search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 209780"

    • கரூர் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் ரூ.71.55 லட்சத்திற்கு வேளாண் பொருட்கள் ஏலம் நடைபெற்றது
    • இந்த வாரம் நடந்த ஏலத்தில் 19 ஆயிரத்து 852 தேங்காய் விற்பனைக்கு வந்தது.

    கரூர்,

    கரூர் அருகே சாலைப்புதூர் வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு வாரந்தோறும் கரூர் ஒன்றியம் க.பரமத்தி ஒன்றிய பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் தாங்கள் விளைவித்த வேளாண் பொருட்களை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். இந்த வாரம் நடந்த ஏலத்தில் 19 ஆயிரத்து 852 தேங்காய் விற்பனைக்கு வந்தது. இதில் கிலோ ஒன்றுக்கு அதிகபட்சமாக ரூ.25.05-க்கும், குறைந்தபட்சமாக ரூ.19.19-க்கும் சராசரியாக ரூ.23.51 என மொத்தம் ஒரு லட்சத்து 54 ஆயிரத்து 965 ரூபாய்க்கு விற்பனையானது.தேங்காய் பருப்பு முதல் தரம் கிலோ அதிகபட்சமாக ரூ.83.06-க்கும், குறைந்தபட்சமாக ரூ.74.30-க்கும், சராசரியாக ரூ.82.69-க்கும் விற்பனையானது.

    2ம் தரம் தேங்காய் பருப்பு அதிக பட்சமாக கிலோ ரூ.77.86-க்கும், குறைந்தபட்சமாக ரூ.58.39-க்கும், சராசரியாக ரூ.73.16 என மொத்தம் 13 லட்சத்து 57 ஆயிரத்து 532 ரூபாய்க்கு விற்பனையானது.தொடர்ந்து 518 மூட்டை எள் விற்பனைக்கு வந்தது. இதில் சிவப்பு எள் கிலோ அதிகபட்சமாக ரூ.157.59-க்கும், குறைந்தபட்சமாக ரூ.139.99-க்கும், சராசரியாக ரூ.155-க்கு விற்பனையானது. வெள்ளை எள் கிலோ அதிகபட்சமாக ரூ.158.99-க்கும் குறைந்தபட்சமாக ரூ.158.99-க்கும், சராசரியாக ரூ.158.99 என மொத்தம் 56 லட்சத்து 42 ஆயிரத்து, 684 ரூபாய்க்கு விற்பனையானது. வேளாண் பொருட்கள் மொத்தம் 71 லட்சத்து 55 ஆயிரத்து 181 ரூபாய்க்கு விற்பனையானது.

    • 49 மூட்டைகளில் தேங்காய் பருப்பை விற்பனைக்குக் கொண்டு வந்திருந்தனா்.
    • தேங்காய் பருப்பு அதிகபட்சமாக கிலோ ரூ.86க்கும், குறைந்தபட்சமாக ரூ.62க்கும் ஏலம் போனது.

    காங்கயம் :

    காங்கயம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.1.86 லட்சத்துக்கு தேங்காய் பருப்புகள் ஏலம் திங்கள்கிழமை நடைபெற்றது. இந்த வார ஏலத்துக்கு, காங்கயம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த 4 விவசாயிகள் 49 மூட்டைகளில் (2445 கிலோ) தேங்காய் பருப்பை (கொப்பரை) விற்பனைக்குக் கொண்டு வந்திருந்தனா். இதில் தேங்காய் பருப்பு அதிகபட்சமாக கிலோ ரூ.86க்கும், குறைந்தபட்சமாக ரூ.62க்கும், சராசரியாக ரூ.80க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ.1.86 லட்சத்துக்கு விற்பனை நடைபெற்றது. ஏலத்துக்கான ஏற்பாடுகளை விற்பனைக் கூட கண்காணிப்பாளா் செ.ராமன் செய்திருந்தாா்.

    சேவூா் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் ரூ. 9 லட்சத்துக்கு நிலக்கடலை ஏலம் திங்கள்கிழமை நடைபெற்றது. இந்த வார ஏலத்துக்கு 325 நிலக்கடலை மூட்டைகள் வரத்து இருந்தது. இதில், முதல் ரக நிலக்கடலை குவிண்டால் ரூ.7,300 முதல் ரூ.7,500 வரையிலும், இரண்டாம் ரக நிலக்கடலை ரூ.6,500 முதல் ரூ.7,000 வரையிலும், மூன்றாம் ரக நிலக்கடலை ரூ.6,300 முதல் ரூ.6,500 வரையிலும் ஏலம் போனது. மொத்தம் ரூ.9 லட்சத்துக்கு வா்த்தகம் நடைபெற்றது.

    • சோழவந்தான் பேரூராட்சிக்கு உட்பட்ட பஸ் நிலைய கடைகள் ஏலம் விடப்பட்டது.
    • செயல் அலுவலர் சகாய அந்தோணி யூஜின் தலைமையில் அலுவலக வளாகத்தில் நடந்தது.

    சோழவந்தான்

    சோழவந்தான் பேரூராட்சிக்குட்பட்ட பஸ் நிலைய கடைகள் ஏலம் செயல் அலுவலர் சகாய அந்தோணி யூஜின் தலைமையில் அலுவலக வளாகத்தில் நடந்தது. கடந்த ஆண்டு கட்டி முடிக்கப்பட்டு திறக்கப்படாத 23 கடைகளில் 11 கடைகள் மற்றும் உணவகம், கட்டண கழிப்பிடம் உள்ளிட்டவைகள் வைப்பு தொகையுடன் மாத வாடகைக்கு ஏலம் விடப்பட்டது.

    இதில் பேரூராட்சி தலைவர் ஜெயராமன், துணை தலைவர் கண்ணன், இளநிலை உதவியாளர் கண்ணம்மாள், துப்புரவு ஆய்யாளர் முருகானந்தம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கீழ்தளத்தில் உள்ள எண்.3 மற்றும் எண்.9 கடைகளுக்கு யாரும் வைப்பு தொகை கட்டவில்லை. இதனால் அந்த கடைகள் ஏலம் போகவில்லை. ஏலம்போகாத கடைகள் மறு ஏலத்தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் ஏலம் விடப்படும் என பேரூராட்சி நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

    • திருப்பூர், ஈரோடு மாவட்ட விவசாயிகள் கலந்து கொண்டு தேங்காய் பருப்பு மற்றும் சூரியகாந்தி விதை விற்பனைக்கு கொண்டு வருவார்கள்.
    • காங்கேயம், ஈரோடு பகுதியை சேர்ந்த 10வியாபாரிகள் கலந்து கொண்டு ஒரு கிலோ சூரியகாந்தி விதை அதிகபட்சமாக ரூ.50.29க்கும், குறைந்தபட்சம் ரூ.43க்கும் கொள்முதல் செய்தனர்.

    வெள்ளகோவில்:

    வெள்ளகோவில் வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வாரம்தோறும் செவ்வாயன்று தேங்காய் பருப்பு வியாழனன்று சூரியகாந்தி விதை ஏலம் நடைபெறும்.இந்த ஒழுங்கு முறை விற்பனை கூடத்திற்கு கரூர், திருச்சி, திண்டுக்கல், மதுரை. திருப்பூர், ஈரோடு மாவட்ட விவசாயிகள் கலந்து கொண்டு தேங்காய் பருப்பு மற்றும் சூரியகாந்தி விதை விற்பனைக்கு கொண்டு வருவார்கள்.

    வியாழக்கிழமை 63 விவசாயிகள் கலந்து கொண்டு 61ஆயிரத்து 241கிலோ சூரியகாந்தி விதை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். இதில் முத்தூர், வெள்ளகோவில், காங்கேயம், ஈரோடு பகுதியை சேர்ந்த 10வியாபாரிகள் கலந்து கொண்டு ஒரு கிலோ சூரியகாந்தி விதை அதிகபட்சமாக ரூ.50.29க்கும், குறைந்தபட்சம் ரூ.43க்கும் கொள்முதல் செய்தனர். மொத்தம் ரூ.28லட்சத்து 16ஆயிரத்து 479க்கு வணிகம் நடைபெற்றது.இத்தகவலை வெள்ளகோவில் ஒழுங்குமுறை விற்பனைக்கூட கண்காணிப்பாளர் சி. மகுடேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

    • கழிவு செய்யப்பட்ட அரசு வாகனம் ஏலம் விடப்பட உள்ளது.
    • விருப்பமுள்ளவர்கள் அன்றைய தினம் விலைப்புள்ளியை கோரலாம்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    ராமநாதபுரம் கால்நடை பராமரிப்புத் துறை உதவி இயக்குநர் அலுவலக வாகன எண்.TN01G0660 கழிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வாகனத்தை வருகிற 19-ந் தேதி காலை 11 மணியளவில் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள கருவூல கட்டிட வளாகத்தில் பொது ஏலம் விடப்பட உள்ளது. டேவனித் தொகை ரூ.3 ஆயிரம் செலுத்திய பின்பே ஏலத்தில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவார்கள். ஏலத்தை மாற்றம் செய்யவோ ரத்து செய்யவோ ஏலக்குழுத் தலைவருக்கு முழு அதிகாரம் உள்ளது. ஏலம் எடுப்பவர் ஏலம் முடிந்த உடன் முழு தொகையை அன்றே செலுத்த வேண்டும். ஏலத் தொகைக்குரிய ஜி.எஸ்.டி. 18 சதவீதம் செலுத்தப்பட வேண்டும். பொது ஏலத்தில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் அன்றைய தினம் விலைப்புள்ளியை கோரலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தேசிய வேளாண்மை சந்தைக்கு கடந்த வாரம் 8 ஆயிரத்து 155 கிலோ தேங்காய் பருப்பை விவசாயிகள் ஏலத்திற்கு கொண்டு வந்திருந்தனர்.
    • மொத்தம் ரூ.5 லட்சத்து 60 ஆயிரத்து 698-க்கு விற்பனை நடைபெற்றது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் வெங்கமேட்டில் உள்ள மின்னணு தேசிய வேளாண்மை சந்தைக்கு கடந்த வாரம் 8 ஆயிரத்து 155 கிலோ தேங்காய் பருப்பை விவசாயிகள் ஏலத்திற்கு கொண்டு வந்திருந்தனர்.

    இதில் அதிகபட்சமாக கிலோ ஒன்று ரூ.83.69-க்கும், குறைந்தபட்சமாக ரூ.58.71- க்கும், சராசரியாக ரூ.81.99-க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ.5 லட்சத்து 85 ஆயிரத்து 587-க்கு ஏலம் போனது.

    நேற்று நடைபெற்ற ஏலத்திற்கு 7 ஆயிரத்து 234 கிலோ தேங்காய் பருப்பை விவசாயிகள் கொண்டு வந்திருந்தனர். இதில் அதிகபட்சமாக கிலோ ஒன்று ரூ.88.30-க்கும், குறைந்த பட்சமாக ரூ.55.80-க்கும், சராசரியாக ரூ.82.90-க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ.5 லட்சத்து 60 ஆயிரத்து 698-க்கு விற்பனை நடைபெற்றது.

    • நான் 10 ஆயிரம் கோடி சம்பாதித்துள்ளதாக அண்ணாமலை பேசியுள்ளார்.
    • தி.மு.க.வை அசைத்து பார்க்க யாராலும் முடியாது.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மத்திய மாவட்ட, மாநகர திமுக சார்பில், காவிரி டெல்டா பகுதியில் மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட நிலக்கரி சுரங்க ஏலத்தை தடுத்து நிறுத்தி, விவசாயிகளை காப்பாற்றிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்று தெரிவிக்கும் பொதுக்கூட்டம் நேற்று தஞ்சாவூரில் நடைபெற்றது.

    கூட்டத்துக்கு வந்தவ ர்களை மாநகர செயலாளர் சண்.ராமநாதன் வரவேற்றார். மத்திய மாவட்டச் செயலாளர் துரை.சந்திரசேகரன் தலைமை வகித்தார். கூட்டத்தில் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, அரசு கொறடா கோவி.செழியன், நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.பழநிமாணிக்கம், முன்னாள் அமைச்சர் உ.மதிவாணன், டிகேஜி.நீலமேகம் எம்எல்ஏ மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் திமுக பொருளாளரும், பாராளுமன்றக் குழுத் தலைவருமான டி.ஆர்.பாலு பேசியதாவது:-

    பாதுகாக்கப்பட்ட வேளாண் பகுதியில் நிலக்கரி சுரங்கம் ஏலம் அறிவிப்பு வந்தவுடன் உடனடியாக தமிழக முதல்வர் டெல்லியில் உள்ள என்னை தொடர்பு கொண்டு விவரத்தை எடுத்துக்கூறி, துறை அமைச்சரிடம் பேசி, கடிதம் அனுப்பி அந்த ஏலத்தை நிறுத்த வைத்தோம். நான் 10 ஆயிரம் கோடி சம்பாதித்துள்ளதாக அண்ணாமலை பேசியுள்ளார்.

    என் மீது கிரிமினல் வழக்கு தொடராத காரணத்தால் அண்ணாமலை மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடருவது என முடிவு செய்துவிட்டேன்.

    வரும் 8-ம் தேதி சைதாபேட்டை நீதிமன்றத்தில் அவர் மீது கிரிமினல் வழக்கை தொடர உள்ளேன்.

    அதற்கு மேல் அண்ணாமலை மீது 100 கோடி மான நஷ்ட ஈடு கேட்டு வழக்கு தொடர உள்ளேன். சிவில் வழக்கு பின்னர் தொடரப்படும்.

    திமுக தலைவரின் பெயரையும், புகழையும் கெடுக்க ஏதோ ஒரு சதி நடக்கிறது.

    அதை நீங்கள் செய்தால் இங்குள்ள ஒவ்வொரு தொண்டனும் எதிர்கொள்ள தயாராக உள்ளோம். நாங்கள் எல்லாம் ஒன்றிணைக்கப்பட்ட சக்தி.

    திமுகவை அசைத்து பார்க்கவோ, தொட்டுப் பார்க்கவோ யாராலும் முடியாது.

    நாங்கள் எமர்ஜென்சி, மிசாவெல்லாம் பார்த்தவர்கள். அண்ணா மலையை பற்றி யாரும் பேச வேண்டாம் என்றார்.

    கூட்டத்தில் மாவட்ட பொருளாளர் எல் ஜி அண்ணா மாவட்ட ஊராட்சி குழு தலைவர் உஷா புண்ணியமூர்த்திமாநில தீர்மானம் செயலாளர் ஒரத்தநாடு தொகுதி பார்வையாளர் அக்ரி கணேசன் தஞ்சை தொகுதி பார்வையாளர் சங்கர் திருவையாறு தொகுதி பார்வையாளர் வீர கணேசன் ஒன்றிய செயலாளர் முரசொலி செல்வகுமார் துணை மேயர் அஞ்சுகம் பூபதி மாவட்ட துணை செயலாளர் பாலாஜி கனகவல்லி மணிமாறன் பகுதி செயலாளர்கள்மேத்தா நீலகண்டன் கார்த்திக் சதாசிவம் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • மஞ்சள் ஏலம் திருச்செங்கோட்டில் நடைபெற்றது.
    • ரூ 2.கோடியே 30 லட்சத்திற்கு விற்பனை ஆனதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    திருச்செங்கோடு:

    நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் தலைமையகத்தில் மஞ்சள் ஏலம் திருச்செங்கோட்டில் நடைபெற்றது. இதில் விரலி மஞ்சள் ரகம் குவிண்டாலுக்கு ரூ.6113 முதல் ரூ.7533 வரையிலும், கிழங்கு மஞ்சள் ரகம் குவிண்டாலுக்கு ரூ.5584 முதல் ரூ.6443 வரையிலும் பனங்காளி மஞ்சள் ரகம் குவிண்டாலுக்கு ரூ.10312 முதல் ரூ.11699 வரையிலும் மொத்தம் 6000 மூட்டைகள் தொகை ரூ 2.கோடியே 30 லட்சத்திற்கு விற்பனை ஆனதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • குளங்களின் மீன்பாசி குத்தகை உரிமையை பொது ஏலத்தில் விடுவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது.
    • காலை 11 மணி அளவில் நடைபெறும் பொது ஏலத்தில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்ப தாவது:-

    தஞ்சாவூர் மாவட்ட மீன் வளர்ப்போர் மேம்பாட்டு முகமையின் கீழ் பாபநாசம் வட்டம் அம்மாபேட்டை சரகத்தில் உள்ள வலையன்குளம், அய்யனார் குளம், நரியன் குளம் ஆகிய குளங்களின் மீன்பாசி குத்தகை உரிமையை 1432-ம் பசலிக்கு பொது ஏலத்தில் விடுவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த ஏலத்தை எடுக்க விரும்புவர்கள் எண்.873/4, அறிஞர் அண்ணா சாலை, கீழவாசல், தஞ்சாவூர் என்ற முகவரியில் இயங்கும் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குனர் அலுவலகத்தை அணுகிட வேண்டும். அந்த அலுவலகத்தில் வருகிற 28-ந் தேதி காலை 11 மணி அளவில் நடைபெறும் பொது ஏலத்தில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • ஏலம் எடுக்க விருப்பம் உள்ளவர்கள் சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையங்களுக்கு சென்று அந்த வாகனங்களை பார்வையிடலாம்.
    • மே 17-ந் தேதி காலை 10 மணிக்குள் ஆதார் அடையாள அட்டையுடன் ரூ.5 ஆயிரம் முன் வைப்புத் தொகை செலுத்தி வாகனத்தை பெற்றுக்கொள்ளலாம்.

     காங்கயம்:

    காங்கயம் போலீஸ் நிலையம் சார்பில் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:-

    காங்கயம் காவல் உட்கோட்டத்திற்குப்பட்ட காங்கயம் மற்றும் வெள்ளகோவில் போலீஸ் நிலையங்களில் பல்வேறு வழக்குகளில் பதிவு செய்யப்பட்ட வாகனங்கள் போலீஸ் நிலையங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

    வழக்குகள் தொடர்பாக மொத்தம் 79 இருசக்கர வாகனங்களுக்கு யாரும் உரிமை கோரப்படாததால் அவை காங்கயம் வட்ட நிர்வாக நடுவர் மற்றும் தாசில்தாரால் வருகிற மே 17-ந் தேதி காலை 11 மணிக்கு காங்கயம் போலீஸ் நிலைய வளாகத்தில் பொது இடத்தில் ஏலம் விடப்படும் என அறிவிக்கப்படுகிறது.

    ஏலம் எடுக்க விருப்பம் உள்ளவர்கள் சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையங்களுக்கு சென்று அந்த வாகனங்களை பார்வையிடலாம். காங்கயம் போலீஸ் நிலையத்தில் 62 வாகனங்களும், வெள்ளகோவில் போலீஸ் நிலையத்தில் 17 வாகனங்களும் என மொத்தம் 79 இருசக்கர வாகனங்கள் ஏலம் விடப்பட உள்ளன. ஏலம் எடுப்பவர்கள் அடுத்த மாதம் மே 17-ந் தேதி காலை 10 மணிக்குள் ஆதார் அடையாள அட்டையுடன் ரூ.5 ஆயிரம் முன் வைப்புத் தொகை செலுத்தி வாகனத்தை பெற்றுக்கொள்ளலாம்.மேலும் விவரங்களுக்கு சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையங்களை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் வந்து கால்நடைகளை வாங்கி செல்வார்கள்.
    • ஏப்ரல் 18 முதல் அடுத்த மாதம் மே 5-ந் தேதி வரை நடைபெறும்.

    வெள்ளகோவில் :

    வெள்ளகோவில் ஒன்றியம், பச்சாபாளையம் ஊராட்சி, கண்ணபுரம் மாரியம்மன் கோவில் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு ஆண்டுதோறும் கால்நடை சந்தை நடைபெறும். இந்த கால்நடை சந்தைக்கு ஏராளமான கால்நடைகள் விற்பனைக்கு கொண்டு வருவார்கள், கால்நடை சந்தைக்கு தமிழ்நாடு மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா, பாண்டிச்சேரி, கேரளா ஆகிய மாநிலங்களில் இருந்து விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் வந்து கால்நடைகளை வாங்கி செல்வார்கள்.

    இந்த ஆண்டு 2023 ஏப்ரல் 18 முதல் அடுத்த மாதம் மே 5-ந் தேதி வரை நடைபெறும் கால்நடை சந்தை மற்றும் தற்காலிக கடைகளுக்கு சுங்கம் வசூலிக்கும் உரிமம் ரூ. 79 ஆயிரத்து 700 க்கு ஏலம் விடப்பட்டது.

    • திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் பொது ஏலம் மூலம் விற்பனை செய்யப்பட உள்ளது.
    • விண்ணப்பத்தினை 2.5.2023 அன்று மாலை 5மணிக்குள் ஒப்படைக்க வேண்டும்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்டத்தில் இயங்கி வந்த சிவா ஈமு பார்ம்ஸ் என்றநிறுவனத்திற்கு பாத்தியப்பட்ட திருப்பூர் தெற்கு வட்டம்,நாச்சிபாளையம் கிராமத்தில் உள்ள நிலம் அதில் 494 சதுர மீட்டர் பரப்பளவுள்ள கட்டடம்,203.32 சதுர மீட்டர் பரப்பளவுள்ள சிமெண்ட் சீட் கட்டிடம் மற்றும் 5 ஆழ்துழாய்கிணறுகள் தமிழ்நாடு முதலீட்டாளர்கள் நலன் பாதுகாப்புச் சட்டம் 1997-ன் கீழ்தகுதி பெற்ற அலுவலர் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலரால் 4.5.2023அன்று முற்பகல் 11.30 மணிக்கு திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலக 2-ம் தளத்தில் உள்ள கூட்ட அரங்கில் (அறை எண்.240) பொது ஏலம் மூலம் விற்பனை செய்யப்படஉள்ளது.

    மேற்கண்ட சொத்துக்களை பொது ஏலத்தில் எடுக்க விரும்புவோர், ஏலநிபந்தனைகள் தொடர்பான விபரங்களை திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம், சார்ஆட்சியர் அலுவலகம், தாராபுரம் மற்றும் உடுமலைப்பேட்டை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகங்கள் மற்றும் அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களிலும் பெற்றுக்கொள்ளலாம். இவ்விபரங்கள் அந்தந்த அலுவலக விளம்பர பலகையிலும் ஒட்டப்பட்டுள்ளது.

    ஏல நிபந்தனைகளுக்கு உட்பட்டு ஏலத்தில் விருப்பம்உள்ளவர்கள் கலந்து கொள்ளவும் , நிறுவனத்திற்கு சொந்தமான மேற்படிஅசையா சொத்தினை நிலையில் உள்ள விதத்தில் உள்ளவாறே ஏலம் விடப்படும் எனவும்தெரிவிக்கப்படுகிறது. மேலும், ஏலத்தில் கலந்து கொள்வது தொடர்பாக உரிய படிவ விண்ணப்பத்தினை 2.5.2023 அன்று மாலை 5மணிக்குள் தகுதி பெற்ற அலுவலர் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும் என திருப்பூர் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய்பீம் தெரிவித்துள்ளார்.  

    ×