என் மலர்
நீங்கள் தேடியது "பாலியல்"
- விவாகரத்து வழங்கிய நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் மனைவி மேல்முறையீடு செய்திருந்தார்.
- திருமணத்திற்குப் பிறகு மனைவி தனது நண்பர்களுடன் கண்ணியமற்ற முறையில் உரையாடலில் ஈடுபட கூடாது.
திருமணத்திற்குப் பிறகு கணவனோ மனைவியோ தங்களது 'எதிர்பாலின' நண்பர்களுடன் 'ஆபாசமான' முறையில் உரையாட கூடாது என்றும், எந்தக் கணவரும் தனது மனைவியிடமிருந்து இதுபோன்ற செயல்களை பொறுத்துக்கொள்ள மாட்டார் என்று மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
விவாகரத்து வழங்கிய கீழமை நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றத்தில் மனைவி மேல்முறையீடு செய்திருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் விவேக் ருசியா மற்றும் கஜேந்திர சிங் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
மனைவி தனது ஆண் நண்பர்களுடன் அவளது பாலியல் வாழ்க்கை குறித்து ஆபாசமான முறையில் வாட்சப்பில் சாட் செய்ததை நீதிமன்றத்தில் கவனத்தில் கொண்டு பலவேறு கருத்துக்களை தெரிவித்தது.
அதாவது, "திருமணத்திற்குப் பிறகு கணவரோ, மனைவியோ தங்களது நண்பர்களுடன் கண்ணியமற்ற முறையில் ஆபாசமான உரையாடலில் ஈடுபட கூடாது. தனது மனைவி மொபைல் மூலம் இத்தகைய மோசமாக பேசுவதை எந்த கணவரும் பொறுத்துக்கொள்ள மாட்டார்.
திருமணத்திற்குப் பிறகு கணவன்-மனைவி இருவரும் நண்பர்களுடன் மொபைல் மற்றும் பிற வழிகளில் உரையாடலாம். ஆனால் அந்த உரையாடல் கண்ணியமானதாக இருக்க வேண்டும்.
கணவரின் எதிர்ப்பு தெரிவித்தும் மனைவி தனது ஆண் நண்பர்களுடன் தொடர்ந்து மோசமாக உரையாடுவது நிச்சயமாக கணவருக்கு மனரீதியிலான கொடுமையை ஏற்படுத்தும்" என்று நீதிமன்றம் கருத்து தெரிவித்தது.
இறுதியில், கணவருக்கு விவாகரத்து வழங்கிய குடும்ப நீதிமன்றத்தின் உத்தரவை ஏற்றுக்கொண்டு மனைவியின் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
- சேலம் வீராணம் அருகே உள்ள சுக்கம்பட்டி அடுத்த ஆச்சான் குட்டப்பட்டி, கத்திரிப்பட்டி பகுதியில் சிறுமியை பாலியல் தொந்தரவு செய்த வாலிபர் மீது வழக்கு செய்தனர்.
- இதையடுத்து சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகாரின்பேரில் வீராணம் போலீசார் வழக்கு பதிவு செய்து செல்வத்தை தேடி வருகிறார்கள்.
சேலம்:
சேலம் வீராணம் அருகே உள்ள சுக்கம்பட்டி அடுத்த ஆச்சான் குட்டப்பட்டி, கத்திரிப்பட்டி பகுதியை சேர்ந்த ஸ்ரீரங்கன் மகன் செல்வம் என்பவர் சிறுமி ஒருவரை அடிக்கடி பாலியல் தொந்தரவு செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதை அறிந்த பெற்றோர், செல்வத்தை கண்டித்தனர். ஆனால் அவர் கேட்கவில்லை. இந்த நிலையில் அந்த சிறுமி குளித்து கொண்டிருந்ததை செல்வம் மறைவாக நின்று பார்த்துக் கொண்டிருந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த சிறுமி பெற்றோரிடம் கூறினார். இதையடுத்து சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகாரின்பேரில் வீராணம் போலீசார் வழக்கு பதிவு செய்து செல்வத்தை தேடி வருகிறார்கள்.
- நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு தாலுகா, மாணிக்கம்பாளையம் அருகே 17 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது.
- பாலியல் தொந்தரவு கொடுத்ததாக அருண் மற்றும் அதற்கு உடந்தையாக இருந்த அவரது தாய் ஜெயா ஆகியோரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு தாலுகா, மாணிக்கம்பாளையம் அருகே உள்ள அண்ணா நகரை சேர்ந்தவர் செந்தில். இவரது மனைவி ஜெயா (வயது 38). இவர்களது மகன் அருண் (20) கூலித்தொழிலாளி. இவர், அதே பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து அந்த சிறுமி பரமத்திவேலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக அருண் மற்றும் அதற்கு உடந்தையாக இருந்த அவரது தாய் ஜெயா ஆகியோர் மீது புகார் செய்தார். அதன்பேரில் பரமத்திவேலூர் போலீசார் விசாரணை நடத்தி, அருண், ஜெயா ஆகியோர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து, இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
- திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி பிளஸ்-2 மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
- இதுகுறித்து திலகர்திடல் போலீசில் அவரது பெற்றோர் புகார் செய்தனர்.
மதுரை
மதுரை கீழ அண்ணாதோப்பு பகுதியைச் சேர்ந்தவர் மனோஜ்குமார் (வயது 22). இவரும், அதே பகுதியைச் சேர்ந்த 17 வயதுடைய பிளஸ்-2 மாணவியும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்துள்ளனர். அப்போது திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி மாணவியிடம் மனோஜ்குமார் நெருங்கி பழகினார்.
இந்த நிலையில் கடந்த சில வாரங்களாக மனோஜ்குமார் மாணவியை சந்திப்பதை தவிர்த்து வந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த மாணவி தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கூறியுள்ளார்.
ஆனால் மனோஜ்குமார் மறுத்து விட்டதாக தெரிகிறது. இதனால் பாதிக்கப்பட்ட மாணவி இதுகுறித்து பெற்றோரிடம் தெரிவித்தார். அதிர்ச்சியடைந்த அவர்கள் திலகர் திடல் போலீசில் மகளை பலாத்காரம் செய்ததாக புகார் செய்தனர். இன்ஸ்பெக்டர் சுஜாதா
- பிளஸ்-1 படிக்கும் 16 வயதுடைய பள்ளி மாணவன் சிறுமியின் வீட்டிற்கு சென்றார்.
- விசாரணை நடத்திய போலீசார் பள்ளி மாணவன் மீது போக்சோ வழக்குப்பதிவு
நாகர்கோவில் :
நாகர்கோவில் ஆசாரிபள்ளம் பகுதியைச் சேர்ந்த 6 வயது சிறுமி ஒருவர் பெற்றோருடன் வசித்து வருகிறார்.
இவர்களது தாயார் நாகர்கோவிலில் உள்ள பலசரக்கு கடை ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று காலை வழக்கம்போல சிறுமியின் தாயார் வேலைக்கு சென்றார். வீட்டில் சிறுமி மட்டுமே இருந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த பிளஸ்-1 படிக்கும் 16 வயதுடைய பள்ளி மாணவன் சிறுமியின் வீட்டிற்கு சென்றார்.
அப்போது வீட்டில் தனியாக இருந்த சிறுமியிடம் பள்ளி மாணவன் அத்துமீறி பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுபற்றி அந்த சிறுமி தனது தாயாரிடம் கூறி அழுது உள்ளார்.
இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுமியின் தாயார் சம்பவம் குறித்து நாகர்கோவில் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் விசாரணை நடத்திய போலீசார் பள்ளி மாணவன் மீது போக்சோ வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட பள்ளி மாணவனுக்கு 16 வயது என்பதால் அவரை நெல்லை மாவட்டத்தில் உள்ள சீர்திருத்த பள்ளியில் அடைத்தனர்.
- பெண் சுயநினைவின்றி கிடந்த விவகாரத்தில் திடீர் திருப்பம்
- திருவட்டார் போலீசார் அதிரடி நடவடிக்கை
கன்னியாகுமரி:
திருவட்டார் அருகே உள்ள கொக்கவிளை பகுதியைச் சேர்ந்த 45 வயது பெண் வீட்டில் ரத்தக் காயங்களுடன் மயங்கிய நிலையில் கிடந்துள்ளார்.
அந்தப் பெண் சுய நினைவின்றி இருந்ததால், குடும்பத்தினர் மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். பின்னர் அந்தப் பெண் மேல் சிகிச்சைக்காக திருவனந்தபுரம் தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு இன்னும் சுயநினைவு திரும்பவில்லை.
இந்த நிலையில் பாதிக்கப்பட்ட பெண்ணின் மகள், திருவட்டார் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்ட னர். அப்போது ஒரு வாலிப ரின் நடவடிக்கையில் அவர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது.
அவரை பிடித்து விசாரித்ததில் முன்னுக்குப் பின் முரணாக பேசி உள்ளார். போலீசார் தீவிர விசாரணை நடத்திய போது, அந்த வாலிபர், சுயநினைவின்றி கிடந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதும், அதற்கு அவர் மறுத்ததால் தாக்கி விட்டு சென்றதும் தெரிய வந்தது.
இதனைத் தொடர்ந்து அந்த வாலிபரை போலீசார் கைது செயதனர். விசார ணையில் அவரது பெயர் எட்வின் (வயது 28) என்ப தும், தனியார் மினரல் வாட்டர் கம்பெனியில் வேலை பார்ப்பதும் தெரிய வந்தது. கைதான எட்வின் போலீசாரிடம் கொடுத்த வாக்குமூலம் வருமாறு:-
பக்கத்து வீட்டில் வசித்த பெண் மீது எனக்கு மோகம் இருந்தது. சம்பவத்தன்று அந்தப் பெண், உறவினர் இல்ல நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக அலங்காரம் செய்து சென்றார். இதனை பார்த்ததும் எனக்கு அவர் மீது மேலும் ஆசை ஏற்பட்டது.
அதன்பிறகு நான் மது அருந்தினேன். அந்தநேரத்தில் நிகழ்ச்சி முடிந்து அந்த பெண் வீடு திரும்பினார். அதனை பயன்படுத்தி நானும் வீட்டுக்குள் புகுந்தேன். பின்னர் அவரை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற போது அவர் எதிர்ப்பு தெரிவித்தார்.
மேலும் அவர் சத்தம் போட்டதால் கழுத்தை நெரித்தேன்.கட்டிலில் அவரது தலையை மோதிய தில் பலத்த காயம் ஏற்பட்டு மயங்கினார். பின்னர் நான் வீட்டில் இருந்து வெளியேறி விட்டேன்.
இதற்கிடையில் அவரது கணவர் வந்து மனைவி சுயநினைவின்றி கிடப்பதை பார்த்து அலறினார். நானும் அங்கு சென்று அவருக்கு உதவுவது போல் நடித்தேன். மேலும் போலீசார் சம்பவ இடம் வந்து விசாரித்த போது, நானும் அங்கே இருந்து, நகைக்காக தாக்குதல் நடந்திருக்கலாம் என்று கருத்துக்களை தெரிவித்தேன். ஆனால் என் நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த போலீசார், என்னை கைது செய்துவிட்டனர்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
எட்வினை கைது செய்தது குறித்து போலீசார் கூறுகையில், சம்பவ இடத்தில் விசாரணை நடத்திய போது, எட்வின் பேசியது மற்றும் அவரது நடவடிக்கைகள் சந்தேகம் ஏற்படுத்தும் வகையில் இருந்தது. எனவே அவரை கண்காணிக்க முடிவு செய்தோம். அவருக்கே தெரியாமல், அவரை கண்காணித்தோம். இதில் சந்தேகம் மேலும் அதிகரித்ததால் எட்வினை பிடித்து விசாரித்தோம். முதலில் மறுத்த அவர், பின்னர் உண்மையை ஒத்துக் கொண்டார் என்றனர்.
- குழந்தைக்கு மிட்டாய் வாங்கி கொடுப்பது போல் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளனர்.
- முருகன், செல்வம் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தபட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
சுவாமிமலை:
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் மேலக்காவேரி பகுதியில் செக்கடி தெருவை சேர்ந்த ஒருவரின் 8 வயது பெண் குழந்தைக்கு அதே பகுதியை சேர்ந்த கூலிதொழிலாளர்கள் முருகன் (வயது 55) மற்றும் செல்வம் (65) 2 பேரும் அந்த குழந்தைக்கு மிட்டாய் வாங்கி கொடுப்பது போல் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளனர்.
சம்பவத்தன்று அதேபோல் இருவரும் அந்த பெண் குழந்தையிடம் பாலியல் சீண்டலில் ஈடுபடும் போது அந்த குழந்தையின் தந்தை பார்த்து இருவரையும் கண்டித்துள்ளார்.
பின்னர் அவர் இதுகுறித்து கும்பகோணம் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார், அதன்பேரில் போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து முருகன், செல்வத்தை கைது செய்தனர்.
பின்னர் அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தபட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
- போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்கு பதிவு
- அரசு பள்ளி ஆசிரியருக்கு வலை
பெரம்பலூர்,
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுகா, வி.களத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆங்கில ஆசிரியராக உடும்பியத்தை சேர்ந்த செல்லமுத்து மகன் மணிகண்டன் (வயது 39) என்பவர் பணிபுரிந்து வருகிறார். இவர் 9 மற்றும் 10ம்வகுப்பிற்கு ஆங்கில பாடம் நடத்தி வருகிறார். மாணவிகளிடம் தவறாக நடத்தல், இரட்டை அர்த்ததில் பேசுவது, சில்மிஷம் செய்தல் போன்ற செயல்களில் ஈடுப்பட்டுள்ளார். இதனால் பாதிக்கப்பட்ட மாணவிகள் கடந்த 16ம்தேதி கடிதம் மூலம் உதவி தலைமையாசிரியர் மணியிடம் புகார் அளித்தனர்.இது பற்றி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவழகனுக்கு தகவல் அளிக்கப்பட்டது. இதன்பேரில் குழந்தைகள் நலக்குழு உறுப்பினர் ராமு, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு ஆற்றுப்படுத்துனர் மகேஸ்வரி ஆகியோர் பள்ளிக்கு சென்று பள்ளி மாணவிகளிடம் விசாரணை செய்ததில் ஆசிரியர் மணிகண்டன் மீதான புகார்கள் உண்மை என தெரியவந்தது.இது குறித்து மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சட்டம் சார்ந்த நன்னடத்தை அலுவலர் கோபிநாத் கொடுத்த புகாரின் பேரில் பெரம்பலூர் அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து ஆசிரியர் மணிகண்டனை தேடிவருகின்றனர்.
- தி.மு.க. கவுன்சிலர் பக்கிரிசாமி நடத்தும் நர்சரி பள்ளியில் படித்த 6 வயது சிறுமி, பள்ளி தாளாளர் பக்கிரிசாமியால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார்.
- அவரை போக்சோ சட்டத்தில் கைது செய்து கடலூர் சிறையில் அடைத்தனர்
கடலூர்:
விருத்தாசலத்தில் கடந்த 11-ந்தேதி தி.மு.க. கவுன்சிலர் பக்கிரிசாமி நடத்தும் நர்சரி பள்ளியில் படித்த 6 வயது சிறுமி, பள்ளி தாளாளர் பக்கிரிசாமியால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இதனையடுத்து அவரை கைது செய்த போலீசார், அவரை போக்சோ சட்டத்தில் கைது செய்து கடலூர் சிறையில் அடைத்தனர். இந்நிலையில் பாதிக்கப் பட்ட சிறுமிக்கு நீதிகேட்டு பா.ஜ.க. மாநில செயலாளரும், விழுப்புரம் பெருங்கோட்ட பொறுப்பாளருமான வினோஜ். பி. செல்வம் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
விருத்தாசலம் பாலக்கரையில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் பாதிக்கப் பட்ட சிறுமிக்கு மருத்துவ மனையில் உரிய சிகிச்சை வழங்கப்பட வேண்டும், பள்ளியின் உரிமம் ரத்து செய்யப்பட வேண்டும், முதல் தகவல் அறிக்கையில் உண்மை தகவலை பதிவு செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களிட்டு பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம் செய்தனர். இதில் பா.ஜ.க. கடலூர் மாவட்ட தலைவர் மணி கண்டன், விருத்தாசலம் நகர செயலாளர் மணியழகன் உள்பட பா.ஜ.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
- பெண்களிடம் ஆபாசமாக பேசியது உள்ளிட்ட பல புகார்களை பெண்கள் கூறியதால் தலைமறைவானார்.
- பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோ ஜாமீன் கேட்டு நாகர்கோவில் கோர்ட்டில் விண்ணப்பித்தார்.
நாகர்கோவில் :
குமரி மாவட்டத்தை சேர்ந்த பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோ(வயது 25) மீது பாலியல் புகார் கூறப்பட்டது. பெண்களிடம் ஆபாசமாக பேசியது உள்ளிட்ட பல புகார்களை பெண்கள் கூறியதால், அவர் தலைமறைவானார். இந்த நிலையில் நாகர்கோவிலில் பதுங்கி இருந்த அவரை போலீசார் மடக்கி பிடித்தனர். பின்னர் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். தொடர்ந்து காவலில் எடுத்தும் விசாரித்தனர். அதன் பிறகு சிறையில் அடைக்கப்பட்ட பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோ ஜாமீன் கேட்டு நாகர்கோவில் கோர்ட்டில் விண்ணப்பித்தார். மனுவை விசாரித்த நீதிபதி, அவருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.
- மேலும் இரண்டு வழக்குகளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய சி.பி.சி.ஐ.டி .போலீசார் தீவிரம்
- காசிக்கு விதிக்கப்பட்ட சிறை தண்ட னைக்கு பாடகி சின்மயி வரவேற்பு தெரிவித்து டுவிட்டரில் பதிவு
நாகர்கோவில் :
நாகர்கோவில் கோட்டார் கணேசபுரம் மெயின் ரோட்டை சேர்ந்தவர் தங்கபாண்டியன். இவரது மகன் காசி (வயது 28) என்ஜினியர்.
இவர் மீது கடந்த 2020-ம் ஆண்டு சென்னையைச் சேர்ந்த பெண் டாக்டர், குமரி மாவட்டத்தைச் சேர்ந்த 22 வயது இளம்பெண் உள்பட சிலர் அடுத்தடுத்து பாலியல் புகார்கள் அளித்தனர். அந்த புகாரில் காசி தங்களுடன் நெருங்கி பழகி ஆபாச படம் எடுத்து மிரட்டியதாக கூறியிருந்தனர். மேலும் காசி மீது வடசேரி போலீஸ் நிலையத்தில் கந்து வட்டி புகாரும் அளிக்கப்பட்டது.
இது தொடர்பாக அவர் மீது தனித்தனியாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. மொத்தம் 8 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதையடுத்து காசியை போலீசார் கைது செய்து ஜெயிலில் அடைத்தனர். இந்த வழக்குகள் அனைத்தும் சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு மாற்றப்பட்டது. இதில் காசிக்கு உதவியதாக அவரது நண்பர்களும் கைது செய்யப்பட்டனர். மேலும் ஆதாரங்களை அளித்ததாக காசியின் தந்தை தங்க பாண்டியனையும் போலீசார் கைது செய்து ஜெயிலில் அடைத்தனர். தொடர்ந்து காசியின் தந்தை மற்றும் அவரது நண்பர்கள் ஜாமீனில் விடுதலை ஆனார்கள்.
காசி ஜாமீன் கேட்டு பலமுறை மனு தாக்கல் செய்தார். ஆனால் அவருக்கு ஜாமீன் வழங்கப்படவில்லை. கடந்த 3 ஆண்டுகளாக காசி ஜெயிலிலேயே இருந்து வருகிறார். அவர் மீதான 8 வழக்குகளில் 6 வழக்குகளில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து உள்ள நிலையில் அந்த வழக்குகள் விசாரணை நாகர்கோவில் கோர்ட்டில் நடந்து வருகிறது. நாகர்கோவில் மகிளா கோர்ட்டில் நடந்து வந்த பாலியல் வழக்கில் 29 சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டது. மேலும் காசியிடமிருந்து கைப்பற் றப்பட்ட லேப்டாப்பில் இருந்த ஆபாச படங்களின் ஆதாரங்களை வைத்தும் விசாரணை நடந்து வந்தது.
இந்த வழக்கில் காசி குற்றவாளி என்று நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. பலாத்கார வழக்கில் 3 பிரிவுகளின் கீழ் காசிக்கு தீர்ப்பு வழங்கப்பட்டு உள்ளது. இந்திய தண்டனைச் சட்டம் 376 (2 என்) பெண்ணை கற்பழித்த குற்றத்திற்காக சாகும் வரை ஆயுள் தண்டனை மற்றும் ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.
இந்திய தண்டனைச் சட்டம் 354 (சி) இளம் பெண்ணை அந்தரங்க வீடியோ எடுத்த குற்றத்திற் காக 3 ஆண்டு சிறை தண்டனையும் ரூ.10 ஆயிரம் அபராதமும், 506 (2) கொலை மிரட்டல் விடுத்த குற்றத்திற்காக 3 ஆண்டு சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது. இந்த தண்டனைகளை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்று தீர்ப்பில் கூறப்பட்டு இருந்தது. வழக்கு தீர்ப்பு காரணமாக பாளையங்கோட்டை சிறையில் இருந்து காசியை போலீசார் பாதுகாப்புடன் அழைத்து வந்திருந்தனர். தீர்ப்பை கேட்டு காசி கண் கலங்கினார். இதை தொடர்ந்து மீண்டும் அவரை போலீசார் பாளை யங்கோட்டை ஜெயிலுக்கு அழைத்து சென்றனர்.
காசிக்கு சாகும்வரை சிறை தண்டனை விதிக்கப் பட்டதையடுத்து இந்த வழக்கில் மேல்முறையீடு செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. காசிக்கு விதிக்கப்பட்ட சிறை தண்ட னைக்கு பாடகி சின்மயி வரவேற்பு தெரிவித்து தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ளார்.
காசி மீதான பாலியல் வழக்கில் அவருக்கு தண்ட னை விதிக்கப்பட்டதை யடுத்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ள மேலும் 5 வழக்குகளை துரிதமாக முடிக்க சி.பி.சி.ஐ.டி. போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். ஏற்கனவே இந்த வழக்குகள் விசாரணை கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. இதில் சாட்சிகள் விசாரணை தற்போது நடந்து வருகிறது. இந்த வழக்குகளுக்கான தீர்ப்புகளும் விசாரணை முடிந்து விரைவில் வரும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
குற்ற பத்திரிகை தாக்கல் செய்யப்படாமல் உள்ள மேலும் 2 வழக்குகளில் குற்ற பத்திரிகை தாக்கல் செய்ய சி.பி.சி.ஐ.டி. இன்ஸ்பெக்டர் பார்வதி தலைமையிலான போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்.
- தாராபுரம் தளவாய்பட்டி னத்தை சேர்ந்த பார்த்தீபன் என்பவர் வந்தார்.
- தன்னை பார்த்தீபன் ஆபாசமாக பேசியதாகவும், பாலியல் தொந்தரவு செய்ததாகவும் கூறியுள்ளார்.
தாராபுரம்:
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தேவேந்திரர் தெருவை சேர்ந்த 22 வயதான இளம்பெண், தாராபுரம் சர்ச் சாலையில் உள்ள மருந்து கடையில் வேலை பார்த்து வந்தார்.
பாலியல் தொல்லை
சம்பவத்தன்று கடையின் உரிமையாளர் முருகன் வெளியே சென்றிருந்த நிலையில், கடைக்கு முருகனின் நண்பரான தாராபுரம் தளவாய்பட்டி னத்தை சேர்ந்த பார்த்தீபன் என்பவர் வந்தார். அப்போது பார்த்தீபனுக்கும், இளம்பெண்ணுக்கும் தகராறு ஏற்பட்டது.
இது குறித்து அந்த இளம்பெண் தாராபுரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரில் , தன்னை பார்த்தீபன் ஆபாசமாக பேசியதாகவும், பாலியல் தொந்தரவு செய்ததாகவும் கூறியுள்ளார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் பத்மபிரியா, பார்த்தீபன் மீது பெண் வன் கொடுமை சட்டம் மற்றும் ஆபாசமாக பேசியதாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
வலைவீச்சு
இதனிடையே பார்த்தீபன் தலைமறைவாகி விட்டார். அவரை போலீசார் வலைவீசி தேடி வருகி ன்றனர். தலைமறை வான பார்த்தீபன் தாரா புரம் பூளவாடி சாலையில் உள்ள தேர்பாதை டாஸ்மாக் கடையில் சூப்பர்வைசராக பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.