search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அங்கன்வாடிகள்"

    குழந்தைகள் போதிய ஊட்டச்சத்து பெற மதிய உணவுத் திட்டம் மூலம் பள்ளிகள், அங்கன்வாடிகளில் பால் மற்றும் பால் பொருட்களை அளிப்பதற்கு அரசு ஏற்பாடு செய்து வருகிறது. #Milk #Anganwadi
    புதுடெல்லி:

    இந்தியாவில் கடந்த நிதியாண்டில் பால் உற்பத்தி 176.35 மில்லியன் டன்னாக அதிகரித்திருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. வரும் 2021-22-ம் ஆண்டில் இந்தியாவில் பால் உற்பத்தி 254.5 மில்லியன் டன்னாக உயரக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த பால் உற்பத்தியாளர்கள் தாங்கள் உற்பத்தி செய்யும் பாலுக்கு போதிய விலை கிடைக்காததால் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர். இந்த பிரச்சனைக்கு தீர்வு காண மகாராஷ்டிராவில் பால் உற்பத்தியாளர்கள் சமீபத்தில் தொடர் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

    பால் உற்பத்தியாளர்களால் அதிக அளவில் உற்பத்தி செய்யப்படும் பாலை பயன்படுத்தும் நோக்கிலும் பாலுக்கு போதிய விலை கிடைப்பதை உறுதி செய்யும் வகையிலும் மத்திய அரசு புதிய திட்டத்தை தீட்டியது. அதாவது பள்ளிகள், அங்கன்வாடிகளில் மதிய உணவு திட்டத்தின் கீழ் வாரத்துக்கு 2 நாட்கள் பால் வழங்கலாம் என்று திட்டம் வகுத்தது.

    இந்த திட்டத்துக்கு மாநில அரசுகளின் கருத்துக்களை மத்திய அரசு கேட்டிருந்தது. இது தொடர்பாக மத்திய கால்நடை மற்றும் பால் உற்பத்தித்துறை செயலாளர் தருண் ஸ்ரீதர் கூறியதாவது:-


    மதிய உணவுத் திட்டம் மூலம் பள்ளிகள், அங்கன் வாடிகளில் பால் மற்றும் பால் பொருட்களை அளிப்பதற்கான ஏற்பாடுகளை செய்யும்படி மாநில அரசுகளை மத்திய அரசு கேட்டிருந்தது. இதற்கு பெரும்பாலான மாநிலங்கள் ஒப்புதல் தெரிவித்துள்ளன.

    ராஜஸ்தான் மாநிலம் ஏற்கெனவே இதை செயல்படுத்தி வருவதாக தெரிவித்துள்ளது. இந்த திட்டத்தை செயல்படுத்துவதன் மூலம் எதிர்கால சந்ததியினர் போதிய ஊட்டச்சத்து பெறுவதை உறுதி செய்ய முடியும் என்று அரசு கருதுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.  #Milk #Anganwadi
    திருச்சிற்றம்பலம் பகுதியில் உள்ள அங்காடிகளில் 20 கிலோ அரிசி வழங்குவதற்கு பதிலாக ஊழியர்கள் குறைத்து 17 கிலோ வழங்குவதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
    திருச்சிற்றம்பலம்:

    திருச்சிற்றம்பலம் பகுதியில் உள்ள அங்காடிகளில் கடந்த 2 மாதங்களாக ரேசன் அரிசியின் அளவு குறைத்து வழங்கப்படுவதாக பட்டுக்கோட்டை வட்டவழங்கல் அதிகாரியிடம் பொதுமக்கள் நேரில் புகார் மனு அளித்தனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

    தஞ்சை மாவட்டம், திருச்சிற்றம்பலம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க நிர்வாகத்தின் கீழ் 8 முழுநேர அங்காடிகளும் 9 பகுதி நேர அங்காடிகளும் செயல்பட்டு வருகின்றன. இவற்றின் மூலமாக குடும்ப அட்டைதாரர்களுக்கு அரிசி, கோதுமை, சீனி, பாமாயில், மண்ணெண்ணை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

    இந்நிலையில், கடந்த 2 மாதங்களாக திருச்சிற்றம்பலம் பகுதிகளில் உள்ள அங்காடிகளில் வழக்கமாக வழங்கப்படும் ரேசன் அரியை வழங்காமல், அளவு குறைத்து வழங்குவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். அதாவது ஒரு ரேசன் கார்டுக்கு 20 கிலோ அரிசியும் வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழும் மக்களுக்கு சிறப்பு திட்டத்தின் கீழ் 35 கிலோ அரிசியும் வழங்கப்பட்டு வருகிறது.

    ஆனால், கடந்த 2 மாதங்களாக 20 கிலோ அரிசிக்கு பதிலாக 17 கிலோவும், 35 கிலோவுக்கு பதிலாக 30 கிலோ அரிசியும் வழங்கப்படுவதாக கூறப்படுகிறது. ஆனால், அலைபேசிகளில் குடும்ப அட்டைதாரருக்கு 17 கிலோவிற்கு பதிலாக 20 கிலோவும் 30 கிலோவிற்கு பதிலாக 35 கிலோ ரேசன் அரிசியும் எஸ்.எம்.எஸ். வந்துள்ளன. இதுபற்றி அங்காடி விற்பனையாளரிடம் கேட்டால் ரேசன் அரிசியினை அரசு குறைவாக அனுப்பி உள்ளதாக கூறுகின்றனர். கொடுக்கப்படும் அளவிற்கு ஏற்ப குறுந்தகவல் அனுப்பாமல் கூடுதலாக ரேசன் அரிசி வழங்கியதாக வந்த தகவல் பற்றி கேட்டால் உரிய பதில் இல்லை.

    எனவே, இனியும் தாமதிக்காமல், திருச்சிற்றம் பலம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தின் அங்காடிகளில் உள்ள அனைத்து பதிவேடுகளையும் முழு ஆய்வு செய்து, குறைவாக ரேசன் அரிசி வழங்கிய நபர்களுக்கு அந்த அரிசியினை மீண்டும் வழங்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டுமென தமிழக முதலமைச்சர், தஞ்சை மாவட்ட கலெக்டர் மற்றும் பட்டுக்கோட்டை வட்ட வழங்கல் அலுவலர் ஆகியோருக்கு திருச்சிற்றம்பலம் பகுதியில் உள்ள குடும்ப அட்டைதாரர்கள் கோரிக்கை மனு அனுப்பி உள்ளனர்.
    ×