search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கூகுள்"

    • கூகுள் நிறுவனம் தனது மேட் பை கூகுள் 22 நிகழ்வில் பிக்சல் டேப்லெட் மாடலுக்கான டீசரை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது.
    • டென்சார் சிப்செட் கொண்ட புதிய கூகுள் பிக்சல் டேப்லெட் அடுத்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

    மே மாத வாக்கில் நடைபெற்ற கூகுள் I/O நிகழ்வில் பிக்சல் டேப்லெட் மாடல் 2023 வாக்கில் அறிமுகம் செய்யப்படும் என கூகுள் நிறுவனம் அறிவித்து இருந்தது. இந்த நிலையில், மேட் பை கூகுள் 22 நிகழ்வில் புதிய பிக்சல் 7 சீரிஸ் வெளியீட்டின் போது பிக்சல் டேப்லெட் மாடல் சார்ஜிங் டாக் உடன் விற்பனை செய்யப்படும் என கூகுள் தெரிவித்து இருக்கிறது.

    சார்ஜிங் டாக்-இல் ஸ்பீக்கர் இடம்பெற்று இருக்கிறது. இது மேம்பட்ட ஆடியோ அனுபவத்தை வழங்குகிறது. பிக்சல் டேப்லெட்-ஐ டாக் செய்ததும் அது ஹேண்ட்ஸ்-ஃபிரீ அசிஸ்டண்ட் அல்லசு போட்டோ ஃபிரேம் போன்று செயல்படும். மேலும் இது ஸ்மார்ட் ஹோம் சாதனங்களை இயக்கவும் வழி செய்கிறது. இந்த சார்ஜிங் டாக்-இல் உள்ள காந்தம் பிக்சல் டேப்லெட்டை எளிதில் டாக் மற்றும் அன்டாக் செய்ய உதவுகிறது.

    பிக்சல் 7 சீரிஸ் மாடல்களில் வழங்கப்பட்டு இருக்கும் டென்சார் ஜி2 பிராசஸர் தான் பிக்சல் டேப்லெட் மாடலிலும் வழங்கப்படுகிறது. இந்த பிராசஸர் தலைசிறந்த இமேஜ் பிராசஸிங் மற்றும் மெஷின் லெர்னிங் வசதிகளை வழங்குகிறது. இத்துடன் பிக்சல் போன் அம்சங்களான வீடியோ காலிங், போட்டோ எடிட்டிங், ஹேண்ட்ஸ் ஃபிரீ கூகுள் அசிஸ்டண்ட் போன்ற வசதிகளை பிக்சல் டேப்லெட் கொண்டிருக்கிறது.

    இந்த டேப்லெட் பிரீமியம் நானோ செராமிக் பினிஷ் கொண்டிருக்கிறது. இதில் பெரிய ஸ்கிரீன் வழங்கப்படுவது மட்டும் தெரியவந்துள்ளது. ஸ்கிரீன் அளவு, ரெசல்யூஷன் மற்றும் இதர அம்சங்கள் பற்றி எந்த தகவலும் வெளியாகவில்லை.

    • கூகுள் நிறுவனம் ஏற்கனவே அறிவித்தப்படி பிக்சல் வாட்ச் மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது.
    • புதிய பிக்சல் வாட்ச் பிக்சல் 7 சீரிஸ் ஸ்மார்ட்போன்களுடன் அறிமுகம் செய்யப்பட்டது.

    கூகுள் நிறுவனத்தின் மேட் பை கூகுள் 22 நிகழ்வில் பிக்சல் வாட்ச் அறிமுகம் செய்யப்பட்டது. இது கூகுள் நிறுவனத்தின் முதல் ஸ்மார்ட்வாட்ச் ஆகும். பிரீமியம் ஸ்மார்ட்வாட்ச் பிரிவில் அறிமுகமாகி இருக்கும் பிக்சல் வாட்ச் வியர் ஒஎஸ் 3.5 மற்றும் 4ஜி எல்டிஇ கனெக்டிவிட்டி கொண்டிருக்கிறது. இத்துடன் உடல்நலம் மற்றும் ஆரோக்கியம் சார்ந்த அம்சங்களை வழங்க பிட்பிட் இண்டகிரேஷன் வழங்கப்பட்டு உள்ளது.

    புதிய பிக்சல் வாட்ச் மாடலில் வட்வ வடிவில் 3டி டோம்டு கிளாஸ் வழங்கப்பட்டு இருக்கிறது. மேலும் இது ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் பாடி கொண்டிருக்கிறது. பிக்சல் வாட்ச் ஸ்கிராட்ச் மற்றும் வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி கொண்டுள்ளது. இது வலதுபுறம் கிரவுனிற்கு மேல் பட்டன் ஒன்று வழங்கப்பட்டு இருக்கிறது. இது சமீபத்தில் பயன்படுத்தப்பட்ட செயலிகளை காண்பிக்கும். இத்துடன் 1000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கொண்ட AMOLED டிஸ்ப்ளே, கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு வழங்கப்பட்டு உள்ளது.

    இந்த ஸ்மார்ட்வாட்ச் இதய துடிப்பு விவரங்களை கச்சிதமாக டிராக் செய்வதோடு, ஜிபிஎஸ் வசதி, இசிஜி ஆப் சப்போர்ட், உறக்கத்தை டிராக் செய்யும் சென்சார்களை கொண்டிருக்கிறது. இத்துடன் பிட்பிட் செயலியுடன் இணைந்து செயல்படும் வசதியை பிக்சல் வாட்ச் கொண்டிருக்கிறது. புதிய பிக்சல் வாட்ச் 32 ஜிபி மெமரி, மூன்று மாதங்களுக்கு இலவச யூடியூப் பிரீமியம் சந்தா வழங்கப்பட்டு இருக்கிறது.

    கூகுள் பிக்சல் வாட்ச் மாடல் ஷேம்பெயின் கோல்டு கேஸ் மற்றும் ஹசெல் ஆக்டிவ் பேண்ட், மேட் பிளாக் கேஸ் மற்றும் அப்சிடியன் ஆக்டிவ் பேண்ட், பாலிஷ்டு சில்வர் கேஸ் மற்றும் சார்கோல் ஆக்டிவ் பேண்ட் மற்றும் சாக் ஆக்டிவ் பேண்ட் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இத்துடன் 20-க்கும் மேற்பட்ட பேண்ட் ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன.

    புதிய பிக்சல் வாட்ச் ப்ளூடூத் வெர்ஷன் விலை 349.99 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 28 ஆயிரத்து 750 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் எல்டிஇ வெர்ஷன் விலை 399.99 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 32 ஆயிரத்து 870 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. விற்பனை அக்டோபர் 13 ஆம் தேதி துங்குகிறது. இதன் இந்திய வெளியீடு பற்றி இதுவரை எந்த தகவலும் இல்லை.

    • கூகுள் நிறுவனத்தின் பிக்சல் 7 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டன.
    • பிக்சல் 7 ப்ரோ ஸ்மார்ட்போனில் 120Hz வரையிலான வேரியபில் ரிப்ரெஷ் ரேட் வழங்கப்பட்டு இருக்கிறது.

    கூகுள் நிறுவனம் தனது புதிய பிளாக்‌ஷிப் சீரிஸ் ஸ்மார்ட்போன்கள்- பிக்சல் 7 மற்றும் பிக்சல் 7 ப்ரோ மாடல்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது. பிக்சல் 7 மாடலில் 6.32 இன்ச் FHD+ OLED டிஸ்ப்ளே, 90Hz ரிப்ரெஷ் ரேட், சிறிய பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது. பிக்சல் 7 ப்ரோ ஸ்மார்ட்போன் 6.7 இன்ச் குவாட் HD+ OLED டிஸ்ப்ளே, 10-120Hz வேரியபில் ரிப்ரெஷ் ரேட் வழங்கப்பட்டு உள்ளது.

    இரு ஸ்மார்ட்போன்களிலும் கூகுள் டென்சார் ஜி2 பிராசஸர், 5ஜி சப்போர்ட், டைட்டன் எம்2 செக்யுரிட்டி சிப் வழங்கப்பட்டு இருக்கிறது. பிக்சல் 6 சீரிஸ் மாடல்களை போன்றே புதிய ஸ்மார்ட்போன்களும் ஆண்ட்ராய்டு 13 ஒஎஸ் கொண்டிருக்கின்றன. புது பிக்சல் போன்களுக்கு மூன்று ஆண்டுகள் ஒஎஸ் அப்டேட் மற்றும் ஐந்து ஆண்டுகள் செக்யுரிட்டி அப்டேட்களை பெறும்.

    புகைப்படங்களை எடுக்க இரு மாடல்களிலும் 50MP பிரைமரி கேமரா, 12MP அல்ட்ரா வைடு லென்ஸ் வழங்கப்பட்டு இருக்கிறது. பிக்சல் 7 ப்ரோ மாடலில் மட்டும் ஆட்டோபோக்கஸ் அல்ட்ராவைடு கேமரா, மேக்ரோ ஆப்ஷன் மற்றும் 48MP டெலிபோட்டோ கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது.

    கூகுள் பிக்சல் 7 ஸ்மார்ட்போனில் 4335 எம்ஏஹெச் பேட்டரியும், பிக்சல் 7 ப்ரோ மாடலில் 5000 எம்ஏஹெச் பேட்டரியும் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் 30 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது.

    பிக்சல் 7 அம்சங்கள்:

    6.32 இன்ச் 1080x2400 பிக்சல் FHD+ AMOLED டிஸ்ப்ளே, 90Hz ரிப்ரெஷ் ரேட்

    கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் பாதுகாப்பு

    கூகுள் டென்சார் பிராசஸர் மற்றும் டைட்டன் எம்2 செக்யுரிட்டி சிப்

    8 ஜிபி ரேம்

    128 ஜிபி / 256 ஜிபி மெமரி

    ஆண்ட்ராய்டு 13

    டூயல் சிம்

    50MP பிரைமரி கேமரா

    12MP அல்ட்ரா வைடு கேமரா

    10.8MP செல்பி கேமரா

    இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார்

    யுஎஸ்பி டைப் சி ஆடியோ, ஸ்டீரியோ ஸ்பீக்கர்

    டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டண்ட்

    5ஜி, 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5.2

    யுஎஸ்பி டைப் சி

    4335 எம்ஏஹெச் பேட்டரி

    30 வாட் வயர்டு பாஸ்ட் சார்ஜிங்

    வயர்லெஸ் சார்ஜிங்

    பிக்சல் 7 ப்ரோ அம்சங்கள்:

    6.7 இன்ச் 3120x1440 பிக்சல் LTPO+ AMOLED டிஸ்ப்ளே, 90Hz ரிப்ரெஷ் ரேட்

    கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் பாதுகாப்பு

    கூகுள் டென்சார் ஜி2 பிராசஸர் மற்றும் டைட்டன் எம்2 செக்யுரிட்டி சிப்

    12 ஜிபி ரேம்

    128 ஜிபி / 256 ஜிபி / 512 ஜிபி மெமரி

    ஆண்ட்ராய்டு 13

    டூயல் சிம்

    50MP பிரைமரி கேமரா

    12MP அல்ட்ரா வைடு ஆட்டோபோக்கஸ் கேமரா

    48MP டெலிபோட்டோ கேமரா

    10.8MP செல்பி கேமரா

    இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார்

    யுஎஸ்பி டைப் சி ஆடியோ, ஸ்டீரியோ ஸ்பீக்கர்

    டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டண்ட்

    5ஜி, 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5.2

    யுஎஸ்பி டைப் சி

    5000 எம்ஏஹெச் பேட்டரி

    30 வாட் வயர்டு பாஸ்ட் சார்ஜிங்

    வயர்லெஸ் சார்ஜிங்

    விலை மற்றும் விற்பனை விவரங்கள்:

    புதிய பிக்சல் 7 ஸ்மார்ட்போன் அப்சிடியன், லெமன்கிராஸ் மற்றும் ஸ்னோ நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 59 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. பிக்சல் 7 ப்ரோ ஸ்மார்ட்போன் அப்சிடியன், ஹசெல் மற்றும் ஸ்னோ என மூன்று நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 84 ஆயிரத்து 999 ஆகும். இவற்றின் விற்பனை அக்டோபர் 13 ஆம் தேதி ப்ளிப்கார்ட் தளத்தில் துவங்குகிறது.

    அறிமுக சலுகைகள்:

    அக்டோபர் 6 முதல் 9 ஆம் தேதிக்குள் பிக்சல் 7 சீரிஸ் ஸ்மார்ட்போன் வாங்குவோர் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தும் போது 10 சதவீதம் வரை உடனடி தள்ளுபடி பெறலாம்.

    அக்டோபர் 6 முதல் 13 ஆம் தேதிக்குள் பிக்சல் 7 மற்றும் பிக்சல் 7 ப்ரோ ஸ்மார்ட்போன்களை வாங்குவோருக்கு ஆறு மாதத்திற்கு ஸ்கிரீன் டேமேஜ் ப்ரோடக்‌ஷன் சலுகை வழங்கப்படுகிறது.

    பிட்பிட் இன்ஸ்பயர் 2 மாடலை ரூ. 4 ஆயிரத்து 999 விலையில் வாங்கிட முடியும்.

    • கூகுள் நிறுவனம் அடுத்த வாரம் முற்றிலும் புதிய பிக்சல் ஸ்மார்ட்போன்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய இருக்கிறது.
    • புதிய பிக்சல் 7 சீரிஸ் மாடல்கள் இம்முறை சர்வதேச வெளியீட்டின் போதே இந்தியாவிலும் அறிமுகமாகின்றன.

    கூகுள் நிறுவனத்தின் பிக்சல் 7 மற்றும் பிக்சல் 7 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடல்கள் அடுத்த வாரம் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட உள்ளன. இந்த ஆண்டு சர்வதேச வெளியீட்டின் போதே புதிய பிக்சல் ஸ்மார்ட்போன்கள் இந்திய சந்தையிலும் அறிமுகம் செய்யப்படுகின்றன. இதே தகவலை கூகுள் நிறுவனமும் உறுதிப்படுத்தி இருக்கிறது. எனினும், இந்த ஸ்மார்ட்போன்களின் சரியான இந்திய வெளியீட்டு தேதி இதுவரை அறிவிக்கப்படவில்லை.

    இந்த நிலையில், பிக்சல் 7 மற்றும் பிக்சல் 7 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடல்களுக்கான முன்பதிவு இந்தியாவில் அக்டோபர் 6 ஆம் தேதி துவங்கும் என கூகுள் அறிவித்து இருக்கிஓறது. இதே தகவலை கூகுள் நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்திலும் தெரிவித்து இருக்கிறது. புதிய பிக்சல் 7 சீரிஸ் மாடல்களை வாங்க விரும்பும் வாடிக்கையாளர்கள் அக்டோபர் 6 ஆம் தேதி இரவு 9.30 மணிக்கு ப்ளிப்கார்ட் தளத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம்.

    புதிய பிக்சல் ஸ்மார்ட்போன்களின் இந்திய விலை விவரங்கள் இதுவரை அறிவிக்கப்படவில்லை. அம்சங்களை பொருத்தவரை பிக்சல் 7 மாடலில் 6.3 இன்ச் FHD+OLED 90Hz ரிப்ரெஷ் ரேட் கொண்ட டிஸ்ப்ளே, பிக்சல் 7 ப்ரோ மாடலில் 6.7 இன்ச் QHD+ OLED 120 Hz ரிப்ரெஷ் ரேட் டிஸ்ப்ளே வழங்கப்படுகிறது. இரு ஸ்மார்ட்போன்களிலும் இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார், டென்சார் G2 பிராசஸர் வழங்கப்படுகிறது.

    புகைப்படங்களை எடுக்க பிக்சல் 7 ப்ரோ மாடலில் 50MP பிரைமரி கேமரா, 12MP அல்ட்ரா வைடு லென்ஸ், 48MP டெலிபோட்டோ கேமரா வழங்கப்படுகிறது. பிக்சல் 7 ஸ்மார்ட்போனில் முந்தைய மாடலில் வழங்கப்பட்டு இருந்த பிரைமரி கேமரா மற்றும் அல்ட்ரா வைடு லென்ஸ் கொண்டிருக்கிறது.

    பிக்சல் 7 சீரிஸ் மாடல்களில் அதிகபட்சம் 12 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி வழங்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன்களில் 4700 எம்ஏஹெச் மற்றும் 5000 எம்ஹெச் பேட்டரி வழங்கப்பட்டுள்ளன. இத்துடன் 33 வாட் பாஸ்ட் சார்ஜிங் மற்றும் வயர்லெஸ் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. 

    • கூகுள் நிறுவனம் தனது பிக்சல் 7 மற்றும் பிக்சல் 7 ப்ரோ ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் அறிமுகமாகும் என தெரிவித்துள்ளது.
    • இந்தியாவில் இரு பிக்சல் ஸ்மார்ட்போன்களும் ப்ளிப்கார்ட் தளத்தில் விற்பனை செய்யப்பட உள்ளன.

    கூகுள் நிறுவனம் கடந்த ஜூலை மாத வாக்கில் பிக்சல் 6a ஸ்மார்ட்போனினை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. எனினும், பிக்சல் 5 சீரிஸ் மாடல்களை அறிமுகம் செய்யவில்லை. இதே போன்று பிக்சல் 4a மாடலை மட்டும் இந்தியாவில் அறிமுகம் செய்த கூகுள், பிக்சல் 4 மற்றும் பிக்சல் 4XL போன்ற மாடல்களை ரேடார் கண்ட்ரோல் வழங்கியதால் இந்தியாவில் அறிமுகம் செய்யவில்லை.

    தற்போது பிக்சல் 7 சீரிஸ் மாடல்கள் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படும் என கூகுள் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளது. பிக்சல் 7 மற்றும் பிக்சல் 7 ப்ரோ ஸ்மார்ட்போன்கள் இந்திய சந்தையில் ப்ளிப்கார்ட் தளத்தில் விற்பனை செய்யப்பட இருக்கின்றன.

    இரு பிக்சல் போன்களும் விரைவில் வெளியாகும் என குறிப்பிடப்பட்டு இருக்கும் நிலையில், சரியான வெளியீட்டு தேதி இடம்பெறவில்லை. கூகுள் நிறுவனம் தனது பிக்சல் 7 மற்றும் பிக்சல் 7 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடல்களின் விற்பனையை அக்டோபர் 18 ஆம் தேதி துவங்கும் என இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

    இது மட்டுமின்றி கூகுள் நிறுவனத்தின் பிக்சல் 6a ஸ்மார்ட்போன் ப்ளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் சிறப்பு விற்பனையின் போது ரூ. 27 ஆயிரத்து 699 எனும் சிறப்பு விலையில் விற்பனைக்கு வருகிறது. முன்னதாக இந்த ஸ்மார்ட்போன் ரூ. 43 ஆயிரத்து 999 விலையில் விற்பனை செய்யப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

    • கூகுள் நிறுவனம் அக்டோபர் மாத முதல் வாரத்தில் புதிய பிக்சல் சீரிஸ் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய இருக்கிறது.
    • இந்த நிகழ்வில் பிக்சல் 7 சீரிஸ், பிக்சல் வாட்ச் உள்ளிட்ட சாதனங்கள் அறிமுகமாகும் என கூகுள் ஏற்கனவே அறிவித்து இருக்கிறது.

    கூகுள் நிறுவனம் அக்டோபர் 6 ஆம் தேதி "மேட் பை கூகுள்" பெயரில் ஸ்மார்ட்போன் அறிமுக நிகழ்ச்சியை நடத்த இருக்கிறது. முன்னதாக நடைபெற்ற கூகுள் I/O 2022 நிகழ்வில் இந்த ஆண்டு பிக்சல் 7 சீரிஸ் மற்றும் பிக்சல் வாட்ச் சாதனங்களை அறிமுகம் செய்வதாக கூகுள் அறிவித்து இருந்தது.

    இரு சாதனங்களை அறிமுகம் செய்வதாக ஏற்கனவே தகவல் வெளியான நிலையில், பிக்சல் டேப்லெட் மாடல் ஒன்றை கூகுள் உருவாக்கி வருவதாக கூறப்படுகிறது. இந்த சாதனம் 2023 வாக்கில் அறிமுகம் செய்யப்படும் என தகவல் வெளியாகி உள்ளது. இது தவிர பிக்சல் சீரிசில் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் மற்றும் மினி பிக்சல் போன் உள்ளிடடிவை அறிமுகம் செய்யப்பட இருப்பதாக கூறப்படுகிறது.


    இது குறித்து தனியார் செய்தி நிறுவனம் வெளியிட்டு இருக்கும் தகவல்களில் கூகுள் நிறுவனம் சிறிய ஸ்கிரீன் கொண்ட பிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போனை உருவாக்கி வருவதாக குறிப்பிடப்பட்டு உள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் நெய்லா எனும் குறியீட்டு பெயரில் உருவாக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனின் மத்தியில் பன்ச் ஹோல் வைக்கப்படுகிறது. இது பிக்சல் 6 மற்றும் பிக்சல் 7 சீரிஸ் மாடல்களில் உள்ளதை போன்றே காட்சியளிக்கிறது.

    இவை தவிர ஸ்மார்ட்போனின் அம்சங்கள் பற்றி வேறு எந்த தகவலும் வெளியாகவில்லை. மேலும் இந்த ஸ்மார்ட்போன் பிக்சல் 7 சீரிஸ் மாடல்களுடன் அறிமுகம் செய்யப்படுமா என்பதும் கேள்விக்குறியாகவே உள்ளது.

    • கூகுள் நிறுவனம் புதிய பிக்சல் 7 சீரிஸ் ஸ்மார்ட்போன் மற்றும் பிக்சல் வாட்ச் வெளியீட்டு தேதியை அறிவித்து இருக்கிறது.
    • முன்னதாக மே மாதம் நடைபெற்ற கூகுள் I/O 2022 நிகழ்வில் இவற்றுக்கான டீசர் வெளியாகி இருந்தது.

    கூகுள் நிறுவனம் பிக்சல் ஹார்டுவேர் நிகழ்வு அக்டோபர் 6 ஆம் தேதி நடைபெறும் என அறிவித்து இருக்கிறது. இந்த நிகழ்வு "மேட் பை கூகுள்" (Made By Google) எனும் தலைப்பில் நடைபெற இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் பிக்சல் 7, பிக்சல் 7 ப்ரோ மற்றும் பிக்சல் வாட்ச் போன்ற சாதனங்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளன. முன்னதாக இதே சாதனங்களின் டீசர் மே மாத வாக்கில் நடைபெற்ற 2022 கூகுள் I/O நிகழ்வில் வெளியிடப்பட்டு இருந்தது.

    இவை மட்டுமின்றி நெஸ்ட் ஸ்மார்ட் ஹோம் பிரிவிலும் கூகுள் புது சாதனங்களையும் கூகுள் அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய டீசரில் பிக்சல் 7 சீரிஸ் சாதனங்கள், அடுத்த தலைமுறை டென்சார் பிராசஸர், ஆண்ட்ராய்டு 13 ஒஎஸ் கொண்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த போன்களில் கேமரா பார் இடம்பெற்று இருக்கிறது. எனினும், இவை பிக்சல் 6 சீரிசில் இருந்ததை விட அளவில் சிறியதாக வழங்கப்பட்டு இருக்கிறது.


    பிக்சல் 7 சீரிஸ் மாடல்களில் மேட் பினிஷ் கொண்ட அலுமினியம் பிரேம், பிக்சல் 7 ப்ரோ மாடலில் பாலிஷ் செய்யப்பட்ட அலுமினியம் பிரேம் வழங்கப்படுகிறது. இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களில் பிக்சல் 7 மாடலில் 2400x1080 பிக்சல் 90Hz ரிப்ரெஷ் ரேட் டிஸ்ப்ளேவும், பிக்சல் 7 ப்ரோ மாடலில் 3120x1440 பிக்சல் 120Hz ரிப்ரெஷ் ரேட் டிஸ்ப்ளேவும் வழங்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது.

    பிக்சல் 7 மாடலில் இரண்டு கேமராக்களும், பிக்சல் 7 ப்ரோ மாடலில் மூன்று கேமரா சென்சார்களும் வழங்கப்படுகிறது. இரு ஸ்மார்ட்போன்களிலும் 4K வீடியோ ரெக்கார்டிங் வசதி வழங்கப்படுகிறது. கூகுள் நிறுவனத்தின் முதல் ஸ்மார்ட்வாட்ச் அடுத்த மாதம் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்த ஸ்மார்ட்வாட்ச் பிட்பிட் ஹெல்த் மற்றும் பிட்னஸ் அம்சங்களை கொண்டிருக்கும்.

    இத்துடன் இந்த வாட்ச் மாடலில் புதிய வியர் ஒஎஸ் அனுபவம் கிடைக்கும். இது அனைத்து பிக்சல் மற்றும் ஆணட்ராய்டு போன்கள், பிக்சல் பட்ஸ் ப்ரோ மற்றும் பிக்சல் பட்ஸ் ஏ சீரிஸ் வயர்லெஸ் இயர்பட்ஸ் உடன் செயல்படும் வகையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது.

    புதிய பிக்சல் சீரிஸ் அறிமுக நிகழ்வு அக்டோபர் 6 ஆம் தேதி இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு நடைபெற இருக்கிறது. புதிய கூகுள் சாதனங்களின் விற்பனை அதே நாளில் துவங்கும் என கூகுள் அறிவித்து உள்ளது. விற்பனை கூகுள் ஸ்டோர் வலைதளம், நியூ யார்க் நகர கூகுள் ஸ்டோர்களில் நடைபெற இருக்கிறது.

    • கூகுள் நிறுவனம் ஆய்வாளர்களுக்கு சன்மானம் வழங்கும் புது திட்டத்தை அறிவித்து இருக்கிறது.
    • ஆய்வாளர்கள் கண்டறியும் பிழையின் முக்கியத்துவம் மற்றும் நோக்கம் சார்ந்து சன்மான தொகை வேறுபடும்.

    கூகுள் நிறுவனம் தனது சேவைகளில் உள்ள பிழைகளை கண்டறிய புது திட்டம் ஒன்றை அறிவித்து இருக்கிறது. இந்த திட்டத்தின் மூலம் ஆய்வாளர்களுக்கு அதிகபட்சம் 31 ஆயிரத்து 337 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 25 லட்சம் வரையிலான சன்மானம் வழங்கப்பட இருக்கிறது.

    சன்மான தொகை ஆய்வாளர்கள் கண்டறியும் பிழை, அதன் குறிக்கோள் என பல்வேறு அடிப்படைகளில் கணக்கிடப்படுகிறது. சன்மான தொகை 100 டாலர்களில் துவங்கி அதிகபட்சமாக 31 ஆயிரத்து 337 டாலர்கள் வரை வழங்கப்பட இருக்கிறது. அதிகபட்ச சன்மானம் வழக்கமில்லாத அல்லது வித்தியாசமான பிழைகளுக்கே வழங்கப்படுகிறது. சன்மானம் வழங்கும் புது திட்டம் Open Source Software Vulnerability Rewards Programme என அழைக்கப்படுகிறது.


    உலகின் மிகப்பெரிய ஓபன் சோர்ஸ் மென்பொருள்களை வழங்கும் நிறுவனங்களில் ஒன்றாக கூகுள் விளங்குகிறது. கூகுளின் கோலங், ஆங்குலர் மற்றும் ஃபுகிசியா போன்ற திட்டங்கள் மிக முக்கியமானவை ஆகும். கடந்த ஆண்டு கூகுள் நிறுவனம் தனது ஓபன் சோர்ஸ் வினியோகத்தின் மீதான தாக்குதல்கள் 650 சதவீதம் வரை அதிகரித்து இருப்பதாக அறிவித்துள்ளது.

    சொந்தமாக பிழை கண்டறியும் திட்டத்தை அறிவித்து இருப்பதன் மூலம் ஆய்வாளர்கள், ஓபன் சோர்ஸ் திட்டத்தை பாதிக்கும் பிழையை கண்டறிவதற்கு ஏற்ப தகுதியான தொகையை சன்மானமாக பெற்றுக் கொள்ளலாம்.

    • ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் குறைந்த விலையில் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
    • ஸ்மார்ட்போன் உருவாக்குவதற்காக ஜியோ நிறுவனம் கூகுளுடன் கூட்டணி அமைத்து இருக்கிறது.

    ரிலையன்ஸ் நிறுவனத்தின் 45 ஆவது வருடாந்திர பொதுக்குழு கூட்டத்தில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் மலிவு விலையில் 5ஜி ஸ்மார்ட்போன் உருவாக்கி வருவதாக அறிவித்து இருக்கிறது. இதற்காக கூகுள் நிறுவனத்துடன் கூட்டணி அமைத்து இருப்பதாகவும் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் அறிவித்து உள்ளது. கடந்த ஆண்டு ஜியோபோன் நெக்ஸ்ட் மாடலை அறிமுகம் செய்ததைத் தொடர்ந்து புதிய 5ஜி ஸ்மார்ட்போனிற்கான அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

    5ஜி சார்ந்த சேவைகளை உள்நாடு மற்றும் வெளிநாட்டு பயனர்களுக்கு ஜியோவின் தனியார் 5ஜி ஸ்டாக் மூலம் வழங்க கூகுள் நிறுவனத்தின் மேம்பட்ட கிளவுட் சேவையை பயன்படுத்த இருக்கிறது. இத்துடன் மெட்டா நிறுவனத்துடன் இணைந்து தலைசிறந்த தொழில்நுட்பத்தை அனைவருக்கும் வழங்க இருப்பதாக ஜியோ அறிவித்துள்ளது.


    ஜியோவின் கிளவுட்-ஸ்கேல் டேட்டா செண்டர்களில் பயன்படுத்தப்பட்டு இருக்கும் தொழில்நுட்பம், 5ஜி எட்ஜ் லொகேஷன், செயற்கை நுண்ணறிவு போன்ற துறைகளில் இண்டெல் நிறுவனத்துடன் இணைந்து பணியாற்றி வருவதாக ஜியோ தெரிவித்து இருக்கிறது. இதுதவிர எரிக்சன், நோக்கியா, சாம்சங் மற்றும் சிஸ்கோ போன்ற நிறுவனங்களுடன் நல்லுறவு கொண்டு இருப்பதாகவும் அறிவித்து இருக்கிறது.

    இத்துடன் குவால்காம் நிறுவனத்துடன் கூட்டணி அமைத்து இருப்பதாக ஜியோ அறிவித்து இருக்கிறது. சர்வதேச அளவில் முன்னணி செமிகண்டக்டர் மற்றும் தகவல் தொடர்பு தொழில்நுட்ப நிறுவனமான குவால்காம் ஜியோ பிளாட்பார்ம்ஸ்-இல் முதலீடு செய்து இருக்கிறது. ஜியோவுடன் இணைந்து கிளவுட்-நேடிவ், 5ஜி உள்கட்டமைப்பு மற்றும் பல்வேறு பிரிவுகளில் பணியாற்றுவது மகிழ்ச்சி அளிக்கிறது என குவால்காம் தலைமை செயல் அதிகாரி க்ரிஸ்டியானோ அமோன் தெரிவித்தார்.

    • கூகுள் பிளே ஸ்டோரில் செயல்பட்டு வந்த 2 ஆயிரம் போலி செயலிகள் கண்டறியப்பட்டு உள்ளன.
    • இவை தனி நபர் கடன் வழங்குவதாக கூறி பணம் பறிக்கும் முயற்சிகளில் ஈடுபட்டு வந்துள்ளன.

    கூகுள் நிறுவனம் தனி நபர் கடன் வழங்கும் சுமார் 2 ஆயிரம் செயலிகள் பிளே ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்டு இருப்பதாக தெரிவித்து உள்ளது. ஜனவரி முதல் ஜூன் மாதம் வரையிலான காலக்கட்டத்தில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கிறது.

    இந்திய பயனர்களை போலி தகவல் கொண்டு மிரட்டி பணம் பறிக்கும் செயல்களில் தனி நபர் கடன் வழங்கும் செயலிகள் ஈடுபட்டு வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்து வரும் நிலையில், கூகுள் நிறுவனம் இந்த அறிவிப்பை வெளியிட்டு உள்ளது. சட்டத்துறை நிறுவனங்களுடன் ஆலோசனை செய்த பின் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது என கூகுள் நிறுவனம் தெரிவித்து உள்ளது.


    கூகுள் மட்டுமின்றி மத்திய அரசும் சுமார் 300 கடன் வழங்கும் செயலிகளுக்கு தடை விதிக்க திட்டமிட்டு வருகிறது. இந்த செயலிகள் பெரும்பாலும் சீனாவுடன் தொடர்பு கொண்டிருக்கும் காரணத்தாலேயே தடை விதிக்கப்பட உள்ளது. இவற்றில் பெரும்பாலான செயலிகள் பணம் அபகரிக்கும் செயல்களில் ஈடுபட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

    பிளே ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்ட செயலிகள் இந்திய பயனர்களை குறிவைப்பது கண்டறியப்பட்டது. இது போன்ற செயலிகள் எதிர்காலத்தில் பிளே ஸ்டோரில் அதிகரிக்காமல் தடுக்க பிளே ஸ்டோர் விதிகளில் மாற்றம் செய்யப்படும் என கூகுள் ஆசியா பசிபிக் பகுதிக்கான நம்பிக்கை மற்றும் பாதுகாப்பு பிரிவு மூத்த இயக்குனரும், தலைவருமான சைகித் மித்ரா தெரிவித்து இருக்கிறார்.

    • கூகுள் நிறுவனத்தின் பிக்சல் 6a ஸ்மார்ட்போன் ப்ளிப்கார்ட் தளத்தில் மட்டும் பிரத்யேகமாக விற்பனை செய்யப்பட்டு வந்தது.
    • சமீபத்தில் தான் இந்த ஸ்மார்ட்போன் ரூ. 43 ஆயிரத்து 999 எனும் துவக்க விலையில் அறிமுகம் செய்யப்பட்டது.

    இந்திய சந்தையில் கூகுள் நிறுவனத்தின் பிக்சல் 6a ஸ்மார்ட்போன் ப்ளிப்கார்ட் தளத்தில் மட்டும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்தியாவில் பிக்சல் 6a மாடலின் 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 43 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    எனினும், பிக்சல் 6a ஸ்மார்ட்போனினை அமேசான் தளத்தில் சற்றே குறைந்த விலையில் வாங்கிட முடியும். அமேசான் தளத்தில் பிக்சல் 6a விலை ரூ. 37 ஆயிரத்து 710 என்றே குறிப்பிடப்பட்டு இருக்கிறது. இது ப்ளிப்கார்ட் விலையை விட ரூ. 5 ஆயிரம் வரை விலை குறைவு ஆகும். பல்வேறு மூன்றாம் தரப்பு விற்பனையாளர்கள் பிக்சல் 6a ஸ்மார்ட்போனினை ரூ. 37 ஆயிரம் அல்லது ரூ. 38 ஆயிரம் விலையிலேயே விற்பனை செய்து வருகின்றன.


    அமேசான் தளத்தில் பிக்சல் 6a ஸ்மார்ட்போனை வாங்குவோர் சற்று கவனமாக இருக்க வேண்டியது அவசியம் ஆகும். அமேசான் தளத்தில் வாங்கும் போது பிக்சல் 6a ஸ்மாரட்போனிற்கு வாரண்டி எதுவும் வழங்கப்படாது. வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படுவதால் இந்த நடைமுறை பின்பற்றப்படுகிறது.

    விலை குறைவாக கிடைப்பதால், விற்பனையாளர் ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட அல்லது புதுப்பிக்கப்பட்ட யூனிட்டையும் விற்பனை செய்யும் வாய்ப்புகள் அதிகம். இந்த ரிஸ்க்-களை எடுக்க தயார் எனில், அமேசான் தளத்தில் குறைந்த விலையில் கிடைக்கும் பிக்சல் 6a ஸ்மார்ட்போனை வாங்கிக் கொள்ளலாம்.

    • கூகுள் நிறுவனத்தின் முற்றிலும் புதிய ஓஎஸ் பிக்சல் போன் பயனர்களுக்கு வெளியிடப்பட்டு வருகிறது.
    • பலக்கட்ட சோதனைக்கு பின் வெளியாகி இருக்கும் புது ஓஎஸ் பல்வேறு பயனுள்ள அம்சங்களை கொண்டிருக்கிறது.

    பிக்சல் போன் வைத்திருப்பவர்களுக்கு கூகுள் நிறுவனம் முற்றிலும் புதிய ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ்-ஐ வெளியிட்டு வருகிறது. கடந்த ஆண்டு ஆண்ட்ராய்டு 12 அக்டோபர் 19 ஆம் தேதி வரை வெளியிடப்படாமலேயே இருந்தது. அந்த வகையில், இந்த ஆண்டு புது ஓஎஸ் அப்டேட் யாரும் எதிர்பாராத சமயத்தில் வெளியாகி உள்ளது.

    பிக்சல் 6 சீரிஸ் ஸ்மார்ட்போன் பயன்படுத்துவோருக்கு இந்த ஓஎஸ் பல்வேறு பயனுள்ள அம்சங்களை வழங்குகிறது. குறிப்பாக ஆண்ட்ராய்டு 12 வெர்ஷனில் அண்டர் டிஸ்ப்ளே கைரேகை சென்சார் ஏராளமான பிரச்சினையை ஏற்படுத்தி வந்தது.

    தற்போது புது ஓஎஸ் இந்த பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டுள்ளது. ஆண்ட்ராய்டு 13 பீட்டா 4.1 வெர்ஷனிலேயே கைரேகை சென்சார் அதிகளவு மேம்பட்டு இருப்பதை உணர முடிந்ததாக பலர் சமூக வலைதளங்களில் தகவல் தெரிவித்து வந்தனர்.

    ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ்-இல் சில மூன்றாம் தரப்பு செயலிகளின் ஐகான்கள் போன் டிஸ்ப்ளேவுக்கு ஏற்ற வகையில் மாறிக் கொள்ளும் வகையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. செயலிகள் எவ்வளவு தகவல்களை சேகரித்து இயக்குகின்றன என்பதை சிறப்பாக இயக்க முடியும். மேலும் குறிப்பிட்ட புகைப்படங்கள், வீடியோக்கள் மற்றும் க்ளிப்-போர்டு ஹிஸ்ட்ரி போன்ற விவரங்களை சேகரிக்க முடியாது.

    ×