search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 190427"

    • 14 வயதுக்குட்பட்ட வில்வித்தை போட்டியில் 8-ம் வகுப்பு மாணவன் நித்திக் 2-ம் இடம்.
    • வெற்றி பெற்ற மாணவர்களுக்கு தமது வாழ்த்து தெரிவித்தனர்.

    நாகப்பட்டினம்:

    திருவாரூர் மகரிஷி வித்யா மந்திர் சி.பி.எஸ்.இ. பள்ளி மாணவர்கள் தேசிய மற்றும் மாநில அளவில் நடைபெற்ற வில்வித்தை போட்டியில் இரண்டு மற்றும் மூன்றாம் இடங்களைப் பிடித்து சாதனை படைத்துள்ளார்கள்,

    நாகை மாவட்டம் வேதாரண்யம் குரவப்புலத்தில் மாநில அளவில் நடைபெற்ற வில்வித்தை போட்டியில் பத்து வயதுக்குட்பட்ட பிரிவில் வில்வித்தை போட்டியில் திருவாரூர் மகரிஷி வித்யா மந்திர் சி.பி.எஸ்.இ. பள்ளி 5ம் வகுப்பு பயிலும் ஹர்த்திக் ராமன், இரண்டாம் இடம் பிடித்துள்ளார், அதேபோன்று 14 வயதுக்குட்பட்ட பிரிவில் வில்வித்தை போட்டியில் 8ம் வகுப்பு பயிலும் மாணவன் நித்திக் இரண்டாம் இடம் பிடித்துள்ளார்,

    அதே போன்று காரைக்கால் மாவட்டத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான வில்வித்தை போட்டியில் ஏழாம் வகுப்பு பயிலும் மாணவன் அபினவ் மூன்றாம் இடத்தை பிடித்து சாதனை படைத்திருக்கிறார்கள்.

    இவர்களுக்கு பள்ளி தலைவர் முனைவர் வெங்கட்ராஜுலு, செயலர் சுந்தர்ராஜ், முதன்மை செயல் அதிகாரி முனைவர் நிர்மலா ஆனந்த், தாளாளர் விஜயசுந்தரம், முதல்வர். ஜி.சுமித்தரா, துணை முதல்வர் மா.ஆனந்தி, நிர்வாக அலுவலர், சீதா கோபாலன், வில்வித்தை பயிற்சியாளர். குணசேகரன், மற்றும் உடற்கல்வி பயிற்றுநர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் தமது வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்தனர்.

    • சால்வை அணிவித்தும், பூங்கொத்து வழங்கியும் ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
    • மாமன்ற உறுப்பினர்கள், கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர்.

    ஓசூர்,

    ஓசூர் அ.தி.மு.க.வினர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலா ளரும், முன்னா ள் அமை ச்சருமான பாலகிருஷ்ணரெட்டி தலைமையில் ஓசூர் அ.தி.மு.க.வினர், கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிசாமியை சேலத்தில் அவரது வீட்டில் நேரில் சந்தித்து சால்வை அணிவித்தும், பூங்கொத்து வழங்கியும் ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

    இதில், மேற்கு மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் சிட்டி ஜெகதீசன், ஓசூர் ஒன்றியக்குழு தலைவர் சசி வெங்கடசாமி, பகுதி செயலாளர்கள் அசோகா, பி.ஆர்.வாசுதேவன், மற்றும் மாமன்ற உறுப்பினர்கள், கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர்.

    • முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
    • புத்தாண்டே வருக... புதுவாழ்வு தருக...

    சென்னை:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தனது டுவிட்டர் பக்கதில் அவர் கூறியிருப்பதாவது,

    அனைத்துத் துறைகளிலும் எழுச்சியை நோக்கிய ஆண்டாக 2022 அமைந்தது. உலகளவில் அனைத்திலும் தலைசிறந்து விளங்கும் திறன்மிக்கவர்களாகத் தமிழ்நாட்டு இளைஞர்களை உருவாக்கும் இலக்கை அடைய 2023-இல் வீறுநடை போடுவோம். புத்தாண்டே வருக... புதுவாழ்வு தருக... இணையற்ற இளைய ஆற்றல் வெல்க.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • ஆலய மணிகள் ஒலிக்க, உன்னதங்களிலே ஓசானா பாடல் பாடப்பட்ட போது இயேசுநாதர்பிறந்தார்.
    • அனைவருக்கும் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை தெரிவித்து ஆசி வழங்கினார்.

    பூதலூர்:

    தஞ்சை மாவட்டத்தில் புகழ்பெற்ற கிறிஸ்தவ பேராலயம் பூண்டி மாதா பேராலயம். பூலோகம் போற்றும் புதுமைமாதா என்று பக்தர்களால் அழைக்கப்படும் பூண்டி மாதா பேராலயத்தில் இயேசுநாதர் பிறந்தது குறிக்கும் கிறிஸ்துமஸ் விழா சிறப்பான முறையில் கொண்டாடப்பட்டது.

    கிறிஸ்துமஸ் விழாவையொட்டி கோவில் வளாகம் முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.கிறிஸ்துமஸ் விழா நள்ளிரவு சிறப்பு திருப்பலி 11.45 மணிக்குதொடங்கியது. பேராலய மேடையில் பேராலய அதிபர் சாம்சன் தலைமையில் துணை அதிபர் ரூபன் அந்தோணி ராஜ், தியான மைய இயக்குனர் ஆல்பர்ட் சேவியர், உதவி பங்கு தந்தையர் தாமஸ், அன்புராஜ், ஆன்மீக தந்தை அருளானந்தம் ஆகியோர் சிறப்பு திருப்பலியில் பங்கு கொண்டனர்.

    .சரியாக 12 மணிக்கு ஆலய மணிகள் ஒலிக்க, உன்னதங்களிலே ஓசானா பாடல் பாடப்பட்ட போது இயேசுநாதர்பிறந்தார் என்பதை அறிவிக்கும் விதமாக பேராலயஅதிபர் சாம்சன் குழந்தை இயேசு சுரூபத்தை உயர்த்தி காண்பித்தார். அதன் பின்னர் குழந்தை இயேசு சுரூபத்தை துணை அதிபர் பெற்று அருகாமையில் அமைக்கப்பட்டிருந்த குடிலில் குழந்தை இயேசு சுரூபத்தை வைத்து புனிதம் செய்து வைத்தார்.

    அதனை தொடர்ந்து அனைவரும் ஒருவருக்கொருவர் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர். இயேசுநாதரின் சிறப்புகளையும் இயேசுநாதர் பிறப்பால் உலகம் பெற்ற நன்மைகளையும் பேராலய அதிபர் சாம்சன் திருப்பலியின் போது எடுத்துக் கூறி அனைவருக்கும் கிறிஸ்மஸ் வாழ்த்துக்களை தெரிவித்து அனைவருக்கும் ஆசி வழங்கினார்.

    இன்று கிறிஸ்துமஸ் திருப்பலிகள் காலை, மதியம், மற்றும் பிற்பகலில் நடைபெறுகிறது. இன்று நாள் முழுவதும் பூண்டி மாதா பேராலயத்திற்கு ஏராளமான பக்தர்கள் வந்து மாதாவை தரிசித்து அருள் தந்தையரிடம் ஆசி பெற்று சென்றனர். விழாவிற்கு விரிவான ஏற்பாடுகள் பேராலய நிர்வாகத்தின் சார்பில் செய்யப்பட்டிருந்தது. திருவையாறு துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜ்மோகன் தலைமையில் திருக்காட்டுப்பள்ளி போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

    • கிறிஸ்துமஸ் திருநாளையொட்டி மதுரை பேராயர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
    • மனிதநேயமிக்க சமுதாயத்தை கட்டி எழுப்புவோம்.

    மதுரை

    உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகை நாளை கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி மதுரை கத்தோலிக்க கிறிஸ்தவ உயர்மறை மாவட்ட பேராயர் அந்தோணி பாப்புசாமி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    இயேசு கிறிஸ்துவின் பிறந்தநாளை மகிழ்வோடு கொண்டாட காத்திருக்கும் மனுகுலத்திற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். மீட்பரின் வருகையை கணித்த ஞானிகளும், வல்லுநர்களும் ஆவலோடு காத்திருந்த காலம் கனிந்த அற்புத நாள். இயேசுவின் பிறப்பு தனித்துவம் மிக்கது.

    இயேசுவின் பிறப்பால் பெத்லகேம் என்ற சிறிய இடம், உலகம் அறியும் உன்னத இடமாக மாறிப் போனது. மாடுகள் அடையும் மாட்டுத்தொழுவம் மாட்சி மை பெற்றது. இயேசு இதயத்தில் பிறக்க இடம் அளிக்க துணிந்து விட்டால் நம் வாழ்வு புனிதமடையும். சமூக அவலங்கள் அகலும். சண்டை சச்சரவுகளுக்கு துணை நிற்போருக்கு சவுக்கடி கிடைக்கும். தீவிரவாதம் வேரறுக்கப்படும்.

    புதிதாக பிறந்துள்ள இறைமகனின் அருளால், புத்தாண்டில் புதிய மாற்றத்தை கொண்டு வருவோம். இறைவன் கொண்டு வந்த அன்பு, அமைதி, சமத்துவம், சகோதரத்துவம், ஏழை களுக்கு மறுவாழ்வு போன்ற மதிப்புகளை பகிர்வோம். மனிதநேயமிக்க சமுதாயத்தை கட்டி எழுப்புவோம்.

    தோல்விகளை துரத்தி, வெற்றிகளை குவித்து. பகைமை மறந்து, சமூக அநீதிகளை அகற்றி, பெண்மையை போற்றி, சாதிகளை சாகடித்து, வறுமையை ஒழித்து, வாழ்வாங்கு வாழ்ந்திட கிறிஸ்துமஸ் திருநாளில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • வழுதூர் கிராண்ட் ஜாமியா மஸ்ஜித் வடிவமைத்த ரத்னா பில்டர்ஸ் தலைமை பொறியாளர் பால்பாண்டியனுக்கு ஏராளமானோர் வாழ்த்து தெரிவித்தனர்.
    • இது குறித்த தகவல் வலைத்தளங்களில் வைரலாக பரவி ஏராளமானோர் பொறியாளர் பால்பாண்டியனுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் நகரில் உள்ள ரத்னா பில்டர்ஸ் பல ஆண்டுகளாக கட்டிட பணிகளில் முன்னணி நிறுவனமாக திகழ்ந்து வருகிறது. ராமநாதபுரம் மாவட்டத்தில் இந்த நிறுவனத்தை அறியா தவர்கள் இருக்க முடியாது. பல்வேறு இடங்களில் புதிய பள்ளிவாசல் உள்பட உலகத்தரம் வாய்ந்த முறையில் பல கட்டிடங்களை வடிவமைத்து கட்டிக் கொடுத்துள்ளனர்.

    இந்த வரிசையில் ராமநாதபுரம் மாவட்டம் வழுதூரில் திறக்கப்பட்ட கிராண்ட் ஜாமியா மஸ்ஜித் இறையில்லமும் இடம் பெற்றுள்ளது. இந்தப் பள்ளிவாசலுக்கான வடிவமைப்பு பணிகளை ரத்னா பில்டர்ஸ் தலைமை பொறியாளர் பால்பாண்டியன் மிகச் சிறப்பாக செய்திருந்தார்.

    திறப்பு விழாக்கு வருகை தந்த ஏராளமான ஜமாத் நிர்வாகிகள் பால்பாண்டியனை நேரில் அழைத்து வாழ்த்தி பாராட்டினர். இறையில்லத்தை வடிவ மைத்த பொறியாளர் பால் பாண்டியனுக்கு ரூ.8 லட்சம் சம்பளம் கொடுத்துள்ளனர். சமூக நல்லிணக்கத்தை வெளிப்படுத்தும் வகையில் அந்தப் பணத்தை நன்கொடையாக விழா கமிட்டினரிடம் வழங்கி விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இது குறித்த தகவல் வலைத்தளங்களில் வைரலாக பரவி ஏராளமானோர் பொறியாளர் பால்பாண்டியனுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

    • பேரணியை பேராலய பங்கு தந்தை அற்புதராஜ் சிறப்பு பிரார்த்தனை செய்து தொடங்கி வைத்தார்.
    • கிறிஸ்துமஸ் தாத்தா வேடமணிந்து வாழ்த்து பாடல்களுக்கு ஆடியபடி ஊர்வலம் வந்தனர்.

    நாகப்பட்டினம்:

    நாகையை அடுத்த வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தில் கிறிஸ்துமஸ் விழா ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    அதன் ஒரு பகுதியாக கிறிஸ்துமஸ் தாத்தாகளின் பேரணி நடைபெற்றது.

    வேளாங்கண்ணி விடியற் காலை விண்மீன் ஆலயத்தில் இருந்து புறப்பட்ட பேரணியை பேராலய பங்கு தந்தை அற்புதராஜ் சிறப்பு பிரார்த்தனை செய்து தொடங்கி வைத்தார்.

    இதில் 100-க்கும் மேற்பட்ட சிறுவர்கள், பெண்கள் கிறிஸ்துமஸ் தாத்தா வேடமணிந்து வாழ்த்து பாடல்களுக்கு ஆடியபடி மகிழ்ச்சியுடன் வேளாங்கண்ணி நகரில் ஊர்வலம் வந்தனர்.

    பேரணியானது பஸ் நிலையம், கடைவீதி வழியாக வேளாங்கண்ணி மாதா பேராலய முகப்பில் நிறைவு பெற்றது.

    இதில் பேராலய பாதிரியார்கள், கன்னியாஸ்திரிகள், பங்கு மக்கள் என 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    • ராமநாதபுரம் அருகே உள்ள வழுதூர் கிராண்ட் ஜாமியா மஸ்ஜித் திறப்பு விழாவில் அல்பரிதா குரூப் நிறுவனங்களின் சேர்மன் அபுல்கலாம் கலந்து கொண்டு வாழ்த்தினார்.
    • ஜாமியா மஸ்ஜித் விழா கமிட்டி மேலாளர் சகுபர் அலி நன்றி கூறினார்.

    பனைக்குளம்

    ராமநாதபுரம் மாவட்டம் வழுதூர் கிராமத்தில் கிராண்ட் ஜாமியா மஸ்ஜித் பிரமாண்டமாக கட்டப்ப ட்டுள்ளது. இந்த இறையில்ல கட்டுமான பணிக்கு பெரும் முயற்சி மேற்கொண்ட முன்னாள் ஜமாத் தலை வர்கள், அல்பரிதா குரூப் நிறுவனங்களின் நிறுவனம் ஹாக்கி ஜமால் முகமது, முன்னாள் ஜமாத் தலைவர் துல்கருணை சேட், முன்னாள் பொருளாளர் அபு ஹனிபா வழுதூர், முன்னாள் இமாம் அப்துல் காதர் ஆலி, முன்னாள் ஜமாத் தலைவர் அப்துல் ரஹீம் மற்றும் வழுதூர் குலாம் முகமது ஆகியோர் முன்னோர்களின் துவா பரக்கத்தாலும் இறைவனின் நாட்டப்படி இந்த கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டது.

    வழுதூர் கிராம மக்களின் முயற்சியால் கட்டப்பட்டு அதற்கான திறப்பு விழா இன்று காலை 9 மணிக்கு தொடங்கப்பட்டு மாலை 2 மணி வரை சிறப்பாக நடந்தது. விழாவை முன்னிட்டு உலக நாடுகளில் ராமநாதபுரம் மாவட்ட மக்களின் நலனுக்காக தொடங்கப்பட்ட அல்பரிதா அல்நஜ்மா குரூப் நிறுவனங்களின் சேர்மன் அபுல்கலாம், அவரது சகோதரர்கள் பகுருதீன் ஹாஜா ஜமால் நசுருதீன் ஆகியோர் நிர்வாக கமிட்டியினருடன் இணைந்து பள்ளிவாசல் திறப்பு விழாவுக்காக ஒரு மாதமாக முக்கிய பிரமுகர்களை சந்தித்து சிறப்பு அழைப்பிதழ் வழங்கி விழாவில் கலந்து கொள்ள அழைத்தனர்.

    அதன்படி மாவட்ட த்தில் மட்டுமின்றி வெளி நாடுகளில் இருந்தும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான மக்கள் குடும்பம் குடும்பமாக வந்து இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

    முன்னதாக திறப்பு விழாவில் கலந்து கொள்ள வந்திருந்த அனைவருக்கும் அல் நஜ்மா அல்பரிதா குழுமத்தின் சார்பிலும், வழுதூர் கிராம மக்கள் வழுதூர் இளைஞர் சங்கத்தினர் சார்பிலும் பிரமாண்ட வரவேற்பு அளித்தனர்.

    நேற்று இரவு பள்ளி வாசல் முழுவதும் அலங்கார விளக்குகள் அமைக்கப்பட்டு திறப்பு விழாவை காண ஏற்பாடுகளை வழுதூர் கிராம மக்கள் சார்பில் செய்திருந்தனர். இந்த நிகழ்ச்சியில் முன்னாள் ஜமாத் தலைவர் கமாலுதீன், தற்பொழுது நிர்வாகத்தில் உள்ள ஜமாத் நிர்வாகிகள், இளைஞர் சங்கத்தினர் விழா கமிட்டியினர் ஏற்பாட்டில் இணைந்து இதற்கான திறப்பு விழா ஏற்பாடுகளை செய்தனர்.

    திறப்பு விழாவுக்கு வழு தூர் ஜமாத் தலைவர் முகம்மது மன்சூர் தலைமை தாங்கினார். வழுதூர் ஜமாத் செயலாளர் அப்துல் ஹக்கீம், மலேசியா ஜமாத் தலைவர் லியாக்கத் அலி, மலேசியா ஜமாத் செயலாளர் சிராஜூதீன், துபாய் ஜமாத் தலைவர் சேகு ஜெய்னுலாப்தீன், துபாய் ஜமாத் செயலாளர் தாவுத் இப்ராஹிம் முன்னிலை வகித்தனர். விழா கமிட்டி செயலாளர் முஸ்தபா கமால் வரவேற்றார். தலைமை இமாம் ரஹ்மத்துல்லா மிஸ்பாகி கிராஅத் ஓதினார்.

    வி.எஸ்.எம். அமானுல்லா, ஓ.எம்.எஸ்.அன்சாரி, அபுஹனி, சீனி அகமது, ஆகியோர் பள்ளிவாசலை திறந்துவைத்தனர்.

    முகம்மது ஹாருன், முகம்மது சஜருதீன் ஆகியோர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினர்.

    இறை இல்லத்தைக் கட்டிக் கொடுத்த வசந்தா கன்ஸ்ட்ரக்சன்ஸ் தலைமைப் பொறியாளர் ராஜேஷ் கண்ணா, இல்ல வடிவமைப்பாளர் ரத்னா பில்டர்ஸ் தலைமைப் பொறியாளர் பால்பாண்டி ஆகியோர் கவுரவிக்கப்பட்டனர்.

    ஜாமியா மஸ்ஜித் விழா கமிட்டி மேலாளர் சகுபர் அலி நன்றி கூறினார்.

    அமைச்சர்கள் ராஜ கண்ணப்பன், நாசர், நவாஸ்கனி எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் காதர்பாட்சா முத்துராமலிங்கம், ஆளூர் ஷா நவாஸ், பரமக்குடி முருகேசன், திருவாடனை கரு.மாணிக்கம், ஐ.யு.எம்.எல். மாநில பொதுச் செயலாளர் முகம்மது அபூபக்கர், மனித நேய மக்கள் கட்சி மாநில தலைவர் ஜவாஹிருல்லா, முன்னாள் எம்.பி. அன்வர் ராஜா, மனித நேய ஜன நாயக கட்சி பொதுச் செயலாளர் தமிமுன் அன்சாரி உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர்.

    • மங்கலம் ஊராட்சி மன்றத்தலைவர் எஸ்.எம்.பி.மூர்த்தி ,சென்னையில் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.
    • இளைஞரணியைச் சேர்ந்த சிவா,இடுவாய் கிளை அவைத்தலைவர் இடுவாய் ரமேஷ் ஆகியோர் உடனிருந்தனர்.

    மங்கலம் :

    தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ள தி.மு.க. மாநில இளைஞரணி செயலாளரும்,சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி எம்.எல்.ஏ-வுமான உதயநிதி ஸ்டாலினை திருப்பூர் மாவட்டம்,மங்கலம் ஊராட்சி மன்றத்தலைவர் எஸ்.எம்.பி.மூர்த்தி ,சென்னையில் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.

    அப்போது தி.மு.க. கட்சியின் திருப்பூர் தெற்கு ஒன்றிய துணைச்செயலாளர் சகாபுதீன், திருப்பூர் வடக்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் எம்.ஏ.முகமது ஜீனைத், மங்கலம் பள்ளிவாசல் வார்டு செயலாளர் பாபு என்கிற நூர்முகமது, திருப்பூர் வடக்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் சசி, திருப்பூர் தெற்கு ஒன்றிய துணைச்செயலாளர் இடுவாய்ரவி, திருப்பூர் தெற்கு ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் இடுவாய் சரவணன், இளைஞரணியைச் சேர்ந்த சிவா,இடுவாய் கிளை அவைத்தலைவர் இடுவாய் ரமேஷ் ஆகியோர் உடனிருந்தனர்.

    • நூறு வருசம் இந்த மாப்பிள்ளையும் பொண்ணும் என்னும் பாடலை பாடினார்.
    • கரகோசம் எழுப்பி மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

    பேராவூரணி:

    தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி தனியார் திருமண மண்டபத்தில் பேராவூரணி கோகனட் சிட்டி இன்ஸ்பயர் லயன்ஸ் சங்கம் சார்பில் மூன்று ஜோடிகளுக்கு இலவச திருமணம் நடைபெற்றது.

    விழாவிற்கு சங்கதலைவர் பாண்டியராஜன் தலைமை வகித்தார்.

    மாவட்ட அவை இணைப்பொருளாளர் சாய்செந்தில், மண்டல ஒருங்கிணைப்பாளர் பாலசுப்பிரமணியன், மாவட்டத் தலைவர் நீலகண்டன், மாவட்டத் தலைவர் இளங்கோ ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    3 ஜோடிகளுக்கு திருமணத்தை மாவட்ட ஆளுனர் டாக்டர் சேது சுப்பிரமணியன், தாசில்தார் சுகுமார், இன்ஸ்பெக்டர் செல்வி ஆகியோர் நடத்தி வைத்தனர்.

    லயன்ஸ் சங்கத்தினர் அனைவரும் சீர்வரிசை எடுத்து வந்தனர்.

    பேராவூரணி இன்ஸ்பெக்டர் செல்வி மண மக்களை வாழ்த்தி நூறு வருசம் இந்த மாப்பிள்ளையும் பொண்ணும் தான் என்னும் திரைப்பட பாடல் பாடியது அனைவரையும் கவர்ந்தது.

    கரகோசம் எழுப்பி மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

    விழாவிற்கு வருகை தந்த அனைவரையும் தலைவர் பாண்டியராஜன், செயலாளர் ஆறுமுகம், பொருளாளர் சங்கர்ஜவான் மற்றும் பலர் வரவேற்றனர்.

    • ராமநாதபுரம் ஏஒன் திருமண மகால் நிறுவனர் சாத்தான்குளம் சகாபுதீன் இல்ல திருமண விழாவில் எம்.பி., முன்னாள் அமைச்சர்கள் கலந்துகொண்டு வாழ்த்தினர்.
    • மணமக்களுக்கு நினைவு பரிசுகள் வழங்கப்பட்டன.

    பனைக்குளம்

    ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஊராட்சி ஒன்றியம் சாத்தான்குளம் கிராமத்தை சேர்ந்த சிங்கப்பூர் தொழில் அதி பரும், ராமநாதபுரம் ஏஒன் திருமண மகால் நிறுவனருமான சகாபுதீன்-லைலத்து அரசியா பானு ஆகியோரது மகன் பட்டதாரி ஹபீப் ரகுமானுக்கும், புதுக்கோட்டையை சேர்ந்த சிங்கப்பூர் தொழிலதிபர் முகமது ஹலீம்-ஜானம்மாள் ஆகியோரது மகள் பட்டதாரி இர்ஷாத் பர் ஹானாவுக்கும் பெரியோர்களால் திருமணம் நிச்சயிக்கப் பட்டது.

    இவர்களது திருமண நிக்கா ஏஒன் திருமண மகால் வளாகத்தில் சாத்தான்குளம் முஸ்லிம் ஜமாத் தலைவர் காபத்துல்லா, மலேசியா சாத்தான்குளம் ஜமாத் தலைவர் அயூப்கான், மற்றும் ஜமாத் நிர்வாகிகள், சங்க நிர்வாகிகள் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.

    திருமண நிக்கா நிகழ்ச்சியை புதுக்கோட்டை தெற்கு 2-ம் வீதி ஜாமிஆ மஸ்ஜித் ஜமாத்தார்கள் மற்றும் நிர்வாகிகள் நடத்தி வைத்தனர். சாத்தான்குளம் பள்ளிவாசல் தலைமை இமாம் சுலைமான் சிறப்பு துவா ஓதி மணமக்களை வாழ்த்தினார்.

    முன்னதாக ஆலிம்கள் மணமக்களுக்கு பல்வேறு அறிவுரைகளை வழங்கும் வகையில் சிறப்பு சொற்பொழிவு ஆற்றி மண மக்களை வாழ்த்தினர்.

    திருமண விழாவில் கே.நவாஸ்கனி எம்.பி., முன்னாள் அமைச்சர்கள் அன்வர் ராஜா, டாக்டர் மணிகண்டன் ஆகியோர் மணமக்களுக்கு நினைவு பரிசு கொடுத்து வாழ்த்தினர்.

    மணமக்களின் வரவேற்பு நிகழ்ச்சியில் சிங்கப்பூர், மலேசியா, அரபு நாடுகள் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து தொழிலதிபர்கள் குடும்பத்தினருடன் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

    தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த பிரமுகர்கள் தொழிலதி பர்கள் கலந்து கொண்டு மணமக்களுக்கு நினைவு பரிசுகள் வழங்கி வாழ்த்தினர்.

    ராமநாதபுரம் மாவட்டத்தில் தி.மு.க. கட்சி நிர்வாகிகள் உள்பட பல்வேறு அரசியல் கட்சி களின் தலைவர்கள் மற்றும் கட்சிகளின் நிர்வாகிகள் விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

    விழாவில் அரசுத்துறை அதிகாரிகள், காவல்துறை யினர், அரசு அலுவலர்கள், மருத்துவர்கள், ஆசிரியர்கள், வக்கீல்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், கட்டிட பொறியாளர்கள், வர்த்தக பிரமுகர்கள், ஆலிம் பெருமக்கள் அனைத்து சமுதாயத்தைச் சேர்ந்த பிரமுகர்கள், பொதுமக்களும் திரளாக கலந்து கொண்டனர்.

    விழா சிறப்பாக நடைபெற வேண்டி மணமக்களை வாழ்த்தி மணமகன் மாமா சித்தார்கோட்டை ரபி அகமது- பலிலா பேகம் குடும்பத்தினர். ராமநாதபுரம் என்.எஸ்.ஏ. குரூப் ஆப் நிறுவனங்களின் தலைவர் ஹசன் அலியார் மற்றும் குடும்பத்தினர், அல்பரிதா குரூப் ஆப் நிறுவனங்களின் தலைவர் அபுல்கலாம் குடும்பத்தினர், கீழக்கரை மெரினா கன்ஸ்ட்ரக்சன் நிறுவனர் சுல்தான் சம்சுல் கபீர் பாரதி நகர் அஜந்தா பேக்கரி எம். சுலைமான், திருச்செந்தூர் முருகன் டிரான்ஸ்போர்ட் நிறுவனர் என்.களஞ்சியம். என்.பத்மநாதன் உள்ளிட்ட பிரமுகர்கள் மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர். சாத்தான்குளத்தை சேர்ந்த வெளிநாட்டில் வசிக்கும் தொழில்அதிபர்கள் தங்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

    மணமக்கள் வீட்டார் சார் பில் சித்தார்கோட்டை ரபி அகமது, தீன் டிராவல்ஸ் உரி மையாளர் சாத்தான்குளம் உசைதீன் ஆகியோர்கள் வர வேற்றனர். ஏற்பாடுகளை மணமக்கள் வீட்டார் சார்பில் ஷஹ் பாஸ் முகம்மது, வஜிஹா பானு, நஜீப்முகம்மது, ஜஸ்ரா, முகம்மதுஹலீம், ஜானம்மாள், முகம்மது இர்பான், முகம்மது அலி ஜின்னா, ஜெய்த்துன்பீவி, முகம்மது கலிபுல் அமீன், அனீஸ் பாத்திமா உள்பட ஏஒன் மஹால் நண்பர்கள் மற்றும் குடும்ப உறவினர்கள் செய் திருந்தனர். அனை வருக்கும் ஏஒன் மஹால் நிறுவனர் சகாபுதீன், குடும்பத்தினர் சார்பில் நன்றியை தெரிவித்தார்.

    • மாநாட்டில் கலந்து கொள்ள இருக்கிற குழந்தைகளை கலெக்டர் அவரது அலுவலகத்திற்கு அழைத்து வாழ்த்தினார்.
    • விழா ஏற்பாடுகளை அறிவியல் இயக்க மாவட்ட செயலாளர் முருகன் செய்திருந்தார்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் மாவட்ட அளவில் தேர்வு செய்யப்பட்டு மாநில மாநாட்டில் கலந்து கொள்ள இருக்கின்ற குழந்தைகளை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் அவரது அலுவலகத்திற்கு அழைத்து வாழ்த்தினார்.

    இந்த விழாவை அறிவியல் இயக்க மாநில துணை தலைவர் பேராசிரியர் டாக்டர்.சுகுமாரன் தலைமை யேற்று நடத்தினார்.

    முதன்மை கல்வி அலுவலர்சிவக்குமார்மு ன்னிலை வகித்தார்.இந்தியன் வங்கி ஊழியர் அசோசியேசன் பள்ளி மாணவிகள் ஆராதனா , அபர்னிகா. பயிற்சி ஆசிரியை பிரியதர்சினி, மற்றும் தலைமை அறங்காவலர் தோழர்.சோமசுந்தரம் தாளாளர் தோழர்.ஜி.பாலசந்திரன், அறங்காவலர் தோழர்.சொக்கலிங்கம், ஆகியோர் பங்கேற்றனர்.

    விழா ஏற்பாடுகளை அறிவியல் இயக்க மாவட்ட செயலாளர் முருகன் செய்திருந்தார்.

    ×