search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 199398"

    மாணவ-மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்க வங்கிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட கலெக்டர் கணேஷ் கூறினார்.
    புதுக்கோட்டை:

    மாணவ-மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்க வங்கிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட கலெக்டர் கணேஷ் கூறினார்.

    இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ஒரு செய்தி குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:-

    புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள் மற்றும் தனியார் தொழிற்கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் பயிலும் பிற்படுத்தப்பட்ட, மிகப்பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர் வகுப்பை சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசு பல்வேறு திட்டங்களின் கீழ் கல்வி உதவித்தொகை வழங்கி வருகிறது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலை, அறிவியல் கல்லூரிகளில் இளங்கலை பட்டப்படிப்பு பயிலும் மாணவ, மாணவியருக்கு எவ்வித நிபந்தனையுமின்றி கல்வி உதவித்தொகை வழங்க வங்கிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    முதுகலை, பாலிடெக்னிக், தொழிற்படிப்பு போன்ற பிற படிப்புகளுக்கு கல்வி உதவித்தொகை பெறவிண்ணப் பிக்கும் மாணவர்களின் பெற்றோரது ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்துக்கு மிகாமல் இருத்தல் வேண்டும். கல்வி உதவித்தொகை கோரி விண்ணப்பிக்கும் விண்ணப்ப படிவங்களை அவர்கள் பயிலும் கல்வி நிறுவனங்களிலேயே பெற்று வருகிற 15-ந்தேதிக்குள் பூர்த்தி செய்து உரிய சான்றுகளுடன் கல்வி நிலையங்களில் சமர்ப்பிக்க வேண்டும். மாணவர்கள் தங்களின் வங்கி கணக்கு எண் விவரங்களை தவறாது குறிப்பிட வேண்டும்.

    மேலும் செப்டம்பர் 1-ந் தேதியில் தொடங்கும் கல்வி உதவித்தொகைக்கான இணையதளத்தில், புதுப்பித்தலுக்கான விண்ணப்பங்களை செப்டம்படர் 15-ந்தேதிக்கு முன்பும், புதியதிற்கான விண்ணப்பங்களை நவம்பர் 30-ந்தேதிக்கு முன்பும் அந்தந்த கல்வி நிறுவனங்கள் இணையதளம் மூலம் சமர்ப்பிக்க வேண்டும்.

    மேலும் விவரங்களுக்கு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை அணுகவும். இவ்வாறு அதில் கூறியுள்ளார். 
    கேரளாவில் 4 மாவட்டங்களில் நிபா வைரஸ் பாதிப்பு அதிகமாக இருப்பதால் இந்த மாவட்டங்களுக்கு சுற்றுலா செல்வதை தவிர்க்க வேண்டும் என்று மத்திய சுகாதாரத்துறை செயலாளர் அறிவுரை வழங்கி உள்ளார். #nipahvirus
    திருவனந்தபுரம்:

    கேரளாவில் நிபா வைரஸ் காய்ச்சல் பரவி உள்ளது. கோழிக்கோடு, மலப்புரம் மாவட்டங்களில் இதன் பாதிப்பு அதிகமாக உள்ளது.

    நிபா வைரஸ் காய்ச்சல் பாதிப்பு காரணமாக பலர் உயிர் இழந்து உள்ளனர். ஏராளமான பொதுமக்கள் காய்ச்சல் காரணமாக ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    கோழிக்கோடு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ள 17 பேருக்கும் கோட்டயம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ள 2 பேருக்கும் நிபா வைரஸ் காய்ச்சல் ஏற்பட்டிருப்பது முதல் கட்ட பரிசோதனையில் தெரிய வந்துள்ளது. இவர்களில் ஒருவர் நர்சு என்பது குறிப்பிடத்தக்கது.

    இதை தொடர்ந்து இந்த 19 பேரின் ரத்த மாதிரிகளும் பரிசோதனைக்காக புனேயில் உள்ள ஆய்வுக்கூடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

    கேரளாவிற்கு அதிகளவு சுற்றுலா பயணிகள் வருகை தருவார்கள். தற்போது கோடை விடுமுறை என்பதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் கேரளாவில் முக்கிய சுற்றுலா தலங்களில் குவிந்திருந்தனர்.

    கேரளாவில் பரவி வரும் நிபா வைரஸ் காய்ச்சலை தொடர்ந்து சுற்றுலா பயணிகள் வருகை குறைந்துள்ளது. இதற்கிடையில் மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜீவ் சதானந்தன் கேரளாவிற்கு சுற்றுலா செல்பவர்களுக்கு சில அறிவுரைகளை வழங்கி உள்ளார்.

    கோழிக்கோடு, மலப்புரம், வயநாடு, கண்ணூர் ஆகிய 4 மாவட்டங்களில் நிபா வைரஸ் பாதிப்பு அதிகமாக இருப்பதால் இந்த மாவட்டங்களுக்கு சுற்றுலா பயணிகள் செல்வதை தவிர்க்க வேண்டும். கேரளாவில் நிபா வைரஸ் காய்ச்சல் பரவுவதை தடுக்க அனைத்து நடவடிக்கைகளும் மத்திய, மாநில அரசுகள் சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

    வைரஸ் காய்ச்சலுக்கான மருந்து, மாத்திரைகள் கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள ஆஸ்பத்திரிகளுக்கு அதிகளவு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்று அவர், தெரிவித்துள்ளார்.



     நிபா வைரஸ் காய்ச்சலுக்கு பலியான நர்சு லினிக்கு மெழுகுவர்த்தி ஏந்தி நர்சுகள் அஞ்சலி செலுத்திய காட்சி.

    நிபா வைரஸ் தாக்குதலுக்கு பலியான நர்சு லினிக்கு திருவனந்தபுரத்தில் நர்சுகள் சார்பில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. இதில் திரளான நர்சுகள் கலந்து கொண்டு கைகளில் மெழுகுவர்த்தி ஏந்தி, மவுன அஞ்சலி செலுத்தினார்கள். #nipahvirus




    மத்திய அரசு பணியில் இருந்து ஓய்வுபெறும் ஊழியர்கள், ஓய்வூதியத்துக்காக அளிக்கும் விண்ணப்ப படிவம் தொடர்பாக புதிய விதிமுறைகளை மத்திய பணியாளர் நலத்துறை அமைச்சகம் வெளியிட்டு உள்ளது. #RetiringEmployee #PensionForm
    புதுடெல்லி:

    மத்திய அரசு பணியில் இருந்து ஓய்வுபெறும் ஊழியர்கள், ஓய்வூதியத்துக்காக அளிக்கும் விண்ணப்ப படிவம் தொடர்பாக புதிய விதிமுறைகளை மத்திய பணியாளர் நலத்துறை அமைச்சகம் வெளியிட்டு உள்ளது. அதன்படி அரசு ஊழியர்கள் தாங்கள் ஓய்வு பெறுவதற்கு 8 மாதங்களுக்கு முன் தலைமை தபால் நிலையங்களில் இருந்து ‘படிவம்–5’ வாங்கி அதை நிரப்பி வழங்க வேண்டும்.

    இந்த படிவத்தில் புகைப்படம் மற்றும் கையெழுத்துக்காக கொடுக்கப்பட்டுள்ள பெட்டிகளின் முழு அளவில், முறையே புகைப்படம் மற்றும் கையெழுத்து இருக்க வேண்டும். புகைப்படத்தை பொறுத்தவரை அது ‘செல்பி’யாகவோ, கம்ப்யூட்டரில் வரைந்ததாகவோ, கருப்பு–வெள்ளையாகவோ இருக்கக்கூடாது.

    கருப்பு கண்ணாடி அல்லது முடியால் கண் மறையும் வகையில் புகைப்படம் இருக்கக்கூடாது. அதைப்போல புகைப்படத்தில் கண் பகுதியில் கையெழுத்து போடக்கூடாது. அடர் நிற பின்னணி கொண்ட தெளிவான புகைப்படமாக இருக்க வேண்டும்.

    மேலும் இந்த படிவத்துடன் அரசு ஊழியர் தனது மனைவி அல்லது கணவனுடன் சேர்ந்து எடுத்த 3 புகைப்படங்களையும் (தனித்தனி புகைப்படங்களும் ஏற்கப்படும்) தலைமை தபால் நிலையத்தால் சான்றளிக்கப்பட்டு இணைக்க வேண்டும். இந்த வழிகாட்டு நெறிமுறைகள் அனைத்து அமைச்சகங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. #RetiringEmployee #PensionForm
    பள்ளி திறக்கும் முன்பு அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்திருக்க வேண்டும் என்று தலைமை ஆசிரியர்களிடம் முதன்மை கல்வி அலுவலர் ஜெயக்குமார் கூறினார்.
    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அலுவலகத்தில் அனைத்து அரசு, நகராட்சி, நிதியுதவி, சுயநிதி மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும், உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் ஆலோசனை கூட்டம் நடந்தது.

    முதன்மை கல்வி அலுவலர் ஜெயக்குமார் தலைமை தாங்கி பேசியதாவது-

    2018-2019-ம் ஆண்டில் மாணவர் சேர்க்கைக்கு தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் கழகம், பள்ளியில் படிக்கும் மாணவர்கள் இணைந்து செயல்பட வேண்டும். பள்ளியில் உள்ள வகுப்பறைகள், ஆய்வகங்கள், நூலக வசதி, ஸ்மார்ட் வகுப்பறைகள், கணினி வசதி, விளையாட்டு மைதானம், கழிவறை வசதி, குடிநீர் வசதி உள்ளிட்ட வசதிகள் இருப்பதைத் தெரிவித்தும், தங்களது பள்ளி அமைந்துள்ள கிராமம், அருகில் உள்ள கிராமங்களில் விளம்பரம் செய்தும், அரசுப் பள்ளிகளில் ஆங்கில வழி செயல்படுவது, புதிய பாடப்பிரிவு தொடக்கம் ஆகியவை குறித்து பெற்றோருக்குத் தெரியப் படுத்த வேண்டும்.

    ஒரு பள்ளியின் முழு நிர்வாகமும் தலைமை ஆசிரியரிடம் இருப்பதால் மாணவர்களின் தேர்ச்சி இலக்கைக் குறிக்கோளாகக் கொண்டு பல்வேறு முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-1, பிளஸ் -2 வகுப்பு மாணவ- மாணவிகள் 100 சதவீத தேர்ச்சி இலக்கை அடைய தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் தங்களின் ஆலோசனைகளை தெரிவிக்கலாம்.

    பள்ளியின் தேவைகளைப் பூர்த்தி செய்வதோடு, மாணவர்களின் சேர்க்கை, வருகை, உள்கட்டமைப்பு, தேர்ச்சி ஆகியவற்றை குறிக்கோளாக வைத்து பெற்றோர் ஆசிரியர் கழகம் பள்ளிகளில் சிறப்பாக செயல்பட வேண்டும்.

    வரும் கல்வியாண்டில் இயற்கையுடன் இணைந்த வாழ்வு, பாரம்பரிய, சத்தான உணவை உண்ணும் பழக்கம், உடற்பயிற்சி, மருத்துவ பரிசோதனை, உடல் தகுதி ஆகியவை குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

    பள்ளிகள் திறக்கும் ஒரு வாரத்திற்கு முன்பு தலைமை ஆசிரியர்கள் முன்னேற்பாடு பணிகளை செய்ய வேண்டும். பள்ளி வளாகம், வகுப்பறைகளை தூய்மையாக வைத்திருக்க வேண்டும். தண்ணீர் தொட்டி சுத்தம் செய்யப்பட்டு தயார் நிலையில் இருக்க வேண்டும். கரும்பலகைகள் வண்ணம் தீட்டப்பட்டிருக்க வேண்டும். கழிவறைகள் போதுமான எண்ணிக்கையில் தூய்மையாக தண்ணீர் வசதியுடன் பயன்படுத்தும் வகையில் இருக்க வேண்டும். பாதுகாக்கப்பட்ட குடிநீர் வசதி செய்ய வேண்டும். பள்ளி வளாகத்தினுள் முட்புதர்கள் நீக்கப்பட வேண்டும். மின் இணைப்புகள் பழுதில்லாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். சேதமடைந்த கட்டிடங்கள், இடியும் நிலையில் உள்ள அபாயகரமான சுவர்கள் அப்புறப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மாணவர்கள் சேர்க்கைக்கான அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட வேண்டும். பாடப்புத்தகம், நோட்டு, சீருடைகள் முதலியவை குறித்து உறுதி செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இதில் பள்ளி தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். 
    ×