search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 187529"

    • வடமாநில தொழிலாளர்களுக்கு ஆதரவாக விழிப்புணர்வு கோலப்போட்டி நடந்தது.
    • பல்வேறு விழிப்புணர்வு வாசகங்களை ஒவ்வொரு கோலத்திற்கும் தலைப்பிட்டனர்.

    தஞ்சாவூர்:

    தமிழ்நாட்டில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக கடந்த சில நாட்களாக வதந்தி பரவியது.

    தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் வடமாநில தொழிலாளர்களுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டா லின் கலந்துரையாடி வடமாநிலத்தவர்கள் குறித்த வதந்தியை நம்ப வேண்டாம் என கூறி ஆறுதல் தெரிவித்தார்.

    இந்நிலையில், தஞ்சை ஜோதி அறக்கட்டளை சார்பில் நாஞ்சிக்கோட்டை சாலை, ரெத்தினசாமி நகரில் உள்ள சேகர் காலனியில் வடமாநில தொழிலாளர்களுக்கு ஆதரவாக விழிப்புணர்வு கோலப்போட்டி நடந்தது.

    இதில் 100-க்கும் மேற்பட்ட பெண்கள் வடமாநில மக்கள் தமிழகத்தில் பாதுகாப்பாக இருக்கிறார்கள் என்பதை உணர்த்தும் வகையில் தங்கள் வீட்டு வாசலில் தமிழ்நாட்டை நம்பினோர் கைவிடப்படார், யாதும் ஊரே யாவரும் கேளிர், உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோர், எல்லோரையும் வாழ வைக்கும் தமிழ்நாடு போன்ற பல்வேறு வாசகங்களை ஒவ்வொரு கோலத்திற்கும் தலைப்பிட்டு வண்ண கோலமிட்டனர்.நிகழ்ச்சியில் தஞ்சை மாநகர போக்குவரத்து ஒழுங்குபிரிவு இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு விழிப்புணர்வு கோலங்கள் வரைந்த பெண்களுக்கு பரிசு வழங்கி பாராட்டினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடு களை ஜோதி அறக்கட்டளை செயலாளர் டாக்டர் பிரபு ராஜ்குமார் மேற்பார்வை யில் அறக்கட்டளை மேலாளர் ஞானசுந்தரி உள்ளிட்ட பணியாளர்கள் செய்திருந்தனர்.

    • குமாரபாளையம் போலீசார், இங்குள்ள சில தனியார் தொழிற்சாலை களில் பணியாற்றி வரும் வட மாநில தொழிலாளர்களுடன் ஹோலி திருவிழா கொண்டாடி, அனைவருக்கும் இனிப்பு கள் வழங்கி வாழ்த்து தெரிவித்தனர்.
    • மேலும் அச்சத்தை போக்கும் வகையில் அறிவுரையும் கூறினார்கள்.

    குமாரபாளையம்:

    தமிழகத்தில் வட மாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக ஏற்பட்ட வதந்தியால் பலர் அவர்களது மாநிலத்துக்கு திரும்பி செல்கின்றனர். இதையடுத்து வடமாநில தொழிலாளர்களை பாதுகாக்க அரசு நடவ டிக்கை எடுத்து வருகிறது.

    இதன் ஒரு கட்டமாக குமாரபாளையம் போலீசார், இங்குள்ள சில தனியார் தொழிற்சாலை களில் பணியாற்றி வரும் வட மாநில தொழி லாளர்களுடன் ஹோலி திருவிழா கொண்டாடி, அனைவருக்கும் இனிப்பு கள் வழங்கி வாழ்த்து தெரிவித்தனர்.

    மேலும் அச்சத்தை போக்கும் வகையில் அறிவுரையும் கூறினார்கள். போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவி, சப் இன்ஸ்பெக்டர் சந்தியா உள்பட போலீசார் பலர் பங்கேற்றனர்.

    • புலம்பெயர் தொழிலாளர்கள் குறித்து பரப்பப்படும் வதந்திகளை நம்ப வேண்டாம்.
    • தொழிலாளர்களுக்கு அனைத்து உதவிகளும் செய்ய தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்டத்தில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து புலம்பெயர் தொழிலாளர்கள் சுமார் 700 பேர் வந்து தங்கியிருந்து பல்வேறு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

    இவர்களில், மேற்கு வங்காளம், பீகார், உத்தர–காண்ட் மாநிலங்களைச் சேர்ந்த சுமார் 200 பேர் மயிலாடுதுறை மன்னம்பந்தல் ஊராட்சி பால்பண்ணை பகுதியில் கட்டப்பட்டுவரும் புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

    தமிழகத்தில் புலம்பெயர் தொழிலாளர்கள் சில இடங்களில் துன்புறுத்தப்படுவதாக எழுந்த வதந்தியைத் தொடர்ந்து, அவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையில், கட்டுமானப் பணி நடைபெறும் புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டடத்துக்கு மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் ஏ.பி.மகாபாரதி, போலீஸ் சூப்பிரண்டு என்.எஸ்.நிஷா மற்றும் அதிகாரிகள் நேரில் சென்று பார்வையிட்டு, ஆய்வு நடத்தியதுடன், புலம்பெயர் தொழிலாளர்களிடம் குறைகளைக் கேட்டறிந்தனர்.

    அப்போது கலெக்டர் பேசுகையில், இங்கு வந்து தங்கி பணியாற்றும் தொழிலாளர்கள் புலம்பெயர் தொழிலா–ளர்கள் குறித்து பரப்பப்படும் வதந்திகளை நம்ப வேண்டாம்.

    புலம்பெயர் தொழிலாளர்களுக்கு அனைத்து உதவிகளும் செய்ய தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

    எனவே, எந்த பயமும் இன்றி சுதந்திரமாக பணியாற்றலாம். மேலும், இங்கு ஏதேனும் குறைகள் இருந்தால் தெரிவிக்கலாம் என்றார். கலெக்டர் பேசியதை யுவா ஜெயின் சங்கத்தைச் சேர்ந்த பிரியதர்ஷினி புலம்பெயர் தொழிலாளர்களுக்கு இந்தியில் மொழி பெயர்த்தார்.

    அப்போது புலம்பெயர் தொழிலாளர்கள் அனைவரும் இங்கு பாது–காப்பாக இருப்பதாக தெரிவித்தனர். இதனை தொடர்ந்து ஹோலி பண்டிகையை முன்னிட்டு அனைவருக்கும் மாவட்ட கலெக்டர் மற்றும் போலீஸ் சூப்பிரண்டு அவர்களுக்கு இனிப்புகளை வழங்கினர்.

    இதில், மாவட்ட வருவாய் அலுவலர் சோ.முருகதாஸ், கோட்டாட்சியர் வ.யுரேகா, டிஎஸ்பி சஞ்சீவ்குமார், துணை இயக்குநர் (தொழிலக பாதுகாப்பு) ராஜேஷ், பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் அல்மாஸ்பேகம் தாசில்தார் மகேந்திரன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

    • 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
    • உரிய பாதுகாப்புடன் இருப்பதாக வடமாநில தொழிலாளர்கள் தெரிவித்தனர்.

    திருவாரூர்:

    வட மாநில தொழிலாளர்கள் பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்யுமாறு டி.ஜி.பி. சைலேந்திரபாபு, போலீசாருக்கு உத்தர விட்டுள்ளார்.

    தங்களுக்கு ஏதேனும் பிரச்சனைகள் இருந்தால் அது குறித்து தகவல் தெரிவிக்குமாறும் அரசு சார்பில் வட மாநில தொழிலாளர்களுக்காக தொலைபேசி எண்களும் வழங்கப்பட்டுள்ளன.

    அதன்படி திருவாரூர் மாவட்டத்திலும் ஜவுளிக்க டைகள், உணவகங்கள், ரைஸ்மில்கள்உள்ளிட்ட பல்வேறு தொழில் நிறுவனங்கள் மற்றும் கட்டிட தொழில்கள் என பீகார், ராஜஸ்தான், மேற்குவங்கம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 3 ஆயிரத் திற்கும் மேற்பட்டதொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

    இவர்களது பாது காப்பினை உறுதி செய்யு மாறு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமார் காவல்துறையினருக்கு அறிவுறுத்தி உள்ளார்.

    அதன் பேரில் 500க்கும் மேற்பட்டவர்களை போலீசார் நேரில் சந்தித்து அவர்களுக்கு ஏதேனும் பிரச்சனைகள் உள்ளனவா, மிரட்டல்கள் இருந்து வருகிறதா, தாக்கப்படுகிறார்களா என கேட்டனர்.

    அதன்படி திருவாரூர் நகரம், மத்திய பல்கலைக்கழகம், வண்டம்பளையம் தனி யார்நவீன அரிசி ஆலை மற்றும்நீடாமங்கலம், மன்னார்குடி, பரவாக்கோட்டை, முத்துப்பேட்டை, திருத்துறைப்பூண்டி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொண்டனர்.

    அப்போது தாங்கள் அனைவரும் உரிய பாதுகாப்புடன் இருந்து வருவதாகவட மாநில தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

    • கடந்த சில நாட்களாக ஊர் திரும்பும் வட மாநில தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது .
    • அவர்களை பாதுகாக்கும் பணியில் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மற்றும் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகாவுக்கு உட்பட்ட பரமத்தி, பரமத்திவேலூர், ஜேடர்பாளையம், கந்தம்பாளையம், கபிலர்மலை, சோழசிராமணி, பாண்டமங்கலம், வெங்கரை, கொளக்கட்டுபுதூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சுமார் 50க்கும் மேற்பட்ட தேங்காய் குடோன்கள், செங்கல் சேம்பர்கள், வெல்லஉற்பத்தி ஆலைகள் ,கிரானைட் மற்றும் டைல்ஸ் பதிக்கும் வேலை, மற்றும் பல்வேறு தொழில்களில் வெளி மாநில தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.

    அவர்களுக்கு எதிரான செயல்கள் நடப்பது போன்ற தவறான வீடியோக்கள் பரப்பப்பட்டு வருவதால் வெளிமாநில தொழிலாளர்கள் அச்சம் ஏற்பட்டு சொந்த ஊர் திரும்பி வருகின்றனர். இதனால் இப்பகுதியில் அவர்கள் பணியாற்றும் தொழில்களால் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

    கடந்த சில நாட்களாக ஊர் திரும்பும் வட மாநில தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது . அவர்களை பாதுகாக்கும் பணியில் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மற்றும் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.

    இது தொடர்பாக தமிழ்நாடு தேங்காய் உற்பத்தி மற்றும் விற்பனையாளர் சங்க மாநில இணை செயலாளர் ஜெகநாதன் கூறியதாவது:-

    கடந்த சில நாட்களாக ஊர் திரும்பும் வட மாநில தொழிலாளர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. வதந்தி பரவி வருவதால் வெளி மாநிலத்தவர்கள் அச்சமடைந்துள்ளனர். அவர்களை தேங்காய் உற்பத்தியாளர் சங்கம் சார்பில் அழைத்து உங்களுக்கு முழு பாதுகாப்பு நாங்கள் அளிக்கிறோம். வதந்திங்களை நம்ப வேண்டாம் என எங்கள் சார்பாகவும் பரமத்திவேலூர் போலீசார்சார்பாகவும் நேரில் அழைத்து பேசினோம்.

    அதனால் அவர்கள் சொந்த ஊருக்கு செல்வதை தற்போது நிறுத்தி உள்ளனர். மேலும் இங்கிருந்து விடுமுறைக்கு சொந்த ஊர் சென்ற வெளிமாநிலத்தினர் திரும்பி வருவது குறித்து அச்சத்தில் உள்ளனர். அவர்களிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு வதந்திகளை நம்ப வேண்டாம் உங்களுக்கு பாதுகாப்பு அளிக்கிறோம் என தெரிவித்தோம்.

    மேலும் பரமத்தி வேலூர் தாலுகாவில் வெளி மாநில தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு தொடர்பாக பிரச்சனை ஏற்பட்டால் வெளிமாநிலத்தவர்கள் பரமத்தி வேலூர் போலீசாரை தொடர்பு கொள்ளலாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதுகுறித்து பரமத்திவேலூர் வீடு வாடகைக்கு விடும் உரிமையாளர்கள் கூறும்போது, வெளி மாநில தொழிலாளர்கள் தாங்கள் குடியிருக்கும் வீடுகளை கடந்த ஒரு வாரத்தில் பல்வேறு காரணங்களை கூறி காலி செய்து வருகின்றனர். இதனால் எங்களுக்கு பெரும் வருமான இழப்பு ஏற்படும்.வதந்திகளை பரப்பும் நபர்கள் மீது போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    • வெளிமாநில தொழிலாளர்கள் பாதுகாப்பு தொடர்பான புகாரை கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் தெரிவிக்கலாம்.
    • இந்த தகவலை விருதுநகர் மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    விருதுநகர் மாவட்டத்தில் பட்டாசு தொழில், தீப்பெட்டி தொழில், அச்சுத் தொழில், நூற்பாலைகள் மற்றும் கட்டுமான பணிகளில் பல மாநிலங்களில் இருந்தும் வெளிமாநில தொழிலாளர்கள் வந்து அமைதியான சூழ்நிலையில் பணியாற்றி விருதுநகர் மாவட்டத்தின் வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றி வருகி றார்கள்.

    வெளிமாநில தொழிலா ளர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் அவர்களை வேலைக்கு அமர்த்திய நிறுவனங்கள் வழங்கி வருகின்றன. அவர்கள் பணிபுரியும் நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் தொழி லாளர் நலச்சட்டங்களை கடைபிடிக்கப்படுவதை தொழிலாளர் துறையின ராலும், தொழிலக பாது காப்பு மற்றும் சுகாதார இயக்கக துறையினராலும் உறுதி செய்யப்படுகிறது.

    வெளிமாநில தொழிலாளர்களின் பாது காப்பினை மாவட்ட நிர்வாகத்தினராலும், காவல் துறையினராலும், கண்காணிக்கப்பட்டு உறுதி செய்யப்படுகிறது. விருந்தோம்பலுக்குப் பெயர்பெற்ற தமிழ்நாடு மக்களும், தொழிலாளர் நலன் காக்கும் தமிழ்நாடு அரசும் வெளிமாநில தொழிலாளர்களின் பங்க ளிப்பை நன்கு உணர்ந்து இருப்பதால் இணக்கமான, அமைதியான சூழ்நிலையில் இங்கு அனைவரும் வாழ்ந்து வருகிறார்கள்.

    இந்த சூழ்நிலையில் சில சமூக வலைதளங்களில் உண்மைக்கு மாறான, தவறான உள்நோக்கத்தோடு, வடமாநில தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் சில இடங்க ளில் தாக்கப்படுவதாக விஷ மத்தனமான செய்தி சிலரால் பரப்பப்பட்டு வருகிறது. இதில் எந்தவிதமான உண்மையும் இல்லை என்பதை தமிழ்நாட்டில் இருக்கும் வடமாநிலத்தவர் உள்ளிட்ட அனைவரும் அறி வார்கள்.

    விருதுநகர் மாவட்டத்தில் அனைத்து வெளிமாநில தொழிலாளர்களும் எவ்வித அச்சமுமின்றி அமைதியாக, சிறப்பாகப் பணியாற்றி வருகிறார்கள் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், சமூக ஊடகங்களால் பரப்பப்பட்ட தவறான செய்திகளால் ஏற்படுத்தப்பட்ட வெளி மாநில தொழிலாளர்களின் அச்சத்தை போக்குவதற்கு மாவட்ட நிர்வாகம் சமூக ஊடகங்களில் வதந்திகளை பரப்புவோர் மீது காவல் துறை மூலம் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளது.

    விருதுநகர் மாவட்டத்தில் உள்ள நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகளின் உரிமையாளர்கள் மற்றும் வெளிமாநில தொழிலாளர்களின் ஏஜென்டுகளுக்கு இன்று (6-ந்தேதி) மாலை 5 மணியளவில் சிவகாசியில் உள்ள டான்பாமா திருமண மண்டபத்தில் விருதுநகர் மாவட்ட கலெக்டர் தலைமையில் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் தொடர்புடைய அதிகாரிகள் வெளிமாநில தொழிலாளர்களின் அச்சத்தினை போக்குவதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கை விவரத்தை எடுத்துரைப்பர்கள்.

    விருதுநகர் மாவட்டத்தில் உள்ள வெளிமாநில தொழிலாளர்கள் சமூக ஊடங்களால் பரப்பப்படும் செய்தியின் உண்மைத்தன்மை அறியவும் மற்றும் அவர்களது பாதுகாப்பு தொடர்பான புகாரினை அளிக்கவும் 'கட்டணமில்லா தொலைபேசி எண் -1077" மாவட்ட நிர்வாகத்தால் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

    இந்த கட்டணமில்லா தொலைபேசி எண்ணை அனைத்து வெளிமாநில தொழிலாளர்களும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டு வருகின்றன.
    • 2000 டன் நெல்லை, 42 வேகன்களில் தொழிலாளர்கள் ஏற்றினர்.

    தஞ்சாவூர்:

    தமிழகத்தின் நெற்களஞ்சி யமாக காவிரிடெல்டா மாவட்டங்களான தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்கள் விளங்கி வருகின்றன.

    இங்கு குறுவை, சம்பா, தாளடி என 3 போகம் நெல் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.

    அதோடு கோடை நெல் சாகுபடியும் நடைபெற்று வருகிறது.

    அறுவடை செய்யப்படும் நெல் கொள்முதல் செய்யப்பட்டு லாரிகள் மூலம் ஏற்றப்பட்டு சேமிப்பு கிடங்கிற்கு கொண்டு வரப்பட்டு அடுக்கி வைக்கப்படும்.

    இந்த நெல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு அரவைக்காக அனுப்பப்பட்டு.

    அதில் இருந்து கிடைக்கும் அரிசி பொதுவினியோக திட்டத்தில் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

    இதற்காக நெல் மூட்டைகள் லாரிகள் மற்றும் சரக்கு ரெயில் மூலம் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டு வருகின்றன.

    இது தவிர தஞ்சை மாவட்டத்தில் உள்ள பல்வேறு அரவை ஆலை களுக்கும் அனுப்பப்படும்.

    இந்தநிலையில் தஞ்சை மாவட்டத்தில் உள்ள சேமிப்பு கிடங்குகளில் இருந்து நெல் மூட்டைகள் லாரிகளில் ஏற்றப்பட்டது.

    பின்னர் இந்த லாரிகள் தஞ்சை ரெயில் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டன.

    அந்த நெல் மூட்டைகள் சரக்கு ரெயிலில் 2000 டன் நெல்லை, 42 வேகன்களில் தொழிலாளர்கள் ஏற்றினர்.

    இதைத்தொடர்ந்து 2000 டன் நெல் வீதம் கிருஷ்ணகிரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    • பட்டாசு விபத்தில்லாத மாவட்டமாக உருவாக்க தொழிலாளர்கள் ஒத்துழைக்க வேண்டும் என கலெக்டர் ஜெயசீலன் பேசினார்.
    • இந்த பயிற்சி வகுப்பு எதிர்காலத்தில் ஏற்படும் ஆபத்தை தடுக்கும் முதலீடாகும்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் ஆமத்தூர் தனியார் கல்லூரி யில் தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககம் சார்பில் பட்டாசு உற்பத்தி தொழிலாளர்களுக்கான பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம் நடந்தது. இதை கலெக்டர் ஜெயசீலன் தொடங்கி வைத்தார்.

    இந்த நிகழ்ச்சியில் தொழி லக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககம் மூலம் தொழிற்சாலை பாதுகாப்பு வழிமுறைகள் குறித்த பாதுகாப்பு கையேடுகளை கலெக்டர் வெளியிட்டு தொழிலாளர்களுக்கு வழங்கினார். பின்னர் அவர் பேசியதா வது:-

    தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை மூலம் தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககம் சார்பில் பட்டாசு மற்றும் தீப்பெட்டி தொழிற் சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு நிபு ணர்களை கொண்டு இந்த காலத்திற்கு ஏற்றவாறு தொழிற்சாலைகள் அமைத்தல் மற்றும் பாது காப்பான உற்பத்தி முறையை கையாளுதல் தொடர்பாக, பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம்கள் நடத்த அறிவுறுத்தப் பட்டுள்ளது.

    இதையடுத்து விருதுநகர் மற்றும் சிவகாசி கோட்டங்க ளில் 28 விழிப்புணர்வு முகாம்கள் நடத்த திட்ட மிடப்பட்டு, இன்று முதல் விழிப்புணர்வு முகாம் தொடங்கி வைக்கப் பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு பட்டாசு தொழிற் சாலைகளில், விபத்தில்லா உற்பத்தியை மேற்கொள்ளும் வகையில் பல்வேறு விழிப் புணர்வு முகாம்கள், கருத்த ரங்கள் தொடர்ச்சியாக நடத்தப்பட்டு வருகின்றன.

    பட்டாசு உற்பத்தி தொழில் சுமார் 50 ஆண்டு களுக்கு மேலாக நடைபெற்று வருகிறது. இதன் மூலம் பல்வேறு மக்களுக்கு வேலைவாய்ப்பும், நாட்டின் பொருளாதரத்தில் மிகப் பெரிய பங்களிப்பையும் இந்த தொழில் வழங்கி வருகிறது.

    இந்த பயிற்சி வகுப்பு எதிர்காலத்தில் ஏற்படும் ஆபத்தை தடுக்கும் முதலீடாகும். நாட்டின் பல்வேறு வளர்ச்சி, முன்னேற்றங்களுக்கு காரணம் தொழிலாளர்கள் தான். அத்தகைய தொழி லாளர்கள் தங்களை பாதுகாத்துக் கொள்வது மிகவும் அவசியம்.

    எனவே இந்த கருத்த ரங்கை நல்ல முறையில் பயன்படுத்தி கொண்டு அரசின் மூலம் பட்டாசு விபத்தை தடுப்பதற்கு எடுக்கப்படும் அனைத்து முயற்சிகளுக்கும், நடவ டிக்கைகளுக்கும் பட்டாசு தொழிலாளர்கள், உறு துணையாக இருந்து விபத்தில்லா மாவட்டத்தை உருவாக்குவதற்கு முழு ஒத்துழைப்பு நல்கவேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கருத்தரங்கில் இணை இயக்குநர்கள் (தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககம்) வேல்முருகன் (விருதுநகர்), ரவிசந்திரன் (சிவகாசி), சாத்தூர் வருவாய் கோட்டாட்சியர் அனிதா, டான்பாமா தலைவர் கணேசன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

    • பரமத்தி வேலுார் தாலுகா பகுதிக்கு, தற்போது வட மாநிலத்தவர்கள் அதிக எண்ணிக்கையில் வந்துள்ளனர்.
    • தாலுகா முழுவதும் சுமார் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தங்கி உள்ளனர்.

    பரமத்தி வேலுார்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலுார் சுற்று வட்டாரப் பகுதிகளான பரமத்தி, கபிலர்மலை, இருக்கூர், ஜேடர்பாளையம், பிலிக்கல்பாளையம், நல்லுார் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள இரும்பு கம்பி தயார் செய்யும் தொழிற்சாலைகள் மற்றும் பல்வேறு வகையான தொழிற்சாலைகள், கோழிப்பண்ணைகள், வெல்லம் தயாரிக்கும்ஆலைகள் உள்ளிட்டவைகளில், அதிக ளவில் வடமாநிலதொழி லாளர்கள் வேலைபார்த்து வருகின்றனர்.

    இதில் 90 சதவீதம் பேர் தங்கள் வேலை பார்க்கும் பகுதியிலேயே தங்கியுள்ளனர். சிலர் வாடகைக்கு வீடு எடுத்து, கூட்டாகவும் தங்கி வேலை பார்த்து வருகின்றனர். இவர்கள் அடிக்கடி மளிகை பொருட்கள் மற்றும் காய்கறிகள் வாங்குவதற்கு, பரமத்திவேலூருக்கு வந்து செல்கின்றனர். மேலும் வட மாநிலத்தவர்கள் அதிகளவில், டீ கடை மற்றும் சிறிய உண வகங்கள் வைத்து நடத்தி வரு கின்றனர். சில ஆண்டுகளுக்கு முன், தொழிற்சாலைகளில் பணிபுரிந்து வந்த வட மாநில தொழிலாளர்களின் புகைப் படம், முகவரி உள்ளிட்டவைகளை, போலீசார் வாங்கி பதிவு செய்து வந்தனர்.

    ஆனால் தற்போது எந்த மாநிலத்தை சேர்ந்தவர்கள் எந்த நிறுவனத்தில் பணிபுரிந்து வருகின்றனர். அவர்கள் எந்த ஊர், பெயர் உள்ளிட்ட எவ்வித விபரங்களும் பதிவு செய்யப் படாமலே உள்ளது. தொழிற் சாலை, கோழிப்பண்ணை மற்றும் ஆலை உரிமையாளர் களை அழைத்து விழிப்பு ணர்வு கூட்டம் நடத்த போலீசார் ஏற்பாடு செய்ய வேண்டும். வடமாநில தொழி லாளர்களை தொடர்ந்து கண்காணிக்கவும், அவர்க ளின் முழு விபரங்களையும் பெறவும் வேண்டும்.

    பரமத்தி வேலுார் தாலுகா பகுதிக்கு, தற்போது வட மாநிலத்தவர்கள் அதிக எண்ணிக்கையில் வந்துள்ளனர், தாலுகா முழுவதும் சுமார் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தங்கி உள்ளனர். போலீசார் அவர்களை கண்காணித்து அவர்களின் சொந்த முகவரி ஆவணங்களை பெற வேண்டும் சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

    • திருப்பத்தூரில் கியாஸ் கசிவால் ‘தீ’ விபத்து ஏற்பட்டது.
    • இதில் கட்டுமான தொழிலாளர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

    திருப்பத்தூர்

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் புதுத்தெரு மகளிர் போலீஸ் நிலையம் பின்புற பகுதியில் புதுக்கோட்டையைச் சேர்ந்த கட்டுமான பணியாளர்கள் வீடு ஒன்று வாடகைக்கு எடுத்து தங்கி வருகின்றனர்.

    நேற்று வேலை முடிந்து வந்த தொழிலாளர்கள் வீட்டின் ஒரு அறையில் இரவு நேர சமையல் செய்து கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக சமையல் கியாஸ் சிலிண்டரில் கசிவு ஏற்பட்டு தீ பற்றி எரிந்தது. இதனை கண்ட தொழிலாளர்கள் தீயை அணைக்க முற்பட்டனர். இருப்பினும் தீ வேகமாக அருகே இருந்த சிமெண்ட் மூடையிலும் பற்றி எரிய ஆரம்பித்தது. இதனால் அதிர்ச்சியடைந்த தொழிலாளர்கள் சிலிண்டர் வெடிக்கும் என்ற அச்சத்தில் வீட்டை விட்டு வெளியேறினர்.

    இந்த தீ விபத்து குறித்து தகவலறிந்த திருப்புத்தூர் தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அவர்கள்நிலைய அலுவலர் கணேசன் தலைமையில் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். வீரர்களின் உடனடி நடவடிக்கை காரணமாக தீ அணைக்கப்பட்டது.

    இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தொழிலா ளர்கள் தீ விபத்து நடந்த சிறிது நேரத்தில் வீட்டை விட்டு வெளியேறியதால் உயிர் தப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • டாஸ்மாக் பணியாளர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும்.
    • தெருவியாபார தொழிலாளர்கள் சட்டத்தை அமல்படுத்த வேண்டும்.

    தஞ்சாவூர்:

    அனைத்து அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயத்தை கைவிட வேண்டும், போக்குவரத்து கழக பணியிடங்களை தனியாரிடம் வழங்க கூடாது, டாஸ்மாக் பணியாளர்களை பணிநிரந்தரம் செய்திட வேண்டும், தெருவியாபார தொழிலாளர்கள் சட்டத்தை அமுல்படுத்துவது, நலவாரிய பதிவுகளை எளிமைபடுத்தி நிதி உதவிகளை அதிகப்படுத்துவது என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும், மத்திய அரசை கண்டித்தும் இன்று தஞ்சை தலைமை தபால் நிலையம் முன்பு ஏ.ஐ.டி.யூ.சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைெபற்றது.

    இதற்கு தேசிய நிர்வாக குழு உறுப்பினர் சந்திரகுமார் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் துரை.மதிவாணன், பொருளாளர்கோ விந்தராஜன், வங்கி ஊழியர்கள் சங்க மாவட்ட செயலாளர்அன்பழகன், அரசு போக்குவரத்து சங்க நிர்வாகிகள்தா மரைச்செல்வன், கஸ்தூரி, கே.சுந்தர பாண்டியன், ஓய்வு பெற்றோர் சங்க பொதுச்செயலாளர்அ ப்பாத்துரை, சுப்பிரமணியன் , தங்கராசு, நுகர் பொருள் வாணிபகழக சங்க மாவட்ட நிர்வாகிகள் ஞானசேகரன், தியாகராஜன், உடல்உழைப்பு சங்க நிர்வாகிகள்பரிமளா, சுதா,கல்யாணி, மின்வாரிய சம்மேளன மாநில துணைத்தலைவர் பொன்.தங்கவேல், நிர்வாகிகள் நாகராஜன், லெட்சுமணன், கட்டுமான சங்க நிர்வாகிகள்செல்வம், சிவப்பியம்மாள், குணசேகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பியவாறே தலைமை தபால் நிலையத்தை முற்றுகையிட முயன்றனர்.

    அவர்களை போலீசார் தடுத்தி நிறுத்தினர். இதனால் ஏ.ஐ.டி.யூ.சி நிர்வாகிகள் தபால் நிலையம் முன்பு அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அப்போது கோரிக்கைகளை தமிழக அரசு உடனே நிறைவேற்ற வேண்டும் என்றும், மத்திய அரசை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினர்.

    இதையடுத்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 45 பேரை போலீசார் கைது செய்தனர். இதேப்போல் கும்பகோணம், பட்டுக்கோட்டையிலும் ஏ.ஐ.டி.யூ.சி சார்பில் மறியல் போராட்டம் நடைபெற்றது.

    • சுரங்க பகுதியில் சாப்பிட்ட சிறிது நேரத்தில் 21 தொழிலாளர்களுக்கு அடுத்தடுத்து வாந்தி, மயக்கம் ஏற்பட்டது.
    • உணவு வினியோகம் செய்த ஊழியர் தான் வைத்திருந்த உணவு பொருட்களை பார்த்தபோது, தயிர் சாதத்தில் எலி ஒன்று செத்துக்கிடந்தது.

    நெய்வேலி:

    கடலூர் மாவட்டம் நெய்வேலி என்.எல்.சி.யில் 2-வது நிலக்கரி சுரங்கம் உள்ளது. இங்கு ஏராளமான தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். இவ்வாறு வேலை செய்து வரும் தொழிலாளர்களுக்கு உணவு வழங்கப்படும். அந்த வகையில் நேற்று காலை தொழிலாளர்களுக்கு இட்லி, பூரி, தயிர் சாதம், வடை வழங்கப்பட்டது. இதை சுரங்க பகுதியில் சாப்பிட்ட சிறிது நேரத்தில் 21 தொழிலாளர்களுக்கு அடுத்தடுத்து வாந்தி, மயக்கம் ஏற்பட்டது.

    இதனால் அதிர்ச்சியடைந்த உணவு வினியோகம் செய்த ஊழியர் தான் வைத்திருந்த உணவு பொருட்களை பார்த்தபோது, தயிர் சாதத்தில் எலி ஒன்று செத்துக்கிடந்தது.

    இதனால் பதறிய அந்த ஊழியர், அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். இதற்கிடையே அங்கிருந்த சக தொழிலாளர்கள் 21 தொழிலாளர்களையும் மீட்டு என்.எல்.சி. ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள். எலி செத்துக்கிடந்த உணவை சாப்பிட்ட தொழிலாளர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்ட சம்பவம் நெய்வேலி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ×