search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 197182"

    • நுரையீரல் தொடர்பான பாதிப்புகள் உள்ளவர்களுக்கும் இது சிறந்த ஆசனம்.
    • இந்த ஆசனம் செய்முறையை பார்க்கலாம்.

    தொடர் பணி, நீண்ட தூர பயணம், அலைச்சல் போன்ற காரணங்களால் உடம்பு ரொம்ப களைப்பாக இருக்கிறதா? மகராசனத்தில் கால் மணி நேரம் இருந்தால் போதும், அத்தனை களைப்பும் பறந்துபோய், உடல் மீண்டும் சுறுசுறுப்பாகிவிடும். 'மகர' என்றால் முதலையை குறிக்கும் சொல். நம் உடல் இந்த ஆசனத்தின் இறுதி நிலையில், முதலையின் உருவம்போல இருப்பதால் இப்பெயர்.

    உடல் சோர்வைப் போக்கும் மகராசனத்தை எப்படி செய்வது என தெரிந்துகொள்வோம்.

    செய்முறை

    விரிப்பில் குப்புற படுத்துக் கொள்ளவும். கைகளை ஒன்றன் மீது ஒன்றாக மடித்து வைத்துக் கொள்ளவும். கைகள் மீது தாடை பதிந்திருக்கட்டும். தாடைக்கு பதிலாக, கன்னத்தை கைகள் மீது பதிவதுபோல வைத்துக் கொண்டால், இன்னும் ரிலாக்ஸாக இருக்கும்.

    கால்களை அகலமாக வைத்துக் கொள்ளுங்கள். குதிகால்கள் உள்பக்கமாகவும், கால் விரல்கள் வெளிப்பக்கம் நோக்கியும் இருக்கட்டும். முழு உடம்பும் நன்கு ரிலாக்ஸாக இருக்கட்டும்.

    நன்கு நிதானமாக மூச்சை இழுத்து, மெதுவாக வெளியே விடுங்கள். 2-5 நிமிடங்கள் வரை இதே நிலையில் இருக்கவும். தேவைப்பட்டால், கூடுதல் நேரமும் இருக்கலாம்.

    கர்ப்பிணிப் பெண்கள் இவ்வாசனத்தைத் தவிர்க்கவும். குப்புறப் படுக்க இயலாதவர்கள், நிமிர்ந்து படுத்து கால்களை சுமார் 90 degree அளவு உயர்த்தி சுவற்றின் மீது வைத்து, கைகளை வணக்கம் சொல்லும் முறையில் மார்பின் மீது வைத்துப் பழகவும்.

    மகராசனத்தின்போது இடும்பு, முதுகு, தோள் பகுதிக்கு முழு ஓய்வு கிடைப்பதால், அப்பகுதிகள் ரிலாக்ஸ் ஆகின்றன. ஆஸ்துமா உட்பட நுரையீரல் தொடர்பான பாதிப்புகள் உள்ளவர்களுக்கும் இது சிறந்த ஆசனம் ஆகும். நுரையீரல் செயல்பாட்டை ஊக்குவிக்கிறது.

    முதுகு வலியைப் போக்குகிறது. இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது.

    ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • கீழ் முதுகை பலப்படுத்துகிறது.
    • இனப்பெருக்க அமைப்பைத் தூண்டுகிறது.

    வடமொழியில் 'பார்சுவ' என்றால் 'பக்கம்', 'உபவிஸ்த' என்றால் 'அமர்ந்த' மற்றும் 'கோணா' என்றால் 'கோணம்' என்று பொருள். பக்கவாட்டில் கால்களை நீட்டி அமர்ந்திருக்கும் கோணத்தால் இந்த ஆசனம் இப்பெயரைப் பெற்றது.

    பார்சுவ உபவிஸ்த கோணாசனம் வயிற்று தசைகளை வலுபடுத்துவதோடு வயிற்று உள் உறுப்புகளின் சீரான இயக்கத்துக்கு உதவுகிறது. தொடர்ந்து இந்த ஆசனத்தை பயின்று வந்தால் உடலின் நெகிழ்வுத்தன்மை கூடும்.

    பலன்கள்

    இடுப்புப் பகுதியை நீட்சியடைய வைக்கிறது. முதுகுத் தசைகளை பலப்படுத்துகிறது. கால்களை நீட்சியடைய வைக்கிறது. கழுத்து தசைகளை உறுதியாக்குகிறது.

    இந்த ஆசனம் இடுப்புகளைத் திறந்து, கால்களின் பின்புறத்தை ஆழமாக நீட்டுகிறது. முதுகெலும்பு நெகிழ்வுத்தன்மையை ஊக்குவிக்கிறது.

    கீழ் முதுகை பலப்படுத்துகிறது.தொடை மற்றும் கீழ் முதுகு தசைகளை நீட்டுகிறது. கல்லீரல் மற்றும் சிறுநீரகங்களுக்கு இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது. செரிமானத்தை மேம்படுத்துகிறது. இனப்பெருக்க அமைப்பைத் தூண்டுகிறது. மனச்சோர்வை நீக்குகிறது

    செய்முறை

    விரிப்பில் தண்டாசனத்தில் அமரவும். கால்களை முடிந்த வரையில் பக்கவாட்டில் விரிக்கவும். குதிகால்கள் தரையில் இருக்க வேண்டும். கால் விரல்கள் மேல் நோக்கி இருக்க வேண்டும்.

    மூச்சை வெளியேற்றிக் கொண்டே வலது காலை நோக்கிக் குனியவும். கைகளை நீட்டி வலது கால் விரல்களை அல்லது வலது பாதத்தைப் பற்றவும்.

    20 வினாடிகள் இந்த நிலையில் இருந்தபின், நிமிர்ந்து, இடது காலை நோக்கிக் குனிந்து பயிலவும். கைகள், கால்களை ஒன்றாக அழுத்தவும்.

    வயிற்றை வலது பக்கம் திருப்பவும். வலது காலை உள்ளே அல்லது வெளியே சாய்க்க விடாதீர்கள்.

    முதுகு, இடுப்பு மற்றும் காலில் தீவிரப் பிரச்சினை உள்ளவர்கள் இந்த ஆசனத்தைத் தவிர்க்கவும். கழுத்து வலி உள்ளவர்கள் முடிந்த அளவு குனிந்தாலே போதுமானது. குனிந்து செய்வதில் சிரமம் இருந்தால் காலுக்கடியில் விரிப்பு அல்லது yoga block போட்டு பயிலவும்.

    ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • தட்டைப் பாதம் இருப்பவர்களுக்கு இந்த ஆசனம் மிகவும் நல்லது.
    • இடுப்பு வலி, மூட்டு வலி குறையும்.

    செய்முறை :

    விரிப்பில் நேராக நிமிர்ந்து நிற்கவும். குதிகால்களை ஒன்றாகச் சேர்த்தும், விரல் பகுதிகளை லேசாக அகட்டியம் 'V' வடிவத்தில் வைக்கவும். கழுத்து நேராக இருக்கவேண்டும். கைகள் உடலை ஒட்டியும் - கை விரல்கள் தொடையைத் தொட்டபடியம் இருக்கட்டும். மெதுவாக வலக் காலை அகட்டி வைக்கவும். கால் பாதங்கள் இரண்டும் நேராக இருக்கட்டும்.

    வலக்கால் பாதத்தை இடக்காலுக்குச் செங்குத்தாக இருக்குமாறு வலப் பக்கம் திரும்பிக் கொள்ளவும். மெதுவாக வலக்கால் மூட்டுப் பகுதியை மடக்கி, வலப்பக்கம் சரிந்துகொள்ளவும். இடுப்பை வளைத்து பக்கவாட்டில் குனியவேண்டும். ஆனால் தரையை நோக்கி முகத்தைத் திருப்பாமல் நேராகவே பார்க்கவேண்டும். வலக்கையை, வலக் கால் பாதத்துக்குப் பக்கத்திலேயே தரையில் வைக்கவும். (உடல் எடையைக் கைகளுக்குக் கொண்டு வராமல், லேசாகத்தான் தரையில் ஊன்ற வேண்டும்.)

    குனிந்திருக்கும் கோணத்திலேயே, இடக்கையைத் தலைக்கு மேல் உயர்த்தவும். இடக்கையின் புஜங்கள் காதைத் தொட்டபடி இருக்கட்டும். இடக் கைவிரல் நுனியைப் பார்த்தபடி தலையைத் திருப்பிக்கொள்ள வேண்டும். நடுக்கம் இல்லாமல் நிற்க முடிந்தால், வலக் கையைத் தரையிலிருந்து எடுத்து, உங்கள் இடுப்புப் பகுதியின் பின்புறம் வைத்துக்கொள்ளலாம். இடக் கையை மெதுவாக இறக்கி, உடலை ஒட்டி இருக்குமாறு வைத்துக் கொள்ளவும். வலக்கை இடுப்பில் வைக்கப்பட்டிருந்தால், எடுத்துத் தரையில் வைத்துக்கொள்ளவும். வளைந்த நிலையில் இருக்கும் உடலை நேராக்கி நிமிரவும்.

    வலக் கால் பாதத்தை திருப்பி நேராக்கவும். பாதங்கள் இரண்டையும் "V' வடிவத்தில் சேர்த்துவைத்து, துவக்க நிலைக்கு வரவும். இதே முறையில் இடப்புறமும் 'காம்ப்ளிமென்ட்டு' ஆசனம் செய்யவும்.

    முதுகுத்தண்டு, கால் மூட்டியில் பிரச்சனை உள்ளவர்கள் இந்த ஆசனத்தை செய்ய வேண்டாம்.

    பலன்கள் :

    இந்த ஆசனத்தின் மூலம் கால்கள் நன்கு பலப்படுத்தப்படுகிறது. முக்கியமாக தட்டைப் பாதம் இருப்பவர்களுக்கு இந்த ஆசனம் மிகவும் நல்லது. இந்தப் பயிற்சியின் மூலம் கண்பார்வை அதிகரிக்கும். இடுப்பு வலி, மூட்டு வலி போன்றவை குறையும். மூன்றாவது நிலைக்கு, மூச்சை வெளியே விட்டபடி செல்லவும், நான்காவது நிலைக்கு மூச்சை உள்ளிழுத்தபடி செல்லவும். ஐந்தாவது, ஆறாவது நிலைகளில் மூச்சை உள்ளிழுத்தபடி மேலே வரவும்.

    மலச்சிக்கலைக் குணப்படுத்துகிறது மற்றும் சாதாரண குடல் இயக்கத்திற்கு உதவுகிறது. இந்த ஆசனத்தைப் பயிற்சி செய்வது எடையைக் குறைக்க உதவுகிறது, குறிப்பாக இடுப்பு மற்றும் இடுப்புப் பகுதியைச் சுற்றியுள்ள அதிகப்படியான சதையை குறைக்க உதவுகிறது.

    ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • இந்த ஆசனம் பார்ப்பதற்கு கஷ்டமானதாகத் தான் தெரியும்.
    • இந்த ஆசனம் மன அழுத்தம் மற்றும் பதற்றத்தை குறைக்க உதவுகிறது.

    செய்முறை

    இந்த ஆசனம் செய்வதற்கு, முதலில் தரையில் படுத்து, கைகளால் உடலை மேலே தூக்கி, கால்கள் தலைக்கு பின்னால் தரையை தொடுமாறும், பின் கைகள் தரையில் ஊன்றியிருக்குமாறும் செய்ய வேண்டும். இப்படி செய்யும் போது மூச்சை மெதுவாக உள்ளிழுத்து வெளிவிட வேண்டும். இந்த நிலையில் சில நிமிடங்கள் இருந்த பின்னர் பழைய நிலைக்கு வரவும். முதுகு தண்டில் பிரச்சனை உள்ளவர்கள் இந்த ஆசனத்தை செய்யக்கூடாது. வயிற்றில், முதுகில் அறுவை சிகிச்சை செய்தர்களுக்கும் இந்த ஆசனத்தை செய்யக்கூடாது.

    பயன்கள்

    இந்த ஆசனம் பார்ப்பதற்கு கஷ்டமானதாகத் தான் தெரியும். இது தைராய்டு சுரப்பியைத் தூண்டுகிறது. ஆனால் இந்த ஆசனத்தின் மூலம் இனப்பெருக்க உறுப்புகள் தூண்டப்பட்டு, மசாஜ் செய்தது போல் இருக்கும். மேலும் குழந்தை பெற்றுக் கொள்ள முடியாதவர்கள், இந்த ஆசனத்தை தினமும் செய்து வந்தால், நிச்சயம் நல்ல பலனைக் காணலாம்.

    வயிற்று உறுப்புகளின் செயல்பாட்டை அதிகரிக்கிறது. முதுகெலும்பு மற்றும் தோள்பட்டைகளை நீட்டி பலப்படுத்துகிறது. இந்த ஆசனம் மன அழுத்தம் மற்றும் பதற்றத்தை குறைக்க உதவுகிறது. இது உயர் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தவும் உதவுகிறது.இந்த ஆசனம் மெனோபாஸ் அறிகுறிகளை நிர்வகிக்க உதவுகிறது. இது கருவுறாமை, சைனசிடிஸ் மற்றும் முதுகுவலிக்கு எதிராகவும் பயனுள்ளதாக இருக்கும்.

    • கழுத்து வலி, தோள் வலி, சுவாசக் கோளாறுகள் சரியாகின்றன.
    • கணையம் உள்ளிட்ட உறுப்புகளின் செயல்பாடு சீராகிறது.

    உடம்பை சக்கரம் போல பின்பக்கமாக வளைக்கும் ஆசனம் 'சக்ராசனம்'. அதில் பாதி அளவுக்கு வளைப்பதால் இதற்கு 'அர்த்த சக்ராசனம்' என்ற பெயர்.

    செய்முறை

    விரிப்பில் நேராக நிமிர்ந்து நிற்கவும். கால்கள் சேர்ந்து இருக்கட்டும். ஒரு முறை மூச்சை நன்கு இழுத்து விடுங்கள். இரு கைகளையும் இடுப்பில் வைத்துக் கொள்ளுங்கள். உள்ளங்கை முழுவதும் இடுப்பு பகுதியில் நன்கு பதிந்திருக்கட்டும். விரல்கள் சேர்ந்து இருக்கட்டும். கைகளை மெல்ல நகர்த்தி பின்பக்கமாக கொண்டு செல்லவும். கைகளின் முட்டிகள் இயன்ற வரை நெருக்கமாக இருக்கட்டும்.

    ஒரு முறை மூச்சு நன்கு இழுத்து விடுங்கள். இப்போது, உள்ளங்கைகளால் இடுப்பை முன்னோக்கி அழுத்தவும். மெதுவாக, மூச்சை இழுத்தபடியே பின்பக்கமாக இடுப்பை வளைத்து, அண்ணாந்து மேல் வானத்தை பார்க்கவும். கழுத்து பகுதி ரிலாக்ஸாக இருக்கட்டும். 1-10 எண்ணுங்கள். மூச்சை விட்டுக்கொண்டே சமநிலைக்கு வரவும்.

    பயன்கள்

    இந்த ஆசனம் செய்வதால் தோள், தொடை, இடுப்பு பகுதிகள் வலுப்பெறுகின்றன. தொடை, வயிறு பகுதியில் தேவையற்ற சதைகள் கரைகின்றன. கழுத்து வலி, தோள் வலி, சுவாசக் கோளாறுகள் சரியாகின்றன. நுரையீரல் நன்கு விரிவடைவதால், முழு சுவாசம் கிடைக்கிறது. கணையம் உள்ளிட்ட உறுப்புகளின் செயல்பாடு சீராகிறது. வெர்ட்டிகோ, மைக்ரைன், தலைவலி உள்ளவர்கள் நிதானமாக செய்வது அவசியம். அதிகப்படியான கழுத்து, முதுகு, இடுப்பு வலி, குடலிறக்கம், குடல் புண், அதிக ரத்த அழுத்தம் உள்ளவர்கள் தவிர்ப்பது நல்லது.

    • முதுகுத்தண்டு பிரச்சினை உள்ளவர்களும் இந்த ஆசனத்தை தவிர்க்கவும்.
    • இந்த ஆசனம் செய்முறையை பார்க்கலாம்.

    காக்கையின் உருவ அமைப்பை ஒத்து இருப்பதால் இந்த ஆசனம் காகாசனம் என்று பெயர் பெற்றது. மேலும், காக்கையின் கால்கள் பலமாக இருப்பது போல், காகத்தின் கால்களாக பயன்படுத்தப்படும் நம் கைகள் பலம் பெறுகின்றன. காகங்கள் மிக புத்திசாலியான பறவைகள், அவை சூழலுக்கு ஏற்றாற் போல் தங்களை மாற்றி அமைத்துக் கொள்ளும் திறன் பெற்றவை. காகாசனத்தில் நம்முடைய சுவாதிட்டான சக்கரம் தூண்டப்படுவதால் நம் உடலின் ஆற்றல் பெருகுகிறது.

    செய்முறை

    விரிப்பில் நேராக நிற்கவும். மூச்சை வெளியேற்றிக் கொண்டே குனிந்து உள்ளங்கைகளை தரையில் வைக்கவும். இரண்டு உள்ளங்கைகளுக்கு இடையில் தோள் அளவு இடைவெளி இருக்க வேண்டும்.

    கை முட்டியை மடக்கி, குதிகால்களை உயர்த்தி கால் முட்டியை மேல்கைகளின் மேல் வைக்கவும். மெதுவாக கால்களை உயர்த்தி கைகளால் உடலைத் தாங்கி நிற்கவும். 20 வினாடிகள் இந்த நிலையில் இருந்த பின் மீண்டும் பழைய நிலைக்கு வரவும்.

    தோள், முட்டி, மணிக்கட்டு ஆகிய பகுதிகளில் வலி இருப்பவர்கள் இந்த ஆசனத்தை செய்யும்போது வலி ஏற்பட்டால் தொடர்ந்து பயில்வதைத் தவிர்க்கவும். முதுகுத்தண்டு பிரச்சினை உள்ளவர்களும் இந்த ஆசனத்தை தவிர்க்கவும்.

    பலன்கள்

    கைகளையும் மணிக்கட்டுகளையும் பலப்படுத்துகிறது. சீரணத்தை மேம்படுத்துகிறது. வயிற்று உள் உறுப்புகளின் இயக்கத்தை செம்மையாக்குகிறது.

    கவனத்தை கூர்மையாக்குகிறது. சமநிலையான உடலையும் மனதையும் அளிக்கிறது.

    • நுரையீரலைப் பலப்படுத்துகிறது.
    • வெரிகோஸ் வெயின் (Varicose vein) எனப்படும் நரம்பு சுருண்டு வீங்கிய நிலையை சரி செய்கிறது.

    வஜ்ராசனம் என்பது உடலை வைரம் போல் உறுதியாக்கும் ஆசனம் என்றும் பார்த்திருப்போம். சுப்த வஜ்ராசனம் என்பது படுத்த நிலையில் வீராசனத்தில் இருப்பதாகும். வட மொழியில் 'சுப்த' என்றால் 'படுத்திருத்தல்' என்று அர்த்தம். ஆக, இது படுத்த நிலையில் வஜ்ராசனம் செய்வதாகும்.

    வஜ்ராசனம் போலவே சுப்த வஜ்ராசனமும் ஜுரணக் கோளாறுகளை சீர் செய்து சீரண உறுப்புகளை சரியாக இயங்க வைக்கிறது. வயிற்று உள் உறுப்புகளின் செயல்பாடுகளை செம்மையாக்குகிறது. இந்த ஆசனத்தில் கால்கள் வீராசன நிலையில் இருப்பதால், இது சுப்த வீராசனம் என்றும் அழைக்கப்படுவது உண்டு. இந்த ஆசனத்தை பயிலும் முன் வஜ்ராசனம், வீராசனம் ஆகிய இரண்டிலும் நல்ல பயிற்சி பெற்றிருப்பது அவசியம்.

    பலன்கள்

    நுரையீரலைப் பலப்படுத்துகிறது. வாயுக் கோளாறைப் போக்குகிறது. தொடை முதல் பாதம் வரை கால்கள் முழுவதையும் பலப்படுத்துகிறது.

    மூட்டுகளை பலப்படுத்துகிறது.

    தொடர் பயிற்சியில் மாதவிடாய் நேரத்தில் ஏற்படும் வலிகளைப் போக்குகிறது. சையாடிக் பிரச்சினையைப்போக்குகிறது.வெரிகோஸ் வெயின் (Varicose vein) எனப்படும் நரம்பு சுருண்டு வீங்கிய நிலையை சரி செய்கிறது. தூக்கமின்மையை போக்குகிறது.

    செய்முறை

    வஜ்ராசனத்தில் அமரவும். பின், கால்களை விரித்து வீராசன நிலைக்கு வரவும். கால் பாதங்களை கைகளால் பிடித்து கொள்ளவும். உங்கள் முன்கைகளை தரையில் வைத்து பின்னால் மெதுவாக சாயவும். மேலும் நன்றாக சாய்ந்து தரையில் படுக்கவும்.

    இப்பொழுது உங்கள் கைகளை தலைக்கு பின்னால் கொண்டு வந்து வலது தோளை இடது கையாலும் இடது தோளை வலது கையாலும் பற்றி முன்கைகளை தரையில் வைக்கவும். 30 வினாடிகள் முதல் ஒரு நிமிடம் வரை இந்த நிலையில் இருக்கவும். குறிப்பிட்ட நேரம் இந்த நிலையில் இருந்த பின் பாதங்களைப் பற்றி எழுந்து பின் கால்களை சேர்த்து வஜ்ராசன நிலைக்கு வரவும்.

    குறிப்பு

    பின்னால் சாய்ந்து தரையில் படுக்க முடியாதவர்கள், ஒரு தலையணை அல்லது yoga block ஒன்றை முதுகுக்கு பின்னால் வைத்து அதன் மேல் படுக்கலாம்.

    வஜ்ராசனம் அல்லது வீராசன நிலையில் கால்களை வைக்க கடினமாக இருந்தால் கணுக்கால்களின் கீழ் தலையணை, தடித்த விரிப்பு அல்லது yoga block வைத்து அமரவும்.

    கால் முட்டியிலும், இடுப்பிலும் தீவிர பிரச்சினை உள்ளவர்கள் இந்த ஆசனம் பயில்வதைத் தவிர்க்கவும்.

    • தாய்லாந்தில் நடக்கக்கூடிய யோகா போட்டியில் கலந்து கொள்ள 10 பேர் தேர்வாகினர்.
    • நிகழ்ச்சிக்கு சிவகிரி பேரூராட்சி மன்ற தலைவர் கோமதிசங்கரி சுந்தரவடிவேலு தலைமை தாங்கினார்.

    சிவகிரி:

    சிவகிரி பிரணா யோகா பயிற்சி பள்ளியில் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ - மாணவிகள் யோகா பயிற்சி பெற்று வருகின்றனர். இவர்கள் மாவட்ட அளவில் பல்வேறு யோகா போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றி பெற்றுள்ளனர். கடந்த மாதம் திருப்பூரில் நடந்த யோகா சாம்பியன்ஷிப் போட்டியில் மாணவ - மாணவிகள் கந்தராசனம், மயூராசனம், சிரசாசனம், விருச்சிக ஆசனம், ஏகபாத சிரசாசனம், கிருஷ்ண கோகுல் ஆசனம், பத்ம மயூராசனம், ராஜகபட ஆசனம், மனித கோபுரம் என பல்வேறு விதமான யோகாவை செய்து தங்களுடைய திறமைகளை வெளிப்படுத்தி மே மாதம் சர்வதேச அளவில் தாய்லாந்தில் நடக்கக்கூடிய யோகா போட்டியில் கலந்து கொள்ள 10 பேர் தேர்வாகினர்.

    கூடாரப்பாறை பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் அடிவாரத்தில் மாணவ - மாணவிகளை பாராட்டி நினைவு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கும் விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு சிவகிரி பேரூராட்சி மன்ற தலைவர் கோமதிசங்கரி சுந்தரவடிவேலு தலைமை தாங்கினார். துணைத் தலைவர் லட்சுமிராமன் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியை மாஸ்டர் அருண்குமார் தொகுத்து வழங்கினார். சிவகிரி பேரூராட்சி மன்ற தலைவர் கோமதிசங்கரி சுந்தரவடிவேலு, துணைத் தலைவர் லட்சுமிராமன் ஆகியோர் மாணவர்களுக்கு நினைவு பரிசுகள், சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினர். தாய்லாந்தில் நடைபெறக்கூடிய யோகா போட்டியில் மாணவர்கள் வெற்றி பெற தி.மு.க. மாவட்ட மாணவரணி சுந்தரவடிவேலு, கவுன்சிலர்கள் விக்னேஷ் ராஜா, செந்தில்குமார், மருதவள்ளி, ரத்தினராஜ், சித்ராதேவி, பெற்றோர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் ஆகியோர் வாழ்த்தினர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பிரணா யோகா பயிற்சி பள்ளி ஆசிரியர் அருண்குமார் செய்திருந்தார்.

    • முதுகுத்தண்டு மற்றும் முதுகுத் தசைகளை பலப்படுத்துகிறது.
    • நுரையீரலைப் பலப்படுத்துகிறது.

    ஆஞ்சநேயாசனத்தில் மூலாதாரம், சுவாதிட்டானம், மணிப்பூரகம் மற்றும் அனாகதம் ஆகிய சக்கரங்கள் தூண்டப்படுகின்றன. இவ்வாசனத்தைத் தொடர்ந்து பயின்று வர இருதய நலன் பாதுகாக்கப்படுவதோடு பிராண ஆற்றலையும் உடல் முழுவதும் செலுத்த உதவுகிறது.

    உடலின் முக்கியமான உறுப்பு தண்டுவடம். உடல் இயக்கத்துக்கு அடிப்படையான 33 நரம்புகள் இதில் இணைக்கப்பட்டுள்ளன. மூளை மற்றும் உடலின் மற்ற பகுதிகளுக்கு இடையே உள்ள தகவல் பரிமாற்றத்துக்கு தண்டுவடம் அடிப்படையானது. உட்காருவது, நடப்பது, நிற்பது, பொருட்களை தூக்குவது போன்ற செயல்களின்போது நமது தோரணை சீரற்று இருப்பதால், தண்டுவடத்தில் பாதிப்புகள் ஏற்படும். இந்த ஆசனத்தை செய்வதன் மூலம் குணப்படுத்த முடியும்.

    விரிப்பில் நேராக நின்று கொள்ளவும். வலது காலை முன் நோக்கி நகர்த்தி தரையில் பாதம் பதியும்படி ஊன்றிக்கொள்ளவும். பின்பு இடது காலை பின்னோக்கி கொண்டு சென்று, முழங்கால் தரையில் படுமாறு கிடைமட்டமாக வைக்கவும். பின்னர் இரண்டு கைகளையும் கூப்பி தலைக்கு மேல் நேராக தூக்கவும். இந்த நிலையில் முதுகுப் பகுதியை பின் நோக்கி வளைக்க வேண்டும். பிறகு ஆரம்ப நிலைக்கு வரலாம். இதைப் போன்று மற்றொரு காலுக்கும் செய்ய வேண்டும்.

    பலன்கள்: பெண்களுக்கு கை மற்றும் இடுப்பு பகுதியில் இருக்கும் தேவையற்ற கொழுப்பு கரையும். வாகனத்தில் பயணித்தல் மற்றும் பணியிடத்தில் கணினி முன்பு நீண்ட நேரம் வேலை பார்க்கும்போது ஏற்படும் தண்டுவட பாதிப்புகளில் இருந்து விடுபடலாம்.

    முதுகுத்தண்டு மற்றும் முதுகுத் தசைகளை பலப்படுத்துகிறது. தோள்களை விரிக்கிறது. நுரையீரலைப் பலப்படுத்துகிறது. வயிற்று உள் உறுப்புகளின் செயல்பாடுகளை மேம்படுத்துகிறது. உடலின் ஆற்றலை வளர்க்கிறது. இடுப்புப் பகுதியின் நெகிழ்வுத்தன்மையை அதிகரிக்கிறது. இடுப்புப் பகுதியில் உள்ள அதிக சதையைக் கரைக்க உதவுகிறது.

    • மாநகராட்சி பள்ளிகளில் யோகா விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படவுள்ளது.
    • ஆர்வம் உள்ளவர்கள் பயிற்சி பெற ஏற்பாடு செய்யப்படும்.

    திருப்பூர் :

    திருப்பூரில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் ஒரு பகுதியாக பள்ளி மாணவர்கள் மத்தியில் யோகா குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாகவும், அதை முறையாக தொடர்ந்து பயின்று பின்பற்றும் வகையிலும் திட்டமிடப்பட்டு ள்ளது.மாநகராட்சி பள்ளிகளில் யோகா விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படவுள்ளது. இதன் தொடக்க விழா கே.வி.ஆர்., நகர் மாநகராட்சி உயர்நிலைப் பள்ளி வளாகத்தில் நடந்தது.துணை மேயர் பாலசுப்ரம ணியம், கவுன்சிலர் அன்பகம் திருப்பதி, கல்விக்குழு தலைவர் திவாகர், உதவி கமிஷனர் செல்வநாயகம் முன்னிலை வகித்தனர்.

    இதில் மாநகராட்சி கமிஷனர் பவன்குமார் தலைமை வகித்து பேசுகை யில், யோகா வகுப்புகள் மாநகராட்சி பள்ளிகள் அனைத்திலும் துவங்கி ஆர்வம் உள்ளவர்கள் பயிற்சி பெற ஏற்பாடு செய்யப்படும். மேலும், அனைத்து பள்ளிகளிடையே யோகாசன போட்டிகள் நடத்தி சிறப்பிடம் பெறுவோருக்கு பரிசளிக்கப்படும் என்றார்.

    பயிற்சியை துவக்கி வைத்து மேயர் தினேஷ்குமார் பேசுகையில், யோகா உடலையும், உள்ளத்தையும் சீராக வைத்திருக்க உதவும் அற்புத கலை.இதை இளம் வயதிேலயே மாணவர்கள் கற்றுக் கொள்வதன் மூலம் அவர்கள் எதிர்காலம் சிறப்பாக அமைத்துக் கொள்ளமுடியும். இதைக் கற்றுக் கொள்ள உலக நாடுகளில் வாழும் பலரும் ஆர்வமாக உள்ளனர் என்றார்.

    • கர்ப்பமாக இருக்கும் போது கண்டிப்பாக இந்த ஆசனத்தை செய்யக்கூடாது.
    • கழுத்து பகுதிக்கு சரியான இரத்த ஓட்டத்தை அளிக்கும்.

    செய்முறை:

    முதலில் கால்களை நீட்டியவாறு விரிப்பில் அமரவும். தலை, முதுகு, முதலியவை நேராக நிமிர்ந்து உட்காரவும். கைகளை தொடையோடு சேர்த்து வைத்திருக்க வேண்டும்.

    அடுத்து கைகைளை தரையில் ஊன்றி புட்டப் பகுதியை மேலே தூக்கி கால்களை கைகளின் வெளிப்புறமாக வளைத்து போட்டு கணுக்கால்களை ஒன்றோடொன்று பின்னி கொள்ள வேண்டும்.

    இப்போது உடல் பாரம் முழுவதும் தரையில் ஊன்றப்பட்டிருக்கும் கைகளின் மீதே இருக்கும். இந்த நிலையில் சில வினாடி இருந்த பின்பு கால்களை விடுவித்து அவற்றின் முழங்கால்கள் கைகளின் புஜங்களின் மீது பதித்து இருக்கும் விதத்தில் சில நிமிடங்கள் இருக்கவும்.

    பத்து முதல் 20 விநாடிகள் இந்த நிலையில் இருக்க வேண்டும்.

    பயன்கள்

    இந்த ஆசனம் தோள்களுக்கு பிரமாதமான வலிமையை கொடுத்து மூளையின் ஆற்றலை அதிகப்படுத்தும். இருதய ரோகங்களை நீக்கும். கழுத்து பகுதிக்கு சரியான இரத்த ஓட்டத்தை அளிக்கும்.

    பெண்கள் இந்த ஆசனத்தை பொதுவாக செய்து வந்தாலும் பிரசவம் எளிமையாகவும், சிக்கல் இல்லாமலும் அமையும். ஆனால் பெண்கள் கர்ப்பமாக இருக்கும் போது கண்டிப்பாக இந்த ஆசனத்தை செய்யக்கூடாது.

    உங்கள் மணிக்கட்டு, கைகள், கைகள், மார்பு, தோள்கள் மற்றும் மேல் முதுகில் வலிமையடையும். இடுப்பு நெகிழ்வு மற்றும் தொடை எலும்புகளில் நெகிழ்வுத்தன்மை அடைகிறது. ஆழ்ந்த சுவாசத்தை பயிற்சி செய்யும் போது நீண்ட நேரம் நிலைநிறுத்துவதன் மூலம் அதிக நன்மைகளைப் பெறுவீர்கள்.

    மணிக்கட்டில் அசௌகரியம் அல்லது வலியை உணர்ந்தால், இந்த ஆசனத்தை செய்யக்கூடாது. உங்கள் தோள்கள், முழங்கைகள் அல்லது கீழ் முதுகில் பிரச்சனை இருந்தால், இந்த ஆசனத்தைச் செய்யக்கூடாது.

    • மனஅழுத்தம் என்பது சிக்கலான சூழல்களில் உங்கள் உடலும் மனமும் எதிர்வினையாற்றும் முறையாகும்.
    • யோகாசனம் பயில்வதால் மனதில் அமைதி ஏற்படுகிறது.

    மன அழுத்தம், தன்மை, சூழல், அளவுக்கு ஏற்ப நேர்மறை மற்றும் எதிர்மறை விளைவுகளைத் தரக் கூடியது. மனிதன் தோன்றிய காலம் முதலே stress மனிதனில் இயல்பாக இருந்திருக்கும். வேட்டையாடி சமூகத்தின் சூழல் தரும் சவால்களில் மன அழுத்தம் என்பது தவிர்க்க முடியாத ஒன்றாக இருந்திருக்கும். மனிதனின் பரிணாம வளர்ச்சியோடு மன அழுத்தத்தின் தன்மையும், விளைவுகளும் மாற்றம் அடைந்து வந்திருக்கிறது.

    ஆனால், மன அழுத்தம் பல்வேறு எதிர்மறை பாதிப்புகளை அளிக்கக் கூடியதாக, சமூகத்தில் பரவலாக பலரையும் பாதிக்கக் கூடியதான ஒன்றாக ஆனது சமீபத்திய வருடங்களில்தான். 1950 மற்றும் 1960-களின் காலக்கட்டத்தில் மன அழுத்தத்தின் காரணமாக ஏற்படும் மனச்சோர்வு என்பது அபூர்வமனதாக இருந்தது போய் 21-ம் நூற்றாண்டிலே, மன அழுத்தம் மற்றும் மனச்சோர்வு, உடல் பாதிப்புகளை ஏற்படுத்தும் முக்கிய நோய்களின் பட்டியலில் இடம் பிடித்திருக்கிறது.

    Stress என்பது சிக்கலான சூழல்களில் உங்கள் உடலும் மனமும் எதிர்வினையாற்றும் முறையாகும். ஒரு சிக்கலான சூழலில், stress hormones வெளிவருவதால் உங்களின் இருதயத் துடிப்பும் இரத்த அழுத்தமும் அதிகரிக்கிறது. இதன் விளைவாக உடலில் பிராணவாயு ஓட்டம் அதிகரிக்கிறது, உங்கள் நோய் எதிர்க்கும் திறன் தூண்டப்பட்டு உங்கள் உடலையும் மனதையும் சிக்கலை துணிவாக எதிர்கொள்ளவும் வெல்லவும் வைக்கிறது.

    யோகாசனம் நரம்பு மண்டலத்தை அமைதிப்படுத்துகிறது. உணர்வுகளின் தாக்கத்தால் ஏற்படும் விளைவுகளைக் கட்டுக்குள் கொண்டு வருவதோடு உணர்வுகளைக் கையாளும் திறனை மேம்படுத்துகிறது.

    யோகப்பயிற்சி செய்வதால் ஒருவர் தாம் செய்யும் வேலையில் மனதை ஈடுபடுத்துவதற்கு மனதைப் பழக்க முடியும். இதை ஆங்கிலத்தில் 'being in the moment' அல்லது 'mindfulness' என்று குறிப்பிடலாம். எப்பொழுது மனம், செய்யும் வேலையில் ஈடுபடுத்தப்படுகிறதோ, அப்பொழுதே மன அழுத்தத்தை உருவாக்கும் காரணங்களிலிருந்து மனம் விலகி விடுகிறது.

    யோகாசனம் பயில்வதால் மனதில் அமைதி ஏற்படுகிறது. சிந்தனையில் தெளிவு பிறக்கிறது.

    யோகப்பயிற்சி தூக்கமின்மையைப் போக்குகிறது. உடல், மன நலத்துக்கு தூக்கத்தின் இன்றியமையாமையைப் பற்றி சொல்ல வேண்டியதே இல்லை. மன அழுத்தத்தின் விளைவுகளில் ஒன்றான தூக்கமின்மை, மன அழுத்தத்தை மேலும் அதிகப்படுத்துவதாகி விடும். தொடர்ந்து யோகாசன பயிற்சி செய்து வர தூக்கமின்மை நீங்கும் என்று பல்வேறு ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

    யோகா மற்றும் பிராணாயாமப் பயிற்சிகள் மூச்சு விடும் முறைகளை செம்மையாக்குகிறது. தன்னிச்சையாக மூச்சு விடுவதைப் போல் அல்லாமல் பிராணாயாமத்தில் கவனத்தைக் குவித்து மூச்சை நிதானமாக இழுத்து விடும் சில பிராணாயாம வகைகள் parasympathetic nervous system-ஐ தூண்டுகின்றன. Sympathetic nervous system உடலை fight or flight mode-ற்குத் தயார் செய்கிறது என்றால் parasympathetic nervous system உடல் ஓய்வு கொள்ள உதவுகிறது. இது தூண்டப் பெறுவதன் மூலம் உடலும் மனமும் அமைதி நிலையை அடைகிறது.

    பிராணாயாம முறைகளில் ஆழ்ந்த மூச்சு விடும் பொழுது சஞ்சாரி நரம்பு (vagus nerve) தூண்டப்பெறுகிறது. சஞ்சாரி நரம்பு தூண்டப்படுவதால் மனநிலை மாற்றங்கள் (mood swings) மற்றும் மன அழுத்தம் குணமடைகின்றன.

    ×