search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 209843"

    • ஆ.ராசா எம்.பி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
    • கவுரி உள்பட பழங்குடியின சங்க தலைவர்கள் கலந்து கொண்டனர்.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டத்தில் வன உரிமை பாதுகாப்புச் சட்டம் குறித்து ஆ.ராசா எம்.பி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு நீலகிரி மாவட்ட தி.மு.க செயலாளர் பா.மு.முபாரக் முன்னிலை வகித்தார். மேலும் மாவட்ட ஊராட்சி தலைவர் பொன்தோஸ், மாவட்ட துணை செயலாளர் ரவிகுமார், மாவட்ட பொருளாளர் நாசர் அலி, தலைமை செயற்குழு உறுப்பினர் முஸ்தபா, கூடலூர் ஒன்றிய செயலாளர் லியாகத் அலி, நகரமன்ற தலைவர்கள் வாணீஸ்வரி, சிவகாமி, கூடலூர் ஊராட்சி ஒன்றிய தலைவர் கீர்த்தனா, பேரூராட்சி தலைவர்கள் வள்ளி, கவுரி உள்பட பழங்குடியின சங்க தலைவர்கள் கலந்து கொண்டனர்.

    • முகாமில் 600 கால்நடைகளுக்கு கோமாரி நோய்க்கு எதிரான தடுப்பூசி போடப்பட்டது.
    • நோய்களிருந்து கால்நடைகளை எப்படி பாதுகாப்பது? குறித்து ஆலோசனை வழங்கப்பட்டது.

    முத்துப்பேட்டை:

    முத்துப்பேட்டை அடுத்த எடையூர் கிராமத்தில் கால்நடை துறை சார்பில் கோமாரி நோய் தடுப்பூசி 3-வது கட்ட முகாம் நடைபெற்றது.

    ஊராட்சி மன்ற தலைவர் ராதிகா கணேஷ்குமார் தலைமை தாங்கி முகாமை தொடங்கி வைத்தார்.

    இதில் கால்நடை டாக்டர்கள் மகேந்திரன் தலைமையில் மருத்துவ குழுவினர்கள் டாக்டர்கள் ராஜசேகர், ராஜேஷ் குமார், கால்நடை ஆய்வாளர் நிர்மலா, கால்நடை பராமரிப்பு உதவி ஆய்வாளர்கள் பிரசன்னா, மாதவன், மகாலட்சுமி, வீரமணி சண்முகம் ஆகியோர் அடங்கிய குழுவினர் கலந்து கொண்டனர்.

    முகாமில் 600 கால்நடைகளுக்கு கோமாரி நோய்க்கு எதிரான தடுப்பூசி போடப்பட்டது.

    மேலும் நோய்களிருந்து கால்நடைகளை எப்படி பாதுகாப்பது? குறித்து பொதுமக்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது.

    இதில் மக்கள் பிரதிநிதிகள், கிராம முக்கிய பிரமுகர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • சிறப்பு மருத்துவ முகாம்கள் தஞ்சாவூர், கும்பகோணம் மற்றும் பட்டுக்கோட்டை ஆகிய இடங்களில் நடத்த திட்டம்.
    • மறுவாழ்வு குறித்த ஆலோசனைகள் தகுந்த ஆலோசகர்களால் வழங்கப்பட உள்ளது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது :-

    தஞ்சாவூர் மாவட்டத்தில் முதுகுத் தண்டுவடம் காயமடைந்தவர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம்கள் தஞ்சாவூர், கும்பகோணம் மற்றும் பட்டுக்கோட்டை ஆகிய இடங்களில் மூன்று கட்டமாக நடத்தப்பட திட்டமிடப்பட்டுள்ளது.

    அதன்படி முதல் கட்டமாக தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஏ பிளாக் தரைத்தளத்தில் நாளை (வியாழக்கிழமை)

    காலை 9 மணி முதல் நடைபெற உள்ளது. இந்த சிறப்பு மருத்துவ முகாமில் எலும்பு முறிவு சிகிச்சை, மூளை நரம்பியல் மருத்துவம் மற்றும் மூளை நரம்பியல் அறுவை சிகிச்சை ஆகியவற்றிற்கு சிறப்பு நிபுணர்கள் சிகிச்சை அளிக்க உள்ளார்கள். மறுவாழ்வு குறித்த ஆலோசனைகள் தகுந்த ஆலோசகர்களால் வழங்கப்பட உள்ளது. இந்த வாய்ப்பினை முதுகுத் தண்டுவடம் காயமடைந்தவர்கள் அனைவரும் பயன்படுத்திக் கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • மதுரையில் மார்ச் 5,6-ந்தேதிகளில் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்கிறார்.
    • 5 மாவட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார்.

    மதுரை

    தமிழக அரசு சமீபத்தில் 'கள ஆய்வில் முதல்-அமைச்சர்' என்ற திட்டத்தை அறிவித்துள்ளது. அதன்படி ஒவ்வொரு மாவட்டத்திலும் பயனடைந்தோர் விவரம், மாநில அளவில் சேகரிக்கப்பட்டு வருகிறது.

    இதைத்தொடர்ந்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து மேற்கண்ட திட்ட பணிகள் தொடர்பாக மண்டல அளவில் ஆய்வு கூட்டங்களை நடத்தி வருகிறார். அவர் கடந்த 1, 2-ந்தேதிகளில் வேலூருக்கு சென்றார். அப்போது அந்த மண்டலத்துக்கு உட்பட்ட மாவட்ட கலெக்டர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

    இதனைத்தொடர்ந்து மு.க.ஸ்டாலின் கடந்த 15, 16-ம் தேதிகளில் சேலத்துக்குச் சென்றார். அங்கு மண்டல அளவிலான உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்தினார்.

    இந்தநிலையில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிற 5, 6-ந் தேதிகளில் மதுரை மாவட்டத்தில் 'கள ஆய்வில் முதல்-அமைச்சர்' திட்டத்தின் கீழ் பயன்பெற்றோர் உள்ளிட்ட விவரங்கள் தொடர்பாக மண்டல அளவில் மாவட்ட கலெக்டர்களுடன் ஆலோசனை கூட்டம் நடத்துகிறார்.

    அப்போது மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம், தேனி ஆகிய 5 மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் மக்கள் நலப்பணித் திட்டங்கள் குறித்தும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொள்கிறார். இதில் 5 மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள் மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொள்கின்றனர்.

    • 4 ஏ.டி.எம்.களை உடைத்து பணம் கொள்ளையடிக்கப்பட்டது. மீண்டும் இதுபோன்ற கொள்ளைச் சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து, சேலம் மாவட்டம் ஏற்காட்டில் உள்ள பல்வேறு வங்கிகளின் பிரதிநிதிகளுடன் போலீசார் ஆலோசனை கூட்டம் நடத்தினர்.
    • கூட்டத்திற்கு ஏற்காடு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சபாபதி தலைமை வகித்தார். இதில், 10 வங்களின் பொது மேலாளர்கள் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    ஏற்காடு:

    திருவண்ணாமலை மாவட்டத்தில் 4 ஏ.டி.எம்.களை உடைத்து பணம் கொள்ளையடிக்கப்பட்டது. மீண்டும் இதுபோன்ற கொள்ளைச் சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    இதையடுத்து, சேலம் மாவட்டம் ஏற்காட்டில் உள்ள பல்வேறு வங்கிகளின் பிரதிநிதிகளுடன் போலீசார் ஆலோசனை கூட்டம் நடத்தினர். கூட்டத்திற்கு ஏற்காடு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சபாபதி தலைமை வகித்தார். இதில், 10 வங்களின் பொது மேலாளர்கள் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    இதில், வங்கி, ஏ.டி.எம் மையங்களில் உள்ள பணத்தைக் கண்காணிக்க, மறைமுக காமிராக்களை நிறுவ வேண்டும். முகத்தை அடையாளம் காண உதவும் மென்பொருள் அடங்கிய காமிராக்களை அனைத்து ஏ.டி.எம்.களிலும் பொருத்த வேண்டும். ஏ.டி.எம்.களை உடைக்கப்படும்போது எச்சரிக்கை மணி வங்கியில் மட்டுமின்றி, அருகில் உள்ள போலீஸ் நிலையங்களிலும் ஒலிக்கும் வகையில் ஏற்பாடு செய்ய வேண்டும் என பல்வேறு அறிவுரைகள் வழங்கப்பட்டது. அவற்றை உடனடியாக செயல்படுத்துமாறும் அறிவுறுத்தப்பட்டது.

    இக்கூட்டத்தில் உதவி ஆய்வாளர்கள் ஆனந்தன், குணசேகரன், பரந்தாமன் மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.

    • மயிலாடுதுறை குத்தாலத்தில் மத்திய அரசு பணி போட்டி தேர்வுகளான பயிற்சி மாணவர்களுக்கு அளிக்கப்பட்டது.
    • மாணவர்கள் கலந்து கொண்டு தேர்வு தொடர்பான சந்தேகங்கள் குறித்து கேட்டறிந்தனர்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் பேரூராட்சி அலுவலகத்தில் வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் சார்பில் மத்திய அரசின் 11 ஆயிரத்து 409 பணியிடங்களுக்கான தமிழ் வழி போட்டி தேர்வுக்கான ஆலோசனை மற்றும் பயிற்சி நடந்தது.

    நிகழ்ச்சிக்கு பேரூராட்சி மன்ற தலைவர் சங்கீதா மாரியப்பன் தலைமை தாங்கினார்.

    இதில் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலர் பழனிவேல் கலந்து கொண்டு தேர்வு தொடர்பான ஆலோசனைகளை வழங்கினார்.

    இதில் பல்வேறு கிராமங்களை சேர்ந்த மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு தேர்வு தொடர்பான சந்தேகங்கள் மற்றும் விண்ணப்பிக்கும் முறைகள் குறித்து கேட்டறிந்தனர்.

    இதற்கான ஏற்பாடுகளை குத்தாலம் பேரூராட்சி செயல் அலுவலர் ரஞ்சித் செய்திருந்தார். முடிவில் பேரூராட்சி இளநிலை உதவியாளர் சுந்தர் நன்றி கூறினார்.

    • கடந்த 31-ந் தேதி பரமத்தி வேலூர் தாலுகா, கபிலர்மலை பகுதியில் உள்ள இருக்கூர் கிராமத்திற்குட்பட்ட செஞ்சுடையாம்பாளையம் கிராமத்தில் சிறுத்தை புலி நடமாட்டம் இருக்கிறது என தகவல் பெறப்பட்டது. மேலும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் கால்நடைகள் மற்றும் செல்லப் பிரணிகளான நாய் போன்றவைகளை சிறுத்தை புலி தாக்கி கொன்றது. இந்த தகவல் அறிந்து மாவட்ட கலெக்டர் உட்பட வனத்துறை அதிகாரிகள் அந்த பகுதியில் ஆய்வு செய்தார்கள்.
    • சமூக வலைத்தளங்களில் உண்மைக்கு புறம்பான தவறான தகவல்களை பதிவிடும் நபர்கள் குறித்து விவரங்கள் சேகரிக்கப்பட்டு, அவர்கள் மீது கடுமையான நடிவடிக்கைகள் எடுக்கப்படும். இவ்வாறு அமைச்சர் மதிவேந்தன் தெரிவித்தார்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா கபிலர்மலை வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் இருக்கூர் பகுதியில் கால்நடைகளை கொன்று குவிக்கும் சிறுத்தை புலியை பிடிப்பதற்கு வனத்துறை மூலம் எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் தொடர்பாக வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

    மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா சிங், பரமத்தி வேலூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் என்ஜினீயர் சேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    பின்னர் வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

    கடந்த 31-ந் தேதி பரமத்தி வேலூர் தாலுகா, கபிலர்மலை பகுதியில் உள்ள இருக்கூர் கிராமத்திற்குட்பட்ட செஞ்சுடையாம்பாளையம் கிராமத்தில் சிறுத்தை புலி நடமாட்டம் இருக்கிறது என தகவல் பெறப்பட்டது. மேலும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் கால்நடைகள் மற்றும் செல்லப் பிரணிகளான நாய் போன்றவைகளை சிறுத்தை புலி தாக்கி கொன்றது.

    இந்த தகவல் அறிந்து மாவட்ட கலெக்டர் உட்பட வனத்துறை அதிகாரிகள் அந்த பகுதியில் ஆய்வு செய்தார்கள். அதன் தொடர்ச்சியாக கடந்த பிப்ரவரி 5-ந் தேதி இருக்கூர்

    கிராமத்தில் நேரடியாக ஆய்வு செய்தேன். வனத்துறை சார்பில் சிறுத்தை புலியை பிடிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

    அதன்படி சிறுத்தை புலியை பிடிப்பதற்கு, 2 கூண்டுகள் மற்றும் 4 விலங்குகள் கண்கா ணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. ட்ரோன் கேமரா மூலமாக சிறுத்தை புலி நடமாட்டம் கண்காணிக்கப்பட்டு வருகிறது. இச்சிறுத்தை புலியை தேடும் பணியில் 42 வனத்துறை அலுவலர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தொடர்ந்து சிறுத்தை புலியை பிடிக்கும் பணியில் நுட்பம் தெரிந்த விலங்குகளை கண்காணிக்கும் 3 மலைவாழ் கண்காணிப்பாளர்கள் வந்துள்ளனர்.

    இது மட்டுமின்றி வன உயரடுக்கு படையை சேர்ந்த 4 நபர்கள், கோயம்புத்தூர் மற்றும் வைகை அணை பகுதியிலிருந்து சிறுத்தை புலியை பிடிப்பதற்கு நவீன தொழில் நுட்ப கருவிக ளுடன் வந்து உள்ளனர். 2 வனத்துறை கால்நடை மருத்துவர்களும் சிறுத்தை புலியை பிடிப்பதற்கான பணியில் பல்வேறு ஆலோசனைகள் வழங்கி வருகிறார்கள்.

    சிறுத்தை புலியை பிடிப்ப தற்கு வனத்துறை சார்பில் அனைத்து முயற்சியும் எடுக்கப்பட்டு வருகிறது. பாதச்சுவடு மூலம் சிறுத்தை புலியின் நடமாட்டம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அந்த இடங்களில் கூடுதலாக கண்காணிப்பு கேமராக்கள் வைப்பதற்கும், கூண்டுகளை அதிகப்படுத்துவதற்கும் வனத்துறை சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    மேலும் பொதுமக்களுக்கு தொடர்ந்து சிறுத்தை புலி நடமாடும் இடங்களில் எவ்வாறு பாதுகாப்பாக இருப்பது என்பது குறித்த

    வழிமுறைகள் வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை பொது மக்களுக்கு எந்த ஆபத்தும் வரவில்லை. பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை. சமூக வலைத்தளங்களில் உண்மைக்கு புறம்பான தவறான தகவல்களை பதிவிடும் நபர்கள் குறித்து விவரங்கள் சேகரிக்கப்பட்டு, அவர்கள் மீது கடுமையான நடிவடிக்கைகள் எடுக்கப்படும். இவ்வாறு அமைச்சர் மதிவேந்தன் தெரிவித்தார்.

    இந்த ஆய்வு கூட்டத்தில் கபிலர் மலை யூனியன் சேர்மன் ஜே.பி.ரவி, பரமத்திவேலூர் தாசில்தார் கலைச்செல்வி, பரமத்தி ஒன்றிய செயலாளர் தனராசு, கபிலர்மலை ஒன்றிய செயலாளர் சண்முகம், பா.ஜ.க மாவட்ட துணைச் செயலாளர் பழனியப்பன், தலைமை வனப் பாதுகாப்பு அலுவலர் (திருச்சி மண்டலம்) சதீஸ், சேலம் மண்டல வனப் பாதுகாப்பு அலுவலர் பெரியசாமி, மாவட்ட வன அலுவலர் கஷ்யப் ஆர்.ஷஷாந்த், வனத்துறை கால்நடை மருத்துவர்கள் (ஓய்வு) மனோகரன், பிரகாஷ் , கபிலர்மலை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பரமசிவம், துரைசாமி உள்ளிட்ட வனத்துறை அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்பின் பிரநிதிகள் கலந்து கொண்டனர்.

    அதைத் தொடர்ந்து விரைந்து சிறுத்தை புலியை பிடிக்க கோரி, பா.ஜ.க.வினர் வனத்துறை அமைச்சர் மதிவேந்தனிடம் மனு கொடுத்தனர்.

    • குடிநீர் திட்ட பணிகள் குறித்தும் ஆய்வு
    • நாகர்கோவில் மாநகரப் பகுதியில் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகள் குறித்தும் கேட்டறிந்தார்.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்ட கலெக்டராக பி.என். ஸ்ரீதர் இன்று பதவி ஏற்றுக்கொண்டார். இதையடுத்து நாகர்கோவில் கலெக்டர்அலுவலகத்தில் அனைத்து துறை அதி காரிகளுடன் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து ஆலோசனை மேற் கொண்டார். கூட்டத்தில் கலெக்டர் பொறுப்புகளை ஒப் படைத்த அரவிந்த், நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் ஆனந்த மோகன், சப்-கலெக்டர் கவுஷிக், மாவட்ட வருவாய் அதிகாரி சிவப்பிரியா, தேசிய நெடுஞ்சாலை நிலம் எடுப்பு வருவாய் அதிகாரி ரேவதி, நாகர்கோவில் மாநகராட்சி மாநகர நல அதிகாரி ராம்குமார், என்ஜினீயர் பாலசுப்பிரமணியன், உதவி கலெக்டர் குணால் யாதவ், மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    மாவட்டத்தில் நடை பெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.நாகர்கோவில் மாநகரப் பகுதியில் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகள் குறித்தும் கலெக்டர் பி.என்.ஸ்ரீதர் கேட்டறிந்தார். குடிநீர் திட்ட பணிகள், சாலை மேம்பாட்டு பணிகள் குறித்து கேட்டறிந்தார்.

    • சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் குற்ற தடுப்பு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
    • “சேலம் மாநகரில் கடந்த 2021- ம் ஆண்டில் 24 கொலை சம்பவங்கள் நடந்தது. 2022- ல் 15 கொலை வழக்குகள் பதிவாகி உள்ளன.

    அன்னதானப்பட்டி:

    சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் குற்ற தடுப்பு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

    இதற்கு கமிஷனர் நஜ்முல் ஹோடா தலைமை தாங்கினார். அவர் பேசுகையில் "சேலம் மாநகரில் கடந்த 2021- ம் ஆண்டில் 24 கொலை சம்பவங்கள் நடந்தது. 2022- ல் 15 கொலை வழக்குகள் பதிவாகி உள்ளன. மாநகரின் அனைத்து பகுதிகளிலும் போலீசாரின் தீவிர ரோந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருவதால் குற்றச் செயல்கள் படிப்படியாக குறைந்து வருகிறது. மாநகரில் உள்ள பெரும்பாலான பகுதிகளில் சிசிடிவி கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளதால், வழக்குகள் தொடர்பான விசாரணை விரைவாக நடத்தி முடிக்க ஏதுவாக இருந்து வருகிறது.

    மேலும் கேமிராக்கள் இல்லாத பகுதிகளில் அவற்றை பொருத்த நடவ–டிக்கைகள் எடுக்கப்படும். கஞ்சா, புகையிலைப் பொருட்கள் விற்பனையை ஒழிக்க கடுமையான நடவடிக்கை–கள் எடுக்க வேண்டும். பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாமில் பெறப்பட்ட மனுக்கள் மீதான விசாரணையை சரியாக நடத்தி, அதற்கு விரைவில் தீர்வு காண வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் துணை கமிஷனர்கள் லாவண்யா, மாடசாமி, உதவி கமிஷனர்கள் சரவணன், நாகராஜன், வெங்கடேசன், அசோகன், சரவண குமரன், லட்சுமி பிரியா, ஜெயந்தி, இன்ஸ்பெக்டர்கள், அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • தனியாா் வேலை வாய்ப்பு திருவிழா பிப்ரவரி 11-ந் தேதி நடைபெறுகிறது.
    • 10 ஆயிரம் இளைஞா்களுக்கு வேலை வாய்ப்பு வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    திருப்பூர் :

    திருப்பூா் மாவட்ட நிா்வாகம், மாநகராட்சி ஆகியவை சாா்பில் தனியாா் வேலை வாய்ப்பு திருவிழா பிப்ரவரி 11 -ந் தேதி நடைபெறுகிறது.இது குறித்த ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு மாநகராட்சி மேயா் என்.தினேஷ்குமாா் தலைமை வகித்து பேசியதாவது :- தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்பேரில் மாவட்டந்தோறும் வேலை வாய்ப்புத் துறையுடன் இணைந்து வேலை வாய்ப்புத் திருவிழாக்கள் நடத்தி இளைஞா்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டு வருகின்றன.

    இதன் ஒரு பகுதியாக திருப்பூா் மாவட்ட நிா்வாகம் மற்றும் மாநகராட்சி இணைந்து நடத்தும் மாபெரும் வேலை வாய்ப்பு திருவிழா சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரியில் பிப்ரவரி 11 -ந் தேதி நடைபெறுகிறது. இந்த முகாமில், 800 நிறுவனங்கள் பங்கேற்பதன் மூலமாக 10 ஆயிரம் இளைஞா்களுக்கு வேலை வாய்ப்பு வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.இந்த முகாமில் பங்கேற்பதற்கான விண்ணப்பங்களை இணையதளத்தில் இருந்து பதிவேற்றம் செய்து கொள்ளலாம்.

    இது தொடா்பான கூடுதல் விவரங்களை திருப்பூா் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள வேலை வாய்ப்பு அலுவலகத்தை தொடா்பு கொண்டோ அல்லது இணையதளம் வாயிலாக தெரிந்து கொள்ளலாம் என்றாா்.கூட்டத்தில், மாநகராட்சி ஆணையா் கிராந்திகுமாா் பாடி, துணை மேயா் ஆா்.பாலசுப்பிரமணியம்,உதவி ஆணையா்கள் கண்ணன், வாசுகுமாா், செல்வநாயகம் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

    • தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் சுதந்திர போராட்ட வீரர்கள் குறைதீர்க்கும் கூட்டம் நாளை நடக்கிறது.
    • சுதந்திர போராட்ட தியாகிகள் மற்றும் அவர்தம் வாரிசுகள் ஓய்வூதிய பலன்கள் குறித்து தங்கள் குறைகளையும், ஆலோசனைகளையும் தெரிவிக்கலாம்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் சுதந்திர போராட்ட வீரர்கள் குறைதீர்க்கும் கூட்டம் நாளை (வெள்ளிக் கிழமை) காலை 10.30 மணிக்கு நடக்கிறது.

    கூட்டத்தில் சுதந்திர போராட்ட தியாகிகள் மற்றும் அவர்தம் வாரிசுகள் அனைவரும் கலந்து கொண்டு ஓய்வூதிய பலன்கள் குறித்து தங்கள் குறைகளையும், ஆலோசனைகளையும் தெரிவிக்கலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தற்காலிகமாக இயங்கும் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தினை கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் திடீரென்று பார்வையிட்டர்.
    • அலுவலகத்தில் இருந்த தன்பதிவேடு, வருகை பதிவேடு, ரொக்கப் பதிவேடு, வைப்புத் தொகை, இருப்பு பதிவேடு, உள்ளிட்ட பார்வையிட்டர்.

    முத்துப்பேட்டை:

    திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த ஆலங்காடு கிராமத்தில் தற்காலிகமாக இயங்கும் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தினை மாவட்ட கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் திடீரென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    அப்போது அலுவலகத்தில் இருந்த தன்பதிவேடு, வருகை பதிவேடு, ரொக்கப் பதிவேடு, வைப்புத் தொகை, இருப்பு பதிவேடு, உள்ளிட்ட கோப்புகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    மேலும் அங்கிருந்த அதிகாரிகள் மத்தியில் ஆலோசனை கூறினார்.

    இந்த ஆய்வில் மன்னார்குடி வருவாய் கோட்டாட்சியர் கீர்த்தனா மணி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கமலராஜன், சாந்தி மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.

    ×