என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மணிப்பூர்"

    • இரு சமூகத்தினருக்கு இடையிலான மோதல் வன்முறையாக வெடித்தது.
    • வன்முறையில் 260-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

    மணிப்பூரில் சரியான நேரத்தில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது. இயல்பு நிலைக்கு மணிப்பூர் திரும்பி வருகிறது என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

    மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இது தொடர்பாக கூறியதாவது:-

    மணிப்பூரில் தற்போதைய நிலை அமைதியாக உள்ளது. இயல்பு நிலை திரும்பி வருகிறது. உள்துறை அமைச்சகம் இரண்டு சமூகத்தினரிடமும் தனித்தனியாக பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது. இரண்டு சமூகத்தினரும் அவர்களுக்குள் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். படிப்படியாக நிலைமை நேர்மறையான இலக்கை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. தற்போது கவலைப்படுவதற்கான எந்த காரணமும் இல்லை.

    இரண்டு சமூகத்தினரும் ஏற்றுக்கொள்ளவில்லை என்றால், ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தியது வெற்றி பெற்றிருக்காது. மணிப்பூரில் சரியான நேரம் வந்தபோது, நாங்கள் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்தினோம்.

    கடந்த 2023-ஆம் ஆண்டு மே மாதத்தில் இருந்து குகி-மெய்தி சமூகத்தினரிடையே ஏற்பட்டது. இதில் 260-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்து முகாமில் வசித்து வருகின்றனர்.

    மெய்தி சமூகத்தினர் தங்களை பழங்குடியினர் பிரிவில் சேர்க்க வேண்டும் என வலியுறுத்தினர். இதனை எதிர்த்து குகி சமூகத்தினர் பழங்குடியினர் ஒற்றுமை பேரணியை நடத்தினர். இந்த பேரணியின்போது மோதல் ஏற்பட்டது. இந்த மோதல் பின்னர் வன்முறையாக வெடித்தது.

    • மசூதியில் மக்கள் தொழுகையில் ஈடுபட்டிருந்தபோது இடிந்து விழுந்ததில் இறப்புகள் பதிவாகியுள்ளன.
    • சீனாவின் யுன்னான் மாகாணத்திலும் வலுவான நிலஅதிர்வு ஏற்பட்டது.

    மியான்மரில் இன்று நண்பகலில் அடுத்தடுத்து சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. தரையில் இருந்து 10 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.7 மற்றும் 6.4 ஆக பதிவாகியுள்ளன.

    இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கம் காரணமாக கட்டிடங்கள் பயங்கரமாக குலுங்கின. இதனால் மக்கள் வீடுகளில் இருந்து அலறியடித்தபடி வெளியே ஓடி வந்தனர்.

    சாகைங் நகரிலிருந்து வடமேற்கே 16 கிமீ தொலைவில் 10 கிமீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கம் காரணமாக மியான்மரில் இதுவரை 20 பேர் உயிரிழந்துள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

    மண்டலே நகரில் உள்ள ஒரு மசூதியில் மக்கள் தொழுகையில் ஈடுபட்டிருந்தபோது இடிந்து விழுந்ததில் இறப்புகள் பதிவாகியுள்ளன. மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. பலர் உள்ளே சிக்கியுள்ளதால் இறந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.

    இந்த மியான்மரில் ஏற்பட்ட நிலநடுக்கமானது தாய்லாந்து தலைநகர் பாங்காக்கிலும் கடுமையாக உணரப்பட்டது. தாய்லாந்தில் உயரமான பல கட்டிடங்களில் இருந்து மக்கள் அச்சத்தில் வெளியே ஓடி வரும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.

    மேலும் இந்த நிலநடுக்கம் இந்தியாவின் மேற்கு வங்க வங்க தலைநகர் கொல்கத்தா, மணிப்பூர் தலைநகர் இம்பால் உள்ளிட்ட பிற பகுதிகளிலும் நிலஅதிர்வு உணரப்பட்டது. வங்கதேசத்தின் டாக்கா மற்றும் சட்டோகிராமிலும் நில அதிர்வு பதிவாகியுள்ளது.

    சீனாவின் யுன்னான் மாகாணத்திலும் வலுவான நிலஅதிர்வு ஏற்பட்டதாக சீன நிலநடுக்க கண்காணிப்பு மையம் தெரிவித்துள்ளது. 

     

    • 11 நாட்களுக்கு முன்னதாக முகேஷ் என்ற வாலிபர் காணாமல் போனார்.
    • போலீசார் தீவிரமாக தேடிவரும் நிலையில், அவர் இருக்கும் இடத்தை கண்டுபிடிக்க முடியவில்லை.

    மணிப்பூரில் குகி- மெய்தி ஆகிய இரண்டு சமூகத்தினருக்கு இடையிலான மோதல் வன்முறையாக வெடித்தது. மாநில அரசு வன்முறையை கட்டுக்குள் கொண்டு வர எடுத்த அனைத்து முயற்சிகளும் தோல்வியடைந்தன. ஒரு சமூகத்தினருக்கு ஆதரவாக பாஜக முதல்வர் செயல்படுவதாக மற்றொரு சமூகத்தினர் குற்றம்சாட்டினர். இது தொடர்பாக முதல்வர் பைரன் சிங் பேசிய வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் முதல்வர் பதவியில் இருந்து விலகினார். ஆகவே மணிப்பூரில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளது.

    மத்திய உள்துறை அமைச்சகம் அனைத்து இடங்களிலும் அமைதி நிலவ நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது. முதற்கட்டமாக பொது போக்குவரத்து தொடங்கப்பட்டுள்ளது.

    இதற்கிடையே கடந்த 11 நாட்களுக்கு முன்னதாக 20 வயது இளைஞர் லுவாங்தெம் முகேஷ் திடீரென காணாமல் போனார். இவர் கண்டுபிடித்து தரக்கோரி அவரது தாயார் வேண்டுகோள் விடுத்துள்ளார். போலீசார் அவரை தொடர்ந்து தேடிவருகிறது.

    இந்த நிலையில் தேடுதல் முயற்சியை விரைவுப்படுத்த வேண்டும் என சபம் நிஷிகாந்த் என்ற எம்.எல்.ஏ., மணிப்பூர் கவர்னர் அஜய் குமார் பல்லாவை சந்தித்து கோரிக்கை வைத்துள்ளது.

    இது தொடர்பாக எம்.எல்.ஏ. சபம் நிஷிகாந்த் கூறுகையில் "நான் ஆளுநரை சந்தித்து முகேஷ் விசயமாக ஆலோசனை நடத்தினேன். ஆளுனர் இந்த விசயம் தொடர்பாக அனைத்தையும் தெரிந்து வைத்துள்ளார். தற்போதைய அப்டேட் உடன் உள்ளார்" எனத் தெரிவித்துள்ளார். கெய்சம்தோங் என்ற தொகுதியில் இருந்து சுயேட்சை வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டவர் சபம நிஷிகாந்த் என்பவர் குறிப்பிடத்தக்கது.

    முகேஷ் கடைசியாக பிஷ்னுபூர் மாவட்த்தில் உள்ள சினிகோன் பகுதியில் தென்பட்டுள்ளார். கடைசியாக அவர் செல்போன் குகி பிரிவனர் அதிக வசிக்கும் நோனி மாவட்டம் ஜோயுஜாங்டெக் பகுதியில் லொகேசன் காட்டியுள்ளது. ஆனாலர் சரியான இடத்தை போலீசாரால் இன்னும் கண்டறிய முடியவில்லை.

    "எந்தப் பெற்றோரும் தங்கள் குழந்தைகளை இழக்கும் வேதனையைத் தாங்கக்கூடாது. என் மகனின் உயிருக்காக நான் கெஞ்சுகிறேன்" என முகேஷின் தாயார் மகனை கண்டுபிடித்து தரக்கோரி வேதனையுடன் கோரிக்கை வைத்துள்ளார்.

    • ஹமர் மற்றும் ஜோமி பழங்குடியினரிடையே மோதல் ஏற்பட்டது.
    • கடைகள் மற்றும் சொத்துக்களை சூறையாடிய கலவரக்காரர்களை அடக்க போலீசார் போராடினர்.

    மணிப்பூரில் சூரசந்த்பூர் மாவட்டத்தில், ஹமர் பழங்குடியினத் தலைவர் ஒருவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை அடையாளம் தெரியாத நபர்களால் தாக்கப்பட்ட்டார்.

    இதனால் ஹமர் மற்றும் ஜோமி பழங்குடியினரிடையே மோதல் ஏற்பட்டது. எனவே சூரசந்த்பூரில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதற்கு தீர்வு காணும் விதமாக இரு சமூக தலைவர்களும் கடந்த திங்கள்கிழமை அமைதி உடன்படிக்கை ஒன்றை எட்டினர். ஆனால் நேற்று இரவே மீண்டும் இரு சமூகத்தினரிடையேயும் மோதல் வெடித்தது.

    அப்பகுதியில் ஜோமி பழங்குடியினர் தங்கள் சமூகத்தின் கொடியை ஏற்ற ஹமர் பழங்குடியினர் எதிர்ப்பு தெரிவித்தபோது இருதரப்புக்கும் வன்முறையில் இறங்கியது. கல்வீச்சு சம்பவங்கள் மற்றும் தாக்குதல்கள் நிகழ்ந்தன. இதில் லால்ரோபுயி பாகுமாட்டே என்ற 53 வயது நபர் உயிரிழந்தார்.

    மேலும் பலர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வருகின்றனர். கலவரத்தை அடக்க போலீசார் கண்ணீர் புகைகுண்டுகளை வீசினர். கடைகள் மற்றும் சொத்துக்களை சூறையாடிய கலவரக்காரர்களை அடக்க போலீசார் போராடினர். சூரசந்த்பூர் மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது.

    இதற்கிடையே குக்கி மற்றும் மெய்தேய் பழங்குடியினரையே கடந்த வருடம் முதல் நடந்து வரும் வன்முறை சம்பவங்கள் குறித்து பார்வையிட உச்சநீதிமன்ற நீதிபதிகள் 6 பேர் இன்று மணிப்பூர் வருகின்றனர். இந்த கலவரத்தில் இதுவரை 250 க்கும்  அதிகமானோர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

    • மாநிலத்தில் இயல்பு நிலையை கொண்டுவர தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வது பற்றி விவாதிக்கப்பட்டது.
    • மணிப்பூரில் அமித் ஷா பாதுகாப்பு தொடர்பாக பல்வேறு கூட்டங்களில் கலந்து கொள்ள இருக்கிறார்.

    மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா நேற்று மணிப்பூர் மாநில ஆளுநர் அனுசுயா உய்கேவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். நான்கு நாட்கள் பயணமாக நேற்று மணிப்பூர் சென்ற அமித் ஷா, மாநில முதல்வர் பைரென் சிங் மற்றும் மாநில மந்திரிகள், பாஜக மூத்த தலைவர்கள் மற்றும் அதிகாரிகளை சந்தித்து பேசினார்.

    மாநில உள்துறை மந்திரி நித்யானந்த் ராய், மத்திய உள்துறை செயலாளர் அஜய் பாலா, உளவுத்துறை தலைவர் தபன் டேக்கா மற்றும் சில உயர் அதிகாரிகளை மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா சந்தித்து பேசினார். பேச்சுவார்த்தையின் போது மாநிலத்தில் இயல்பு நிலையை கொண்டுவர தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வது பற்றி விவாதிக்கப்பட்டது.

    சில தினங்களுக்கு முன் மணிப்பூர் மாநிலத்தில் மீண்டும் கலவரம் ஏற்பட்டதை அடுத்து, மணிப்பூர் மாநிலத்தின் இம்பால் சென்றதும், அமித் ஷா மாநிலத்தின் மூத்த அதிகாரிகள், மந்திரிகளை சந்தித்தார். ஜூன் 1 ஆம் தேதி வரை மணிப்பூரில் இருக்கும் அமித் ஷா பாதுகாப்பு தொடர்பாக பல்வேறு கூட்டங்களில் கலந்து கொள்ள இருக்கிறார்.

    மணிப்பூர் கலவரத்தில் காவல் அதிகாரி உள்பட ஐந்து பேர் கொல்லப்பட்டது, பாஜக சட்டமன்ற உறுப்பினர் வீடு தாக்கப்பட்டது மற்றும் காவல் துறை ஆயுத கிடங்கில் இருந்து பயங்கரவாதிகள் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆயுதங்களை திருடி சென்றது என மாநிலம் முழுக்க கலவர சூழல் நிலவுகிறது.

    • இரண்டு பெண்களை நிர்வாணமாக இழுத்துச் செல்லும் வீடியோ பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
    • இந்த சம்பவம் கடந்த மே மாதம் 14-ந்தேதி நடந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

    மணிப்பூரில் வன்முறை இன்னும் கட்டுக்குள் வராத நிலையில், திடீரென இரண்டு பழங்குடியின பெண்களை ஒரு கும்பல் நிர்வாணமாக்கி சாலையில் ஊர்வலமாக இழுத்துச் செல்லும் வீடியோ வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் கடந்த மே மாதம் 14-ந்தேதி நடந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

    மே 3-ந்தேதி இம்பாலில் மிகப்பெரிய பேரணி நடைபெற்றது. இந்த பேரணியின்போது மோதல் உண்டாகி, பின்னர் வன்முறையாக வெடித்தது. வன்முறையின் தொடர்ச்சியாக இந்த பதற வைக்கும் சம்பவம் நடைபெற்றிருக்கலாம் என கருதப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக எதிர் கட்சி தலைவர்கள் மணிப்பூர் மாநில அரசு, மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்து உள்ளனர்.


    இந்நிலையில், பாலிவுட் நடிகர் அக்ஷய்குமார் இந்த சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இணையத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், "மணிப்பூரில் பெண்களுக்கு எதிரான வன்முறை வீடியோவை பார்த்து அதிர்ச்சியடைந்தேன். வெறுப்படைந்தேன். இதுபோன்ற கொடூரமான செயலை இனி யாரும் செய்ய நினைக்காத அளவுக்கு குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை கிடைக்கும் என்று நம்புகிறேன்" என பதிவிட்டுள்ளார்.

    இதே போல நடிகைகள் ஊர்மிளா மடோன்கர், ரிச்சா சதா, ரேணுகா சஹானே, நகைச்சுவை நடிகர் வீர்தாஸ் உள்ளிட்ட பலரும் மணிப்பூர் சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து சமூகவலைதளங்களில் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். இதே போல 'மணிப்பூர் வன்முறை', 'போதும் போதும்' போன்ற ஹேஷ்டேக்குகள் பெருமளவில் ட்ரெண்ட் செய்யப்பட்டு வருகிறது.




    • இரண்டு பெண்களை ஒரு கும்பல் நிர்வாணமாக்கி ஊர்வலமாக இழுத்துச் செல்லும் வீடியோ அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
    • மணிப்பூரில் நிகழ்ந்த இந்த வன்கொடுமைக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

    மணிப்பூரில் வன்முறை இன்னும் கட்டுக்குள் வராத நிலையில், திடீரென இரண்டு பழங்குடியின பெண்களை ஒரு கும்பல் நிர்வாணமாக்கி சாலையில் ஊர்வலமாக இழுத்துச் செல்லும் வீடியோ வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் கடந்த மே மாதம் 14-ந்தேதி நடந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

    மே 3-ந்தேதி இம்பாலில் மிகப்பெரிய பேரணி நடைபெற்றது. இந்த பேரணியின்போது மோதல் உண்டாகி, பின்னர் வன்முறையாக வெடித்தது. வன்முறையின் தொடர்ச்சியாக இந்த பதற வைக்கும் சம்பவம் நடைபெற்றிருக்கலாம் என கருதப்படுகிறது. இந்த சம்பவத்திற்கு எதிராக அரசியல் தலைவர்கள், திரைப்பிரபலங்கள் என பலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில், இசையமைப்பாளார் ஜி.வி.பிரகாஷ் மணிப்பூர் சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், "மணிப்பூர் சகோதரிகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை மனித வரலாற்றில் பேரவலம் மன்னிக்க முடியாத பெருங்குற்றம்… கொலை வாளினை எடடா மிகு கொடியோர் செயல் அறவே…" என்று ஆவேசத்துடன் பதிவிட்டுள்ளார்.





    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பெண்களை நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக அழைத்து செல்லப்பட்ட வீடியோ அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
    • இந்த சம்பவத்திற்கு நாடு தழுவிய அளவில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

    மணிப்பூரில் வன்முறை நடந்து வரும் நிலையில், கடந்த புதன்கிழமை வெளியான வீடியோ அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அதில் இரண்டு பெண்கள் நிர்வாணமாக்கி ஊர்வலமாக அழைத்து செல்லப்பட்டனர். இதற்கு நாடு தழுவிய அளவில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதுதொடர்பாக நான்கு பேரை போலீசார் கைது செய்து நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள். போலீயான ஒரு வீடியோவால் பழிக்குப்பழி கதையாக இந்த மனிதாபிமானமற்ற சம்பவம் நடைபெற்றுள்ளது.

    இந்நிலையில், இந்த சம்பவத்தின் மீது நடவடிக்கை எடுக்காதது வெட்கக்கேடானது என்று நடிகை ரோகிணி கூறியுள்ளார். இது குறித்து அவர், "ஒட்டு மொத்த நாடும் வெட்கப்படக் கூடிய ஒரு விஷயம் இது. ஒரு பெண்ணின் உடலை நிர்வாணமாக்கி, ஊர்வலமாக அழைத்து சென்று வன்புணர்வு செய்திருப்பது நாம் அனைவருக்கும் வெட்கக்கேடு. இதன் மீது நடவடிக்கை எடுக்காமல் இருப்பது அதை விட வெட்கக்கேடு.


    77 நாட்களுக்கு பிறகு தான் பிரதமர் இதைபற்றி வாய் திறக்கிறார் என்பது எப்படிப்பட்ட செய்தியை மக்களுக்கு சொல்கிறது என்பதை யோசித்து பார்க்க வேண்டும். நம் சமூகத்தில் பெண்ணின் உடல் மீது சமூக கவுரவத்தையும் அனைவரின் மரியாதையும் புகுத்தி வைத்திருப்பதால்தான் இப்படி செய்ய தோன்றுகிறது. பெண்களை நிர்வாணப்படுத்திவிட்டால் உங்களை நாங்கள் அவமானப்படுத்தியதற்கு சமம் என்று நினைக்கிறார்கள். நம்முடைய அவமானங்களின் சின்னமாக பெண்களின் உடலை உருவாக்கியிருப்பது சமூகம் தான்.

    பெண் உடல் பற்றிய இந்த மாதிரியான பார்வையை எப்போது களைகிறோமோ அப்போதுதான் பெண்களுக்கு இதிலிருந்து விடுதலை கிடைக்கும். இப்படிப்பட்ட குற்றங்கள் நடக்கும் போது போய் உடனடியாக நிற்க வேண்டிய காவல்துறையை அதை வேடிக்கை பார்த்தார்கள் என்று அந்த பெண் சொல்லியிருக்கிறார். இது எந்த அளவிற்கு நியாயம் என்பதை பிரதமர் நரேந்திர மோடியும் மணிப்பூர் முதல்வரும் கூற வேண்டும்" என்று பேசினார்.

    • ஆர்ப்பாட்டத்தில் பா.ஜனதா அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டது.
    • மணிப்பூர் கலவரம் மற்றும் பாலியல் வன்கொடுமை விவகாரம் வெட்கி தலைகுனிய வேண்டிய சம்பவம்.

    நெல்லை:

    மணிப்பூர் மாநிலத்தில் ஒரு மாதத்திற்கும் மேலாக கலவரம் நடந்து வரும் நிலையில் சமீபத்தில் 2 பழங்குடியின பெண்கள் நிர்வாணப்ப டுத்தப்பட்டு வீதியில் ஊர்வல மாக இழுத்துச் செல்லப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டனர்.

    மகளிர் அணி ஆர்ப்பாட்டம்

    இந்த கொடுமையான சம்பவத்தை கண்டித்தும், மணிப்பூர் கலவரத்தை கட்டுப்படுத்த தவறிய பா.ஜ.க. அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் தி.மு.க மகளிர் அணி சார்பாக இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    நெல்லை வண்ணார்பேட்டையில் செல்லப்பாண்டியன் மேம்பாலத்தின் கீழ் பகுதியில் நெல்லை கிழக்கு மாவட்ட மற்றும் மத்திய மாவட்ட தி.மு.க மகளிர் அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாநில மகளிர் தொண்டரணி துணைச் செயலாளர் விஜிலா சத்யானந்த் தலைமை தாங்கினார்.

    கிழக்கு மாவட்ட மகளிர் அணி தலைவர் கமலா நேரு, கிழக்கு மாவட்ட மகளிர் அணி செயலாளர் மல்லிகா அருள், மத்திய மாவட்ட மகளிர் அணி செயலாளர் மகேஸ்வரி, மகளிர் தொண்டரணி செயலாளர் அனிதா, மாவட்ட துணைச் செயலாளர்கள் கிரிஜா, தமயந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொடர்ந்து மகளிர் அணியினர் மணிப்பூர் கலவரத்தை கட்டுப்படுத்த தவறியதாக பா.ஜனதா அரசை கண்டித்து எதிர்ப்பு பதாகைகளுடன் கோஷங்கள் எழுப்பினர். பின்னர் முன்னாள் எம்.பி. விஜிலா சத்யானந்த் கூறுகையில்,

    மணிப்பூர் கலவரம் மற்றும் பாலியல் வன்கொடுமை விவகாரம் வெட்கி தலை குனிய வேண்டிய சம்பவம். இது தொடர்பாக பாராளு மன்றத்தில் எதிர்க்கட்சிகள் ஒருமித்த குரலுடன் தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர். ஆனாலும் பிரதமர் வாய் திறக்கவில்லை. பெண்கள் மீது மத்திய அரசு மரியாதை வைத்திருந்தால் உடனடியாக மணிப்பூரில் ஆளும் பா.ஜனதா அரசை டிஸ்மிஸ் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் மணிப்பூர் பாலியல் வன்கொடுமை தொடர்பாக புலன் விசாரணை நடத்தி கைதானவர்களை தூக்கிலிட வேண்டும் என்றார்.

    இந்த ஆர்ப்பாட்டத்தில் நெல்லை கிழக்கு மாவட்ட செயலாளர் ஆவுடையப்பன், மத்திய மாவட்ட பொறுப்பாளர் மைதீன்கான், அப்துல் வஹாப் எம்.எல்.ஏ., துணை மேயர் கே.ஆர். ராஜூ, மூத்த நிர்வாகி சுப சீதாராமன், மேயர் சரவணன், மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர். ஜெகதீஷ், கிழக்கு மாவட்ட அவைத்தலைவரும், வள்ளியூர் வடக்கு ஒன்றிய செயலாள ருமான கிரகாம்பெல், மாநில நெசவாளர் அணி செயலாளர் பெருமாள், பாளை யூனியன் சேர்மன் தங்கபாண்டியன், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் மாலை ராஜா, சுப்பிரமணியன், பகுதி செயலாளர்கள் தச்சை சுப்பிரமணியன், அண்டன் செல்லத்துரை, ஒன்றிய செயலாளர்கள் அருள்மணி, ஜோசப் பெல்சி, போர்வெல் கணேசன், மாரியப்பன், பொதுக்குழு உறுப்பினர் பரமசிவ அய்யப்பன், மாநகர் இளைஞர் அணி அமைப்பாளர் கருப்பசாமி கோட்டையப்பன், கவுன்சிலர்கள் பவுல்ராஜ், வில்சன்மணித்துரை, ரவீந்தர், உலகநாதன், கிட்டு என்ற ராமகிருஷ்ணன், மாவட்ட துணை அமைப்பாளர் மாயா, விவசாய அணி அமைப்பாளர் அய்யாச்சாமி பாண்டியன், மாவட்ட பொறியாளர் அணி துணை அமைப்பாளர் ஆறுமுகம், 31-வது பகுதி சபா உறுப்பினர் சேதுசெல்வம், கட்டுமான அமைப்புசாரா தொழிலாளர் சங்கத்தலைவர் அந்தோணிராஜ், மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் பொன்னையா பாண்டியன், தலைமைச் செயற்குழு உறுப்பினர் பேச்சிபாண்டியன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ஜான் ரபீந்தர், மகளிர் தொண்டர் அணி துணை அமைப்பாளர் அனு ராதா ரவி முருகன்,

    மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் பல்லிக்கோட்டை செல்லத்துரை, முன்னாள் கவுன்சிலர்கள் நவநீதன், ராஜகுமாரி, ராஜேஸ்வரி, சைபுன் நிஷா, ரேவதி, மாமன்ற உறுப்பினர் பிரபா சங்கரி, மத்திய மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் முகமது மீரான் மைதீன், முன்னாள் மாவட்ட பொருளாளர் அருண்குமார், நிர்வாகிகள் வீரபாண்டியன், ஆறுமுக ராஜா, மணிகண்டன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • மகளிர் அணி நிர்வாகிகள் அனைவரும் மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.
    • மணிப்பூர் மாநிலத்தில் அமைதி திரும்ப மெழுகுவர்த்தி ஏந்தி பிரார்த்தித்தனர்.

    தஞ்சாவூர்:

    மணிப்பூர் மாநிலத்தில் வன்முறை சம்பவத்தை தடுக்க தவறிய மத்திய பா.ஜ.க. அரசை கண்டித்தும், அம்மாநிலத்தில் பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் இன்று தஞ்சை தலைமை தபால் நிலையம் முன்பு தி.மு.க. மகளிர் அணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    மத்திய மாவட்ட செயலாளர் துரை. சந்திரசேகரன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். மாநில மகளிர் ஆலோசனை குழு உறுப்பினர் காரல்மார்க்ஸ் வரவேற்றார் . இந்த ஆர்ப்பாட்டத்தை தலைமை செயற்குழு உறுப்பினர்கள் டி.கே.ஜி. நீலமேகம் எம்.எல்.ஏ, மகேஷ் கிருஷ்ணசாமி, செல்வம், மாநகர செயலாளரும் மேயருமான சண் .ராமநாதன் , மாவட்ட அவை தலைவர் இறைவன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

    ஆர்ப்பாட்டத்தில் துணை மேயர் அஞ்சுகம்பூபதி, மணிப்பூர் மாநிலத்தில் அமைதியை நிலைநாட்ட தவறிய மத்திய அரசை கண்டித்து பேசினார். மகளிர் அணி நிர்வாகிகள் அனைவரும் மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.

    ஆர்ப்பாட்டத்தின் போது அனைவரும் மணிப்பூர் மாநிலத்தில் அமைதி திரும்ப மெழுகுவர்த்தி ஏந்தி பிரார்த்தித்தனர்.

    இதில் மாவட்ட பொருளாளர் எல்.ஜி. அண்ணா, இலக்கிய அணி அமைப்பாளர் வரகூர் காமராஜ், முன்னாள் மகளிர் தொண்டரணி அமைப்பாளர் கமலாரவி, தஞ்சை வடக்கு ஒன்றிய செயலாளர் முரசொலி, ஒன்றிய குழு உறுப்பினர் உஷாராணி உள்பட 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    • மணிப்பூரில் கலவரம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
    • 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

    திருவாரூர்:

    மணிப்பூரில் இரு சமூகத்தினர் இடையே தொடர்ச்சியாக நடைபெற்று வரும் கலவரம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது கலவரத்தின் உச்சகட்டமாக பெண்கள் வன்கொடுமை தாக்குதலுக்கும் பாலியல் துன்புறுத்தலுக்கும் உள்ளாகி வருகின்றனர்.

    அதன் வெளிப்பாடாக இரண்டு பெண்கள் பாலியல் துன்புறுத்தல்கள் செய்த கும்பல் அதனை சமூக வலைத்தளத்திலும் பரவச் செய்துள்ளது.

    இத்தகைய சம்பவத்துக்கு நாடு முழுவதும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில் எதிர்க்கட்சியினர் மற்றும் பல்வேறு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்

    அந்த வகையில் திருவாரூர் புதிய ரயில் நிலையம் எதிரில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் மகளிர் அணி சார்பில் திருவாரூர் சட்டமன்ற உறுப்பினரும் மாவட்ட கழகச் செயலாளருமான பூண்டி கலைவாணன் தலைமையில் 2000த்திற்கும் மேற்பட்ட மகளிர் அணியினர் கலந்து கொண்டு மணிப்பூரில் நடைபெற்று வரும் அநீதியை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    மேலும் பெண்கள் மீது பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட சம்பந்தப்பட்ட வீடியோ பதிவில் உள்ள அனைவரும் கைது செய்ய வேண்டும் கலவரத்தை கட்டுப்படுத்த தவறிய மத்திய அரசு இத்தகைய சம்பவங்களுக்கு பொறுப்பேற்க வேண்டும் உள்ளிட்ட கண்டன கோஷங்களை எழுப்பினர்.

    • மணிப்பூர் சம்பவத்தை கண்டித்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு வடக்கு மாவட்ட செயலாளர் தம்பி சேவியர் தலைமை தாங்கினார்.
    • ஆர்ப்பாட்டத்தின் போது மணிப்பூர் சம்பவத்திற்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டது.

    சங்கரன்கோவில்:

    சங்கரன்கோவில் தேரடி திடலில் தென்காசி வடக்கு மாவட்ட மக்கள் தேசம் கட்சி சார்பில் மணிப்பூர் சம்பவத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தென்காசி வடக்கு மாவட்ட மக்கள் தேசம் கட்சி மாவட்ட செயலாளர் தம்பி சேவியர் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் மூனார் முருகன், தென்காசி தெற்கு மாவட்ட மக்கள் தேச கட்சி மாவட்ட தலைவர் இசக்கிமுத்து, செயலாளர் ராஜாராம், ஆகியோர் முன்னிலை வகித்தார். கிறிஸ்தவ சமூக நீதிப் பேரவை மாவட்ட செயலாளர் சுபாஷ் வரவேற்று பேசினார்.

    தென்காசி வடக்கு மாவட்ட பொருளாளர் பரமசிவன், எஸ்.டி.பி.ஐ. கட்சி நகர தலைவர் அப்துல் நசீர், நகர் மன்ற உறுப்பினர் ஷேக் முகமது, மக்கள் தேச கட்சி தென்காசி தெற்கு மாவட்ட செயலாளர் ராஜாராம், தேவகுமாரி உள்ளிட்ட பலர் கண்டன உரையாற்றினார்கள். ஆர்ப்பாட்டத்தின் போது மணிப்பூர் சம்பவத்திற்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டது.

    ஆர்ப்பாட்டத்தில் தென்காசி தெற்கு மாவட்ட இளைஞரணி செயலாளர் முத்துக்குமார், மாவட்ட துணைச்செயலாளர் கருப்பசாமி, கிறிஸ்தவ சமூக நீதிப் பேரவை மாவட்ட துணைச் செயலாளர் கணேஷ், மாவட்ட பொருளாளர் சகாயம், கீழப்பாவூர் ஒன்றிய செயலாளர் சுரேஷ் மற்றும் நிர்வாகிகள் டெய்சி ராணி, போஸ் பாண்டி, முத்துராஜா, கார்த்திக் விஜய், ஜான்சன் உள்ளிட்ட ஏராளமான கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட மாணவரணி செயலாளர் பிரின்ஸ் ரூபன் நன்றி கூறினார்.

    ×