search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மணிப்பூர்"

    • கிளர்ச்சியாளர்கள் மாறி மாறி தாக்குதல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • மே மாதம் தொடங்கிய வன்முறை 16 மாதங்கள் ஆகியும் இன்னும் கட்டுப்படுத்தமுடியாமல் இருந்து வருகிறது.

    மணிப்பூர்:

    மணிப்பூரில் பழங்குடி அந்தஸ்து தொடர்பாக மெய்தி மற்றும் குக்கி இனக்குழு மக்ளுடையிலான மோதல் கலவரமாக வெடித்து 220 க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர். கடந்த வருடம் முதல் நடந்து வரும் இந்த கலவரத்தில் இரண்டு குக்கி சமூகப் பெண்கள் நிர்வாணமாக ஊர்வலம் அழைத்து செல்லப்பட்ட வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கடந்த ஆண்டு மே மாதம் தொடங்கிய வன்முறை 16 மாதங்கள் ஆகியும் இன்னும் கட்டுப்படுத்தமுடியாமல் இருந்து வருகிறது.


    இதுவரை எந்த தீர்வும் காணப்படாமல் இன்றளவும் கலவரங்கள் தொடர்ந்து வருகின்றன. சுமார் 70,000 மக்கள் தங்கள் வீடுகளை விட்டு முகாம்களில் வாழ்ந்து வருகின்றனர். இரு சமூகத்தைச் சேர்ந்த ஆயுதமேந்திய கிளர்ச்சியாளர்கள் மாறி மாறி தாக்குதல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

    அதனால் கடந்த செப்டம்பர் 10ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரை இணைய சேவைக்கு தடை விதிக்கப்பட்டு வந்த நிலையில் தடை தளர்த்தப்பட்டு அங்கு நாளை முதல் பள்ளிகள் திறக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    • வன்முறை தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய கமிஷன் அமைப்பு.
    • ஒரு வருடத்திற்கு மேல் ஆகியும் அறிக்கை தாக்கல் செய்யாத நிலையில், அவகாசம் நீட்டிப்பு

    மணிப்பூர் மாநிலத்தில் இரண்டு சமூகத்தினருக்கு இடையிலான மோதல் கடந்த ஆண்டு மே மாதம் 3-ந்தேதி மிகப்பெரிய வன்முறையாக வெடித்தது. இந்த வன்முறை உருவாவதற்கான காரணம் குறித்து ஆராய்ந்து அறிக்கை தாக்கல் செய்ய கடந்த ஆண்டு ஜூன் 4-ந்தேதி 3 பேர் கொண்ட கமிஷன் அறிவிக்கப்பட்டது.

    இந்த கமிஷன் இதுவரை அறிக்கை தாக்கல் செய்யவில்லை. மேலும் 3 மாதம் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் பொது செயலாளர் (தகவல் தொடர்பு பொறுப்பு) ஜெய்ராம் ரமேஷ் கூறுகையில் "3 பேர் கொண்ட கமிஷனுக்கு அறிக்கை தாக்கல் செய்ய ஆறு மாதம் கால அவகாசம் கொடுக்கப்பட்டது. தற்போது வரை அறிக்கை தாக்கல் செய்யப்படவில்லை. இந்த கமிஷனுக்கு நவம்பர் 24-ந்தேதி வரை கால அவகாசம் மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே மணிப்பூர் மக்களின் வேதனை தொடர்கிறது.

    இந்தியாவின் மற்ற பகுதிகளுக்கும், வெளிநாடுகளுக்கும் செல்ல பிரதமர் மோடி தொடர்ந்து திட்டம் போட்டு வருகின்ற நிலையில், மிகவும் இன்னல்களை சந்தித்து வரும் மாநிலத்தை வேண்டுமென்றே புறக்கணிக்கிறார்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

    மணிப்பூரில் ஏற்பட்ட கலவரம் காரணமாக 220-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். கவுகாத்தி உயர்நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி அஜய் லம்பா தலைமையில் கமிஷன் அமைக்கப்பட்டது. இந்த கமிஷனில் ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி ஹிமான்சு சேகர், ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி அலோகா பிரபாகர் உள்ளனர்.

    • இம்பாலில் அரசைக் கண்டித்து ஆளுநர் மாளிகை மற்றும் தலைமைச் செயலகம் ஆகியவற்றை முற்றுகையிட்டு மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்
    • மாணவர்கள் போராட்டம் வலுவடையாமல் இருக்க வரும் செப்டம்பர் 15 ஆம் தேதிவரை அடுத்த 5 நாட்களுக்கு இணையதளம் முடக்கப்பட்டுள்ளது.

    மணிப்பூரில் பழங்குடி அந்தஸ்து தொடர்பாக மெய்தி மற்றும் குக்கி இனக்குழு மக்களுக்கிடையிலான மோதல் கலவரமாக வெடித்து 220க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர்.16 மாதங்களாகியும் எந்த தீர்வும் எட்டப்படாததால் ஆயுதமேந்திய கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் மீண்டும் தாக்குதலைத் தொடங்கியுள்ளனர்.

    ராக்கெட் டிரோன் உள்ளிட்ட நவீன ஆயுதங்கள் மூலம் அவர்கள் தாக்குதல் நடத்தி வருவதால் அங்கு பல்வேறு பகுதிகளில் பதற்றமான சூழல் நிலவுகிறது. இதற்கிடையே நேற்று தலைநகர் இம்பாலில் அரசைக் கண்டித்து ஆளுநர் மாளிகை மற்றும் தலைமைச் செயலகம் ஆகியவற்றை முற்றுகையிட்டு மாணவர்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மாணவர்களின் போராட்டம் தொடர்ந்து வரும் நிலையில் அவர்கள் மீது கண்ணீர் புகை குண்டுகளை வீசி பலத்தைப் பிரயோகித்து போராட்டத்தை ஒடுக்கும் பணியில் போலீஸ் மற்றும் சிஆர்பிஎப் பாதுகாப்புப்படை தீவிரம் காட்டி வருகிறது.

    இந்நிலையில் போராட்டத்தை ஒடுக்க இம்பால் மேற்கு மற்றும் இம்பால் கிழக்கு மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. மாணவர்கள் போராட்டம் வலுவடையாமல் இருக்க வரும் செப்டம்பர் 15 ஆம் தேதிவரை அடுத்த 5 நாட்களுக்கு இணையதளம் முடக்கப்பட்டுள்ளது. தலைமை காவல் ஆணையரைப் பதவி நீக்கம் செய்யக்கோரி மாணவர்கள் கோஷம் எழுப்பி வருகின்றனர். மருத்துவம், மின்சாரம், குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசிய துறைகளுக்கு மட்டும் ஊரடங்கிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. 

    • கடந்த 16 மாதங்களில் மோடி மணிப்பூருக்கு 1 நொடி கூட செலவிடவில்லை.
    • மணிப்பூரைத் தவிர மற்ற மாநிலங்களின் தேர்தல் பேரணிகளில் கலந்துகொண்டு அரசியல் செய்வதில் மோடி மும்முரமாக இருக்கிறார்.

     மணிப்பூருக்காக 1 நொடி கூட மோடி செலவிடவில்லை.. மன்னிக்கவே முடியாத தோல்வி - கார்கே காட்டம்

    மணிப்பூரில் பழங்குடி அந்தஸ்து தொடர்பாக மெய்தி மற்றும் குக்கி இனக்குழு மகக்ளுடையிலான மோதல் கலவரமாக வெடித்து 220 க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர். கடந்த ஆண்டு மே மாதம் தொடங்கிய வன்முறை 16 மாதங்கள் ஆகியும் இன்னும் கட்டுப்படுத்தமுடியாமல் இருந்து வருகிறது.

    இதுவரை எந்த தீர்வும் காணப்படாமல் இன்றளவும் கலவரங்கள் தொடர்ந்து வருகின்றன. சுமார் 70,000 மக்கள் தங்கள் வீடுகளை விட்டு முகாம்களில் வாழ்ந்து வருகின்றனர். இரு சமூகத்தைச் சேர்ந்த ஆயுதமேந்திய கிளர்ச்சியாளர்கள் மாறி மாறி தாக்குதல்களில் ஈடுபட்டு வருகின்றனர். தலைநகர் இம்பாலில் ஆளுநர் மாளிகையி முற்றுகை இட்டு மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். மீண்டும் மணிப்பூரில் பதற்றமான சூழல் உருவாகியுள்ள நிலையில் பிரதமர் மோடியை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கடுமையாக விமர்சித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,

    கடந்த 16 மாதங்களில் மோடி மணிப்பூருக்கு 1 நொடி கூட செலவிடவில்லை. இன்னும் வன்முறை கட்டுப்படாத முடியாத அளவுக்கு உள்ளது. இவை அனைத்தும் மணிப்பூர் விஷயத்தில் மோடியின் படுதோல்வியையே காட்டுகிறது. மோடியின் மோசமான தோல்வி என்பது மன்னிக்கவே முடியாதது.

     

    மணிப்பூர் முதல்வர் உடனடியாக பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும். மணிப்பூரில் பாதுகாப்புச் சூழலுக்கு மத்திய அரசு முழு பொறுப்பேற்ப வேண்டும். மணிப்பூர் வன்முறையை விசாரிக்கும் சிபிஐ, என்ஐஏ மற்றும் பிற அமைப்புகளை மோடி அரசு தவறாகப் பயன்படுத்தக்கூடாது.

    உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் மணிப்பூரில் பாதுகாப்பை உறுதிப்படுத்தத் தவறியுள்ளார். மணிப்பூரைத் தவிர மற்ற மாநிலங்களின் தேர்தல் பேரணிகளில் கலந்துகொண்டு அரசியல் செய்வதில் மோடி மும்முரமாக இருக்கிறார். எங்கள் மாநிலத்தில் நிலவும் வன்முறையை நிறுத்த பிரதமர் மோடி ஏன் விரும்பவில்லை? என்பதே மணிப்பூர் மக்களின் கேள்வியாக உள்ளது என்று தெரிவித்துள்ளார். 

    • ஆளுநர் மாளிகை முன் நூற்றுக்கணக்கான மாணவர்கள் குவிந்துள்ளதால் தலைநகரில் பதற்றமான சூழல் நிலவுகிறது.
    • கான்வாய் வானத்தின் மீது கற்களை வீசி சிஆர்பிஎப் வீரர்களை மாணவர்கள் விரட்டிய வீடியோ வெளியாகி உள்ளது

    மணிப்பூரில் பழங்குடி அந்தஸ்து தொடர்பாக மெய்தி மற்றும் குக்கி இனக்குழு மக்ளுடையிலான மோதல் கலவரமாக வெடித்து 220 க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர். கடந்த வருடம் முதல் நடந்து வரும் இந்த கலவரத்தில் இரண்டு குக்கி சமூகப் பெண்கள் நிர்வாணமாக ஊர்வலம் அழைத்து செல்லப்பட்ட வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கடந்த ஆண்டு மே மாதம் தொடங்கிய வன்முறை 16 மாதங்கள் ஆகியும் இன்னும் கட்டுப்படுத்தமுடியாமல் இருந்து வருகிறது.

    இதுவரை எந்த தீர்வும் காணப்படாமல் இன்றளவும் கலவரங்கள் தொடர்ந்து வருகின்றன. சுமார் 70,000 மக்கள் தங்கள் வீடுகளை விட்டு முகாம்களில் வாழ்ந்து வருகின்றனர். இரு சமூகத்தைச் சேர்ந்த ஆயுதமேந்திய கிளர்ச்சியாளர்கள் மாறி மாறி தாக்குதல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இந்த தாக்குதல்களைக் கட்டுப்படுத்தக் கோரி தலைநகர் இம்பாலில் ஆளுநர் மாளிகையை முற்றுகையிட அனைத்து மாணவர் அமைப்பை சேர்ந்த பள்ளிகள் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களமாணவர்கள் பேரணி மேற்கொண்டனர்.

    அப்போது சிஆர்பிஎப் வீரர்களின் கான்வாய் வாகனத்தின் மீது மாணவர்கள் தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. கான்வாய் வானத்தின் மீது கற்களை வீசி சிஆர்பிஎப் வீரர்களை மாணவர்கள் விரட்டிய வீடியோ வெளியாகி உள்ள நிலையில் ஆளுநர் மாளிகை முன் நூற்றுக்கணக்கான மாணவர்கள் குவிந்துள்ளதால் தலைநகரில் பதற்றமான சூழல் நிலவுகிறது. மணிப்பூர் முதல்வர் பதவி விலக வேண்டும்  உள்ளிட்ட கோஷத்தை  அவர்கள் எழுப்பி வருகின்றனர்.முன்னதாக வங்கதேசத்தில் ஆட்சியிலிருந்த ஷேக் ஹசீனா அரசை கண்டித்து அந்நாட்டின் மாணவர்கள் நடத்திய போராட்டம் உலக அளவில் அதிர்வலையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

    • குக்கி கிளர்க்காரர்கள் துப்பாக்கி, ராக்கெட், டிரோன் என அதிநவீன தொழில்நுட்ப கருவிகளின்மூலம் தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர்
    • நேற்று மதியம் முன்னாள் முதல்வர் மைரெம்பாம் கொய்ரெங் வீட்டு வளாகத்தில் ராக்கெட் குண்டு விழுந்து வெடித்ததில் முதியவர் ஒருவர் உயிரிழந்தார்

    மணிப்பூரில் பழங்குடி அந்தஸ்து தொடர்பாக மெய்தி மற்றும் குக்கி இனக்குழு மகக்ளுடையிலான மோதல் கலவரமாக வெடித்து 220 க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர். கடந்த வருடம் முதல் நடந்து வரும் இந்த கலவரத்தில் இரண்டு குக்கி சமூகப் பெண்கள் நிர்வாணமாக ஊர்வலம் அழைத்து செல்லப்பட்ட வீடியோ வெளியான பின் நாட்டு மக்களின் கவனமும் அரசியல்வாதிகளின் கவனமும் மணிப்பூரை நோக்கி திரும்பியது.

    இதுவரை எந்த தீர்வும் காணப்படாமல் இன்றளவும் கலவரங்கள் தொடர்ந்து வருகின்றன. சுமார் 70,000 மக்கள் தங்கள் வீடுகளை விட்டு முகாம்களில் வாழ்ந்து வருகின்றனர். ஆயுதமேந்திய குக்கி கிளர்க்காரர்கள் துப்பாக்கி, ராக்கெட், டிரோன் என அதிநவீன தொழில்நுட்ப கருவிகளின்மூலம் தாக்குதலில் ஈடுபட்டுள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதளவில் பாதிக்கப்பட்டுள்ளது.

    மேற்கு இம்பாலில் கடந்த செப்டம்பர் 1 ஆம் தேதி டிரோன் மூலம் மெய்தி இன மக்கள் வசிக்கும் 2 கிராமங்களில் கிளர்ச்சியாளர்கள் நடத்திய தாக்குதலில் இருவர் உயிரிழந்தனர். மேலும் 11 பேர் படுகாயமடைந்தனர். நேற்றைய தினம் பிஷ்ணுபூர் மாவட்டத்தில் பல இடங்களில் தாக்குதல்கள் நடந்துள்ளன. மெய்தி இனமக்கள் அதிகமாக வசிக்கும் பகுதிகளில் தாக்குதல்கள் அரங்கேறின. பிஷ்ணுபூர் மாவட்டத்தின் மொய்ரெங் பகுதியில் நேற்று மதியம் முன்னாள் முதல்வர் மைரெம்பாம் கொய்ரெங் வீட்டு வளாகத்தில் ராக்கெட் குண்டு விழுந்து வெடித்ததில் முதியவர் ஒருவர் உயிரிழந்தார். மேலும் 13 வயது சிறுமி உள்பட 5 பேர் இந்த தாக்குதலில் படுகாயம் அடைந்தனர்.

    இந்நிலையில் இன்று [சனிக்கிழமை] ஜிரிபாம் மாவட்டத்தில் நடந்த தாக்குதல்களில் பொதுமக்களில் ஒருவர் உள்பட 5 பேர் உயிரிழந்தனர். மாவட்டத் தலைநகரில் இருந்து 5 கி.மீ தூரத்தில் உள்ள வீடு ஒன்றுக்குள் புகுந்து ஆயுதம் தாங்கிய கிளர்ச்சியாளர்கள் தூங்கிக் கொண்டிருந்தவரைச் சுட்டுக்கொன்றனர்.

    தொடர்ந்து மாவட்டத் தலைநகரில் இருந்து 7 கி.மீ., தொலைவில் உள்ள இடத்தில் இரண்டு சமூகங்களைச் சேர்ந்த ஆயுதம் தாங்கிய குழுக்களுக்கு இடையில் பயங்கர துப்பாக்கிச் சூடு நடந்தது. இதில் மூன்று பழங்குடியின போராட்டக்காரர்கள் உட்பட நான்கு பேர் உயிரிழந்தனர் மணிப்பூரில் மீண்டும். மணிப்பூரில் மீண்டும் பதற்றம் அதிகரிக்கத்தொடங்கியுள்ள நிலையில் அம்மாநில பாஜக முதல்வர் பைரேன் சிங் அவசர அமைச்சரவை கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார். 

    • இன்று காலை முதலே பிஷ்ணுபுர் மாவட்டத்தில் கிளர்ச்சிக்காரர்கள் ராக்கெட் தாக்குதல் நடத்தி வருகின்றனர்
    • இந்த இடம் நேதாஜியின் இந்திய தேசிய ராணுவத்தில் தலைமையகம் அமைத்திருந்த இடத்துக்கு 2 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.

    மணிப்பூர் முன்னாள் முதல்வரும் மறைந்த காங்கிரஸ் மூத்த தலைவருமான மைரேம்பாம் கொய்ரெங்[Mairembam Koireng] வீட்டின் மீது நடந்த வெடிகுண்டு தாக்குதலில் முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் 13 வயது சிறுமி உட்பட 5 பேர் படுகாயமடைந்துள்ளனர். இன்று காலை முதலே பிஷ்ணுபுர் மாவட்டத்தில் கிளர்ச்சிக்காரர்கள் ராக்கெட் தாக்குதல் நடத்தி வரும் நிலையில் மொய்ரங் [Moirang] மதியம் முன்னாள் முதல்வர் வீட்டு காம்பவுண்டுக்குள் ராக்கெட் பாய்ந்துள்ளது.

    இந்த இடம் இந்திய தேசிய ராணுவத்தில் தலைமையகம் அமைத்திருந்த இடத்துக்கு 2 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இம்பாலில் இருந்து 45 கிமீ தொலைவில் அமைந்துள்ள மலைப்பகுதிகளிலிருந்து இந்த ராக்கெட்டுளை கிளர்ச்சிக்காரர்கள் ஏவி வருகின்றனர். மேலும் துப்பாக்கிகளாலும் தாக்குதல் நடத்தி வருவதால் அங்கு பற்றமான சூழல் நிலவுகிறது.

    பாதுகாப்பு படையினர் பதில் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதற்கிடையில் முன்னாள் முதல்வர் வீட்டில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மைரேம்பாம் கொய்ரெங் 1963 மற்றும் 1969 ஆகிய காலகட்டத்திற்கு இடையில் 3 முறை முதல்வராக இருந்தது குறிப்பிடத்தக்கது.

    • குற்றவாளிகள் பயப்படும் வகையில் தண்டனைகள் குறித்தும் பரவலாக விவாதிக்கப்பட வேண்டும் என காலம் கோருகிறது
    • குர்மீத் ராம் ரஹீம் சிங் [பிறந்தநாள் கொண்டாடவும்], ஆஷ்ரம் பாபு [Asaram Bapu] ஆயுர்வேத சிகிச்சை பெறவும் தற்போது பரோலில் வெளி வந்துள்ளதுள்ளனர்

    நாட்டின் 78-வது சுதந்திர தினத்தையொட்டி டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி மிக நீண்ட உரையினை நேற்றைய தினம் நிகழ்த்தினார். அவரது உரையில், எங்கள் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளுக்கு எதிரான அட்டூழியங்கள் குறித்து பொதுமக்கள் ஆத்திரம் அடைந்துள்ளனர். பெண்களுக்கு எதிரான குற்றங்கள் விரைவில் விசாரிக்கப்பட வேண்டும். இதுபோன்ற செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு விரைவில் கடும் தண்டனை வழங்கப்பட வேண்டும். சமூகத்தில் நம்பிக்கையை உருவாக்க இது அவசியம்.

    பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் நடக்கும்போது ஊடகங்களில் அதிகம் பேசுகிறது. ஆனால், இப்படிப்பட்ட வக்கிரமானவர்களுக்கு தண்டனை கிடைத்தால் அது செய்திகளில் பெரிதாகக் காணப்படுவதில்லை. குற்றவாளிகள் பயப்படும் வகையில் தண்டனைகள் குறித்தும் பரவலாக விவாதிக்கப்பட வேண்டும் என காலம் கோருகிறது. இந்த பயத்தை உருவாக்குவது முக்கியம் என தெரிவித்திருந்தார்.

    இந்நிலையில் இதை விமர்சிக்கும் வகையில் நடிகரும் அரசியல்வாதியுமான பிரகாஷ் ராஜ் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவு கவனம் பெற்று வருகிறது. மோடியின் உரையைப் பகிர்ந்து அவர், மணிப்பூர் முதல் கன்னியாகுமரி வரை விடுதலையாகி வெளியே உள்ள பாலியல் குற்றவாளிகள் [RAPISTS] தற்போது சிரித்துக் கொண்டுள்ளனர் [Laughing in the corner]. எப்போது நீங்கள் சொல்வதுபோல் நடந்து கொல்லப்போகிறீர்கள்#justasking என்று பதிவிட்டுள்ளார்.

    முன்னதாக, பாலியல் குற்ற வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் மதத் தலைவர்களான குர்மீத் ராம் ரஹீம் சிங் [பிறந்தநாள் கொண்டாடவும்], ஆஷ்ரம் பாபு [Asaram Bapu] ஆயுர்வேத சிகிச்சை [பெறவும்] தற்போது பரோலில் வெளி வந்துள்ளதுள்ளது குறிப்பிடத்தக்கது. 

    • மணிப்பூரில் உண்மையான சுதந்திரம் மழுப்பலாக உள்ள அவலநிலையை பற்றி சிந்திக்கவேண்டும்.
    • மணிப்பூருக்கு வந்து இங்கு என்ன நடக்கிறது என்பதைப் புரிந்து கொள்ள முயற்சிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

    வன்முறையால் பாதிக்கப்பட்ட மணிப்பூருக்குச் சென்று அங்குள்ள மோதலுக்கு அமைதியான முறையில் தீர்வு காண மத்திய, மாநில அரசுகள் செயல்பட வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மீண்டும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    மேலும், ராகுல் காந்தி, "நான் இன்று டெல்லியில் வசிக்கும் மணிப்பூரைச் சேர்ந்த மக்களை சந்தித்தேன். தங்கள் மாநிலத்தில் ஏற்பட்ட மோதல்கள், போராட்டங்களை என்னிடம் பகிர்ந்து கொண்டனர்.

    நாம் சுதந்திர தினத்தை கொண்டாடும்போது மணிப்பூரில் உண்மையான சுதந்திரம் மழுப்பலாக உள்ள அவலநிலையை பற்றி சிந்திக்கவேண்டும்" எனவும் அவர் பேசியுள்ளார்.

    இதுகுறித்து ராகுல் காந்தி தனது எக்ஸ் பக்கத்தில் கூறுகையில், " அன்பானவர்களிடமிருந்து பிரிந்திருப்பதன் வலி மற்றும் மோதல்கள் தங்கள் சமூகங்களில் உடல் மற்றும் மனரீதியாக பாதிக்கப்பட்டது" என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

    மேலும், "மணிப்பூரில் உள்ள எங்கள் சகோதர சகோதரிகள் சகித்துக்கொண்டிருக்கும் கடுமையான உண்மை இதுதான்- நிலையான அச்சத்தின் நிலை.

    நாம் சுதந்திர தினத்தை கொண்டாடும் போது, உண்மையான சுதந்திரம் மழுப்பலாக இருக்கும் மணிப்பூரின் அவல நிலையைப் பற்றி சிந்திப்போம். மணிப்பூருக்குச் சென்று, விரைவில் அமைதியான முறையில் தீர்வு காண மத்திய மற்றும் மாநில அரசுகள் செயல்படுமாறு பிரதமரை மீண்டும் ஒருமுறை கேட்டுக்கொள்கிறேன்.

    பிரதமர் நீண்ட காலத்திற்கு முன்பே அந்த மாநிலத்திற்குச் சென்றிருக்க வேண்டும். அவர் மணிப்பூருக்குச் செல்வது முக்கியம். மணிப்பூருக்கு வந்து இங்கு என்ன நடக்கிறது என்பதைப் புரிந்து கொள்ள முயற்சிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

    மணிப்பூர் மக்கள், அனேகமாக முழு நாட்டு மக்களும், பிரதமர் மாநிலத்திற்குச் சென்று பாதிக்கப்பட்டவர்களின் துயரங்களைக் கேட்க வேண்டும் என்று விரும்புகிறார்கள்.

    அது மக்களுக்கு ஆறுதல் அளிக்கும். நிலைமையை மேம்படுத்தும். எதையும் ஆதரிக்க காங்கிரஸ் தயாராக உள்ளது" என்று கூறியுள்ளார்.

    • பெண்களை நிர்வாணமாக ஊர்வலம் நடத்திச் சென்றது, கொலை மற்றும் பாலியல் பலாத்கார சம்பவங்கள் ஆகியவை அரங்கேறின.
    • கலவரத்துக்குப் பின் முதல் முறையாக மோடி முன் பைரன் சிங் இப்போதுதான் தோன்றியுள்ளார்.

    மத்திய அரசு தலைமையிலான நிதி ஆயோக் கூட்டம் நேற்று டெல்லியில் நடந்த நிலையில் பட்ஜெட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சிகள் ஆளும் மாநில முதல்வர்கள் கூட்டத்தைப் புறக்கணித்தனர். கூட்டத்தில் கலந்துகொண்ட மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியும் தன்னை பேச விடவில்லை எனக் கூறி கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்தார்.

    இந்நிலையில் நிதி ஆயோக் கூட்டத்தில் பாஜக ஆளும் மணிப்பூர் முதல்வர் பைரன் சிங் மோடியை தனியாகச் சந்தித்து மாநிலத்தில் நடக்கும் கலவரங்கள் குறித்துப் பேசாதது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஆண்டு மே மாதம் முதல் மணிப்பூரில் மெய்த்தேய் குக்கி இனக்குழுக்களுக்கிடையில் பழங்குடியின அந்தஸ்து தொடர்பாக கலவரம் வெடித்தது.

    கிராமங்கள் தீவைத்து எரிக்கப்பட்டது, பெண்களை நிர்வாணமாக ஊர்வலம் நடத்திச் சென்றது, கொலை மற்றும் பாலியல் பலாத்கார சம்பவங்கள் ஆகியவை அரங்கேறின. இந்த கலவரத்தில் சுமார் 221 பேர் உயிரிழந்துள்ளனர் 60,000 பேர் தங்களின் வீடுகளை இழந்து ஒரு வருடத்துக்கும் மேலாக இன்னும் முகாம்களிலேயே தங்கியுள்ளனர்.

    ஒரு வருடம் ஆகியும் மணிப்பூரில் கலவரம் ஓய்ந்தபாடில்லை. அங்கொன்றும் இங்கொன்றுமாக இன்னும் அங்கு வன்முறைச் சம்பவங்கள் நடந்து வருகிறது. இந்த கலவரங்கள் குறித்து மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு மவுனம் காத்து வந்ததது கடும் விமர்சனங்களுக்கு உள்ளானது. குறிப்பாக மோடியின் மணிப்பூர் மவுனம் பலருக்கும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

    ஒரு வருடத்துக்கு மேல் ஆகியும் மோடி இன்னும் மணிப்பூர் சென்று பாதிக்கப்பட்டவர்களை பார்க்காதது விமர்சிக்கப்பட்டுவரும் நிலையில் கலவரத்துக்குப் பின் முதல் முறையாக மோடி முன் பைரன் சிங் இப்போதுதான் தோன்றியுள்ளார்.

    அதுவும் நிதி நேற்று நடந்த நிதி ஆயோக் கூட்டத்திலும்,, பாஜக முதல்வர்கள் கூட்டத்திலுமே பைரன் சிங் பங்கேற்றுள்ளார். மோடியைத் தனிப்பட்ட முறையில் சந்தித்துப் பேசவில்லை. இதனை விமர்சித்துள்ள காங்கிரஸ், நமது பயலாஜிக்கலாக பிறக்காத பிரதமர் பங்கேற்ற நிதி ஆயோக்கிலும், அதே கடவுளின் முன் நடந்த பாஜக முதல்வர்கள் கூட்டத்திலும் பைரன் சிங் பங்கேற்றார்.

    எங்களது கேள்வியெல்லாம், மே 3 2023 இரவு முதல் எரிந்துகொண்டிருக்கும் மணிப்பூர் குறித்து மோடியை தனியாகச் சந்தித்துப் பேசி, அங்கு வந்து பார்வையிடுமாறு ஏன் பைரன் சிங் அழைக்கவில்லை. சமீபத்தில் ரஷியா செல்வதற்கு முன்னால்தான் வரவில்லை. தற்போது உக்ரைன் செல்வதற்கு முன்னாலாவது மணிப்பூரை வந்து பாருங்கள் என்று ஏன் அழைக்கவில்லை என்று கேள்வியெழுப்பியுள்ளது. 

     

    • 10 குகி எம்.எல்.ஏ.-க்கள் கடந்த இரண்டு கூட்டத்தொடரில் கலந்து கொள்ளவில்லை.
    • கடந்த ஆண்டு ஆகஸ்ட் 29-ந்தேதி நடைபெற்ற கூட்டம் 11-வது நிமிடத்திலேயே ஒத்திவைக்கப்பட்டது.

    ஜூலை 31-ந்தேதி முதல் ஆகஸ்ட் 6-ந்தேதி வரை மணிப்பூர் சட்டமன்ற கூட்டத்தொடர் நடைபெற இருக்கிறது. இந்த கூட்டத்தில் 10 குகி-சோ (Kuki-Zo) எம்.எல்.ஏ.க்களை பங்கேற்கும்படி தனிப்பட்ட முறையில் அழைப்பு விடுப்பேன் என மணிப்பூர் முதல்வர் பிரேண் சிங் தெரிவித்துள்ளார். மேலும், அவர்கள் எங்களுடன் ஒத்துழைக்க வேண்டும். நாங்கள் ஒத்துழைப்புக்கு தயாராக இருக்கிறோம் என்றார்.

    இரண்டு மந்திரிகள் உள்பட 10 குகி எம்.எல்.ஏ.-க்கள் கடந்த இரண்டு கூட்டத்தொடரில் கலந்து கொள்ளவில்லை. மணிப்பூரில் மாநிலத்தில் இரண்டு சமூகத்தினருக்கு இடையில் நடைபெற்ற வன்முறை காரணமாக கலந்து கொள்ளவில்லை.

    கடந்த ஆண்டு ஆகஸ்ட் 29-ந்தேதி நடைபெற்ற கூட்டத்தொடர், கூட்டம் தொடங்கிய 11-வது நிமிடத்திலேயே ஒத்திவைக்கப்பட்டது. இதில் குகி-சோ எம்எல்ஏக்கள் கலந்து கொள்ளவில்லை. அதன்பின் 5-வது கூட்டத்தொடர் பிப்ரவரி 28-ந்தேதி முதல் மார்ச் 5-ந்தேதி வரை நடைபெற்றது.

    நிதி ஆயோக் ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக டெல்லி செல்ல இருக்கிறேன். அதனைத் தொடர்ந்து நடைபெறும் முதல்வர்கள் கூட்டத்தில் பல்வேறு விசயங்கள் குறித்து ஆலோசனை நடத்த இருக்கிறோம். மாநிலத்தில் தற்போது நிலவும் சூழ்நிலையை எடுத்துரைத்து, தற்போது நிலவும் நெருக்கடிக்கு உடனடி தீர்வு காண்பேன். நேர்மறையான முடிவுகள் ஏற்படும் என்று நான் நம்பிக்கையுடன் இருக்கிறேன்" என்றார்.

    ஜிரிபாம் மாவட்டத்தில் புதன்கிழமை நடைபெற்ற தீவைப்பு சம்பவம் குறித்து கூறுகையில் "நான் விசாரணை நடத்தினேன். இரண்டு சமூகத்தினரின் தலைவர்களுடன் பேசினேன். இரண்டு சமூதாயத்தை சேர்ந்தவர்கள் ஈடுபட்டதற்கான ஆதாரம் இல்லை. குற்றவாளிகளை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இது வன்முறையை நிலைநிறுத்த முயல்பவர்களின் வேலையாகத் தெரிகிறது" என்றார்.

    கடந்த புதன்கிழமை ஆளில்லா வீடு தீவைத்து எரிக்கப்பட்டது. இந்த மாவட்டத்தில் வன்முறை வெடித்தபோது வீட்டின் உரிமையாளர் வீட்டில் இருந்து வெளியேறிவிட்டார். இதனால் வீடு ஆளில்லாமல் இருந்தது என போலீசார் தெரிவித்தனர்.

    • அமெரிக்க அரசு இத்தகைய எச்சரிக்கையை விடுத்துள்ளது.
    • மணிப்பூரில் வன்முறை அதிகரித்து காணப்படுகிறது.

    அமெரிக்க அரசு அந்நாட்டு மக்களிடம் இந்தியா பயணம் செய்பவர்கள் மணிப்பூர், ஜம்மு மற்றும் காஷ்மீர் போன்ற பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று வலியுறுத்தி இருக்கிறது. இந்தியா பாகிஸ்தான் எல்லை பகுதியான ஜம்மு மற்றும் காஷ்மீரில் நக்சலைட்டுகள் புழக்கம் அதிகளவில் இருப்பதால் அமெரிக்க அரசு இத்தகைய எச்சரிக்கையை விடுத்துள்ளது.

    "குற்றம் மற்றும் தீவிரவாதம் அதிகரித்து காணப்படுவதால் இந்தியா செல்வோர் அதிக கவனமுடன் செயல்பட வேண்டும். சில பகுதிகளில் அதிகளவு அபாயம் கொண்டுள்ளது."

    "இந்தியா-பாகிஸ்தான் எல்லை பகுதியான இந்தியாவின் யூனியன் பிரதேசமான ஜம்மு மற்றும் காஷ்மீருக்கு பயணம் செய்யாதீர்கள். அங்கு தீவிரவாதம் மற்றும் பொது அமைதி கேள்விக்குறியாகி இருக்கிறது. மத்திய மற்றும் கிழக்கு இந்திய பகுதியான மணிப்பூரிலும் வன்முறை மற்றும் குற்ற சம்பவங்கள் அதிகரித்து காணப்படுகிறது."

    "இந்தியாவில் அதிகரித்து வரும் குற்ற சம்பவங்களில் கற்பழிப்பு முதன்மையாக உருவெடுத்து வருகிறது. வன்முறை சம்பவங்கள், பாலியல் அத்துமீறல்கள் சுற்றுலா தலங்கள் உள்பட பல்வேறு பகுதிகளில் அதிகரித்து வருகிறது."

    "சுற்றுலா தலங்கள், போக்குவரத்து முனையங்கள், சந்தை, அரசு சேவை வழங்கும் பகுதிகளை குறிவைத்து சுற்றுலாவாசிகள் மீது கயவர்கள் இத்தகைய செயல்களில் ஈடுபடுகின்றனர்," என அமெரிக்க அரசு தெரிவித்துள்ளது.

    ×