search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 186479"

    • 2 லட்சத்து 47 ஆயிரம் விலை நிலங்கள் பாசன வசதி பெறுவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
    • இந்த ஆண்டு 100 அடியை எட்டுவதால் முன்கூட்டியே பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படலாம் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ஈரோடு:

    பவானிசாகர் அணையின் நீர் பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப்பகுதியில் கடந்த சில நாட்களாகவே தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்து பரவலாக மழை பெய்தது. இதன் காரணமாக பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகமாக வந்தது.

    இந்நிலையில் கடந்த 3 நாட்களாக நீலகிரி மலைப்பகுதியில் தென்மேற்கு பருவமழையின் தாக்கம் சற்று குறைந்துள்ளதால் அணைக்கு வரும் தண்ணீன் அளவும் குறைந்தது. இருந்த போதிலும் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வந்தது.

    105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 99.14 அடியாக உள்ளது. இன்று இரவு அல்லது நாளை மாலைக்குள் பவானிசாகர் அணை 100 அடியை எட்டிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    அணைக்கு நீர்வரத்து ஆயிரம் கனஅடியாக சரிந்துள்ளது. இன்று வினாடிக்கு 1,072 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து தடப்பள்ளி - அரக்கன் கோட்டை பாசனத்திற்காக 800 கன அடி, பவானி ஆற்றுக்கு 100 கனஅடி, கீழ்பவானி வாய்க்காலுக்கு 5 கன அடி என மொத்தம் 905 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    பவானிசாகர் அணையில் அதிகபட்சமாக 100அடிக்கு மேல் தண்ணீர் தேக்கி வைக்கக் கூடாது என்பது பொதுப்பணித்துறையின் விதி ஆகும். இன்னும் ஒரு நாளில் 100 அடியை பவானிசாகர் அணை எட்டி விடும் என்பதால் அதன் பிறகு பவானிசாகருக்கு வரும் நீர் முழுவதும் பவானி ஆற்றுக்கு திறந்து விடப்படும். இதனால் பவானி ஆற்றங்கரை பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது.

    வரலாற்றில் 67 ஆண்டுகளில் இதுவரை 27 முறை 100 அடியை அணை எட்டி உள்ளது. தற்போது 28-வது முறையாக அணை 100 அடியை எட்ட உள்ளது. பவானிசாகர் அணை மூலம் ஈரோடு, கரூர், திருப்பூர் மாவட்டங்களை சேர்ந்த 2 லட்சத்து 47 ஆயிரம் விலை நிலங்கள் பாசன வசதி பெறுவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    வழக்கமாக ஆகஸ்ட் 15-ந் தேதி கீழ் பவானி வாய்க்காலில் பாசனத்துக்கு தண்ணீர் திறப்பது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு 100 அடியை எட்டுவதால் முன்கூட்டியே பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படலாம் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். 

    • நீர்வரத்து அதிகமாக உள்ள அபாயகரமான இடங்களில் பொதுமக்கள் யாரும் செல்பி எடுப்பதை தவிர்க்க வேண்டும்.
    • விவசாயிகள் தங்களது கால்நடைகளை நீர் நிலைகளின் வழியாக அழைத்து செல்வதை தவிர்க்க வேண்டும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழையின் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகமாக உள்ளதால், அணையின் நீர்மட்டம் அதன் முழு கொள்ளளவான 120 அடியை எட்டியுள்ளது. அணையில் இருந்து காவிரி மற்றும் அதன் கிளை ஆறுகள் மூலம் கொள்ளிடம் ஆற்றில் 1 லட்சத்து 13 ஆயிரம் கன அடி திறந்து விடப்பட்டுள்ளது.

    எனவே காவிரி மற்றும் கொள்ளிடம் ஆறுகளில் நீர்வரத்து அதிகமாக இருக்கும் என்பதால் ஆற்றங்கரையோரத்தில் வாழும் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். காவிரி நீர் பாய்ந்து வரும் காவிரி, வெண்ணாறு, கொள்ளிடம் ஆறுகள், கால்வாய்கள் மற்றும் நீர்நிலைப் பகுதிகளில் பொதுமக்கள் யாரும் குளிக்கவோ, நீச்சல் அடிக்கவோ, மீன் பிடிக்கவோ மற்றும் இதர பொழுதுபோக்கு நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம்.

    நீர்வரத்து அதிகமாக உள்ள அபாயகரமான இடங்களில் பொதுமக்கள் யாரும் செல்பி எடுப்பதை தவிர்க்க வேண்டும்.

    கால்வாய்கள் ஆறுகள் மற்றும் நீர் நிலைகளில் நீர் அதிகம் திறந்து விடப்பட வாய்ப்புள்ளதால் அந்த பகுதிகளுக்கு விளையாடச் செல்லாமல் பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை பாதுகாப்பாக வைத்து கொள்ள வேண்டும்.

    விவசாயிகள் தங்களது கால்நடைகளை நீர் நிலைகளின் வழியாக அழைத்து செல்வதை தவிர்க்க வேண்டும். பாலங்களைத் தவிர கடந்து செல்லும் இதர பாதைகள் ஏதும் இருப்பின் அவற்றை அடையாளம் கண்டு எச்சரிக்கையுடன் செல்ல வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • பவானிசாகர் அணைக்கு மீண்டும் நீர்வரத்து அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக அணையின் நீர்மட்டமும் உயர்ந்து வருகிறது.
    • தடப்பள்ளி-அரக்கன்கோட்டை பாசனத்திற்கு 700 கன அடி நீர் திறந்து விடப்பட்டு வருகிறது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர்பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது.

    பவானிசாகர் அணையின் மூலம் ஈரோடு, கரூர், திருப்பூர் மாவட்டத்தில் 2 லட்சத்து 47 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. கடந்த 2 நாட்களாக நீர்பிடிப்பு பகுதியில் பரவலாக மழை பெய்து வருவதால் பவானிசாகர் அணைக்கு மீண்டும் நீர்வரத்து அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக அணையின் நீர்மட்டமும் உயர்ந்து வருகிறது.

    இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 83.53 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 5,654 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 100 கனஅடி நீர் திறந்து விடப்பட்டு வருகிறது.

    நேற்று தடப்பள்ளி-அரக்கன்கோட்டை பாசனத்திற்காக 900 கன அடி நீர் திறந்து விட்ட நிலையில் இன்று 200 கன அடி குறைத்து தடப்பள்ளி-அரக்கன்கோட்டை பாசனத்திற்கு 700 கன அடி நீர் திறந்து விடப்பட்டு வருகிறது.

    இதேபோல் கீழ்பவானி வாய்க்காலுக்கு 5 கனஅடி என மொத்தம் பவானிசாகர் அணையில் இருந்து 805 கன அடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அணைக்கு நீர்வரத்து அதிகரித்து ள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    • நீர்பிடிப்பு பகுதியில் மழை பெய்து வருவதால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது.
    • அணையில் இருந்து பாசனத்திற்காகவும், குடிநீருக்காகவும் 905 கனஅடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    ஈரோடு:

    ஈரோடு, திருப்பூர் மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர்பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப் பகுதி உள்ளது.

    இந்நிலையில் நேற்று இரவு நீர்பிடிப்பு பகுதியில் பரவலாக மழை பெய்ததால் இன்று காலை பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது.

    இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 82.50 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 1,672 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    அணையில் இருந்து தடப்பள்ளி அரக்கன்கோட்டை பாசனத்திற்காக 800 கன அடி, குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 100 கன அடி, கீழ்பவானி வாய்க்காலுக்கு 5 கனஅடி என மொத்தம் அணையில் இருந்து பாசனத்திற்காகவும், குடிநீருக்காகவும் 905 கனஅடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    • பவானிசாகர் அணையின் நீர்பிடிப்பு பகுதியில் நேற்று இரவு பரவலாக மழை பெய்ததால் அணைக்கு இன்று காலை நீர்வரத்து அதிகரித்து வந்தது.
    • இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 82.50 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 1,667 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர்பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது.

    பவானிசாகர் அணையின் மூலம் ஈரோடு, கரூர், திருப்பூர் மாவட்டத்தில் 2 லட்சத்து 47 ஆயிரம் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. இந்நிலையில் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்தை காட்டிலும் தொடர்ந்து பாசனத்துக்காக அதிக அளவில் திறப்பதாலும், குடிநீருக்காகவும், நீர் வெளியேற்றப்பட்டு வருவதால் அணையின் நீர்மட்டமும் குறைந்து வந்தது.

    இந்நிலையில் நேற்று இரவு நீர்பிடிப்பு பகுதியில் பரவலாக மழை பெய்ததால் பவானிசாகர் அணைக்கு இன்று காலை நீர்வரத்து அதிகரித்து வந்தது.

    இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 82.50 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 1,667 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 100 கனஅடி நீர் திறந்து விடப்பட்டு வருகிறது.

    தடப்பள்ளி- அரக்கன்கோட்டை பாசனத்திற்காக 800 கன அடி, கீழ்பவானி வாய்க்கா லுக்கு 5 கனஅடி என மொத்தம் பவானிசாகர் அணையில் இருந்து பாசனத்திற்காக 905 கன அடி வீதம் தண்ணீர் வெளி யேற்றப்பட்டு வருகிறது .

    • நேற்று இரவு நீர்பிடிப்பு பகுதியில் பரவலாக மழை பெய்ததால் பவானிசாகர் அணைக்கு இன்று காலை நீர்வரத்து அதிகரித்து வந்தது.
    • பவானிசாகர் அணையில் இருந்து பாசனத்திற்காக 905 கன அடி வீதம் தண்ணீர் வெளி யேற்றப்பட்டு வருகிறது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர்பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது.

    பவானிசாகர் அணையின் மூலம் ஈரோடு, கரூர், திருப்பூர் மாவட்டத்தில் 2 லட்சத்து 47 ஆயிரம் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. பவானிசாகர் அணையின் நீர்பிடிப்பு பகுதியில் மழை இல்லாததால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து குறைந்து வந்தது. நீர்வரத்தை காட்டிலும் தொடர்ந்து பாசனத்துக்காக அதிக அளவில் பவானி சாகர் அணையின் நீர் வெளி யேற்றப்பட்டு வருவதால் அணையின் நீர்மட்டமும் குறைந்து வந்தது.

    இந்நிலையில் நேற்று இரவு நீர்பிடிப்பு பகுதியில் பரவலாக மழை பெய்ததால் பவானிசாகர் அணைக்கு இன்று காலை நீர்வரத்து அதிகரித்து வந்தது.இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 82.53 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 905 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 100 கனஅடி நீர் திறந்து விடப்பட்டு வருகிறது. தடப்பள்ளி- அரக்கன்கோட்டை பாசனத்திற்காக 800 கன அடி, கீழ்பவானி வாய்க்கா லுக்கு 5 கனஅடி என மொத்தம் பவானிசாகர் அணையில் இருந்து பாசனத்திற்காக 905 கன அடி வீதம் தண்ணீர் வெளி யேற்றப்பட்டு வருகிறது.

    கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழையினால் அணைகளுக்கு வரும் நீர்வரத்து அதிகரித்துள்ளது.
    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே அவ்வப்போது மழை பெய்து வருகிறது. கடந்த 2 நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. நேற்று மாலை முதல் விட்டு விட்டு மழை பெய்தது. இரவு விடிய விடிய கொட்டி தீர்த்தது. கன்னிமார், சுருளோடு, புத்தன் அணை பகுதியில் இரவு கனமழை பெய்தது. சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக தொடர்ந்து கொட்டி தீர்த்த மழையினால் அந்த பகுதியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

    கன்னிமாரில் அதிகபட்சமாக 54.2 மி.மீ. மழை பதிவானது. இரணியல், ஆணைக்கிடங்கு, கொட்டாரம், மயிலாடி, ஆரல்வாய்மொழி, குளச்சல், முள்ளங்கினாவிளை பகுதிகளிலும் மழை பெய்தது. நாகர்கோவிலிலும் இரவு மழை தூறிக்கொண்டே இருந்தது.

    இன்று காலையிலும் மழை பெய்தது. இதனால் பள்ளி மாணவ-மாணவிகள் குடை பிடித்தவாறு சென்றனர். திருவட்டார், தக்கலை, மார்த்தாண்டம், கீரிப்பாறை, தடிக்காரன்கோணம் பகுதிகளில் இன்று காலையில் கனமழை கொட்டி தீர்த்தது.

    தொடர் மழையின் காரணமாக மாவட்டம் முழுவதும் குளு குளு சீசன் நிலவுகிறது. திற்பரப்பு அருவி பகுதியில் பெய்து வரும் மழையினாலும் அணைகளில் இருந்து கூடுதல் தண்ணீர் வெளியேற்றப்படுவதாலும், அருவியில் வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

    மலையோர பகுதியான பாலமோர் பகுதியிலும் கனமழை நீடித்தது. இதனால் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளுக்கு வரக் கூடிய நீர்வரத்து கணிசமாக உயர்ந்தது. பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் இன்று காலை 20.10 அடியாக இருந்தது. அணைக்கு 1,466 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 762 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

    77 அடி கொள்ளளவு கொண்ட பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 75 அடியை எட்டியது. அணைக்கு 1,137 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 285 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

    சிற்றாறு-1 அணையின் நீர்மட்டம் 16.60 அடியாக இருந்தது. அணைக்கு 200 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 100 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருவதையடுத்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் 24 மணி நேரமும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    அணைக்கு வரக்கூடிய தண்ணீருக்கேற்ப கூடுதல் தண்ணீரை வெளியேற்றவும் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு அணைகளில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீரால் குழித்துறை ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. தோவாளை சானல், அனந்தனாறு சானல், புத்தனாறு சானல்களிலும் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.

    இது குறித்து பொதுப் பணித்துறை செயற்பொறியாளர் வேத அருள்சேகர் கூறுகையில், அணைகளின் நீர்மட்டத்தை தீவிரமாக கண்காணித்து வருகிறோம். மழை தொடர்ந்து பெய்தால் பெருஞ்சாணி, சிற்றாறு அணைகளில் இருந்து இன்று மாலை உபரிநீர் வெளியேற்றப்படும்.

    எனவே குழித்துறை ஆற்றின் கரையோர பகுதி மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு எச்சரிக்கப்பட்டுள்ளனர் என்றார்.

    மாவட்டம் முழுவதும் பெய்த மழையினால் நேற்றிரவு பல்வேறு இடங்களில் மின்தடை ஏற்பட்டது. சூறைக்காற்றிற்கு மரக்கிளைகளும் முறிந்து விழுந்தன.

    செண்பகராமன்புதூர், தோவாளை, தடிக்காரன் கோணம் பகுதியில் செங்கல் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. தொழிலாளர்கள் வேலையின்றி தவிப்பிற்கு ஆளாகி உள்ளனர். கீரிப்பாறை, காளிகேசம் பகுதிகளில் ரப்பர் பால் உற்பத்தியும் பாதிக்கப்பட்டுள்ளது.

    மாவட்டம் முழுவதும் பெய்த மழை அளவு மி.மீட்டரில் வருமாறு:-

    பேச்சிப்பாறை-46.2, பெருஞ்சாணி-39, சிற்றாறு-1-52, சிற்றாறு-2-31, மாம்பழத்துறையாறு-30, திற்பரப்பு-39, நாகர் கோவில்-10.8, பூதப் பாண்டி-22.4, சுருளோடு- 43.2, கன்னிமார்-54.2, ஆரல்வாய் மொழி-6, பால மோர்-47.2, மயிலாடி-9.6, கொட்டாரம்-22.6, குருந்தன் கோடு-14.6, இரணியல்-19.6, ஆணைக்கிடங்கு-28.2, குளச்சல்-14, அடையாமடை- 23, கோழிப்போர்விளை-31, முள்ளங்கினாவிளை-36, புத்தன் அணை-41.
    நீர்ப்பிடிப்பு பகுதியில் மீண்டும் மழை பெய்ய தொடங்கியதால் பவானிசாகர் அணை நீர்மட்டம் 96 அடியை எட்டியது.
    ஈரோடு:

    தென்மேற்கு பருவமழை தீவிரம் காட்டியதையொட்டி ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதனால் 45 அடியிலிருந்த பவானிசாகர் அணை நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்தது. 8 ஆண்டுக்கு பிறகு அணையின் நீர்மட்டம் 90 அடியை தாண்டியது.

    இந்த நிலையில் பருவ மழை தணிந்து மழை குறைந்தது. இதனால் நீர்வரத்தும் குறைந்தது. நேற்று மாலை முதல் நீர்பிடிப்பு பகுதியான ஊட்டி மலைப் பகுதியில் மீண்டும் மழை பெய்யத் தொடங்கியுள்ளது.

    நேற்று அணைக்கு 3 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் வந்தது. இன்று அதிகாலையில் இருந்து இது மேலும் அதிகரித்தது. அணைக்கு வினாடிக்கு 4 ஆயிரத்து 869 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    அணையின் நீர்மட்டமும் உயர்ந்து இன்று காலை 8 மணி நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 96.13 அடியாக இருந்தது.

    அணைக்கு நீர்வரத்து மேலும் அதிகரித்து வருவதால் ஈரோடு, திருப்பூர், மற்றும் கரூர் மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
    கர்நாடக மாநிலத்தில் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 1,800 கனஅடி தண்ணீர் வருகிறது. நீர்வரத்தை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
    பென்னாகரம்:

    கர்நாடகா மாநிலத்தில் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் அங்குள்ள கபினி, கிருஷ்ணராஜசாகர் ஆகிய அணைகளின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. இந்தநிலையில் நேற்று முன்தினம் வினாடிக்கு 2,000 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. இந்த நீர்வரத்து நேற்று காலை படிப்படியாக குறையத்தொடங்கியது. மாலை 5 மணி நிலவரப்படி வினாடிக்கு 1,800 கனஅடி தண்ணீர் ஒகேனக்கல்லுக்கு வந்தது.

    இந்த தண்ணீர், ஒகேனக்கல் பிரதான மெயின் அருவி, சினிபால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் கொட்டியது. இதனால் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்தது. இவர்கள் அருவிகள் மற்றும் காவிரி கரையோரம் குளித்தனர். பின்னர் அவர்கள் பார்வை கோபுரம், தொங்குபாலம் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று காவிரி ஆற்றின் இயற்கை அழகை கண்டு ரசித்தனர். மேலும் சுற்றுலா பயணிகள் குடும்பத்தினர், நண்பர்களுடன் பரிசலில் சென்றனர்.

    கர்நாடக மாநிலத்தில் கனமழை பெய்து வருவதால் இன்னும் ஒரு சில நாட்களில் ஒகேனக்கல்லுக்கு தண்ணீர் வரத்து அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால் கர்நாடகா, தமிழக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் காவிரி ஆற்றில் வரும் தண்ணீரின் அளவை அளந்து தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

    மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அருவி, நடைபாதை மற்றும் காவிரி கரையோர பகுதிகளில் பாதுகாப்பை பலப்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. 
    கர்நாடகா - தமிழக எல்லைப் பகுதியில் கனமழை கொட்டியதால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 3000 கனஅடியாக அதிகரித்தது.
    ஒகேனக்கல்:

    காவிரி நீர்ப்படிப்பு பகுதிகளில் மழை பெய்ததால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்தும், குறைந்தும் வந்து கொண்டிருக்கிறது. நேற்றுமுன்தினம் 1900 கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று சற்று சரிந்து 1600 கனஅடியாக இருந்தது.

    கர்நாடக-தமிழக எல்லைபகுதியான அஞ்சசெட்டி, உலுக்கானபள்ளி, நட்டாறம்பாளையம், கிகேரெட்டி ஆகிய பகுதிகளில் நேற்று இரவு கனமழை பெய்ததால் நீர்வரத்து 3000 கனஅடியாக அதிகரித்தது.
    ×