search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 209843"

    • தென்காசி வடக்கு மாவட்ட அ.ம.மு.க நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் கடையநல்லூரில் நடந்தது
    • தினகரனுக்கு கே.டி.சி. நகரில் பிரமாண்டமான வரவேற்பு அளிக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    கடையநல்லூர்:

    கடையநல்லூரில் தென்காசி வடக்கு மாவட்ட அ.ம.மு.க நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் கடையநல்லூர் நகர அலுவலகத்தில் நடந்தது.

    கூட்டத்திற்கு மாவட்ட அவைத்தலைவர் ஹைதர் அலி தலைமை தாங்கினார். மாவட்ட இணைச்செயலாளர் சுமதி, துணைச் செயலாளர்கள் கோமதி, அருணகிரி சாமி, சுப்பிரமணியசுவாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    நகர செயலாளர் வேல்சாமி பாண்டியன் வரவேற்றார். கூட்டத்தில் வடக்கு மாவட்ட செயலாளர் ராமச்சந்திர மூர்த்தி என்ற வினோத் சிறப்புரையாற்றினார்.

    வருகிற 10-ந்தேதி (வெள்ளிக்கிழமை) தூத்துக்குடி தெற்கு மாவட்டத்திற்கு நெல்லை வழியாக வருகை தரும் பொதுச்செயலாளர் தினகரனுக்கு கே.டி.சி. நகரில் தென்காசி வடக்கு மாவட்டத்தின் சார்பில் பிரமாண்டமான முறையில் வரவேற்பு அளிப்பது,

    வடக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட நகர, பேரூர், ஒன்றிய, கழகத்துக் உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் அதிக அளவு உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்தல் உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    இதில் நகர செயலாளர்கள், பேரூர் செயலாளர்கள், ஒன்றிய செயலாளர்கள், மாவட்ட சார்பு அணி நிர்வாகிகள் உட்பட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • பள்ளிகள் திறப்பது தொடர்பாக கலெக்டர் அரவிந்த் இன்று மாலை நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் ஆலோசனை மேற்கொள்கிறார்.
    • பள்ளிக்கு வரும் மாணவர்கள் பள்ளிக்கு வரும் முதல் நாளன்று மாணவர்களை வரவேற்பதற்கான ஏற்பாடு களும் செய்யப்பட்டு வருகிறது.

    நாகர்கோவில்:

    தமிழகத்தில் கோடை விடுமுறைக்கு பிறகு ஒன்று முதல் 10-ம் வகுப்பு வரை உள்ள பள்ளிகள் வருகிற 13-ந் தேதி (திங்கட்கிழமை) திறக்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது.

    இதையடுத்து குமரி மாவட்டத்திலும் பள்ளிகள் திறப்பது தொடர்பான முன்னேற்பாடு பணிகளை கல்வித்துறை அதிகாரிகள் செய்து வருகிறார்கள். குமரி மாவட்டத்தில் ஒன்று முதல் 10-ம் வகுப்பு வரை உள்ள சுமார் 1118 பள்ளிகளை திறக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

    அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், மெட்ரிக் பள்ளிகளில் படிக்கும் சுமார் 2 லட்சத்து 80 ஆயிரம் மாணவ- மாணவிகள் பள்ளிக்கு வருவதற்கு தயாராகி வருகிறார்கள். பள்ளிகள் திறப்பதற்கு இன்னும் ஒரு சில நாட்களே உள்ள நிலையில் மாணவ- மாணவிகளுக்கு வழங்கப்படும் புத்த கங்களை பள்ளி திறப்ப தற்கு முன்னதாகவே வழங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

    தோவாளை அரசு மேல்நிலை பள்ளியில் மாணவர்களுக்கு வழங் கப்படும் புத்தகங்கள் வைக்கப்பட்டுள்ளது. அந்த புத்தகங்களை சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு அனுப்பி வைக்க கல்வித்துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்.

    பள்ளிகள் திறப்பது தொடர்பாக கலெக்டர் அரவிந்த் இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் ஆலோசனை மேற்கொள்கிறார். இந்த ஆலோசனை கூட்டத்தில் முதன்மைக் கல்வி அதிகாரி, தொடக்கக் கல்வி அதிகாரிகள் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொள்கிறார்கள்.

    பள்ளிகள் திறப்பதற்கு முன்பு என்னென்ன பணிகளை செய்ய வேண்டும் என்பது குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட உள்ளது. தற்போது கொரோனா மீண்டும் பரவத் தொடங்கி உள்ள நிலையில் என்னென்ன முன்னேற்பாடு பணிகளை செய்ய வேண்டும் என்பது குறித்து ஆலோசனை வழங்கப்பட உள்ளது.

    மேலும் பள்ளிகளை திறந்து சுத்தம் செய்யவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. பள்ளிக்கு வரும் மாணவர்கள் பள்ளிக்கு வரும் முதல் நாளன்று மாணவர்களை வரவேற்பதற்கான ஏற்பாடு களும் செய்யப்பட்டு வருகிறது.

    புதுச்சேரியில் நடப்பு நிதியாண்டிற்கான பட்ஜெட்டில் இடம்பெற வேண்டிய முக்கிய அம்சங்கள் குறித்து முதல்வர் நாராயணசாமி அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
    புதுச்சேரி:

    புதுவை சட்டசபையில் கடந்த சில ஆண்டுகளாக மார்ச் மாதம் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதில்லை. அதற்குப் பதிலாக மார்ச் மாதத்தில் அரசின் 4 மாத செலவினங்களுக்கு மட்டும் ஒப்புதல் பெறப்படுகிறது. தொடர்ந்து ஜூன் அல்லது ஜூலை மாதத்தில் முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.

    இதேபோல நடப்பு நிதியாண்டிற்கும் மார்ச் 26ந்தேதி அரசின் 4 மாதங்களுக்கான செலவினங்களுக்கு சட்டசபையில் அனுதி பெறப்பட்டது. முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்ய கடந்த 4-ந்தேதி சட்டசபை கூடியது. ஆனால் மத்திய உள்துறையிடமிருந்து பட்ஜெட்டிற்கு அனுமதி கிடைக்கவில்லை. இதனால் சட்டசபை 5-ந்தேதியோடு காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது.

    இதையடுத்து முதல்-அமைச்சர் நாராயணசாமி டெல்லிக்கு சென்று மத்திய உள்துறை இணை செயலாளரை சந்தித்து பட்ஜெட் தொடர்பாக விளக்கம் அளித்து வந்தார்.

    இதனால் ஓரிரு நாளில் பட்ஜெட்டிற்கு மத்திய அரசு ஒப்புதல் கிடைத்துவிடும் என நாராயணசாமி பேட்டியும் அளித்தார். ஆனால் ஒரு வாரமாகியும் இதுவரை பட்ஜெட்டிற்கு அனுமதி கிடைத்ததாக தெரியவில்லை.

    இந்நிலையில் முதல்-அமைச்சர் நாராயணசாமி தலைமையில் பட்ஜெட்டில் இடம்பெற வேண்டிய முக்கிய அம்சங்கள் குறித்து சட்டசபையில் உள்ள கமிட்டி அறையில் ஆலோசனை கூட்டம் நடந்தது.

    கூட்டத்தில் அமைச்சர்கள் நமச்சிவாயம், ஷாஜகான், மல்லாடி கிருஷ்ணாராவ், கந்தசாமி, கமலகண்ணன், தலைமை செயலாளர் அஸ்வினி குமார், அரசு செயலாளர்கள் கந்தவேலு, அன்பரசு, பார்த்திபன், மணிகண்டன், சுந்தரவடிவேலு மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.
    தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்பு போரட்டத்தில் போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 13 பேர் உயிரிழந்துள்ள நிலையில், கவர்னர் உடன் முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆலோசனை நடத்தி வருகின்றனர். #SterliteProtest
    சென்னை:

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்பு போரட்டத்தில் போலீசார் நேற்று மற்றும் இன்று நடத்திய துப்பாக்கிச்சூட்டில் இதுவரை 13 பேர் உயிரிழந்துள்ளனர். அப்பகுதியில் தொடர்ந்து பதற்றம் நிலவி வரும் நிலையில், மாவட்ட கலெக்டர், எஸ்.பி ஆகியோர் இடமாற்றம் செய்யப்பட்டனர்.

    இந்நிலையில், சென்னை ராஜ்பவனில் கவர்னர் பன்வாரிலால் புரோகித் உடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், அமைச்சர் ஜெயக்குமார் மற்றும் டிஜிபி ராஜேந்திரன் ஆகியோர் ஆலோசனை நடத்தி வருகின்றனர். 

    வன்முறை மேலும் பரவாமல் இருக்க மூன்று மாவட்டங்களில் 5 நாட்களுக்கு மொபைல் இண்டெர்நெட் துண்டிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
    சுப்ரீம் கோர்ட்டு உத்தரவையடுத்து உள்ளாட்சி தேர்தல் நடத்துவது குறித்து அமைச்சர் நமச்சிவாயம் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
    புதுச்சேரி:

    புதுவையில் கடந்த 38 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த 2006-ம் ஆண்டு உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. உள்ளாட்சி தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சி பிரதிநிதிகள் 2011-ம் ஆண்டு ஜூன் வரை பதவியில் இருந்தனர். அதன் பிறகு புதுவையில் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படவில்லை.

    இதையடுத்து உள்ளாட்சி தேர்தலை நடத்த கோரி மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த பெருமாள் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு உடனடியாக உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டது. இதையடுத்து 2013-ம் ஆண்டு புதுவை மாநில தேர்தல் ஆணையம் தேர்தலுக்கான தேதியை அறிவித்தது.

    இந்த நிலையில் என்.ஆர். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஆனந்தலட்சுமி என்பவர் பிறபடுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு வழங்கி உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

    இந்த வழக்கை ஏற்று சுப்ரீம் கோர்ட்டு புதுவையில் உள்ளாட்சி தேர்தலை நடத்த இடைக்கால தடை விதித்தது. இதனால் தேர்தல் தேதி அறிவித்தும் தேர்தல் நடைபெறாமல் போனது.

    இதற்கிடையே புதுவை அரசு 2011-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு விவரத்தை மத்திய அரசிடம் தருமாறு கேட்டது. ஆனால், இதுவரை மத்திய அரசு மக்கள் தொகை விவரத்தை வழங்கவில்லை இதனால் 2011-ம் ஆண்டுக்கு பிறகு புதுவையில் 7 ஆண்டுகள் உள்ளாட்சி தேர்தல் நடைபெறாமலேயே உள்ளது.

    இந்த நிலையில் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த பெருமாள் உள்ளாட்சி தேர்தலை நடத்த புதுவை அரசுக்கு உத்தரவிடுமாறு மீண்டும் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.


    இந்த மனு மீது விசாரணை நடத்திய சுப்ரீம் கோர்ட்டு 4 வார காலத்துக்குள் பிற்படுத்தப்பட்டோருக்கான வார்டுகளை ஒதுக்கீடு செய்து தேர்தலை நடத்தி வெற்றி பெற்றோர் பட்டியலை சுப்ரீம் கோர்ட்டில் சமர்ப்பிக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தது. இதனால் புதுவையில் உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டிய கட்டாய சூழல் புதுவை அரசுக்கு ஏற்பட்டுள்ளது.

    இந்த நிலையில் உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக அமைச்சர் நமச்சிவாயம் இன்று தலைமை செயலகத்தில் உள்ள 4-வது மாடி கருத்தரங்கு அறையில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

    இதில், உள்ளாட்சிதுறை செயலர் ஜவகர், இயக்குனர் மலர்க்கண்ணன், சட்டத்துறை சார்பு செயலர் முருகவேலு மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.

    இந்த ஆலோசனை கூட்டத்தில் சுப்ரீம் கோர்ட்டு அளித்த தீர்ப்பின் உத்தரவுகளை அமைச்சர் நமச்சிவாயத்திடம் அதிகாரிகள் விளக்கி கூறினார்கள். அதன் பிறகு உள்ளாட்சி தேர்தல் நடத்துவதற்கான அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுடன் அமைச்சர் நமச்சிவாயம் ஆலோசனை நடத்தினார். #tamilnews
    ×