என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வாலிபர்கள் கைது"

    • சிறுமியின் உதடு, கை உள்ளிட்ட இடங்களில் காயங்கள் இருந்ததால் டாக்டர்கள் சந்தேகம்.
    • சிறுமி அடித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் தெரியவந்தது.

    திசையன்விளை:

    நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள துவரம்பாடு கிராமத்தை சேர்ந்தவர் சரத். இவரது மனைவி பிருந்தா (வயது 25). இவர்கள் 2 பேரும் காதலித்து வந்த நிலையில் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு தர்ஷினி என்ற 2½ வயது பெண் குழந்தை உள்ளது.

    சரத் கோவையில் உள்ள ஒரு பொம்மை கடையில் வேலை பார்த்து வருகிறார். இதனால் பிருந்தா தனது குழந்தையுடன் திசையன்விளை அருகே உள்ள மகாதேவன் குளத்தில் வசித்து வருகிறார்.

    இந்நிலையில் நேற்று காலை பிருந்தா நடுவக்குறிச்சியில் உள்ள தனது தாய் வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போது கையில் வைத்திருந்த தனது குழந்தை தர்ஷினி இறந்துவிட்டதாக கூறினார். அவரது பேச்சில் சந்தேகம் அடைந்த பெற்றோர், உடனே குழந்தையை திசையன்விளை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிறுமியை பரிசோதனை செய்த டாக்டர்கள் குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

    அதேநேரத்தில் சிறுமியின் உதடு, கை உள்ளிட்ட இடங்களில் காயங்கள் இருந்ததால் டாக்டர்கள் சந்தேகம் அடைந்து திசையன்விளை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து வந்து சிறுமி உடலை பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    தொடர்ந்து பிருந்தாவை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று நடத்திய விசாரணையில் சில வாலிபர்களுடன் உல்லாசமாக இருந்தபோது இடையூறாக இருந்ததால் சிறுமி அடித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் தெரியவந்தது.

    காதல் திருமணம் செய்து கொண்ட போதிலும், பிருந்தாவுக்கு பல வாலிபர்களுடன் தொடர்பு இருந்து வந்துள்ளது. அவ்வப்போது அவர்களுடன் தனிமையான இடங்களுக்கு சென்று உல்லாசம் அனுபவித்து வந்துள்ளார். அப்போது குழந்தையை தனியாக வீட்டில் விட்டு விட்டு செல்ல முடியாது என்பதால் குழந்தையையும் அழைத்து செல்வதை வழக்கமாக வைத்துள்ளார்.

    இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு திசையன்விளை அருகே உள்ள துவரம்பாடு பகுதியை சேர்ந்த ஐஸ்கிரீம் கடை நடத்தி வரும் வாலிபரான லிங்கசெல்வம் (28 ) என்பவர் தனது நண்பர்களான அதே பகுதியை சேர்ந்த முத்துசுடர் (28), பெஞ்சமின் (28) ஆகியோருடன் மதுபோதையில் பிருந்தா வீட்டிற்கு சென்றுள்ளார்.

    அங்கிருந்து குழந்தையுடன் பிருந்தாவை 3 பேரும் அழைத்துச்சென்றுள்ளனர். பின்னர் திசையன்விளையை அடுத்த வாழைத்தோட்டம் கிராமத்தில் இருட்டு நிறைந்த பகுதியில் அந்த வாலிபர்களுடன் உல்லாசமாக இருந்துள்ளார். அப்போது சிறுமி தர்ஷினி அழுதுள்ளார். உடனே அவர்களில் 2 வாலிபர்கள் தர்ஷினியை சற்று தூரத்திற்கு அழைத்து சென்று தின்பண்டம் கொடுத்துள்ளனர்.

    மேலும் அவர்கள் 2 பேரும் அங்கிருந்தபடி மது குடித்துக்கொண்டு இருந்தனர். சிறுமி தின்பண்டம் சாப்பிட்டதும் குடிக்க தண்ணீர் கேட்டுள்ளார். போதையில் இருந்த வாலிபர்கள், சிறுமி என்றும் பாராமல் குளிர்பானத்தில் மதுவை கலந்து சிறுமிக்கு கொடுத்துள்ளனர். அதனை குடித்த சிறுமி அழுதுள்ளார்.

    இதனால் ஆத்திரம் அடைந்த வாலிபர்கள் சிறுமியின் மூக்கை பொத்தியும், தாக்கியும் கொலை செய்துள்ளனர். இதனால் மூச்சு பேச்சு இல்லாமல் போன சிறுமியை வாலிபர்கள் 3 பேரும் சேர்ந்து பிருந்தாவிடம் ஒப்படைத்து விட்டு சென்றுவிட்டனர். என்ன செய்வதென்று தெரியாமல் தனது குழந்தை கட்டிலில் இருந்து தவறி விழுந்து இறந்துவிட்டதாக பெற்றோரிடம் பிருந்தா நாடகமாடியது தெரியவந்தது.

    இதையடுத்து பிருந்தாவை கைது செய்த போலீசார், கள்ளக்காதலில் ஈடுபட்டு சிறுமியையும் கொலை செய்த லிங்க செல்வன், முத்து சுடர், பெஞ்சமின் உள்ளிட்டவர்களையும் கைது செய்தனர்.

    • கைதான 2 பேரையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    வண்டலூர்:

    கூடுவாஞ்சேரி மற்றும் சுற்றுப்பகுதியில் கடந்த சில மாதங்களாக தனியாக நடந்து செல்லும் பெண்களிடம் நகை பறிப்பு சம்பவம் அதிகரித்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு கூடுவாஞ்சேரி அடுத்த காரணை புதுச்சேரி, ஊரப்பாக்கம் ஆகிய பகுதியில் ஆயிஷா, மகேஷ்வரி, அம்மினி, ஆகிய 3 பெண்களிடம் அடுத்தடுத்து நகைகளை மர்ம நபர்கள் பறித்து தப்பி சென்றனர்.

    இதுகுறித்து கூடுவாஞ்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் நகைபறிப்பில் தொடர்புடைய கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள்

    நகைபறிப்பு சம்பவம் நடைபெற்ற இடங்களில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை வைத்து விசாரித்தனர்.

    இதில் உத்தரபிரதேச மாநிலம், சாம்லி மாவட்டத்தைச் சேர்ந்த 3 வாலிபர்கள் தொடர்ந்து நகை பறிப்பில் ஈடுபட்டு வந்தது தெரிந்தது. மேலும் அவரிகளில் 2 பேர் மீண்டும் நகை பறிப்பில் ஈடுபட சென்னைக்கு ரெயிலில் வந்திருப்பது தெரிந்தது. இதையடுத்து தனிப்படை போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு கூடுவாஞ்சேரி ரெயில் நிலையத்தில் சுற்றிய உத்திரப்பிரதேசத்தை சேர்ந்த சஞ்சய், சோகான் தபஸ் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.

    அப்போது, போலீசாரிடம் இருந்து தப்பி ஓடியபோது சோகான் தபஸ், தண்டவாளத்தில் தவறி விழுந்தார். இதில் அவரது இடது கை மற்றும் வலது காலில் முறிவு ஏற்பட்டு மாவு கட்டு போடப்பட்டது.

    பின்னர் கைதான 2 பேரையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். மேலும் தலைமறைவான சூரஜ் என்பவனை போலீசார் தேடி வருகின்றனர்.

    • கைதான சங்கரநாராயணன் மீது பெருமாள்புரம் போலீஸ் நிலையத்தில் 2 வழிப்பறி வழக்குகள் நிலுவையில் உள்ளன.
    • நெல்லையில் இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் நாங்குநேரி பகுதியை சேர்ந்தவர் சின்னத்துரை. கடந்த 2023-ம் ஆண்டு சாதி ரீதியிலான தாக்குதலில் பலத்த காயம் அடைந்தார். இவர் தற்போது நெல்லை திருமால்நகர் குடியிருப்பில் வசித்து வருவதுடன், பாளையங்கோட்டையில் உள்ள ஒரு கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.

    கடந்த 16-ந் தேதி நெல்லை கொக்கிரகுளம் வசந்தம் நகர் விரிவாக்கம் பகுதிக்கு தனது இன்ஸ்டாகிராம் நண்பரை பார்க்க சென்றார். அப்போது அவரை அடையாளம் தெரியாத 4 பேர் தாக்கியதுடன், செல்போனையும் பறித்துச் சென்றனர்.

    ஏற்கனவே பாதிக்கப்பட்ட மாணவன் மீண்டும் தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து பாளையங்கோட்டை போலீஸ் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது.

    போலீசாரின் விசாரணையில் பாலகிருஷ்ணன் மகன் பரமேஸ் (வயது 20) என்பவர் தலைமையில், அவருடைய நண்பர்கள் சங்கர நாராயணன் (23), சக்திவேல் (19), சண்முக சுந்தரம் மற்றும் வேல்முருகன் ஆகியோர் சின்னத்துரையிடம் இன்ஸ்டாகிராம் மூலம் தொடர்பு கொண்டு, அவரிடம் பணம் பறிக்கும் நோக்கத்தோடு சம்பவ இடத்துக்கு வரவழைத்து இந்த செயலில் ஈடுபட்டது தெரியவந்தது.

    இதுதொடர்பாக 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டை நடைபெற்றது. இந்த நிலையில் சக்திவேல், சங்கரநாராயணன் ஆகிய 2 பேரையும் போலீசார் நேற்று இரவு கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 2 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. கைதான சங்கரநாராயணன் மீது பெருமாள்புரம் போலீஸ் நிலையத்தில் 2 வழிப்பறி வழக்குகள் நிலுவையில் உள்ளன.

    இந்த வழக்கில் தொடர்ந்து தலைமறைவாக இருக்கும் பரமேஸ், சண்முகசுந்தரம், வேல்முருகன் ஆகிய 3 பேரையும் தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

    இதற்கிடையே மாணவன் சின்னத்துரையை காங்கிரஸ் எஸ்.சி. துறை தலைவர் ரஞ்சன்குமார் மற்றும் நிர்வாகிகள் சந்தித்து பேசி ஆறுதல் கூறி, நிதிஉதவியும் வழங்கினர்.

    பின்னர் ரஞ்சன் குமார் கூறுகையில், 'நெல்லையில் இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும். மாணவர் சின்னத்துரைக்கு வீடு வசதி, கல்வி வசதி உள்ளிட்ட அனைத்து வசதிகளும் அரசால் மேற்கொள்ளப்பட்டுள்ளது. நெல்லை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் சாதி ரீதியான மோதல்கள் அதிகமாக நடந்து வருகிறது. பாளையங்கோட்டை பள்ளியில் 8-ம் வகுப்பு மாணவர் அரிவாளால் வெட்டப்பட்டது கண்டிக்கத்தக்கது. சாதி ரீதியான வன்முறைகளுக்கு எதிராக சிறப்பு தனி சட்டங்களை இயற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றார்.

    • போலீசார் காலேஜ் ரோட்டில் உள்ள கொரியர் நிறுவனம் ஒன்றில் சோதனை நடத்தினர்.
    • வலி நிவாரணி மாத்திரைகளையும் பறிமுதல் செய்தனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் வடக்கு போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வலி நிவாரணி மாத்திரைகளை போதை பயன்பாட்டிற்கு பயன்படுத்த கொரியர் மூலம் கொண்டு வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    அதன் அடிப்படையில் போலீசார் காலேஜ் ரோட்டில் உள்ள கொரியர் நிறுவனம் ஒன்றில் சோதனை நடத்தினர். அப்போது திருப்பூர் நல்லாத்துப்பாளையத்தை சேர்ந்த மோகன் (வயது 27) என்பவருக்கு பெங்களூருவில் இருந்து வந்த கொரியரை கைப்பற்றி சோதனை செய்தனர். அதில் 90 வலி நிவாரணி மாத்திரைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதைத்தொடர்ந்து போலீசார் அதனை கைப்பற்றி மோகன் மற்றும் மாத்திரை விற்பனையாளரான பிச்சம்பாளையத்தை சேர்ந்த சஞ்சீவிகுமார்(23) ஆகியோரை கைது செய்தனர். 90 வலி நிவாரணி மாத்திரைகளையும் பறிமுதல் செய்தனர்.

    • மதுபான பாரில் இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்தனர்.
    • துப்பாக்கி சூடு நடந்த மதுபார் உடனடியாக மூடப்பட்டது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் கொச்சியில் ஏராளமான தனியார் மதுபார்கள் உள்ளன. இந்த பார்களில் நேற்று மாலை ஏராளமானோர் அமர்ந்து மது குடித்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு 2 வாலிபர்கள் வந்தனர். அவர்களும் மதுபோதையில் இருந்தனர்.

    திடீரென அவர்கள் கைகளில் வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து சரமாரியாக சுட்டனர். மேலும் மதுபான பாரின் கேஷியரை நோக்கியும் சுட்டனர். துப்பாக்கி சத்தம் கேட்டதும் மதுபாரில் இருந்தவர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். துப்பாக்கியால் சுட்டதில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

    இதற்கிடையே இச்சம்பவம் பற்றி கொச்சி மரடு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

    மேலும் மதுபான பாரில் இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்தனர். இதில் துப்பாக்கி சூட்டில் ஈடுபட்டது எழுபுன்னாவை சேர்ந்த ராஜன் மற்றும் அவரது நண்பர் ஹெரால்டு என தெரியவந்தது. இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

    மேலும் துப்பாக்கி சூடு நடந்த மதுபார் உடனடியாக மூடப்பட்டது. அங்கு சிதறி கிடந்த துப்பாக்கி குண்டுகளை தடயவியல் நிபுணர்கள் சேகரித்து ஆய்வுக்கு அனுப்பினர்.

    மேலும் வாலிபர்கள் பயன்படுத்திய துப்பாக்கி என்ன ரகத்தை சேர்ந்தது? எதற்காக அவர்கள் துப்பாக்கி சூட்டில் ஈடுபட்டார்கள் என்பது பற்றியும் விசாரணை நடக்கிறது.

    இதற்கிடையே மதுபாரில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவ காட்சிகளை சிலர் சமூக வலைதளத்தில் பதிவிட்டனர். தற்போது அந்த காட்சிகள் வைரலாகி வருகிறது. இது கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • ஒரு வீட்டில் ஐம்பொன் சாமி சிலைகள் பதுக்கி வைத்து இருப்பதாக ஆற்காடு டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் விநாயக மூர்த்திக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
    • மேலும் ஐம்பொன் சிலைகள் கடத்தி வைக்கப்பட்டுள்ளதா, இதில் யார் யாருக்கு தொடர்பு உள்ளது என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஆற்காடு:

    ராணிப்பேட்டை மாவட்டம், தாஜ் புரா, சத்யா நகர், திருதாமாந்தர் தெருவில் உள்ள ஒரு வீட்டில் ஐம்பொன் சாமி சிலைகள் பதுக்கி வைத்து இருப்பதாக ஆற்காடு டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் விநாயக மூர்த்திக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் இன்று காலை சம்பந்தப்பட்ட வீட்டிற்கு சென்று சோதனை நடத்தினர்.

    அப்போது வீட்டின் அறையில் ஐம்பொன்னால் செய்யப்பட்ட முக்கால் அடி உயர முருகர் சிலை, கால் அடியில் 3 மாரியம்மன் சிலைகள் மற்றும் 2 பெரிய வெள்ளி சிலைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதையடுத்து சிலையை பறிமுதல் செய்து சாமி சிலைகளை கடத்தி பதுக்கி வைத்திருந்ததாக பாலாஜி வயது 39 காட்பாடி பாலாஜி நகரை சேர்ந்த தினேஷ்குமார் ஆற்காடு கன்னி கோவில் தெருவை சேர்ந்த முரளி கிருஷ்ணன் ஆகிய 3 பேரை கைது செய்தனர்.

    மேலும் அவர்களிடம் ஐம்பொன் சிலைகள் எங்கிருந்து எப்போது கடத்தி வரப்பட்டது.

    இதேபோல் மேலும் ஐம்பொன் சிலைகள் கடத்தி வைக்கப்பட்டுள்ளதா இதில் யார் யாருக்கு தொடர்பு உள்ளது என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பறிமுதல் செய்யப்பட்ட ஐம்பொன் சாமி சிலைகளின் மதிப்பு எவ்வளவு என்பது குறித்து உடனடியாக தெரியவில்லை.

    • குருவாயில் அரசு ஆஸ்பத்திரி அருகே சென்றபோது இரண்டு மோட்டார் சைக்கிளில் வந்த நான்கு வாலிபர்கள் வேனை திடீரென வழிமறித்தனர்.
    • குற்றவாளிகளான நான்கு வாலிபர்கள் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்து திருவள்ளூர் முதல்நிலை குற்றவியல் நீதிமன்ற மாஜிஸ்திரேட் முன்னிலையில் ஆஜர்படுத்தினர்.

    பெரியபாளையம்:

    திருவள்ளூர் மாவட்டம், வெங்கல் அருகே உள்ள குருவாயல் கிராமத்தில் முருகன் கோவிலில் நேற்று முன்தினம் நிச்சயதார்த்த நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. இதற்கு ஆவடி பாலவேடு கிராமம், கர்ணன் தெருவை சேர்ந்த தினேஷ்பாபு (வயது36) என்பவர் பந்தல் மற்றும் சவுண்ட் சர்வீஸ் அமைத்திருந்தார்.

    இந்நிலையில் அவர் நிகிழ்ச்சி முடிந்த பின்னர் நேற்று விடியற்காலை அனைத்தையும் அவிழ்த்து வேனில் ஏற்றிக்கொண்டு தனது கடைக்கு சென்று கொண்டிருந்தார்.

    குருவாயல்-காரணி கூட்ரோடு சாலையில் குருவாயில் அரசு ஆஸ்பத்திரி அருகே சென்றபோது இரண்டு மோட்டார் சைக்கிளில் வந்த நான்கு வாலிபர்கள் வேனை திடீரென வழிமறித்தனர். கண்ணிமைக்கும் நேரத்தில் அவர்கள் தினேஷ்பாபுவை சரமாரியாக தாக்கினர். பின்னர் அவரிடம் இருந்த விலை உயர்ந்த செல்போன் மற்றும் ரொக்க பணத்தை பறித்துக்கொண்டு மின்னல் வேகத்தில் மோட்டார் சைக்கிள்களில் ஏறி தப்பி சென்றனர்.

    இந்தச்சம்பவம் குறித்து தினேஷ்பாபு வெங்கல் காவல் நிலையத்தில் நேற்று காலை புகார் செய்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் தர்மலிங்கம் தலைமையில் போலீசார் இந்த வழிப்பறி சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளை வலைவீசி தேடி வந்தனர்.

    இந்நிலையில், செங்குன்றம் காந்தி நகரைச் சேர்ந்த கிஷோர்(வயது 18), செங்குன்றம், நாரவாரிக்குப்பம் பகுதியைச் சேர்ந்த நவீன்பாலாஜி (வயது18), பழைய மகாபலிபுரம், நாவலூர் பகுதியைச் சேர்ந்த மகேஷ் (வயது26), பூரிவாக்கம் கிராமத்தைச் சேர்ந்த சேதுராமன் (வயது18) ஆகிய நான்கு பேரையும் போலீசார் பிடித்து வந்து பல்வேறு கோணங்களில் விசாரணை செய்தனர். அப்போது அந்த நான்கு வாலிபர்களும் வேனை வழிமறித்து செல்போன் மற்றும் ரொக்கப் பணத்தை கொள்ளையடித்துச் சென்றதை ஒப்புக்கொண்டனர். மேலும், அவர்கள் பயன்படுத்திய மோட்டார் சைக்கிள்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

    குற்றவாளிகளான நான்கு வாலிபர்கள் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்து திருவள்ளூர் முதல் நிலை குற்றவியல் நீதிமன்ற மாஜிஸ்திரேட் முன்னிலையில் ஆஜர்படுத்தினர். அவரது உத்தரவின் பேரில் 4 பேரையும் போலீசார் நேற்று மாலை புழல் சிறையில் அடைத்தனர்.

    • ஆந்திராவில் இருந்து 21 கிலோ கஞ்சா கடத்திய 3 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
    • மதுரை மாநகரில் கஞ்சா கடத்தல், பதுக்கல் மற்றும் விற்பனையில் ஈடுபடும் குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று மாநகர போலீஸ் கமிஷனர் உத்தரவிட்டார்.

    மதுரை

    மதுரை மாநகரில் கஞ்சா கடத்தல், பதுக்கல் மற்றும் விற்பனை ஆகியவை கொடிகட்டி பறந்து வருகின்றன. எனவே அவற்றில் ஈடுபடும் குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று மாநகர போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் உத்தரவிட்டார். இதன்படி மாநகர தெற்கு துணை கமிஷனர் சீனிவாச பெருமாள் உத்தரவின் பேரில், மீனாட்சி அம்மன் கோவில் உதவி கமிஷனர் காமாட்சி ஆலோசனை பேரில், தெப்பக்குளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மாடசாமி அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது.

    தனிப்படை போலீசார் குருவிக்காரன் சாலையில் ரோந்து சென்றனர். அப்போது மோட்டார் சைக்கிளுடன் வாலிபர் ஒருவர் பதுங்கி இருந்தார். உடனே போலீசார் அவரை பிடித்து அவர் வைத்திருந்த பைகளை சோதனை செய்த போது 21 கிலோ கஞ்சா வைத்திருந்தது தெரிய வந்தது. இதையடுத்து அந்த வாலிபர் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டார். அங்கு நடத்திய விசாரணையில் அந்த வாலிபர் காளவாசல் பாண்டியன் நகரை சேர்ந்த மதன்குமார் (30) என தெரிய வந்தது. இவர் ஆந்திராவில் இருந்து கஞ்சாவை கடத்தி மதுரையில் விற்று வந்துள்ளார். போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    எஸ்.எஸ்.காலனி போலீசார் கோச்சடை மேலக்கால் மெயின் ரோட்டில் ரோந்து சென்றனர். அப்போது அங்குள்ள தண்ணீர் தொட்டி அருகே கஞ்சா விற்று கொண்டிருந்த செக்கானூரணியை சேர்ந்த குபேந்திரன் (23) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 1 கிலோ 200 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

    இதேபோல் விளாச்சேரி மெயின் ரோடு முனியாண்டி புரம் சந்திப்பில் கஞ்சா விற்ற மகாவிஷ்ணு (21) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

    • போலீசாரை கண்டதும் 3 வாலிபர்கள் ஓட்டம் பிடித்தனர்.
    • 3 பேரும் விற்பனை செய்வதற்காக கஞ்சா பொட்டலங்களை வைத்திருந்ததும் தெரிய வந்தது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி சிப்காட் சப்-இன்ஸ்பெக்டர் ஹேன்சன் பால்ராஜ் தலைமையான போலீசார் சோரீஸ்புரம் சந்தன மாரியம்மன் கோவில் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது போலீசாரை கண்டதும் 3 வாலிபர்கள் ஓட்டம் பிடித்தனர். அவர்களை போலீசார் விரட்டி சென்று பிடித்து சோதனையிட்டதில் பொட்ட லங்களில் 330 கிராம் கஞ்சா இருந்தது தெரியவந்தது. அவர்கள் விற்பனை செய்வதற்காக அந்த கஞ்சா பொட்டலங்களை வைத்திருந்ததும் தெரிய வந்தது. இதனை தொடர்ந்து கஞ்சா பொட்ட லங்களை பறிமுதல் செய்த போலீசார் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட அய்யனடைப்பு பிரசாந்த் (வயது 30), மாதவன் நகர் ஆகாஷ் (22),மட்டக்கடை ஹரிஹரன் (23) ஆகிய 3 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சிறுமலை பிரிவு அருகே மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்களை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர்.
    • திண்டுக்கல் தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஜய் வழக்கு பதிவு செய்து அவர்கள் 2 பேரையும் கைது செய்தார்.

    குள்ளனம்பட்டி:

    ஐ.ஜி. தனிப்படை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அழகுபாண்டி தலைமையிலான போலீசார் திண்டுக்கல்-நத்தம் சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சிறுமலை பிரிவு அருகே மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்களை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் சிறுமலையை அடுத்த தென்மலையைச் சேர்ந்த பிரகாஷ் (வயது 34), நிலக்கோட்டை அணைபட்டியைச் சேர்ந்த கணேஷ் பாண்டி (24) என்பதும், விற்பனைக்காக மோட்டார் சைக்கிளில் கஞ்சா கடத்தி வந்ததும் தெரியவந்தது.

    இதையடுத்து அவர்கள் 2 பேரையும் திண்டுக்கல் தாலுகா போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதுகுறித்து திண்டுக்கல் தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஜய் வழக்கு பதிவு செய்து அவர்கள் 2 பேரையும் கைது செய்தார். மேலும் அவர்களிடமிருந்து 4 கிலோ கஞ்சா மற்றும் மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது.

    • சுடுகாடு செல்லும் பாதையில் கஞ்சா மற்றும் சாராய ம்விற்பனை செய்தனர்.
    • சுடுகாடு செல்லும் பாதையில் கஞ்சா மற்றும் சாராய ம்விற்பனை செய்தனர்.

    கடலூர்:

    பண்ருட்டி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் பண்ருட்டி டி.எஸ்.பி. சபியுல்லா உத்தரவின் பேரில் பண்ருட்டிபோலீ ஸ்இன்ஸ்பெக்டர்(பொ) நந்தகுமார், சப் இன்ஸ்பெ க்டர் சரண்யாதலைமையில்போலீசார்நேற்றுதீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது விழமங்கலம் சுடுகாடு செல்லும் பாதையில் கஞ்சா மற்றும் சாராயம் விற்பனை செய்தனர்.

    இது குறித்து ஓட்டேரி கிராமத்தைச் சேர்ந்த கிஷோர் (20), தாழம்பட்டுகிராமத்தைச் சேர்ந்த சத்தியமூர்த்தி (21), தூக்கணாம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த அரவிந்த் (19), கோகுல்ராஜ் (21) ஆகியோரை கைது செய்து அவர்களிடமிருந்து சுமார் ஒரு கிலோ கஞ்சா மற்றும் 5 லிட்டர் சாராயத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

    • ஓரின சேர்க்கைக்கு மறுத்த பிச்சைக்காரரை வாலிபர்கள் கொலை செய்த சம்பவம் மேலூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    • நெல்லையை சேர்ந்த ராஜ்குமார் மேலூர் பகுதியில் கடந்த சில நாட்களாக சுற்றி திரிந்து பிச்சை எடுத்து வந்துள்ளார்.

    மேலூர்:

    மதுரை மாவட்டம் மேலூர் அருகே வண்ணாம்பாறைபட்டி பகுதியில் கோவில் அருகே உள்ள தண்ணீர் தொட்டியில் வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் பிணமாக கிடப்பதை அந்த வழியாக சென்றவர்கள் இன்று பார்த்தனர்.

    இதுகுறித்து மேலூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு மேலூர் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) சாந்தி மற்றும் போலீசார் சென்றனர். அங்கு தண்ணீர் தொட்டியில் கிடந்த வாலிபரின் உடலை மீட்டு விசாரணை நடத்தினர்.

    அப்போது அந்த வாலிபர் பாட்டிலால் குத்தி கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. கொலை செய்யப்பட்ட அந்த நபர் யார்? அவரை கொன்றவர்கள் யார்? என்று போலீசார் விசாரணை நடத்தினர்.

    அப்போது கொலை செய்யப்பட்ட வாலிபரை நேற்று முன்தினம் 2 வாலிபர்கள் மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்றதை பார்த்ததாக சிலர் போலீசில் தெரிவித்தனர். இதையடுத்து அந்த வாலிபர்கள் யார்? என்று விசாரிக்கப்பட்டது.

    அப்போது அவர்கள் வண்ணாம்பாறைபட்டியை சேர்ந்த ராமன் என்பவரின் மகள் பசுபதி (வயது19), நடுவளவு பகுதியை சேர்ந்த கணபதி என்பவரின் மகன் பெருமாள் (22) என்பது தெரியவந்தது. அவர்கள் 2 பேரையும் போலீசார் பிடித்து விசாரித்தனர்.

    அப்போது தண்ணீர் தொட்டியில் பிணமாக கிடந்த வாலிபரை கொன்றது தாங்கள் தான் என்றும், அந்த நபர் நெல்லையை சேர்ந்த ராஜ்குமார் (35) எனவும் கூறியுள்ளனர். போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தியதில் வாலிபர் கொலை குறித்து பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

    பசுபதி மற்றும் பெருமாள் ஆகிய 2 பேரும் கடந்த 13-ந் தேதி காலை மேலூர் அருகே உள்ள மலம்பட்டி அரசு மதுக்கடையில் மதுபானம் வாங்கி குடித்து விட்டு மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளனர். அப்போது வண்ணாம்பாறைபட்டி பிள்ளையார் கோவில் அருகே ராஜ்குமார் உட்கார்ந்திருந்தார்.

    குடிபோதையில் இருந்த பசுபதி, பெருமாள் ஆகிய இருவரும் ராஜ்குமாரை ஓரின சேர்க்கைக்கு அழைத்துள்ளனர். ஆனால் அதற்கு அவர் மறுப்பு தெரிவித்துள்ளார். இதில் ஆத்திரமடைந்த அவர்கள் ராஜ்குமாரை உருட்டுக்கட்டையால் அடித்து நிர்வாணப்படுத்தி தங்களின் ஆசைக்கு இணங்க வைக்க முயன்றுள்ளனர்.

    ஆனால் அவர்கள் இருவரையும் தள்ளி விட்டு தப்பி ஓடி முயன்றுள்ளார். இதையடுத்து பசுபதி, பெருமாள் ஆகிய இருவரும் ராஜ்குமாரை பீர்பாட்டிலால் சரமாரி குத்தி உள்ளனர். இதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.

    பின்பு ராஜ்குமாரின் உடலை கோவில் அருகே இருந்த தண்ணீர் தொட்டிக்குள் போட்டு விட்டு பசுபதி மற்றும் பெருமாள் அங்கிருந்து சென்று விட்டனர். ராஜ்குமார் கொலை செய்யப்பட்ட சம்பவம் கடந்த 2 நாட்களாக யாருக்கும் தெரியவில்லை.

    அவர் கொலை செய்யப்பட்டு தண்ணீர் தொட்டியில் கிடந்தது இன்று காலையில் தான் தெரியவந்தது. அதன்பிறகு போலீசார் நடத்திய விசாரணையில், கொலையாளிகளை போலீசார் கண்டுபிடித்து கைது செய்துள்ளனர்.

    நெல்லையை சேர்ந்த ராஜ்குமார் மேலூர் பகுதியில் கடந்த சில நாட்களாக சுற்றி திரிந்து பிச்சை எடுத்து வந்துள்ளார். அவரை பிச்சைக்காரர் என்று கூட பார்க்காமல் கொலையாளிகள் இருவரும் குடிபோதையில் ஓரின சேர்க்கைக்கு முயன்று, அதற்கு அவர் மறுப்பு தெரிவித்தால் கொலை செய்துள்ளனர்.

    ஓரின சேர்க்கைக்கு மறுத்த பிச்சைக்காரரை வாலிபர்கள் கொலை செய்த சம்பவம் மேலூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ×