search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 209843"

    • சம்பா பயிர்கள் நுனிசிவந்து பயிர்கள் கருகி வளர்ச்சி பாதிப்பு ஏற்படுகிறது.
    • விவசாயிகளுக்கு தகுந்த ஆலோசனைகளை வழங்க வேண்டும்.

    மெலட்டூர்:

    தஞ்சை மாவட்டம் மெலட்டூர், பாபநாசம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ஏராளமான விவசாயிகள் சம்பா பருவத்தில் நெல் சாகுபடி செய்துள்ளனர்.

    நரியனூர் பகுதியில் சம்பா பருவத்தில் தெளிப்பு முறையில் சாகுபடி செய்யப்பட்ட பயிர்கள் வளர்ந்து வரும் பருவத்தில் உள்ளது. தற்போது மஞ்சள் நோய் எனப்படும் புதிய வகை நோய் தாக்குதல் காரணமாக சம்பா பயிர்கள் நுனிசிவந்து பயிர்கள் கருகி வளர்ச்சி பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.

    வேகமாக பரவி வருவதால் விவசாயிகள் பல்வேறு மருந்துகள் தெளித்தும் நோயை கட்டுப்படுத்த முடியவில்லை. இதனால் விவசாயிகள் மிகுந்த வேதனையில் உள்ளனர்.

    எனவே, மஞ்சள் நோய் தாக்கிய பயிர்களை காப்பாற்ற அரசு வேளாண் அலுவலர்கள் கொண்ட குழுவை பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அனுப்பி விவசாயிகளுக்கு தகுந்த ஆலோசனைகள் வழங்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் உள்ளனர்.

    • அனைவரையும் ஊராட்சி செயலாளர் தமிழ்ச்செல்வன் வரவேற்றார்.
    • நடைபெற்று முடிந்த பணிகள் குறித்து ஆலோசனை செய்து தணிக்கை செய்யப்பட்டு அறிக்கை.

    கபிஸ்தலம்:

    கபிஸ்தலம் ஊராட்சி நர்சரி பகுதியில் சமூக தணிக்கை சிறப்பு கிராமசபை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் சுமதி குணசேகரன் தலைமை தாங்கினார். துணை தலைவர் மகாலட்சுமி பாலசுப்பிரமணியன், ஒன்றிய கவுன்சிலர் சுரேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    அனைவரையும் ஊராட்சி செயலாளர் தமிழ்ச்செல்வன் வரவேற்றார்.

    கூட்டத்தில் சிறப்பு விருந்தினர்களாக ஒன்றிய குழு தலைவர் சுமதி கண்ணதாசன், ஊராட்சி ஒன்றிய ஆணையர்கள் சிவக்குமார், ஆனந்தராஜ், வட்டார வன அலுவலர் சுகுணா, மாவட்ட வன அலுவலர் செந்தில், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் தணிக்கை அருளாளன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் கடந்த ஆண்டு கபிஸ்தலம் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி அளிப்பு திட்டத்தின் கீழ் நடைபெற்று முடிந்த பணிகள் குறித்து ஆலோசனை செய்து தணிக்கை செய்யப்பட்டு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.

    கூட்டத்தில் தணிக்கை அலுவலர்கள், ஊராட்சி பணியாளர்கள், பணிதல பொறுப்பாளர்கள், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் சுமார் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    • ராஜபாளையத்தில் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் அமைச்சர்களுடன் ஆலோசனை நடந்தது.
    • தென்காசி மாவட்ட செயலாளராக யாரை நியமிப்பது? என்று அமைச்சர்களுடன் ஆலோசித்தார்.

    ராஜபாளையம்

    தென்காசியில் நடந்த அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் பங்கேற்றார். அந்த நிகழ்ச்சியை முடித்துவிட்டு கடையநல்லூர், சிவகிரி, சொக்கநாதன் புத்தூர் விலக்கு வழியாக ராஜ பாளையம் வந்து சேர்ந்தார்.

    ராஜபாளையம்- தென்காசி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள அமிழ் ஓட்டலில் அவர் மதிய உணவு சாப்பிட்டு ஓய்வெடுத்தார். பின்னர் இரவு 7 மணி வரை அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோ சனை நடத்தினார். தென்காசி மாவட்ட செய லாளராக யாரை நியமிப்பது? என்று அமைச்சர்களுடன் ஆலோசித்தார்.

    ராஜபாளையம் ஊராட்சி ஒன்றிய அலு வலகம், புதுப்பாளையம் மாரியம்மன் கோவில், காந்தி கலை மன்ற விலக்கு, காந்திசிலை ரவுண்டானா, பழைய பஸ் நிலையம், பஞ்சு மார்க்கெட் வழியாக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் ஸ்ரீவில்லிபுத்தூர் சென்றார்.

    அவருடன் மனைவி துர்கா ஸ்டாலின், அமைச்சர்கள் கே.என்.நேரு, தங்கம் தென்னரசு, சாத்தூர் ராமச்சந்திரன், ஐ.பெரியசாமி ஆகியோரும் உடன் சென்றனர்.

    தமிழக அமைச்ச ரவையில் மாற்றம் குறித்தும், உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சரவையில் இடம் அளிப்பது தொடர்பாகவும் ஆலோசனை செய்ய ப்பட்டதாக தெரிகிறது.

    • மண்வளம் மேம்படும் எனவும் உயிர் உரங்கள் இடுவதால் ஏற்படும் நன்மைகள் அதன் பயன்பாடுகள் பற்றியும் பறவைக் குடியில் அமைத்தால் பகலில் தாய் அந்து பூச்சிகளை கட்டுப்படுத்தலாம்.
    • வேளாண் கருவிகள் வாடகை மற்றும் வேளாண் கருவிகள் இருப்பு பற்றியும் சோலார் பம்ப்செட் அமைப்பது பற்றியும் பண்ணை குட்டை பற்றியும் பேசினார்.

    திருத்துறைப்பூண்டி:

    திருத்துறைப்பூண்டி வட்டார வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அட்மா திட்டத்தின் கீழ் வட்டார விவசாயிகள் ஆலோசனை குழு கூட்டம் நடைபெற்றது.

    இதற்கு வேளாண்மை உதவி இயக்குனர் சாமிநாதன் தலைமை தாங்கினார். வட்டார விவசாயிகள் ஆலோசனை குழு தலைவர் நாகராஜன் முன்னிலை வகித்தார்.

    வட்டார தொழில்நுட்ப மேலாளர் வேம்பு ராஜலஷ்மி வரவேற்றார். தொடர்ச்சியாக வேளாண்மை உதவி இயக்குனர் சாமிநாதன் சம்பா தாளடி பயிர்களில் நுண்ணூட்ட மேலாண்மை மற்றும் பூச்சி நோய் தாக்குதல் மேலாண்மை வரப்பில் உளுந்து சாகுபடி மற்றும் நெல் தரிசில் உளுந்து பயிறுசாகுபடி செய்து கூடுதல் வருமானம் பெறலாம்.

    மண்வளம் மேம்படும் எனவும் உயிர் உரங்கள் இடுவதால் ஏற்படும் நன்மைகள் அதன் பயன்பாடுகள் பற்றியும் பறவைக் குடியில் அமைத்தால் பகலில் தாய் அந்து பூச்சிகளை கட்டுப்படுத்தலாம் என்றும் இரவில் ஆந்தை பந்தலாக அது செயல்பட்டு எலிகளை கட்டுப்படுத்தலாம் என்றும் விவசாயிகளுக்கு அறிவுறுத்தினார்.

    தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை உதவி இயக்குனர் இளவரசன் தோட்டக்கலை துறை மானியங்கள் பற்றியும் பழ மரங்கள், காய்கறி பயிர்கள் சாகுபடி பற்றியும் கூறினார்.

    வேளாண் பொறியியல் துறை உதவி பொறியாளர் கௌசல்யா வேளாண் கருவிகள் வாடகை மற்றும் வேளாண் கருவிகள் இருப்பு பற்றியும் சோலார் பம்ப்செட் அமைப்பது பற்றியும் பண்ணை குட்டை பற்றியும் பேசினார்.

    வேளாண்மை துணை அலுவலர் ரவி பி.எம். கிசான் திட்டத்தில் கே.ஒய்.சி. ஆதார் எண்ணுடன் தொலைபேசி எண் இணைப்பது பற்றி பேசினார்.

    இதில் வேளாண்மை அலுவலர் கிரிஜா, தோட்டக்கலை அலுவலர் மதுமிதா, வேளாண் வணிகம் மற்றும் விற்பனைத்துறை வேளாண்மை அலுவலர் நந்தினி, உதவி அலுவலர் விற்பனை உதவி அலுவலர் தோட்டக்கலை உதவி அலுவலர்கள் மற்றும் விவசாயிகள் ஆலோசனை குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டு கருத்துக்களை பதிவு செய்தனர்.

    எதிர்வரும் பருவங்களுக்கு ஏற்ப அட்மா திட்டத்தில் விவசாயிகளுக்கான பயிற்சிகள் கண்டுனர் சுற்றுலாக்கள் செயல் விளக்கங்கள் மற்ற செயல்பாடுகள் பற்றிய தீர்மானங்கள் வட்டார விவசாயிகள் ஆலோசனை குழு தலைவர் முன்னிலையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

    இக்கூட்டத்திற்கு வட்டார உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் கார்த்திக் மற்றும் அகல்யா ஏற்பாடுகளை செய்து இருந்தனர்.

    • டி.டி.வி. தினகரன் பிறந்தநாளை முன்னிட்டு கேக் வெட்டப்பட்டு அனைவருக்கும் வழங்கப்பட்டது.
    • 2 ஆயிரம் பேருக்கு அறுசுவை விருந்து வழங்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது.

    திருப்பூர் :

    அ.ம.மு.க. திருப்பூர் மாநகர் மாவட்டத்தின் சார்பில் கட்சியின் பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் பிறந்தநாள் விழா கொண்டாட்டம் தொடர்பான ஆலோசனைக்கூட்டம் திருப்பூர் காங்கயம் ரோட்டில் உள்ள திருமண மண்டபத்தில் நடந்தது. கூட்டத்தில் கட்சியின் மாநில துணை பொதுச்செயலாளர் சி.சண்முகவேலு சிறப்புரையாற்றினார். திருப்பூர் மாநகர் மாவட்ட செயலாளர் விசாலாட்சி சிறப்பித்து பேசினார். டி.டி.வி. தினகரன் பிறந்தநாளை முன்னிட்டு கேக் வெட்டப்பட்டு அனைவருக்கும் வழங்கப்பட்டது.

    டி.டி.வி. தினகரன் பிறந்தநாளான வருகிற 13-ந் தேதி காலை கோவில்களில் சிறப்பு வழிபாடு நடத்தி, பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி சிறப்பாக கொண்டாட வேண்டும். கொடிக்கம்பங்கள் அமைத்து கொடியேற்றி அனைவருக்கும் இனிப்பு வழங்க வேண்டும் என்று நிர்வாகிகள் கருத்து தெரிவித்தார்கள். பிறந்தநாளன்று காலை பெரிபாளையம் சுக்ரீஸ்வரர் கோவிலில் காலையில் பூஜை நடத்தப்பட்டு 13 பகுதிகளிலும் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு அன்னதானம் வழங்க வேண்டும். மதியம் 2 ஆயிரம் பேருக்கு அறுசுவை விருந்து வழங்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது.

    மேலும் சுற்றுச்சூழல் பிரிவு சார்பில் 1,500 பள்ளி, கல்லூரி மாணவர்கள் பங்கேற்கும் வகையில் மராத்தான் போட்டிகள் நடத்தி பரிசு வழங்க வேண்டும். மாற்றுத்திறனாளிகள், பொதுமக்கள் என 5 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க வேண்டும் என மாபெரும் மக்கள் எழுச்சி நாளாக கொண்டாடுவது என்று முடிவு செய்யப்பட்டது.

    கூட்டத்தில் மாவட்ட அவைத்தலைவர் பாலுசாமி, மருத்துவ அணி மாநில துணை செயலாளர் டாக்டர் கிங், துணை செயலாளர் கீதா, பொருளாளர் சேகர், நிர்வாகி புல்லட் ரவி, அம்மா தொழிற்சங்க பேரவை செயலாளர் பாலகிருஷ்ணன், மாநகர் மாவட்ட எம்.ஜி.ஆர்.இளைஞரணி செயலாளர் இறைவெங்கடேஷ், அம்மா தொழிற்சங்க பேரவை தலைவர் கலியமூர்த்தி, பகுதி செயலாளர்கள் வீர.கந்தசாமி, ராஜாங்கம், ஜெகதீஷ், நூல்கடை சிவக்குமார், நெருப்பெரிச்சல் நிர்வாகி கந்தசாமி, பாண்டியன் நகர் பகுதி இணை செயலாளர் ஷீபா பாலகிருஷ்ணன் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர்.

    • தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம்.
    • திட்டங்களை விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.

    திருப்பூர் :

    ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை அரசு சிறப்பு செயலர் மற்றும் திருப்பூர் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் எம்.கருணாகரன் தலைமையில், மாவட்ட கலெக்டர் வினீத் முன்னிலையில் அனைத்து துறைகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்த அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

    இதில் கண்காணிப்பு அலுவலர் எம்.கருணாகரன் தெரிவித்தாவது:- தமிழ்நாடு முதலமைச்சர் அறிவுறுத்தலுக்கிணங்க தமிழ்நாடு அரசின் சார்பில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் அனைத்தும் மக்களுக்கு நேரிடையாக சென்றடைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    அந்த வகையில் வருவாய்த்துறை, பொதுப்பணித்துறை, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, தோட்டக்கலைத்துறை, பட்டு வளர்ச்சித்துறை, கால்நடை பராமரிப்புத்துறை, மீன் வளத்துறை, பால் வளத்துறை, கூட்டுறவுதுறை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை, நெடுஞ்சாலைத்துறை, மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம், தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம், மாவட்ட தொழில் மையம், தொழிலாளர் நல வாரியம், மாநகராட்சி, நகராட்சி நிர்வாகத்துறை மற்றும் பேரூராட்சிகள் ஆகிய துறைகளின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித்திட்டப் பணிகள் குறித்து விரிவாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் தங்கள் துறைகளில் செயல்படுத்தப்படும் திட்டங்களை விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்றார்.

    ஆய்வு கூட்டத்தில், மாநகராட்சி ஆணையா் கிராந்திகுமாா் பாடி, சப்- கலெக்டர் ஸ்ருதன்ஜெய் நாராயணன், மாவட்ட வருவாய் அலுவலா் த.ப.ஜெய்பீம், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் அ.லட்சுமணன், மாவட்ட கலெக்டரின் நோ்முக உதவியாளா் (வளா்ச்சி) வாணி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

    • ராமநாதபுரத்தில் இலவச மருத்துவ ஆலோசனை முகாம் நடந்தது.
    • மருத்துவ குழுவினர் 100-க்கும் அதிகமானோருக்கு பரிசோதனை நடத்தி ஆலோசனைகள் வழங்கினர்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டம் பனைக்குளத்தில் மதுரை குரு மருத்துவமனை, ராமநாதபுரம் வர்ஷா பல் மருத்துவமனை மற்றும் பனைக்குளம் நகர எஸ்.டி.பி.ஐ. கட்சி இணைந்து குழந்தையில்லா தம்பதிகள் மற்றும் கர்ப்பப்பை நோய்களுக்கான இலவச மருத்துவ ஆலோசனை முகாமை நடத்தியது. கட்சியின் செயலாளர் அனஸ் தலைமை தாங்கினார்.

    மாநில செயற்குழு உறுப்பினர் ஜெமிலுன்னிஸா முகாமை தொடங்கி வைத்தார். மருத்துவர்கள் கல்பனா, ஜெமிலுன்னிஸா தலைமையில் மருத்துவ குழுவினர் 100-க்கும் அதிகமானோருக்கு பரிசோதனை நடத்தி ஆலோசனைகள் வழங்கினர். ராமநாதபுரம் கிழக்கு மாவட்ட பொதுசெயலாளர் அப்துல் ஜமீல், மாவட்டச் செயலாளர் அபுல் கலாம் ஆசாத், நஜிமுதீன், மாவட்ட மீனவரணி தலைவர் பஹ்ருதீன், திருவாடானை தொகுதி தலைவர் முகமது ஹனீப், தொகுதி செயலாளர் நூர் முகமது, தொகுதி இணைச் செயலாளர் அஸ்லம், ஊராட்சி மன்ற உறுப்பினர் சித்தி நிஷா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • 10 சதவீத இட ஒதுக்கீடு விவகாரம் அ.தி.ம.மு.க. நிர்வாகிகள் ஈரோட்டில் ஆலோசனை நடத்தினர்.
    • ஈரோடு மாவட்ட செயலாளர், உயர்மட்ட செயல்திட்டக்குழு உறுப்பினர் செந்தில்குமார் நன்றி கூறுகிறார்.

     மதுரை

    அண்ணா திராவிட மக்கள் முன்னேற்ற கழக தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது:-

    அண்ணா திராவிட மக்கள் முன்னேற்ற கழக மாவட்ட செயலாளர்கள், உயர்மட்டசெயல்திட்டக்குழு உறுப்பினர்கள் மற்றும் தலைமை நிலைய செயலா ளர்கள் கூட்டம் வருகிற 22-ந்தேதி ஈரோட்டில் நடக்கிறது.கூட்டத்துக்கு அவைத்தலைவர் தாஜீதீன் தலைமை தாங்குகிறார். பொருளாளர் பூங்கா பி.கே.மாரி முன்னிலை வகிக்கிறார். துணைப் பொதுச்செயலாளர், கழக தேர்தல் பிரிவு செயலாளர்

    நெல்லை முத்துக்குமார் வரவேற்று பேசுகிறார்.

    கழக வளர்ச்சிகப்பணிகள் மற்றும் பொருளாதார ரீதியிலான உயர்சாதி பிரிவினருக்கான 10 சதவீத இட ஒதுக்கீடு, தமிழக கவர்னரின் செயல்பாடுகள் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து பொதுச்செயலாளர் வழக்கறிஞர் பசும்பொ ன்பாண்டியன் பேசுகிறார்.

    ஈரோடு மாவட்ட செயலாளர், உயர்மட்ட செயல்திட்டக்குழு உறுப்பினர் செந்தில்குமார் நன்றி கூறுகிறார்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது‌.

    • விருதுநகர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் வாக்காளர் சேர்ப்பு பணி குறித்த ஆலோசனை கூட்டம் கே.டி.ராஜேந்திரபாலாஜி தலைமையில் நடந்தது.
    • கிளை வாரியாக தகவல் தெரிவிக்க வேண்டும்.

    சிவகாசி,

    விருதுநகர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் வாக்காளர் சேர்ப்பு பணி குறித்த ஆலோசனைக்கூட்டம் திருத்தங்கல் பாலாஜி நகரில் நடந்தது. அமைப்பு செயலாளரும், விருதுநகர் மேற்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கே.டி.ராஜேந்திரபாலாஜி தலைமை தாங்கினார்.

    அவர் பேசுகையில், கடந்த 2 நாட்களாக வாக்காளர் சேர்ப்பது குறித்து சிறப்பு முகாம் நடந்தது. இந்த முகாம் வருகிற 26, 27-ந் தேதிகளில் நடைபெறுகிறது. தங்கள் பகுதியில் உள்ள 17 வயது பூர்த்தியடைந்தவர்களை புதிய வாக்காளர்களாக சேர்க்க வேண்டும்.

    விடுபட்டுள்ள வாக்கா ளர்கள் பெயர்களை சேருங்கள். வெளியூர் மாறுத லானவர்கள், இறந்தவர்கள் உள்ளிட்டவர்கள் பெயர்களை நீக்கம் செய்யுங்கள். தற்போது உள்ள வாக்காளர்கள் பெயர்கள் உள்ளதா? எனவும் சரி பாருங்கள்,

    வாக்காளர்கள் சேர்க்கும்போது ஆதார் அட்டை ஜெராக்ஸ் இணைக்கவும். கூட்டத்திற்கு வந்துள்ள நகர ஒன்றிய, பேரூர், கிளை வாரியாக தகவல் தெரிவிக்க வேண்டும்.

    ஊராட்சி மன்ற தலை வர்கள், ஒன்றிய குழு உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், பிற அணி நிர்வாகிகள், கூட்டுறவு சங்க நிர்வாகிகள் உள்ளிட்ட அனைவருக்கும் தகவல் தெரிவித்து வாக்காளர்கள் சேர்க்கும் முகாமில் அதிகப்படியான வாக்காளர்களை சேர்க்க வேண்டும் என்றார்.

    இந்த கூட்டத்தில் மாவட்ட அவைத்தலைவர் விஜயகுமார், சிவகாசி ஒன்றிய செயலாளர்கள் ஆரோக்கியம், வெங்கடேஷ், கருப்பசாமி, சிவகாசி மண்டல செயலாளர்கள் கிருஷ்ண மூர்த்தி, சரவணக்குமார், கருப்பசாமிபாண்டியன், சாமி என்ற ராஜ அபினேஷ்வரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • பொதுமக்களுக்கு ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு உள்பட பல்வேறு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
    • சிகிச்சை மற்றும் மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

    அம்மாபேட்டை:

    தஞ்சை மாவட்டம், அம்மாபேட்டையில் வருமுன் காப்போம் மருத்துவமுகாம் நடைபெற்றது.

    அம்மாபேட்டை ஒன்றியக்குழு தலைவர் கே.வீ.கலைச்செல்வன் தலைமை தாங்கி மருத்துவ முகாமை தொடங்கி வைத்தார்.

    அனைவரையும் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சுரேஷ்குமார் வரவேற்றார்.

    ஒன்றிய செயலாளர் சுரேஷ்குமார், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கூத்தரசன், அமானுல்லா, மருத்துவர் வெங்கடேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அம்மாபேட்டை வட்டார மருத்துவ அலுவலர் அஜந்தன் உரையாற்றினார்.

    முகாமில் பொதுமக்களுக்கு ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு, இ.சி.ஜி., எக்ஸ்ரே உள்பட பல்வேறு பரிசோதனைகள் செய்து சிகிச்சை மற்றும் மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

    முகாமில் அம்மாபேட்டை ஒன்றியத்தை சேர்ந்த ஊராட்சி மன்ற தலைவர்கள், ஒன்றிய குழு உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ பணியாளர்கள்.

    மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    முடிவில் சுகாதார ஆய்வாளர் பெரியண்ணன் நன்றி கூறினார்.

    • திட்டப்பணிகளை விரைந்து முடிப்பது குறித்து அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் அதிகாரிகளுடன் ஆலோசனை நடந்தது.
    • கூட்ட அரங்கில் கருணாநிதி மற்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் படங்களை அமைச்சர் சாத்தூர் ராமச்ச ந்திரன் திறந்து வைத்தார்.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் நகராட்சியின் வளர்ச்சி திட்டப்பணிகளான தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்டம், பாதாள சாக்கடை த்திட்டம், ெரயில்வே மேம்பாலம், புதிய பஸ் நிலையம் முதல் தென்காசி ரோடு வரையிலான இணைப்பு சாலை திட்டம் குறித்து அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் தலைமையில் கலெக்டர் மேகநாதரெட்டி முன்னிலையில் நகராட்சி அலுவலகத்தில் ஆய்வுக் கூட்டம் நடந்தது.

    கூட்டத்தில் கையில் வரைபடத்துடன் கலந்தா லோசித்து ஆய்வு செய்த அமைச்சர், ராஜபாளையம் நகரின் வளர்ச்சி திட்டப்ப ணிகள் அனைத்தும் வரும் மார்ச் மாதத்திற்குள் முடிக்க திட்டம்வகுத்துக் கொடுத்து அந்தந்த துறை அதிகாரிகளுக்கு உத்தர விட்டார். அதற்கு பதில் அளித்த அதிகாரிகளும் மார்ச் மாதத்திற்குள் பணி களை முடித்துவிடலாம் என உறுதி அளித்தனர்.

    இணைப்பு சாலை அமைக்கும் பணியும் விரைவில் தொடங்க இருக்கிறது என்று அதிகாரிகள் தெரிவித்தனர். அதனை தொடர்ந்து நேருசிலை முதல் சொக்கர்கோவில் வரை செல்லும் தென்காசி ரோட்டில் பேட்ச் ஓர்க் பணியை துரிதப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    மேலும் புதிய தார்ச்சாலை அமைக்க மத்திய அரசின் கட்டுப்பாட்டிலுள்ள தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திடம் நிதி கோரப்பட்டுள்ளது. விரைவில் தார்ச்சாலை அமைக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

    அதனைத்தொடர்ந்து ராஜபாளையம் நகராட்சி கூட்ட அரங்கில் கருணாநிதி மற்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் படங்களை அமைச்சர் சாத்தூர் ராமச்ச ந்திரன் திறந்து வைத்தார். இதில் தனுஷ்குமார் எம்.பி., தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ., நகர் மன்ற தலைவி பவித்ரா ஷியாம்ராஜா, யூனியன் சேர்மன் சிங்கராஜ், தி.மு.க நகர செயலாளர்கள் ராமமூர்த்தி, மணிகண்டராஜா, நகரசபை துணை தலைவர் கல்பனாகுழந்தைவேலு மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    • மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள் (பொது) விஜயராஜ், (வளர்ச்சி) வாணி மற்றும் தொடர்புடைய அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
    • மக்கள் குறை கேட்பு முகாம் மூலம் பெறப்படும் தகுதி வாய்ந்த மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்.

    திருப்பூர்:

    ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை அரசு சிறப்பு செயலர்-திருப்பூர் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் டாக்டர்.எம்.கருணாகரன் தலைமையில் கலெக்டர் வினீத் முன்னிலையில் திருப்பூர் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து அனைத்து துறை அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம்நடைபெற்றது.

    அப்போது திருப்பூர் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் கருணாகரன் தெரிவித்ததாவது:-

    தமிழ்நாடு முதலமைச்சர் அறிவுறுத்தலுக்கிணங்க தமிழ்நாடு அரசின் சார்பில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் அனைத்தும் மக்களுக்கு நேரிடையாக சென்றடைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கள் கிழமை நடைபெறும் மக்கள் குறை கேட்பு முகாம் மூலம் பெறப்படும் தகுதி வாய்ந்த மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும். திருப்பூர் மாநகராட்சியில் நடைபெற்று வரும் சீர்மிகு நகரத் திட்ட பணிகள் விரைவில் முடிக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, தோட்டக்கலைத்துறை, பட்டு வளர்ச்சித்துறை, கால்நடை பராமரிப்புத்துறை, மீன் வளத்துறை, பால் வளத்துறை, கூட்டுறவுதுறை, பொது சுகாதாரம் மற்றும் குடும்பநலத் துறை, நெடுஞ்சாலைத்துறை, மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம், தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம், மாவட்ட தொழில் மையம், தொழிலாளர் நல வாரியம், மாநகராட்சி, நகராட்சி நிர்வாகத்துறை மற்றும் பேரூராட்சிகள் ஆகிய துறைகளின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித்திட்டப் பணிகள் குறித்து விரிவாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள் தங்கள் துறைகளில் செயல்படுத்தப்படும் திட்டங்களை விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என்றார்.

    கூட்டத்தில், திருப்பூர் மாநகராட்சி ஆணையாளர் கிராந்திகுமார் பாடி , மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய்பீம் , மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள் (பொது) விஜயராஜ், (வளர்ச்சி) வாணி மற்றும் தொடர்புடைய அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    ×