என் மலர்
நீங்கள் தேடியது "ரவுடிகள் கைது"
- குற்றவாளிகளை தேவைப்பட்டால் துப்பாக்கி சூடு நடத்த உத்தரவு.
- குற்ற சம்பவங்களை தடுக்கும் விதமாக போலீசார் நடவடிக்கை.
கோவை:
தமிழகத்தில் உள்ள மாநகர போலீஸ் கமிஷனர், போலீஸ் சூப்பிரண்டுகள் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் தங்களது பகுதிகளில் குற்றச் செயல்களை தடுப்பதற்கும், கட்டுப்படுத்துவதற்கும் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க டி.ஜி.பி. சங்கர் ஜிவால் அறிவுறுத்தி உள்ளார்.
மேலும் ரவுடிகள் மற்றும் குற்றவாளிகளை பிடிக்கச் செல்லும் போது தேவைப்பட்டால் துப்பாக்கி சூடு நடத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து கோவை மாவட்டத்திலும் குற்ற சம்பவங்களை தடுக்கும் விதமாக போலீசார் நடவடிக்கை எடுக்க தொடங்கியுள்ளனர்.
கோவை மாவட்டத்தில், வெளி மாவட்டங்கள், மாநிலங்களை சேர்ந்தவர்கள் தங்கி பல்வேறு நிறுவனங்களில் பணிபுரிகின்றனர்.
இவ்வாறு பணிக்காக வருபவர்களுடன் அண்டை மாவட்டங்கள், மாநிலங்களில் குற்ற செயல்களில் ஈடுபட்டவர்களும் கலந்து விடுகின்றனர்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு கூட கடலூர் திட்டக்குடியை சேர்ந்த தனிப்படை போலீசார், சிறுமிகளை கடத்தில் விபசாரத்தில் ஈடுபடுத்திய நபரை கைது செய்தனர்.
இதனால் வெளி மாவட்டங்களில் குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டு கோவையில் பதுங்கிய நபர்கள் குறித்து சோதனை செய்ய போலீசார் முடிவு செய்தனர்.
குற்ற சம்பவங்களை தடுக்க அனைத்து கோட்டங்களிலும் ஒரு சப்-இன்ஸ்பெக்டர், 3 போலீசார் கொண்ட குழு நியமிக்கப்பட்டு உள்ளது. அவர்கள் துப்பாக்கி ஏந்திய நிலையில் தொடர்ந்து மாவட்டம் முழுவதும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
நேற்று முன்தினம் 80 தாபாக்காள், ஓட்டல்களில் போலீசார் சோதனை செய்தது, 350 பேரிடம் விசாரணை நடத்தினர். அவர்களின் இருப்பிடம், அவர்கள் மீதுள்ள குற்ற வழக்குகள் குறித்தும் விசாரித்தனர். இதில் 14 பேர் மீது குற்ற வழக்குகள் இருப்பது தெரியவந்தது.
தொடர்ந்து 2-வது நாளாக நேற்றும் போலீசார் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ரவுடிகள் குறித்து சோதனை நடத்தினர். இதில் 70-க்கும் மேற்பட்ட ரவுடிகள் அடையாளம் காணப்பட்டனர். அவர்களில் 44 பேரை போலீசார் கைது செய்தனர்.
இதில் 32 பேர் மீது ஆயுத வழக்கு, கஞ்சா, கொள்ளை முயற்சி உள்பட பல்வேறு வழக்குகள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் 32 பேரை ஜெயிலில் அடைத்தனர். 12 பேர் நன்னடத்தை பிணைய சான்றிதழின் கீழ் விடுவித்தனர்.
இதேபோல் காந்திபுரம் பஸ் நிலையம், டவுன் பஸ் நிலையம், அரசு விரைவு பஸ் நிலையங்களிலும் போலீசார், போதைப்பொருள் விற்பனை நடைபெறுகிறதா? என்பது குறித்து சோதனை நடத்தி ஆய்வு செய்தனர்.
ஏற்கனவே கோவை மாநகரில் தொடர் குற்ற சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் ஓராண்டுக்கு கோவையை விட்டு வெளியேற வேண்டும் என போலீஸ் கமிஷனர் சரவண சுந்தர் உத்தரவிட்டுள்ளார்.
அதன்பேரிலும் குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் பலர் வெளியேறி உள்ளனர். அவ்வாறு வெளியேறாதவர்களை போலீசார் கைது செய்து அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இப்படி கோவை மாவட்டம் முழுவதும் ரவுடிகளுக்கு எதிராக போலீசார் எடுத்து வரும் கடும் நடவடிக்கைகள் ரவுடிகள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.
அத்துடன் இங்கிருந்தால் நம் மீதும் நடவடிக்கை எடுக்க வாய்ப்புள்ளது என பயந்து கோவையில் உள்ள பல ரவுடிகள் ஊரை காலி செய்து, விட்டு வெளியூர்களுக்கு தப்பியோடி வருகின்றனர்.
கோவையில் நடந்து வரும் சோதனை குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் கூறியதாவது:-
பல மாவட்டங்களில் குற்ற சம்பவங்களில் ஈடுபட்டவர்கள், கோவையில் வந்து பதுங்கி கொள்கிறார்கள்.
அவர்களை அடையாளம் கண்டு நடவடிக்கை எடுக்கவே இந்த சோதனை நடத்தப்பட்டது. இதுபோன்ற சோதனைகள் தொடர்ந்து நடைபெறும். முக்கிய பகுதிகளில் போலீசார் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபடுவார்கள்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- பஸ் நிறுத்தத்தில் தள்ளு வண்டியில் இட்லி கடை நடத்தி வருகிறார்.
- வீச்சரிவாளால் பழனி வேலை நோக்கி வெட்ட வந்துள்ளனர்.
கடலூர்:
பண்ருட்டி அருகே பாப்பான் கொள்ளை அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சுப்ரமணியம்இ வரது மகன் பழனிவேல்(35). இவர் சொரத்தான்குழி பஸ் நிறுத்தத்தில் தள்ளு வண்டியில் இட்லி கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் அங்கு மது போதையில் வந்த அதே கிராமத்தைச் சேர்ந்த அசோக் ராமன் (24),சிறுதொண்டமாதேவி கிராமத்தைச் சேர்ந்த இனிய சம்பத் (23) இருவரும் பழனிவேல் இடம் ரூ.2000 மாமூல் கேட்டு மிரட்டி உள்ளனர். அதற்கு பழனிவேல் சரியான வியாபாரம் இல்லை. இப்போது என்னால் தர முடியாது என்று மறுத்துள்ளார். ஆத்திரம டைந்த இருவரும் நாங்கள் ஊரில் எவ்வளவு பெரிய ரவுடி தெரியுமா நாங்கள் மாமுல் கேட்டால் தரமாட்டாயா என கேட்டு அசிங்கமாக திட்டி உள்ளனர். பின்னர் தாங்கள் மறைத்து வைத்திருந்த வீச்சரிவாளால் பழனி வேலை நோக்கி வெட்ட வந்துள்ளனர்.
இதனைப் பார்த்த பழனிவேல் சட்டென சுதாரித்துக் கொண்டு வில கவே பக்கத்தில் கிடந்த முந்திரிக்கட்டை எடுத்து தலையில் அடித்துள்ளனர். பின்னர் அவர் பாக்கெட்டில் இருந்த ரூ.1000 பணத்தை எடுத்துக் கொண்டு இனிமேல் நீ இங்கு கடை வைக்கக் கூடாது. மீறி வைத்தால் உன்னை கொன்று விடுவோம் என்று மிரட்டி உள்ளனர். இது தொடர்பாக பழனிவேல் கொடுத்த புகாரின் பேரில் காடாம்பு லியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) நந்தகுமார் முத்தாண்டி குப்பம் எஸ்.ஐ.ராஜாராமன், டெல்டா பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நடராஜன் ஆகியோர் வழக்கு பதிவு செய்து இருவரையும் கைது செய்துசிறையில் அடைத்தனர்.
- அம்பத்தூர் அருகே உள்ள சூரப்பட்டு பகுதியில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
- ரவுடிகளிடம் இருந்து கத்தி, அரிவாள், கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
அம்பத்தூர்:
அரக்கோணம் பகுதியில் பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்ட ரவுடி கும்பலை போலீசார் தேடி வந்தனர். அவர்கள் அம்பத்தூர் அருகே உள்ள சூரப்பட்டு பகுதியில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து ராணிப்பேட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தீபாசத்யன் உத்தரவின்படி அரக்கோணம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சாலமன் மற்றும் தனிப்படை போலீசார் அப்பகுதிக்கு விரைந்து வந்தனர். அப்போது சூரப்பட்டு பகுதியில் ஒரு வீட்டில் பதுங்கி இருந்த ரவுடிகள் 4 பேரை போலீசார் துப்பாக்கி முனையில் மடக்கி பிடித்தனர். அங்கிருந்து மேலும் 2 பேர் தப்பி ஓடிவிட்டனர். ரவுடிகளிடம் இருந்து கத்தி, அரிவாள், கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. பிடிபட்டவர்களிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது.
இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- ரவுடி பிரகாஷ் மற்றும் அவரது கூட்டாளி அப்பு ஆகியோர் பூந்தமல்லி பகுதியில் பதுங்கி இருப்பதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது.
- ரவுடிகள் வேட்டையை தொடர்ந்து தீவிரப்படுத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
ராயபுரம்:
சென்னை வியாசர்பாடி எருக்கஞ்சேரி பகுதியைச் சேர்ந்தவர் வெள்ளை பிரகாஷ். பிரபல ரவுடியான இவர் மீது கொடுங்கையூர் போலீஸ் நிலையத்தில் சரித்திர பதிவேடு பராமரிக்கப்பட்டு வருகிறது. கொடுங்கையூர், மறைமலை நகர், சி.பி.சி.ஐ.டி. போலீசில் பிரகாஷ் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன.
கொலை, கொள்ளை, வழிப்பறி, ஆள் கடத்தல் உள்ளிட்ட வழக்குகள் பிரகாஷ் மீது உள்ளது. ஆயு தங்கள், வெடிபொருளை பதுக்கி வைத்திருந்ததாகவும் பிரகாஷ் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் ரவுடி பிரகாஷ் மற்றும் அவரது கூட்டாளி அப்பு ஆகியோர் பூந்தமல்லி பகுதியில் பதுங்கி இருப்பதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து போலீசார் அங்கு விரைந்து சென்றனர்.
போலீசாரை பார்த்ததும் ரவுடிகள் பிரகாஷ், அப்பு இருவரும் தப்பி ஓட முயன்றனர். இருவரையும் துப்பாக்கி முனையில் போலீசார் மடக்கி பிடித்தனர். அவர்களிடமிருந்து 40 நாட்டு வெடிகுண்டுகள், 12 தோட்டாக்கள், கைத்துப்பாக்கி ஆகியவையும் பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் போலீஸ் பிடியில் இருந்து இருவரும் தப்பி ஓடினர்.
அப்போது இருவரும் நிலை தடுமாறி கீழே விழுந்தனர். இதில் கை, கால்கள் உடைந்தன. இதையடுத்து பலத்த காயத்துடன் இருவரும் ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதே போன்று ரவுடிகள் வேட்டையை தொடர்ந்து தீவிரப்படுத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
- அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையிலும் செயல்பட்டதால் போலீசார் அவரை கைது செய்தனர்.
- கைதான ரவுடிகள் 3 பேர் மீதும் பல்வேறு வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி தாலுகா போலீஸ் சரக பகுதியில் திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளியை அடுத்த அத்தி பெரமனூர் பகுதியை சேர்ந்த ஆகாஷ் (எ) சுல்லா (வயது 22) என்பவர் பொதுமக்களுக்கு இடையூறாகவும், பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையிலும் செயல்பட்டதால் போலீசார் அவரை கைது செய்தனர்.
இதே போல ஒசூர் சிப்காட் பகுதியில் பொதுமக்களுக்கு இடையூறாகவும், பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையிலும் செயல்பட்டதால் அதே அதே பகுதியை சேர்ந்த சாதிக் (24), அஜய்குமார் (21) ஆகியோரை ஓசூர் சிப்காட் போலீசார் கைது செய்தனர்.
கைதான ரவுடிகள் 3 பேர் மீதும் பல்வேறு வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.
- மதுரையில் கத்தி முனையில் பணம் பறித்த 2 ரவுடிகள் கைது செய்யப்பட்டனர்.
- கீரைத்துறை, ஜெய்ஹிந்துபுரம் போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை
மதுரை தெற்கு வாசல் போலீஸ் சரகத்தில் உதவி கமிஷனர் சண்முகம் தலைமையில் தனிப்படை போலீசார் தினமும் ரோந்து சென்று வருகின்றனர். கண்மாய்கரை, ராஜமான் நகரில் ரோந்து சென்றனர். கங்கை அம்மன் கோவில் அருகே பதுங்கி இருந்த வாலிபர் போலீசாரை பார்த்ததும் தப்பி ஓட முயன்றார்.
அவரை போலீசார் மடக்கி பிடித்தனர். அவரிடம் இருந்து அரிவாள் பறிமுதல் செய்யப்பட்டது. அவரை காவல் நிலை யத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்தனர். அவர் காமராஜர்புரம் இந்திரா நகரை சேர்ந்த முத்துக்குமார் மகன் எலி தினேஷ் (வயது 22) என்பது தெரியவந்தது.
இவர் மீது காவல் நிலையத்தில் வழக்குகள் நிலுவையில் உள்ளன. மதுரை மாநகராட்சி முன்னாள் மண்டல தலைவர் வி.கே.குருசாமியின் வலதுகரமாக திகழ்ந்தவர். எனக்கு நிறைய எதிரிகள் உண்டு. தற்காப்புக்காக அரிவாள் வைத்திருந்தேன்" என்று தெரிவித்தார். ஆயுதங்களுடன் திரிந்த எலி தினேஷை கீரைத்துறை போலீசார் கைது செய்தனர்.
முத்துப்பட்டி, அழகப்பன் நகரை சேர்ந்தவர் செல்வம் (45), ஆட்டோ டிரைவர். நேற்று இவர் சோலையழகுபுரம் தெருவில் நடந்து சென்றார். அங்கு வந்த வாலிபர் மது குடிக்க பணம் கேட்டார். செல்வம் தர மறுத்தார். ஆத்திரம் அடைந்த வாலிபர், 'கத்தியால் குத்தி விடுவேன்' என்று மிரட்டி, செல்வத்தின் சட்டைபையில் இருந்த ரூ.385-ஐ பறித்து தப்பினார்.
இது குறித்த புகாரின் பேரில் ஜெய்ஹிந்துபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சோலையழகுபுரம், இந்திரா நகரை சேர்ந்த ஆட்டோ பிரவீன் (32) என்பவரை கைது செய்தனர். அவர் மீது அவனியாபுரம், ஜெய்ஹிந்துபுரம் போலீஸ் நிலையங்களில் 20-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்தது.
- இன்ஸ்பெக்டர் கிருஷ்ணராஜ் தலைமையில் போலீசார் விரைந்து வந்து 2 வாலிபர்களிடமும் விசாரணை நடத்தினர்.
- ரவுடிகளான புது வண்ணாரப்பேட்டை ஜீவா நகரை சேர்ந்த சதீஷ், தண்டையார் பேட்டையை சேர்ந்த மோகன் என்பது தெரிந்தது.
ராயபுரம்:
புதுப்பேட்டையை சேர்ந்தவர் வினோத் குமார். இவர் புதுவண்ணாரப்பேட்டை 40-வது வார்டில் கழிவுநீர் அகற்றும் லாரியில் மாநகராட்சி ஒப்பந்த தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார். இவர், புதுவண்ணாரப்பேட்டை அம்மனிம்மன் தோட்டம் பகுதியில் கழிவுநீர் அடைப்பை லாரி மூலம் எடுக்கும் பணியில் ஈடுபட்டார். அப்போது அவ்வழியே மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் வினோத்திடம் தகராறில் ஈடுபட்டு கத்தியால் வெட்டினர். இதில் வினோத்தின் கையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் 2 வாலிபர்களையும் மடக்கி பிடித்து சரமாரியாக தாக்கினர்.
இதுகுறித்து புதுவண்ணாரப்பேட்டை போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் கிருஷ்ணராஜ் தலைமையில் போலீசார் விரைந்து வந்து 2 வாலிபர்களிடமும் விசாரணை நடத்தினர். இதில் அவர்கள் ரவுடிகளான புது வண்ணாரப்பேட்டை ஜீவா நகரை சேர்ந்த சதீஷ், தண்டையார் பேட்டையை சேர்ந்த மோகன் என்பது தெரிந்தது. அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செயதனர். சதீஷ் மீது அடிதடி, வழிபறி, கொலை முயற்சி, வெடிகுண்டு வீசிய வழக்குகள் உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
- வடமதுரை, அய்யலூர் பகுதிகளில் கொள்ளையடிக்க சதி திட்டம் தீட்டியதாக போலீசாரிடம் தெரிவித்தனர்.
- நெல்லை சுந்தர் மீது 10க்கும் மேற்பட்ட கொலை, திருட்டு, வழிப்பறி வழக்குகள் உள்ளன.
வடமதுரை:
திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜோதிமுருகன் தலைமையில் தென்னம்பட்டி சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். வெல்லமடை பிரிவு அருகே சந்தேகத்திற்கிடமாக சிலர் நின்று கொண்டிருந்தனர்.
போலீசார் அவர்களை நோக்கி சென்றபோது சிலர் தப்பி ஓட முயன்றனர். இதனால் மேலும் சந்தேகம் அடைந்து போலீசார் அவர்களை விரட்டி சென்று 3 பேரை சுற்றி வளைத்தனர்.
விசாரணையில் நெல்லை சுத்தமல்லியை சேர்ந்த பிரபல ரவுடி சுந்தர் (வயது31), வடமதுரை அருகே உள்ள பிலாத்து கிராமத்தை சேர்ந்த ரமேஷ்குமார் (34) மற்றும் நல்லாண்டவர் (29) என தெரிய வந்தது.
இவர்கள் வடமதுரை, அய்யலூர் பகுதிகளில் கொள்ளையடிக்க சதி திட்டம் தீட்டியதாக போலீசாரிடம் தெரிவித்தனர்.
ஆனால் போலீசார் விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. நெல்லை சுந்தர் மீது 10க்கும் மேற்பட்ட கொலை, திருட்டு, வழிப்பறி வழக்குகள் உள்ளன. இவரை போலீசார் தேடி வந்த நிலையில் இங்கு தனது கூட்டாளிகளுடன் பதுங்கி இருந்தது தெரிய வந்தது. இதேபோல் பிலாத்து பகுதியை சேர்ந்த ரமேஷ் என்பவர் தன்னை பத்திரிகையில் பணிபுரிவதாக கூறிக்கொண்டு பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்ததாக தெரிவித்துள்ளனர்.
தப்பி ஓடிய 4 பேர் யார்? என்பது குறித்தும், அவர்கள் எங்கு பதுங்கி உள்ளனர் என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. பிடிபட்ட 3 ரவுடிகளிடம் இருந்து செல்போன்களை பறிமுதல் செய்து இவர்கள் தொடர்பில் உள்ள ரவுடிகள் குறித்தும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கைது செய்யப்பட்டவர்களுக்கு திண்டுக்கல் சிறையில் எதிரிகள் இருக்கலாம் என்பதால் அவர்கள் தேனி மாவட்டம் தேக்கம்பட்டி சிறையில் அடைக்கப்பட்டனர்.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் இந்த கும்பல் தங்கள் கைவரிசையை காட்டி உள்ளது போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
+2
- தப்பிப்பதற்காக கையில் இருந்த அரிவாளால் சப்-இன்ஸ்பெக்டர் ராஜ பிரபு, காவலர் சுடலைமணி ஆகிய இருவரையும் ஜெயபிரகாஷ் கையில் வெட்டினார்.
- திருவாரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமார் ஆஸ்பத்திரிக்கு வந்து குற்றவாளி பிரவீனிடம் விசாரணை நடத்தினார்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி சோரீஸ்புரம் 2-வது தெருவை சேர்ந்தவர் பிச்சைக்கண்ணன். இவருடைய மகன் முத்துக்குமார் (வயது 45). வக்கீலான இவர் நகை அடகு கடையும் நடத்தி வந்தார்.
இவர் கடந்த மாதம் 22-ந்தேதி சோரீஸ்புரத்தில் உள்ள தனது அடகு கடையில் இருந்தார். அப்போது அங்கு வந்த மர்ம கும்பல் அவரை சரமாரியாக வெட்டியது. அவர்களிடம் இருந்து தப்பித்து செல்ல முத்துக்குமார் கடையை விட்டு வெளியே ஓட முயன்றார். இருப்பினும் அந்த கும்பல் அவரை ஓட ஓட வெட்டிக்கொலை செய்தது.
இதுதொடர்பாக சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன.
கடந்த 2003-ம் ஆண்டு தூத்துக்குடி கோரம்பள்ளத்தை சேர்ந்த ராஜேஷின் அண்ணன் ஆத்திப்பழம் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டார். அவரது உடல் கடந்த 2006-ம் ஆண்டு தோண்டி எடுக்கப்பட்டது. இந்த வழக்கில் ராஜேஷ் மற்றும் வக்கீல் முத்துக்குமார் ஆகியோர் குடும்பத்தினர் இடையே முன்விரோதம் இருந்து வந்தது. அந்த வழக்கில் தொடர்புடைய வக்கீல் முத்துக்குமாரின் தம்பி சிவக்குமார் கடந்த 2019-ம் ஆண்டு தூத்துக்குடி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் அருகே வைத்து படுகொலை செய்யப்பட்டார்.
இந்த கொலை வழக்கில் ராஜேஷ் உள்பட 19 பேர் கைது செய்யப்பட்டனர். முக்கிய குற்றவாளியான ராஜேஷ் கோவை சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். அவர் ஜாமீனில் வெளியே வருவதற்கு கடந்த 3 ஆண்டுகளாக வக்கீல் முத்துக்குமார் இடையூறாக இருந்து வந்ததால், ராஜேஷ் மற்றும் அவரது உறவினர்கள் தூண்டுதலின்பேரில் ஒரு கும்பல் முத்துக்குமாரை கொலை செய்தது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது.
இதையடுத்து வழக்கு தொடர்பாக 15 பேர் மீது வழக்குப்பதிவு செய்து கும்பலை கைது செய்ய போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் உத்தரவிட்டார். அதன்பேரில் ரூரல் டி.எஸ்.பி. சுரேஷ் மேற்பார்வையில் சிப்காட் இன்ஸ்பெக்டர் சண்முகம், சப்-இன்ஸ்பெக்டர்கள் சங்கர், ஸ்டீபன், சிவக்குமார், தனிப்படை சப்-இன்ஸ்பெக்டர் ராஜபிரபு ஆகியோர் தலைமையில் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு கொலையாளிகளை தீவிரமாக தேடி வந்தனர்.
இந்த வழக்கில் முக்கிய கொலையாளிகளில் ஒருவரான ஆறுமுகநேரியை சேர்ந்த பாஸ்கரை மும்பையில் வைத்து தனிப்படை போலீஸ் சுற்றி வளைத்து கைது செய்தது. மேலும் இதில் தொடர்புடைய 5 பேர் கோர்ட்டில் சரண் அடைந்த நிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு 17 வயது சிறுவன் உள்பட மொத்தம் 10 பேர் கைது செய்யப்பட்டனர். தொடர்ந்து 5 பேரை தேடி வந்தனர்.
இந்நிலையில் இந்த கொலையில் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள ராஜேசின் சகோதரரான கோரம்பள்ளத்தை சேர்ந்த ஜெயபிரகாஷ்(38) என்பவர் புதுக்கோட்டை அருகே தட்டப்பாறையில் உள்ள ஒரு காட்டுப்பகுதியில் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது.
உடனே தனிப்படை சப்-இன்ஸ்பெக்டர் ராஜபிரபு தலைமையில் தலைமை காவலர் சுடலைமணி உள்பட 7 பேர் கொண்ட குழு அங்கு விரைந்து சென்றது. அப்போது அங்கு பதுங்கி இருந்த ஜெயபிரகாஷ் போலீசாரை கண்டதும் தப்பியோட முயன்றார்.
ஆனால் அவரை போலீசார் சுற்றி வளைத்தனர். எனவே தப்பிப்பதற்காக கையில் இருந்த அரிவாளால் சப்-இன்ஸ்பெக்டர் ராஜ பிரபு, காவலர் சுடலைமணி ஆகிய இருவரையும் ஜெயபிரகாஷ் கையில் வெட்டினார். சப்-இன்ஸ்பெக்டர் ராஜபிரபு தன்னிடம் இருந்த கைத்துப்பாக்கியால் ஜெயபிரகாசின் காலில் சுட்டார். இதனால் அவர் ஓட முடியாமல் சுருண்டு விழுந்தார்.
உடனே அவரை போலீசார் கைது செய்தனர். துப்பாக்கி சூட்டில் காயம் அடைந்த ஜெயபிரகாஷ் மற்றும் அரிவாள் வெட்டில் காயம் அடைந்த சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 2 பேர் ஆகியோர் தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மற்றொரு செய்தி...
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகில் உள்ள பூவனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜ்குமார் (34).
வளரும் தமிழகம் கட்சியின் மண்டல இளைஞரணி செயலாளரான இவரை 8 பேர் கொண்ட கும்பல் ஓட ஓட விரட்டி கொலை செய்தது. இதனையடுத்து குற்றவாளிகளை கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமார் மேற்பார்வையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தேடி வந்தனர்.
கொலை சம்பவம் நடந்த 12 மணி நேரத்தில் நீடாமங்கலத்தை சேர்ந்த ஸ்டாலின் பாரதி (வயது 32), வீரபாண்டியன் (29), சூர்யா (21), அரசு (20), மாதவன் (21) ஆகிய 5 பேரை போலீசார் நேற்று கைது செய்தனர். தொடர்ந்து மீதமுள்ள கொலையாளிகளை தேடி வந்தனர்.
இந்த நிலையில் இந்த கொலை வழக்கில் தொடர்புடைய, திருவாரூர் அழகிரி காலனியைச் சேர்ந்த பிரவீன் என்பவர் தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அடுத்த மனோரா அருகில் பதுங்கி இருப்பதாக தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன்பேரில் மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு இன்ஸ்பெக்டர் ராஜேஷ் தலைமையிலான தனிப்படையினர் சம்பவ இடத்துக்கு சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
பிரவீன் பதுங்கியிருந்த இடத்தை நெருங்கிய போலீசார் அவரை சுற்றி வளைத்தனர். உடனே பிரவீன் தப்பி ஓட முயன்றார். சுதாரித்து கொண்ட போலீசார் அவரை பிடித்து போலீஸ் வாகனத்தில் ஏற்ற முயன்றனர்.
ஆனால் கண்ணிமைக்கும் நேரத்தில் பிரவீன் தான் மறைத்து வைத்திருந்த வாளால் சப்-இன்ஸ்பெக் டர் இளங்கோவை வெட்டி விட்டு தப்பி ஓட முயன்றார். இருப்பினும் பிரவீனை பிடிக்க முயன்றபோது அவரை மீண்டும் தாக்கி உள்ளான்.
இதனால் தற்காப்பிற்காக இன்ஸ்பெக்டர் ராஜேஸ் தான் வைத்திருந்த துப்பாக்கியால் பிரவீன் முட்டுக்கு கீழே காலில் சுட்டார். இதில் பிரவீன் காலில் காயம் ஏற்பட்டு கீழே விழுந்தார்.
இதையடுத்து பிரவீன் மற்றும் அவரால் வெட்டப்பட்டு காயமடைந்த சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோ ஆகிய 2 பேரையும் போலீசார் சிகிச்சைக்காக பட்டுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
நள்ளிரவில் திருவாரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமார் ஆஸ்பத்திரிக்கு வந்து குற்றவாளி பிரவீனிடம் விசாரணை நடத்தினார். மேலும் சிகிச்சை பெறும் சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோவிடமும் விசாரணை நடத்தி அவரின் உடல் நலன் குறித்து கேட்டறிந்தார்.
இதையடுத்து குற்றவாளி பிரவீன் மேல்சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு பலத்த பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் ஆஸ்பத்திரி முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
பிடிப்பட்ட ரவுடி பிரவீன் மீது கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. இதற்கிடையே கொலையாளிகள் 6 பேர் சிக்கி உள்ள நிலையில் மீதமுள்ளவர்களை தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
- பிரவீன் தான் மறைத்து வைத்திருந்த வாளால் சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோவை வெட்டி விட்டு தப்பி ஓட முயன்றார்.
- குற்றவாளி பிரவீன் மேல்சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு பலத்த பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டார்.
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகில் உள்ள பூவனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜ்குமார் (34).
வளரும் தமிழகம் கட்சியின் மண்டல இளைஞரணி செயலாளரான இவரை 8 பேர் கொண்ட கும்பல் ஓட ஓட விரட்டி கொலை செய்தது.இதனையடுத்து குற்றவாளிகளை கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமார் மேற்பார்வையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தேடி வந்தனர்.
கொலை சம்பவம் நடந்த 12 மணி நேரத்தில் நீடாமங்கலத்தை சேர்ந்த ஸ்டாலின் பாரதி (வயது 32), வீரபாண்டியன் (29), சூர்யா (21), அரசு (20), மாதவன் (21) ஆகிய 5 பேரை போலீசார் நேற்று கைது செய்தனர்.தொடர்ந்து மீதமுள்ள கொலையாளிகளை தேடி வந்தனர்.
இந்த நிலையில் இந்த கொலை வழக்கில் தொடர்புடைய, திருவாரூர் அழகிரி காலனியைச் சேர்ந்த பிரவீன் என்பவர் தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அடுத்த மனோரா அருகில் பதுங்கி இருப்பதாக தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன்பேரில் மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு இன்ஸ்பெக்டர் ராஜேஷ் தலைமையிலான தனிப்படையினர் சம்பவ இடத்துக்கு சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.பிரவீன் பதுங்கியிருந்த இடத்தை நெருங்கிய போலீசார் அவரை சுற்றி வளைத்தனர். உடனே பிரவீன் தப்பி ஓட முயன்றார். சுதாரித்து கொண்ட போலீசார் அவரை பிடித்து போலீஸ் வாகனத்தில் ஏற்ற முயன்றனர்.
ஆனால் கண்ணிமைக்கும் நேரத்தில் பிரவீன் தான் மறைத்து வைத்திருந்த வாளால் சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோவை வெட்டி விட்டு தப்பி ஓட முயன்றார். இருப்பினும் பிரவீனை பிடிக்க முயன்றபோது அவரை மீண்டும் தாக்கி உள்ளான்.
இதனால் தற்காப்பிற்காக இன்ஸ்பெக்டர் ராஜேஸ் தான் வைத்திருந்த துப்பாக்கியால் பிரவீன் முட்டுக்கு கீழே காலில் சுட்டார். இதில் பிரவீன் காலில் காயம் ஏற்பட்டு கீழே விழுந்தார்.
இதையடுத்து பிரவீன் மற்றும் அவரால் வெட்டப்பட்டு காயமடைந்த சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோ ஆகிய 2 பேரையும் போலீசார் சிகிச்சைக்காக பட்டுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர்.
நள்ளிரவில் திருவாரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமார் ஆஸ்பத்திரிக்கு வந்து குற்றவாளி பிரவீனிடம் விசாரணை நடத்தினார். மேலும் சிகிச்சை பெறும் சப்-இன்ஸ்பெக்டர் இளங்னோவிடமும் விசாரணை நடத்தி அவரின் உடல் நலன் குறித்து கேட்டறிந்தார்.
இதையடுத்து குற்றவாளி பிரவீன் மேல்சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு பலத்த பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.மேலும் ஆஸ்பத்திரி முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
பிடிப்பட்ட ரவுடி பிரவீன் மீது கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. இதற்கிடையே கொலையாளிகள் 6 பேர் சிக்கி உள்ள நிலையில் மீதமுள்ளவர்களை தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- தருண் குமாரிடம் வெள்ளை நாகராஜ் செல்போன் மூலம் தொடர்பு கொண்டு வழக்கை வாபஸ் பெறுவது சம்பந்தமாக நேரில் பேசிக் கொள்ளலாம் என்று அழைத்தார்.
- வெள்ளை நாகராஜ் மற்றும் அடையாளம் தெரியாத 2 ரவுடிகள் திடீரென வந்து தருண்குமாரை வழிமறித்து கத்தியால் வெட்டிவிட்டு தப்பி சென்றனர்.
திருவொற்றியூர்:
சென்னை பழைய வண்ணாரப்பேட்டையை சேர்ந்தவர் தருண் குமார் (வயது 26). இவர் எம்.சி. ரோட்டில் உள்ள துணிக்கடை ஒன்றில் வேலை பார்த்து வருகிறார்.
இவரிடம் அதே பகுதியைச் சேர்ந்த வெள்ளை நாகராஜ் என்பவர் அடிக்கடி பணம் கேட்டு தொந்தரவு செய்ததாக தெரிகிறது. இது தொடர்பாக கடந்த மாதம் 19-ந்தேதி வடக்கு கடற்கரை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த நிலையில் தருண் குமாரிடம் வெள்ளை நாகராஜ் செல்போன் மூலம் தொடர்பு கொண்டு வழக்கை வாபஸ் பெறுவது சம்பந்தமாக நேரில் பேசிக் கொள்ளலாம் என்று அழைத்தார். இதனை தொடர்ந்து தருண்குமார் எண்ணூர் கடற்கரை சாலைக்கு சென்றுள்ளார். அப்போது வெள்ளை நாகராஜ் மற்றும் அடையாளம் தெரியாத 2 ரவுடிகள் திடீரென வந்து தருண்குமாரை வழிமறித்து கத்தியால் வெட்டிவிட்டு தப்பி சென்றனர். இதில் படுகாயம் அடைந்த தருண்குமார் ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்து புதுவண்ணாரப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து காசிமேட்டை சேர்ந்த ஜெகன் (22), வண்ணாரப்பேட்டையை சேர்ந்த சாய்ராம் (24) ஆகிய 2 பேரை கைது செய்தனர். அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் தலைமறைவாகியுள்ள வெள்ளை நாகராஜை தேடி வருகின்றனர்.
- பெற்றோர் பிரிந்து வாழ்வதால் மாணவிக்கு கல்லூரி கட்டணம் செலுத்துவதில் சிக்கல் ஏற்பட்டது.
- ராஜேஷ், ரவீந்திரன் 2 பேரும் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த ராமநாதபுரம் போலீசாரிடம் சிக்கினர்.
கோவை:
நீலகிரி மாவட்டம் ஊட்டியை சேர்ந்தவர் 20 வயது இளம்பெண். ஆங்கிலோ இந்தியனான இவர் கோவையில் உள்ள ஒரு கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். இதற்காக அவர் சரவணம்பட்டி பகுதியில் அறை எடுத்து தங்கி இருந்தார். மாணவியின் பெற்றோர் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து தனித்தனியாக வாழ்த்து வருகின்றனர்.
பெற்றோர் பிரிந்து வாழ்வதால் மாணவிக்கு கல்லூரி கட்டணம் செலுத்துவதில் சிக்கல் ஏற்பட்டது. இதையடுத்து அந்த மாணவி, கல்லூரி மாணவர் ஒருவரிடம் உதவி கேட்டதாக தெரிகிறது. அப்போது அந்த மாணவர் மூலம் கோவை கொண்டயம்பாளையத்தை சேர்ந்த ஜெர்மன் ராஜேஷ் (வயது 22), ரவீந்திரன் (22) ஆகியோர் மாணவிக்கு அறிமுகம் ஆனார்கள்.
அவர்கள் 2 பேரும், கடந்த 23-ந்தேதி மாணவி தங்கி இருக்கும் அறைக்கு சென்றனர். அங்கிருந்த மாணவியிடம் கல்வி கட்டணம் செலுத்துவதற்கு உதவுவதாக கூறினர். இதையடுத்து மாணவியை அங்கிருந்து ஒரு ஓட்டலுக்கு அழைத்து சென்றனர். தொடர்ந்து அங்கு அறை எடுத்து மாணவியை தங்க வைத்தனர்.
இந்த நிலையில் ஜெர்மன் ராஜேஷ், ரவீந்திரன் ஆகியோர் மாணவியை ஓட்டல் அறையில் அடைத்து வைத்து, 3 நாட்களாக கட்டாயப்படுத்தி மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.
பின்னர் அங்கிருந்து தப்பிய மாணவி, நடந்த சம்பவம் குறித்து கோவை கிழக்கு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஓட்டலுக்கு சென்றனர். ஆனால் அங்கிருந்து ஜெர்மன் ராஜேஷ், ரவீந்திரன் இருவரும் தலைமறைவாகி விட்டனர். அதே நேரத்தில் ஓட்டல் அறையில் பயன்படுத்தப்பட்ட ஆணுறைகள் கிடந்தன. அவற்றை போலீசார் கைப்பற்றினர்.
இந்தநிலையில், ராஜேஷ், ரவீந்திரன் 2 பேரும் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த ராமநாதபுரம் போலீசாரிடம் சிக்கினர்.
போலீசாரை பார்த்ததும் தாங்கள் வந்த மோட்டர்சைக்கிளை போட்டுவிட்டு தப்ப முயன்றபோது சந்தேகத்தின்பேரில் இருவரையும் போலீசார் பிடித்தனர்.
விசாரணையில், அவர்கள் 2 பேரும் ரவுடிகள் என்பதும், கல்லூரி மாணவியை அடைத்து வைத்து பாலியல் பலாத்காரம் செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்து மகளிர் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
முன்னதாக போலீசாரிடம் இருந்து தப்பிக்கும் முயற்சியில் கீழே விழுந்ததில் ரவுடிகள் இருவருக்கும் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதற்காக இருவரும் கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.