search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 209843"

    • வேளாண்மை விரிவாக்க மையக் கூட்டரங்கில் வட்டார தொழில் நுட்ப வல்லுநர்கள் குழு மற்றும் வட்டார விவசாயிகள் ஆலோசனைக்குழு கூட்டம் நடந்தது.
    • இத்திட்டத்தின் வாயிலாக விவசாயிகளுக்கு சென்றடையும் தொழில் நுட்பங்கள் குறித்து விரிவாக விளக்கம் அளிக்கப்பட்டது.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையக் கூட்டரங்கில் வட்டார தொழில் நுட்ப வல்லுநர்கள் குழு மற்றும் வட்டார விவசாயிகள் ஆலோசனைக்குழு கூட்டம் நடந்தது. நாமக்கல் வட்டார வேளாண்மை அலுவலர் ரசிகபிரியா முன்னிலை வகித்தார். விவசாயிகள் ஆலோசனைக் குழுத் தலைவர் பழனிவேல் தலைமை வகித்தார். இதில் அட்மா திட்டத்தின் செயல்பாடுகள், திட்டநோக்கம், திட்டத்தின் வாயிலாக விவசாயிகளுக்கு சென்றடையும் தொழில் நுட்பங்கள் குறித்து விரிவாக விளக்கம் அளிக்கப்பட்டது.

    இதில், நாமக்கல் வட்டார வேளாண்மை பொறியியல் துறை உதவி பொறியாளர் தங்கவேல், கால்நடை உதவி மருத்துவர் வெள்ளைசாமி, தோட்டக்கலை அலுவலர் பூர்ணிமா, பட்டு உதவி ஆய்வாளர் சாந்தி, வேளாண்மை விற்பனை மற்றும் வணிகத்துறை உதவி வேளாண்மை அலுவலர் கங்காதரன் ஆகியோர் பங்கேற்று துறை சார்ந்த மானியத்திட்டங்கள், தொழில்நுட்பம் சார்ந்த சந்தேகங்களுக்கு விளக்கமளித்தனர். மேலும் அட்மா திட்ட வட்டார தொழில் நுட்ப மேலாளர் ரமேஷ், உதவி தொழில் நுட்ப மேலாளர் கவிசங்கர் அட்மா திட்ட பணியின் முன்னேற்றம் குறித்தும் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்தும் விளக்கமளித்தார்.

    • ஒரு நாள் பயிலரங்கம் மற்றும் சிறுதானிய தொழில் முனைவோர் கண்காட்சி ஆகியவை நடத்தப்பட்டது.
    • சிறுதானிய உணவின் சிறப்பை அனைவரும் அறிய வேண்டும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூரிலுள்ள தேசிய உணவு தொழில்நுட்பம், தொழில் மேம்பாடு மற்றும் மேலாண்மை நிறுவனத்தில் இந்திய விஞ்ஞானிகள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்களின் கூட்டமை ப்பு இணைந்து உலக உணவு தினம்-2022 நிகழ்ச்சியை இதில் சிறுதானிய உணவுகள், வடிவமைப்பு, மேம்பாடு மற்றும் புலன் சார் உணவு மதிப்பீடு என்ற தலைப்பில் ஒரு நாள் பயிலரங்கம் மற்றும் சிறுதானிய தொழில் முனைவோர் கண்காட்சி ஆகியவை நடத்தப்பட்டது.

    மத்திய அரசின் உணவு பதப்படுத்தும் தொழில் துறை அமைச்சகத்தின் செயலாளர் அனிதா பிரவீன் நிகழ்ச்சியை தொடங்கி வைத்து வளாகத்தில் புதிய விளையாட்டு அரங்கத்திற்கு அடிக்கல் நாட்டினார்.

    அப்போது அவர் பேசியதாவது:-

    உயா்தர சத்துள்ள உணவுகளை அனைத்து பொதுமக்களுக்கும் சரியான விகிதத்தில் வழங்குவதில் சவால்கள் உள்ளன. எனவே, வளா்ந்து வரும் உலக உணவு சந்தையின் தேவைக்கேற்ப தொழில்நுட்பங்களை உருவாக்குவதில் உணவு தொழில்நுட்ப மாணவா்களுக்கு பொறுப்பு உள்ளது.

    அதிக சா்க்கரை மற்றும் கொழுப்பு கொண்ட துரித உணவுகளை இத்தலைமுறையினா் விரும்பி உண்டு வருகின்றனா்.

    இச்சூழ்நிலையில், சிறுதானிய உணவுகளின் சிறப்புகளை அனைவரும் அறியுமாறு செய்ய வேண்டும். மேலும், சிறுதானிய உணவை இளைய தலைமுறையினருக்கு சுவையாக மாற்றுவதற்கும், தினசரி உணவில் தினையை மீண்டும் கொண்டு வருவதற்கும் பொருத்தமான தொழில்நுட்பங்களைக் கண்டுபிடிக்க உணவு அறிவியல் துறை மாணவா்கள் முயற்சிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு டாக்டா் ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத் துணை வேந்தா் சுகுமாா், இந்திய விஞ்ஞானிகள் மற்றும் தொழில்நுட்ப வல்லு நா்களின் கூட்டமைப்புத் தலைவா் அலோக்குமாா் ஸ்ரீவஸ்தவா, தேசிய உணவு தொழில்நுட்பம், தொழில் மேம்பாடு மற்றும் மேலாண்மை நிறுவன இயக்குநா் (பொ) லோகநாதன் ஆகியோா் சிறப்புரையாற்றியனர்.

    முன்னதாக, நிறுவனத்தின் ஆய்வு, ஆலோசனை மற்றும் சா்வதேச தொடா்புகள் துறைத் தலைவா் (பொ) வெங்கடாசலபதி வரவேற்றாா். முடிவில் பதிவாளா் (பொ) சண்முகசுந்தரம் நன்றி கூறினாா்.

    • முதியவர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம், மருத்துவ ஆலோசனை மற்றும் மாத்திரைகள் வழங்கப்பட்டது.
    • முகாமில் தங்கியிருந்த 10 முதியவர்களுக்கு புத்தாடைகள் வழங்கப்பட்டது.

     பட்டுக்கோட்டை:

    உலக வீடற்றோர் தினத்தினை முன்னிட்டு, பட்டுக்கோட்டை நகராட்சி மூலம் அண்ணாநகரில் செயல்பட்டு வரும் வீடற்றோர் இல்லத்தில் உலக வீடற்றோர் தினம் கொண்டாடப்பட்டது.

    விழாவில் நகராட்சி தலைவர் சண்முகப்பிரியா, நகர்மன்ற துணைத்தலைவர் சுரேஷ், நகராட்சி ஆணையர் சௌந்தரராஜன் மற்றும் நகர்மன்ற உறுப்பினர்கள் முன்னிலையில் வீடற்றோர் இல்லத்தில் தங்கி இருக்கும் 10 முதியவர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம், நகர்நல மருத்துவமனை மருத்துவர் பானுப்பிரியா மற்றும் பணியாளர்களால் உடல் பரிசோதனை செய்யப்பட்டு, மருத்துவ ஆலோசனை வழங்கப்பட்டு உடன் மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டது.பின்னர் ஒருங்கிணைந்து கூட்டம் நடத்தப்பட்டது.

    கூட்டத்தில், திட்டத்தின் நோக்கம் மற்றும் செயல்பாடுகள் பற்றி நகரமைப்பு ஆய்வாளர் கருப்பையன் எடுத்துக் கூறினார். மேலும் கவுன்சிலர் சதாசிவக்குமார் சிறப்புரையாற்றினார்.

    முகாமில் தங்கியிருந்த 10 முதியவர்களுக்கு புத்தா டைகள் வழங்கப்பட்டது.

    இசை நாற்காலி விளையாட்டுப்போட்டி நடத்தப்பட்டது. பேச்சு போட்டியும் நடத்தப்பட்டது அதில் வெற்றி பெற்ற முதல் இரண்டு நபர்களுக்கு பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது. மேலும், பத்துணர்ச்சி ஆலோசனையும் வழங்கப்பட்டது.

    விழாவில் கவுன்சிலர்கள் ராயல்குமார், நாடிமுத்து, சதாசிவகுமார், காமராஜ், குமணன், ஜெயராமன், சரேஷ், முத்துசாமி, கலையரசி மற்றும் முன்னாள் கவுன்சிலர்கள் பன்னீர்செல்வம், அழகேசன், சமூக ஆர்வலர்கள் மணிமுத்து, நகராட்சி உதவிப்பொறியாளர் தியாகராஜன், துப்புரவு அலுவலர் நெடுமாறன், துப்பரவு ஆய்வாளர்.

    ஆரோக்கியசாமி, துப்புர வுபணி மேற்பார்வையாளர் செல்வகுமார், சமுதாய அமை ப்பாளர் பிரவீணா, பரப்புரை பரப்புரையாளர்கள் கலந்துகொண்டனர்.

    • முதன்மைக் கல்விஅலுவலர் வழிகாட்டுதலின்படி மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர்(பொறுப்பு) தலைமையில் கூட்டம் நடைபெற்றது.
    • குறுவட்ட அளவிலான போட்டிகளில் முதலிடத்தில் வெற்றி பெற்ற அணிகள் மாவட்ட அளவிலான போட்டிகளில் கலந்து கொள்வார்கள்.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டத்தில் அவிநாசி, திருப்பூர் தெற்கு, திருப்பூர் வடக்கு,பல்லடம் ,தாராபுரம் ,உடுமலைப்பேட்டை ஆகிய குறுவட்டங்கள் உள்ளன. இந்தநிலையில் குறுவட்ட அளவிலான பள்ளிகளுக்கு மாணவர்களுக்கான விளையாட்டு போட்டிகள் ஆகஸ்ட் 17 முதல் செப்டம்பர் 20-ந் தேதி வரை நடைபெற்றது.

    இந்தநிலையில் திருப்பூர் வருவாய் மாவட்ட அளவிலான குழுப்போட்டிகள், புதிய விளையாட்டுக்கள் மற்றும் தடகளப் போட்டிகள் 17.10.2022 அன்று முதல் நடைபெற உள்ளது. இதில் வெற்றி பெறும் முதல் அணிகள் மாநில அளவில் நடைபெறும் போட்டிகளில் கலந்து கொள்வார்கள்.குறுவட்ட அளவிலான போட்டிகளில் முதலிடத்தில் வெற்றி பெற்ற அணிகள் மாவட்ட அளவிலான போட்டிகளில் கலந்து கொள்வார்கள்.

    அதற்கான நிகழ்வு நிர்ணயக் கூட்டம் திருப்பூர், ஜெய்வாபாய் மாதிரி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.இதில் 45 உடற்கல்வி இயக்குனர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள், கண்காணிப்புக் குழுஉறுப்பினர்கள்,மற்றும் குறுவட்டப் போட்டிகளின் இணை செயலாளர்கள் கலந்து கொண்டனர். முதன்மைக் கல்விஅலுவலர் வழிகாட்டுதலின்படி மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர்(பொறுப்பு) தலைமையில் கூட்டம் நடைபெற்றது.

    • கன்னியாகுமரியில் 3 நாள் நடைபெறுகிறது
    • தோழர் ரோகிணி பங்கேற்பு

    நாகர்கோவில்:

    கன்னியாகுமரியில் நவம்பர் 4, 5, 6 ஆகிய தேதிகளில் சி.ஐ.டி.யூ. 15-வது மாநில மாநாடு நடக்கிறது. இந்த மாநாட்டில் தமிழகத்தில் இருந்து 750 சி.ஐ.டி.யூ. பிரதிநிதிகள் கலந்து கொள்கின்றனர். அகில இந்திய தலைவர் ஹேமலதா, துணைத் தலைவர் ஏ.கே.பத்மநாபன், பொதுச் செயலாளர் தபன்சன் உள்பட பலர் கலந்து கொள்கின்றனர்.

    இந்த மாநாட்டையொட்டி நவம்பர் 3-ந் தேதி மாலை 3 மணிக்கு கன்னியாகுமரியில் தியாகிகளின் தீப சங்கம் நிகழ்ச்சி நடக்கிறது. மாவட்டத்தில் இருந்து சுமார் 100 தியாகிகளின் தீபங்கள் ஏந்தி கன்னியாகுமரி காந்தி மண்டபம் முன்பு தியாகிகளின் தீப சங்கம நிகழ்ச்சி நடக்கிறது.

    இந்த நிகழ்ச்சியில் தோழர் ரோகிணி கலந்து கொள்கிறார். கன்னியா குமரியில் 3 நாட்கள் நடக்கும் மாநாட்டை தொடர்ந்து 6-ந் தேதி மாலை நாகராஜா கோவில் திடலில் பொதுக்கூட்டம் நடக்கிறது.

    இந்த பொதுக் கூட்டத்தையொட்டி அன்றைய தினம் வெட்டூர்ணிமடத்தில் இருந்து நாகராஜா கோவில் திடல் வரை ஒரு லட்சம் பேர் கலந்து கொள்ளும் பேரணியும் நடக்கிறது.

    சி.ஐ.டி.யூ. மாநில மாநாடு நடப்பதையொட்டி மாநாட்டு வரவேற்பு குழு அலுவலகம் திறப்பு நிகழ்ச்சி இன்று பார்வதிபுரம் சி.ஐ.டி.யூ. அலுவலகத்தில் நடந்தது. நிகழ்ச்சிக்கு வரவேற்பு குழு தலைவர் வக்கீல் செலஸ்டின் தலைமை தாங்கினார். மாவட்டத் தலைவர் சிங்காரம் வரவேற்றார். மேயர் மகேஷ் வரவேற்பு குழு அலுவ லகத்தை திறந்து வைத்து பேசினார்.

    நிகழ்ச்சியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் செல்லசாமி, மண்டல தலைவர் ஜவகர், சி.ஐ.டி.யூ. பொருளாளர் சித்ரா, நிர்வாகிகள் அகமது உசேன், கண்ணன், பெருமாள், மரிய ஸ்டீபன், சுரேஷ், மோகன், லட்சுமணன், சந்திரபோஸ், பேராசிரி யர்கள் நாகராஜன், மனோகர் ஜெஸ்டஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களை பல்சேவை கூட்டுறவு மையங்களாக மாற்ற ஆலோசனை நடந்தது.
    • பொறியியல் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டத்தில் உள்ள மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் தலைமையக கூட்ட அரங்கில் மண்டல இணைப்பதிவாளர் பா.செந்தில் குமார் தலைமையில் வேளாண்மை பொறியியல் துறை மற்றும் கூட்டுறவு துறை இணைந்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களை பல்சேவை மையங்களாக மாற்றுவது குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

    இதில் வேளாண்மை பொறியியல் துறை கண்காணிப்பு பொறியாளர் டி.டேனிஸ்டன், கூட்டுறவு சங்கங்க ளின்இணைப்பதிவாளர் அலுவலக துணைப்பதிவாளர் மற்றும் பணியாளர் அலுவலர் சந்தனராஜ், அருப்புக்கோட்டை சரக துணை பதிவாளர் சு.ரவிச்சந்திரன், ஸ்ரீவில்லிபுத்தூர் சரக துணை பதிவாளர் க.அமுதா, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் பொது மேலாளர் இளங்கோவன், கூட்டுறவுத்துறை மற்றும் சங்க செயலாளர்கள், பொறியியல் துறை அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • குமாரபாளையத்தில் சிட்ரா சார்பில் சிறிய ஜவுளி தொழில்நுட்ப பூங்கா அமைக்க ஆலோசனை கூட்டம் கொங்கு விசைத்தறி உரிமையாளர்கள் சங்க தலைவர் தலைமையில் நடைபெற்றது.
    • 50 சதவீதம் மற்றும் இரண்டரை கோடி ரூபாய் எனும் வகையில் மானியம் வழங்கப்படும்.

    குமாரபாளையம்:

    குமாரபாளையத்தில் சிட்ரா சார்பில் சிறிய ஜவுளி தொழில்நுட்ப பூங்கா அமைக்க ஆலோசனை கூட்டம் கொங்கு விசைத்தறி உரிமையாளர்கள் சங்க தலைவர் சங்கமேஸ்வரன் தலைமையில் நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளர்களாக சேலம் மண்டல, துணி நூல் துறை, மண்டல இயக்குனர் அம்சவேணி, நாமக்கல் மாவட்ட தொழில் மைய உதவி இயக்குனர் செந்தில்குமார் பங்கேற்று ஜவுளி பூங்கா அமைவதற்கான விபரங்களை எடுத்துரைத்தனர்.

    அப்போது சேலம் மண்டல, துணி நூல் துறை, இயக்குனர் அம்சவேணி பேசியதாவது:

    சிறிய அளவிலான ஜவுளி தொழில்நுட்ப பூங்கா அமைக்க தமிழக முதல்வர் 2015ல் அறிவித்தார். இதில் உள் கட்டமைப்பு செலவினம், பொது வசதி மையம் அமைத்தல், தொழிற்கூடம் கட்டுமான செலவு இவற்றிற்கு 50 சதவீதம் மற்றும் இரண்டரை கோடி ரூபாய் எனும் வகையில் மானியம் வழங்கப்படும். இடம், உள் கட்டமைப்பு, பொது வசதி மையம் அமைத்தல், தொழிற்கூடம் கட்டுமானம், மற்றும் இயந்திரம் ஆகிய 5 இனங்கள் உள்ளது. 2 ஏக்கர் நிலம் இருக்க வேண்டும். 3 தொழில் முனைவோர் பங்கேற்கும் 3 தொழிற்கூடங்களாவது இதில் பங்கேற்க வேண்டும்.

    பொது கிளஸ்டர் அமைப்பில் இது வரும். மாநில அரசு, மானிய தொகைகளை மூன்று தருணங்களில் விடுவிக்கிறார்கள். குறைந்த பட்சம் 50 பூங்காக்கள் அமைக்க தமிழக அரசு முனைப்புடன் செயலாற்றி வருகிறது. குமாரபாளையம், பள்ளிபாளையம் பகுதியில் விசைத்தறி கூடங்கள் அதிகம் உள்ளதால், இங்குள்ள தொழில் முனைவோரை இதில் பங்கேற்க செய்திட, அதிக விண்ணப்பங்கள் பெற்றிட முயற்சி செய்யும் விதமாக இந்த கூட்டத்தை கூட்டியுள்ளோம். இப்பகுதி–யில் நிறைய விண்ணப்பங்கள் எதிர்பார்க்கிறோம். இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த கூட்டத்தில் குமாரபாளையம் சிட்ரா விசைத்தறி பணி மையம் (பொ) அதிகாரி பன்னீர்செல்வம், எஸ்.எஸ்.எம்.பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் பாலமுருகன் உள்ளிட்ட பலர் பங்கேற்று பேசினர். தொழில் முனைவோர்கள் பெருமளவில் பங்கேற்றனர்.

    • சென்னையில் நடைபெறவிருக்கும் மாநில அளவிலான போட்டிகளில் கலந்து கொள்ள இருக்கிறார்கள்.
    • மயிலாடுதுறை மாவட்ட மாணவ- மாணவிகளுக்கு வன உயிரினங்கள் பற்றிய விழிப்புணர்வு போட்டிகள் நடைபெற்றன.

    நாகப்பட்டினம்:

    நாகூரில் வன உயிரின வார விழாவையொட்டி பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு விழிப்புணர்வு போட்டிகள் நாகூர் தனியார் பள்ளியில் நடந்தது.

    மாணவர்களுக்கு ஓவிய போட்டி, வண்ணம் தீட்டுதல், வினாடி வினா, ஆங்கில பேச்சு போட்டி தமிழ் பேச்சு போட்டி, ஆங்கில கட்டுரை போட்டி, தமிழ் கட்டுரை போட்டிகள், பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு நடத்தப்பட்டன.

    இதில் 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.

    இதில் வெற்றி பெற்ற முதல் இடம் பிடித்த மாணவர்கள் சென்னையில் நடைபெறவிருக்கும் மாநில அளவிலான போட்டி களில் கலந்து கொள்ள இருக்கிறார்கள்.

    வன உயிரின காப்பாளர் யோகேஷ் குமார் மீனா ஆலோசனையின் பேரில் நாகை மற்றும் மயிலாடுதுறை மாவட்ட மாணவ மாணவிகளுக்கு வன உயிரினங்கள் பற்றிய விழிப்புணர்வு போட்டிகள் நடைபெற்றன.

    வனத்துறை வனச்சரகர் ஆதி லிங்கம் இதற்கான ஏற்பாடுகளை செய்து இருந்தார்.

    முன்னதாக நடைபெற்ற விழாவில் நாகை மாவட்டதேசிய பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர் முத்தமிழ் ஆனந்தன் மற்றும் மயிலாடுதுறை மாவட்ட தேசியபசுமைப்படை ஒருங்கிணைப்பாளர் செல்வகுமார் ஆகியோர் உயிரின வார விழா அனுசரிப்பதின் அவசியத்தை எடுத்துக் கூறினர்.

    விழாவில் பள்ளி முதல்வர் பெனெட் மேரி, காரைக்கால் சுந்தரபாண்டியன், மரம் சௌந்தரராஜன், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    நடுவர்களாக அசோக் மணிவண்ணன் பாஸ்கரன் செங்குட்டுவன், ஐசக் காட்சன், பிரியா ஆகியோர் செயல்பட்டனர்.

    பள்ளி ஆசிரியர்கள் சிவா, ரகு, பாஸ்கர் ஆகியோர் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களாக செயல்பட்டனர். அ

    க்டோபர் 2 முதல் அக்டோபர் எட்டு வரை நடைபெற இருக்கின்ற வன உயிரின வாரத்தில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற இருக்கின்றன என்று வன உயிரின காப்பாளர் யோகேஷ் குமார் மீனா தெரிவித்தார்.

    • குறுவட்ட போட்டிகள், மாவட்ட விளையாட்டு போட்டிகளுக்கு சில பள்ளிகளில் அனுமதி மறுப்பது.
    • உடற்கல்வி ஆசிரியர்களை தலைமை ஆசிரியர்கள் பள்ளி பணியிலிருந்து பணிவிடுப்பு செய்ய ஆணை.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் உடற்கல்வி ஆசிரியர் மற்றும் உடற்கல்வி இயக்குநர் சங்க செயற்குழு கூட்டம் மேம்பாலம் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.

    இக்கூட்டத்திற்கு மாநில பொருளாளர் முனைவர் தமிழ்செல்வன் தலைமை வகித்தார். மாநில செய்தி தொடர்பாளர் பால்ராஜ், மாநில அமைப்பு செயலாளர் செந்தில்வேலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.மாவட்ட செய்தி தொடர்பாளர் சந்துரு வரவேற்றார்.

    மூத்த சங்க நிர்வாகிகள் நவநீதகிருஷ்ணன், ரவிச்சந்திரன், கல்வி மாவட்ட நிர்வாகிகள் கோவிந்தராஜ், சுரேஷ்குமார், விஜயராகவன், கென்னடி, ரங்கநாதன், ஸ்ரீதர், வெங்கடஜலபதி, மகளிரணி செயலாளர்கள் லதா, வகிதா பானு, சாவித்ரி, கண்மணி, திலகவதி ஆகியோரின் ஆலோசனையின் பேரில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    உடற்கல்வி தேர்வு மற்ற பாடங்களின் தேர்வு கால அட்டவணையில் இணைத்து அனுப்ப வேண்டும் என்று மாவட்ட முதன்மை கல்வி அலுவலரிடம் தெரிவிப்பது, பொது நிதியிலிருந்து இணை இயக்குநரின் செயல்முறையின்படி விளையாட்டு உபகரணம், விளையாட்டு போட்டிக்கு செல்லும் மாணவர்களுக்கு உணவு படி, பயண படி வழங்க மறுக்கும் தலைமையாசிரியர்களிடம் நிதி பெறுவது சார்ந்து முதன்மை கல்வி அலுவலரிடம் முறையிட்டு நிதி பெறுவது, பாடகுறிப்பேடு எழுதுவதற்கு ஏதுவாக உடற்கல்விக்கு பாடபுத்தகம் மற்றும் சிலபஸ் வழங்குமாறு பள்ளி கல்வி ஆணையாருக்கு கடிதம் அனுப்புதல், குறுவட்ட போட்டிகள், மாவட்ட விளையாட்டு போட்டிகளுக்கு சில பள்ளிகளில் அனுமதி மறுப்பது சார்ந்து முதன்மை கல்வி அலுவலரிடம் பேசி தீர்வு காண்பது, உலக திறனாய்வு தேர்வு எடுக்க மற்ற பள்ளிகளுக்கு நியமிக்கபடும் உடற்கல்வி ஆசிரியர்களை தலைமை ஆசிரியர்கள் பள்ளி பணியிலிருந்து பணிவிடுப்பு செய்ய ஆணை வழங்கும்படி கோருவது என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முடிவில் வெங்கடாஜலபதி நன்றி கூறினார்.

    • மாநாட்டு பணிகளுக்காக 36 துறைகள் பிரிக்கப்பட்டன.
    • தோராயமான வரவு-செலவு சமர்ப்பிக்கப்பட்டது.

    அனுப்பர்பாளையம் :

    தமிழ்நாடு ஸ்ரீராமகிருஷ்ண ஸ்ரீ சாரதா தேவியார் சுவாமி விவேகானந்த பக்தர்களின் மாநில மாநாடு ஏற்பாடுகள் குறித்த ஒரு ஆலோசனைக் கூட்டம் திருமுருகன்பூண்டி ஸ்ரீ விவேகானந்த சேவாலயம் சார்பாக அதன் கிளை ஸ்தாபனமான ஸ்ரீ சாரதா தேவி நிவாசில் நடைபெற்றது. கூட்டத்திற்கு சென்னை, மயிலாப்பூர், ராமகிருஷ்ண மிஷன் மாணவர் இல்லத்தின் செயலர் ஸ்ரீமத் சுவாமி சத்யஞானானந்தஜி மகராஜ் தலைமையேற்று வழி நடத்தினார்.

    நாட்டறம்பள்ளி ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தின் தலைவர் ஸ்ரீமத் சுவாமி சமாஹிதானந்தஜி மகராஜ் ,செங்கல்பட்டு ராமகிருஷ்ண மிஷனின் செயலர் ஸ்ரீமத் சுவாமி வேதப்பிரியானந்தஜி மகராஜ் ஆசியுரை வழங்கினர். மாநாட்டு பணிகளுக்காக 36 துறைகள் பிரிக்கப்பட்டன. ஒவ்வொரு துறைக்கும் பொறுப்பாளர்கள் மற்றும் உதவியாளர்கள் நியமிக்கப்பட்டனர்.

    தோராயமான வரவு-செலவு சமர்ப்பிக்கப்பட்டது. வருகிற டிசம்பர் மாதம் 23,24 மற்றும் 25 ந்தேதிகளில் இந்த பக்தர்கள் மாநாடு அவிநாசி, ஆட்டையம்பாளையம், ஸ்ரீ செந்தூர் மகாலில் நடைபெறவுள்ளது. அகில உலக ஸ்ரீராமகிருஷ்ண மடத்தின் துணைத் தலைவர் ஸ்ரீமத் சுவாமி கௌதமானந்தஜி மகராஜ் பக்தர்களின் மாநாட்டைத் தொடங்கி வைக்கிறார். மாநிலத்தின் அனைத்து ஸ்ரீராமகிருஷ்ண மடத்தின் துறவியர்களும், ஸ்ரீ சாரதா மடத்தின் மாதாஜிக்களும் கலந்து கொள்கின்றனர்.

    இசைப்பாடகி நித்தியஸ்ரீ மகாதேவனின் இசைக் கச்சேரி நடக்க உள்ளது. நாடகம், கலை நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பள்ளி மற்றும் கல்லூரிகளில் பேச்சுப் போட்டி, கவிதைப் போட்டி, கட்டுரைப் போட்டி மற்றும் ஓவியப் போட்டி ஆகியவைகள் நடத்த ஏற்பாடு செய்யப் பட்டுள்ளன. சுமார் 5,000 பக்தர்கள் தங்க இட வசதி மற்றும் உணவு வசதி செய்யப்பட்டுள்ளது. கூட்டத்தில் 50 பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    • நிகழ்ச்சியில் பல்கலைக்கழகம் உருவாக்கிய மிதவைக்கூண்டு மாதிரி வெளியிடப்பட்டது.
    • மீன் வளர்ப்பு குளத்தில் பரிசல் பயணம், அலங்கார மீன் கண்காட்சி நடைபெற்று வருகிறது.

    தஞ்சாவூர்:

    தமிழ்நாடு மீன்வளக் கழகத்தின் தஞ்சாவூர் சூரக்கோட்டையில் உள்ள வளங்குன்றா நீருயிரி வளர்ப்பு மையத்தில் இன்று மீன் வளர்ப்பு விவசாயிகளுக்கான கருத்தரங்கம், கண்காட்சி தொடங்கியது.

    நிகழ்ச்சிக்கு வந்தவர்களை வளங்குன்றா நீருயிரி வளர்ப்பு இயக்ககத்தின் இயக்குனர் ஸ்டீபன் சம்பத்குமார் வரவேற்றார்.

    உணவு தொழில்நுட்பம் தொழில் மேம்பாடு மற்றும் மேலாண்மை நிறுவனம் தஞ்சாவூர் இயக்குனர் லோகநாதன் சிறப்புரையாற்றினார்.

    தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா மீன்வள பல்கலைக்கழக துணைவேந்தர் சுகுமார் தலைமை தாங்கினார்.

    நிகழ்ச்சியில் பல்கலைக்கழகம் உருவாக்கிய மிதவைக்கூண்டு மாதிரி வெளியிடப்பட்டது.

    தொழில்நுட்ப கையேடுகள் வெளியிடப்பட்டன. நீருயிரி வளர்பாளர் கூட்டம் சிறப்பு மலர் வெளியிடப்பட்டது.

    மேலும் நீருயிரி வனப்பாளர் சேவை செயலி வெளியிடப்பட்டன.

    இதில் முன்னணி மீன் தீவன நிறுவனங்களின் அரங்குகள், மீன் வளர்ப்பு குளத்தில் பரிசல் பயணம், அலங்கார மீன் கண்காட்சி நடைபெற்ற வருகிறது.

    இதில் வண்ணமயமான அலங்கார மீன் தொட்டிகளுடன் கூடிய அரங்கு அமைக்கப்பட்டுள்ளது.

    மீன், இறால் போன்றவற்றை கொண்டு செயல்படும் மீன் உணவுப் பொருள் விற்பனை கூடம் அமைக்கப்பட்டு மீன் உணவுப் பிரியர்களுக்கு வெவ்வேறு வகையான மீன் உணவுப் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    அயிரை மீன் வளர்ப்பு தொழில்நுட்ப காணொளி வெளியீடு, கூண்டுகளில் மீன் வளர்ப்பு தொழில்நுட்ப வெளியீடு, திலேப்பியா மீன் வளர்ப்பு குறித்த புத்தகங்கள் வெளியீடு, சூரிய ஒளியில் இயங்கும் காட்சி புகுத்திகளின் செயல் விளக்கம் ஆகியவற்றை மீன்வளப் பல்கலைக்கழக துணைவேந்தர் சுகுமார் வெளியிட அதனை சிறப்பு விருந்தினர் லோகநாதன் பெற்றுக்கொண்டார்.

    தொடர்ந்து மீன்வளப் பல்கலைக்கழக வளங்குன்றா மைய இயக்குனர் ஸ்டீபன் சம்பத்குமார் ஒருங்கிணைப்பில் நீருயிரி வளர்பாளர் கூட்டம் நடைபெற்றது.

    முடிவில் வளங்குன்றா நீருயிரி வளர்ப்பு மையத்தின் தலைவர் செந்தில்குமார் நன்றி கூறினார்மீன் வளர்ப்பு விவசாயிகளுக்கான கருத்தரங்கம், கண்காட்சி தொடக்கம்.

    நாளையும் இரண்டாவது நாளாக கருத்தரங்கம், கண்காட்சி நடைபெற உள்ளது.

    • குறைந்த வட்டியில் கடன் பெற்று, சேமிப்புகளை செலுத்தி பயனடைவீர்கள் என ஆலோசனை வழங்கப்பட்டது.
    • தெரு நிகழ்ச்சி மற்றும் தெரு நாடகம் முதலிய கலைநிகழ்ச்சிகள் மூலம் பொதுமக்களுக்கு தெரிவிக்கப்ட்டது.

    திருவையாறு:

    திருவையாறு அருகே வைத்தியநாதன்பேட்டை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் நிதி சார் கல்வி விழிப்புணர்வு முகாம் நடந்தது.

    இம்முகாமில் தஞ்சாவூர் மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் தமிழ்நங்கை தலைமை வகித்தார்.

    தஞ்சாவூர் மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குநர் பழனீஸ்வரி மற்றும் துணைப் பொதுமேலாளர் வரதராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    நபார்டு வங்கி மாவட்ட வளர்ச்சி மேலாளர் அனீஷ்குமார் சிறப்புரை ஆற்றினார்.

    வைத்தியநாதன் பேட்டை, ஆச்சனூர், கடுவெளி மற்றும் பெரும்புலியூர் ஆகிய வருவாய்க் கிராமங்களுக்கு வைத்தியநாதன் பேட்டை தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு சங்கம் வேளாண் சேவையாற்றி வருவதை பாராட்டியும் இக்கிரா மங்களை விவசாயப் பெருமக்கள் அனைவரும் இக்கூட்டுறவுச் சங்கத்தில் உறுப்பினராகச் சேர்ந்து 'வேளாண்மைக்கு தேவை யான நிதி உதவிகளை குறைந்த வட்டியில்கடனாகப் பெற்றும், வேளாண் கருவி களைப் பெற்றும், சேமிப்புகளை இச்சங்க த்தில் செலுத்தியும் பயனடை யுமாறு ஆலோச னைகள் வழங்கப்பட்டது.

    கூட்டுறவு சங்கத்தின் சேவைகளை தெரு நிகழ்ச்சி மற்றும் தெரு நாடகம் முதலிய கலைநிகழ்ச்சிகள் மூலம் பொதுமக்களுக்கு தெரிவிக்கப்ட்டது.

    இம்முகாமில் திருவையாறு மத்திய கூட்டுறவு வங்கி மேலாளர் பாரதிதாசன், வைத்தியநாதன் பேட்டை தொடக் வேளாண்மை கூட்டுறவு சங்கச் செயலாளர் தவமூர்த்தி, தலைவர் சங்க இயக்குநர்கள், சங்க உறுப்பினர்கள் ' மகளிர் சுய உதவிக் குழுவினர், ரேசன் கடை விற்பனையாளர்கள், ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாகக் கலந்து கொண்டனர்.

    தஞ்சாவூர் மத்திய கூட்டுறவு வங்கியின் பொதுமேலாளர் திராவிடச் செல்வன் வாழ்த்துரையும் நிகழ்ச்சிகளைத் தொகு த்தும் வழங்கினார்.

    விழாநி றைவில் தஞ்சாவூர் மத்திய கூட்டுறவு வங்கியின்முதன்மை வருவாய் அலுவலர் குமரவேல் நன்றி கூறினார். இம்முகாமிற்கான ஏற்பாடு களை வைத்திய நாதன் பேட்டை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க நிர்வா கத்தினர் செய்திருந்தார்கள்.

    ×