search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வாந்தி"

    திருப்பூர் மாவட்டம் அவினாசி அருகே சத்துணவு சாப்பிட்ட மாணவ மாணவிகளுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டது. இது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    அவினாசி:

    திருப்பூர் மாவட்டம் அவினாசி அருகே உள்ள திருமலைக்கவுண்டம் பாளையத்தில் அரசு உயர் நிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளியின் சமையலராக பாப்பாள் வேலை பார்த்து வருகிறார்.

    இப்பள்ளியில் நேற்று மதியம் சத்துணவு சாப்பிடுவதற்காக 31 பேர் பெயர்களை பதிவு செய்து இருந்தனர். அவர்களில் 25 பேர் சத்துணவு சாப்பிட்டனர்.

    சத்துணவு சாப்பிட்ட சற்று நேரத்தில் 8-ம் வகுப்பு மாணவி பவித்ராவுக்கு வாந்தி-மயக்கம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து மற்ற மாணவர்களுக்கும் வாந்தி ஏற்பட்டது. இதில் 15 மாணவிகள், 10 மாணவர்கள் பாதிக்கப்பட்டனர். அவர்கள் அவினாசி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

    மாணவ-மாணவிகள் பாதிக்கப்பட்ட தகவல் கிடைத்ததும் திருப்பூர் மாவட்ட வருவாய் அலுவலர் பிரசன்னா ராமசாமி, முதன்மை கல்வி அலுவலர் சாந்தி, வட்டார வளர்ச்சி அலுவலர் (ஊராட்சிகள்) பிரபாகர், அவினாசி டி.எஸ்.பி. பரமசாமி மற்றும் உணவு பாதுகாப்பு அலுவலர்கள், சுகாதார ஆய்வாளர்கள் ஆஸ்பத்திரிக்கு சென்று மாணவர்களிடம் விசாரணை நடத்தினார்கள்.

    சாப்பாட்டில் பள்ளி கிடந்ததால் மாணவ-மாணவிகள் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து பள்ளி தலைமை ஆசிரியை சசிகலா, சத்துணவு பணியாளர் பாப்பாள் கவனக்குறைவால் தான் பல்லி விழுந்து விட்து என போலீசாரிடம் தெரிவித்து உள்ளார். ஆனால் பாப்பாள் இதனை மறுத்துள்ளார். நான் சமையல் செய்யும் போது பாத்திரங்களை மூடி தான் சமையல் செய்தேன். எனது மகளும் சத்துணவு சாப்பிட்டு இருக்கிறாள் என கூறினார்.இது தொடர்பாக டி.எஸ்.பி.யிடம் பாப்பாள் புகார் மனுவும் கொடுத்து உள்ளார். #tamilnews
    நன்னிலம் அருகே கோவில் பிரசாதம் சாப்பிட்ட 70 பேருக்கு வாந்தி, பேதி ஏற்பட்டது. இது குறித்து அவர்கள் அனைவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
    திருவாரூர்:

    திருவாருர் மாவட்டம் நன்னிலம் தாலுகா அதம்பார் கிராமத்தில் அமைந்துள்ளது கைலாசநாதர் கோவில். இந்த கோவில் கும்பாபிஷேகம் முடிவடைந்து ஓராண்டு நிறைவு நாள் விழா கடந்த சனிக்கிழமை நடந்தது. இந்த விழாவில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு சுண்டல், புளிசாதம், தயிர் சாதம் உள்பட பல்வேறு பிரசாதங்கள் வழங்கப்பட்டது.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் மதியம் திடீரென்று அந்த கிராமத்தை சேர்ந்த 70 பேருக்கு திடீரென்று வாந்தி-பேதி ஏற்பட்டது.

    உடனடியாக அவர்கள் அனைவரும் அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் சிலர் சிகிச்சைக்கு பின்னர் வீடு திரும்பினர்.

    ஆனாலும் அவர்களில் 33 பேருக்கு மட்டும் வாந்தி-பேதி மேலும் தொடர்ந்தது.

    இதையடுத்து அதே பகுதியை சேர்ந்த அகிலாண்டேஸ்வரி(வயது 33), மாரிமுத்து(18), நிஷா(17), அபிராமி(19), மீனாட்சி(31), சிவராமன்(15), தமிழ்மாது(13), சஞ்சை(9), சத்யா(10), ஆகாஷ்(10) உள்பட 33 பேர் நன்னிலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதுகுறித்து தகவல் அறிந்த நன்னிலம் தாசில்தார் பரஞ்ஜோதி, சுகாதார இணை இயக்குநர் உமா, ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க அனைத்து ஏற்பாடுகளையும் செய்தனர். மேலும் அதம்பார் கிராமத்தில் 3 மருத்துவர்கள் கொண்ட குழுவினர் சிகிச்சை அளித்தனர்.

    இது குறித்து நன்னிலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிமாறன் வழக்குப்பதிவு செய்து வாந்தி-பேதிக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தினார்.

    போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், கும்பாபிஷேக நிறைவு விழாவில் வழங்கப்பட்ட சுண்டல், புளிசாதம், தயிர் சாதம் சாப்பிட்டவர்களுக்கு வாந்தி-பேதி ஏற்பட்டதாக தெரிய வந்தது. மேலும் இது குறித்து தொடர்ந்து விசாரனை நடைபெற்று வருகிறது. #tamilnews
    மத்தியபிரதேச மாநிலத்தில் எலிகள் இறந்து கிடந்த மதிய உணவை சாப்பிட்ட குழந்தைகளுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
    போபால்:

    மத்தியபிரதேச மாநிலத்தில் ஊட்டச்சத்து குறைவாக உள்ள குழந்தைகளுக்காக சத்துணவு வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    இதற்காக ஒவ்வொரு நாளும் மதியம் ஊட்டச்சத்து உணவு தயாரிக்கப்பட்டு அங்கன்வாடி மூலமாக அவர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

    இதேபோல் சாகர் மாவட்டத்தில் உள்ள செம்ராபக் என்ற கிராமத்தில் குழந்தைகளுக்கு சத்துணவு வழங்கப்பட்டது. அப்போது அந்த உணவுக்குள் 4 எலிகள் செத்து கிடந்தது கண்டு பிடிக்கப்பட்டது.

    இதற்குள் சில குழந்தைகளுக்கு உணவு பரிமாறப்பட்டு விட்டது. அவர்கள் அதை சாப்பிட்டு கொண்டிருந்தனர். சாப்பாட்டுக்குள் எலி செத்து கிடந்தது தெரிந்ததும் அந்த குழந்தைகளுக்கு வாந்தி - மயக்கம் ஏற்பட்டது.

    அவர்களில் 5 பேர் உடனடியாக ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். மற்ற குழந்தைகளுக்கு உணவு பரிமாறப்படுவது நிறுத்தப்பட்டது.

    இந்த சம்பவம் பற்றி அறிந்ததும் துணை கலெக்டர் அங்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டார். சமையல் ஊழியர் உடனடியாக சஸ்பெண்டு செய்யப்பட்டார்.

    மேலும் இதுபற்றி விசாரணை நடத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.#tamilnews
    ×