என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மலைப்பாம்பு"

    • தோட்டத்திற்குள் வேலைபார்த்துக் கொண்டிருந்த போது ஜஹ்ராவை அந்த மலைப்பாம்பு இறுக்கி கொன்று உடலை விழுங்கி இருக்கலாம்.
    • ஏற்கனவே 2018-ம் ஆண்டு 54 வயதான பெண்ணை இதே போன்று ஒரு மலைப்பாம்பு கொன்று விழுங்கி இருந்தது.

    இந்தோனேசியாவில் உள்ள ஜாம்பி மாகாணத்தை சேர்ந்த 52 வயதான ஜஹ்ரா என்ற பெண் கடந்த ஞாயிற்றுக்கிழமை அப்பகுதியில் உள்ள ரப்பர் தோட்டத்திற்கு வேலைக்கு சென்றார். இரவு வெகுநேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அவரது உறவினர்கள் ரப்பர் தோட்டத்துக்கு தேடி சென்றனர். விடிய விடிய தேடியும் ஜஹ்ரா கிடைக்கவில்லை.

    இந்நிலையில் மறுநாள் ரப்பர் தோட்டத்திற்கு அருகே 16 அடி நீளம் கொண்ட ஒரு மலைப்பாம்பு நகர முடியாமல் கிடந்தது. அந்த பாம்பின் வயிறு மிகவும் வீங்கிய நிலையில் காணப்பட்டது. இதைப்பார்த்த ஜஹ்ராவின் உறவினர்கள் ஜஹ்ராவை அந்த மலைப்பாம்பு கொன்று விழுங்கியிருக்கலாம் என்று சந்தேகப்பட்டனர்.

    இதைத்தொடர்ந்து அந்த மலைப்பாம்பை அடித்துக்கொன்று பாம்பின் வயிற்றை கிழித்தனர். அப்போது பாம்பின் வயிற்றுக்குள் ஜஹ்ரா பிணமாக இருந்ததை கண்டு அவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

    தோட்டத்திற்குள் வேலைபார்த்துக் கொண்டிருந்த போது ஜஹ்ராவை அந்த மலைப்பாம்பு இறுக்கி கொன்று உடலை விழுங்கி இருக்கலாம் என அவர்கள் கருதுகின்றனர். இதுபோன்ற சம்பவங்கள் இந்தோனேசியாவில் நடப்பது முதல்முறையல்ல. ஏற்கனவே 2018-ம் ஆண்டு 54 வயதான பெண்ணை இதே போன்று ஒரு மலைப்பாம்பு கொன்று விழுங்கி இருந்தது.

    • தகவல் தெரிவித்தும் வனத்துறை அதிகாரிகள் வரவில்லை
    • பொதுமக்களே பிடித்து காட்டில் விட்டனர்

    அணைக்கட்டு:

    ஒடுகத்தூர் அருகே உள்ள போடிப்பேட்டை கிராமத்தில் சுமார் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். அதேப்பகுதியில் கோழி இறைச்சிக்கடை ஒன்று உள்ளது.

    அப்போது சுமார் இரவு 9 மணி அளவில் மலைப்பாம்பு ஒன்று இறைச்சியை சாப்பிட கடையை நோக்கி வந்துள்ளது. திடீரென அதனைப்பார்த்த கடையின் உரிமையாளர் பாம்பு, பாம்பு என கூச்சலிட்டுள்ளார்.

    அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக ஒடுகத்தூர் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். இதனை சற்றும் பொருட்படுத்தாமல் வனத்துறை அதிகாரிகள் நாங்கள் வர முடியாது நீங்களே பிடித்து காட்டில் விட்டு விடுங்கள் என சாமர்த்தியமாக கூறியுள்ளனர்.

    இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் ஒரு குழுவாக சேர்ந்து சுமார் 7 அடி நீளமுள்ள மலைப்பாம்பை பிடித்து சாக்கு பையில் அடைத்து அருகே இருந்த காப்புக்காட்டில் பத்திரமாக விட்டனர். இரவு நேரத்தில் ஊருக்குள் 7 அடி நீளமுடைய மலைப்பாம்பு புகுந்தது அப்பகுதியில் பரபரப்பை ஏற்ப்படுத்தியது.

    • ராட்சதமலைப்பாம்பை வனத்துறையினர் பாதுகாப்பாக காட்டு பகுதியில் பத்திரமாக கொண்டு விட்டனர்.
    • கொட்டாரத்தில் நாஞ்சில் நாடு புத்தனாறு என்ற ஆறு ஓடுகிறது.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி அருகே உள்ள கொட்டாரத்தில் நாஞ்சில் நாடு புத்தனாறு என்ற ஆறு ஓடுகிறது. பேச்சிப்பாறை அணையில் இருந்து இந்த ஆறு வழியாக கடைவரம்பு பகுதிகளுக்கு விவசாய பாசனத்துக்காக தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.

    தற்போது மாவட்டம் முழுவதும் பரவலாக நல்ல மழை பெய்து வருவதால் இந்த ஆற்றில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து கரைபுரண்டு ஓடுகிறது. இதற்கிடையில் கொட்டாரம் பேரூராட்சி அலுவலகம் எதிரே செல்லும் இந்த ஆற்றில் மீன் பிடிப்பதற்காக சிலர் மீன்வலைகளை தண்ணீரில் போட்டு வைத்துள்ளனர்.

    இந்த வலையில் நேற்று ராட்சதமலைப்பாம்பு ஒன்று சிக்கி கொண்டது. இதை அந்த பகுதி வழியாக சென்ற பொதுமக்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்து அலறி ஓட்டம் பிடித்தனர். இது பற்றி கொட்டாரம் பேரூராட்சி வார்டு கவுன்சிலர் செல்வன் வனத்துறைக்கு தகவல் கொடுத்தார். அதன் பேரில் மருந்துவாழ் மலை வேட்டை தடுப்பு காவலர் பிரவீன் தலைமையில் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அவர்கள் ஆற்றில் இறங்கி மீனுக்கு விரித்த வலையில் சிக்கிய ராட்சதமலைப்பாம்பை லாவகமாக பிடித்தனர். அந்தப் பாம்பு சுமார் 5 அடி நீளம் கொண்டதாக இருந்தது. அந்த ராட்சதமலைப்பாம்பை வனத்துறையினர் பாதுகாப்பாக காட்டு பகுதியில் பத்திரமாக கொண்டு விட்டனர்.

    • நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள மொஞ்சனூர் பகுதியைச் சேர்ந்தவர் தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்தார்.
    • 15 அடி நீளம் கொண்ட மலைப்பாம்பு ஒன்று மெதுவாக ஊர்ந்து சென்றதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    ராசிபுரம்:

    நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள மொஞ்சனூர் பகுதியைச் சேர்ந்தவர் லோகநாதன். விவசாயி. அவர் நேற்று தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்தார். அந்த சமயத்தில் 15 அடி நீளம் கொண்ட மலைப்பாம்பு ஒன்று மெதுவாக ஊர்ந்து சென்றதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது பற்றி ராசிபுரம் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தார். ராசிபுரம் வனத்துறையினர் விரைந்து சென்று 2 மணி நேரத்திற்கு மேலாக போராடி மலைப் பாம்பை உயிருடன் பிடித்தனர். பிறகு அருகில் உள்ள அடர்ந்த வனப்பகுதி யான காப்பு காட்டில் உயிருடன் விட்டனர்.

    • பொன்னமராவதியில் குடியிருப்புக்குள் புகுந்த மலைப்பாம்பு கோழியை விழுங்கியது
    • தீயணைப்புதுறையினர் மலைப் பாம்பை வனகாப்பு பகுதியில் விட்டனர்.

    பொன்னமராவதி:

    பொன்னமராவதி அருகே உள்ள தூத்தூர் கிராமத்தில் பொதுமக்கள் வசித்து வரும் குடியிருப்பு பகுதியில் சிவாஜிகணேசன் என்பவரது வீட்டின் அருகே மலை பாம்பு ஒன்று அப்பகுதியில் மேய்ந்து கொண்டிருந்த கோழியை முழுங்கி கொண்டிருந்தது. இதனை கண்ட பொதுமக்கள் குடியிருப்பு பகுதிக்குள் மலைப்பாம்பு புகுந்தது குறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். நிலைய அலுவலர் சந்தானம் தலைமையில் தீயணைப்பு மற்றும் மீட்பு படை வீரர்கள் தூத்தூர் கிராமத்திற்கு சென்று கோழியை முழுங்கி அப்பகுதி மக்களை அச்சுறுத்திய பத்தடி நீளம் கொண்ட மலைப்பாம்பை பிடித்தனர் . பின்னர் அந்த மலைப் பாம்பை வனகாப்பு பகுதியில் விட்டனர்.





    • வனத்துறையினர் பாம்புபிடி வீரர் காஜாமைதீனுடன் சம்பவ இடத்திற்கு சென்றனர்.
    • மலைப்பாம்பு வனத்துறையினரின் அறிவுறுத்தலின் பேரில் காப்புக்காடு பகுதியில் விடப்பட்டது.

    மேட்டுப்பாளையம்,

    மேட்டுப்பாளையம் அருகே உள்ள திம்மராயம்பாளையம் சுதா நகரில் ஊருக்குள் மலைப்பாம்பு புகுந்ததாக சிறுமுகை வனத்துறையினருக்கு தகவல் வந்தது.

    அதன் பேரில் வனத்துறையினர் பாம்புபிடி வீரர் காஜாமைதீனுடன் சம்பவ இடத்திற்கு சென்றனர்.

    பின்னர் ஊருக்குள் புகுந்த மலைப்பாம்பினை நீண்ட நேரம் போராடி லாவகமாக பிடித்தனர். தொடர்ந்து சிறுமுகை வனத்துறையினர் அறிவுறுத்தலின் பேரில் சிறுமுகையை ஒட்டியுள்ள அடர் வனப்பகுதியில் மலைப்பாம்பு விடப்பட்டது.

    இதுகுறித்து பாம்பு பிடி வீரர் காஜாமைதீன் கூறுகையில் திம்மராயம்பாளையம் பகுதி வனப்பகுதியையொட்டி அமைந்திருப்பதால் அடிக்கடி மான், பாம்பு உள்ளிட்ட வனவிலங்குகள் ஊருக்குள் புகுந்து விடுகின்றன. தற்போது கோடைக்காலம் என்பதால் வனப்பகுதியில் கடும் வறட்சி நிலவி வருகிறது.

    இதன் காரணமாகவே வன விலங்குகள் ஊருக்குள் படையெடுக்க தொடங்கி உள்ளன.

    தற்போது பிடிப்பட்டுள்ள மலைப்பாம்பு 8 அடி நீளம் கொண்டது.சுமார் 10 கிலோ எடையுள்ள மலைப்பாம்பு சிறுமுகை வனத்துறையினரின் அறிவுறுத்தலின் பேரில் காப்புக்காடு பகுதியில் விடப்பட்டது.

    • ஒடுகத்தூர் வனத்துறை பிடித்தனர்
    • காப்பு காட்டில் விட்டனர்

    அணைக்கட்டு:

    வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அடுத்த பாக்கம்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் தாமோதரராஜா இவருக்கு செந்தமாக மாந்தோப்பு உள்ளது.

    வழக்கம்போல இவர் மாந்தோப்பில் மாங்காய்களை பறிப்பதற்காக நேற்று மாலை மாந்தோப்பிற்கு சென்றுள்ளார்.

    அப்போது சுமார் 8 அடி நீளமுடைய மலைப்பாம்பு ஊர்ந்து கொண்டு மா மரத்தின் அடியில் இருந்துள்ளது. இதனை பார்த்த தாமோதரன் அலறி அடித்து ஓடி உள்ளார்.

    சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் அருகே இருக்கும் ஒடுகத்தூர் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

    வனத்துறையினர் வருவதற்குள் மலைப்பாம்பு மாமரத்தில் ஏறியது.

    பின்னர் வந்த ஒடுகத்தூர் வனத்துறை 40 கிலோ எடை கொண்ட மலைப்பாம்பை பிடித்து அருகே உள்ள சானாங்குப்பம் காப்பு காட்டில் பத்திரமாக விட்டனர்.

    • வயலில் கிடந்த மலைப்பாம்பு பிடிப்பட்டது
    • வனத்துறையினர் மலைப்பாம்பை காட்டுப்பகுதியில் கொண்டு விட்டனர்.

    புதுக்கோட்டை:

    திருமயம் அருகே மாவூர் கிராமத்தில் அறிவழகன் என்பவரின் வயலில் நேற்று காலை தொழிலாளர்கள் மூலம் களை எடுத்து கொண்டிருந்தனர். அப்போது வயலுக்குள் மலைப்பாம்பு ஒன்று கிடந்தது. இதைப்பார்த்த அவர்கள் சத்தம் போட்டு உள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த திருமயம் தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து வந்து மலைப்பாம்பை பிடித்து வனத்துறையினரிடம் கொடுத்தனர். பின்னர் அவர்கள் அந்த மலைப்பாம்பை காட்டுப்பகுதியில் கொண்டு விட்டனர்.

    • குடியிருப்பு பகுதியில் மலைப்பாம்பு புகுந்தது
    • வனத்துறையினர் நார்த்தாமலை காப்புகாட்டில் மலைப்பாம்பை விட்டனர்.

    புதுக்கோட்டை,

    புதுக்கோட்டை அன்னவாசல் அருகே மேலூரை சேர்ந்தவர் மனோகரன். இவரது குடியிருப்பு பகுதியில் மலைப்பாம்பு புகுந்து அச்சுறுத்துவதாக சிப்காட் தீயணைப்பு நிலையத்திற்கு அவர் தகவல் தெரிவித்தார். தகவலின் பேரில் சிப்காட் தீயணைப்பு நிலைய அலுவலர் அப்துல்ரகுமான் தலைமையில், தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மலைப்பாம்பை லாவகமாக உயிருடன் பிடித்து சாக்கு பையில் அடைத்தனர். பின்னர் பிடிபட்ட மலைப்பாம்பை தீயணைப்புதுறையினர் வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். பின்னர் வனத்துறையினர் நார்த்தாமலை காப்புகாட்டில் மலைப்பாம்பை விட்டனர்.


    • வனத்துறையினர் விரைந்து வந்து 15 அடி நீளம் உள்ள மலைப்பாம்பை உயிருடன் பிடித்தனர்.
    • பிடிக்கபட்ட மலைப்பாம்பை அடர்ந்த வனப்பகுதியில் கொண்டு சென்று விட்டனர்.

    பென்னாகரம்,

    தருமபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டம் வட்டுவனஅள்ளி ஊராட்சி யில் கடைக்காரசி கொட்டாய் கிராமம் அமைந்துள்ளது. இப்பகுதியை சுற்றிலும் வனப்பகுதி சூழ்ந்து காணப்படுகிறது.

    இந்நிலையில் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய 15 அடி நீளம் உள்ள மலைப்பாம்பு ஒன்று கடைக்காரசி கொட்டாய் கிராமத்தில் உள்ள குடியிருப்பு பகுதியில் ஊர்ந்து சென்று கொண்டிருந்தது.

    இதனை கண்ட கிராம மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடி யாக இது குறித்து வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர்.

    அதன் பேரில் வனத்துறையினர் விரைந்து வந்து 15 அடி நீளம் உள்ள மலைப்பாம்பை உயிருடன் பிடித்தனர்.

    பின்னர் பிடிக்கபட்ட மலைப்பாம்பை அடர்ந்த வனப்பகுதியில் கொண்டு சென்று விட்டனர். இதனால் இக்கிராமத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    • பெரிய அளவிலான மலைப்பாம்பை கண்ட விவசாயிகள் அச்சம் அடைந்தனர்.
    • பாம்புகள் அடிக்கடி குளங்களுக்கு வருவதாகவும் இதனால் காலையில் வயல் பணிக்கு செல்வது ஆபத்தாக உள்ளது என்றும் விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

    நாகர்கோவில்:

    கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் அருகே உள்ள பதினெட்டாம் படி பகுதியில் நெல் வயல்கள் மற்றும் பாசன குளங்கள் உள்ளன. இங்கு முதல் பருவ நெல் சாகுபடி பணிகளை விவசாயிகள் தொடங்கி உள்ளனர்.

    அவர்கள் அதிகாலையிலேயே வயல்களுக்கு சென்று பணி செய்து வருகின்றனர். அதன்படி இன்று அதிகாலை வயல் பணிகளுக்குச் சென்ற அவர்கள், பதினெட்டாம்படி அருகே சென்றபோது, சாலையின் குறுக்கே ஏதோ ஊர்ந்து செல்வதை பார்த்தனர். அருகில் சென்று பார்த்தபோது, அது மலைப்பாம்பு என தெரியவர அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    பெரிய அளவிலான மலைப்பாம்பை கண்ட விவசாயிகள் அச்சம் அடைந்தனர். மேலும் சிலர் அங்கு வந்ததும் மலைப்பாம்பை பிடிக்க முயன்றனர். ஆனால் அதற்குள் அந்த பாம்பு வேறு எங்கோ சென்று பதுங்கி விட்டது.

    அந்த பகுதியில் உள்ள குளங்களில் மீன் பிடிப்பவர்கள் வலை விரித்துள்ளதால், அருகில் உள்ள மலைகளில் இருந்து பாம்புகள் அடிக்கடி குளங்களுக்கு வருவதாகவும் இதனால் காலையில் வயல் பணிக்கு செல்வது ஆபத்தாக உள்ளது என்றும் விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

    • தீயணைப்பு துறையினர் மீட்டனர்
    • காட்டில் பத்திரமாக விட்டனர்

    ஜோலார்பேட்டை:

    கிருஷ்ணகிரியைச் சேர்ந்தவர் இக்பால். இவருக்கு சொந்தமான மாந்தோப்பு திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி அடுத்த பையனப்பள்ளி பகுதியில் உள்ளது.

    இந்த மாந்தோப்பில் நேற்று தொழிலாளர்கள் கிழே விழந்து இருந்த மாங்காய்களை சேகரித்து கொண்டு இருந்தனர். அப்போது திடீரென மலைப்பாம்பு இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    அதன் பிறகு மாந்தோப்பில் வேலை செய்து கொண்டு இருந்த தொழிலாளர்கள் உடனடியாக நாட்டறம்பள்ளி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

    அதன் பேரில் நாட்டறம்பள்ளி தீயணைப்பு நிலைய அலுவலர் (பொறுப்பு) ரமேஷ் தலைமையிலான தீயணைப்பு படை வீரர்கள் சம்பவம் இடத்திற்கு விரைந்து சென்றனர். சுமார் 1 மணி நேரம் போராடி 12 அடி நீளமுள்ள மலைப்பாம்பை பிடித்து திருப்பத்தூர் வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

    அதன் பிறகு வனத்துறையினர் அருகில் உள்ள காட்டில் பத்திரமாக மலை பாம்பை விட்டனர்.

    ×