search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கலந்தாய்வு"

    • பி.காம்., பி.பி.ஏ., பி.ஏ. வரலாறு, பி.ஏ. பொருளியல் ஆகிய பாடங்களுக்கு கலந்தாய்வு நடைபெற்றது.
    • மூன்றாம் சுற்று கலந்தாய்வு ஜூன் 8 முதல் 10 ஆம் தேதி வரையும் நடைபெறவுள்ளது.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூா் குந்தவை நாச்சியாா் அரசு மகளிா் கலைக் கல்லூரியில் (தன்னாட்சி) 2023 - 24 ஆம் கல்வியாண்டு இளநிலை பாடப் பிரிவுகளுக்கான முதல் சுற்றுக் கலந்தாய்வு இன்று முதல் தொடங்கியது.

    இதுகுறித்து கல்லூரி முதல்வா் (பொ) மலா்விழி கூறியதாவது:-

    இக்கல்லூரியில் முதல் சுற்றுக் கலந்தாய்வு இன்று காலை தொடங்கியது. முதல் நாளில் பி.காம்., பி.பி.ஏ., பி.ஏ. வரலாறு, பி.ஏ. பொருளியல் ஆகிய பாடங்களுக்கு கலந்தாய்வு நடைபெற்றது.

    நாளை காலை 9 மணிக்கு பி.எஸ்.ஸி. கணினி அறிவி யல், பி.எஸ்ஸி. கணிதம், பி.எஸ்ஸி. இயற்பியல், பி.எஸ்ஸி. வேதியியல், பி.எஸ்ஸி. புள்ளியியல் ஆகிய பாடங்களுக்கும், ஜூன் 3 ஆம் தேதி 9 மணிக்கு பி.எஸ்ஸி. தாவரவியல், பி.எஸ்ஸி. விலங்கியல், பி.எஸ்ஸி. புவியியல், பி.ஏ. தமிழ், பி.ஏ. ஆங்கிலம் ஆகிய பாடங்களுக்கும் கலந்தாய்வு நடைபெறவுள்ளது.

    இதேபோல, இரண்டாம் சுற்று கலந்தாய்வு ஜூன் 5 முதல் 7 ஆம் தேதி வரையும், மூன்றாம் சுற்று கலந்தாய்வு ஜூன் 8 முதல் 10 ஆம் தேதி வரையும் நடைபெறவுள்ளது.

    இக்கலந்தாய்வுக்கு மாணவிகள் குறித்த நேரத்தில் கட்டாயம் வர வேண்டும். வரும் போது எஸ்.எஸ்.எல்.சி, பிளஸ்- 1, பிளஸ்- 2 மதிப்பெண் சான்றிதழ்கள், மாற்றுச் சான்றிதழ், ஜாதி சான்றிதழ், சிறப்பு ஒதுக்கீட்டுக்கான உரிய சான்றிதழ் ஆகியவற்றின் அசல், நகல், ஆதாா் அட்டை நகல், 2 பாஸ்போா்ட் அளவு புகைப்படங்கள் ஆகியவற்றை எடுத்து வர வேண்டும். இணையத்தில் பதிவு செய்யப்பட்ட விண்ணப்பப் படிவத்தின் (அனைத்து பக்கங்கள்) 2 நகல்களை மாணவிகள் எடுத்து வர வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • இணைய வழியில் விண்ணப்பித்த மாணவர்கள் கல்விச்சான்றிதழ்கள் (அசல் மற்றும் நகல்), கல்வி கட்டணம், பெற்றோர்களுடன் நேரில் வர வேண்டும்.
    • 11.8.22-ம் தேதி பி.ஏ. ஆங்கில பாடப்பிரிவிற்கும், 12.8.22-ம் தேதி பி.ஏ. தமிழ் பாடப்பிரிவிற்கும் கலந்தாய்வு நடைபெறும்.

    பூதலூர்:

    தஞ்சை மாவட்டம், பூதலூர் ரெயிலடிகூட்டுறவு காலனி பகுதியில் அமைந்து ள்ள ஊராட்சி ஒன்றிய பழைய கட்டிடத்தில் தற்காலிகமாக செயல்பட்டுவரும் திருக்காட்டுப்பள்ளி அரசு கலைக்கல்லூரியில் 2022-23-ம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு நாளை தொடங்கி 12-ம் தேதி வரை நடைபெற உள்ளது. அதன்படி, நாளை (5.8.22) சிறப்பு பிரிவினர் மற்றும் பி.காம் பாடப்பிரிவினருக்கும், 8.8.22-ம் தேதி பி.பி.ஏ. பாடப்பிரிவிற்கும், 10.8.22-ம் தேதி பி.எஸ்சி கணிணி அறிவியல் பாடப்பிரிவிற்கும், 11.8.22-ம் தேதி பி.ஏ. ஆங்கில பாடப்பிரிவிற்கும், 12.8.22-ம் தேதி பி.ஏ. தமிழ் பாடப்பிரிவிற்கும் கலந்தாய்வு நடைபெறும். இணைய வழியில் விண்ணப்பித்த மாணவர்கள் கல்விச்சான்றிதழ்கள் (அசல் மற்றும் நகல்), கல்வி கட்டணம், பெற்றோர்களுடன் நேரில் வர வேண்டும். கொரோனா விதிமுறைகளை கடைபி டித்து காலை 10 மணி முதல் கலந்தாய்வு நடைபெறும் என்று திருக்காட்டுப்பள்ளி அரசு கலைக்கல்லூரி முதல்வர் ராஜாவரதராஜா தெரிவித்துள்ளார்.

    குரூப்-4 தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு வருகிற அக்டோபர் மாதம் கலந்தாய்வு நடத்தப்படும் என்று டி.என்.பி.எஸ்.சி. அதிகாரிகள் தெரிவித்தனர். #TNPSCExam #GroupIV
    சென்னை:

    சென்னையில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய (டி.என்.பி.எஸ்.சி.) செயலாளர் கே.நந்தகுமார், தேர்வுக்கட்டுப்பாட்டு அதிகாரி ஆர்.சுதன் ஆகியோர் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    கடந்த பிப்ரவரி மாதம் 11-ந் தேதி நடந்த டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 தேர்வு தான் இந்தியாவிலேயே அதிகம் பேர் எழுதிய தேர்வாக இருக்கும். அந்த தேர்வை 17 லட்சத்து 53 ஆயிரத்து 154 பேர் எழுதினார்கள். இந்த தேர்வு வித்தியாசமாக நடந்தது. தேர்வு எழுதியவர்களின் பெயர், பதிவு எண், புகைப்படம், தேர்வு நடைபெறும் இடம் உள்ளிட்ட விவரங்கள் உரியவர்களுக்கு வழங்கப்பட்டது. அவர்கள் பதிவு எண்ணை எழுத வேண்டியதில்லை. வெளிப்படையாக தேர்வு நடத்தி வருகிறோம்.

    கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர் பணிகளுக்கும் சேர்ந்து ஒரே தேர்வாக நடத்தியதால் அரசுக்கு ரூ.12 கோடி செலவு குறைந்துள்ளது. குரூப்-4 தேர்வு எழுதியவர்களில் 14 லட்சத்து 26 ஆயிரத்து 10 பேரின் மதிப்பெண்கள் மற்றும் ரேங்க் பட்டியல் நேற்று (நேற்று முன்தினம்) வெளியிடப்பட்டது.

    தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று ரேங்க் பட்டியலில் இடம்பெற்றவர்களுக்கு எஸ்.எம்.எஸ். மற்றும் இ.மெயில் மூலமாக சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு குறித்த தகவல்கள் அனுப்பப்படும். அவர்கள் வருகிற 16-ந் தேதி முதல் 30-ந் தேதி வரை அரசு இ-சேவை மையங்களுக்கு சென்று தங்களது சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய வேண்டும். இந்த சான்றிதழ்களை அரசு பணியாளர் தேர்வாணைய அலுவலகத்தில் இருந்தே ஆன்லைன் மூலமாக அதிகாரிகள் சரிபார்ப்பார்கள். இதனால் தேர்வு எழுதியவர்கள் சென்னை வருவது தவிர்க்கப்படும்.

    அதன்பின்னர் குரூப்-4 தேர்வுக்கான கலந்தாய்வு அக்டோபர் மாதம் நடைபெறும். ஒரு பணியிடத்திற்கு 3 பேர் கலந்தாய்வுக்கு அழைக்கப்படுவார்கள். குரூப்-4 தேர்வு அறிவிக்கும்போது 9 ஆயிரத்து 351 காலிப்பணியிடங்கள் தான் இருந்தன. ஆனால் தற்போது 11 ஆயிரத்து 280 காலிப்பணியிடங்கள் உள்ளன. எனவே இந்த காலிப்பணியிடங்களுக்கு ஆட்களை தேர்ந்து எடுப்போம்.

    கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெற்ற குரூப்-1 முதல்நிலை தேர்வு முடிவு வருகிற அக்டோபர் மாதம் வெளியிடப்படும், 2016-ம் ஆண்டு நடைபெற்ற குரூப்-1 தேர்வு பற்றி கோர்ட்டில் வழக்கு நிலுவையில் உள்ளது.

    நேர்முகத்தேர்வு உள்ள குரூப்-2 தேர்வுக்கான அறிவிப்பு வருகிற 15-ந் தேதிக்குள் வெளியிடப்படும். இதன்மூலம் 1,547 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. அரசுப்பணியாளர் தேர்வாணையம் வெளிப்படைத்தன்மையாக தேர்வை நடத்துகிறது.

    அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் ஏற்கனவே 27 கம்ப்யூட்டர் வழித்தேர்வுகள் நடத்தப்பட்டன. 50 ஆயிரம் பேருக்கு குறைவான தேர்வர்கள் பங்கேற்கும் தேர்வை கம்ப்யூட்டர் வழித்தேர்வாக நடத்த முடியும். அவ்வாறு தேர்வு நடத்தினால் விரைவாக முடிவு வெளியிடப்படும்.

    தேர்வாணைய பணிகள் அனைத்தும் தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்பட மாட்டாது.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.  #TNPSCExam #tamilnews
    வருகிற 28-ந்தேதி எம்.பி.பி.எஸ். ரேங்க் பட்டியல் வெளியிடப்படும் என்றும் அதனைத் தொடர்ந்து கலந்தாய்வு ஜூலை 1-ந்தேதி தொடங்க உத்தேசிக்கப்பட்டுள்ளதாக மாணவர் சேர்க்கை செயலாளர் தெரிவித்தார்.
    சென்னை:

    தமிழ்நாட்டில் 22 அரசு மருத்துவக் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் உள்ள மொத்த எம்.பி.பி.எஸ். இடங்கள் 2900 ஆகும். இதில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்கள் 455 போக 2445 இடங்கள் கலந்தாய்வு மூலம் நிரப்பப்படுகின்றன.

    இதுதவிர 10 தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்கள் போக 783 இடங்கள் இருக்கின்றன.

    மேலும் அண்ணா பல்கலைக்கழகத்தில் உள்ள 127 எம்.பி.பி.எஸ். இடங்கள் ஆகியவற்றை சேர்த்து 3355 எம்.பி.பி.எஸ். இடங்கள் முதல்கட்ட கலந்தாய்வு மூலம் நிரப்பப்பட உள்ளன. நீட் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் மாணவ- மாணவிகளுக்கு இடங்கள் ஒதுக்கப்படும்.

    இன ஒதுக்கீட்டின்படியும், நீட் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் முறையேயும் ரேங்க் பட்டியல் தயாரிக்கப்பட உள்ளது. நீட் தேர்வில் தமிழக மாணவர்கள் 45 ஆயிரம் பேர் தேர்ச்சி பெற்று இருக்கிறார்கள். 720-க்கு 96 மதிப்பெண் பெற்று இருந்தாலே தகுதி உடையவராக கருதப்படுகிறது.

    ஆனால் அரசு மருத்துவக் கல்லூரிகளிலோ, தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டில் படிப்பதற்கு நீட் தேர்வில் 400-க்கு மேல் மதிப்பெண் பெற்று இருக்க வேண்டும். ஓ.பி.சி., பி.சி., எஸ்.சி., எஸ்.டி. என்ற இன ஒதுக்கீட்டின்படி மாணவர்களுக்கு மதிப்பெண்கள் சலுகை வழங்கப்படுவதால் அந்த வரம்பிற்கு உட்பட்ட கட்-ஆப் மதிப்பெண் பெற்ற மாணவ- மாணவிகளுக்கு இடங்கள் ஒதுக்கப்படும்.

    கடந்த ஆண்டை விட இந்த வருடம் நீட் தேர்வில் அதிகளவு மாணவர்கள் தேர்ச்சி பெற்று இருக்கிறார்கள். மற்ற மாநிலங்களை விட தேர்ச்சி விகிதம் குறைவு என்றாலும் இந்த வருடம் போட்டி அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். ஆகிய மருத்துவ படிப்புகளில் சேருவதற்கு நாளை மறுநாள் (11-ந்தேதி) முதல் விண்ணப்பம் விநியோகிக்கப்படுகிறது. அனைத்து அரசு மருத்துவக் கல்லூரிகளிலும் விண்ணப் படிவம் விற்பனை செய்யப்படுகிறது.

    இதுதவிர மருத்துவக் கல்வி வெப்சைட்டில் இருந்தும் பதிவிறக்கும் செய்து விண்ணப்பத்தை பூர்த்தி செய்து 19-ந்தேதி மாலை 5.15 மணிக்குள் சென்னையில் உள்ள மருத்துவக் கல்வி இயக்குனர் அலுவலகத்திற்கு கிடைக்கும்படி சமர்ப்பிக்க வேண்டும்.

    விண்ணப்ப படிவத்துடன் வழங்கப்படும் விபர குறிப்புகளில் மாணவர்கள் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் தெரிவிக்கப்பட்டுள்ளன. அதனை முழுமையாக படித்து படிவத்தை பூர்த்தி செய்ய வேண்டும்.

    அதனை பின்பற்றாத விண்ணப்பதாரர்கள் படிவங்கள் நிராகரிக்கப்படும் என்று மாணவர் சேர்க்கை செயலாளர் டாக்டர் செல்வராஜன் தெரிவித்துள்ளார்.

    2018-19ம் ஆண்டு மருத்துவ படிப்பதற்கான மாணவர் சேர்க்கை குறித்து அவர் மேலும் கூறியதாவது:-

    மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கான விண்ணப்பம் 11-தேதி முதல் வழங்கப்படுகிறது. விண்ணப்பம் பெறுவதற்கு 19-ந்தேதி கடைசி நாளாகும். கடந்த ஆண்டை போல எப்படியும் 40 ஆயிரம் விண்ணப்பங்கள் வரும் என்று எதிர் பார்க்கிறோம்.

    விண்ணப்ப படிவங்கள் வந்தபிறகுதான் மாணவர்கள் பெற்ற மதிப்பெண், ஜாதி அடிப்படையில் ரேங்க் பட்டியல் தயாரிக்கப்படும். இப்போதே தோராயமாக கட்-ஆப் மதிப்பெண்களை கூற இயலாது.

    மொத்தம் பெறப்பட்டுள்ள மாணவர்களின் மதிப்பெண், மற்றும் இன ஒதுக்கீட்டை பின்பற்றி ரேங்க் பட்டியல் தயாரிக்கப்படும். வருகிற 28-ந்தேதி ரேங்க் பட்டியல் வெளியிடப்படும். அதனைத் தொடர்ந்து கலந்தாய்வு ஜூலை 1-ந்தேதி தொடங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.

    தற்போது உள்ள நிலவரப்படி 3355 எம்.பி.பி.எஸ். இடங்களுக்கு கலந்தாய்வு நடத்தப்படும். மதுரை, நெல்லை, செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரிகளில் மொத்தம் கூடுதலாக 250 எம்.பி.பி.எஸ். இடங்கள் இந்திய மருத்துவ கவுன்சிலிடம் கேட்டு கடிதம் எழுதப்பட்டுள்ளது. அந்த இடங்கள் கிடைத்தால் 2-வது கட்ட கலந்தாய்வில் நிரப்பப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார். #MBBS
    அகில இந்திய பொது பிரிவு, மாற்றுத்திறனாளி, புதுவை மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு வரும் 26-ந்தேதி, புதுவை நிர்வாக பிரிவு கட்டிடத்தில் காலை 8 மணிக்கு ஜிப்மர் கலந்தாய்வு தொடங்குகிறது. #Jipmer
    புதுச்சேரி:

    புதுவை ஜிப்மர் மருத்துவ கல்லூரியில் 150, காரைக்கால் ஜப்மர் கிளையில் 50 என மொத்தம் 200 எம்.பி.பி.எஸ். இடங்கள் உள்ளன.

    ஜிப்மர் எம்.பி.பி.எஸ். இடங்களில் சேருவதற்கான நுழைவுத்தேர்வு, கடந்த 3-ந்தேதி நாடு முழுவதும் நடந்தது. ஒரு லட்சத்து 54 ஆயிரத்து 491 பேர் தேர்வினை எழுதினர்.

    புதுவையில் 1,795 பேர் தேர்வு எழுதினர். தேர்வு முடிவுகள் ஜிப்மர் இணையதளத்தில் www.jipmer.puducherry.gov.in வெளியிடப்பட்டது.

    அகில இந்திய ஒதுக்கீட்டில், மாணவர் அன்கடலா அனிரூத் பாபு 99.9987799 சதவீத மதிப்பெண் எடுத்து முதலிடம் பிடித்துள்ளார். மாணவர் அகில்தம்பி 99.9986570 மதிப்பெண் எடுத்து 2-ம் இடமும், பிரிராக்திரிபாதி 99.9975598 மதிப்பெண் எடுத்து 3-ம் இடத்தையும் பிடித்துள்ளனர்.

    அகில இந்திய பொது பிரிவு, மாற்றுத்திறனாளி, புதுவை மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு வரும் 26-ந்தேதி, புதுவை நிர்வாக பிரிவு கட்டிடத்தில் காலை 8 மணிக்கு கலந்தாய்வு தொடங்குகிறது.

    அகில இந்திய ஓ.பி.சி., எஸ்.சி., எஸ்.டி., மாணவர்களுக்கு 27-ந்தேதி கவுன்சிலிங் நடக்கிறது.

    புதுவை பொதுபிரிவு ஓ.பி.சி., எஸ்.சி., என்.ஆர்.ஐ. அல்லது ஓ.சி.ஐ. மாணவர் களுக்கு 28-ந்தேதி கவுன்சிலிங் நடக்கிறது.

    ஜிப்மர் நுழைவு தேர்வு எழுதிய மாணவர்கள், தங்களுடைய மதிப்பெண் பற்றிய விபரங்களை www.jipmer.puducherry.gov.in அல்லது www.jipmer.edu.in என்ற இணையதளத்தில் வரும் 12-ந்தேதி காலை 11 மணியில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். #Jipmer
    நீட் தேர்வில் மாணவர்கள் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தமிழகத்தில் உள்ள 3355 எம்.பி.பி.எஸ் இடங்கள் கலந்தாய்வு மூலம் நிரப்பப்பட உள்ளன. #NEET #NEET2018
    சென்னை:

    எம்.பி.பி.எஸ். மருத்துவ படிப்புகளில் சேருவதற்கான தேசிய தகுதி நுழைவுத்தேர்வு (நீட்) முடிவுகள் நேற்று வெளியானது. இதில் மாணவி கீர்த்தனா 720க்கு 676 மதிப்பெண் பெற்று இந்திய அளவில் 12-வது இடம் வகித்தார். சென்னை கே.கே.நகரை சேர்ந்த அந்த மாணவி தமிழக அளவில் முதலிடம் பிடித்துள்ளார்.

    தொழில் மற்றும் கல்வி வளர்ச்சியில் பின் தங்கிய பல மாநிலத்தை சேர்ந்த மாணவர்கள் நீட் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளனர். பீகார், ராஜஸ்தான், அரியானா, குஜராத், பஞ்சாப், கர்நாடகா, தெலுங்கானா, கேரளா, டெல்லி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை விட தமிழகம் நீட் தேர்வு தேர்ச்சி விகிதத்தில் பின் தங்கியுள்ளது.

    நீட் தேர்வு முடிவு வெளியானதை தொடர்ந்து தமிழகத்தில் மருத்துவ படிப்பில் சேருவதற்கான கலந்தாய்வு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. வருகிற 11-ந்தேதி முதல் விண்ணப்பங்கள் அனைத்து அரசு மருத்துவ கல்லூரிகளிலும் விற்பனை செய்யப்படுகிறது.

    மேலும் இணைய தளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்தும் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க 19-ந்தேதி கடைசி நாளாகும் தரவரிசை பட்டியல் 28-ந்தேதி வெளியிடப்படுகிறது. முதல் கட்ட கலந்தாய்வு ஜூலை 1-ந்தேதி தொடங்கி 5-ந்தேதி வரை நடைபெறுகிறது.

    தமிழ்நாட்டில் 22 அரசு மருத்துவ கல்லூரிகள் உள்ளன. இவற்றில் 2900 எம்.பி.பி.எஸ் இடங்கள் இருக்கின்றன. அதில் 15 சதவீத அகில இந்திய ஒதுக்கீடான 455 இடங்கள் போக மீதமுள்ள 2445 எம்.பி.பி.எஸ் இடங்கள் நீட் தேர்வு கட்-ஆப் மார்க் மற்றும் இன ஒதுக்கீடு அடிப்படையில் நிரப்பப்படுகின்றன. இதுதவிர 10 தனியார் மருத்துவ கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்கள் 783 மற்றும் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் 127 இடங்கள் என மொத்தம் 3355 எம்.பி.பி.எஸ் இடங்கள் கலந்தாய்வு மூலம் நிரப்பப்படுகின்றன.


    இதுகுறித்து தமிழ்நாடு மருத்துவக் குழு செயலாளர் டாக்டர் செல்வராஜன் கூறியதாவது:-

    அரசு மருத்துவ கல்லூரிகளில் உள்ள 2900 மொத்த இடங்களில் அகில இந்திய ஒதுக்கீடு போக மீதமுள்ள 2445 இடங்கள் கலந்தாய்வு மூலம் நிரப்பப்படுகின்றன. தனியார் சுயநிதி மருத்துவ கல்லூரிகள் மற்றும் அண்ணாமலை பல்கலைக் கழக இடங்களும் முதல் கட்ட கலந்தாய்வு மூலம் நிரப்பப்படும்.

    ஒரு சில தனியார் மருத்துவ கல்லூரிகள் அங்கீகாரம் கேட்டு இந்திய மருத்துவ கவுன்சிலிடம் விண்ணப்பித்துள்ளன.

    மதுரை, நெல்லை அரசு மருத்துவ கல்லூரிகளில் தலா 100 இடங்களும் செங்கல்பட்டு அரசு மருத்துவ கல்லூரிகளில் 50 இடங்களும் கூடுதலாக அனுமதிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறோம். 250 எம்.பி.பி.எஸ். இடங்கள் கூடுதலாக கிடைத்தால் இந்த வருடம் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு கூடுதல் வாய்ப்பாக அமையும்.

    கடந்த ஆண்டு இரட்டை குடியுரிமையுடன் மருத்துவ படிப்பிற்கு விண்ணப்பித்த மாணவர்களால் பிரச்சனை எழுந்து. இந்த ஆண்டு அதுபோன்ற நிலை உருவாகாது. மருத்துவ படிப்பிற்கான வழிகாட்டுதல் கையேட்டில் அதுபற்றி தெளிவான விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அதன்படி பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் கண்டிப்பாக சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

    அதையும் மீறி முறைகேடாக மாணவர் சேர்க்கை பெற முயன்றால் கடும் நடவடிககை எடுக்கப்படும்.

    மருத்துவ படிப்பில் சேரக்கக்கூடிய மாணவர்கள் 2 மாநிலத்தில் கூட விண்ணப்பிக்கலாம். உதாரணத்திற்கு கர்நாடக மாநிலத்தை சேர்ந்த ஒருவர் தமிழகத்தில் புலம் பெயர்ந்து இருந்தால் கர்நாடகாவிலும், தமிழகத்திலும் விண்ணப்பிக்கலாம்.

    ஆனால் கர்நாடகவில் மட்டும் தான் குடியுரிமை சான்றிதழை விண்ணப்பிக்க முடியும். தமிழகத்தில் குடியுரிமை சான்று முறைகேடாக பெற்று விண்ணப்பித்து இருந்தால் அது தவறாகும்.

    இதுபோன்ற தவறுகளை கடந்த வருடம் விண்ணப்பித்தவர்கள் செய்திருந்தனர். ஆனால் இந்த ஆண்டு இரட்டை குடியுரிமையுடன் விண்ணப்பித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.   #NEET #NEET2018
    தமிழகத்தில் மருத்துவ படிப்புக்கு 11-ந் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்றும், கலந்தாய்வு ஜூலை 1-ந் தேதி தொடங்குகிறது என்றும் அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
    சென்னை:

    தமிழ்நாடு மருத்துவ தேர்வுக்குழு செயலாளர் டாக்டர் செல்வராஜன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழகத்தில் எம்.பி.பி.எஸ். மற்றும் பி.டி.எஸ். படிப்பில் சேர விண்ணப்பம் அனைத்து மருத்துவ கல்லூரிகளிலும் கிடைக்கும். வருகிற 11-ந் தேதி முதல் விண்ணப்பங்கள் வினியோகிக்கப்படும். விண்ணப்பங்கள் 18-ந் தேதி வரை வழங்கப்படும்.

    பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் 19-ந் தேதி (மாலை 5 மணிக்குள்) ஆகும்.

    பூர்த்தி செய்த விண்ணப்பங்களை ‘செயலாளர், தேர்வுக்குழு, 162, பெரியார் நெடுஞ்சாலை, கீழ்ப்பாக்கம், சென்னை-10’, என்ற முகவரிக்கு அனுப்பவேண்டும்.

    தரவரிசை பட்டியல் 28-ந் தேதி வெளியிடப்படும். முதல்கட்ட கலந்தாய்வு ஜூலை 1-ந் தேதி முதல் 5-ந் தேதி வரை நடைபெறும்.

    2-ம் கட்ட கலந்தாய்வு ஜூலை 22-ந் தேதி முதல் ஜூலை 24-ந் தேதி வரை நடைபெறும் என்று தெரிகிறது. கல்லூரிகளில் ஆகஸ்டு மாதம் 1-ந்தேதி முதல் வகுப்புகள் தொடங்கும். 18-ந் தேதிக்குள் அனைத்து மாணவர்களும் சேர்ந்துவிட வேண்டும்.

    மற்ற விவரங்கள் அனைத்தையும் www.tnh-e-a-lth.org, www.tnm-e-d-i-c-a-ls-e-l-e-ct-i-on.org ஆகிய இணையதள முகவரிக்கு சென்று பார்க்கலாம்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். #tamilnews
    தமிழகத்தில் உள்ள இடங்களுக்கு மருத்துவ பட்டமேற்படிப்புக்கான கலந்தாய்வு இன்று சென்னை ஓமந்தூரார் தோட்டத்தில் உள்ள அரசு பல்நோக்கு சிறப்பு மருத்துவமனை வளாகத்தில் நடைபெறுகிறது.
    சென்னை:

    மருத்துவ பட்ட மேற்படிப்புக்கான நீட் தேர்வு நடைபெற்று முடிவு வெளியிடப்பட்டது. தமிழகத்தில் உள்ள இடங்களுக்கு மருத்துவ பட்டமேற்படிப்புக்கான கலந்தாய்வு இன்று (சனிக் கிழமை) காலை 11 மணிக்கு சென்னை ஓமந்தூரார் தோட்டத்தில் உள்ள அரசு பல்நோக்கு சிறப்பு மருத்துவமனை வளாகத்தில் நடைபெறுகிறது. இன்று மாற்றுத்திறனாளிகளுக்கான கலந்தாய்வு நடக்கிறது. நாளை (ஞாயிற்றுக்கிழமை) முதல் மாற்றுத்திறன் அல்லாத மாணவ-மாணவிகளுக்கு கலந்தாய்வு நடைபெறுகிறது. இந்த கலந்தாய்வு 23-ந் தேதி வரை நடக்கிறது.

    அரசு மருத்துவக்கல்லூரிகளில் உள்ள 864 இடங்கள், அகில இந்திய ஒதுக்கீடு போக கிடைத்துள்ள 117 இடங்கள், சுயநிதி கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீடு 122 என மொத்தம் 1,103 இடங்களுக்கு கலந்தாய்வு நடத்தப்படுகிறது. பல் மருத்துவ பட்டமேற்படிப்புக்கு அரசு பல் மருத்துவ கல்லூரிகளில் உள்ள 23 இடங்கள், சுயநிதி கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீடு 96 இடங்களுக்கான கலந்தாய்வு 22-ந் தேதி பகல் 2 மணிக்கு தொடங்கி 23-ந் தேதி முடிவடைகிறது.#tamilnews
    வேளாண் படிப்புக்கு ஆன்லைன் மூலம் கலந்தாய்வு நடத்தப்படும் என்று கோவை வேளாண் பல்கலைக்கழக துணைவேந்தர் ராமசாமி அறிவித்துள்ளார். #Agricultural #Counselling
    வடவள்ளி:

    கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழக துணைவேந்தர் ராமசாமி இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

    தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் 12 இளம் அறிவியல் பாடப்பிரிவுகளும், 4 தொழில் முறை பாடப்பிரிவுகளும் செயல்பட்டு வருகிறது.

    இதில் உறுப்பு கல்லூரிகளில் 987 இடங்களும், இணைப்பு கல்லூரிகளில் 2,160 இடங்களும் என மொத்தம் 3 ஆயிரத்து 147 இடங்கள் உள்ளன.

    தொழிற்நுட்ப படிப்புகளில் உறுப்பு கல்லூரிகளில் 1,262 இடங்களும், இணைப்பு கல்லூரிகளில் 2,160 இடங்களும் என மொத்தம் 3,422 இடங்கள் நிரப்பப்படுகிறது.

    இந்த கல்வி ஆண்டு முதல் இணைய தளம் முறையில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். சிறப்பு இட ஒதுக்கீட்டுக்கான பிரிவில் விண்ணப்பிப்போர் தேவையான சான்றிதழ்களை குறிபிப்பிட்ட நாட்களில் நேரில் கொண்டு வந்து சரி பார்க்க வேண்டும்.

    மேல்நிலை பள்ளி தேர்வில் பெற்ற மதிப்பெண்களை கொண்டு தர வரிசை பட்டியல் தயாரிக்கப்பட்டு அதன் அடிப்படையில் மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். மாணவர்கள் சேர்க்கை ஆன்லைன் மூலம் நடைபெறும்.


    வருகிற 18-ந்தேதி முதல் இணையதளத்தில் விண்ணப்பிக்க தொடங்கும் நாள். அடுத்த மாதம் 17-ந் தேதி கடைசி நாள் ஆகும்.

    சிறப்பு ஒதுக்கீட்டுக்கான சான்றுகள் சரிபார்ப்பு அடுத்த மாதம் 18-ந் தேதி முதல் 20-ந் தேதி வரை நடைபெறுகிறது.

    தரவரிசை பட்டியல் அடுத்த மாதம் 22-ந் தேதி வெளியிடப்படுகிறது. சிறப்பு ஒதுக்கீட்டுக்கான கலந்தாய்வு ஜூலை 7-ந்தேதி நடக்கிறது.

    9-ந் தேதி முதல் 13-ந் தேதி வரை முதல் கட்ட ஆன்லைன் கவுன்சிலிங் நடக்கிறது. 16-ந் தேதி தொழில் கல்விக்கான கலந்தாய்வும், 17,18-ந் தேதிகளில் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான மற்றும் நிறுவனங்களுக்கான கலந்தாய்வும் நடக்கிறது.

    23-ந்தேதி முதல் 27-ந் தேதி வரை 2-ம் கட்ட கலந்தாய்வு நடக்கிறது. ஆகஸ்டு 1-ந் தேதி கல்லூரிகள் தொடங்குகிறது. 31-ந் தேதி வரை சேர்க்கை நடைபெறுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார். #Agricultural #Counselling
    ×