search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அதிருப்தி"

    ஊழல் புகார்களை விசாரிக்கும் லோக்பால் விவகாரத்தில் மத்திய அரசின் மனு குறித்து நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர். #SupremeCourt #Lokpal
    புதுடெல்லி:

    ஊழல் புகார்களை விசாரிக்கும் ‘லோக்பால்’ அமைக்குமாறு கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டும், லோக்பால் இன்னும் அமைக்கப்படவில்லை. எனவே, மத்திய அரசுக்கு எதிராக ‘காமன் காஸ்’ என்ற தொண்டு நிறுவனம், சுப்ரீம் கோர்ட்டில் கோர்ட்டு அவமதிப்பு மனு தாக்கல் செய்துள்ளது.

    இந்த மனு, தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய அரசு சார்பில் ஆஜரான அட்டார்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால் தாக்கல் செய்த பிரமாண மனுவில், “லோக்பால் உறுப்பினர்களை சிபாரிசு செய்வதற்கான தேடுதல் குழுவை அமைப்பதற்காக, பிரதமர் தலைமையிலான தேர்வுக்குழு கூட்டம் கடந்த 19-ந் தேதி நடைபெற்றது. ஆனால், தேடுதல் குழு இறுதி செய்யப்படவில்லை. இதற்காக விரைவில் அடுத்த கூட்டம் நடைபெறும்” என்று கூறப்பட்டு இருந்தது.

    அதைப்படித்த நீதிபதிகள், மத்திய அரசின் மனு குறித்து அதிருப்தி தெரிவித்தனர். 4 வாரங்களுக்குள் சிறப்பான பிரமாண மனுவை தாக்கல் செய்யுமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட்டனர். #SupremeCourt #Lokpal
    கூடலூரில் பஸ் நிறுத்தங்களை போக்குவரத்து போலீசார் அடிக்கடி மாற்றுவதால் கிராம மக்கள் அதிருப்தி அடைந்து உள்ளனர்.
    கூடலூர்:

    கூடலூரில் இருந்து ஓவேலி, தேவர்சோலை, பாட்டவயல், பந்தலூர், சேரம்பாடி, ஊட்டி, கோவை, ஈரோடு, சேலம், திருப்பூர் உள்ளிட்ட இடங்களுக்கு அரசு பஸ்கள் இயக்கப்படுகிறது. இதுதவிர கேரள-கர்நாடகா பஸ்களும் வந்து செல்கிறது. இதேபோல் ஓவேலி, பந்தலூர் பகுதியை சேர்ந்தவர்கள் வேலைநிமித்தம் காரணமாக கூடலூருக்கு தினமும் வந்து செல்கின்றனர். இதனால் கூடலூர் புதிய பஸ் நிலையத்தில் இருந்து ஓவேலிக்கு செல்லும் பஸ்கள் சக்தி விநாயகர் கோவில் அருகே உள்ள நிறுத்தத்தில் நின்று பயணிகளை அழைத்து செல்வது வழக்கம்.

    இதேபோல் ஊட்டியில் இருந்து வரும் பஸ்கள் கோவிலின் எதிர்புறம் பயணிகளை இறக்கி விட்டு செல்வது வாடிக்கை. மேலும் அதே பகுதியில் சாலையோரம் இருசக்கர வாகனங்கள் நிறுத்தப்பட்டன. இதனால் பயணிகள், பொதுமக்கள், வாகன ஓட்டிகள் எந்தவித சிரமம் இன்றி பயன் அடைந்து வந்தனர்.

    இந்த நிலையில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு போக்குவரத்து போலீசார் தேசிய நெடுஞ்சாலையின் நடுவில் வரிசையாக இரும்பு தடுப்பு கம்பிகளை வைத்தனர். இதனால் கூடலூர்- ஊட்டி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. இதைதொடர்ந்து இருசக்கர வாகனங்களை சாலையோரம் நிறுத்துவதற்கு போலீசார் தடை விதித்தனர். ஆனால் ஆட்டோ, ஜீப் உள்ளிட்ட வாகனங்கள் சாலையில் நிறுத்தி கொள்ள போலீசார் அனுமதி வழங்கினர். இருசக்கர வாகனங்கள் சாலையோரம் நிறுத்த அனுமதிக்காததால் நகராட்சி வணிக வளாகத்தில் நிறுத்தப்பட்டன. ஆனால் வியாபாரிகள் எதிர்ப்பு காரணமாக நகராட்சி வணிக வளாகத்தில் இருசக்கர வாகனங்களை நிறுத்த நகராட்சி நிர்வாகம் தடை விதித்தது.

    இதனால் கூடலூர் கடைசி பகுதியான ராஜகோபாலபுரத்தில் இருசக்கர வாகனங்களை நிறுத்த போலீசார் அனுமதித்தனர். இதனிடையே அரசு பஸ்கள் நிறுத்தும் இடத்தை போக்குவரத்து போலீசார் மாற்றி உள்ளனர். இதனால் கிராம மக்கள் கடும் அதிருப்தி அடைந்து உள்ளனர். ஏற்கனவே பயன்படுத்தி வந்த பஸ் நிறுத்தத்தில் ஆட்டோ, ஜீப் மற்றும் தனியார் வாகனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. இது குறித்து இருசக்கர வாகன ஓட்டிகள், கிராம மக்கள் கூறியதாவது-

    கூடலூரில் போக்குவரத்து போலீசாரின் குளறுபடியால் வாகன நிறுத்தும் இடங்கள் அடிக்கடி மாற்றி அமைக்கப்படுகிறது. மேலும் நாளுக்குநாள் போக்குவரத்து நெருக்கடி அதிகரித்து வருகிறது. சாலையின் இருபுறமும் உள்ள ஆக்கிரமிப்புகளால் தேசிய நெடுஞ்சாலை குறுகலாகி வருகிறது. இதனால் ஆக்கிரமிப்புகளை அகற்றி சாலையை விரிவாக்கம் செய்ய வேண்டும். அவ்வாறு செய்தால் மட்டுமே வாகனங்கள் நிறுத்த போதிய இடம் கிடைக்கும். இல்லை எனில் இப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு கிடைக்காது.

    இவ்வாறு அவர்கள் கூறினர். 
    காங்கிரஸ் பட்ஜெட் புறக்கணிக்கப்பட்டதால் சித்தராமையா கடும் அதிருப்தியை வெளிப்படுத்தி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. #Siddaramaiah #Budjet
    பெங்களூரு:

    கர்நாடக முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா தட்சிண கன்னடா மாவட்டம் பெல்தங்கடி தாலுகா தர்மஸ்தலா உஜிரியில் உள்ள ஆயுர்வேத மருத்துவமனையில் சேர்ந்து இயற்கை சிகிச்சை பெற்று வருகிறார். அத்துடன் அவர் ஓய்வு எடுத்து வருகிறார். இந்த நிலையில் அவரை காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் முனிரத்னா, எஸ்.டி.சோமசேகர், பைரதி பசவராஜ் உள்ளிட்டோர் நேரில் சந்தித்து பேசினார்.

    அப்போது, சித்தராமையா பேசிய பேச்சு அடங்கிய வீடியோ வெளியாகியுள்ளது. மந்திரி பதவி கிடைக்காதவர்கள் கட்சிக்கு எதிராக கருத்து தெரிவித்தது சரியல்ல என்றும் சித்தராமையா கூறினார். புதிய மந்திரிகள் பட்டியலை ராகுல் காந்தி முடிவு செய்ததாகவும், அவரது முடிவுக்கு அனைவரும் கட்டுப்பட வேண்டும் என்றும் அவர் சொன்னார்.

    மேலும் புதிய பட்ஜெட் வேண்டாம் என்று கூறியதாகவும், ஆனால் குமாரசாமி பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளதையும் கூறி சித்தராமையா தனது கடும் அதிருப்தியை வெளிப்படுத்தினார் என்று சொல்லப்படுகிறது. முன்பு தாக்கல் செய்யப்பட்ட காங்கிரஸ் பட்ஜெட்டை புறக்கணித்துவிட்டு புதிய பட்ஜெட்டை தாக்கல் செய்வதால், காங்கிரசின் நிலை என்னாவது என்றும் சித்தராமையா கேள்வி எழுப்பியதாக தெரிகிறது.

    மேலும் டெல்லியில் ராகுல் காந்தியை சந்தித்து குமாரசாமி புதிய பட்ஜெட்டுக்கு அனுமதி பெற்றதாகவும், தான் கூறிய கருத்து குறித்து ராகுல் காந்தியிடம் புகார் செய்ததாகவும், இது தன்னை வேதனை அடைய செய்துள்ளதாகவும் சித்தராமையா தனது ஆதரவாளர்களிடம் வெளிப்படுத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.  #Siddaramaiah #Budjet #Tamilnews 
    ×