search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "துப்பாக்கி"

    • குராயூர்-மொச்சிக்குளம் பகுதியில் அவர்கள் சென்று கொண்டிருந்த போது அந்த வழியாக ஒரு கார் வந்தது.
    • பறிமுதல் செய்யப்பட்ட கார், துப்பாக்கி மற்றும் தோட்டாக்களை போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.

    திருமங்கலம்:

    மதுரை மாவட்டம் கள்ளிக்குடி போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர்கள் மணிமொழி, வனிதா மற்றும் போலீஸ்காரர் நாகராஜன் ஆகியோர் நேற்று இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    குராயூர்-மொச்சிக்குளம் பகுதியில் அவர்கள் சென்று கொண்டிருந்தபோது அந்த வழியாக ஒரு கார் வந்தது. மிகவும் மெதுவாக வந்த அந்த காருக்குள் இருந்தவர்கள் டார்ச்லைட்டை அடித்தபடி இருந்துள்ளனர். இதனால் சந்தேகமடைந்த போலீசார் காரை நிறுத்துமாறு சைகை காண்பித்துள்ளனர்.

    போலீசாரை கண்டதும் காரில் வந்தவர்கள் காரை நிறுத்தாமல் வேகமாக சென்றனர். இதையடுத்து போலீசார் அவர்களின் பின்னால் துரத்தி சென்றனர். அரசப்பட்டி-கீழக்கோட்டை செல்லும் சாலையில் முத்துமாரி தோட்டம் என்ற பகுதிக்கு வந்தபோது காரில் வந்த 2 பே்ா, காரை அங்கேயே நிறுத்திவிட்டு இருட்டுக்குள் ஓடி தப்பி சென்று விட்டனர்.

    அவர்களை துரத்தி வந்த போலீசார், காருக்குள் சோதனை செய்தனர். அப்போது அந்த காரில் துப்பாக்கி மற்றும் 113 தோட்டக்கள், 2 காலி கேஸ்கள் இருந்தன. அவற்றை பறிமுதல் செய்த போலீசார், காரில் வந்தவர்களை அந்த பகுதியில் தேடினர். ஆனால் அவர்கள் கிடைக்கவில்லை.

    இதையடுத்து பறிமுதல் செய்யப்பட்ட கார், துப்பாக்கி மற்றும் தோட்டாக்களை போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். காரின் பதிவு எண்ணை வைத்து அந்த கார் யாருடையது? என்று போலீசார் துப்பு துலக்கி வருகின்றனர்.

    மேலும் அந்த காருக்குள் திருமங்கலம் காளிமுத்து நகரை சேர்ந்த பாலகணேஷ் என்பவரின் ஆதார் அட்டை, பெரம்பலூர் மாவட்ட ரைபிள் கிளப் லைசன்ஸ் உள்ளிட்டவைகள் இருந்தன. அவற்றையும் கைப்பற்றிய போலீசார் தப்பி சென்ற 2 பேரையும் தேடி வருகின்றனர்.

    தப்பி ஓடியவர்கள் வேட்டையாடுவதற்காக காரில் துப்பாக்கி மற்றும் தோட்டாக்களை கொண்டு சென்றார்களா? அல்லது வேறு ஏதேனும் சதிச்செயலில் ஈடுபட கொண்டு சென்றனரா? என்பது அவர்கள் சிக்கினால் தான் தெரியவரும். இதனால் அவர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

    • போலீஸ் வாகன சோதனையில் 2 துப்பாக்கிகள்-பால்ரஸ் குண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.
    • பறவைகளை வேட்டையாடுவதற்காக கொண்டு வரப்பட்டதா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை-கால்பிரவு 4 வழிச்சாலையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்துக்கி டமான மினி சரக்கு வாகனத்தை போலீசார் நிறுத்தி சோதனை செய்தனர்.

    அந்த வாக னத்தில் இருந்து 5 பேர் இறங்கினர். போலீசார் வாகனத்தை சோதனை செய்தபோது அதில் உரிமம் இல்லாத 2 ஒற்றைக் குழல் துப்பாக்கி கள், 50 கிராம் பால்ரஸ் குண்டுகள், 50 கிராம் ரவை தூள்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். அந்த வாகனத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர் .

    வாகனத்தில் வந்த திருச்சி மாவட்டத்தை சேர்ந்த சுப்பிரமணியன், மோகன்ராஜ், ரவிக்குமார், நடராஜன், அஜித் குமார், ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்து விசா ரணை நடத்தினர் .

    விவசாய நிலங்களை அழிக்கும் விலங்கு கள் மற்றும் பறவைகளை வேட்டையாடுவதற்காக இந்த துப்பாக்கிகள் கொண்டு வரப்பட்டதா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சாலையில் சிறிதாக ஒரு துப்பாக்கி இருப்பதை கண்டனர்.
    • தீவிரவாத செயல்களில் ஈடுபடுவார்கள் யாராவது இந்த பகுதியில் இந்த துப்பாக்கியை விட்டு சென்றனரா?

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டம் பொம்மிடியை அடுத்த பையர்நத்தம் பகுதியில் பொம்மிடி போலீஸ் சப்-இன்ஸ்ெபக்டர் சக்திவேல் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது அங்கு சிறிதாக ஒரு துப்பாக்கி இருப்பதை கண்டனர்.

    உடனே அருகே சென்று பார்த்தபோது, அது எஸ்.பி.எம்.எல் ரக துப்பாக்கி என்பது தெரியவந்தது. உடனே போலீசார் கைப்பற்றி விசாரணை

    தீவிரவாத செயல்களில் ஈடுபடுவார்கள் யாராவது இந்த பகுதியில் இந்த துப்பாக்கியை விட்டு சென்றனரா? அல்லது வனப்பகுதிகளில் வேட்டையாட வந்த மர்ம நபர்கள் யாராவது தெரியாமல் இந்த துப்பாக்கியை விட்டு சென்ற–னரா என தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • நாயின் உரிமையாளர் மாணிக்கம் இது குறித்து அந்தியூர் போலீசில் புகார் செய்தார்.
    • நாயை துப்பாக்கியால் சுட்டு கொன்ற சம்பவம் அந்தியூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    அந்தியூர்:

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த கழுதை பாலி என்ற பகுதியை சேர்ந்தவர் அண்ணாதுரை. இவர் தனது விவசாய தோட்டத்தில் கோழி வளர்த்து வருகிறார். இந்த நிலையில் இவர் வளர்த்து வரும் கோழிகளை அடிக்கடி ஒரு நாய் பிடித்து சென்றது. இது குறித்து அண்ணாதுரை அதே பகுதியை சேர்ந்த தனது நண்பர் மோகன்ராஜ் (28) என்பவரிடம் கூறியுள்ளார்.

    இந்நிலையில் நேற்று இரவு ஜி.எஸ்.காலனி பகுதியை சேர்ந்த மாணிக்கம் என்பவருக்கு சொந்தமான ஒரு நாய் அண்ணாதுரையின் விவசாய தோட்டம் அமைந்துள்ள பகுதிக்கு சென்றது. அப்போது அந்த நாய் தான் கோழிகளை பிடித்து சென்ற நாய் என்று கருதி அண்ணாதுரை இது குறித்து தனது நண்பர் மோகன்ராஜிக்கு தகவல் கொடுத்தார்.

    இதையடுத்து மோகன்ராஜ் தனது வீட்டில் இருந்து துப்பாக்கியை எடுத்து வந்து அந்த நாயை சுட்டார். இதில் பலத்த காயம் அடைந்த நாய் அங்கேயே இறந்துவிட்டது. இதுப்பற்றி தெரியவந்ததும் நாயின் உரிமையாளர் மாணிக்கம் இது குறித்து அந்தியூர் போலீசில் புகார் செய்தார். சம்பவ இடத்துக்கு இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ், சப்-இன்ஸ்பெக்டர் கார்த்தி மற்றும் போலீசார் விரைந்து சென்றனர். அப்போது அங்கு காயத்துடன் இறந்து கிடந்த நாயை மீட்டனர். மேலும் அண்ணாதுரை மற்றும் அவரது நண்பர் மோகன்ராஜ் ஆகியோர் தலைமறைவாகிவிட்டனர். அவர்களை போலீசார் தீவிரமாக தேடிவருகிறார்கள்.

    இறந்த நாயின் உடல் இன்று கால்நடை மருத்துவர்கள் மூலம் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு அதன் அடிப்படையில் மேல் நடவடிக்கை எடுக்க போலீசார் முடிவு செய்து உள்ளனர். நாயை துப்பாக்கியால் சுட்டு கொன்ற சம்பவம் அந்தியூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் ஊழியராக சத்தியபாண்டி வேலை செய்து வந்தார்.
    • போலீசார் 10 நாட்கள் காவலில் விசாரிக்க அனுமதி கேட்டனர்.

    கோவை

    மதுரை ஆரப்பாளையத்தை சேர்ந்தவர் சத்தியபாண்டி (31). இவருக்கு மனைவி, குழந்தைகள் உள்ளனர்.

    கோவை விளாங்கு–றிச்சியில் தங்கியிருந்து, அங்குள்ள ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் ஊழியராக சத்தியபாண்டி வேலை செய்து வந்தார்.

    கடந்த மாதம் 12-ம் தேதி இரவு பாப்பநாயக்கன் பாளையத்தில் உள்ள கருப்பக்கால் தோட்டம் என்ற பகுதியில் சத்திய–பாண்டியை மர்மநபர்கள் துப்பாக்கியால் சுட்டும், அரிவாளால் வெட்டியும் கொடூரமாக கொன்றனர்.

    இந்த சம்பவம் தொடர்பாக ரேஸ்கோர்ஸ் போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். முதல் கட்ட விசாரணையில் திரையரங்கு விவகாரம் தொடர்பாக இருந்த முன்விரோதம் காரணமாக சத்தியபாண்டி கொல்லப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து இந்த வழக்கு தொடர்பாக தீத்தி–பாளையத்தை சேர்ந்த காஜா உசேன்(24), செல்வபுரம் வடக்கு ஹவுசிங் யூனிட்டைச் சேர்ந்த சஞ்சய்குமார்(23), அல்ஜபீர்கான், கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை சேர்ந்த ஆல்வின்(37), ஆயுதங்களை மறைத்து வைக்க உதவிய தீத்திப்பாளையத்தைச் சேர்ந்த மணிகண்டன்(25) ஆகிய 5 பேரை கைது செய்தனர்.

    இதற்கிடையே இந்த வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளியான சஞ்சய் ராஜா என்பவர் எழும்பூர் நீதிமன்றத்தில் சரணடைந்தார். தொடர்ந்து நேற்று முன்தினம் சஞ்சய் ராஜா கோவை ஜெயிலில் அடைக்கப்பட்டார். அவரை காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்த போலீசார், ஜே.எம்.3 நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்ப்படுத்தினர். போலீசார் 10 நாட்கள் காவலில் விசாரிக்க அனுமதி கேட்டனர். நீதிமன்றம் 5 நாட்கள் விசாரிக்க அனுமதித்தது. இதையடுத்து அவரை தனியிடத்தில் வைத்து வழக்கு தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    இதுதொடர்பாக மாநகர போலீஸ் உயரதிகாரி ஒருவர் கூறும்போது, சத்தியபாண்டி கொல்லப்பட்ட போது ஒரு துப்பாக்கி பயன்படுத்தப்பட்டுள்ளது. இக்கும்பலிடம் மேலும் ஒரு துப்பாக்கி உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. எனவே, 2 துப்பா க்கிகளையும் கண்டறிந்து பறிமுதல் செய்வத ற்கான நடவடிக்கை தீவிரப்படு்த்த–ப்பட்டுள்ளது.

    2 துப்பாக்கிகளும் சீனா நாட்டில் தயாரிக்கப்பட்டு இறக்குமதி செய்யப்பட்டவை ஆகும். சில லட்சங்கள் அளித்து இடைத்தரகர்கள் மூலம் இவற்றை வாங்கியிருக்கலாம் எனத் தெரிகிறது.

    துப்பாக்கி எப்படி வாங்கப்பட்டது, அதற்கு பின்னணியில் இருந்தவர்கள் யார் என்பது குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது.

    அதேபோல், சத்தியபாண்டி கொலை வழக்கில் கூடுதல் தகவல்களை பெற காவலில் எடுக்கப்பட்ட சஞ்சய் ராஜாவிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • துப்பாக்கியை காட்டி மனைவிக்கு கொலை மிரட்டல் விடுத்த ராணுவவீரரை போலீசார் தேடி வருகின்றனர்.
    • இவரிடம் லைசென்சுடன் இரட்டை குழல் துப்பாக்கி உள்ளது.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் மம்சாபுரம் அருகே உள்ள கீழூர் கிராமத்தை சேர்ந்தவர் ஆபிரகாம் லிங்கன், முன்னாள் ராணுவ வீரர். இவரிடம் லைசென்சுடன் இரட்டை குழல் துப்பாக்கி உள்ளது.

    இவரது மனைவி தங்கம்(வயது49). கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மகள் திருமணத்திற்காக ஆபிரகாம் லிங்கன் கடன் வாங்கி இருந்தார். இதற்காக மாதந்தோறும் தனக்கு வரும் பென்சன் பணத்தை கொடுத்து வருகிறார்.

    சம்பவத்தன்று பென்சன் பணத்தில் ரூ.3ஆயிரத்தை மதுகுடிக்க செலவழித்ததாக கூறப்படுகிறது. இதனை தங்கம் கண்டித்துள்ளார். ஆனாலும் அவர் மீண்டும் பணம் கேட்டு மனைவியை தொல்லை செய்துள்ளார். ஆனால் அவர் தர மறுத்துவிட்டார்.

    இதனால் ஆத்திரமடைந்த ஆபிரகாம் லிங்கன் வீட்டில் இருந்த துப்பாக்கியை காண்பித்து கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து தங்கம் கொடுத்த புகாரின் பேரில் மம்சாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆபிரகாம் லிங்கனை தேடி வருகின்றனர்.

    • சுப்பிரமணியை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
    • குப்பை தொட்டி அருகே துப்பாக்கி கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    கோவை:

    கோவை சூலூர் அருகே உள்ள கண்ணம்பாளையம் அண்ணா நகரை சேர்ந்தவர் சுப்பிரமணியன்(வயது45).

    இவர் பள்ளபாளையம் பேரூராட்சியில் தூய்மை பணியாளராக வேலை பார்த்து வருகிறார்.

    கடந்த 1-ந் தேதி புத்தாண்டு தினத்தன்று, சுப்பிரமணியன் மற்றும் அவருடன் வேலை பார்க்கும் பெண் ஒருவர் அந்த பகுதிகளில் குப்பைகளை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    பள்ளபாளையம் சாவித்ரி மில் பகுதியில் உள்ள குப்பை தொட்டியில் இருந்த குப்பைகள் அனைத்தையும் எடுத்து சுத்தம் செய்யும் பணியில் சுப்பிரமணியன் ஈடுபட்டிருந்தார்.

    அப்போது குப்பை தொட்டியின் அருகே ஒரு கறுப்பு நிற பெட்டி இருந்தது. இதைபார்த்த சுப்பிரமணி அருகே சென்று அந்த பெட்டியை கையில் எடுத்தார்.

    பின்னர் அதனை திறந்து பார்த்தார். அப்போது அதில் துப்பாக்கி ஒன்று இருந்தது. இதையடுத்து அவர் யாருக்கும் தெரியப்படுத்தாமல் அந்த பெட்டியையும், துப்பாக்கியையும் எடுத்து கொண்டு தனது வீட்டிற்கு சென்று விட்டார்.

    இந்த நிலையில் துப்பாக்கி வைத்திருந்தால் மாட்டிகொள்வோம் என அவருக்கு பயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர் போலீஸ் அவசர எண்ணாண 100 தொடர்பு கொண்டார். அப்போது தான் கீழே கிடந்து ஒரு துப்பாக்கி எடுத்ததாகவும், அதனை தனது வீட்டில் வைத்துள்ளதாகவும் தெரிவித்தார்.

    இதையடுத்து சூலூர் போலீசார் சுப்பிரமணியின் வீட்டிற்கு சென்றனர். அங்கு இருந்த துப்பாக்கியை எடுத்து கொண்டனர். மேலும் சுப்பிரமணியை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    துப்பாக்கி எப்படி கிடைத்தது, எங்கு கிடந்தது என பல்வேறு கேள்விகளை அவரிடம் கேட்டு விசாரித்தனர். அவர் கீழே கிடந்து எடுத்ததாக பதில் கூறி வருகிறார். தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரிக்கின்றனர்.

    மேலும் அந்த துப்பாக்கியையும் போலீசார் ஆய்வு செய்தனர். அதில் மேட் இன் ஜெர்மனி என எழுதப்பட்டிருந்தது.

    இந்த துப்பாக்கி ஒரிஜினலா அல்லது போலியா என்பது தெரியவில்லை. மேலும் சூலூர் பகுதி வழியாக காரில் ஹவாலா பணம், கஞ்சா கடத்தல் உள்பட பல்வேறு குற்ற செயல்கள் நடந்து வருகிறது. இதனால் அந்த கும்பல் யாராவது துப்பாக்கியை இங்கு வீசி சென்றனரா? என்ற கோணத்திலும் விசாரணை நடக்கிறது. குப்பை தொட்டி அருகே துப்பாக்கி கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • கடற்கரை பகுதிகளில் கடலோர பாதுகாப்பு குழும போலீசார் தீவிர கண்காணிப்பு
    • படகு மூலமும் கடல் வழியாக போலீசார் தீவிர ரோந்து சுற்றி வருகிறார்கள்.

    கன்னியாகுமரி:

    குடியரசு தினத்தை யொட்டி கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள 133 அடி உயர திருவள்ளுவர் சிலைக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப் பட்டுள்ளது. கடற்கரைப் பகுதிகளில் கடலோர பாதுகாப்பு குழும போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்

    இந்தியாவின் 74-வது குடியரசு தினவிழா நாளை மறுநாள் (வியாழக்கிழமை) இந்தியா முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படு கிறது. இதை யொட்டி நாடு முழுவதும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத் தப்பட்டு உள்ளது. சர்வதேச சுற்றுலா தலமான கன்னியா குமரி யிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    கன்னியாகுமரி நகர பகுதி முழுவதும் போலீஸ் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டு உள்ளது. இதையொட்டி கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள 133 அடி உயர திருவள்ளுவர் சிலைக்கு துப்பாக்கிஏந்திய போலீஸ் பாதுகாப்புபோடப் பட்டு உள்ளது.கன்னியாகுமரி பகவதிஅம்மன் கோவிலிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    கோவிலுக்கு சாமி கும்பிட வரும் பக்தர்களிடம் போலீசார் மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் சோதனை செய்த பிறகே பக்தர்கள் கோவிலுக்குள் தரிசனம் செய்ய அனுமதிக் கப்படுகிறார்கள். மேலும் கன்னியாகுமரி ரெயில் நிலையம், பஸ் நிலையம், கலங்கரை விளக்கம், கடற்கரைப்பகுதி போன்ற முக்கியமான இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுஉள்ளது.

    கடலோர பாதுகாப்பு குழும போலீஸ் இன்ஸ்பெக்டர் நவீன் தலைமையில் குமரி மாவட்டத்தில் உள்ள 48கடற்கரை கிராமங்களி லும் போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள். படகு மூலமும் கடல் வழியாக போலீசார் தீவிர ரோந்து சுற்றி வருகிறார்கள். கடலோர பாதுகாப்பு குழும போலீசார் சொந்தமான சோதனை சாவடிகளில் இரவு பகலாக போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். கன்னியாகுமரியில் உள்ள லாட்ஜ்களில் சந்தேகப்படும்படியான நபர்கள் யாரும் தங்கி இருக்கி றார்களா? என்று போலீசார் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

    • கடவூர் அருகே நாட்டு துப்பாக்கி பறிமுதல் செய்யபட்டது
    • இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

    கரூர்:

    கடவூர் அடுத்த, பாலவிடுதி எஸ்.ஐ. தர்மலிங்கம் மற்றும் போலீசார் கடவூர், கீழ்சேவாப்பூர் கிராமத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது போலீசாருக்கு கிடைத்த தகவலின்படி, வலையப்பட்டியில் உள்ள கருணகிரி என்பவர் தோட்டத்து கொட்டகையில் சோதனையிட்டனர்.

    அப்போது அங்கு அரசு அனுமதி இல்லாமல் நாட்டு துப்பாக்கி பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் துப்பாக்கியை பறிமுதல் செய்து, காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


    • எதிரிகளை அச்சுறுத்த துப்பாக்கி வைத்திருந்த ரவுடி ப்ற்றி பரபரப்பு தகவல்கள் வெளிவந்துள்ளன.
    • ரவுடி அலெக்சிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை

    மதுரை கீழஅண்ணா தோப்பை சேர்ந்தவர் அலெக்ஸ் என்ற பெரிய அலெக்ஸ் (வயது 38). பிரபல ரவுடியான இவர் மீது கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்கு கள் நிலுவையில் உள்ளன. கடந்த சில ஆண்டுகளாக அவர் இட்லி கடை நடத்தி வருகிறார்.

    இந்த நிலையில் அலெக்ஸ் வீட்டில் கைத்துப்பாக்கி இருப்பதாக திலகர்திடல் போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. அதன் அடிப்படையில் அவரது வீட்டில் இன்ஸ்பெக்டர் சங்கர் தலைமையிலான போலீசார் நேற்று இரவு அதிரடி சோதனை நடத்தி னர்.

    அப்போது அவரது வீட்டில் ஏர் பிஸ்டல் ரகத்தை சேர்ந்த கைத்துப்பாக்கி இருந்தது. அதனை போலீ சார் கைப்பற்றி சோதனை செய்தனர். அப்போது அது ஆளை கொல்லும் அள வுக்கு சக்தியுடைய துப்பாக்கி இல்லை என்பதும், விசையை அழுத்தினால் அதிக சத்தத்து டன் வெடிக்கும் சாதாரண துப்பாக்கி என்பதும் தெரிய வந்தது.அலெக்ஸ் சில ஆண்டு களுக்கு முன்பு தி.மு.க. முன்னாள் மண்டல தலைவர் குருசாமியுடன் இருந்து உள்ளார். அப்போது தான் அவர் மீது பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

    குருசாமி சிறைக்கு சென்றதும் திருந்தி வாழ்வது என முடிவெடுத்து அலெக்ஸ் இட்லி கடை நடத்தி வந்துள்ளார். ஏற்கனவே ரவுடியாக இருந்ததால் அவருக்கு மறைமுக எதிரிகள் இருப்ப தாக கூறப்படுகிறது. ஆகவே அவர்களை அச்சுறுத்துவதற்காக அவர் துப்பாக்கி வைத்திருந்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக ரவுடி அலெக்சி டம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • துப்பாக்கியில் குண்டு இருந்ததா என்பது குறித்து தகவல் இல்லை.
    • கைத்துப்பாக்கியை எடுத்து செல்ல முறையாக விதிமுறைகளை பின்பற்றவில்லை என்று கூறப்படுகிறது.

    அமெரிக்கா புளோரிடா மாகாணத்தில் உள்ள விமான நிலையத்தில் பயணி ஒருவரிடம் இருந்து துப்பாக்கி கண்டெடுக்கப்பட்டது. அமெரிக்க விமானத்தில் பயணம் செய்ய இருந்த பயணியிடம் அதிகாரிகள் சோதனை செய்தனர்.

    அப்போது கோழிக்கறியில் துப்பாக்கி ஒன்று பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த துப்பாக்கியில் குண்டு இருந்ததா என்பது குறித்து தகவல் இல்லை. இருப்பினும், சம்பந்தப்பட்ட கைத்துப்பாக்கியை எடுத்து செல்ல முறையாக விதிமுறைகளை பின்பற்றவில்லை என்று கூறப்படுகிறது.

    • விண்ணப்பிக்க வில்லையெனில் துப்பாக்கியை அருகில் உள்ள போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்து விட வேண்டும்.
    • கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் தகவல்.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    குமரி மாவட்டத்தில் அனு மதி பெற்று துப்பாக்கி வைத் திருப்போர், அதற்கான உரி மத்தினை வருகிற டிசம்பர் மாதம் 31-ந்தேதிக்குள் விண் ணப்பிக்க வேண்டும்.

    அதாவது உரிமம் பெற்ற ஒற்றைக்குழல் மற்றும் இரட் டைக்குழல் துப்பாக்கிகள் (எஸ்.பி.பி.எல்., டி.பி.பி.எல்., ரிவால்வர் மற்றும் பிஸ்டல்) ஆகியவற்றின் உரிமங்களை புதுப்பிக்க வேண்டியவர்கள் 1.1.2023 முதல் 31.12.2027 வரை யிலான 5 ஆண்டுகளுக்குப் புதுப்பிக்கும் பொருட்டு, வரும் டிசம்பர் 31-ந் தேதிக்குள் குமரி மாவட்ட கலெக்டர் மற்றும் மாவட்ட நடுவருக்கு கீழ் குறிப்பிட்டுள்ள ஆவணங் கள் மற்றும் உரிய படிவத்து டன் விண்ணப்பிக்குமாறு உரிமத்தாரர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

    அதாவது துப்பாக்கி உரிமம் புதுப்பித்தல் படிவம் (A3) பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம், அசல் உரிம புத்தகம், இருப்பிட முகவரிக்கான ஆதார ஆவண நகல் (2), இதையடுத்து 5 ஆண்டிற்குரிய உரிமம் புதுப்பித்தல் கட்டணம் ரூ.2,500 செலுத்திய தற்கான இ-செல்லான் அசல் மற்றும் நகல் மற்றும்துப்பாக்கி உபயோகப்படுத்தி பணி புரியும் பட்சத்தில் தொடர்பு டைய அலுவலகத்தில் இருந்து பணி நிமித்தமாக பெறப்பட்ட கடிதம் ஆகிய வற்றுடன் விண்ணப்பிக்க வேண்டும்.

    புதுப்பிக்கப்பட்ட உரிமங்களை சரியான முகவரிக்கும் அனுப்பும் பொருட்டு உரிம தாரர்கள் தங்களது விண்ணப் பங் களில் சரியான அஞ்சல் முகவ ரியை கொடுக்க வேண்டும். விண்ணப்பத் தோடு பணம் செலுத்திய செலானை இணைத்து அனுப்பி வைக்க வேண்டும். விண்ணப்பத்தில் உரிம தாரர் மட்டுமே கையொப்ப மிட்டு அனுப்ப வேண்டும்.துப்பாக்கி உரிமம் செயல் திறன் முடிவடைவதற்கு 60 நாட்களுக்கு முன்பு புதுப்பிப்பதற்கு விண்ணப் பம் அளிக்கப்பட வேண்டும்.

    அவ்வாறு விண்ணப்பிக்க வில்லையெனில், வரும் 2023 ஆம் ஆண்டு ஜனவரி 1-ந் தேதி முதல் தங்களிடம் உள்ள துப்பாக்கியை அருகில் உள்ள போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்து விட வேண்டும். தவறினால் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப் படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×