என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாஸ்போர்ட்"

    • திருச்சி விமான நிலையத்தில் பாஸ்போர்ட்டில் மாற்றம் செய்து சிங்கப்பூர் செல்ல இருந்தவர் கைது செய்யப்பட்டு உள்ளார்
    • ஏர்போர்ட் காவல் துறை வசம் ஒப்படைக்கப்பட்டார்

    கே.கே. நகர்,

    திருச்சி விமான நிலையத்திலிருந்து சிங்கப்பூருக்கு இன்று அதிகாலை ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் புறப்பட தயாராக இருந்தது. இந்த விமானத்தில் செல்லும் பயணிகளை இமிகிரேஷன் பிரிவு அதிகாரிகள் சோதனை செய்து கொண்டு இருந்தனர். அப்போது தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு தெலுங்கன் குடிகாடு பகுதியைச் சேர்ந்தவர் ஹரிஹரன் (வயது33) என்பவர் தான் ஏற்கனவே சிங்கப்பூரிலிருந்து வந்த தேதியை மாற்றி போலியான சீல் வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடித்தனர். இதனைத் தொடர்ந்து அவர் உடனடியாக ஏர்போர்ட் காவல் துறை வசம் ஒப்படைக்கப்பட்டார். அவர்கள் ஹரிஹரன் மீது வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

    • இலங்கை செல்வதற்காக வந்த ஒரு பெண்ணின் ஆவணங்களை அதிகாரிகள் சோதனை செய்தனர்.
    • போலீசார் அவரை கைது செய்து மோசடி தொடர்பாகவும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை:

    மதுரையில் இருந்து நேற்று இலங்கைக்கு விமானம் புறப்பட தயாராக இருந்தது. பயணிகளின் பாஸ்போர்ட், விசா உள்ளிட்ட ஆவணங்களை விமான நிலைய அதிகாரிகள் தீவிர சோதனை செய்து விமானத்தில் ஏற அனுப்பி கொண்டிருந்தனர். அப்போது இலங்கை செல்வதற்காக வந்த ஒரு பெண்ணின் ஆவணங்களை அதிகாரிகள் சோதனை செய்தனர்.

    அவர் பாஸ்போர்ட் உள்ளிட்ட ஆவணங்களை அதிகாரிகளிடம் கொடுத்தார். அதில் மதுரையில் தங்கியிருப்பதற்கான முகவரிகள் இருந்தன. ஆனால் அந்த பெண் இலங்கை தமிழ் பேசியதால் அவர் மீது சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து அதிகாரிகள் அந்த பெண்ணிடம் தீவிர விசாரணை நடத்தினர்.

    அப்போது அவர் இலங்கையை சேர்ந்த உமாவதி என தெரியவந்தது. இவர் கடந்த 2015-ம் ஆண்டு மதுரை புதூரை சேர்ந்த பிரதாப்குமார் என்பவரை திருமணம் செய்துள்ளார். ஆனால் அவர் முறைப்படி இந்திய குடியுரிமை பெறாமல் திருமணமான பதிவை வைத்து ஆதார், பான்கார்டு, ஓட்டுநர் உரிமம் உள்ளிட்டவை பெற்று அதன் மூலம் இந்திய பாஸ்போர்ட்டையும் விண்ணப்பித்து பெற்றது தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் உமாவதியை அவனியாபுரம் போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் அவரை கைது செய்து மோசடி தொடர்பாகவும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வீடியோவில், விசா முத்திரைகளுக்கு பயன்படுத்தும் பாஸ்போர்ட்டின் வெற்று பக்கங்களை ஒருவர் திருப்புவதையும், அதில் ஏராளமான தொலைபேசி எண்கள் எழுதப்பட்டிருப்பதையும் காட்டுகிறது.
    • வீடியோ 60 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களால் பார்க்கப்பட்ட நிலையில் பயனர்கள் பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

    ஒரு வாலிபர் தனது பாஸ்போர்ட்டை தொலைபேசி எண்களின் கோப்புகளாக மாற்றிய வீடியோ 'எக்ஸ்' தளத்தில் வைரலாகி வருகிறது.

    கேரளாவில் புதுப்பிப்பதற்காக சமர்ப்பிக்கப்பட்டதாக கூறப்படும் இந்த வீடியோவில் பாஸ்போர்ட்டில் காலியாக உள்ள கடைசி பக்கத்தில் ஏராளமான தொலைபேசி எண்கள் எழுதப்பட்டுள்ளது. மேலும் அந்த வீடியோவில், விசா முத்திரைகளுக்கு பயன்படுத்தும் பாஸ்போர்ட்டின் வெற்று பக்கங்களை ஒருவர் திருப்புவதையும், அதில் ஏராளமான தொலைபேசி எண்கள் எழுதப்பட்டிருப்பதையும் காட்டுகிறது.

    இந்த வீடியோ 60 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களால் பார்க்கப்பட்ட நிலையில் பயனர்கள் பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

    • இந்தியர்களுக்கு 62 நாடுகள், விசா இல்லா சலுகைகளை வழங்கி உள்ளன.
    • தென் ஆப்பிரிக்கா (55-வது) (மாலத்தீவு 58), சவூதி அரேபியா (67), தாய்லாந்து (66), இந்தோனேசியா (60)

    உலகின் சக்தி வாய்ந்த பாஸ்போர்ட் பட்டியலை லண்டனை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ஹென்லி பாஸ்போர்ட் இன்டெக்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதில் ஐரோப்பிய நாடான பிரான்ஸ் முதலிடம் வகிக்கிறது.

    ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், சிங்கப்பூர் ஆகிய நாடுகள் முறையே 2 முதல் 5 இடங்களில் உள்ளன. அடுத்தபடியாக ஸ்பெயின், பின்லாந்து, நெதர்லாந்து, தென்கொரியா, ஸ்வீடன் ஆகிய நாடுகள் உள்ளன.

    இந்த பட்டியலில் இந்தியா 85-வது இடத்தில் உள்ளது. கடந்த ஆண்டு இந்தியா 84-வது இடத்தில் இருந்தது. தற்போது ஒரு இடம் பின் தங்கியுள்ளது.

    இந்தியர்களுக்கு 62 நாடுகள், விசா இல்லா சலுகைகளை வழங்கி உள்ளன. இதில் இந்தோனேசியா, மலேசியா, தாய்லாந்து ஆகியவை அடங்கும் தென் ஆப்பிரிக்கா (55-வது) (மாலத்தீவு 58), சவூதி அரேபியா (67), தாய்லாந்து (66), இந்தோனேசியா (60), உஸ்பெகிஸ்தான் (84) ஆகியவை பட்டியலில் உள்ளது.

    இந்தியாவின் அண்டை நாடுகளான பாகிஸ்தான் 106-வது இடத்திலும், இலங்கை 101-வது இடத்திலும், வங்கதேசம் 102-வது இடத்திலும், நேபாளம் 103-வது இடத்திலும் உள்ளன. ஆப்கானிஸ்தான் 109-வது இடத்தில் உள்ளது.

    • நேர்காணலில் கலந்து கொள்வதற்கான அனுமதியை வழங்க மத்திய மாநில அரசுகளுக்கு உத்தரவிடக் கோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.
    • நேர்காணலுக்காக முன் கூட்டியே இலங்கை தூதரகத்திடம் அனுமதி பெறுமாறு திருச்சி மாவட்ட கலெக்டருக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டிருந்தது.

    சென்னை:

    முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற முருகன், நளினி உள்பட 7 பேரையும் சுப்ரீம் கோர்ட்டு முன்கூட்டியே விடுவித்தது.

    முருகன், ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார் ஆகியோர் இலங்கை குடிமகன் என்பதால் திருச்சியில் உள்ள சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டனர். இவர்கள், இலங்கை மற்றும் இங்கிலாந்து செல்ல சென்னையில் உள்ள இலங்கை தூதரகத்திற்கு சென்று நேர்காணலில் கலந்து கொள்வதற்கான அனுமதியை வழங்க மத்திய மாநில அரசுகளுக்கு உத்தரவிடக் கோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

    இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்த போது, முருகன் உள்ளிட்டோருக்கு பாஸ்போர்ட் வாங்குவதற்கு நேர்காணலுக்காக முன் கூட்டியே இலங்கை தூதரகத்திடம் அனுமதி பெறுமாறு திருச்சி மாவட்ட கலெக்டருக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டிருந்தது.

    இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார், குமரேஷ் பாபு அமர்வில் மீண்டும் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது காவல் துறை சார்பில் ஆஜரான கூடுதல் குற்றவியல் வக்கீல் ஆர்.முனியப்பராஜ், முருகனின் நேர்காணலுக்காக நாளை அனுமதி பெறப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

    முருகனை தவிர முகாமில் இருக்கும் ராபர்ட் பயாஸ் மற்றும் ஜெயக்குமார் ஆகியோரும் பாஸ்போர்ட் பெறுவதற்காக அழைத்துச் செல்ல கோரிக்கை வைத்ததாகவும் நாளை அவர்களையும் அழைத்துச் செல்ல உள்ளதாகவும் கூறினார். இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளும் தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

    நாளை அதிகாலை 5 மணிக்கு திருச்சி முகாமில் இருந்து புறப்பட்டு 11.30 மணியளவில் சென்னையில் உள்ள இலங்கை துணை தூதரகத்திற்கு அழைத்து வரப்படுவார்கள் எனவும் கூறினார். இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர். 

    • ரசிகர்களுக்கு விருந்து அளிக்கும் விதமாக பி.வி.ஆர் பாஸ்போர்ட் என்னும் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
    • பி.வி.ஆர் பாஸ்போர்ட்டின் மூலம் மக்கள் மாதத்திற்கு 4 படங்கள் பார்க்கலாம்

    சினிமாவை அதிகம் விரும்பும் ரசிகர்களுக்கு விருந்து அளிக்கும் விதமாக பி.வி.ஆர் பாஸ்போர்ட் என்னும் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. பி.வி.ஆர் பாஸ்போர்ட்டின் மூலம் மக்கள் மாதத்திற்கு 4 படங்கள் பார்க்கலாம். திங்கள் முதல் வியாழன் வரை மட்டுமே இது செல்லுபடியாகும். வெள்ளி, சனி, ஞாயிறு நாட்களில் பி.வி.ஆர் பாஸ்போர்ட் வைத்து படம் பார்க்க முடியாது.

    ஒரு நாளுக்கு ஒரு படம் மட்டுமே பார்க்க முடியும். ஒரு படத்தை 2 தடவைக்கு மேலாக பார்க்க முடியாது. பி.வி.ஆர் பாஸ்போர்ட் A-விற்கு மாதம் சந்தாவா 349 ரூபாய் கட்டணமாக செலுத்த வேண்டும். ஒரு மாததிற்குள் 4 படம் பார்க்க முடியும். இல்லை என்றால் இது அடுத்த மாதத்திற்கு செல்லுபடி ஆகாது.

    பாஸ்போர்டின் இரண்டாம் B வகை மாதம் சந்தா ரூ.1047 செலுத்த வேண்டும். இதில், 90 நாட்கள் வரை உபயோகிக்கலாம். 90 நாட்களில் 12 படங்கள் பார்த்துக் கொள்ளலாம்.

    திங்களில் இருந்து வியாழக்கிழமை வரை மட்டுமே இதை உபயோகிக்க முடியும். வெள்ளி, சனி, ஞாயிற்று கிழமையில் புதுபடங்கள் வெளிவருவதால் மக்கள் அந்நாட்களில் பணம் கொடுத்துதான் பார்க்க வேண்டும்.

    பி.வி.ஆர் பாஸ்போர்ட்டை உபயோகித்து படம் பார்த்தால் ஒரு டிக்கெட்டின் விலை 87 ஆகவும், டிக்கெட்டுடன் சேர்ந்து கன்வீனியன்ஸ் ஃபீ செலுத்தி நாம் டிக்கெட்டுகளைப் பெறலாம். ஆன்லைனில் மட்டுமே பாஸ்போர்ட்டை வைத்து டிக்கெட் பெற முடியும் என தெரிவித்துள்ளனர்.

    பிவிஆர் பாஸ்போர்ட் ஏற்கனவே ஐதராபாத்தில் நடைமுறையில் உள்ளது. இப்போது, தெலுங்கானா, தமிழகத்திலும், கேரளத்திலும் அமலுக்கு வந்து இருக்கிறது. ரசிகர்களுக்கு மத்தியில் பி.வி.ஆர் பாஸ்போர்ட் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • தனக்கு ஜாமீன் வழங்க கோரி மதுரை ஐகோர்ட்டு கிளையில் தாக்கல் செய்த மனுக்கள் 2 முறை தள்ளுபடி செய்யப்பட்டன.
    • தமிழக லஞ்ச ஒழிப்புத்துறைக்கு தெரியாமல் தமிழகத்தை விட்டு வெளியில் செல்லக்கூடாது எனவும் நிபந்தனை விதித்தனர்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் அரசு மருத்துவமனை டாக்டராக உள்ள சுரேஷ் பாபுவிடம் 2 தவணைகளாக ரூ.40 லட்சம் பெற்றதாக மதுரை அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி கடந்த ஆண்டு டிசம்பர் 1-ந் தேதி திண்டுக்கல் லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

    அதன் பின்னர் அவர் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். அவர் தனக்கு ஜாமீன் வழங்க கோரி மதுரை ஐகோர்ட்டு கிளையில் தாக்கல் செய்த மனுக்கள் 2 முறை தள்ளுபடி செய்யப்பட்டன.

    திண்டுக்கல் நீதிமன்றத்தில் ஜாமீன் கேட்ட மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் கடைசியாக கடந்த 20-ந் தேதி காணொலி மூலம் ஆஜர்படுத்தப்பட்டார். அவரது நீதிமன்ற காவல் ஏப்ரல் 3-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

    இதனிடையே சுப்ரீம் கோர்ட்டில் அங்கித் திவாரி சார்பில் ஜாமீன் கேட்டு மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் அங்கித் திவாரிக்கு இடைக்கால நிபந்தனை ஜாமீன் வழங்கி கடந்த 20-ந் தேதி உத்தரவிட்டது.

    அந்த உத்தரவில் திண்டுக்கல் தலைமை மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்து ஜாமீன் பெற்றுக் கொள்ளலாம் எனவும் அப்போது அவரது பாஸ்போர்ட்டை கோர்ட்டில் ஒப்படைக்க வேண்டும் எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர். மேலும் தமிழக லஞ்ச ஒழிப்புத்துறைக்கு தெரியாமல் தமிழகத்தை விட்டு வெளியில் செல்லக்கூடாது எனவும் நிபந்தனை விதித்தனர்.

    இதனைத் தொடர்ந்து திண்டுக்கல் கோர்ட்டில் அங்கித் திவாரியின் பெற்றோர் அவரது பாஸ்போர்ட்டை ஒப்படைக்க வந்தனர். அதனுடன் சுப்ரீம் கோர்ட்டு வழங்கிய இடைக்கால நிபந்தனை ஜாமீன் நகலையும் வழங்கினர். இதனைத் தொடர்ந்து விரைவில் அங்கித் திவாரிக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்படும் என அவரது வக்கீல்கள் தெரிவித்தனர்.

    • தேவகவுடா பேரன் பிரஜ்வால் ரேவண்ணாவின் ஆபாச வீடியோக்கள் வெளியாகி கர்நாடகாவை அதிர வைத்துள்ளது
    • பெண்களுடன் பிரஜ்வால் ரேவண்ணா உல்லாசமாக இருப்பது போன்ற ஆபாச வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவிக் கொண்டிருக்கிறது

    கர்நாடகாவில் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரன் பிரஜ்வால் ரேவண்ணா ஹாசன் தொகுதி எம்.பியாக உள்ளார். அவர் கர்நாடகாவில் இரண்டாவது கட்டமாக நடந்த பாராளுமன்ற தேர்தலில் மீண்டும் அதே தொகுதியில் போட்டியிட்டார்.

    இந்த பாராளுமன்ற தேர்தலில் மதச்சார்பற்ற ஜனதா தளம் பா.ஜனதாவுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. .

    இந்நிலையில் தேவகவுடா பேரன் பிரஜ்வால் ரேவண்ணாவின் ஆபாச வீடியோக்கள் வெளியாகி கர்நாடகாவை அதிர வைத்துள்ளது. பெண்களுடன் பிரஜ்வால் ரேவண்ணா உல்லாசமாக இருப்பது போன்ற ஆபாச வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவிக் கொண்டிருக்கிறது.

    இந்நிலையில் ஆபாச வீடியோ வழக்கு தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழு அமைக்க அரசு முடிவு செய்துள்ளதாக கர்நாடக முதல்-அமைச்சர் சித்தராமையா எக்ஸ் வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.

    இதனையடுத்து, பெண்களை மிரட்டி பாலியல் ரீதியாக துன்புறுத்தி ஆபாச வீடியோ எடுத்ததாக ரேவண்ணா மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பிரஜ்வால் ரேவண்ணா, ஜெர்மனுக்கு சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    இதற்கடுத்து ஆபாச வீடியோ விவகாரம் தொடர்பாக பிரஜ்வல் ரேவண்ணா எம்.பி. அக்கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டார்.

    இந்நிலையில் ஹாசன் எம்பி பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு வழங்கப்பட்ட பாஸ்போர்ட்டை ரத்து செய்து, அவர் இந்தியாவுக்கு திரும்புவதை உறுதி செய்ய வெளியுறவு அமைச்சகம் மற்றும் உள்துறை அமைச்சகத்திற்கு உத்தரவிடுமாறு பிரதமர் மோடிக்கு கர்நாடக முதல்வர் சித்தராமையா கடிதம் எழுதியுள்ளார்.

    • பிரதமர் மோடிக்கு கர்நாடக முதல் மந்திரி சித்தராமையா கடிதம் எழுதி உள்ளார்.
    • அதில், ஜெர்மனியில் இருந்து பிரஜ்வலை இந்தியா அழைத்துவர வேண்டும் என தெரிவித்துள்ளார்.

    பெங்களூரு:

    முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனும், கர்நாடகாவின் ஹசன் தொகுதி எம்.பி.யுமான பிரஜ்வல் ரேவண்ணா ஆபாச வீடியோ வழக்கில் சிக்கியுள்ளார். இந்த வழக்கை சிறப்பு விசாரணை குழு விசாரிக்கிறது. மத்திய அரசின் உதவியுடன் பிரஜ்வல் ஜெர்மன் சென்றுள்ளார் என காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது.

    இந்நிலையில், கர்நாடக முதல் மந்திரி சித்தராமையா பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது:

    தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளரும், ஹசன் சிட்டிங் எம்.பி.யுமான பிரஜ்வல் ரேவண்ணா சம்பந்தப்பட்ட ஆபாச வீடியோக்கள் பற்றி, நீங்கள் அறிந்து இருப்பீர்கள் என்று நினைக்கிறேன். நாட்டை உலுக்கிய பயங்கரமான மற்றும் வெட்கக்கேடான வழக்கை பிரஜ்வல் எதிர்கொண்டுள்ளார்.

    இந்த வழக்கை விசாரிக்க சி.ஐ.டி.யின் கீழ் சிறப்பு விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பெண்கள் அளித்த புகாரில் பிரஜ்வல் மீது கடந்த 28-ம் தேதி வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பிரஜ்வல் ஜெர்மனியில் இருப்பதால் விசாரணை நிலுவையில் உள்ளது.

    மத்திய வெளியுறவுத்துறை பிரஜ்வலின் பாஸ்போர்ட்டை ரத்து செய்வதுடன், சர்வதேச போலீஸ் உதவியுடன் ஜெர்மனியில் இருந்து அவரை அழைத்துவர நடவடிக்கை எடுக்கவேண்டும். வழக்கின் அனைத்து ஆவணங்களையும் வழங்க சிறப்பு விசாரணை குழு தயாராக உள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

    • பிரதமர் மோடிக்கு கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா 2-வது முறையாக வேண்டுகோள் விடுத்துள்ளார்.
    • தூதரக பாஸ்போர்ட்டை ரத்து செய்து, பொதுமக்களின் நலன் கருதி அவர் இந்தியா திரும்புவதை உறுதி செய்ய வேண்டும்.

    பாலியல் சர்ச்சையில் சிக்கி வெளிநாடு தப்பி சென்ற முன்னாள் பிரதமர் தேவேகவுடாவின் பேரனும், எம்.பி.யுமான பிரஜ்வல் ரேவண்ணாவை இந்தியா கொண்டுவரும் வகையில் அவரது தூதரக பாஸ்போர்ட்டை ரத்து செய்ய வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா 2-வது முறையாக வேண்டுகோள் விடுத்துள்ளார். பிரதமர் மோடிக்கு இன்று அவர் எழுதிய கடிதத்தில், கூறியிருப்பதாவது:-

    நாட்டை விட்டு வெளியேறவும், குற்றவியல் நடவடிக்கைகளில் இருந்து தப்பிக்கவும் அரசு வழங்கிய சலுகையை பிரஜ்வல் ரேவண்ணா துஷ்பிரயோகம் செய்துள்ளார். அவரது தூதரக பாஸ்போர்ட்டை ரத்து செய்து, பொதுமக்களின் நலன் கருதி அவர் இந்தியா திரும்புவதை உறுதி செய்ய வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    கர்நாடக அரசின் வேண்டுகோளை செயல்படுத்தி வருவதாக வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    • பலரும் அவர்கள் பணி புரியும் நிறுவனங்களில் ஆதார் அட்டையை கொடுத்து தான் பணியில் சேர்ந்துள்ளனர்.
    • தொடர்ந்து விசாரணை சென்று கொண்டிருப்பதால் முழு தகவலையும் இப்போது வெளியிட முடியாது.

    பெருந்துறை:

    ஈரோடு மாவட்டம் பெருந்துறை சிப்காட் மற்றும் விஜயமங்கலம், வாய்ப்பாடி, திங்களூர், காஞ்சிகோவில், பெத்தாம்பாளையம், நல்லாம்பட்டி என பெருந்துறை தாலுகா முழுவதும் வட மாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

    அனைத்து வகை தொழில் நிறுவனங்கள், ஓட்டல், கடைகள், தறிப்பட்டறை மற்றும் விவசாய கூலித் தொழிலாளர்கள் என எல்லா பகுதியிலும் வட மாநில தொழிலாளர்களே அதிக அளவில் பணிபுரிகின்றனர். பின்னலாடை, ஸ்பின்னிங், டையிங், விசைத்தறி மற்றும் நாடா இல்லாத தறி பட்டறைகளிலும், விவசாய தொழிலுக்கும் ஏற்பட்டுள்ள தொழிலாளர் பற்றாக்குறையை வட மாநிலத் தொழிலாளர்களே பூர்த்தி செய்து வருகின்றனர்.

    மேற்குவங்கம், பீகார், உத்தரப்பிரதேசம், ஜார்கண்ட், சத்தீஸ்கர், ஒடிசா என வட மாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்கள் பெருந்துறை தாலுகாவில் மட்டும் 2 லட்சம் பேருக்கு மேல் இருப்பார்கள் என கூறப்படுகிறது. இவர்களில் பலரும் அவர்கள் பணி புரியும் நிறுவனங்களில் ஆதார் அட்டையை கொடுத்து தான் பணியில் சேர்ந்துள்ளனர்.

    மற்றபடி பணியில் சேருபவர்களின் பின்னணி அவர்களுடைய சொந்த மாநிலத்தில் ஏதேனும் குற்ற வழக்கில் தொடர்புடையவர்களா? தேடப்படும் குற்றவாளியா? என்பன உள்ளிட்ட எந்த பின்னணி தகவல்களும் இருப்பதில்லை. அவர்கள் அளிக்கும் ஆதார் அட்டையும் போலியானதா என்பதும் உறுதிப்படுத்தப் படுவதில்லை.

    குறிப்பாக வங்காள தேசத்தில் இருந்து பாஸ்போர்ட், விசா இல்லாமல் மேற்கு வங்காளம் வழியாக ஊடுருவி தமிழகத்தின் பல பகுதிகளில் கூலித் தொழிலாளர்கள் என்ற பெயரில் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களை பற்றிய முழு தகவல்களையும் போலீஸ் நிலையங்கள் மூலமாக சேகரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாலைமலர் நாளிதழில் விரிவான செய்தி வெளியிடப்பட்டு இருந்தது.

    இதன் எதிரொலியாக ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் உத்தரவின் பேரில் பெருந்துறை போலீசார், பெருந்துறை பணிக்கம்பாளையம், கிருஷ்ணாம்பாளையம், காடபாளையம் பகுதிகளில் தங்கி உள்ள வட மாநில தொழிலாளர்களின் பின்னணி குறித்து விசாரணை நடத்தி வந்தனர்.

    நேற்று இரவு நடைபெற்ற இந்த விசாரணையில் பெருந்துறை பணிக்கம்பாளையம் பகுதியில் தங்கி சிப்காட்டில் பணி புரிந்து வந்த வங்காளதேசத்தை 9 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். இதன் முதற்கட்ட விசாரணையில் இந்திய நாட்டில் வசிப்பதற்கான பாஸ்போர்ட், விசா எதுவும் இல்லாத 5 பேர் வங்காளதேசத்தை சேர்ந்தவர்கள் என்பது உறுதி செய்யப்பட்டது.

    தற்போது அவர்கள் அளித்துள்ள ஆதாரங்களின் அடிப்படையில் வங்காள தேசத்தில் இருந்து மேற்கு வங்காளத்திற்கு எப்படி ஊடுருவி வந்தார்கள் என்பது குறித்தும், அவர்கள் கொடுத்துள்ள ஆதார் அட்டையின் உண்மைத் தன்மை குறித்தும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதுகுறித்து பெருந்துறை போலீசார் கூறுகையில், வங்காளதேசத்தில் இருந்து வந்தவர்கள் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் 9 பேரை பிடித்து விசாரித்ததில் முதல் கட்டமாக 5 பேர் வங்காளதேசத்தை சேர்ந்தவர்கள்தான் என்பது உறுதியாகி உள்ளது. இவர்களிடம் முறையான பாஸ்போர்ட், விசா எதுவும் இல்லை என்பதும் கண்டறியப்பட்டுள்ளது.

    தொடர்ந்து விசாரணை சென்று கொண்டிருப்பதால் முழு தகவலையும் இப்போது வெளியிட முடியாது. முழுமையான விசாரணைக்கு பிறகே வங்காளதேசத்தை சேர்ந்தவர்கள் பற்றிய முழுவிவரத்தையும் வெளியிட முடியும் என்று தெரிவித்தனர்.

    • இந்தியா, ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி ஜூலை 6-ம் தேதி தொடங்குகிறது.
    • இந்திய அணி மும்பை சத்ரபதி சிவாஜி விமான நிலையத்தில் இருந்து ஜிம்பாப்வே புறப்பட்டுச் சென்றது.

    மும்பை:

    இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்க ஜிம்பாப்வே செல்கிறது. இரு அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி ஜூலை 6-ம் தேதி தொடங்குகிறது.

    இதற்கிடையே, ஜிம்பாப்வேக்கு எதிரான டி20 தொடரில் பங்கேற்கும் இந்திய இளம் அணி, மும்பை சத்ரபதி சிவாஜி விமான நிலையத்தில் இருந்து ஜிம்பாப்வேயில் இருக்கும் ஹராரே நகருக்கு புறப்பட்டுச் சென்றது.

    அப்போது, மும்பை விமான நிலையத்தில் பாஸ்போர்ட் செக்கிங் செய்யும்போது, எனது பாஸ்போர்ட்டை காணவில்லை என இந்திய வீரர் ரியான் பராக் கூறியுள்ளார். அவரது பையில் நடத்தப்பட்ட சோதனையில் பாஸ்போர்ட் கிடைத்ததால் பராக் ஹராரேவுக்கு பறந்தார்.

    இதுதொடர்பாக, பி.சி.சி.ஐ. இணையதளத்திற்கு பேட்டி அளித்த பராக், மும்பை விமான நிலையத்தில் பாஸ்போர்ட் செக்கிங்கில் எனது பாஸ்போர்ட்டை காணவில்லை. நல்லவேளை, அதே பையில் தான் இருந்திருக்கிறது. இது கவனக்குறைவு கிடையாது. இந்திய அணியில் அறிமுகம் ஆவதற்காக ஆர்வமாக உள்ளேன். இந்திய அணிக்கு தேர்வு செய்யப்பட்ட செய்தி அறிந்தபின் மகிழ்ச்சியாக இருந்தது. அந்த மகிழ்ச்சியில் எனது பாஸ்போர்ட், செல்போன் உள்ளிட்ட பொருட்களை எங்கு வைத்தேன் என்பதையே மறந்து விட்டேன். இந்திய அணிக்கு ஆடப்போகிறோம் என்ற ஆர்வத்தில் இந்த தவறு நடந்தது என தெரிவித்தார்.

    ×