search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 201649"

    • பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் சிறப்பு முகாம்கள் ஜீலை மாதம் 15- ந் தேதி வரை மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம பகுதிகளிலும் நடைபெறவுள்ளது.
    • மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதி திட்டத்துடன் இணைந்து சுத்தமான மற்றும் பசுமையான கிராமங்களை ஊக்குவிக்கபடவுள்ளது.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நம்ம ஊரு சூப்பரு என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியின் மூலமாக கிராமங்களில் தண்ணீர், சுகாதாரம் மற்றும் கழிவு மேலாண்மை குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் சிறப்பு முகாம்கள் ஜீலை மாதம் 15- ந் தேதி வரை மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம பகுதிகளிலும் நடைபெறவுள்ளது. மேலும் இதுகுறித்து மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியுள்ளதாவது, கடந்த மே1-ந் தேதி சிறுபாக்கம் கிராமத்தில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் தூய்மை உறுதி மொழி எடுத்து கொண்டவாறு வருகின்ற 13-ந் தேதி வரை பொது நிறுவனங்கள் மற்றும் பொது இடங்களில் தூய்மைக்காவலர்கள், துப்புரவு பணியாளர்கள் மற்றும் நேரு யுவ கேந்திரா அமைப்பு ஆகியோரை ஈடுபடுத்தி பெருமளவில் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளபடவுள்ளது. வருகின்ற 8-ந்தேதி முதல் 13-ந்தேதி வரை துப்புரவு பணியாளர்கள், தூய்மை காவலர்கள், பள்ளிகள், பொது நிறுவனங்களில் சுகாதார மற்றும் நல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு, மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதி திட்டத்துடன் இணைந்து சுத்தமான மற்றும் பசுமையான கிராமங்களை ஊக்குவிக்கபடவுள்ளது.

    மேலும் 15-ந்தேதி முதல் 27-ந்தேதி வரை தண்ணீர் சுகாதாரம் மற்றும் கழிவு மேலாண்மை குறித்த விழிப்புணர்வு ஊரக பகுதிகளில் சுய உதவி குழு உறுப்பினர்களைக் கொண்டு விழிப்புணர்வு சிறப்பு முகாம் நடத்தப்பட்டவுள்ளது. 29 - ந் தேதிமுதல் ஜீன் மாதம் 3- ந் தேதி வரை ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை தடை செய்து, அவற்றிற்கான மாற்றுப் பொருட்களை பயன்படுத்துதல் குறித்த விழிப்புணர்வு சிறப்பு முகாம் நடத்தப்படவுள்ளது. இதேபோல் ஜீன் மாதம் 5- ந் தேதி முதல் 15- ந் தேதி வரை தண்ணீர், சுகாதாரம் மற்றும் கழிவு மேலாண்மை குறித்து பள்ளிகள் மற்றும் மற்றும் கல்லூரிகளில் விழிப்புணர்வு பணிகள் மேற்கொள்ளப்படும் என செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

    • சோழவந்தானில் திரவுபதி சபதம் முடித்தல் நிகழ்ச்சி நடந்தது.
    • நாளை இரவு கோவில் வளாகத்தில் தீர்த்தவாரி விழா, அம்மன் ஊஞ்சல் நிகழ்ச்சி, கலை நிகழ்ச்சி நடைபெறும்.

    சோழவந்தான்

    சோழவந்தான் திரவுபதி அம்மன் கோவில் 9-ம் நாள் திருவிழாவையொட்டி பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்தனர். இரவு திரவுபதி வேடம் புரிந்து அம்மன் புறப்பாடு நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை 4ரத வீதிகளிலும் வலம் வந்து வழிநடையே பொதுமக்கள் திரளாக கண்டு களித்தனர். துரியோதனனை குடல் உருவி மாலை போடும் பாவனை நிகழ்ச்சி, கூந்தல் முடித்து சபதம் முடித்தல் நிகழ்ச்சி ஆகியவை நடந்தது. பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இன்று (புதன்கிழமை) மாலை பக்தர்கள் பூக்குழி இறங்குதல் நடக்கிறது. நாளை (வியாழக்கிழமை) இரவு கோவில் வளாகத்தில் தீர்த்தவாரி விழா, அம்மன் ஊஞ்சல் நிகழ்ச்சி மற்றும் கலை நிகழ்ச்சி நடைபெறும். வெள்ளிக்கிழமை மாலை பட்டாபிஷேகம் நடைபெறும். விழா ஏற்பாடுகளை பரம்பரை அறங்காவலர்கள் அர்ஜுனன், திருப்பதி, ஜவகர்லால், குப்புசாமி, செயல் அலுவலர் இளமதி உள்பட பலர் செய்துள்ளனர்.

    • மக்களின் தரத்தை மேம்படுத் துவது இத்திட்டத்தின் நோக்கம் ஆகும்.
    • முழு சுகாதாரமான, பசுமையான மாவட்டமாக மாற்றிட ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

    நாகர்கோவில் :

    குமரி மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் சார்பில் நம்ம ஊரு சூப்பரு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்துவது குறித்து துறைசார்ந்த அலுவலர்க ளுடனான கலந்துரையாடல் கூட்டம் நாகர்கோவிலில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்துக்கு கலெக்டர் ஸ்ரீதர் தலைமை தாங்கி பேசினார்.

    அப்போது கூறியதாவது:-

    நம்ம ஊரு சூப்பரு விழிப்புணர்வு பிரசாரமானது குமரி மாவட்டத்தில் மே மாதம் முதல் ஜூன் 15-ந் தேதி வரை பல்வேறு தலைப்புகளில் நடைபெற வுள்ளது. பாதுகாப்பான சுகாதாரம் மற்றும் தூய்மையான சூழலை உருவாக்குவதோடு, சுகாதாரம், உற்பத்திதிறன், பாதுகாப்பு மற்றும் கண்ணியம் ஆகியவற்றில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி மக்களின் தரத்தை மேம்படுத் துவது இத்திட்டத்தின் நோக்கம் ஆகும்.

    ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு பதிலாக மாற்று பொருட்களை பயன்படுத்துவது குறித்தும் இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் எடுத்துரைக்க வேண்டும். மே மாதம் முதல் ஜூன் மாதம் வரை நடைபெறவுள்ள நம்ம ஊரு சூப்பரு விழிப்புணர்வு நிகழ்ச்சியில் அனைத்து அலுவலர்களும் ஒருங்கிணைந்து செயல்பட்டு, குமரி மாவட்டத்தை முழு சுகாதாரமான, பசுமையான மாவட்டமாக மாற்றிட ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கூட்டத்தில் மகளிர் திட்ட இயக்குனர் இலக்குவன், உதவி இயக்குனர் (ஊராட்சி) கள்) சாந்தி, முதன்மைக் கல்வி அலுவலர் புகழேந்தி, மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் செந்தில்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • கிராமம் தோறும் நடத்திட மாவட்ட நிர்வாகம் முடிவு
    • பசுமை நிறைந்த கிராமங்கள் உருவாக்க நோக்கம்

    'நம்ம ஊரு சூப்பரு' என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி, கிரா மம்தோறும் துவங்கியுள்ளது என, கரூர் கலெக்டர் பிரபு சங்கர் தெரிவித்துள்ளார்.இது குறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை: கரூர் மாவட்டத்தில் ஊரக பகுதிகளில் பாதுகாப்பான குடிநீர், சுகாதாரம் மற்றும் தூய்மையான சுற்றுப்புறச் சூழல் மேம்படுத்தும் விதமாக, 'நம்ம ஊரு சூப்பரு' என்ற விழிப்புணர்வு இயக்கம் கடந்த, 1ல் துவங்கியது. வரும் 15ஆம் தேதி வரை இந்த நிகழ்ச்சி நடக்க உள்ளது. இதன் மூலம் பொது இடங்கள் பொதுத்துறை நிறுவனங்களில் மாஸ் கிளீனிங் செய்தல், பள்ளி கல்லூரிகளில் பாதுகாக்கப்பட்ட குடிநீர், சுகாதாரம் நீர் மேலாண்மை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துதல், கிராமப்புறங்களில் தனிநபர் இல்லங்களில் சுகாதாரம் பேணுவது தொடர்பாக, சுய உதவிக்குழுக்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்துதல் நிகழ்ச்சி நடக்கும். பிளாஸ்டிக் பொருட்களை தவிர்த்து, மீண்டும் மஞ்சப்பை பயன்ப டுத்துவதை ஊக்குவிக்கும் நட வடிக்கை, கிராமப்புறங்களில் வீதிகளை சுத்தமாக வைத்துக் கொள்ளுதல், என் குப்பை என் பொறுப்பு, என் கிராமம் தூய்மை கிராமம் என, உறு திமொழி எடுத்துக் கொண்டு செயல்படுவது. சுகாதாரமான பசுமை நிறைந்த கிராமங்களை உருவாக்குதல் போன்ற நடவு டிக்கைகள் மேற்கொள்ள திட்ட மிடப்பட்டுள்ளன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • க.பரமத்தியில் மன்கிபாத் நிகழ்ச்சி ஒளிபரப்பு செய்யபட்டது
    • இதை, நாடு முழுவதும் பா.ஜ.,வினர் ஒளிபரப்பு செய்தனர்.

    கரூர்:

    பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்ற மன்கிபாத் நிகழ்ச்சி, க.பரமத்தியில் ஒளிபரப்பு செய்யப்பட்டது. மாதந்தோறும் வார கடைசி ஞாயிற்றுக்கிழமையில் மன்கிபாத் (மனதின் குரல்) என்ற தலைப்பில் பிரதமர் நரேந்திர மோடி, ரேடியோ மற்றும் 'டிவி'க் களில் பேசி வருகிறார். நேற்று 100வது, மன்கிபாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசினார். இதை, நாடு முழுவதும் பா.ஜ.,வினர் ஒளிபரப்பு செய்தனர். சுரூர் அருகே க.பரமத்தியில் பிரதமரின், மன்கிபாத் உரை டிவி மூலம் ஒளிபரப்பு செய்யப்பட்டது. கரூர் மாவட்ட பா.ஜ.க தலைவர் செந்தில்நாதன், சு.பரமத்தி வடக்கு ஒன்றிய தலைவர் பழனி சாமி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.

    • பிரதமர் மோடியின் மனதின் குரல் 100-வது நிகழ்ச்சி நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது.
    • 263 இடங்களில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் பிரதமர் நரேந்திர மோடியின் 100-வது மன் கி பாத் (மனதின் குரல்) நிகழ்ச்சி நேரடி ஒளிபரப்பை நேற்று பெரம்பலூர் மாவட்டத்தில் பொதுமக்கள் பார்வையிடும் வகையில் வாலிகண்டபுரத்தில் உள்ள பா.ஜ.க. மாவட்ட அலுவலகம் உள்படமொத்தம் 263 இடங்களில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பிரதமர் மோடியின் மனதின் குரல் 100-வது நிகழ்ச்சியின் நேரடி ஒளிப்பரப்பை டி.வி. உள்ளிட்டவை மூலம் பொதுமக்கள், பா.ஜ.க.வினர் ஆர்வத்துடன் பார்வையிட்டனர்.

    • கர்ப்பிணி பெண்களுக்கு சீர்வரிசை பொருட்கள் வழங்கபட்டது.
    • 5 வகையான உணவுகள், இனிப்பு, பழங்களும் பரிமாறப்பட்டது.

    ஊட்டி,

    கேத்தி பேருராட்சி அலுவலகத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம் சார்பில், சமுதாய வளைகாப்பு விழா சிறப்பாக நடைபெற்றது.

    ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் வரவேற்றார். கேத்தி செயல் அலுவலர் நட்ராஜ், பேருராட்சி தலைவர் ஹேமாமாலினி ஆகியோர் தலைமை தாங்கினர். விழாவில், கர்ப்பிணி பெண்களுக்கு சீர்வரிசை பொருட்கள்(மஞ்சள், குங்குமம், வளையல், மங்கல பொருட்கள் தட்டு, ரவிக்கை) வழங்கபட்டது.

    கர்ப்பிணி பெண்களுக்கு தாய்வீட்டு சீதனமாக சமுதாய வளைகாப்பு சிறப்பாக நடத்தப்பட்டு 5 வகையான உணவுகள், இனிப்பு, பழங்களும் பரிமாறப்பட்டது. இதில் பேருராட்சி உறுப்பினர்கள் அலுவலர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • கரூர் மைய நூலகத்தில் நடைபெற்றது
    • மாணவர்களுக்கு நூலக உறுப்பினர் அட்டை வழங்கப்பட்டது

    கரூர்,

    உலக புத்தக தினத்தை முன்னிட்டு கரூர் மாவட்ட மைய நூலகத்தில் மாணவ மாணவியருக்கான நூலக விழிப்புணர்வு நிகழ்ச்சி மாவட்ட மைய நூலகர் சிவக்குமார் தலைமையில் நடைபெற்றது. அதில் அரசு பள்ளி மாணவ மாணவியர் 300 பேருக்கு நன்கொடை மூலம் நூலக அடையாள அட்டைகளை, வாசகர் வட்டத் தலைவர் தீபம் சங்கர் வழங்கினார். மேலும் உலக புத்தக தினத்தை முன்னிட்டு கரூர் மாவட்ட மைய கிளை ஊர்புற நூலகங்களில் 44 புரவலர்கள், இரண்டு பெரும் புரவலர்கள், இரண்டு கொடையாளர்கள் சேர்க்கப்பட்டனர். நிகழ்ச்சியில் மாவட்ட மைய நல் நூலகர் சுகன்யா, மாநகராட்சி கோட்டைமேடு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை விஜயா, நூலகர் கார்த்தி நிவாஸ் உட்பட பலர் கலந்து கொண்டனர். இதே போல் கரூர் மாநகராட்சி காந்திகிராமம் நடுநிலைப் பள்ளியில் மாணவ, மாணவியர் புத்தக வாசிப்பை மேற்கொண்டனர். நிகழ்ச்சியில் ஆசிரியை திலகவதி உட்பட பலர் பங்கேற்றனர்.

    • விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சப்தஸ்தான பெருவிழா 6-ந் தேதி நடைபெறுகிறது.
    • அடுத்த மாதம் (மே) 7-ந் தேதி பொம்மை பூ போடும் நிகழ்ச்சி நடக்கிறது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்டம் திருவையாறு தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான ஐயாறப்பர் கோவிலில் இந்த ஆண்டுக்கான சித்திரை திருவிழா நாளை (செவ்வாய்கி ழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இந்த விழா அடுத்த மாதம் 7-ந் தேதி வரை நடைபெறுகிறது.

    அதனை தொடர்ந்து 29-ந் தேதி மாலை தன்னைத்தான பூஜித்தல் நிகழ்ச்சி நடக்கிறது.

    அன்று 6 ஊர்களில் இருந்து சாமிகள் கோவி லுக்கு வந்து சன்னதிக்கு முன்பு சைவர்களுக்கு மகேஸ்வர பூஜை நடைபெறும். அடுத்த மாதம் 3-ந் தேதி தேரோட்டம் நடக்கிறது.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சப்தஸ்தான பெருவிழா 6-ந் தேதி நடைபெறுகிறது. இந்த விழாவை முன்னிட்டு காலை 5 மணிக்கு ஐயாறப்பர் அறம் வளர்த்த நாயகியுடன் கண்ணாடி பல்லக்கிலும், நந்திகேஸ்வர் சுயசுவாம்பி கையுடன் வெட்டிவேர் பல்லக்கிலும் புறப்பட்டு திருப்பழனம், திருசோற்று த்துறை, திருவேதிக்குடி, திருக்கண்டி யூர், திருப்பூந்து ருத்தி ஆகிய ஊர்களுக்கு சென்று இரவு காவிரி ஆற்றில் 6 ஊர் பல்லக்குகளும் தில்லைஸ்தா னத்தில் சங்கமிக்கிறது.

    7-ந் தேதி பொம்மை பூ போடும் நிகழ்ச்சி நடக்கிறது. விழழ ஏற்பாடுகளை தருமபுரம் ஆதீனம் மாசிலா மணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகளின் வழிகாட்டுதலின்படி தேவஸ்தான டிரஸ்டி கார்ப்பார் சொக்கநாத தம்பிரான் சுவாமிகள் மற்றும் கோவில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

    • மரக்கன்று நடும் நிகழ்ச்சி நடந்தது.
    • நகராட்சி சார்பில் நீர் வரத்து கால்வாய் கரையில் மரக்கன்று நடும் நிகழ்ச்சி நடந்தது.

    திருமங்கலம்

    1970 முதல் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 22-ந்தேதி அன்று சுற்றுச்சூழலின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி உலக பூமி தினம் கடைபிடிக்கப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக திருமங்கலம் அரசு ஓமியோபதி கல்லூரி பகுதியில் நகராட்சி சார்பில் நீர் வரத்து கால்வாய் கரையில் மரக்கன்று நடும் நிகழ்ச்சி நடந்தது. நகராட்சி சேர்மன் ரம்யா முத்துக்குமார், துணைச்சேர்மன் ஆதவன் அதியமான் ஆகியோர் பங்கேற்று மரக்கன்று நடும் பணியை தொடங்கி வைத்தனர். இதில் மகளிர் சுய உதவி குழுவினர், தூய்மை இந்தியா திட்ட சுகாதார ஆய்வாளர் ஜெயசீலன், சரவண பிரபு, கவுன்சிலர்கள் சின்னசாமி, திருக்குமார், வீரக்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • தள்ளுவண்டிகள் மற்றும் பிளாஸ்டிக் குப்பை தொட்டிகள் ரூ.10 லட்சத்தில் வாங்கப்பட்டது.
    • மாநகராட்சி கமிஷனர் பிரதாப் முன்னிலை வகித்தார்.

    கோவை,

    கோவை மத்திய மண்டலத்துக்குட்பட்ட பகுதியில் 20 வார்டுகள் உள்ளன. இந்த வார்டுகளில் உள்ள வீடுகளில் இருந்து குப்பைகளை எடுத்து செல்ல தள்ளுவண்டிகள் மற்றும் பிளாஸ்டிக் குப்பை தொட்டிகள் ரூ.10 லட்சத்தில் வாங்கப்பட்டது.

    புதிதாக வாங்கப்பட்ட 45 தள்ளுவண்டிகள் மற்றும் 180 பிளாஸ்டிக் குப்பை தொட்டிகள் தூய்மை பணியாளர்களுக்கு வழங்கும் நிகழ்ச்சி இன்று நடந்தது.

    மாநகராட்சி கமிஷனர் பிரதாப் முன்னிலை வகித்தார். இதில் மேயர் கல்பனா கலந்துகொண்டு தூய்மை பணியாளர்களுக்கு தள்ளுவண்டிகள் மற்றும் பிளாஸ்டிக் குப்பை தொட்டிகளை வழங்கினார். இதில் மத்திய மண்டல தலைவர் மீனா லோகு, சுகாதாரக் குழு தலைவர் மாரிச்செல்வம் மற்றும் கவுன்சிலர்கள், மாநகராட்சி அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    • பள்ளியில் மாணவிகளுக்கு போக்சோ சட்டம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
    • இதில் திருச்செங்கோடு புறநகர காவல் ஆய்வாளர் பாரதி மோகன் கலந்துகொண்டு பேசினார்.

    திருச்செங்கோடு:

    நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு தனியார் பள்ளியில் மாணவிகளுக்கு போக்சோ சட்டம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திருச்செங்கோடு புறநகர காவல் ஆய்வாளர் பாரதி மோகன் கலந்துகொண்டு பேசினார்.

    அவர் பேசுகையில், மாணவிகள் பள்ளி செல்லும் போது வீட்டின் அருகிலோ, பேருந்து நிறுத்தத்திலோ, பேருந்திலோ யாராவது பாலியல் சீண்டல் செய்தால் அவர் மீது புகார் செய்து தண்டனை பெற்றுத் தர முடியும். மேலும் காவல்துறைக்கு உள்ள பிரத்யேக தொலைபேசி எண்ணில் அழைத்து பேசி னாலும் 1091 என்ற எண்ணில் அழைத்து பேசி னாலும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    பெண் குழந்தைகளின் பாதுகாப்பு கருதி அனைத்து முன்னெச்சரிக்கை நடவ டிக்கைகளையும் காவல்துறை எடுத்து வரு கிறது. எனவே மாணவிகள், பெண் குழந்தைகள் பயப்ப டாமல் சமூக விரோதிகள் குறித்தும் பாலியல் சீண்டல் செய்யும் நபர்கள் குறித்தும் புகார் செய்ய வேண்டும் என்றார்.

    நிகழ்ச்சியில் சப்-இன்ஸ்பெக்டர்கள் மலர்விழி, ரஞ்சித் குமார், உளவுத்துறை காவலர் சிவராமன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    ×