search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அம்மாபேட்டை"

    தமிழ் மாநில காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டம் அம்மாபேட்டை அடுத்த பட்லூர் நால்ரோட்டில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நாளை நடைபெறுகிறது. இதில் ஜி.கே.வாசன் கலந்து கொள்கிறார்.
    அம்மாபேட்டை:

    ஈரோடு வடக்கு மாவட்டத்தில் உள்ள அந்தியூர், பவானி, பவானிசாகர் ஆகிய சட்டசபை தொகுதிகளுக்கான தமிழ் மாநில காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டம் அம்மாபேட்டை அடுத்த பட்லூர் நால்ரோட்டில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நாளை (செவ்வாய்க்கிழமை) நடைபெறுகிறது.

    கூட்டத்திற்கு கட்சியின் ஈரோடு வடக்கு மாவட்ட தலைவர் பி.எஸ்.எஸ்.சச்சி தானந்தம் தலைமை தாங்குகிறார். கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ஈரோடு வடக்கு மாவட்ட நிர்வாகிகளை சந்தித்து கட்சியின் வளர்ச்சி குறித்தும் புதிய உறுப்பினர்கள் சேர்ப்பு மற்றும் வருகின்ற தேர்தலுக்கு கட்சியினரை தயார் செய்வது குறித்து ஆலோசனை வழங்கி பேசுகிறார்.

    இதில் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் விடியல் சேகர், துணை தலைவர் ஆறுமுகம், பொதுக்குழு உறுப்பினர் சந்திரசேகர், மாநில இளைஞரணி தலைவர் யுவராஜா, வடக்கு மாவட்ட துணை தலைவர் எ.சே துவெங்கட்ராமன் வடக்கு மாவட்ட பொருப்பாளர் மோகன்கார்த்திக் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொள்கின்றனர்.

    இந்த தகவலை ஈரோடு வடக்கு மாவட்ட தலைவர் பி.எஸ்.எஸ்.சச்சிதானந்தம் தெரிவித்து உள்ளார். #Tamilnews

    ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை அருகே நாளை மறுநாள் திருமணம் நடக்கவிருந்த நிலையில் ஜவுளி எடுக்க சென்ற மணப்பெண் மாயமானது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    அம்மாபேட்டை:

    ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை அருகே உள்ள பாலமலை களக்காட்டை சேர்ந்தவர் செல்லப்பன். இவரது மகள் லதா (வயது23).

    இவருக்கும் அதே பாலமலை பகுதி திம்பம்பதியை சேர்ந்த ராமலிங்கம் என்பவரின் மகன் தமிழரசன் (28) என்பவருக்கும் திருமணம் செய்ய முடிவு செய்யப்பட்டு நாளை மறுநாள் திருமணம் நடக்க இருந்தது.

    திருமணத்தையொட்டி புதிய ஜவுளி வாங்க இருவர் வீட்டாரும் அம்மாபேட்டை அருகே உள்ள குருவரெட்டியூருக்கு சென்றனர். அவர்களுடன் மணப்பெண் லதாவும் ஜவுளி எடுக்க சென்றார்.

    ஜவுளி கடையில் உறவினர்கள் தங்களுக்கு பிடித்த புதிய துணிகளை தேர்வு செய்து வாங்கி கொண்டிருந்தனர்.

    அப்போது மணமகளை தேடினர். ஆனால் அங்கு அவரை காணவில்லை. அவர்களுடன் வந்த புதுப்பெண் லதா திடீரென மாயமாகி விட்டார்.

    இதனால் உறவினர்களிடையே பரபரப்பும், சலசலப்பும் ஏற்பட்டது. கடை உள்ளேயும், வெளியேயும் ஓடி வந்து தேடி பார்த்தனர். ஆனால் கிடைக்கவில்லை.

    இது குறித்து புதுப்பெண்ணின் தந்தை அம்மாபேட்டை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    புதுப்பெண் லதாவை யாரேனும் கடத்தி சென்றார்களா? அல்லது வேறு யாருடனும் ஏற்பட்ட காதல் விவகாரத்தில் மாயமாகி விட்டாரா? என்ற பல்வேறு சந்தேகத்துடன் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். #Tamilnews
    ×