழிந்த வண்ணம் உள்ளது. மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ள குற்றாலம் அருவி பகுதிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது.

    இன்று விடுமுறை தினத்தையொட்டி மெயினருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவிகளில் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வந்து குளித்து மகிழ்ந்து வருகின்றனர். தென்காசி மாவட்டத்தில் தென்காசி மற்றும் சிவகிரியில் லேசான சாரல் அடித்தது.

    தூத்துக்குடி மாவட்டத்தில் குலசேகரன் பட்டினம், சாத்தான்குளம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தலா 13 மில்லிமீட்டர் மழை பெய்து உள்ளது. அதிகபட்சமாக காயல்பட்டினம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் 23 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது. திருச்செந்தூரில் 1 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது.

    • பேச்சிப்பாறை அணை 42 அடியை எட்டியது
    • பாசன குளங்களும், அணைகளும் நிரம்பி உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    நாகர்கோவில் :

    குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொட்டி தீர்த்த மழையின் காரணமாக பாசன குளங்கள், அணைகள் முழு கொள்ளளவை எட்டி நிரம்பி வழிகிறது.

    மாவட்டம் முழுவதும் 1500-க்கு மேற்பட்ட பாசன குளங்கள் நிரம்பியுள்ளது. மாம்பழத்துறையாறு, முக்கடல் அணைகளும் முழு கொள்ளளவை எட்டியுள்ளது. சிற்றாறு அணைகள் நிரம்பியதை யடுத்து அணையில் இருந்து உபரிநீர் வெளியேற்றப் பட்டது. தற்பொழுது அணைக்கு வரக்கூடிய நீர்வரத்து குறைந்தது.

    இதையடுத்து அணையில் இருந்து வெளியேற்றப்பட்ட உபநீர் நிறுத்தப்பட்டுள்ளது. பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 71 அடியை எட்டியதையடுத்து ஆற்றின் கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டு இருந்தது. அணையில் இருந்து வெளி யேற்றப்பட்ட உபரிநீரின் காரணமாக திற்பரப்பு அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. தற்போது அணையில் இருந்து வெளியேற்றப்பட்ட உபரிநீர் நிறுத்தப்பட்டுள் ளது. பேச்சிப்பாறை அணை யின் நீர்மட்டத்தை பொதுப் பணித்துறை அதிகாரிகள் கண்காணித்து வந்தனர். 48 அடி கொள்ளளவு கொண்ட பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் 42 அடியை எட்டியதும் கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்ப டும். அணை நீர்மட்டம் இன்று காலை 42.02 அடி யாக உயர்ந்தது. அணைக்கு 371 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 173 கன அடி தண்ணீர் வெளி யேற்றப்படுகிறது.

    கோதையாறு, திற்பரப்பு, மூவாற்றுமுகம், குழித்துறை ஆற்றின் கரையோர பகுதி மக்களுக்கு பொதுப் பணித்துறை அதிகாரிகள் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளனர். எப்பொ ழுது வேண்டுமானாலும் அணையில் இருந்து உபரிநீர் திறக்கப்படலாம் என்பதால் பொதுமக்கள் பாது காப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவு றுத்தப்பட்டு உள்ளனர். பேச்சிப்பாறை அணையில் இருந்து உபரிநீர் திறக்கப் படும் பட்சத்தில் திற்பரப்பு அருவியிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டும் என்பதால் பேரூராட்சி நிர்வாகம் அதை கண் காணித்து வருகிறது.

    பெருஞ்சாணி அணை நீர்மட்டம் இன்று காலை 71.72 அடியாக உள்ளது. அணைக்கு 382 கன அடி தண்ணீர் வந்து கொண்டி ருக்கிறது. அணையில் இருந்து 350 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படு கிறது. பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைப் பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. மலை யோர பகுதியான பாலமோர் பகுதியிலும் மழை விட்டு விட்டு பெய்து வருகிறது. குளச்சல், இரணியல், குழித் துறை, அடையாமடை, முள்ளங்கினாவிளை மற்றும் அதன் புறநகர் பகுதி களிலும் மழை பெய்தது. இரணியலில் அதிகபட்சமாக 12 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

    தொடர் மழையின் காரணமாக பாசன குளங்களும், அணைகளும் நிரம்பி உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஏற்கனவே மாவட்டம் முழுவதும் கும்பப்பூ சாகு படி பணியை விவசாயிகள் தொடங்கியுள்ளனர்.

    6500 ஹெக்டேரில் விவசாயிகள் கும்பப்பூ சாகுபடி செய்ய இலக்கு நிர்ணயம் செய்யப் பட்டுள்ளது. இதையடுத்து வேளாண் துறை அதிகாரி கள் அவர்களுக்கு தேவை யான விதை நெல்களை தங்குதடையின்றி வழங்கி வருகிறார்கள்.

    • வன உரிமை சட்டப்படி பாரம்பரியமாக எங்கெல்லாம், தங்கி மாடுகளை மேய்த்தார்களோ, அங்கெல்லாம் தங்கி மேய்ப்பதற்கு சட்டப்படி உரிமை உள்ளது.
    • கடந்த 5 ஆண்டு காலமாக மாடுகளை மேய்த்து வருகிறோம்.

    உடுமலை:

    உடுமலை மலைவாழ் மக்கள் சங்கத்தினர் கோட்டாட்சியருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

    ஆனைமலை புலிகள் காப்பகம், உடுமலை வனச்சரகம், மாவடப்பு , காட்டுப்பட்டி மலைவாழ் மக்கள் குடியிருப்பை சேர்ந்தவர்கள், பாரம்பரியமாக வறட்சியான காலங்களில், ஆழியார் அணைக்குள் தாங்கள் வளர்க்கும் மாடுகளை கொண்டு சென்று பட்டி அமைத்து அங்கேயே தங்கி மேய்ப்பது வழக்கமாக கொண்டுள்ளனர்.

    நடப்பாண்டு 3 மாதத்திற்கு முன் 20 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள், ஆழியார் அணைக்கரையில் மாட்டுப்பட்டி அமைத்து அங்கேயே தங்கி, பொதுப்பணித்துறைக்கு சொந்தமான இடங்களில் மாடுகளை மேய்த்து வருகின்றனர். மழை அதிகம் பெய்து அணைக்கு நீர் வந்தால், குடியிருப்பு பகுதியில் தீவனப்புல் வளர்ந்து விட்டால் மாடுகளை திரும்ப கொண்டு வந்து விடுவார்கள்.இந்நிலையில் வனத்துறையைச் சேர்ந்தவர்கள், மாடுகளை மேய்க்கக்கூடாது என கூறி வருகின்றனர்.

    இதற்கு முன் இதே போல் பிரச்சினை ஏற்பட்ட போது, உடுமலை வருவாய் கோட்டாட்சியர் தலையிட்டு, வன உரிமை சட்டப்படி பாரம்பரியமாக எங்கெல்லாம், தங்கி மாடுகளை மேய்த்தார்களோ, அங்கெல்லாம் தங்கி மேய்ப்பதற்கு சட்டப்படி உரிமை உள்ளது.எனவே மலைவாழ் மக்கள் ஆழியார் அணையில் மாடுகளை மேய்க்க அனுமதியை பெற்றுக்கொடுத்தார். அதற்கு பின் கடந்த 5 ஆண்டு காலமாக மாடுகளை மேய்த்து வருகிறோம்.

    அணையில் மாடுகளை மேய்க்க வரும் போது, தாடக நாச்சியம்மன் சுவாமிக்கு நேர்ந்து சாமி கிடா விட்டு வளர்ப்பது வழக்கம். திரும்ப செல்லும்போது கிடா வெட்டி சாமி கும்பிட்டு விட்டுச்செல்வார்கள்.அதற்கும் தடை விதிக்கின்றனர். எனவே, கோட்டாட்சியர் தலையிட்டு, பாரம்பரியமாக மாடுகளை மேய்க்கும் மலைவாழ் மக்கள் உரிமையை பாதுகாத்து, மலைவாழ் மக்களின் வாழ்வாதாரத்தை காக்க வேண்டும்.இவ்வாறு அம்மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    • களியலில் 76.6 மில்லி மீட்டர் மழை பதிவு
    • பேச்சிப்பாறை அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

    நாகர்கோவில் :

    குமரி மாவட்டத்தில் மலையோர பகுதிகளிலும் பேச்சிபாறை, பெருஞ் சாணி, சிற்றாறு அணை பகுதிகளிலும் தொடர்ந்து மழை கொட்டி தீர்த்து வருகிறது.

    களியல், ஆணைக் கிடங்கு, குழித்துறை, பூதப்பாண்டி, அடையா மடை மற்றும் அதன் புற நகர் பகுதிகளிலும் மழை பெய்தது. களியலில் அதிகபட்சமாக 76.6 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. திற்பரப்பு அருவி பகுதியில் கொட்டி தீர்த்த மழையின் காரணமாக அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வரு கிறது.

    விடுமுறை தினமான இன்று அருவியில் குளிப்ப தற்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர். மலையோர பகுதியான பாலமோர் பகுதியிலும் மழை பெய்து வருவதால் பேச்சிப்பாறை, பெருஞ் சாணி, அணைகளுக்கு கணிசமான அளவு தண்ணீர் வந்து கொண்டி ருக்கிறது. சிற்றாறு அணைக்கும் கூடுதல் தண்ணீர் வந்து கொண்டி ருப்பதையடுத்து அணையில் இருந்து மீண்டும் பாச னத்திற்காக தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

    பேச்சிபாறை அணை நீர்மட்டம் இன்று காலை 36.16 அடியாக இருந்தது.

    அணைக்கு 1150 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணை யில் இருந்து 274 கன அடி தண்ணீர் வெளியேற்றப்ப டுகிறது. பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 64.80 அடியாக உள்ளது. அணைக்கு 584 கன அடி தண்ணீர் வந்து கொண்டி ருக்கிறது. அணையில் இருந்து 200 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படு கிறது. சிற்றாறு- 1 அணை யின் நீர்மட்டம் 15.38 அடியாக உள்ளது. அணைக்கு 269 கன அடி தண்ணீர் வந்து கொண்டி ருக்கிறது. அணையில் இருந்து 200 கன அடி தண்ணீர் வெளியேற்றப்ப டுகிறது. சிற்றாறு 2 அணை நீர்மட்டம் 15.48 அடியாக வும், பொய்கை நீர்மட்டம் 9 அடியாகவும், மாம்பழத் துறையாறு நீர்மட்டம் 37.73 அடியாகவும் உள்ளது.

    நாகர்கோவில் நகருக்கு குடிநீர் சப்ளை செய்யப் படும் முக்கடல் அணை நீர்மட்டம் 16.60 அடியாக உள்ளது. மாவட்டம் முழு வதும் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

    பேச்சிபாறை 59.2, பெருஞ்சாணி 21.2, சிற்றார்-1 24.2, சிற்றார்-2 22.4, பூதப்பாண்டி 1.2, களியல் 76.6, குழித்துறை 17.8, புத்தன் அணை-21.2, சுருளோடு 13.6, தக்கலை 8.2, பாலமோர் 41.6, மாம்பழத்துறையாறு 2.8, திற்பரப்பு 63.7, அடையா மடை 4.2, ஆணைக்கிடங்கு 3.

    • மாம்பழத்துறையாறில் 32.5 மில்லி மீட்டர் பதிவு
    • மலையோர பகுதியான பாலமோர் பகுதியிலும் மழை பெய்தது.

    நாகர்கோவில் :

    குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொட்டி தீர்த்த மழையின் காரணமாக பாசன குளங் கள், அணைகளின் நீர்மட் டம் கணிசமான அளவு உயர்ந்தது.

    கடந்த 2 நாட்களாக மழை சற்று குறைந்திருந்த நிலையில் நேற்று அணை பகுதிகளில் மீண்டும் பரவலாக மழை பெய்தது. பேச்சிப்பாறை, பெருஞ் சாணி, சிற்றாறு, மாம்ப ழத்துறையாறு அணை பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்தது. மாம்பழத் துறையாறில் அதிகபட்சமாக 32.5 மில்லி மீட்டர் மழை பதிவாகி யுள்ளது. களியல், கன்னிமார், ஆணைக்கிடங்கு, சுருளோடு பகுதிகளிலும் மழை பெய்தது. மலையோர பகுதியான பாலமோர் பகுதியிலும் மழை பெய்தது.

    இதையடுத்து அணை களுக்கு வரக்கூடிய நீர்வரத்து சற்று அதிகரித்து உள்ளது. பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு அணைகளில் இருந்து 607 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. திற்பரப்பு அருவி பகுதியில் பெய்து வரும் மழையால் அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. பேச்சிப் பாறை அணை நீர்மட்டம் இன்று காலை 34.33 அடியாக இருந்தது.

    அணைக்கு 642 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 277 கன அடி தண்ணீர் வெளியிடப்படு கிறது. பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 63.35 அடியாக உள்ளது. அணைக்கு 408 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 130 கன அடி தண்ணீர் வெளியேற்றப் படுகிறது. சிற்றார்-1 அணையின் நீர்மட்டம் 14.63 அடியாகவும், சிற்றார்-2 அணையின் நீர்மட்டம் 14.73 அடியாகவும், பொய்கை அணையின் நீர்மட்டம் 9.10 அடியாகவும், மாம்பழத்துறையாறு அணையின் நீர்மட்டம் 35.27 அடியாகவும் உள்ளது.

    நாகர்கோவில் நகருக்கு குடிநீர் சப்ளை செய்யப்படும் முக்கடல் அணை நீர்மட்டம் வெகுவாக உயர்ந்து வருகிறது. அணை நீர்மட்டம் இன்று காலை 16 அடியை எட்டியது. மாவட்டம் முழுவதும் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

    பேச்சிப்பாறை 12.2, பெருஞ்சாணி 32.4, சிற்றார் 1-3.4, சிற்றார் 2-19, களியல் 8.2, கன்னிமார் 1.2, புத்தன் அணை 30, சுருளோடு 16.4, பாலமோர் 19.4, மாம்பழத்து றையாறு 32.5, திற்பரப்பு 8.4, ஆணைக்கிடங்கு 30.2.

    • பவானிசாகர் அணையில் இருந்து காளிங்கராயன் பாசனத்திற்கு நீர் திறப்பு அதிகரித்துள்ளது
    • அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்காக 2,300 கன அடி நீர் திறந்து விட ப்படுகிறது

    ஈரோடு,

    ஈரோடு மாவட்ட மக்க ளின் முக்கிய குடிநீர் ஆதார மாக உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ள ளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது. கடந்த சில நாட்களாக அணைக்கு வரும் நீர் வரத்தை காட்டிலும் பாசன த்திற்காக அதிக அளவில் நீர் திறந்து விடப்பட்டு வருவதால் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வருகிறது. அதே நேரம் மழை பொழிவு இல்லாததால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்தும் குறைந்து வருகிறது. இன்று காலை நிலவ ரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 69.24 அடியாக சரிந்து உள்ளது.

    அணைக்கு வினாடிக்கு 536 கனஅடியாக நீர்வரத்து வருகிறது. அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்காக 2,300 கன அடி நீர் திறந்து விட ப்படுகிறது. காளிங்கராயன் பாசனத்திற்கு 500 கனஅடி நீர் திறந்து விடப்பட்டு வந்த நிலையில் இன்று 600 கன அடியாக அதிகரித்து திறந்து விடப்படுகிறது. குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 100 கன அடி என மொத்தம் பவானிசாகர் அணையில் இருந்து 3000 கன அடி நீர் வெளியேற்ற ப்பட்டு வருகிறது. குண்டேரி பள்ளம் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 24.59 அடியாகவும், பெரு ம்பள்ளம் அணையின் நீர்மட்டம் 9.94 அடியாகவும், வரட்டுப்பள்ளம் அணை யின் நீர்மட்டம் 21.98 அடி யாகவும் உள்ளது.

    • அணைகளுக்கு நீர்வரத்து குறைய தொடங்கியது
    • மழை குறைந்துள்ள நிலையில் அணைகளுக்கு வரக்கூடிய நீர்வரத்து படிப்படியாக குறைய தொடங்கி உள்ளது.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் கொட்டித்தீர்த்த கனமழை யின் காரணமாக பாசன குளங்கள் கிடு கிடுவென நிரம்பி வருகிறது. மாவட்டம் முழுவதும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குளங்கள் முழு கொள்ளளவை எட்டி நிரம்பி வழிகிறது. மேலும் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளின் நீர்மட்டமும் உயர்ந்துள்ளது. தற்பொழுது மழை குறைந்துள்ள நிலையில் அணைகளுக்கு வரக்கூடிய நீர்வரத்து படிப்படியாக குறைய தொடங்கி உள்ளது.

    பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் இன்று காலை 33.49 அடியாக இருந்தது. அணைக்கு 992 கன அடி தண்ணீர் வந்து கொண்டி ருக்கிறது. அணையில் இருந்து 284 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 62.05 அடியாக உள்ளது. அணைக்கு 284 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 80 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

    சிற்றாறு-1 அணை நீர்மட்டம் 14.69 அடியாக உள்ளது. அணைக்கு 239 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 200 கன அடி தண்ணீர் வெளியேற்றப்ப டுகிறது. சிற்றாறு-2 அணை நீர்மட்டம் 14.79 அடியாகவும், பொய்கை அணை நீர்மட்டம் 9.20 அடியாகவும், மாம்பழத்துறையாறு அணை நீர்மட்டம் 33.46 அடியாகவும் உள்ளது. நாகர்கோவில் நகருக்கு குடிநீர் சப்ளை செய்யப்படும் முக்கடல் அணை நீர்மட்டம் 14.10 அடியாக உள்ளது.

    மாவட்டம் முழுவதும் தொடர் மழையின் காரணமாக பல்வேறு இடங்களில் அறுவடைக்கு தயாரான நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி இருந்தது. சுமார் 300 ஹெக்டேரில் தண்ணீர் மூழ்கி இருந்த நிலையில் கடந்த 2 நாட்களாக மழை சற்று குறைந்ததையடுத்து அந்த தண்ணீர் வடியத்தொடங்கியது. தற்பொழுது 111 ஹெக்டேரில் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளன. இந்த பகுதியிலும் தேங்கி இருந்த தண்ணீர் படிப்படியாக வடிந்து வருகிறது.

    தண்ணீர் வடிந்தாலும் ஒரு சில பகுதிகளில் நெற்பயிர்கள் முளைத்து காணப்படுவதால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர். மாவட் டம் முழுவதும் ஏற்கனவே 5500 ஹெக்டேரில் கன்னிப்பூ சாகுபடி செய்யப்பட்டது. தற்பொழுது 3500 ஹெக்டேரில் அறுவடை முடிந்திருந்த நிலையில் இன்னும் 1500 ஹெக்டேரில் அறுவடை செய்ய வேண்டியது உள்ளது. மணவாளக்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளில் இன்னும் அறுவடைக்கு ஒரு மாத காலம் ஆகலாம்.

    கன்னிப்பூ சாகுபடி தாமதமாக தொடங்கியதால் அறுவடை தாமதமாகி உள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர். கன்னிப்பூ அறுவடை நடைபெற்ற பகுதிகளில் விவசாயிகள் கும்பப்பூ சாகுபடி பணியை தொடங்கி உள்ளனர். திருப்பதிசாரம் 3-ரக நெல்லை வேளாண் துறை அதிகாரிகள் தங்கு தடை இன்றி வழங்கி வருகிறார்கள். சுசீந்திரம், தேரூர், பூதப்பாண்டி பகுதிகளில் நடவு பணியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகிறார்கள்.

    அறுவடை செய்யப்படாத பகுதியிலும் விவசாயிகள் கும்பப்பூ சாகுபடி செய்வதற்கு தேவையான ஏற்பாடுகளை வேளாண் துறை அதிகாரிகள் செய்து வருகிறார்கள். அறுவடை நடைபெற்றவுடன் அந்த பகுதியில் நடவு பணியை மேற்கொள்ள வேறு விளை நிலங்களில் நாற்றுப் பாவும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.

    • பவானிசாகர் அணைக்கு வினாடிக்கு 2,878 கன அடியாக நீர்வரத்து அதிகரித்துள்ளது
    • கடந்த சில நாட்களாக அணைக்கு வரும் நீர் வரத்தை காட்டிலும் பாச னத்திற்காக அதிக அளவில் நீர் திறந்து விடப்பட்டு வருவதால் அணையின் நீர்மட்டம் தொட ர்ந்து குறைந்து வருகிறது.

    ஈரோடு,

    ஈரோடு மாவட்ட மக்களி ன் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ள ளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியாக நீலகிரி மலை ப்பகுதி உள்ளது.கடந்த சில நாட்களாக அணைக்கு வரும் நீர் வரத்தை காட்டிலும் பாச னத்திற்காக அதிக அளவில் நீர் திறந்து விடப்பட்டு வருவதால் அணையின் நீர்மட்டம் தொட ர்ந்து குறைந்து வருகிறது.அதே நேரம் மழை பொழிவு இல்லாததால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்தும் குறைந்து வந்தது. இந்நிலையில் நீர் பிடிப்பு பகுதியில் நேற்று பரவலாக மழை பெய்ததால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

    இன்று காலை நிலவர ப்படி பவானிசாகர் அணை யின் நீர்மட்டம் 70.74 அடியாக சரிந்து உள்ளது. அணைக்கு வினாடிக்கு 2 ஆயிரத்து 878 கன அடியாக நீர் வரத்து அதிகரித்து வந்து கொண்டிருக்கிறது.அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்காக 2 ஆயிரத்து 300 கன அடி நீர் திறந்து விடப்படுகிறது. காளி ங்கராயன் பாசனத்திற்கு 450 கனஅடியும், குடிநீரு க்காக பவானி ஆற்றுக்கு 100 கன அடி என மொத்தம் பவானிசாகர் அணையில் இருந்து 2 ஆயிரத்து 850 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    குண்டேரி பள்ளம் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 24.68 அடியாகவும், பெரும்ப ள்ளம் அணையின் நீர்ம ட்டம் 10.99 அடியாகவும், வரட்டுப்பள்ளம் அணை யின் நீர்மட்டம் 21.98 அடியா கவும் உள்ளது.

    • அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு
    • மழையின் காரணமாக செங்கல் விலையும் உயர்ந்துள்ளது.

    நாகர்கோவில் :

    குமரி மாவட்டம் முழு வதும் கொட்டி தீர்த்து வரும் கனமழையின் காரணமாக மாவட்டம் முழுவதும் குளுகுளு சீசன் நிலவுகிறது. நேற்று மதியத்துக்கு பிறகு பெய்ய தொடங்கிய மழை மாவட்டம் முழுவதும் விடிய விடிய நீடித்தது.

    நாகர்கோவிலில் இரவு விட்டு விட்டு பலத்த மழை கொட்டி தீர்த்தது. இன்று காலையிலும் மழை பெய்தது. காலை 8 மணிக்கு பெய்யத்தொடங்கிய மழை சுமார் 1 மணி நேரத்துக்கு மேலாக வெளுத்து வாங்கி யது. இதனால் மகளிர் கிறிஸ்தவ கல்லூரி சாலை, மீனாட்சிபுரம் சாலை, கோட்டார் சாலை, கேப் ரோட்டில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. கோழிப்போர்விளை பகுதியில் 2 மணி நேரத்திற்கு மேலாக மழை வெளுத்து வாங்கியது. அங்கு அதிகபட்சமாக 65.6 மில்லி மீட்டர் மழை பதிவா கியுள்ளது.

    கன்னிமார், களியல், மயிலாடி, சுருளோடு, தக்கலை, குளச்சல் மற்றும் அதன் புறநகர் பகுதிகளிலும் விடிய விடிய மழை பெய்தது. இன்று காலையில் தொடர்ந்து மழை பெய்து கொண்டே இருந்தது. தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வராமல் வீட்டிலேயே முடங்கி இருந்தனர்.

    திற்பரப்பு அருவி பகுதி யில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. இதனால் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. அருவி யில் குளிப்பதற்கு சுற்றுலா பயணிகள் குவிந்த வண்ணம் உள்ளனர்.

    பேச்சிப்பாறை, பெருஞ் சாணி அணை பகுதியிலும், மலையோர பகுதியான பாலமோர் பகுதியிலும் மழை பெய்து வருவதால் அணைகளுக்கு வரக்கூடிய நீர்வரத்து கணிசமான அளவு உயர்ந்துள்ளது. இதையடுத்து பேச்சிப் பாறை, பெருஞ்சாணி அணைகளில் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. இரு அணைகளும் நேற்று ஒரே நாளில் ஒரு அடி உயர்ந்துள்ளது. தொடர்ந்து மழை பெய்து வருவதை யடுத்து பெருஞ்சாணி அணையில் இருந்து வெளி யேற்றப்படும் தண்ணீர் நிறுத்தப்பட் டுள்ளது. பேச்சிப் பாறை அணையி லிருந்தும் குறை வான அளவு தண்ணீரே வெளி யேற்றப்பட்டு வருகிறது.

    பேச்சிப்பாறை அணை யின் நீர்மட்டம் இன்று காலை 22.54 அடியாக இருந்தது. அணைக்கு 1109 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையிலிருந்து 333 கன அடி தண்ணீர் வெளி யேற்றப்படுகிறது. பெருஞ்சானி அணை நீர்மட்டம் 43.50 அடியாக உள்ளது. அணைக்கு 629 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    சிற்றாறு 1 அணை நீர்மட்டம் 12.07 அடியாகவும், சிற்றாறு 2 அணை நீர்மட்டம் 12.17 அடியாகவும், பொய்கை அணை நீர்மட்டம் 9.30 அடியாகவும், மாம்பழத்துறை யாறு அணை நீர்மட்டம் 3.94 அடியாகவும் உள்ளது.

    மாவட்டம் முழுவதும் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

    பேச்சிப்பாறை 29.8, பெருஞ்சாணி 30.4, சிற்றார் 1- 24.2, சிற்றார் 2- 26.4, பூதப்பாண்டி 20.2, களியல் 55.2, கன்னிமார் 29.4, கொட்டாரம் 31, குழித்துறை 4.2, மயிலாடி 19.4, நாகர்கோவில் 28.4, புத்தன்அணை 30, சுருளோடு 34.2, தக்கலை 41, குளச்சல் 32.6, இரணியல் 24, பாலமோர் 37.8, மாம்பழத்துறையாறு 26.8, திற்பரப்பு 52, ஆரல்வாய்மொழி 8.2, அடையாமடை 26.2, குருந்தன்கோடு 31.4, முள்ளங்கினாவிளை 48.2, ஆணைகிடங்கு 27.4, முக்கடல் 18.

    மாவட்டம் முழுவதும் கடந்த சில நாட்களாகவே பெய்து வரும் மழையின் காரணமாக விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தொடர் மழையின் காரணமாக செங்கல் உற்பத்தி பாதிக் கப்பட்டுள்ளது. தோவாளை, ஆரல் வாய்மொழி, செண்பக ராமன்புதூர் பகுதிகளில் செங்கல் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதால் தொழிலாளர்கள் வேலை இன்றி தவித்து வருகிறார்கள்.

    மழையின் காரணமாக செங்கல் விலையும் உயர்ந்துள்ளது. விளவங்கோடு, கிள்ளியூர் தாலு காவில் மழைக்கு வீடுகள் இடிந்து விழுந்தது. இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இரணியல்-ஆளூர் ரெயில்வே தண்டவாளத்தில் மண் சரிவு ஏற்பட்டது. இதையடுத்து ரெயில்வே ஊழியர்கள் தண்டவாளத்தில் விழுந்த மணலை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். மண் சரிவு காரணமாக ரெயில் போக்குவரத்தில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. மண் சரிவு ஏற்பட்ட பகுதிகளில் ரெயில்வே அதிகாரிகள் தொடர்ந்து கண்காணிப்பு பணியை மேற்கொண்டு வருகிறார்கள்.

    ×