search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டிரைவர்கள்"

    • அரசு போக்குவரத்து கழகங்களில் மொத்தம் 1 லட்சத்து 16 ஆயிரம் டிரைவர்கள், கண்டக்டர்கள் மற்றும் ஊழியர்கள் பணிபுரிகிறார்கள்.
    • அரசு போக்குவரத்து கழகத்துக்கு கடந்த 2014-ம் ஆண்டு முதல் ஊழியர்கள் நியமனம் செய்யப்படவில்லை.

    சென்னை:

    தமிழகத்தில் மாநகர போக்குவரத்து கழகங்கள், அரசு விரைவு போக்குவரத்து கழகங்கள் உள்ளிட்ட 8 போக்குவரத்து கழகங்கள் உள்ளன.

    இந்த போக்குவரத்து கழகங்களில் மொத்தம் 20,127 பஸ்கள் உள்ளன. இவற்றில் 18,723 பஸ்கள் தமிழகம் முழுவதும் 10 ஆயிரம் வழித்தடங்களில் இயக்கப்படுகின்றன. 1404 பஸ்கள் இதற்கான மாற்று பஸ்கள் ஆகும். அரசு போக்குவரத்து கழகங்களில் மொத்தம் 1 லட்சத்து 16 ஆயிரம் டிரைவர்கள், கண்டக்டர்கள் மற்றும் ஊழியர்கள் பணிபுரிகிறார்கள்.

    அரசு போக்குவரத்து கழகத்துக்கு கடந்த 2014-ம் ஆண்டு முதல் ஊழியர்கள் நியமனம் செய்யப்படவில்லை. டிரைவர்கள், கண்டக்டர்கள் மற்றும் தொழில்நுட்ப பணியாளர் களுக்கான காலி பணியிடங் கள் அதிகரித்து வருவதால் பஸ்களின் இயக்கத்தில் பெரும் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.

    இந்நிலையில் தமிழக போக்குவரத்து கழகங்களில் இந்த வார இறுதிக்குள் 600 முதல் 700 டிரைவர்கள், கண்டக்டர்கள் மற்றும் ஊழியர்கள் பணி ஓய்வு பெற உள்ளனர். இதனால் போக்குவரத்து கழகங்களில் ஊழியர்களின் எண்ணிக்கை மேலும் குறையும். இதன் காரணமாக பணியாளர்கள் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் உள்ளது.

    இதுகுறித்து போக்குவரத்து கழக அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    தமிழக போக்குவரத்து கழகங்களில் இந்த வார இறுதியில் 600 முதல் 700 ஊழியர்கள் பணி ஓய்வு பெறுவதால் பஸ்களின் இயக்கங்கள் மேலும் பாதிக்கப்படும்.

    தமிழக போக்குவரத்து கழகங்களில் கடந்த 2015-ம் ஆண்டு மார்ச் 3-ந்தேதி நில வரப்படி 1,44,818 ஊழியர்கள் இருந்தனர். ஆனால் கடந்த பிப்ரவரி 28-ந்தேதி நிலவரப்படி 1,16,259 ஊழியர்கள் மட்டுமே உள்ளனர். இந்த இடைப்பட்ட காலத்தில் 28,559 ஊழியர்களின் எண்ணிக்கை குறைந்து உள்ளது.

    போக்குவரத்து கழகங்களுக்கு டிரைவர்களை நியமிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. ஓய்வு பெற்ற டிரைவர்கள், கண்டக்டர்களை ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்த முயற்சி மேற்கொள்ளப்பட்டது. அதற்கு தொழிற்சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஓய்வு பெற்ற டிரைவர்கள் மற்றும் கண்டக்டர்களை ஒப்பந்த முறையில் பணியமர்த்த சி.ஐ.டி.யு., ஏ.ஐ.டி.யு.சி. தொழிற்சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இதை கண்டித்து சி.ஐ.டி.யு. தொழிற்சங்கம் சார்பில் வருகிற 3-ந்தேதி தமிழகம் முழுவதும் தொழிலாளர்துறை அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது. ஏ.ஐ.டி.யு.சி. தொழிற்சங்கம் சார்பில் மண்டல அளவில் வருகிற 6-ந்தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளது.

    காரைக்காலில் இருந்து வேன்களில் மதுபாட்டில்கள் கடத்தி வந்த திருப்பூரை சேர்ந்த 3 டிரைவர்களை போலீசார் கைது செய்தனர். #AlcoholSmuggling
    நாகூர்:

    காரைக்காலில் இருந்து வேன்களில் மதுபாட்டில்கள் கடத்தி வந்த திருப்பூரை சேர்ந்த 3 டிரைவர்களை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்த ரூ. 50 ஆயிரம் மதிப்புள்ள மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

    நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சேகர் தேஷ்முக் உத்தரவின்பேரிலும், உதவி போலீஸ் சூப்பிரண்டு பத்ரிநாராயணன் அறிவுரையின்படியும், நாகூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் குலோத்துங்கன், சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன், ஏட்டு தங்கராசு மற்றும் போலீசார் நேற்று முன்தினம் மாலை வாஞ்சூர் சோதனை சாவடியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த 3 சுற்றுலா வேன்களை மறித்து சோதனை மேற்கொண்டனர். இதில் 3 வேன்களிலும் மதுபாட்டில்கள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து வேன் டிரைவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் திருப்பூர் பெரியார் காலனி பிச்சைகனி மகன் சுபேர்சேட் (வயது31), திருப்பூர் அவினாசி சீனிவாசபுரத்தை சேர்ந்த ஜான் மகன் இமானுவேல் (38), திருப்பூர் கூணம்பாடி ஈஸ்வரன் கோவில் தெருவை சேர்ந்த கந்தசாமி மகன் ஜெயசீலன் (24) ஆகியோர் என்பதும், அவர்கள் காரைக்கால் பகுதியில் இருந்து மதுபாட்டில்கள் கடத்தி வந்ததும் தெரியவந்தது.

    இதுகுறித்து நாகூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மதுபாட்டில்கள் கடத்திய டிரைவர்கள் சுபேர்சேட், இமானுவேல், ஜெயசீலன் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்த ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள மதுபாட்டில்களையும், 3 வேன்களையும் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
    பஸ்களை இயக்குவதற்கு போதிய டிரைவர்கள், கண்டக்டர்கள் மற்றும் தொழில்நுட்ப ஊழியர்கள் இல்லாததால் 400 பஸ்கள் நிறுத்தப்பட்டு உள்ளன. #Bus #MTCBus
    சென்னை:

    சென்னை நகரம் மற்றும் புறநகர் பகுதிகளில் அரசு பெருநகர போக்குவரத்து கழகம் மூலம் டவுண் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இவ்வாறு 3 ஆயிரத்து 300 பஸ்கள் பெருநகர போக்குவரத்து கழகத்தில் உள்ளன.

    ஆனால் இத்தனை பஸ்களை இயக்குவதற்கு போதிய டிரைவர்கள், கண்டக்டர்கள் மற்றும் தொழில்நுட்ப ஊழியர்கள் இல்லை. இதன் காரணமாக 400 பஸ்கள் நிறுத்தப்பட்டு உள்ளன. தற்போது 2 ஆயிரத்து 900 பஸ்கள் மட்டுமே இயக்கப்பட்டு வருகிறது.

    பெருநகர போக்குவரத்து கழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் 500 ஊழியர்கள் பதவி ஓய்வு பெறுகிறார்கள். அவர்களுக்கு பதிலாக புதிய ஊழியர்கள் நியமிக்கப்படுவதில்லை. 2015-ம் ஆண்டுக்கு பிறகு ஒரு ஊழியர் கூட நியமிக்கப்படவில்லை. இதன் காரணமாக தற்போது 1500 ஊழியர்கள் பற்றாக்குறையாக உள்ளனர்.

    மேலும் டிரைவர்கள், கண்டக்டர்கள் பணிக்கு வராமல் விடுமுறை எடுப்பதும் மிக அதிகமாக இருக்கிறது. அவர்களில் பலர் பல்வேறு நோய் தாக்குதலுக்கு ஆளாகி இருக்கிறார்கள்.

    தொழில் ரீதியான நோய் பாதிப்பு, ரத்த அழுத்தம், நீரிழிவு, மாசுவினால் ஏற்படும் நோய்கள், அதிக பணிச்சுமையால் ஏற்படும் பாதிப்புகள், முறையாக சாப்பிடாதது, தூங்க முடியாதது போன்றவற்றால் ஏற்படும் உடல்நல பாதிப்புகள் ஆகியவற்றின் காரணமாக அவர்கள் விடுமுறை எடுக்கும் சூழ்நிலைக்கு தள்ளப்படுகிறார்கள்.

    ஒரு பக்கம் ஆள் பற்றாக்குறை அதிகமாக இருக்க டிரைவர், கண்டக்டர்கள் பணிக்கு வருவது குறைவாக இருப்பதால் அனைத்து பஸ்களையும் இயக்க முடியவில்லை. இதனால் முழுமையாக பஸ்களை இயக்க முடியாமல் அவற்றை நிறுத்தி உள்ளனர். மேலும் பல பஸ்கள் இயக்க முடியாத அளவிற்கு பழுதாகி இருக்கின்றன. எனவே அவையும் நிறுத்தப்பட்டுள்ளன.

    இவ்வாறு பஸ்கள் நிறுத்தப்பட்டு இருப்பதால் ஒரு நாளைக்கு 40 லட்சம் ரூபாய் பெருநகர போக்குவரத்து கழகத்திற்கு நஷ்டம் ஏற்பட்டு இருப்பதாக சென்னை சாலை போக்குவரத்து கழக இன்ஸ்டிடியூட் பத்திரிகையில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

    மேலும் ஆளும் கட்சி தொழிற்சங்கத்தை சேர்ந்த டிரைவர், கண்டர்களுக்கு உரிய பணியை வழங்காமல் அலுவலக வேலை, குடிநீர் பாட்டில் விற்பனை, காவலாளி வேலை போன்றவற்றை கொடுக்கப்படுவதாகவும் மற்றவர்களை மட்டுமே வேலை வாங்குவதாகவும் குற்றம் சாட்டப்படுகிறது.

    ஆள் பற்றாக்குறையால் இருக்கிற ஆட்களையே தொடர்ந்து வேலை செய்ய சொல்வதால் ஊழியர்கள் அதிக பணிச்சுமையை ஏற்க வேண்டியது இருப்பதாக தொழிலாளர் சங்கத்தை சேர்ந்த பிச்சை கூறினார்.


    அரசு விதிகள் படி ஒரு பஸ்சை முழுமையாக இயக்குவதற்கு 6.5 லிருந்து 7.5 சதவீதம் ஊழியர்கள் தேவை. ஆனால் சென்னை பெருநகர போக்குவரத்து கழகத்தில் இந்த விகிதாச்சாரம் மிக குறைவாக உள்ளது.

    நேதாஜி போக்குவரத்து கழக ஊழியர் சங்கத்தை சேர்ந்த அன்பழகன் கூறும் போது, ஆள் பற்றாக்குறை, பணிக்கு வராமை போன்றவை மட்டும் பஸ்கள் நிறுத்தத்துக்கு காரணம் இல்லை. பல பஸ்கள் இயக்க முடியாத அளவிற்கு மோசமாக இருக்கின்றன. இதனால் அவற்றை இயக்காமல் நிறுத்தி விடுகிறார்கள். பணிக்கு வரும் கண்டக்டர், டிரைவர்களை கூட பணி இல்லாமல் திருப்பி அனுப்புகிறார்கள். ஆனால் இந்த வி‌ஷயத்தை நிர்வாகம் மூடி மறைக்கிறது என்று கூறினார்.

    ஆனால் அதிகாரி ஒருவர் கூறும்போது, ஊழியர்கள் பணிக்கு வராததால் மட்டுமே தினமும் 250 பஸ்களை இயக்க முடியவில்லை என்றார்.

    மேலும் பஸ்கள் உரிய நேரத்தில் குறிப்பிட்ட இடத்திற்கு சென்று திரும்ப முடியவில்லை. இதனால் ஒரு நாளைக்கு ரூ.20 லட்சம் நஷ்டமடைவதாகவும் கூறப்படுகிறது.

    இதுபற்றி டிரைவர் ஒருவர் கூறும்போது சென்னையை பொருத்தவரை போக்குவரத்து நெரிசல் மிக அதிகமாக இருக்கிறது. எந்த இடத்துக்குமே குறிப்பிட்ட நேரத்திற்கு பஸ்சை ஓட்டிச்செல்ல முடிவதில்லை. பயணிகள் சிறிது நேரம் பஸ் வருகிறதா? என பார்த்து விட்டு வேறு வாகனங்களில் சென்றுவிடுகிறார்கள் என்று கூறினார்.

    இதற்கிடையே மாநகர போக்குவரத்து கழகத்திற்கு புதிதாக ஏராளமான பஸ்கள் வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் இவற்றை இயக்குவதற்கு போதிய டிரைவர்கள், பஸ் கண்டக்டர்கள் மற்றும் போதிய தொழில்நுட்ப ஊழியர்கள் இல்லை என்று போக்குவரத்து கழக பணியாளர்கள் சங்கத்தை சேர்ந்த சம்பத் கூறினார். #Bus#MTCBus
    ×