search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காயம்"

    • காயமடைந்த மற்றொரு நபரை ஆம்புலன்ஸ் மூலம் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பினார்.
    • நேரில் சென்று நலம் விசாரித்த துணை மேயர் அஞ்சுகம்பூபதி செயலை பொதுமக்கள் பாராட்டினர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை புதிய பஸ் நிலையம் அருகே நேற்று மாலை 2 மோட்டார் சைக்கிள்கள் எதிர்பாராதவிதமாக மோதிக்கொண்டன.

    இந்த விபத்தில் இரண்டு பள்ளி குழந்தைகள் உட்பட 4 பேர் பலத்த காயமடைந்து சாலையில் விழுந்தனர்.

    அப்போது அந்த வழியாக மாநகராட்சி துணை மேயர் டாக்டர் அஞ்சுகம்பூபதி தனது காரில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். நான்கு பேர் காயமடைந்து கிடப்பதை பார்த்து உடனடியாக காரை நிறுத்துமாறு கூறினார்.

    பின்னர் பள்ளி குழந்தைகள் மற்றும் காயமடைந்தவர்களை மீட்டு தனது காரில் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார். காயமடைந்த மற்றொரு நபரை ஆம்புலன்ஸ் மூலம் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பினார்.

    இதனைத் தொடர்ந்து ஆஸ்பத்திரிக்கு நேரில் சென்று நலம் விசாரித்தார்.

    விபத்தில் சிக்கியவர்களை தனது காரில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்ததோடு நேரில் சென்று நலம் விசாரித்த துணை மேயர் அஞ்சுகம்பூபதி செயலை பொதுமக்கள் பாராட்டினர்.

    • மின் நிலையம் அருகேயுள்ள சாலையோரம் நின்று கொண்டு நண்பருடன் பேசிக்கொண்டிருந்தார்.
    • 108 ஆம்பு லன்ஸ் மூலம் காட்டு மன்னார்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    கடலூர்: 

    கடலூர் மாவட்டம் சேத்தி யாத்தோப்பு மழவராய நத்தத்தை சேர்ந்தவர் பச்ச முத்து (வயது 50). இவர் ஸ்ரீமுஷ்ணம் அருகேயுள்ள பாளையங்கோட்டை துணை மின் நிலையத்தில் கணக்கிட்டு ஆய்வாளராக பணி செய்தார். இவர் நேற்று மாலை 3 மணியளவில் பாளையங் கோட்டை மின் நிலையம் அருகேயுள்ள சாலையோரம் நின்று கொண்டு நண்பருடன் பேசிக்கொண்டிருந்தார். அப்போது அவ்வழியே வந்த மோட்டார் சைக்கிள் எதிர்பாராத விதமாக பச்ச முத்து மீது மோதியது.

    இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த பச்சமுத்துவின் தலையில் பலத்த காய மடைந்து ரத்தவெள்ளத்தில் சாலையில் கிடந்தார். அவரை மீட்டு 108 ஆம்பு லன்ஸ் மூலம் காட்டு மன்னார்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோ தித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்ட தாக கூறினர். இது குறித்த புகாரின் பேரில் சோழத்தரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.

    • பேருந்து நிலையத்தின் பிளாட்பார்ம் எண் 12-ல் பேருந்து மோதி விபத்துக்குள்ளானது.
    • சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விஜயவாடா:

    விஜயவாடாவில் நேரு பேருந்து நிலையத்தில் பேருந்து நிலைய நடைமேடையில் அரசு பேருந்து மோதியதில் இருவர் உயிரிழந்தனர். ஒருவர் காயமடைந்தார்.

    இன்று காலை 8.20 மணியளவில் பேருந்து நிலையத்தின் பிளாட்பார்ம் எண் 12-ல் பேருந்து மோதி விபத்துக்குள்ளான போது ஏராளமான பயணிகள் திரண்டிருந்ததாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

    "வாகனத்தைத் திருப்புவதற்குப் பதிலாக, ஓட்டுநர் முன்னோக்கி நகர்ந்து பிளாட்பாரத்தில் மோதினார்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விஜயவாடா பேருந்து நிலையம் ஆந்திரா மற்றும் தெலுங்கானா ஆகிய இரண்டு மாநிலங்களுக்கும் ஒரு முக்கிய இணைப்புப் புள்ளியாகும்.

    • சாரல் மழை கடந்த சில நாட்களாக விட்டு விட்டு பெய்து வந்தது.
    • வீட்டின் சுவர் இடிந்து விழுந்து பத்மா என்ற பெண் காயம் அடைந்தார்.

    கும்பகோணம்:

    கும்பகோணம் அருகே உள்ள நாச்சியார் கோவில் செம்மங்குடி மேலத் தெருவில் அரசால் கட்டித் தரப்பட்ட தொகுப்புவீடுகள் உள்ளன. சாரல் மழை விட்டு விட்டு கடந்த சிலநாட்களாக பெய்து வந்த நிலையில் நேற்று இரவு பத்மா (வயது50) என்பவருடைய தொகுப்பு வீட்டின் சுவர்திடீரென இடிந்து விழுந்தது. இதில் இடிபாடுகளில் சிக்கி பத்மா காயம் அடைந்தார்.

    அவரை மீட்டு கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த பகுதியில் தொகுப்பு வீடுகளின் நிலை குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து தகுதி இல்லாத தொகுப்பு வீடுகளை இடித்து, புதிதாக வீடு கட்டித்தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • திருச்சியில் மின்னல் பாய்ந்து செல்போன் வெடித்து சிதறியதில் 3 பெண்கள் காயமடைந்தனர்
    • வயலில் வேலை பார்த்த போது சோகம்

    திருச்சி,

    திருச்சி மருங்காபுரி அடுத்த வகுத்தால்வார்பட்டியை சேர்ந்தவர் மணிமேகலை (வயது 30).

    சம்பவத்தன்று இவரும் அதே பகுதியை சேர்ந்த முத்து லெட்சுமி(40), பெரியம்மாள் (55) ஆகியோர் வயலில் வேலை பார்த்து கொண்டிருந்தனர்.

    அப்போது இடியுடன் கூடிய மழை பெய்தது. திடீரென அங்கு மின்னல் பாய்ந்தது. மணிமேகலை வைத்திருந்த செல்போன் வெடித்து சிதறியது. இதில் மணிமேகலை படுகாயம் அடைந்தார். மற்ற இருவருக்கும் லேசான காயம் ஏற்பட்டது.

    இதையடுத்து காயமடைந்த 3 பேரையும் மணபாறை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இது குறித்த புகாரின் பேரில் வளநாடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • டிப்பர் லாரி மோதியதில் தூக்கி வீசப்பட்டனர்
    • குன்னூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

    அருவங்காடு,

    நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள கிளிஞ்சடா பகுதியை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன் (வயது 22). இவரது நண்பர் சுபாஷ் (வயது 21).

    இவர்கள் இருவரும் நேற்று மோட்டார்சைக்கிள் மூலம் கோவை சென்று கொண்டிருந்தபோது குன்னூர்-மேட்டுப்பாளையம் இடையே மரப்பாலம் பகுதியில் எதிரே வந்த டிப்பர் லாரி மோதியதில் இருவரும் தூக்கி வீசப்பட்டனர்.

    இதில் படுகாயம் அடைந்த கோபாலகிருஷ்ணன் கோவை அரசு மருத்துவமனையிலும், சுபாஷ் தனியார் மருத்துவமனையிலும் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.

    இதுகுறித்து குன்னூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விருத்தாச்சலம் பகுதியை சேர்ந்த டிப்பர் லாரி டிரைவர் ராமச்சந்திரனை (வயது 39) கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    இதேபோல் இன்று அதிகாலை இதே வழித்தடத்தில் இருந்து கோவைக்கு சென்று கொண்டிருந்த காரில் 5 பேர் பயணம் மேற்கொண்டனர். இதில் குறும்பாடி அருகே சென்று கொண்டிருந்தபோது திடீரென குரங்குகள் குறுக்கே வந்ததால் நிலை தடுமாறி கார் தடுப்பு சுவர் மீது மோதி நின்றது. இதில் சிறு காயங்களுடன் அனைவரும் உயிர் தப்பினர். 

    • நடந்து சென்று கொண்டிருந்த போது சென்னையில் இருந்து திருச்சி சென்ற லாரி அவர் மீது மோதியது.
    • இரவு 1 மணி அளவில் சிகிச்சை பலன் இல்லாமல் இறந்து விட்டார்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் அரசு மருத்து வக் கல்லூரி ஊழியர் லாரி மோதியதில்பலத்த காய மடைந்து சிகிச்சை பலன் இல்லாமல் உயிரிழந்தார். விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள மூரார்பாளையத்தை சேர்ந்த வர் மாணி க்கம் (48).இவர் முண்டியம்பாக்கத்தில் உள்ள விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் மருத்துவ பணியாளராக வேலை பார்த்து வந்தார்.

    இவர் நேற்று இரவு முண்டியம்பாக்கம் ஒரத்தூர் அருகில் தேசிய நெடுஞ்சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த போது சென்னையில் இருந்து திருச்சி சென்ற லாரி அவர் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த அவர் உடனடியாக முண்டி யம்பாக்கத்தில் உள்ள விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனை யில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இரவு 1 மணி அளவில் சிகிச்சை பலன் இல்லாமல் இறந்து விட்டார். இது தொடர்பாக கொடுத்தபுகாரின் பேரில் விக்கிரவாண்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.

    கரூர் மாவட்டம் புன்னம் சத்திரம் அருகே வாகன விபத்தில் 2 பேர் காயம்

    வேலாயுதம்பாளையம்,  

    கரூர் மாவட்டம் புன்னம் சத்திரம் அருகே பழமாபுரம் காலனியைச் சேர்ந்தவர் சிவக்குமார் (47). கூலி தொழிலாளி. இவர் தனது இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே இருசக்கர வாகனத்தில் வந்த தஞ்சாவூர் பழைய நெல்லு மண்டித்தெருவை சேர்ந்த புருஷோத்தமன் இவர் மீது மோதினார்.

    இதில் இருவரும் காயமடைந்தனர். இந்த சம்பவம் குறித்து வந்த புகாரின் பேரில் வேலாயுதம்பாளையம் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் ரெங்கராஜ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • ஒரு மினி லாரியின் மூலம் மணிலா மூட்டைகளை ஏற்றிக் கொண்டு விக்கிரவாண்டி நோக்கி சென்று கொண்டி ருந்தனர்.
    • விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட் டனர்.

    விழுப்புரம்:

    ரெட்டணை அருகே உள்ள பெரமண்டூர் கிரா மத்தைச் சேர்ந்தவர் நாக முத்து (வயது60). நாரேறி குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் அஜித் (25). இவர்கள் இருவரும் விவ சாயிகள். இவர்கள் இரு வரும் தங்களுக்கு சொந்த மான நிலத்தில் விளைந்த மானிலா பயிறை விக்கிர வாண்டியில் உள்ள ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் விற்பனை செய்ய ஒரு மினி லாரியின் மூலம் மணிலா மூட்டைகளை ஏற்றிக் கொண்டு விக்கிர வாண்டி நோக்கி சென்று கொண்டி ருந்தனர்.

    மினி லாரியை நாரேறிகுப் பத்தைச் சேர்ந்த லோகநாதன் என்பவர் ஓட்டி வந்தார். மினிலாரி பேரணி கூட்ரோடு அருகே சென்று கொண்டிருந்தபோது சென்னையில் இருந்து விழுப்புரம் நோக்கி சென்ற ஒரு கண்டெய்னர் லாரி மினி லாரியின் பின்னால் மோதியது. இதில் நிலை தடுமாறிய மினி லாரி இடது புற சாலையின் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானது. இதில் மினி லாரி டிரைவர் லோக நாதன், விவசாயிகள் நாக முத்து, அஜித் ஆகியோர் காய மடைந்தனர். இவர்கள் உடனடியாக முண்டி யம்பாக்கத்தில் உள்ள விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட் டனர். சம்பவ இடத்திற்கு விரைந்த விக்கிரவாண்டி போலீசார் சுங்கச்சாவடி விபத்து சேப்டி வேன் வர வழைத்து விபத்துக்குள் ளான வாகனத்தை மீட்டனர். இது குறித்து விக்கிரவாண்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    • புஷ்பராஜ் வடலூரில் இருந்து கடலூரில் நடைபெறும் திருமணத்திற்கு மோட்டா ர் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கடலூர்:

    வடலூரை சேர்ந்தவர் புஷ்பராஜ் (வயது 50). இவர் வெளிநாட்டில் வேலை செய்துவிட்டு தற்போது வடலூரில் வசித்து வருகிறார்.இன்று காலை புஷ்பரா ஜ்வடலூரில் இருந்து கடலூரில் நடைபெறும் திருமணத்திற்கு மோட்டா ர் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். சுப்ரமணி யபுரம் என்ற பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தபோது, எதிரே வந்த மோட்டார் சைக்கிளும் எதிர்பாராமல் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் புஷ்பராஜ்க்கு பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    இத்தகவல் அறிந்த குள்ளஞ்சாவடி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இறந்த புஷ்பராஜ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்து வமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து குள்ளஞ்சாவடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • நரிக்குடி அருகே லாரியில் மின்சாரம் பாய்ந்து 2 பேர் படுகாயம் அடைந்தனர்.
    • இந்த சம்பவம் குறித்து அ.முக்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    நரிக்குடி

    விருதுநகர் மாவட்டம் நரிக்குடி அருகேயுள்ள எழுவணி - ரெட்டைகுளம் கிராமத்திற்கு இடையே 3 கி.மீ., தொலைவிற்கு சாலை புதுப்பிக்கும் பணிக்காக ஜல்லிக்கற்கள் விரிக்கும் பணி நடைபெற்று வருகிறது.இதற்காக டிப்பர் லாரிகள் மூலம் ஜல்லிக்கற்கள் கொண்டு வரப்பட்டது.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை எழுவணி அழகு நாச்சியம்மன் கோவில் அருகே நடைபெ றும் சாலைப்பணிக்காக டிப் பர் லாரியில் கொண்டு வரப்பட்ட ஜல்லிக்கற்களை ரோட்டில் விரிப்பதற்காக டிப்பர் லாரியின் டிரைவ ரான அருப்புக்கோட்டை முத்துராமலிங்கபுரம் பகுதி யை சேர்ந்த சரவணக்குமார் என்பவர் அங்கிருந்த டிரான் ஸ்பார்மரின் மேலே சென்ற உயர் அழுத்த மின் வயரை கவனிக்காமல் டிப்பர் லாரி யின் ஜாக்கியை தூக்கியவா றே லாரியை இயக்கியதாக கூறப்படுகிறது.

    அப்போது எதிர்பாராத விதமாக டிரான்ஸ் பார் மரின் மேலே சென்று கொண்டிருந்த மின் வயரில் டிப்பர் லாரி உரசியதில் லாரி முழுவதும் மின்சாரம் பாய்ந்து முன்பக்க டயர்கள் இரண்டும் பயங்கர சத்தத்து டன் வெடித்து சிதறியது. இந்த சம்பவத்தில் லாரி டிரைவர் சரவணக்குமார் பலத்த காயமடைந்தார்.இதனையடுத்து விபத்தில் சிக்கி படுகாயமடைந்த அரை அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.மேலும் அங்கு நிறுத்தி வைக் கப்பட்டிருந்த காண்ட்ராக்ட ருக்கு சொந்தமான டூவீல ரும் இந்த சம்பவத்தில் திடீ ரென தீப்பிடித்து எரிந்தது.

    இந்த சம்பவம் குறித்து அ.முக்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • மீன்களை ஏற்றிக்கொண்டு கிழக்கு கடற்கரை சாலையில் ஆட்டோ வந்து கொண்டிருந்தது.
    • ஆட்டோவில் பயணம் செய்த 7 பேரும் பலத்த காயமடைந்தனர்.

    பேராவூரணி:

    பட்டுக்கோட்டை அருகே உள்ள ஓலைக்குன்னம் தெற்கு தெருவை சேர்ந்த சேகர் ( வயது 52), காடந்தங்குடி பகுதியை சேர்ந்த தங்கராசு (60), நரசிங்கபுரம் பகுதியை சேர்ந்த மோகன் ராஜ் மனைவி மல்லிகா (60), மன்னங்காடு பகுதியை சேர்ந்த சொக்கலிங்கம் (55), துவரங்குறிச்சியை சேர்ந்த அசோகன்(48), ஒட்டங்காடு பகுதியை சேர்ந்த ஆறுமுகம்,(50) பரவத்துார் பகுதியை சேர்ந்த சக்திவேல்(49) இவர்கள் அனைவரும் மீன் வியாபாரிகள்,

    இவர்கள் ஒன்றாக சேர்ந்து சரக்கு ஆட்டோவை வாடகைக்கு எடுத்து மல்லிப்பட்டினம் ,சேதுபாவாசத்திரம், கட்டுமாவடி ,ஜெகதாப்பட்டினம் உள்ளிட்ட மீன்பிடி துறைமுக பகுதிகளில் மீன்களை மொத்தமாக கொள்முதல் செய்து, மதுக்கூர், துவரங்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளில் சில்லறையாக விற்பனை செய்வார்கள்.

    இந்நிலையில் வழக்கம் போல நேற்றுமுன்தினம் காலை ஜெகதாப்பட்டினத்தில் மீன்களை வாங்கி லோடு ஆட்டோவில் மீன்களை ஏற்றிக்கொண்டு கிழக்கு கடற்கரை சாலையில் பட்டுக்கோட்டையை நோக்கி சென்றுகொண்டிருந்தனர்.

    அப்போது சேதுபாவாசத்திரம் அருகே அம்மணிசத்திரத்தில் லோடு ஆட்டோ விபத்தில் சிக்கி சாலையின் வலதுபுறத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் ஆட்டோ டிரைவர் வெட்டிக்காட்டை பாலசுப்பிரமணியன் மற்றும் ஆட்டோவில் பயணம் செய்த 7 பேரும் பலத்த காயமடைந்தனர்.

    உடனடியாக அருகில் உள்ளவர்கள் சேதுபாவாசத்திரம் போலீசாருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் படுகாயமடைந்தவர்களை மீட்டு, பேராவூரணி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

    இதில் தங்கராஜ் மேல் சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தார். சேகர் மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு இரவு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். இது குறித்து சேதுபாவாசத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×