என் மலர்
நீங்கள் தேடியது "சிறுவர்கள்"
- பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபடக்கூடாது.
- 18 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் இருசக்கர வாகனங்களை உபயோகப்படுத்தக் கூடாது.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் கட்டுமாவடி ஊராட்சி நடுக்கடை கடைத்தெருவில் திட்டச்சேரி காவல்துறை சார்பில் மாணவர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபடக்கூடாது, 18 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் இருசக்கர வாகனங்களை உபயோகப்படுத்தக் கூடாது, இரு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும், சிறுவர்கள் புகையிலை, பான் மசாலா உள்ளிட்ட போதை பொருட்களை உபயோகப்படுத்தக் கூடாது என்பன உள்ளிட்ட பல்வேறு செயல்கள் குறித்து திட்டச்சேரி சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ் ராமகிருஷ்ணன் பேசினார்.
இதில் காவலர் நற்குணம் மற்றும் போலீசார், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
- திருப்பூர் மாவட்டத்தைச் சுற்றியுள்ள கோயம்புத்தூர், நீலகிரி உள்ளிட்ட சில மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை அதிகளவில் பெய்து வருகிறது.
- நீர்பிடிப்பு பகுதிகளில் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது.
திருப்பூர் :
உடுமலைப்பேட்டை அமராவதி அணை மற்றும் அதன் நீர் பிடிப்பு பகுதிகளில்வடகிழக்கு பருவமழை பெய்து வருவதால் அணைக்கு வரும் நீர்வரத்து அதிகரித்து, ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்பு உள்ளதால் பொதுமக்கள்எச்சரிக்கையாக இருக்குமாறு திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- திருப்பூர் மாவட்டத்தைச் சுற்றியுள்ள கோயம்புத்தூர், நீலகிரி உள்ளிட்ட சில மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை அதிகளவில் பெய்து வருகிறது. அதன் காரணமாக திருப்பூர் மாவட்டத்தில், இம்மாவட்டங்களை ஒட்டியுள்ள நீர்பிடிப்பு பகுதிகளில் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. மேலும் திருப்பூர் மாவட்டத்திலும் சில பகுதிகளில் பருவமழை பெய்து வருவதன் மூலம் மேலும் நீர்வரத்து அதிகரிக்க வாய்ப்புள்ளது. சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் திருப்பூர், திருவள்ளூர், இராணிபேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், கள்ளக்குறிச்சி, நீலகிரி, கோயம்புத்தூர், திண்டுக்கல் மற்றும் தேனி ஆகிய மாவட்டங்களில் கனமழை முதல் அதி கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில் உடுமலைப்பேட்டை வட்டம், அமராவதி அணை மற்றும் அதன் நீர்பிடிப்பு பகுதிகளில் பருவமழை பெய்து வருவதால் அணைக்கு நீர்வரத்து அதிகளவு இருந்து வருகிறது. அமராவதி அணையின் முழு கொள்ளவான 90 அடியினை எட்ட உள்ள நிலையில், உபரி நீர் அமராவதி ஆற்றில் திறந்துவிடப்பட்டுள்ளது. இதன் காரணமாக இன்னும் அதிகமாக ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்பு உள்ளது.
அமராவதி ஆற்றின் கரையோரம் மற்றும் இதர தாழ்வான பகுதிகளில் வசித்து வரும் பொதுமக்கள் விழிப்புடனும் முன்னெச்சரிக்கையுடனும் பாதுகாப்பாக இருக்குமாறும், பொதுமக்கள் ஆற்றில் இறங்கவோ, குளிக்கவோ, துணி துவைக்கவோ முற்றிலும் தடை விதிக்கப்பட்டு, ஆற்றின் கரையோரம் உள்ள பொதுமக்களுக்கு ஒலிபொருக்கி மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு, ஆற்றில் நீர்வரத்து தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.
மேலும் குழந்தைகளை நீர்நிலைகளில் குளிப்பதற்கோ, விளையாடுவதற்கோ அனுமதிக்க கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு மற்றும் கரூர் ஆகிய மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழையின் காரணமாக நொய்யலாற்றின் நீர்பிடிப்பு பகுதிகளில் நீர்வரத்து அதிகளவில் உள்ளதால், நல்லாற்றின் குறுக்கே அமைந்துள்ள சர்க்கார் பெரியபாளையம் குளத்திற்கும், நொய்யல் ஒரத்துப்பாளையம் நீர்த்தேக்கத்திற்கும் மற்றும் முத்தூர் கதவணைக்கும் எந்த நேரத்திலும் மேலும் வெள்ள நீர் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
நொய்யல் ஆற்றின் கரையோரம் மற்றும் இதர தாழ்வான பகுதிகளில் வசித்து வரும் பொதுமக்கள் விழிப்புடனும் முன்னெச்சரிக்கையுடனும் பாதுகாப்பாக இருக்குமாறும், பொதுமக்கள் ஆற்றில் இறங்கவோ, குளிக்கவோ, துணி துவைக்கவோ, செல்போன் மூலம் செல்பி எடுக்கவோ முற்றிலும் தடை விதிக்கப்பட்டு, ஆற்றின் கரையோரம் உள்ள பொதுமக்களுக்கு ஒலிப்பொருக்கி மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு, ஆற்றில் நீர்வரத்து தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
- நெல்லை மேலப்பாளை யத்தை அடுத்த சிவராஜபுரத்தைச் சேர்ந்த 13 வயது சிறுவன் நேற்று தனது வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தான்.
- இது குறித்து சிறுவர்களிடம் கேட்டபோது தந்தை திட்டிய கோபத்தில் திருச்செந்தூர் கோவிலுக்கு சென்று விட்டதாக அவர்கள் தெரிவித்தனர்.
நெல்லை:
நெல்லை மேலப்பாளை யத்தை அடுத்த சிவராஜபுரத்தைச் சேர்ந்த 13 வயது சிறுவன் நேற்று தனது வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது அவன் சரியாக பள்ளிக்கு செல்வதில்லை என்று கூறி அவரது தந்தை திட்டியதாக கூறப்படுகிறது.
இதனால் கோபமடைந்த அந்த சிறுவன் வீட்டில் இருந்த பணத்தில் ரூ. 500-ஐ எடுத்துக் கொண்டு தனது வீட்டின் எதிரே வசிக்கும் ஒருவரது 9 வயது மகனை அழைத்துக் கொண்டு சென்று விட்டான். இரவு வெகு நேரம் ஆகியும் அவர்கள் 2 பேரும் வீட்டுக்கு வரவில்லை.
இதனால் அதிர்ச்சி அடைந்த 2 சிறுவர்களின் பெற்றோரும் மேலப்பாளையம் போலீசில் புகார் அளித்தனர்.அதன்பேரில் இன்ஸ்பெக்டர் பொன்ராஜ் தலைமையிலான போலீசார் 2 பேரையும் தேடி வந்த நிலையில் சிறுவர்கள் நள்ளிரவு நேரத்தில் புதிய பேருந்து நிலையத்தில் திருச்செந்தூரில் இருந்து வந்த பஸ்ஸில் இருந்து இறங்கியுள்ளனர்.
அவர்களை போலீசார் மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர். இது குறித்து சிறுவர்களிடம் கேட்டபோது தந்தை திட்டிய கோபத்தில் திருச்செந்தூர் கோவிலுக்கு சென்று விட்டதாக அவர்கள் தெரிவித்தனர்.
- கடந்த 22-ந்தேதி குற்ற வழக்குகளில் ஈடுபட்ட 6 சிறுவர்கள் தப்பித்து சென்றனர்.
- இந்த நிலையில் போலீசார் தீவிர தேடுதலில் ஈடுபட்டு சிறுவர்களை பிடித்தனர்.இந்த நிலையி
கடலூர்:
கடலூர் சாவடியில் அரசினர் கூர்நோக்கு இல்லம் செயல்பட்டு வருகின்றது. கடந்த 22-ந்தேதி குற்ற வழக்குகளில் ஈடுபட்ட 6 சிறுவர்கள் தப்பித்து சென்றனர். இந்த நிலையில் போலீசார் தீவிர தேடுதலில் ஈடுபட்டு சிறுவர்களை பிடித்தனர்.இந்த நிலையில் மனித உரிமை ஆணைய உறுப்பினர் கண்ணதாசன் இன்று காலை கடலூர் அரசினர் கூர்நோக்கு இல்லத்திற்கு நேரில் வருகை தந்தார். பின்னர் அங்கிருந்த சிறுவர்களை அழைத்து விசாரணை செய்தார்.
மேலும் தப்பித்து சென்று பிடிபட்ட சிறுவர்களிடமும் தீவிர விசாரணை நடத்தினார். அப்போது கடலூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் அரவிந்தன் மற்றும் பலர் உடனிருந்தனர்.
- கோயம்பேடு பஸ் நிலையத்தில் சுற்றி திரிந்த 6 சிறுவர்களில் 3 பேரை போலீசார் மீட்டனர்.
- தப்பியோடிய 3 பேரை தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர்.
சென்னை:
சென்னை புரசைவாக்கம் கெல்லீசில் உள்ள சிறுவர் சீர்திருத்த பள்ளியில் சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் குற்ற செயல்களில் ஈடுபட்ட 23 சிறுவர்கள் அடைக்கப்பட்டு உள்ளனர்.
இந்நிலையில் நேற்று இரவு 9.30 மணியளவில் சிறுவர்கள் அடைக்கப்பட்டி ருந்த கதவு உடைப்பது போன்ற சத்தம் காவலாளிக்கு கேட்டதால், உடனடியாக சென்று பார்த்தார். அப்போது கதவு உடைக்கப்பட்டு சிலர் தப்பி சென்றது தெரியவந்தது. இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த காவலாளி இது குறித்து உடனடியாக தலைமைச் செயலக காலனி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
போலீஸ் விசாரணையில் மணலி காவல் நிலையத்தில் குற்றவழக்கு ஒன்றில் கைதான சிறுவன் அறையின் இரும்பு கதவுகளை கடப்பா கல் மூலமாக உடைத்து தப்புவது தெரிய வந்தது. மீதமுள்ள அனைத்து அறை களையும் உடைத்து மற்ற சிறுவர்களையும் தப்பிக்க வைக்க முயற்சி செய்திருப்ப தும் தெரிய வந்தது. இதனையடுத்து சிறுவர் சீர்திருத்த பள்ளியில் இருந்து கதவை உடைத்து தப்பி ஓடிய 6 சிறுவர்களை போலீசார் அருகில் உள்ள முட்புதரில் தீவிரமாக தேடினர்.
இந்நிலையில் கோயம்பேடு பஸ் நிலையத்தில் சுற்றி திரிந்த 6 சிறுவர்களில் 3 பேரை போலீசார் மீட்டனர். தப்பியோடிய 3 பேரை தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர்.
- வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள நபர்களை குறிவைத்து குழந்தைகள் விற்பனை செய்யப்படுவது தொடர்ந்து நடந்து வருகிறது.
- சமூகநலத்துறை அதிகாரிகள் போதிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
வருசநாடு:
தேனி மாவட்டத்தின் பெரும்பகுதி விவசாயம் சார்ந்த தொழிலாகவே உள்ளது. இங்குள்ள மக்கள் விவசாயிகள், விவசாய கூலித்தொழிலாளர்களாக உள்ளனர். இவர்களில் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள நபர்களை குறிவைத்து குழந்தைகள் விற்பனை செய்யப்படுவது தொடர்ந்து நடந்து வருகிறது. சிறுவயதில் பள்ளிக்கு செல்லாத 18 வயதுக்கு குறைவாக உள்ள குழந்தைக்கு ரூ.10ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் வரை விலைபேசி வெளிமாநிலத்திற்கு வேலைக்கு அழைத்துச்செல்கின்றனர்.
வறுமையில் உள்ள பெற்றோருக்கு அந்த தொகை மிகப்பெரிய பணமாக தெரிவதால் பலர் தங்கள் குழந்தையை விற்றுவிடுகின்றனர். இதுபோல விற்பனை செய்யப்படும் குழந்தைகள் அவர்களின் கொடுமை தாங்காமல் அங்கிருந்து தப்பிவிடுகின்றனர். மொழி தெரியாத மாநிலத்திற்கு செல்லும் குழந்தைகள் அங்கிருந்து தப்பி குற்றசெயல்களில் ஈடுபட்டு சிறைக்கு செல்லும் அவலமும் நடந்து வருகிறது.
ஆண்டிபட்டி அருகில் உள்ள வேலப்பர் கோவில் பகுதியை சேர்ந்த ரவி மகன் தமிழரசன்(14), வேல்முருகன் மகன் ஞானவேல், பட்டவராயன்(17) ஆகிய 3 பேரை கடந்த 6 மாதங்களுக்கு முன்பு மதுரை மாவட்டம் உசிலம்பட்டியை சேர்ந்த ஒருவர் மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள ஓட்டலுக்கு வேலைக்கு அழைத்துச்சென்றார். சில மாதங்கள் அவர்கள் தங்கள் பெற்றோருடன் பேசி வந்த நிலையில் அதன்பிறகு எவ்வித தொடர்பும் இல்லாமல் இருந்துள்ளனர்.
அவர்களது செல்போன் இணைப்பு கிடைக்கவில்லை. இதுகுறித்து வேலைக்கு அழைத்துச்சென்ற உசிலம்பட்டியை சேர்ந்த ஏஜென்டிடம் கேட்டபோது அவர்கள் 3 பேரும் ஓட்டலில் திருடிவிட்டனர். அதனால் கடந்த 10 நாட்களுக்கு முன்பே அவர்களை வேலையில் இருந்து நிறுத்திவிட்டோம் என்று பொறுப்பில்லாமல் பதில் அளித்துள்ளார். 18 வயதுக்கு குறைந்த சிறுவர்களை வேலைக்கு அமர்த்துவதே குற்றம் என்று தொழிலாளர் நலத்துறை அறிவுறுத்தி வரும் நிலையில் சிறுவர்களை கொத்தடிமையாக வேலைக்கு அழைத்துச்சென்று தற்போது அவர்கள் எங்கே உள்ளனர் என தெரியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து சிறுவர்களின் பெற்றோர்கள் ராஜதானி போலீஸ் நிலையத்தில் கொடுத்துள்ள புகாரின்பேரில் இன்ஸ்பெக்டர் சத்யபிரபா, சப்-இன்ஸ்பெக்டர் முஜிபுர்ரகுமான் ஆகியோர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதேபோல கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஆண்டிபட்டி அருகில் உள்ள கடமலைக்குண்டு கரட்டு காலனியை சேர்ந்த 2 சிறுவர்கள் வெளிமாநிலத்திற்கு வேலைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அவர்களது நிலையும் தற்போது என்ன ஆனது என தெரியாமல் அவர்களது பெற்றோர் அதிர்ச்சியில் உள்ளனர். மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இதுபோன்ற குழந்தை விற்பனை நடைபெற்று வருகிறது. ஒருபுறம் மைனர் பெண்குழந்தைகளுக்கு திருமணம் நடத்திவரும் ஏழை பெற்றோர் வறுமை காரணமாக தங்கள் ஆண்குழந்தைகளை விற்பனைக்காக வெளிமாநிலத்திற்கு விற்று வருகின்றனர்.
இதுகுறித்து சமூகநலத்துறை அதிகாரிகள் போதிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். குழந்தைகளை விலை கொடுத்து வாங்கிச்செல்லும் ஏஜெண்டுகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
- பெரியவர்கள் தங்கள் குழந்தைகளுக்கு இடம் இல்லாததால் கழிவறையில் நின்று பயணம் செய்ய அனுமதிக்கின்றனர்.
- புதுச்சேரியில் இருந்து தாம்பரம் வரை இந்த அவலநிலை நீடிக்கிறது.
சென்னை:
சென்னை எழும்பூரில் இருந்து புதுச்சேரிக்கு நேரடி ரெயில் சேவை காலை மற்றும் மாலையில் உள்ளது.
முன்பதிவு இல்லாத இந்த ரெயிலில் சாதாரண டிக்கெட் பெற்று பயணிகள் எளிதில் பயணம் செய்ய முடியும் ரெயில் புறப்படுவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பாக வந்தால் இருக்கை கிடைத்துவிடும்.
ஆனால் புறப்படும் நிலையத்தை தவிர இடையில் உள்ள நிலையங்களில் மக்கள் கூட்டம் கூட்டமாக ஏறுவதால் இருக்கைகள் மட்டுமின்றி உடமைகள் வைக்கக் கூடிய பகுதி, நடைபாதையில் எல்லாம் மக்கள் அமர்ந்து பயணம் செய்கின்றனர்.
குறிப்பாக புதுச்சேரியில் இருந்து அதிகாலை 5.30 மணிக்கு புறப்பட்டு எழும்பூருக்கு காலை 9 மணிக்கு வந்து சேரும் பாசஞ்சர் ரெயிலில் கட்டுக்கடங்காத கூட்டம் உள்ளது.
அந்த ரெயில் விழுப்புரம், திண்டிவனம், செங்கல்பட்டு, மேல்மருவத்தூர் போன்ற நிலையங்கள் தவிர சிறிய நிலையங்களிலும் நின்று செல்வதால் வழி நெடுக மக்கள் ஏறுகிறார்கள். இதனால் படிக்கட்டில் நின்று பயணம் செய்கின்ற நிலை காணப்படுகிறது.
பெண்கள், வயதானவர்கள் ரெயில் பெட்டியில் இடம் இல்லாததால் வழியில் அமர்ந்து பயணிக்கின்றனர். சிலர் கழிவறையில் நின்று பயணம் செய்கின்றனர். பெரியவர்கள் தங்கள் குழந்தைகளுக்கு இடம் இல்லாததால் கழிவறையில் நின்று பயணம் செய்ய அனுமதிக்கின்றனர். கழிவறையில் நின்றால் யாருக்கும் இடையூறாக இருக்காது எனக் கருதி அங்கே விட்டு விடுகின்றனர்.
பாதுகாப்பு இல்லாத சுகாதாரமில்லாத அந்த இடத்தில் சிறுவர்கள் மட்டுமின்றி பெண்களும் நிற்கின்றனர். இதனால் அவசரமாக கழிவறையை பயன்படுத்த நினைப்பவர்கள் அங்கு செல்ல முடியாத நிலை உள்ளது. புதுச்சேரியில் இருந்து தாம்பரம் வரை இந்த அவலநிலை நீடிக்கிறது.
எனவே புதுச்சேரி - சென்னை இடையே ரெயில் சேவையை அதிகரிக்க வேண்டும் என்று ரெயில் பயணிகள் வேண்டுகோள் வைக்கின்றனர்.
- கடந்த 15 நாட்களாக மத்திய பிரதேசம் மாநிலத்திற்கு வேலைக்கு சென்ற சிறுவர்கள் 3 பேர்களும் அவர்களது பெற்றோர்களிடம் தொலைபேசியில் பேசவில்லை.
- போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு 3 சிறுவர்களும் எங்கே இருக்கிறார்கள் என்று பல்வேறு கோணங்களில் அங்குள்ள போலீசார் உதவியுடன் தேடினர்.
வருசநாடு:
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே ராஜக்காள் பட்டி ஊராட்சியில் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் கதிர்வேல்புரம் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் 50க்கும் மேற்பட்ட மலைவாழ் பளியர்இன குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் வசிக்கும் மலைவாழ் மக்களான சீனி மகன் பட்டவராயன் (வயது 16), வேல்முருகன் மகன் ஞானவேல் (15), ரவி மகன் தமிழரசன் (14) ஆகிய 3 சிறுவர்களையும் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பகுதியை சேர்ந்த 2 பேர் மத்திய பிரதேசம் மாநிலம் இந்தூர் பகுதிக்கு இட்லி கடைக்கு வேலைக்கு செல்வதாக கூறி கடந்த 6 மாதங்களுக்கு முன்பு அழைத்து சென்றுள்ளனர்.
அவர்களது பெற்றோர்களிடம் சிறுவர்கள் தொடர்ந்து தொலைபேசி மூலம் பேசி வந்தனர். இந்நிலையில் கடந்த 15 நாட்களாக மத்திய பிரதேசம் மாநிலத்திற்கு வேலைக்கு சென்ற சிறுவர்கள் 3 பேர்களும் அவர்களது பெற்றோர்களிடம் தொலைபேசியில் பேசவில்லை.
இதையடுத்து வேலைக்காக அழைத்துச் சென்ற உசிலம்பட்டி பகுதியை சேர்ந்தவர்களை பெற்றோர்கள் தொடர்பு கொள்ள முயன்றும் முடியாததால் ராஜதானி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.
புகாரின் பேரில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவீன் உமேஷ் டோங்கரே உத்தரவின் பேரில், ராஜதானி இன்ஸ்பெக்டர் சத்தியபிரபா, சப்-இன்ஸ்பெக்டர் முஜிபுர்ரஹ்மான், தலைமைக்காவலர் தங்கப்பாண்டி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு சிறுவர்களை மீட்க மத்திய பிரதேசத்திற்கு விரைந்தனர்.
போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு 3 சிறுவர்களும் எங்கே இருக்கிறார்கள் என்று பல்வேறு கோணங்களில் அங்குள்ள போலீசார் உதவியுடன் தேடினர். இந்த நிலையில் மத்திய பிரதேச மாநிலம் இந்தூர் மாவட்டத்திலிருந்து 340 கி.மீ. தூரத்தில் சாகர் மாவட்டத்தில் உள்ள ஒரு குக்கிராமத்தில் 3 சிறுவர்களும் இருப்பதாக தகவல் அறிந்து அங்கு விரைந்து சென்று மீட்டனர். இதையடுத்து ஆண்டிபட்டி கோர்ட்டில் குழந்தைகளை ஆஜர்படுத்தி அதன் பின்னர் பெற்றோர்களிடம் ஒப்படைத்தனர்.
போலீசார் மாயமான சிறுவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில் தங்களுக்கு படிப்பு அறிவு இல்லை என்றும், இட்லி கடை வேலைக்காக சென்று அங்கு வேலை பிடிக்காமல் தாங்களாகவே வெளியேறி சென்றதாகவும்,
பின்னர் ஆழ்துளை கிணறு தோண்டும் பணிக்காக லாரியுடன் வந்த தமிழ்நாடு தொழிலாளர்களுடன் சேர்ந்து இடம் பெயர்ந்ததும் தெரிய வந்தது. 3 சிறுவர்களையும் விைரந்து மீட்ட போலீசாரை பொதுமக்கள் பாராட்டினர்.
- பழைய பாரம்பரிய நடைமுறைகளை கொண்டாடுவது என மக்கள் முடிவு செய்தனர்
- சிறப்பு விருந்து ஒன்றுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டது. கிராமவாசிகளும் அதில் கலந்து கொண்டனர்.
பெங்களூரு:
கர்நாடகாவின் பல்வேறு பகுதிகளில் கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது, இந்த ஆண்டு அதிக அளவு மழை பெய்யவில்லை என கூறப்படுகிறது. மழை வேண்டி பல்வேறு முறைகளில் மக்கள் வழிபாடு நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், கர்நாடகாவின் மாண்டியா மாவட்டத்தில் கிருஷ்ணராஜ பேட்டை தாலுகாவுக்கு உட்பட்ட கங்கனஹள்ளி கிராமத்தில் வசிப்பவர்கள் வினோத முடிவு ஒன்றை எடுத்து உள்ளனர்.
இதன்படி, சிறுவர்கள் 2 பேரை பாரம்பரிய ஆடை அணிவித்து அவர்கள் இருவரையும் மணமக்களாக மாற்றி திருமண நிகழ்ச்சி ஒன்றை நடத்தி உள்ளனர்.
அதனுடன், மழை வரவேண்டும் என கிராமவாசிகள் மழை கடவுளிடம் பிரார்த்தனை செய்து கொண்டனர்.
இதன்பின்னர், சிறப்பு விருந்து ஒன்றுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டது. கிராமவாசிகளும் அதில் கலந்து கொண்டனர்.
இதுபற்றி உள்ளூர்வாசிகள் செய்தியாளர்களிடம் கூறும்போது, கடந்த ஆண்டை ஒப்பிடும்பொழுது, கர்நாடகாவில் பருவமழை பலவீனமடைந்து உள்ளது. இந்த ஆண்டில் மழை பற்றாக்குறையாக உள்ளது. இதனால், பழைய பாரம்பரிய நடைமுறைகளை கொண்டாடுவது என மக்கள் முடிவு செய்தனர் என அவர்கள் கூறியுள்ளனர்.
அதிராம்பட்டினம்:
பட்டுக்கோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு பிரித்திவிராஜ் சௌகான் உத்தரவின்படி அதிராம்பட்டினம் இராஜமடம் அண்ணா பல்கலைக்கழகம் அருகில் கடற்கரை சாலையில் ஜார்ஜ்ராஜ், குணசேகரன், ஐயப்பன், விமல், மதி ஆகிய போலீசார் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
ஹெல்மெட் அணிந்து வாகனம் ஓட்ட வேண்டும். சிறுவர்களிடம் வாகனங்களை ஓட்ட விடக்கூடாது என்பது போன்ற பல்வேறு விழிப்புணர்வு அறிவுரைகளை வழங்கினர்.
- தட்டி கேட்ட பெண்ணை தாக்கிய சிறுவர்கள் உள்பட 7 பேர் கைது செய்யப்பட்டனர்.
- ஜெய்ஹிந்துபுரம் போலீஸ் நிலையத்தில் சுகன்யா புகார் செய்தார்.
மதுரை
மதுரை ஜெய்ஹிந்துபுரம் சோலையழகுபுரம் மகாலட்சுமி கோவில் 4-வது குறுக்கு தெருவில் வசிப்பவர் புவனேஷ் குமார். இவரது மனைவி சுகன்யா (வயது23). இவர்கள் முதல் மாடியில் உள்ள வீட்டில் வசித்து வருகின்றனர்.
பக்கத்து வீட்டில் வசிப்பவர் யோகேசுவரன் என்ற நாகரத்தினம். இவ ரும், நண்பர்களும் சேர்ந்து வீட்டின் மொட்டை மாடி யில் மது அருந்தினர். போதை அதிகமான நிலையில் சுகன்யா வீட்டின் மாடியில் வைக்கப் பட்டிருந்த டிஸ் ஆண்ட னாவை உடைத்து கூச்சலிட்டுள்ளனர்.
இதை சுகன்யா தட்டி கேட்டார். இதனால் ஆத்திரமடைந்த 7 அவர்கள் சுகன்யாவை ஆபாசமாக பேசி தாக்கினர்.
இதுகுறித்து ஜெய்ஹிந்துபுரம் போலீஸ் நிலையத்தில் சுகன்யா புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அந்த வாலிபர்கள் டிஸ் ஆண்டனாவை உடைத்து சுகன்யாவை தாக்கியது தெரியவந்தது. இதையடுத்து யோகேசுவரன் என்ற நாகரத்தினம், ஹரி கிருஷ்ணன்(19), தினேஷ் குமார்(22), ரியாஸ் அகமது (18), முகமது பரீத் (18) மற்றும் 2 சிறுவர்கள் உள்பட 7 பேரையும் கைது செய்தனர்.
- தென்பாதி மற்றும் பழைய பஸ் நிலையம் பகுதிகளில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
- இருசக்கர வாகனம் ஓட்டி வந்த சிறுவர்களை பிடித்து போலீசார் எச்சரித்தனர்.
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நிஷா உத்தரவின்படி 18 வயதுக்கு உட்பட்ட பள்ளி மாணவர்கள் மற்றும் சிறுவர்கள் இருசக்கர வாகனங்களில் செல்வதை தடுக்கும் வகையில் சீர்காழி போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் தலைமையில் தீவிர வாகனத் தணிக்கை நடைபெற்றது.
சீர்காழி தென்பாதி மற்றும் பழைய பேருந்து நிலையம் பகுதிகளில் போலீசார் வாகனத் தணிக்கை மேற்கொண்டனர்.
அப்போது இருசக்கர வாகனம் ஓட்டி வந்த சிறுவர்களை பிடித்து போலீசார் எச்சரித்து, அவர்களது பெற்றோருக்கு தகவல் அளித்தனர்.
மீண்டும் இவ்வாறு அவர்கள் வாகனங்கள் இயக்க அனுமதித்தால் சட்டபடி நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.