search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கூகுள்"

    • பிக்சல் 8 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் பற்றிய விவரங்கள் தொடர்ந்து இணையத்தில் வெளியாகி வருகின்றன.
    • பிக்சல் 8 சீரிஸ் மாடல்களில் மென்பொருள் சார்ந்த பல்வேறு புதிய அம்சங்கள் வழங்கப்பட உள்ளன.

    பிக்சல் 8 மற்றும் பிக்சல் 8 ப்ரோ ஸ்மார்ட்போன்களின் நிறம் மற்றும் ஸ்டோரேஜ் பற்றிய விவரங்கள் இணையத்தில் லீக் ஆகி இருந்தது. தற்போது X (முன்னதாக டுவிட்டர்) தளத்தில் பயனர் ஒருவர் பிக்சல் 8 ஸ்மார்ட்போனின் வீடியோ ஒன்றை பகிர்ந்து இருக்கிறார். இதில் பிக்சல் 8 அம்சங்கள் இடம்பெற்று இருக்கிறது.

    குறிப்பாக புதிய அம்சம் ஆடியோ மேஜிக் இரேசர் என்று அழைக்கப்பட இருப்பது வீடியோவின் மூலம் தெரியவந்துள்ளது. X தளத்தில் லீக் ஆகி இருக்கும் வீடியோ 14 நொடிகள் ஓடுகின்றன. அதில் நபர் ஒருவர் ஸ்கேட் போர்டில் செல்வதும், பிறகு ஆடியோ மேஜிக் இரேசர் என்ற பெயர் கொண்ட புதிய அம்சம் இடம்பெற்று இருக்கிறது.

     

    இந்த அம்சம் வீடியோ ஒன்றில் இருக்கும் ஆடியோவை மாற்றியமைக்கும் திறன் அல்லது அவற்றை மேம்படுத்தவோ அல்லது முழுமையாக நீக்குவதற்கான வசதியை கொண்டிருக்கும் என்று தெரிகிறது. மென்பொருள் அப்கிரேடுகள் மூலம் பயனர் அனுபவத்தை மேம்படுத்துவதற்கு கூகுள் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

    அதன்படி மேஜிக் எடிட்டர், எமோஜி மற்றும் சினிமேடிக் வால்பேப்பர் உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்படுகிறது. பிக்சல் 8 சீரிஸ் மாடல்களில் ஆடியோ மேஜிக் இரேசர் வரிசையில் பல்வேறு புதிய அம்சங்கள் வழங்கப்படும் என்று தெரிகிறது. தற்போது லீக் ஆகி இருக்கும் வீடியோவில் பிக்சல் 8 மாடலின் டிசைன் பற்றிய விவரங்களும் இடம்பெற்று இருக்கிறது.

    புதிய பிக்சல் 8 மாடல் வளைந்த ஓரங்கள், மெல்லிய மற்றும் அதிநவீன தோற்றம் கொண்டிருக்கும் என்று தெரிகிறது. இத்துடன் புதிய ஸ்மார்ட்போன் புளூ நிறம் கொண்டிருக்கும் என்று தெரியவந்துள்ளது. முன்னதாக வெளியான பிக்சல் 7a மாடல் இதே போன்ற நிறத்தில் கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

    • இந்த மென்பொருள் கருவிகளால் பத்திரிகையாளர்கள் தங்களின் வேலை மற்றும் உற்பத்தித்திறனை மேம்படுத்த முடியும்.
    • கட்டுரைகளை உருவாக்குவதில் பத்திரிகையாளர்கள் செய்யும் பணிகளுக்கு இந்த மென்பொருள் மாற்றாக அமையாது.

    செயற்கை நுண்ணறிவின் (Artificial Intelligence) பயன்பாடு உலகெங்கிலும் பிரபலமடைந்து வருகிறது. அதனை கொண்டு பல்வேறு தொழில்துறைகளில் என்னென்ன மாற்றங்களை கொண்டு வர முடியும் என்பதை அமெரிக்க முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்கள் ஆராய்ந்து வருகின்றன.

    பத்திரிக்கை துறையிலும், பதிப்பக துறையிலும் கட்டுரைகளையும், செய்திக்கட்டுரைகளையும் எழுதும் வேலை உட்பட ஏராளமான பணிகள் உள்ளன. இந்த துறையில் ஒரு புதிய முயற்சியாக கூகுள் நிறுவனம், இப்பணிகளுக்கு தனது செயற்கை நுண்ணறிவு மென்பொருள் கருவிகளை (software tools) பயன்படுத்துவதை பரிசோதித்து வருகிறது. எடுத்துக் காட்டாக பதிப்பக மற்றும் செய்தி நிறுவனங்கள், செய்திகளையும் கட்டுரைகளையும் இக்கருவிகளை பயன்படுத்தி எளிதாகவும், சிறப்பாகவும், விரைவாகவும் கொண்டு வர முடியும்.

    இதற்காக வாஷிங்டன் போஸ்ட், வால் ஸ்ட்ரீட் ஜர்னல், மற்றும் நியூயார்க் டைம்ஸ் ஆகிய செய்தி நிறுவனங்களுடன் கூகுள் ஆலோசனை நடத்தியிருப்பதாக தெரிகிறது.

    இக்கருவிகளால் பத்திரிகையாளர்கள் தங்களின் வேலை மற்றும் உற்பத்தித்திறனை மேம்படுத்த முடியும். எடுத்துக் காட்டாக, தலைப்புகளுக்கும், அவர்கள் பயன்படுத்தும் எழுத்து வடிவங்களுக்கும் எண்ணற்ற வாய்ப்புகளை மென்பொருள் வழங்கும். இதிலிருந்து ஒன்றை அவர்கள் தேர்ந்தெடுத்து விரைவாக தங்கள் பணிகளை முடிக்க முடியும்.

    ஆனால் கட்டுரைகளை உருவாக்குவதிலும், உண்மையை சரிபார்ப்பதிலும் பத்திரிகையாளர்கள் செய்யும் பணிகளுக்கு இந்த மென்பொருள் மாற்றாக அமையாது. ஆகையால் அவர்களின் வேலைக்கு எந்த பாதிப்பும் இருக்காது என தெரிகிறது.

    கூகுளின் இந்த முயற்சி தற்போது ஆரம்ப கட்டத்தில் இருக்கிறது.

    நியூயார்க் டைம்ஸ் நிறுவனத்திடம் பரிசீலிக்கப்பட்ட கூகுளின் ஏஐ கருவி "ஜெனிசிஸ்" என்று அழைக்கப்படுவதாக தெரிகிறது.

    முன்னரே சில பதிப்பகங்கள் தங்களுக்கு தேவைப்படும் உள்ளடக்கத்திற்கு (content) ஜெனரேட்டிவ் ஏஐ (Generative AI) கருவிகளை பயன்படுத்தி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

    பயனர்களுக்கு விரைவாக பல்வேறு தரவுகளின் அடிப்படையில் ஒரு புதிய உள்ளடக்கத்தை உருவாக்க, ஜெனரேட்டிவ் ஏஐ எனப்படும் மென்பொருள் கருவி பயன்படுகிறது.

    உரைகள், படங்கள், ஒலிகள், அனிமேஷன், முப்பரிமாணம் (3D) அல்லது பிற வடிவங்களில் இவற்றின் உள்ளீடுகள் (inputs) மற்றும் வெளியீடுகள் (outputs) இருக்கும்.

    இருந்தாலும், இது போன்ற மென்பொருள் கருவிகள், உண்மைக்கு புறம்பான தகவலை உருவாக்கும் வாய்ப்புகள் உள்ளது. மனிதர்கள் உருவாக்கும் உள்ளடக்கத்திற்கும் கணினி நிரல்களால் உருவாக்கப்படும் உள்ளடக்கத்திற்கும் உள்ள வேறுபாடுகளை கண்டறியும் திறனும் இவற்றிற்கு இல்லை. இக்காரணங்களால் செய்தி வெளியிடும் நிறுவனங்கள் இவற்றை பயன்படுத்துவதற்கு தயக்கம் காட்டி வருகின்றன.

    ஆனால் கூகுள் போன்ற நீண்ட அனுபவம் வாய்ந்த முன்னணி நிறுவனங்களின் மென்பொருள் கருவிகளில், இத்தகைய பயன்பாட்டு சிக்கல்கள் நீக்கப்படலாம். இதன் மூலம் பதிப்பக துறையிலும், செய்தி துறையிலும் மாற்றங்களை கொண்டு வர முடியும் என்பதால் கூகுளின் முயற்சி எதிர்பார்ப்பை உண்டாக்கியிருக்கிறது.

    • கனடா செய்திகளை நிறுத்தப்போவதாக மெட்டா அறிவிப்பு
    • செய்திகளை நிறுத்தினால் விளம்பரங்கள் நிறுத்தப்படும் என கனடா பதிலடி

    நீயா, நானா போட்டியில் மெட்டாவும், கனடாவும்: முற்றும் சச்சரவில் கூகுளும் சேருமா?உலகின் மிகப்பெரிய இணையவழி சமூக வலைதளமான முகநூலை நடத்தி வரும் மெட்டா நிறுவனத்திற்கும் கனடா நாட்டிற்கும் இடையே மோதல் வலுத்துள்ளது. இதன் பின்னணியில் உள்ளது, கனடா, அண்மையில் கொண்டு வந்த இணைய செய்தி சட்டம் (Online News Act) என்ற ஒரு சட்டம்.

    கனடா நாட்டின் செய்தி வெளியீட்டாளர்களிடமிருந்து மெட்டா, கூகுள், இன்ஸ்டாகிராம் போன்ற இணையவழி சமூக வலைதளங்கள் பெறும் உள்ளடக்கத்தை (content) இணையத்தில் இணைக்கவோ அல்லது மறுபயன்பாடு செய்வதற்கோ அந்தந்த கனடா செய்தி வெளியீட்டாளர்களுக்கு அவர்களுக்குரிய விகிதாசார பணத்தை அவை தரவில்லை என கனடா குற்றஞ்சாட்டியது.

    இதனால் அந்நாட்டின் பல அச்சு மற்றும் டிஜிட்டல் செய்தி பதிப்பகங்கள், வருவாய் குறைந்து பொருளாதார வீழ்ச்சியை எதிர்கொண்டதால் உள்ளூர் வெளியீடுகள் நிதி ரீதியாக நிலை பெறுவதற்கு, இச்சட்டம் கொண்டு வர வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டதாக கனடா கூறியிருந்தது.

    இதற்கு எதிர்வினையாக அமெரிக்காவின் மெட்டா நிறுவனம், கனடா நாட்டு செய்திகளை இனிமேல் தங்கள் வலைதளங்களில் நிறுத்த போவதாக அறிவித்தது.

    மெட்டா செய்தித்தொடர்பாளர் தெரிவித்ததாவது:-

    இணைய செய்திச் சட்டம் எங்கள் தளங்கள் எவ்வாறு செயல்படுகின்றன என்பதற்கான உண்மைகளை அறியாத ஒரு குறைபாடுள்ள சட்டம். மெட்டாவின் சமூக தளங்களில் காண்பிக்கப்படும் செய்தி உள்ளடக்கத்திற்கான இணைப்புகளை மெட்டா சேகரிக்கவில்லை.

    அவற்றை முகநூல் அல்லது இன்ஸ்டாகிராமில் வெளியிட, அந்தந்த வெளியீட்டாளர்கள்தான் முடிவு செய்கிறார்கள். துரதிர்ஷ்டவசமாக, இந்த சட்டத்தின் அடிப்படை அம்சங்களில் பல குறைகள் உள்ளன. ஆனால், செயல்முறை மாற்றங்களைச் செய்ய 'ஒழுங்குமுறை அமைப்பு' அனுமதிக்கவில்லை. எனவேதான், வரும் வாரங்களில் கனடாவில் செய்திகளை நிறுத்த திட்டமிட்டுள்ளோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த செயலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதத்தில், கனடாவின் பாரம்பரியத்துறை அமைச்சர் பாப்லோ ரோட்ரிக்ஸ் நேற்று கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ (Justin Trudeau) அரசாங்கத்தின் முடிவை அறிவித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    மெட்டாவின் முடிவு பொறுப்பற்றது. கனடா இனி மெட்டாவின் வலைதளங்களில் விளம்பரம் செய்வதை நிறுத்தப்போகிறது. இருப்பினும், ஒரு சுமூக முடிவிற்காக அரசாங்கம் இந்நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி குறைகளை நிவர்த்தி செய்ய முயற்சி நடைபெறும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    2021-2022-ம் ஆண்டில் முகநூல் மற்றும் இன்ஸ்டாகிராம் விளம்பரத்திற்காக, கனடா அரசாங்கம் சுமார் ரூ.70 கோடி (8.6 மில்லியன் அமெரிக்க டாலர்கள்) செலவிட்டுள்ளதாக அரசாங்க செலவினங்கள் பற்றிய வருடாந்திர அறிக்கை காட்டுகிறது.

    மெட்டா நிறுவனத்தை தொடர்ந்து, கூகுள் நிறுவனமும், 6 மாதங்களில் கனடாவின் இந்த மசோதா நடைமுறைக்கு வரும்போது அந்நாட்டு செய்திகளை தடுக்கப்போவதாக கூறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    • 2021-ல் ரஷியாவிற்கு எதிரான கருத்துக்களை நீக்க மறுத்ததால் அபராதம் விதிப்பு
    • 2 மாதங்களுக்குள் கூகுள் அபராத தொகையை செலுத்த வேண்டும்

    இணைய தகவல் தேடலில் முன்னணியில் இருக்கும் கூகுளின் தாய் நிறுவனமான ஆல்ஃபபெட் நிறுவனத்திற்கு, ரஷியாவின் ஏகபோக எதிர்ப்பு கண்காணிப்பு அமைப்பு அறிவித்திருந்த முந்தைய அபராதத்தை செலுத்த தவறியதற்காக, ரஷிய நீதிமன்றத்தால் சுமார் ரூ. 400 கோடி ($47 மில்லியன்) அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

    பெடரல் ஆன்டிமோனோபோலி சர்வீஸ் (FAS) எனும் அமைப்பு கூகுள், யூடியூப் வீடியோ ஹோஸ்டிங் சேவை சந்தையில் அதன் மேலாதிக்க நிலையை தவறாக பயன்படுத்தியது என்று குற்றஞ்சாட்டியுள்ளது. இருப்பினும், மேலும் குறிப்பான விவரங்கள் எதுவும் இதுவரை வெளியிடப்படவில்லை.

    இதற்கு பதிலளிக்கும் விதமாக, கூகுள், தனது அடுத்த நடவடிக்கையை தீர்மானிக்கும் முன் ரஷியாவின் அதிகாரப்பூர்வ முடிவை முதலில் ஆராய போவதாக தெரிவித்திருக்கிறது. பெடரல் ஆன்டிமோனோபோலி சர்வீஸ் அமைப்பின்படி, இந்த அபராதம் விதிக்கப்பட்ட 2 மாதங்களுக்குள் கூகுள் அபராத தொகையை செலுத்த வேண்டும்.

    சமீபத்திய மாதங்களில் கூகுளின் ரஷிய துணை நிறுவனத்திற்கு விதிக்கப்பட்ட தொடர் அபராதங்களில் இது மேலும் ஒன்றாக அதிகரிக்கிறது.

    முன்னதாக 2021 டிசம்பரில், சட்டவிரோதமாகக் கருதப்படும் உள்ளடக்கத்தை அகற்ற தவறியதற்காக ரஷிய நீதிமன்றம், ஆல்ஃபபெட் நிறுவனத்தின் துணை நிறுவனமான கூகுளுக்கு ரூ.800 கோடிக்கு ($98 மில்லியன்) மேல் அபராதம் விதித்திருந்தது.

    ரஷியாவால், உக்ரைனில் தொடங்கப்பட்ட ராணுவ நடவடிக்கை குறித்த விஷயங்களுக்காக இந்த அபராதங்கள் இடம் பெறுகின்றன.

    ஆன்லைன் தளங்களின் மீது அதிக கட்டுப்பாட்டை செலுத்துவதற்கான முயற்சிகளின் ஒரு பகுதியாக, மேற்கத்திய தொழில்நுட்ப நிறுவனங்களின் மீதான தாக்குதல்களை ரஷியா தீவிரப்படுத்தியுள்ளது. இதில், தனது நாட்டின் உள்நாட்டு நிறுவனங்களை மேற்கத்திய போட்டியாளர்களுக்கு போட்டியாக மாற்றுவதற்கான ஆதரவளிப்பதும் அடங்கும்.

    ரஷிய அரசின் நிதியுதவியுடன் இயங்கும் ஊடகங்களை உலகளவில் தடுத்துள்ள யூடியூப், ரஷியாவின் தகவல் தொடர்பு கட்டுப்பாட்டு அமைப்புகளிடமிருந்தும், அந்நாட்டு அரசியல்வாதிகளிடமிருந்தும் சமீப காலங்களில் குறிப்பிடத்தக்க அழுத்தத்தை எதிர்கொண்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    • 2023 கூகுள் IO நிகழ்வில் பிக்சல் டேப்லெட் மாடல் அறிவிக்கப்பட்டது.
    • இதன் சார்ஜிங் டாக், டேப்லெட்-ஐ ஸ்மார்ட் ஸ்பீக்கராக மாற்றுகிறது.

    கூகுள் நிறுவனத்தின் பிக்சல் டேப்லெட் மாடலுக்கான அக்சஸரீக்கள் பற்றிய தகவல் தெரியவந்துள்ளது. அதன்படி பிக்சல் டேப்லெட்-க்காக கீபோர்டு மற்றும் ஸ்டைலஸ் உருவாக்கப்படுவது கூகுள் கோட்-களில் அம்பலமாகி இருக்கிறது. 2023 கூகுள் IO நிகழ்வில் பிக்சல் டேப்லெட் மாடல் அறிவிக்கப்பட்டது. அறிவிக்கப்பட்டதில் இருந்தே பிக்சல் டேப்லெட் பற்றிய விவரங்கள் வெளியாகி வருகிறது.

    இந்த நிலையில், தான் பிக்சல் டேப்லெட் மாடலுடன் கீபோர்டு மற்றும் ஸ்டைலஸ் போன்ற அக்சஸரீக்கள் வழங்கப்படும் என்று தெரியவந்துள்ளது. இத்துடன் சார்ஜிங் டாக் ஒன்றும் வழங்கப்படுகிறது. இது டேப்லெட்-ஐ ஸ்மார்ட் ஸ்பீக்கராக மாற்றுகிறது. ஆண்ட்ராய்டு 14 ஒஎஸ் உடன் வரும் பிக்சல் டேப்லெட், வெளியீட்டுக்கு பிறகு அதிக அக்சஸரீக்கள் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிகிறது.

     

    புதிய கீபோர்டு மற்றும் ஸ்டைலஸ் அக்சஸீர்கள், கீபோர்டு ஃபார் பிக்சல் டேப்லெட் மற்றும் ஸ்டைலஸ் ஃபார் பிக்சல் டேப்லெட் எனும் பெயர்களில் அறிமுகம் செய்யப்படும் என்று கூறப்படுகிறது. ஏற்கனவே பிக்சல் அக்சஸரீக்கள் பற்றிய தகவல்கள் வெளியாகி இருந்தது. தற்போதைய தகவல் பிக்சல் ரிடெயில் டெமோ செயலி மூலம் தெரியவந்துள்ளது.

    கூகுள் நிறுவனம் புதிய சாதனங்களை அக்டோபர் மாதம் நடைபெற இருக்கும் ஹார்டுவேர் நிகழ்வில் அறிமுகம் செய்ய இருக்கிறது. பிக்சல் 8, பிக்சல் 8 ப்ரோ மற்றும் பிக்சல் வாட்ச் 2 மாடல்கள் இந்த நிகழ்வில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இதே நிகழ்வில் பிக்சல் டேப்லெட் மாடல் அறிமுகம் செய்யப்படுமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.

    • கூகுள் ஆப் வெர்ஷன் 14.24-ல் இரண்டு பிக்சல் வாட்ச் 2 மாடல்களின் குறியீட்டு பெயர்கள் உள்ளன.
    • பிக்சல் வாட்ச் 2 மாடலில் ஸ்னாப்டிராகன் W5 ஜென் 1 பிராசஸர் வழங்கப்படும் என தகவல்.

    கூகுள் நிறுவனத்தின் புதிய பிக்சல் வாட்ச் 2 மாடல் இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கும் என்று தகவல் வெளியாகி உள்ளது. புதிய பிக்சல் வாட்ச் 2 இந்த ஆண்டு அக்டோபர் மாதம் நடைபெற இருக்கும் பிக்சல் 8 சீரிஸ் வெளியீட்டு நிகழ்வில் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    பிக்சல் வாட்ச் 2 மாடல் பற்றிய விவரங்கள் அவ்வப்போது இணையத்தில் வெளியாகி வருகின்றன. அதன் படி ஏற்கனவே வெளியான தகவல்களில் பிக்சல் வாட்ச் 2 மாடல் அக்டோபரில் அறிமுகம் செய்யப்படும் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. இதுதவிர பிக்சல் வாட்ச் 2 மாடலின் சிறுவர் மட்டும் பயன்படுத்தும் வேரியண்ட் அறிமுகம் செய்யப்பட இருப்பதாகவும், இது ஃபிட்பிட் பிராண்டிங்கில் விற்பனை செய்யப்பட இருப்பதாக கூறப்படுகிறது.

    கோப்புப்படம் 

    கோப்புப்படம் 

    புதிய பிக்சல் வாட்ச் 2 மாடலில் ஸ்னாப்டிராகன் W5 ஜென் 1 பிராசஸர் வழங்கப்படுகிறது. சமீபத்திய கூகுள் ஆப் அப்டேட் வெர்ஷன் 14.24 இரண்டு பிக்சல் வாட்ச் 2 மாடல்களுக்கான குறியீட்டு பெயர்களை கொண்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த குறியீட்டு பெயர்கள் அரோரா மற்றும் இயோஸ் ஆகும்.

    இவை ரோமன் மற்றும் கிரேக்க பெயர்களுடன் தொடர்புடையவை ஆகும். இதில் ஒரு மாடல் எல்டிஇ மோடெம் கொண்டிருக்கும் என்றும் கூறப்படுகிறது. இரு மாடல்களிலும் 41 மில்லிமீட்டர் கேஸ் வழங்கப்படுகிறது. இவை கூகுள் வாட்ச் ஸ்டிராப்களுடன் பொருந்தும் வகையில் உருவாக்கப்பட்டு உள்ளன.

    டிசைன் அடிப்படையில் பிக்சல் வாட்ச் 2 மாடல் அதன் முந்தைய வெர்ஷனை விட மேம்பட்டு இருக்கும் என்று கூறப்படுகிறது. எனினும், தற்போதைய தகவல்களை கடந்து பிக்சல் வாட்ச் 2 மாடலின் அம்சங்களில் வெளியீட்டுக்கு முன் மாற்றங்கள் செய்யப்படலாம்.

    • பிக்சல் 8 ப்ரோ மாடலின் கேமரா பாரில் அனைத்து கேமரா லென்ஸ் மற்றும் தெர்மோமீட்டர் சென்சார் வழங்கப்படுகிறது.
    • சமீபத்தில் ஏஐ தொழில்நுட்பம் சார்ந்த பல்வேறு புதிய அம்சங்களை கூகுள் நிறுவனம் அறிவித்தது.

    கூகுள் நிறுவனத்தின் முற்றிலும் புதிய பிக்சல் 8 ப்ரோ ஸ்மார்ட்போனில் பில்ட்-இன் தெர்மோமீட்டர் சென்சார் வழங்கப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது. பிக்சல் 8 ப்ரோ மாடலின் ஒட்டுமொத்த டிசைன் அதன் முந்தைய வெர்ஷனான பிக்சல் 7 ப்ரோ போன்றே காட்சியளிக்கும். எனினும், பிக்சல் 8 ப்ரோ மாடலின் கேமரா பாரில் அனைத்து கேமரா லென்ஸ் மற்றும் தெர்மோமீட்டர் சென்சார் வழங்கப்படுகிறது.

    இதில் உள்ள தெர்மோமீட்டர் சென்சார் மனிதர்கள் மட்டுமின்றி பொருட்களில் உள்ள வெப்பநிலையையும் துல்லியமாக கண்டறியும். இது பிக்சல் 8 ப்ரோ ஸ்மார்ட்போனில் மட்டும் பிரத்யேகமாக வழங்கப்படும். அந்த வகையில், பிக்சல் 8 மாடலில் தெர்மோமீட்டர் சென்சார் வழங்கப்படும் வாய்ப்புகள் மிகவும் குறைவு. இந்த அம்சம் எப்படி இயங்கும் என்பதை விளக்கும் வீடியோ இணையத்தில் வெளியாகி உள்ளது.

    Photo Courtesy: 91Mobiles

    Photo Courtesy: 91Mobiles

    91மொபைல்ஸ் வெளியிட்டு இருக்கும் வீடியோவில் பிக்சல் 8 ப்ரோ மாடலின் தெர்மோமீட்டர் சென்சாரை எப்படி பயன்படுத்த வேண்டும் என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது. அதன்படி பயனர்கள் தங்களது உடலின் வெப்பநிலையை அறிந்து கொள்ள பிக்சல் 8 ப்ரோ மாடலினை நெற்றியின் அருகில் வைக்க வேண்டும். ஆனால், மொபைலினை நெற்றியில் வைக்கக் கூடாது.

    நெற்றியின் நடுவில் இருந்து, இடதுபுறமாக மொபைலை மெல்ல நகர்த்த வேண்டும். சுமார் ஐந்து நொடிகள் மொபைலை நெற்றியின் அருகில் வைத்தால், உடலின் வெப்பநிலை மொபைல் போன் திரையில் தெரியும்.

    கூகுள் I/O 2023 நிகழ்வில் அந்நிறுவனம் பிக்சல் 8 சீரிஸ் விவரங்கள் எதுவும் வழங்கப்படவில்லை. மாறாக பிக்சல் 7a, பிக்சல் ஃபோல்டு மற்றும் பிக்சல் டேப்லட் போன்ற சாதனங்களை அறிமுகம் செய்தது. இதுதவிர ஏஐ தொழில்நுட்பம் சார்ந்த பல்வேறு புதிய அம்சங்களை கூகுள் நிறுவனம் அறிவித்தது.

    • புகைப்படங்களை எடுக்க 48MP பிரைமரி கேமரா, OIS வழங்கப்பட்டு இருக்கிறது.
    • பிக்சல் ஃபோல்டு மாடலில் மூன்று கேமரா சென்சார்களுடன் பல்வேறு அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கிறது.

    கூகுள் நிறுவனத்தின் முதல் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் மாடல் கூகுள் I/O 2023 நிகழ்வில் அறிமுகம் செய்யப்பட்டது. முன்னதாக இந்த ஸ்மார்ட்போனின் டீசர்கள் வெளியாகி இருந்ததை தொடர்ந்து புதிய மாடல் நேற்றிரவு நடைபெற்ற நிகழ்வில் அறிமுகமானது. புதிய பிக்சல் ஃபோல்டு மாடலிலும் கூகுள் டென்சார் G2 பிராசஸர் வழங்கப்பட்டு இருக்கிறது.

    இத்துடன் 7.6 இன்ச் ஃபோல்டபில் ஸ்கிரீன், 5.8 இன்ச் வெளிப்புற ஸ்கிரீன், இரண்டிலும் OLED பேனல் மற்றும், 120Hz ரிப்ரெஷ் ரேட் உள்ளது. பிக்சல் ஃபோல்டு மாடலில் உள்ள ஸ்டெயின்லெஸ் ஸ்டீர் ஹிஞ்ச் அதிக உறுதியாகவும், எளிதில் ஸ்கிராட்ச் ஆகாத வகையிலும் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் IPX8 தர வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி உள்ளது.

     

    புகைப்படங்களை எடுக்க 48MP பிரைமரி கேமரா, OIS வழங்கப்பட்டு இருக்கிறது. இதையே செல்ஃபி கேமராவாகவும் பயன்படுத்திக் கொள்ளலாம். இத்துடன் 10.8MP அல்ட்ரா வைடு கேமரா, 10.8MP டெலிபோட்டோ கேமரா வழங்கப்பட்டுள்ளது. கேமரா சென்சார்களுடன் பல்வேறு அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கிறது. பிக்சல் ஃபோல்டு ஸ்மார்ட்போனில் ஆண்ட்ராய்டு 14 ஒஎஸ் உள்ளது.

    கூகுள் பிக்சல் ஃபோல்டு அம்சங்கள்:

    7.6 இன்ச் 1840x2208 பிக்சல் OLED டிஸ்ப்ளே, 120Hz ரிப்ரெஷ் ரேட்

    5.8 இன்ச் 1080x2092 பிக்சல் FHD+ OLED டிஸ்ப்ளே, 120Hz ரிப்ரெஷ் ரேட்

    கூகுள் டென்சார் G2 பிராசஸர்

    டைட்டன் M2 செக்யுரிட்டி சிப்

    12 ஜிபி ரேம்

    256 ஜிபி, 512 ஜிபி மெமரி

    ஆண்ட்ராய்டு 13

    டூயல் சிம் ஸ்லாட்

    48MP பிரைமரி கேமரா, OIS

    10.8MP அல்ட்ரா வைடு கேமரா

    10.8MP டெலிபோட்டோ கேமரா

    9.5MP செல்ஃபி கேமரா

    பக்கவாட்டில் கைரேகை சென்சார்

    யுஎஸ்பி டைப் சி ஆடியோ, ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள்

    வாட்டர் ரெசிஸ்டண்ட் IPX8

    5ஜி, 4ஜி வோல்ட்இ, வைபை 6E, ப்ளூடூத் 5.2LE

    யுஎஸ்பி டைப் சி 3.2 ஜென் 2

    4821 எம்ஏஹெச் பேட்டரி

    30 வாட் வயர்டு சார்ஜிங், வயர்லெஸ் சார்ஜிங்

    விலை மற்றும் விற்பனை விவரங்கள்:

    கூகுள் பிக்சல் ஃபோல்டு ஸ்மார்ட்போன் போர்சிலைன் மற்றும் அப்சிடியன் நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை 1799 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 1 லட்சத்து 47 ஆயிரத்து 410 என்று துவங்குகிறது. இதன் 512 ஜிபி மெமரி மாடல் விலை 1919 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 1 லட்சத்து 57 ஆயிரத்து 240 என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. விரைவில் இந்த ஸ்மார்ட்போனிற்கான முன்பதிவு துவங்க இருக்கிறது.

    • ரிடிசைன் செய்யப்பட்ட கூகுள் ஹோம் ஆப் மற்றும் புதிய ஹப் மோட் கொண்டு ஸ்மார்ட் ஹோம் சாதனங்கள் அனைத்தையும் கட்டுப்படுத்தலாம்.
    • பில்ட்-இன் க்ரோம்காஸ்ட் கொண்ட முதல் டேப்லட் இது என்று கூகுள் நிறுவனம் அறிவித்து இருக்கிறது.

    கூகுள் நிறுவனத்தின் முதல் டேப்லட் சாதனம் பிக்சல் டேப்லட் என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட்டது. முன்னதாக இந்த மாடலுக்கான டீசர் கடந்த ஆண்டு நடைபெற்ற கூகுள் I/O நிகழ்வில் வெளியிடப்பட்டு இருந்தது. புதிய பிக்சல் டேப்லட் மாடலில் 10.95 இன்ச் WQXGA ஸ்கிரீன், சார்ஜிங் ஸ்பீக்கர் டாக் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த டேப்லட்-இல் குவாட் ஸ்பீக்கர்கள் மற்றும் நானோ செராமிக் கோட்டிங் வழங்கப்பட்டுள்ளது.

    பிக்சல் டேப்லட்-ஐ அதில் வைத்ததும் அது ஹேண்ட்-ஃபிரீ அசிஸ்டண்ட் அல்லது போட்டோ ஃபிரேம் போன்று செயல்படும். மேலும் ரிடிசைன் செய்யப்பட்ட கூகுள் ஹோம் ஆப் மற்றும் புதிய ஹப் மோட் கொண்டு ஸ்மார்ட் ஹோம் சாதனங்கள் அனைத்தையும் கட்டுப்படுத்த முடியும். இந்த டாக்-இல் காந்தங்கள் வழங்கப்பட்டு இருக்கிறது. இதன் காரணமாக டேப்லட்-ஐ எளிதில் வைக்கவும், எடுத்துக் கொள்ளவும் முடியும்.

     

    புதிய பிக்சல் டேப்லட் ஆண்ட்ராய்டு 13 ஒஎஸ் கொண்டிருக்கிறது. இத்துடன் 5 ஆண்டுகளுக்கு செக்யுரிட்டி அப்டேட்கள் வழங்கப்படுகிறது. கூகுள் டென்சார் G2 பிராசஸர், 8MP செல்ஃபி மற்றும் பிரைமரி கேமரா, பவர் பட்டனில் கைரேகை சென்சார், பில்ட்-இன் க்ரோம்காஸ்ட் உள்ளிட்ட அம்சங்கள் உள்ளன. பில்ட்-இன் க்ரோம்காஸ்ட் கொண்ட முதல் டேப்லட் இது என்று கூகுள் நிறுவனம் அறிவித்து இருக்கிறது.

    கூகுள் பிக்சல் டேப்லட் அம்சங்கள்:

    10.95 இன்ச் 2560x1600 WQXGA டிஸ்ப்ளே

    கூகுள் டென்சார் G2 பிராசஸர்

    டைட்டன் M2 செக்யுரிட்டி சிப்

    8ஜிபி ரேம்

    128 ஜிபி, 256 ஜிபி மெமரி

    ஆண்ட்ராய்டு 13

    8MP பிரைமரி கேமரா

    8MP செல்ஃபி கேமரா

    குவாட் ஸ்பீக்கர்கள், 3 மைக்ரோபோன்கள்

    கைரேகை சென்சார்

    வைபை 6, ப்ளூடுத் 5.2

    யுஎஸ்பி டைப் சி 3.2 ஜென் 1

    மேக்னடிக் டாக்

    27 வாட் ஹவர் பேட்டரி

    15 வாட் சார்ஜிங் வசதி

    விலை மற்றும் விற்பனை விவரங்கள்:

    கூகுள் பிக்சல் டேப்லட் மாடல் ஹசெல், போர்சிலைன் மற்றும் ரோஸ் என மூன்று நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை 499 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 40 ஆயிரத்து 880 என்று துவங்குகிறது. இதன் 256 ஜிபி மெமரி மாடல் விலை 599 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 49 ஆயிரத்து 075 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    ஆஸ்திரேலியா, கனடா, டென்மார்க், ஃபிரான்ஸ், ஜெர்மனி, ஜப்பான், நெதர்லாந்து, நார்வே, ஸ்வீடன், பிரிட்டன் மற்றும் அமெரிக்காவில் பிக்சல் டேப்லட் மாடலுக்கான முன்பதிவு துவங்கிவிட்டது. விற்பனை ஜூன் 20 ஆம் தேதி துவங்க இருக்கிறது. 

    • கூகுள் பிக்சல் 7a ஸ்மார்ட்போன் டைட்டன் M2 செக்யுரிட்டி சிப், வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி கொண்டிருக்கிறது.
    • புதிய பிக்சல் ஸ்மார்ட்போன் ஐந்து ஆண்டுகளுக்கு செக்யுரிட்டி அப்டேட்களை பெற இருக்கிறது.

    கூகுள் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட பிக்சல் 7a ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. இதில் 6.1 இன்ச் FHD+OLED டிஸ்ப்ளே, 90Hz ரிப்ரெஷ் ரேட், கூகுள் டென்சார் G2 பிராசஸர், டைட்டன் M2 செக்யுரிட்டி சிப் வழங்கப்பட்டு இருக்கிறது. ஆண்ட்ராய்டு 13 ஒஎஸ் கொண்டிருக்கும் பிக்சல் 7a மூன்று ஆண்டுகளுக்கு ஒஎஸ் அப்டேட்களையும், ஐந்து ஆண்டுகளுக்கு செக்யுரிட்டி அப்டேட்களை பெறும் என்று கூகுள் அறிவித்துள்ளது.

    புகைப்படங்களை எடுக்க 64MP பிரைமரி கேமரா, OIS, 13MP அல்ட்ரா வைடு கேமரா, 13MP செல்ஃபி கேமரா உள்ளது. இத்துடன் இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார், 4385 எம்ஏஹெச் பேட்டரி, ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி, வயர்லெஸ் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது.

     

    கூகுள் பிக்சல் 7a அம்சங்கள்:

    6.1 இன்ச் 2400x1080 பிக்சல் FHD+ OLED HDR டிஸ்ப்ளே, 90Hz ரிப்ரெஷ் ரேட்

    கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பு

    கூகுள் டென்சார் G2 பிராசஸர்

    டைட்டன் M2 செக்யுரிட்டி சிப்

    8 ஜிபி ரேம்

    128 ஜிபி மெமரி

    ஆண்ட்ராய்டு 13

    டூயல் சிம் ஸ்லாட்

    64MP பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ், OIS

    13MP அல்ட்ரா வைடு கேமரா

    13MP செல்ஃபி கேமரா

    இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார்

    வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட் IP67

    யுஎஸ்பி டைப் சி ஆடியோ , ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள்

    5ஜி, 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5.3

    யுஎஸ்பி டைப் சி ஜென் 2, என்எஃப்சி

    4385 எம்ஏஹெச் பேட்டரி

    18 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங், வயர்லெஸ் சார்ஜிங்

    விலை மற்றும் விற்பனை விவரங்கள்:

    கூகுள் பிக்சல் 7a ஸ்மார்ட்போன் சார்கோல், சீ மற்றும் ஸ்னோ என மூன்று நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 43 ஆயிரத்து 999 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் விற்பனை ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது. விற்பனை ப்ளிப்கார்ட் வலைதளத்தில் நடைபெறுகிறது.

    - அறிமுக சலுகையாக ஹெச்டிஎஃப்சி வங்கி கார்டு மூலம் வட்டியில்லா மாத தவணை முறை வசதியை பயன்படுத்தும் போது ரூ. 4 ஆயிரம் உடனடி தள்ளுபடி வழங்கப்படுகிறது.

    - ஏதேனும் பிக்சல் சாதனம், தேர்வு செய்யப்பட்ட ஸ்மார்ட்போன்களை எக்சேஞ்ச் செய்யும் போது ரூ. 4 ஆயிரம் தள்ளுபடி வழங்கப்படுகிறது.

    - புதிய பிக்சல் 7a வாங்கும் போதே கூகுள் ஃபிட்பிட் இன்ஸ்பயர் 2 மாடலை ரூ. 3 ஆயிரத்து 999-க்கும் பிக்சல் பட்ஸ் A மாடலை ரூ. 3 ஆயிரத்து 999 விலையில் வாங்கிட முடியும்.

    - ஒரு ஆண்டிற்கு இலவச ஸ்கிரீன் டேமேஞ்ச் ப்ரோடெக்ஷன் வழங்கப்படுகிறது.

    • கூகுள் பிக்சல் டேப்லட் பற்றிய விவரங்கள் பலமுறை இணையத்தில் லீக் ஆகி இருக்கின்றன.
    • அமேசான் ஸ்கிரீன்ஷாட்களின் படி பிக்சல் டேப்லட் மாடல் இரு நிறங்களில் கிடைக்கும் என்று தெரியவந்துள்ளது.

    கூகுள் பிக்சல் டேப்லட் மாடல் இன்னும் சில தினங்களில் நடைபெற இருக்கும் கூகுள் I/O 2023 நிகழ்வில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இதே நிகழ்வில் பிக்சல் 7a, பிக்சல் ஃபோல்டு மற்றும் ஆண்ட்ராய்டு 14 ஒஎஸ் சார்ந்த அறிவிப்புகளும் வெளியாக இருக்கின்றன. கூகுள் நிறுவனம் கடந்த ஆண்டு நடைபெற்ற I/O 2022 நிகழ்வில் டேப்லட் மாடலின் டிசைன் விவரங்களை வெளியிட்டது.

    இதைத் தொடர்ந்து கூகுள் பிக்சல் டேப்லட் பற்றிய விவரங்கள் பலமுறை இணையத்தில் லீக் ஆகி இருக்கின்றன. புதிய டேப்லட் விலை பற்றிய தகவல்கள் ரகசியமாக இருந்து வந்தது. புதிய டேப்லட் மாடல் ஆப்பிள், சாம்சங் மற்றும் பல்வேறு மாடல்களுக்கு போட்டியை ஏற்படுத்த இருக்கிறது. இந்த நிலையில், கூகுள் பிக்சல் டேப்லட் விலை விவரங்கள் அமேசான் ஜப்பான் வலைதளத்தில் தவறுதலாக லீக் ஆகியுள்ளன.

     

    அமேசான் வலைதள ஸ்கிரீன்ஷாட்களின் படி பிக்சல் டேப்லட் மாடல் ஜப்பான் நாட்டில் ஹசல் மற்றும் போர்சிலைன் நிற ஆப்ஷன்களில் கிடைக்கும் என்று தெரியவந்துள்ளது. இதன் விலை 79 ஆயிரத்து 800 யென்கள் இந்திய மதிப்பில் ரூ. 48 ஆயிரத்து 331 என்று நிர்ணயம் செய்யப்படும் என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

    இதன் மூலம் பிக்சல் டேப்லட் மாடல் குறைந்த விலை பிரிவில் இருக்காது என்று தெரியவந்துள்ளது. அமேசான் வலைதள ஸ்கிரீன்ஷாட்டில் இந்த பிக்சல் டேப்லட் மாடல் ஜூன் 20 ஆம் தேதி முதல் விற்பனைக்கு கிடைக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

    பிக்சல் டேப்லட் எதிர்பார்க்கப்படும் அம்சங்கள்:

    10.9 இன்ச் 1600x2560 பிக்சல் ரெசல்யூஷன் கொண்ட டிஸ்ப்ளே

    கூகுள் டென்சார் 2 சிப்செட்

    8 ஜிபி ரேம்

    128 ஜிபி, 256 ஜிபி மெமரி

    ஆண்ட்ராய்டு 13 ஒஎஸ்

    7000 எம்ஏஹெச் பேட்டரி

    அமேசான் ஜப்பான் வலைதளத்தில் பிக்சல் டேப்லட் உடன் சார்ஜிங் ஸ்பீக்கர் டாக் வழங்கப்படும் என்று குறிப்பிடப்பட்டு உள்ளது. இது பிக்சல் டேப்லட்-ஐ ஸ்மார்ட் டிஸ்ப்ளேவாக மாற்றுகிறது. இதுபற்றிய விவரங்கள் இன்னும் சில நாட்களில் தெரிந்துவிடும்.

    • பிக்சல் வாட்ச் 2 மாடலில் சாம்சங் நிறுவனத்தின் எக்சைனோஸ் 9110 பிராசஸர் வழங்கப்பட இருக்கிறது.
    • கூகுள் I/O 2023 நிகழ்வில் பிக்சல் 8 சீரிஸ் மற்றும் பிக்சல் வாட்ச் 2 மாடல்களின் பிரிவியூ வெளியாகும் என்று எதிர்பார்க்கலாம்.

    கூகுள் நிறுவனம் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் மேட் பை கூகுள் நிகழ்வில் தனது முதல் ஸ்மார்ட்வாட்ச் மாடலை அறிமுகம் செய்தது. தற்போது கூகுள் நிறுவனம் தனது அடுத்த ஸ்மார்ட்வாட்ச் மாடலை அறிமுகம் செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. முந்தைய பிக்சல் வாட்ச் மாடலின் மேம்பட்ட வெர்ஷன் இந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட இருக்கும் பிக்சல் 8 சீரிஸ் வெளியீட்டின் போதே அறிவிக்கப்பட்டு விடும் என்று கூறப்படுகிறது.

    புதிய பிக்சல் வாட்ச் 2 மாடலில் சாம்சங் நிறுவனத்தின் எக்சைனோஸ் 9110 பிராசஸர் வழங்கப்பட இருக்கிறது. முன்னதாக பிக்சல் வாட்ச் மாடலுக்கான டீசர் கடந்த ஆண்டு நடைபெற்ற கூகுள் I/O நிகழ்வில் அறிமுகம் செய்தது. அதன்படி அடுத்த வாரம் நடைபெற இருக்கும் கூகுள் I/O 2023 நிகழ்வில் பிக்சல் 8 சீரிஸ் மற்றும் பிக்சல் வாட்ச் 2 மாடல்களின் பிரிவியூ வெளியாகும் என்று எதிர்பார்க்கலாம்.

     

    கூகுள் பிக்சல் வாட்ச் - கோப்புப்படம்

    கூகுள் பிக்சல் வாட்ச் - கோப்புப்படம்

    கூகுள் பிக்சல் வாட்ச் 2 மாடல் பிக்சல் 8 மற்றும் பிக்சல் 8 ப்ரோ வெளியீட்டுடன் அறிமுகம் செய்யப்படும் என்று தகவல்கள் வெளியாகி வருகின்றன. 2018-இல் அறிமுகம் செய்யப்பட்ட கேலக்ஸி வாட்ச் மாடலில் வழங்கப்பட்டு இருந்த சாம்சங் எக்சைனோஸ் 9110 பிராசஸர் புதிய பிக்சல் வாட்ச் 2 மாடலில் வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. இந்த சிப்செட் ஸ்மார்ட்வாட்ச்-க்கு நீண்ட நேர பேட்டரி பேக்கப் வழங்கும்.

    மே 10 ஆம் தேதி நடைபெற இருக்கும் கூகுள் I/O 2023 நிகழ்வில் கூகுள் நிறுவனம் தனது பிக்சல் 7a, பிக்சல் ஃபோல்டு போன்ற சாதனங்களை அறிமுகம் செய்ய இருக்கிறது. சந்தையில் அதிகம் எதிர்பார்க்கப்படும் நிலையில், பிக்சல் 7a கடந்த சில நாட்களுக்கு முன்பே இபே வலைதளத்தில் விற்பனைக்கு பட்டியலிடப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. 

    ×