search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 209843"

    • சிறுபான்மையினர் நலத்திட்டங்கள் குறித்த பணி முன்னேற்ற ஆய்வுக்கூட்டம் நடந்தது.
    • பயனாளிகள் தேர்வில் கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள் குறித்து அலுவலர்களுக்கு ஆலோசனைகளை இயக்குநர் வழங்கினார்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் சிறுபான்மையினர் நலத்திட்டங்கள் தொடர்பான பணி முன்னேற்ற ஆய்வுக்கூட்டம் சென்னை சிறுபான்மையினர் நலத்துறை இயக்குநர் சுரேஷ்குமார் தலைமையில் நடைபெற்றது.

    இதில் 2021-22-ம் கல்வியாண்டில் சிறுபான்மையின மாணவ-மாணவிகளின் கல்வி உதவித்தொகை விவரங்கள், வக்பு வாரியத்தில் பதிவு செய்யப்பட்டு பள்ளி வாசல்களில் பணிபுரியும் உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நலவாரியம் குறித்த திட்டங்கள், சிறுபான்மையின பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் செயல்படுத்தப்படும் கடன் திட்டங்கள், தமிழக அரசு சிறுபான்மையின சமூக மக்களின் நலனுக்காக அறிமுகப்படுத்தப்பட்டு நடைமுறைப் படுத்தப்படும் நலத்திட்டங்கள் பற்றி விவாதிக்கப்பட்டது.

    பின்னர் பயனாளிகள் தேர்வில் கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள் குறித்து அலுவலர்களுக்கு ஆலோசனைகளை இயக்குநர் வழங்கினார்.

    முஸ்லீம் பெண்கள் உதவும் சங்கம் மற்றும் கிறிஸ்தவ பெண்கள் உதவும் சங்கங்களின் பயனாளிகளை நேரடியாக கள ஆய்வு செய்து பயனாளிகளிடம் சங்கங்களின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து கேட்டறிந்தார்.

    தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மற்றும் கிறிஸ்தவ மகளிர் உதவும் சங்கம் மூலம் பயனடைந்த பயனாளிகளிடம் சிறுபான்மையின நலத்திட்டங்களால் பொருளாதார ரீதியாக தன்னிறைவு அடைந்த விவரத்தை கேட்டறிந்து, ஆய்வு செய்தார்.இந்த கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் ரவிக்குமார், கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் செந்தில்குமார், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் ஞானவேல் உட்பட மாவட்ட முஸ்லீம் மற்றும் கிறிஸ்தவ மகளிர் உதவும் சங்க கவுரவச் செயலாளர்கள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

    • கரும்பு பதிவு செய்து அரவைக்கு கொள்முதல் செய்யப்படுகிறது.
    • கரும்பு 12 மாதத்திற்குள் வெட்டப்பட வேண்டும்.

    மடத்துக்குளம்:

    உடுமலை அருகேயுள்ள கிருஷ்ணாபுரம் அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலையின் கரும்பு கட்டுப்பாட்டு பகுதிகளாக உடுமலை, மடத்துக்குளம், பல்லடம், தாராபுரம், பழனி, நெய்க்காரபட்டி, ஒட்டன்சத்திரம், கொமரலிங்கம் உள்ளிட்ட பகுதிகள் உள்ளன.

    இப்பகுதியில் உள்ள விவசாயிகளிடமிருந்து ஒப்பந்த அடிப்படையில் கரும்பு பதிவு செய்து அரவைக்கு கொள்முதல் செய்யப்படுகிறது. ஆண்டுதோறும் ஏப்ரல் முதல் செப்டம்பர் மாதம் வரை கரும்பு அரவை செய்து சர்க்கரை உற்பத்தி செய்யப்படுகிறது.நடப்பாண்டு 3 ஆயிரத்து 10 ஏக்கர் கரும்பு பதிவு செய்யப்பட்டு ஒரு லட்சத்து 8 ஆயிரம் டன் கரும்பு அரவை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

    கடந்த ஏப்ரல் 6-ந்தேதி ஆலையில், கரும்பு அரவை துவங்கியது.ஆட்கள் பற்றாக்குறையால், விளைநிலங்களில் கரும்பு வெட்டும் பணி இழுபறியானது. அதோடு ஆலையிலுள்ள பழமையான இயந்திரங்கள் புதுப்பிக்காததால் அடிக்கடி இயந்திரங்கள் பழுது ஏற்பட்டு ஆலை அரவைப்பணிகள் பாதித்து வருகிறது.இதனால் குறிப்பிட்ட காலத்திற்குள் நிலையிலுள்ள கரும்பு வெட்டாமல் காய்ந்தும், வீணாகியும் வருவதாகவும் முன்னுரிமை அடிப்படையில் கரும்பு வெட்டாமல் முறைகேடு நடப்பதாகவும் விவசாயிகள் அதிருப்தி தெரிவித்து வந்தனர்.

    இந்நிலையில் பழனி நெய்க்காரபட்டியைச்சேர்ந்த கரும்பு விவசாயிகள் மற்றும் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிர்வாகிகள் தலைமையில் 40க்கும் மேற்பட்டோர் ஆலையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இது குறித்து விவசாயிகள் கூறியதாவது:-

    கரும்பு 12 மாதத்திற்குள் வெட்டப்பட வேண்டும்.ஆனால் 14 மாதம், 16 மாதம் ஆகியும் இதுவரை வெட்டப்படவில்லை.இதனால் கரும்பு பயிர்கள் காய்ந்தும், எடை குறைந்தும் விவசாயிகளுக்கு பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளது.மேலும் சண்முகம்பாறை பகுதியை சேர்ந்த விவசாயி அழகுநாச்சிக்கு சொந்தமான கரும்பு அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில் மின் கசிவு விபத்து ஏற்பட்டு பாதித்தது.இது குறித்து சர்க்கரை ஆலை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தும் உடனடியாக வெட்டி அரவைக்கு கொண்டு வராமல் முழுவதும் வீணாகியுள்ளது.

    எனவே குறிப்பிட்ட காலத்திற்குள் கரும்பு வெட்டி, அரவைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என விவசாயிகள் ஆக்ரோஷமாக கூறினர்.போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளிடம் ஆலை நிர்வாகத்தினர் மற்றும் போலீசார் பேச்சு நடத்தினர். இதில் வருகிற 6-ந் தேதி, ஆலை நிர்வாக குழு மற்றும் மேலாண்மை இயக்குனர் தலைமையில் விவசாயிகள் ஆலோசனைக் கூட்டம் நடத்தி தீர்வு காண முடிவு செய்யப்பட்டது. 

    • கிராம உதவியாளர் சங்க ஆலோசனை கூட்டம் நடந்தது.
    • மாநில துணைத் தலைவர் மாரி தலைமையில் சிவகங்கையில் நடந்தது.

    சிவகங்கை

    தமிழ்நாடு அரசு கிராம உதவியாளர் சங்க ஆலோசனை கூட்டம் மாநில துணைத் தலைவர் மாரி தலைமையில் சிவகங்கையில் நடந்தது.

    கிராம உதவியாளர்களுக்கு அலுவலக உதவியாளருக்கு இணையான சம்பளம் வழங்க வேண்டும், 10 ஆண்டு பணி முடித்த கிராம உதவியாளர்களுக்கு பணி உயர்வு வழங்க வேண்டும், காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    மாநில இணைச் செயலாளர் ரமேஷ், மாவட்ட தலைவர் சுருளிபாண்டி, பொருளாளர் ஜெயபாலன், மகளிரணி செயலாளர் காளீஸ்வரி, துணைச் செயலாளர் ஜெயக்குமாரி, வட்டத் தலைவர் செல்வகுமரன், பொருளாளர் கார்த்திகேய ராஜா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • பண்ருட்டியில் முந்திரி தொழில் வளர்ச்சி குறித்து ஆலோசனை நடைபெற்றது.
    • ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொண்டு முந்திரிதொழிலுக்கு தேவையான வசதிகள் குறித்தும் அதற்கான வழிமுறைகள்குறித்தும்கேட்டறிந்தார்.

    கடலூர்:

    பாரதீய ஜனதா கட்சி தேசிய உறுப்பினர் கல்யாணராமன் முந்திரி தொழில் வளர்ச்சி குறித்து ஆராய பண்ருட்டி வந்தார்.

    பண்ருட்டி, காட்டாண்டி க்குப்பம், கீழக்குப்பம் பகுதியிலுள்ள முந்திரி நிறுவனங்களுக்கு நேரில் சென்று பார்வையிட்டு முந்திரி கொட்டை உடைக்கும்பணிகளை பார்வையிட்டார்.

    பண்ருட்டி பிரதீபா கேஷ்யூஸ்க்கு வருகை தந்த இவரை, பண்ருட்டி பிரதீபா கேஷ்யூஸ்நிறுவனத்தின் அதிபர்கள் மாயகிருஷ்ணன், தமிழ்நாடுமுந்திரிஉற்பத்தி மற்றும் ஏற்றுமதியாளர் சங்கசெயலாளர் ராம கிருஷ்ணன், தேவநாதன், பாலகிருஷ்ணன், ரவி ஆகியோர் வரவேற்றனர்.தொடர்ந்து தமிழ்நாடு முந்திரி உற்பத்தி மற்றும் ஏற்றுமதியாளர் சங்க தலைவர்மலர்வாசகம், செயலாளர் ராமகிரு ஷ்ணன், பொருளாளர் செல்வமணி, ஆகியோர் தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொண்டு முந்திரிதொழிலுக்கு தேவையான வசதிகள் குறித்தும் அதற்கான வழிமுறைகள்குறித்தும்கேட்டறிந்தார்.

    இரண்டு நாள் பயணத்தின் மூலம் தான்அறிந்து கொண்டவிவரங்களை அறிக்கையாக தயார் செய்து அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு சென்று பிரச்சினை களைத் தீர்க்க உதவ உதவுவதாக கல்யாணராமன் உறுதி யளித்தார்.

    • அனைத்துதுறை அதிகாரிகளுடன் கலெக்டர் ஆலோசனை வழங்கினார்.
    • பல முக்கியப் பிரச்சினைகள் குறித்து கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் நேரில் சென்று ஆய்வு செய்தாா்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டத்தில் பல வளா்ச்சித் திட்டங்கள் செயல்படுத்தப்படவில்லை என புகாா் எழுந்தது.

    ரெயில்வே பாலம் கட்டுதல், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அடிப்படை வசதியின்மை, நீராதார கண்மாய்கள் தூா்வாரப்படாதது என பல முக்கியப் பிரச்சினைகள் குறித்து கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் நேரில் சென்று ஆய்வு செய்தாா்.

    இதையடுத்து வருவாய்த் துறை, மருத்துவத் துறை, மருத்துவக் கல்லூரி மருத்துவமனை நிா்வாகத்தினா் மற்றும் மீன்வளத் துறை, வேளாண்மைத் துறை உள்ளிட்ட அனைத்துத் துறை அதிகாரிகளையும் அழைத்து, திட்டங்கள், செயல்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்தினாா்.

    மக்கள் நலத்திட்டங்களை தாமதமின்றி நிறைவேற்ற அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.

    • தி.மு.க ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
    • கள்ளிக்குடி ஒன்றிய செயலாளர் ராமமூர்த்தி முன்னிலை வகித்தார்.

    திருமங்கலம்

    மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே கள்ளிக்குடி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட செங்கப்படை பகுதியில் அ.தி.மு.க. ஒன்றிய கவுன்சிலர் அன்னலட்சுமி சமீபத்தில் மரணமடைந்தார். இதனையொட்டி இந்த வார்டில் தற்போது இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.

    இந்த தேர்தலில் தி.மு.க. வேட்பாளரை வெற்றி பெற செய்யும் வகையில் செங்கபடை தெற்குமாவட்ட செயலாளா் மணிமாறன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் மணிமாறன் பேசிய தாவது:-

    கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் செங்கபடை பகுதிக்கு எந்த ஒரு வளர்ச்சி திட்டமும் இல்லை. இந்த வார்டில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. கடந்த ஓராண்டு தி.மு.க. ஆட்சியில் பல்வேறு நலத்திட்டங்களை அரசு செய்துள்ளது. மகளிரு க்கான இலவச பஸ் வசதி, கூட்டுறவு வங்கியில் நகை கடன் ரத்து, புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கி தந்துள்ளது.

    இன்னும் 6 மாதகாலத்தில் அனைத்து அடிப்படை பிரச்சினைகளுக்கும் தீர்வு காணப்படும். உங்களின் அடிப்படை வசதிகளை உடனடியாக செய்து தரப்படும். இங்கு நடைபெற உள்ள இடைத்தேர்தலில் தி.மு.க. வேட்பாளர் அமோகவெற்றி பெறுவார்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கள்ளிக்குடி ஒன்றிய செயலாளர் ராமமூர்த்தி முன்னிலை வகித்தார். அவைத்தலைவர் நாக ராஜன், பொதுக்குழு உறுப்பினர் சிவமுருகன், திருமங்கலம் நகரசெயலாளர் ஸ்ரீதர், நகராட்சி தலைவர் ரம்யா முத்துக்குமார், துணைத்த லைவர் ஆதவன்அதியமான், அணிஅமைப்பாளர்கள் மதன்குமார், பாசபிரபு, வினோத், மாவட்ட கவுன்சி லர்கள் கிருத்திகா தங்க பாண்டி, வசந்தா சரவண பாண்டி, முன்னாள் ஒன்றிய தலைவர் கொடிசந்திரசேகர், முன்னாள் ஒன்றிய செய லாளர் ஆதிமூலம், ஒன்றிய இளைஞரணி சூரிசுரேஷ், ஒன்றிய பிரதிநிதி சாய் பாண்டியராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    முன்னதாக செங்கப்ப டை கிராமத்தில் பொதும க்களிடம் அரசின் சாதனை கள் குறித்து மாவட்ட செய லாளர் மணிமாறன் பேசினார்.

    • போலீஸ் துணை சூப்பிரண்டு நேரில் ஆய்வு
    • 2000 பக்தர்கள் கோவில் வளாகத்தில் நிற்பதற்கு வசதி உண்டு

    கன்னியாகுமரி:

    திருவட்டார் ஆதிகேசவ ப்பெருமாள் கோவில் கும்பாபிஷேக விழா அடுத்த மாதம் 6-ந்தேதி நடைபெறுவதையொட்டி அதிகாரிகள் முகாமிட்டு வேலைகளை முடுக்கி விட்டனர்.

    கும்பாபிஷேக விழாவை சிறப்பாக நடத்துவது குறித்து நேற்று தேவஸ்வம் போர்டு இணை ஆணையாளர் ஞானசேகர், சூப்பிரண்டு ஆனந்த், பொறியாளர் ராஜ்குமார், தக்கலை டி.எஸ்.பி. கணேசன், திருவ ட்டார் இன்ஸ்பெக்டர் ஷேக் அப்துல் காதர் மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள் கோயிலுக்குச்சென்று ஆய்வு மேற்கொண்டனர்.

    கும்பாபிஷேக விழாவை யொட்டி பக்தர்கள் வழக்க மாக வரும் கிழக்குவாசல் வழியாக அனுமதிக்காமல் மேற்கு வாசல் வழியாக கோயினுள் அனுமதிக்கப்படுவர்.

    கும்பாபிஷேக வேளை யில் கோயில் வளாகத்தில் 25 ஆயிரம் பக்தர்கள் வருகை தருவார்கள் என்றும், அந்நேரம் 2000 பக்தர்கள் கோவில் வளா கத்தில் நிற்பதற்கு வசதி உண்டு, அன்றைய தினம் ஒரு லட்சம் பக்தர்கள் வந்து செல்வார்கள் என்றும் அதிகாரிகள் தரப்பில் சொல்லப்பட்டது.

    மேலும் கோயில் வரை படத்தை வைத்து எந்தெந்த பகுதியில் என்னென்ன பணிகள் மேற்கொ ள்ளலாம் என்றும் ஆய்வு மேற்கொண்டனர்.

    கோவிலில் மூலவர் சிலை புதுப்பிக்கும் பணி முடிவடைந்து விட்டது. கோயில் கருவறையில் தற்போது 22 அடி நீளமுள்ள கடுசர்க்கரையோக திரு மேனியை கூடுதல் பள பளப்புடன் பக்தர்கள் தரிசிக்க முடியும். மேலும் சிலையின் பின்புறமுள்ள சுவரில் சங்கை உரைத்து அதன்மூலமாகக் கிடைக்கப்பெற்ற வெள்ளை வர்ணமாக பூசியுள்ளதால் சிலையின் அழகு கூடுதல் அழகுடன் காட்சி தருகிறது. கோயில் பிரகாரத்தில் மின் விளக்குகள் பணி முடிவடைது விட்டது.

    பிரகாரங்களில் வர்ணம் பூசும்பணி நடந்து வருகிறது. கோவில் பழமை மாறாமல் மூலிகை ஓவியங்கள் புதுபிக்கப்பட்டு உள்ளன. இவற்றையெல்லாம் தொல்லியல் துறை சிறப்பு அலுவலர் லோகநாதன் ஆய்வு மேற்கொண்டார் அறநிலையத் துறை பொறி யாளர் ராஜ்குமார் ஒவியங்க ள் புதுபிப்பது தொடர்பாக ஆய்வு செய்தார்.

    • அ.தி.மு.க. ஆலோசனை கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக மாவட்ட செயலாளர் பேட்டியளித்தார்.
    • பொதுக்குழு கூட்டத்திற்கு பங்கேற்க நகர, ஒன்றிய பொதுக்குழு உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டது.

    விருதுநகர்

    அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமையில் செயல்படுவது தொடர்பாக கடந்த ஒரு வாரமாக சர்ச்சை எழுந்துள்ளது. இது தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் கருத்துக்கள் தெரிவித்து வருகின்றன. பல்வேறு மாவட்டங்களில் அ.தி.மு.க.வினர் கூட்டங்களை நடத்தி யாருக்கு ஆதரவு என தெரிவித்து வருகின்றன.

    இந்த நிலையில் விருதுநகர் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். இதில் சென்னையில் நாளை மறுநாள் நடைபெற உள்ள பொதுக்குழு கூட்டத்திற்கு பங்கேற்க நகர, ஒன்றிய பொதுக்குழு உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டது.

    கூட்டத்துக்கு பின் மாவட்டச் செயலாளர் ரவிச்சந்திரன் நிருபர்களிடம் கூறுகையில், கிழக்கு மாவட்ட ஒன்றிய, நகர நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இதில் கட்சியின் நலன் கருதி ஒற்றை தலைமைக்கு முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு தெரிவிப்பது என முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

    • திருவட்டார் ஆதிகேசவப் பெருமாள் கோவிலில் கும்பாபிஷேக விழா 418 வருடங்களுக்கு பிறகு நடைபெற உள்ளது
    • கும்பாபிஷேக நாளன்று (6-ந் தேதி) பொது விடுமுறை வழங்க முதல் அமைச்சருக்கு கோரிக்கை

    நாகர்கோவில்:

    கன்னியாகுமரி மாவட்ட இந்து சமய அறநிலையத்துறை சார்பில், திருவட்டார் ஸ்ரீ ஆதிகேசவப் பெருமாள் கோவிலில் ஜூலை மாதம் 6-ந் தேதி மகா கும்பாபிஷேக விழா நடத்துவது குறித்து துறை அதிகாரிகளுடனான ஆலோசனை கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடை பெற்றது.

    குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த தலைமையில், எஸ்.பி ஹரி கிரண் பிரசாத் முன்னிலையில் நடந்த இந்த கூட்டத்தில் அமைச்சர் மனோதங்கராஜ் கலந்து கொண்டு, துறை அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டார்.

    பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:

    திருவட்டார் ஆதி கேசவப்பெருமாள் கோவிலில் கும்பாபிஷேக விழா 418 வருடங்களுக்கு பிறகு நடைபெற உள்ளதை யொட்டி, மாவட்ட நிர்வாகத்திலுள்ள அனைத்து துறையினரும். ஒன்றிணைந்து பணியாற்றிட அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    காவல்துறையினர் வருகிற 29-ந் தேதி முதல் ஜூலை 9-ந் தேதி வரை பக்தர்க ளுக்கு தேவையான பாது காப்பு வசதிகளை செய்ய வேண்டும்.

    கும்பாபிஷேக தினத் தன்று கூடுதல் பாது காப்பு வழங்குவதோடு புறக்காவல் நிலையம் அமைத்தல், தனியார் வாகனங்களை ஒழுங்குப் படுத்தி அதற்குரிய இடத் தில் நிறுத்தம் செய்வதற் கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும்.

    மின்சார வாரியதுறை யினர் தங்கு தடையின்றி சமச் சீரான மின்சாரம் வழங் குவதோடு கோவிலை சுற்றியுள்ள சாலை யோரங்களில் உள்ள மின் விளக்குகள் தடையின்றி எரிவதற்கும் ஆவன செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    போக்குவரத்துக்கழகம் வாயிலாக மாவட்டத் திற்குட்பட்ட அனைத்து பேருந்துதடங்களிலிருந் தும் பக்தர்களின் தேவைக் கேற்ப சிறப்பு பேருந்துகள். இயக்கநடவடிக்கைமேற் கொள்ள வேண்டும்.

    திருவட்டாறு பேரூ ராட்சி வாயிலாக வாகன பவனி வரும் தெரு, வீதி கள் மற்றும் கிராமம் வரை யிலான சாலைகளையும், பேருந்து நிலையம் முதல் திருக்கோவில் வரையிலான சாலைகளையும் சீர் செய்தல், தெருவீதிகளை சுத்தமாக பராமரித்தல், பக்தர்களுக்கு தற்காலிக கழிவறைகள் அமைத்து அதற்கு தேவையான தண்ணீரை வழங்குதல், கும்பாபிஷேக நாட்களில் குடிநீர் தட்டுப்பாடின்றி கிடைக்க வேண்டிய ஏற்பாடுகள் செய்தல், வெளியூரில் இருந்து வரும் சுற்றுலா பேருந்துகளை நிறுத்தம் செய்ய அனும திக்காது இருத்தல்.

    வீதிகளில் குறுக்கே விளம்பர பேனர்கள் கட்டுவதை தடை செய்வதற் கான நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும்.

    சுகாதாரத்துறை அலு வலர்கள் பக்தர்களுக்கு வேண்டிய சுகாதார ஏற் பாடுகள் செய்தல், சுகா தார வசதிகள் செய்தல் மற்றும் சுத்தமான குடிநீர் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும்.

    மருத்துவத்துறை சார்பாக கோவிலுக்குச் சொந்தமான கட்டிடத் தில் புறநோயாளிகள் சிகிச்சைப்பிரிவு ஒன்று தற்காலிகமாக அமைத்து மருத்துவ அலுவலர்கள் மற்றும் மருந்தாளுனர் மூலம் பொதுமக்களுக்கு தேவையான அவசர வச திகள் செய்தவதை உறுதிப டுத்த வேண்டும்.

    பொதுப் பணித்துறையின் வாயிலாக பந்தல் மற்றும் பேரிகாட் பணிகளை பார்வையிட்டு உறுதித்தன்மை சான்றிதழ் வழங்க வேண்டும்.

    நெடுஞ்சாலை மற்றும் கிராமப்பணிகள் வாயி லாக பந்தல் அமைப்ப தற்கு அனுமதி வழங்குதல், திருவட்டாறு நான்குமுனை சந்திப்பு. திருவட்டாறு தபால் நிலையம் சந்திப்பு. திருவட்டாறு காங்கரை சந்திப்பு. திருவட்டாறு எக்சல் பள்ளி சந்திப்பு, ஆற்றார் கழுவனதிட்டை சந்திப்பு, திருக்கோயிலுக் குச்செல்லும் அனைத்து சாலைகளும் சீரமைத்து செப்பனிட வேண்டும்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    மேலும் பக்தர்களின் வேண்டுகோளுக்கிணங்க கும்பாபிஷேக நாளன்று (6-ந் தேதி) பொது விடுமுறை வழங்க முதல் அமைச்சருக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

    கூட்டத்தில் பத்மநாபபுரம் சார் ஆட்சியர் டாக்டர் அலர்மேல் மங்கை, இந்து சமய அற நிலையத்துறை இணை ஆணையர் ஞானசேகர், உடபட பலர் கலந்து கொண்டனர்.

    • சிதம்பரம் நடராஜர் கோவில் நிர்வாகம் குறித்து ஆலோசனை தெரிவிக்க அறநிலையத்துறை அழைப்பு விடுத்துள்ளது.
    • கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் உலக பிரசித்தி பெற்ற நடராஜர் கோவில் உள்ளது. பொதுதீட்சிதர்கள் நிர்வாகத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் உலக பிரசித்தி பெற்ற நடராஜர் கோவில் உள்ளது. பொதுதீட்சிதர்கள் நிர்வாகத்தின் கீழ் செயல்பட்டு வரும் இந்த கோவிலில் அறநிலை–யத்துறை உத்தரவின் பேரில் கண்காணிப்பு குழுவினர் கடந்த வாரம் 2 நாட்கள் ஆய்வு செய்ய சென்றனர். இதற்கு கோவில் பொது தீட்சிதர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அதோடு அவர்கள் அதிகாரி–களின் ஆய்வுக்கு எந்தவித ஒத்து–ழைப்பும் வழங்கவில்லை. சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின் படி தனிக்குழு அமைத்தால் தான் ஒத்துழைப்பு தருவோம் என்று பொது தீட்சிதர்கள் சார்பில் தெரிவிக்கப் பட்டது. எனவே ஆய்வுக்கு சென்ற அதிகாரிகள் ஏமாற்றத்துடன் திரும்பினர். இந்த நிலையில் கோவில் நிர்வாகம் குறித்து கருத்து தெரிவிக்க ஆலோசனை வழங்கலாம் என இந்துசமய அறநிலையத்துறை அழைப்பு விடுத்துள்ளது. இதுகுறித்து கடலூர் புதுப்பாளையத்தில் உள்ள துணை ஆணையர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியதாவது:- சிதம்பரம் நடராஜர் கோவில் குறித்து ஆணைய ரால் அமைக்கப்பட்ட விசாரணை குழுவிடம் கோவில் நலனில் அக்கறை உள்ள நபர்கள் தங்களது கருத்துக்கள் மற்றும் ஆலோ–ச–னைகளை வருகிற 20 மற்றும் 21 ஆகிய தேதிகளில் காலை 10 மணி–முதல் 3 மணிவரை நேரில் தெரிவிக்க–லாம். அதோடு மின் அஞ்சல் முகவரியிலும் அனுப்பலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • கொரோனா ஊரடங்குக்கு பின்தேரோட்டம் நடப்பதால், அதிக எண்ணிக்கையிலான பக்தர்கள் பங்கேற்பர்.
    • அரிசிக்கடை வீதியில் கனரக வாகனங்கள் வந்து செல்ல கட்டுப்பாடு விதிக்க வேண்டுமென ஆலோசிக்கப்பட்டது.

    திருப்பூர்,

    திருப்பூர் ஸ்ரீவிஸ்வேஸ்வர சுவாமி மற்றும் வீரராகவப்பெருமாள் கோவில்களின் தேரோட்டம் நாளை 12-ந்தேதி , நாளை மறுநாள் 13-ந்தேதி நடக்கிறது.இதற்கான முன்னேற்பாடுகள் தொடர்பான ஆலோசனை கூட்டம் ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் நடந்தது. போலீஸ் உதவி கமிஷனர் கார்த்திகேயன் தலைமையில், ஆர்.டி.ஓ., நேர்முக உதவியாளர் தமிழ்செல்வன், கோவில் செயல் அலுவலர் சரவணபவன், மாநகராட்சி அலுவலர்கள், போலீசார் மற்றும் சுகாதார அலுவலர்கள், மின்வாரிய அலுவலர்கள் பங்கேற்றனர்.

    கொரோனா ஊரடங்குக்கு பின்தேரோட்டம் நடப்பதால், அதிக எண்ணிக்கையிலான பக்தர்கள் பங்கேற்பர். எனவேபாதுகாப்பு பணிகளை திட்டமிட்டு மேற்கொள்ள வேண்டும். கழிப்பிட வசதி, குடிநீர் வசதிகளையும் செய்துகொடுக்க வேண்டும்.தேரோட்டத்தை முன்னிட்டு, மாநகராட்சி நிர்வாகம் தேர்வீதிகளை சீரமைத்து கொடுக்க வேண்டும். மின்வாரியம், உரிய ஆய்வின் அடிப்படையில் மின் வினியோகத்தை மாற்றியமைக்க வேண்டும். அரிசிக்கடை வீதியில் கனரக வாகனங்கள் வந்து செல்ல 12, 13 -ந் தேதிகளில் கட்டுப்பாடு விதிக்க வேண்டுமென ஆலோசிக்கப்பட்டது.

    • 100 சதவீதம் குழந்தைகளை அரசுப்பள்ளிக்கு அனுப்பிய கிராமங்களுக்கு பரிசு உள்ளிட்ட விழிப்புணர்வை பொதுமக்களிடம் ஏற்படுத்த வேண்டும்.
    • மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் புகழேந்தி, மாவட்ட சமூக நல அலுவலர் சரோஜினி, மாவட்ட கல்வி அலுவலர்கள் பிரின்ஸ் ஆரோக்கியராஜ் (நாகர்கோவில்), ராமச்சந்தி ரன் நாயர் (குழித்துறை), பெருமாள் (தக்கலை), ராமசுப்பு (திருவட்டார்), ஆசிரியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    நாகர்கோவில்:

    கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் அலுவலக நாஞ்சில் கூட்டரங்கில், மாவட்ட கலெக்டர் அரவிந்த் அரசு தொடக்கப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கை பணிகள் குறித்தும், மாணவ-மாணவியர்களுக்கு கல்வி கற்பிக்கும் முறை குறித்தும், துறைசார்ந்த அலுவலர்களுடன் நேற்று ஆலோசனை நடத்தினார்.

    பின்னர் அவர் கூறியதாவது:-

    அரசு பள்ளிகளில் பராமரிக்கப்படும் பதிவேட்டில் கணக்கெடுப்பின்படி, 5 வயதிற்கு மேற்பட்ட மாணவர்கள், அனை வரையும் முதல் வகுப்பில் சேர்த்தல் வேண்டும். அனைத்து அரசு பள்ளிகள் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளில் 1, முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு வாரத்தில் 2 நாட்கள் கண்டிப்பாக உடற்பயிற்சி கற்று கொடுக்க வேண்டும்.

    1 முதல் 12 ஆம் வகுப்பு வரை தமிழ் வழியில் பயிலும் மாணவர்களுக்கு அரசுப்பணியில் 20 சதவீத மும், 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை அரசுப்பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு 7.5 சதவீதம் முன்னுரிமை, அரசுப்பள்ளிகளில் பயிலும் மாணவிகளுக்கு உயர் கல்வி பயில மாதந்தோறும் ரூ.1000 என அரசுப் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு முன்னுரிமைகள் வழங்கப்படுவதற்கான நடவடிக்கையினை மேற்கொள்ள வேண்டும்.

    ஒற்றை இலக்க மாணவர் எண்ணிக்கை உள்ள பள்ளிகளில் பணிபுரியும் தலைமை ஆசிரியர் அர்ப்பணிப்புடன் அதிகமாக மாணவ, மாணவியர்களை அப்பள்ளியில் சேர்ப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

    பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களில் அனைத்து ஆசிரியர்களும் விழிப்புணர்வு பிரசாரத்தை முன்னெடுத்து செல்வதோடு, பள்ளிகள் திறப்பதற்கு மூன்று நாட்களுக்கு முன்பாக முக்கியமான பகுதிகளில் பேரணி நடத்தப்பட வேண்டும்.

    இடைநிற்றல் அதிகமான இடங்களில் பேரணி நடத்தி மாணவர் சேர்க்கை செய்தல், உள்ளாட்சி பிரதிநிதிகள் போன்றவர்களை ஈடுபடுத்து வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளலாம். 100 சதவீதம் குழந்தைகளை அரசுப்பள்ளிக்கு அனுப்பிய கிராமங்களுக்கு பரிசு உள்ளிட்ட விழிப்புணர்வை பொதுமக்களிடம் ஏற்படுத்த வேண்டும். அங்கன்வாடி குழந்தைகளை அரசுப்பள்ளி யில் சேர்க்க வேண்டும். வீடு வீடாக சென்று அழைப்பு விடுக்கலாம்.

    தனியார் பள்ளிகளுக்கு இணையாக ஆன்லைன் கிளாஸ், வாட்ஸ் ஆப் குரூப்-ல் பயிற்சி, ஆசிரியர் மாணவர் பாட பரிமாற்றம் நடைபெறுவதை விளக்கலாம். சமூக வலை தளங்களில் ஆடியோ வீடியோ பதிவுகள் மேற்கொள்ளச் செய்யலாம்.

    பள்ளியில் சேரும் குழந்தைகளுக்கு ஊக்கப்பரிசு வழங்கலாம். ஒவ்வொரு பள்ளித்தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் தங்களது கடமைகளாக கருதி மேற்கொள்ள வேண்டும். பள்ளி மேலாண்மைக் குழு மற்றும் தன்னார்வர்கள் பெற்றோரிடம் நேரடியாக உரையாடுவதோடு, குழந்தை களின் பெற்றோர்களை வரவழைத்து புகைப்ப டங்கள் காணொளிகளை திரை யிட்டு நலத்திட்டங்களை எடுத்துக் கூறலாம். இவ்வாறு அவர் கூறினார்.

    மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் புகழேந்தி, மாவட்ட சமூக நல அலுவலர் சரோஜினி, மாவட்ட கல்வி அலுவலர்கள் பிரின்ஸ் ஆரோக்கியராஜ் (நாகர்கோவில்), ராமச்சந்தி ரன் நாயர் (குழித்துறை), பெருமாள் (தக்கலை), ராமசுப்பு (திருவட்டார்), ஆசிரியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×