search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அச்சம்"

    • அபிராமத்தில் சாலைகளில் விபத்து ஏற்படுத்தும் கால்நடைகளால் வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்துள்ளனர்.
    • கால்நடைகள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த வேண்டும்.

    அபிராமம்

    ராமநாதபுரம் மாவட்டம் அபிராமம் மற்றும் பார்த்தி பனூர், கமுதி வழியாக சாயல்குடி, தூத்துக்குடி, திருச்செந்தூர் செல்லும் பிரதான சாலை உள்ளது. இந்த சாலையை நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் கடந்து செல்கின்றன.

    இந்த சாலையில் உள்ள அச்சங்குளம், அகத்தாரிருப்பு, நத்தம், கமுதி, பசும்பொன் அபிராமம் உள்ளிட்ட பகுதிகளில் ரோட்டில் அதிக அளவில் ஆடு, மாடுகள் சுற்றி திரிகின்றன. இதனால் அடிக்கடி விபத்ததுக்கள் ஏற்படுகிறது. சாலையின் குறுக்கே மாடுகள் அமர்ந்து விடுவதாலும், போக்குவரத்து பாதிப்பும் ஏற்படுகிறது. இதனால் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் சிரமமடைகின்றனர்.

    இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில், இந்த நெடுஞ்சாலையில் செல்லும் வாகனங்கள் மற்றும் கனரக வாகனங்கள் 85 கி.மீ வேகத்திற்கும் மேலாக செல்லும் நிலை உள்ளது. இந்த சூழ்நிலையில் கால்நடைகள் திடீரென ரோட்டின் குறுக்கே செல்வ தால் வாகன ஓட்டிகள் விபத்துகளில் சிக்கும் நிலை உள்ளது. சில நேரங்களில் உயிர் சேதமும் பொருட் சேதமும் ஏற்படுகின்றன.

    எனவே முக்கிய சாலையான இப்பகுதியில் கால்நடைகள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த வேண்டும் என்றனர்.

    • வடகானந்தல் பேரூராட்சிக்கு உட்பட்ட கச்சிராயபாளையத்தில்வாய்க்கால்களில் சாக்கடை நீர் தேங்கி தெருக்களில் வெளியேறுகிறது. இதனால் கொசு அதிக அளவில் உற்பத்தியாகிறது.
    • இதனால்,பொதுமக்களுக்கு டெங்கு, மலேரியா, சிக்கன் குனியா போன்ற நோய் பரவும் அபாயம் உருவாகி உள்ளது.

    கள்ளக்குறிச்சி:

    சின்னசேலம் அருகே உள்ள வடகானந்தல் பேரூராட்சிக்கு உட்பட்ட கச்சிராயபாளையம் மின்சார அலுவலக வீதியில் 50-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.

    இங்கு கடந்த 10 வருடங்களுக்கு முன்பு அமைக்கப்பட்ட வாய்க்கால்களில் சாக்கடை நீர் தேங்கி தெருக்களில் வெளியேறுகிறது. இதனால் கொசு அதிக அளவில் உற்பத்தியாகிறது. இதன் மூலம் பொதுமக்களுக்கு டெங்கு, மலேரியா, சிக்கன் குனியா போன்ற நோய் பரவும் அபாயம் உருவாகி உள்ளது.

    இது குறித்து பேரூராட்சி அதிகாரிகளிடம் பலமுறை புகார் கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டிகின்றனர்.

    எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தலையிட்டு உடனடியாக சாக்கடை நீரை அப்புறப்படுத்த வேண்டும். வாய்க்கால்களில் சாக்கடை நீர் தங்கு தடையின்றி செல்ல தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்

    • திருப்புவனத்தில் சாலைகளில் திரியும் மாடுகளால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
    • அடிக்கடி போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டத்தில் திருப்புவனம் பெரிய பேரூராட்சி ஆகும். இங்குள்ள வைகைஆற்றின் மற்றொரு கரையில் மடப்புரம் காளிஅம்மன் மற்றும் முன்னோர்கள் திதி கொடுத்து வழிபடும் புஷ்பவனேசுவரர் கோவில்கள் உள்ளன.

    கோவிலுக்கு வரும் வெளியூர் பக்தர்கள் மற்றும் திருப்புவனத்தை சுற்றி உள்ள ஏராளமான கிராம மக்கள் இங்கு வந்து பொருட்கள் வாங்கி செல்கின்றனர். இங்கு எப்போதும் மக்கள் கூட்டம் இருக்கும். அடிக்கடி போக்கு வரத்து நெருக்கடியும் ஏற்படும்.

    தற்போது சாலைகளிலும், பஸ்நிறுத்தம் மற்றும் மக்கள் கூட்டமாக இருக்கும் இடங்களிலும் ஏராளமான மாடுகள் சுற்றி திரிகின்றன. இதனால் பயணிகள் மற்றும் பொதுமக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். இரவு-பகலாக சாலையில் சுற்றி திரியும் மாடுகள் முட்டி பலர் காயம டைந்துள்ளனர்.

    சிலநேரங்களில் மாடுகளுக்கிடையே ஏற்படும் சண்டையால் சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் இருசக்கர வாகனங்கள் மீது முட்டி மோதி ஏராளமான வாகனங்கள் சேதமடை கின்றன.

    மாடுகள் நிற்பதை அறியாத வெளியூர் பயணிகள் அவை முட்டி காயமடைந்துள்ளனர். திருப்புவனத்திற்கு பஸ்நிலையம் இல்லாததால் கோவிலுக்கு வரும் வெளியூர் பக்தர்கள் சாலைகளில் திரியும் மாடுகளால் அச்சமடை கின்றனர்.

    சாலையில் திரியும் மாடுகளை அகற்ற பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பக்தர்கள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

    • கடந்த ஒரு வாரமாக பகல் நேரத்தில் கரடியின் நடமாட்டத்தை விவசாயிகள் பார்த்தனர்.
    • கரடி ஆடு, கன்றுகளை கடித்து காயப்படுத்தியது,

    விழுப்புரம்: 

    விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த முட்டுக்காடு, சிறுவாடி, பாக்கம் காப்புக்காடுகளில் 30-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு காரைக்காப்பு காட்டில் கரடிகள் இருந்தன. நாளடைவில் கரடிகள் இல்லாமல் போனது. இந்நிலையில் கடந்த ஒரு வாரமாக முட்டுக்காடு வனப்பகுதியில் கோனை ஊராட்சி சோமசமுத்திரம், கோனைபுதூர், வடகால் மற்றும் எம்.ஜி.ஆர் நகர் பகுதிகளில் பகல் நேரத்தில் கரடியின் நடமாட்டத்தை விவசாயிகள் பார்த்தனர்.  இந்த கரடி ஆடு, கன்றுகளை கடித்து காயப்படுத்தியது. நேற்று மாலை கோனைப்புதூர் கிராமத்தில் விவசாய நிலத்தில் கரடி உலா வந்தது.

    இதைனை விவசாயிகள் வீடியோவாக பதிவு செய்து சமூக வளைதளங்களில் பதி விட்டனர். இது வைரலாக பரவியது.  இது குறித்து வனத்துறை யை தொடர்பு கொண்ட போது வனச்சரகர் வெங்க டேசன் கூறியதாவது:- செஞ்சி அருகே காட்டிலிருந்து ஊருக்குள் கரடி வந்துள்ளது, இதனை பிடிப்பதற்காக கோனை புதூர் மலை அடிவாரத்தில் கூண்டு வைத்துள்ளோம். இதனை பிடிக்கும் வரை பொதுமக்கள் காட்டுப்ப குதிக்கு தனியாக செல்ல வேண்டாம் என எச்சரிக்கை செய்துள்ளோம். கூண்டில் கரடி சிக்கவில்லை எனில், அடுத்த கட்டமாக மயக்க ஊசி செலுத்தி கரடியை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். பல ஆண்டுகளுக்கு பிறகு கரடி ஊருக்குள் வந்தது செஞ்சி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி யுள்ளது.

    • நேற்று இரவு வழக்கம் போல கோவிலை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றார்.
    • கோவிலின் கேட் திறக்கப்பட்டு உட்புற கதவு திறந்து இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் வானூரைஅடுத்த தென்திருவலூர் கிராமத்தில் பெருமாள் கோவில் உள்ளது. பிரசித்தி பெற்ற இக்கோவில் ஊரின் நடுவில் இருக்கிறது. இங்கு பூசாரியாக பணிசெய்து வரும் ஸ்ரீதர் நேற்று இரவு வழக்கம் போல கோவிலை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றார்.    இன்று காலை கோவிலை திறப்பதற்காக வந்தார். அப்போது கோவிலின் கேட் திறக்கப்பட்டு உட்புற கதவு திறந்து இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். அக்கம் பக்கத்தினருடன் கோவிலுக்குள் சென்று பார்த்தார். கோவில் பிரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த 2 ஆயிரம் ரூபாய் பணம் திருடப்பட்டி ருந்தது. உடனடியாக கோவிலின் கருவறைக்கு சென்று பார்த்த போது பெருமாளின் காலடியில் வைக்கப்பட்டிருந்த 5 கிராம் தங்க நாணயமும் திருடப்பட்டிருந்தது.  துகுறித்து கிளியனூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது. தகவலின் பேரில் விரைந்து வந்த கிளியனூர் இன்ஸ்பெக்டர் பாலமுரளி தலைமையிலான போலீசார் தென்திருவலூர் கிராமத்திற்கு விரைந்து வந்தனர். மேலும், விழுப்புரம் மாவட்ட தடயவியல் நிபுணர்களுக்கு தகவல் அளிக்கப்பட்டது. அதன்பேரில் கைரேகை நிபுணர் ஸ்ரீதர் தலைமை யிலான குழுவினர் விரைந்து வந்து கோவிலு க்குள் இருக்கும் தடயங்களை ஆய்வு செய்து வருகின்றனர். ஊரின் நடுவில் இருக்கும் கோவிலில் நள்ளிரவில் கொள்ளை சம்பவம் நடந்தது அக்கிராமத்தினரிடையே அச்சத்தையும், பரபர ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

    • ராமநாதபுரம் மாவட்டத்தில் அதிகரிக்கும் விபத்தால் பொதுமக்கள் அச்சத்தில் பயணம் செய்து வருகின்றனர்.
    • இந்த வழித் தடத்தில் குடி போதையில் வாகனங்களை ஓட்டிச் செல்வோரின் எண்ணிக்கையும் அதி கரித்து வருகிறது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமேசுவரம், தேவிபட்டினம், ஏர்வாடி, உத்தரகோசமங்கை, திருப்புல்லாணி, சேதுக்கரை ஆகிய இடங்களில் புண்ணிய தலங்கள் உள்ளன. இதன் காரணமாக வெளி மாநி லங்களில் இருந்தும், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் ஏராளமானோர் வந்து செல்கின்றனர்.

    ராமநாதபுரம் மாவட்ட நெடுஞ்சாலையில் நடக்கும் விபத்துக்களை தவிர்ப்பதற்காக தொடங்கப்பட்ட ''ஹைவே பேட்ரோல்'' போலீசார் பணியை முறையாக மேற்கொள்ளாததால் வாகனங்களின் விதி மீறல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

    இந்த வழியாக செல்லும் லாரிகள் அசுர வேகத்தில் செல்வதால் ஆட்டோ மற்றும் இரு சக்கர வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். இந்த வழித் தடத்தில் குடி போதையில் வாகனங்களை ஓட்டிச் செல்வோரின் எண்ணிக்கையும் அதி கரித்து வருகிறது. செக் போஸ்ட்டில் போலீசார் இல்லாதால் விபத்துகளை ஏற்படுத்தும் டிரைவர்கள் எளிதில் தப்பிச் சென்று விடுகின்றனர்.

    இரவில் நடந்து செல்ப வர்கள் மீது வாகனம் மோதுவதும், அதி வேகத்தில் செல்லும் வாகனங்கள் தலை குப்புற கவிழ்வதும், அசுர வேகத்தில் வாகனங்கள் செல்வதும், இந்த சாலையில் தொடர்கதையாக உள்ளது. நெடுஞ்சாலையில் நடக்கும் விபத்துக்களை தவிர்ப்பதற்காக தொடங்கப்பட்ட ரோந்து போலீசார் தலை காட்டுவதே கிடையாது.

    இதனால் இந்த பகுதியில் உயிர்பலி எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது. ராமநாதபுரம் மாவட்டத்தில் நடப்பாண்டில் செப்டம்பர் மாதம் வரை 262 வாகன விபத்துகள் ஏற்பட்டு, அதன் மூலம் 281 பேர் உயிரிழந்துள்ளனர்.

    இதில் 123 விபத்துகள் இருசக்கர வாகனங்களால் ஏற்பட்டு 126 பேர் உயிரிழந்துள்ளனர். கண் துடைப்பு நடவடிக்கையாக மாதத்திற்கு ஒரு முறை போக்குவரத்து போலீசார் ஆய்வு என்ற பெயரில் இரண்டொரு வழக்குப் பதிவு செய்து 'சாதனை' செய்கின்றனர்.

    இதை தடுக்க ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர். 

    • மின்விளக்குகள் சரிவர எரியாததால் பொதுமக்கள் அச்சம்.
    • மழைநீர் வடிகால் வசதி செய்து தர வேண்டும்.

    சீர்காழி:

    சீர்காழி வாணி விலாஸ் தொடக்கப்பள்ளியில் 14 வது வார்டு சார்பில் வார்டு குழு பகுதி சபா கூட்டம் நடைபெற்றது கவுன்சிலர் ஜெயந்தி பாபு தலைமை வைத்தார் வருவாய் ஆய்வாளர் சார்லஸ் கணக்கர் ராஜகணேஷ் முன்னிலை வகித்தனர்

    கூட்டத்தில் சீர்காழி நகர மன்ற தலைவர் துர்கா பரமேஸ்வரி ராஜசேகர் கலந்து கொண்டு பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்தார் பின்பு பொதுமக்கள் வழங்கிய மனுக்களை பெற்றுக்கொண்டார் கூட்டத்தில் கலந்து கொண்ட பொதுமக்கள் 14வது வார்டில் மழை நீர் வடிகால் வசதி செய்து தர வேண்டும்.

    மின்விளக்குகள் சரிவர எரியாததால் இருளில் மது பிரியர்கள் மது குடித்து வருவதால் அந்த வழியாக பொதுமக்கள் அச்சத்துடன் செல்கின்றனர்.

    எனவே அனைத்து மின் விளக்குகளும் எரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் பொதுமக்கள் சார்பில் வைக்கப்பட்டன கூட்டத்தில் 14 வது வார்டு பொதுமக்கள் அதிகளவில் கலந்து கொண்டனர்.

    • கடைவீதி பகுதிகளில் மக்கள் அதிக அளவில் பொருட்கள் வாங்க வருவது வழக்கம்.
    • இருசக்கர வாகனத்தில் செல்வோரை விரட்டுவதால் விபத்து ஏற்படும் அபாயம்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் கடைவீதி மற்றும் தோப்புத்துறை இலந்தையடி ரஸ்தா நகர் பகுதிகள் பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் அதிகமாக கூடும் இடங்களாகும்.

    நாள்தோறும், கடைவீதி பகுதிகளில் மக்கள் அதிக அளவில் பொருட்கள் வாங்க வருவது வழக்கம். நகரின் முக்கிய பகுதியாக காணப்படும் இந்த இடங்களில் நாய்கள் அதிக அளவில் காணப்படுகிறது. நடந்து செல்வோரை சில நாய்கள் கடித்துவிடுகிறது.

    மேலும், இருசக்கர வாகனத்தில் செல்வோரை விரட்டுவதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.

    இதனால், பொதுமக்கள் தினமும் அச்சத்துடனே செல்லும் அவல நிலை உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட துறையினர் நாய்களை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • பாலங்களில் நடந்து வரும் சுற்றுலா பயணிகள் அச்சத்துடன் நடந்து வரும் நிலை உள்ளது.
    • குழந்தைகளுடன் கல்லணையை சுற்றி பார்க்க வருபவர்கள் அச்சமடைகின்றனர்.

    பூதலூர்:

    தஞ்சை மாவட்டத்தில் உள்ள சுற்றுலாத்தலமான கல்லணையை சுற்றி பார்க்க தினமும் மக்கள் வந்து சென்ற வண்ணம் உள்ளனர்.விடுமுறை நாட்களில் கூட்டம் அதிகமாக இருக்கும்.

    கல்லணை பாலங்கள், குழந்தைகள் பூங்கா, கரிகாலன் பூங்கா,கரிகாலன் மணிமண்டபம் ,ஆகிய இடங்களை பார்வையிட்டு மகிழ்வர்.கல்லணை பாலங்களில் நாய்கள் அதிக அளவில் காணப்படுகின்றன.

    பாலங்களில் நடந்து வரும் சுற்றுலா பயணிகள் அச்சத்துடன் நடந்து வரும் நிலை உள்ளது.

    நாய்கள் ஒன்றை ஒன்று துரத்திக்கொண்டு அங்குமிங்கும் ஓடுவதால் குழந்தைகளுடன் கல்லணையை சுற்றி பார்க்க வருபவர்கள் அச்சமடையும் நிலை உள்ளது.

    உடனடியாக‌ கல்லணை பாலங்களில் சுற்றி திரியும் நாய்களை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சுற்றுலா பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.

    • அடிக்கடி பெயர்ந்து விழுந்து வருவதால் கடைக்கு வரும் பொதுமக்கள் அச்சத்துடன் உள்ளனர்.
    • ஆபத்தான நிலையிலுள்ள கட்டிடத்தை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    திருத்துறைப்பூண்டி:

    திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி வட்டம் முத்துப்பேட்டை ஒன்றியத்துக்கு உள்பட்ட மேலப்பெருமழை ஊராட்சியில் உள்ள ரேஷன் கடை கட்டிடம் பழுதடைந்து உள்ளது இதை உடனே சீரமைக்க வேண்டும் என்று மேலப்பெருமழை பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகள் கட்டிடத்தை பார்வையிட்டு சீரமைத்து தருமாறு அந்த பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    கட்டிடத்தின் மேல் பகுதி பழுதடைந்து உள்ளது. ரேஷன் கடையின் மேற்காரைகள் அடிக்கடி பெயர்ந்து விழுந்து வருவதால் கடைக்கு வரும் பொதுமக்கள் அச்சத்துடன் உள்ளனர்.

    மிகவும் ஆபத்தான நிலையில் கட்டிடம் பழுதடைந்து உள்ளது. எனவே உடனடியாக ரேஷன்கடை கட்டிடத்தை சீரமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • அருப்புகோட்டையில் பூட்டிய வீட்டில் நகை-பணம் கொள்ளையடிக்கப்பட்டது.
    • தொடரும் குற்ற சம்பவங்களால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

    அருப்புகோட்டை

    அருப்புகோட்டையில் மீண்டும் பூட்டிய வீட்டில் நகை-பணம் கொள்ளையடிக்கப்பட்டது

    பத்திரம் சவுண்டு செட்டியார் தெருவை சேர்ந்தவர் சரவணகுமார். கேட்டரிங் தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி முருகேஸ்வரி நேற்று அதிகாலை சிவகாசியில் துக்க நிகழ்ச்சிக்கு சென்றார்.

    சரவண குமார் வழக்கம் போல் வீட்டை பூட்டிவிட்டு வெளியே உள்ள ஜன்னலில் சாவியை வைத்து விட்டு வேலைக்கு சென்று விட்டார். மதியம் வந்து வீட்டை திறந்து உள்ளே சென்று தூங்கி உள்ளார். மாலையில் அவரது மனைவி முருகேஸ்வரி வீட்டிற்கு வந்தார். வீட்டில் உள்ள பீரோவை திறந்து உள்ளார். அப்போது மிளகாய் பொடி வாடை அடித்துள்ளது.

    மேலும் சேலைகளுக்குள் வைத்திருந்த 5 பவுன் நகை மற்றும் ரூ.25 ஆயிரம் கொள்ளை போனது தெரியவந்தது.

    இதுகுறித்து தகவல் அறிந்த அருப்புக்கோட்டை நகர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். தொடர்ந்து கொலை, கொள்ளை, கற்பழிப்பு சம்பவங்கள் நடந்து வருவதால் அருப்புக்கோட்டை பகுதி மக்கள் அச்சத்திற்கு ஆளாகியுள்ளனர் .

    தமிழக அரசு உடனடியாக காவல்துறையை முடுக்கிவிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

    அருப்புகோட்டையில் சில மாதங்களாக தொடர் கொள்ளை மற்றும் கொலை சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. எம்.டி.ஆர். நகரில் ஓய்வு பெற்ற ஆசிரியர் தம்பதியினர் இரட்டை கொலை, கோபாலபுரத்தில் பெண்ணை கடத்தி பாலியல் பலாத்காரம், காவல் நிலையத்துக்கு அழைத்து வரப்பட்ட வாலிபர் சந்தேக மரணம், பூட்டிய வீட்டில் அடுத்தடுத்து கொள்ளை, இப்படி தொடர்ந்து குற்ற சம்பவங்கள் நடந்து வருவதால் பொதுமக்கள் அச்சத்திற்கு ஆளாகியுள்ளனர்.

    • நள்ளிரவில் பெரிய கிளை முறிந்து விழுந்து மின் கம்பிகள் அறுந்து விழுந்தன.
    • காற்று அதிகமாக வீசும் நேரத்தில் அந்த பகுதிக்கு செல்ல அச்சமாக உள்ளது.

    திருவையாறு:

    தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் இன்று வாராந்திர குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.

    இதில் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இருந்து வந்த பொதுமக்கள் தங்களது குறைகளை கோரிக்கும் அளித்தனர்.

    திருவையாறு தாலுக்கா ராயம்பேட்டை ஊராட்சி ஆக்கினாதபுரம் கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது,

    எங்கள் ஊரில் 200 குடும்பங்கள் வசித்து வருகிறோம். 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த மிகப்பெரிய அரசமரம் ஊரின் முகப்பு பகுதியில் உள்ளது.

    அந்த மரத்தில் ராட்சத ஈக்களால் ஆன தேன் கூடு 25 உள்ளது. ஒரு மாதத்துக்கு முன்பு நள்ளிரவில் பெரிய கிளை முறிந்து விழுந்து மின் கம்பிகள் அறுந்து விழுந்தன.

    அப்போது ஆள் நடமாட்டம் இல்லாத காரணத்தால் வேறு எந்த பாதிப்பும் இல்லாததால் ஊராட்சி மன்ற தலைவர் மரத்தை வெட்டி அகற்றி கொடுத்து மின்சார ஊழியர்களை அழைத்து கம்பிகளை இணைக்கப்பட்டு மின்சாரம் கிடைக்க ஏற்பாடு செய்தார்.

    ஆனால் மரத்தின் நடுவே பொந்து விழுந்து மோசமான நிலையில் ஆபத்தான நிலையிலும் உள்ளது. மழை பெய்யும் நேரத்திலும், காற்று அதிகமாக வீசும் நேரத்திலும் அந்த பகுதிக்கு செல்ல அச்சமாக உள்ளது.

    கடந்த 6-ம் தேதி இரவு மழை பெய்த போது அரச மரத்தின் ஒரு ராட்சசகிளை உத்தமநல்லூர் செல்லும் சாலை எங்கள் கிராமத்தில் இருந்து வெளியேயும் உள்ளேயும் செல்ல முடியாத அளவுக்கு ஆள் நடமாட்டம் இல்லாத போது முறிந்து விழுந்தது.

    இதில் நான்கு போஸ்ட் மரம் உடைந்து மின்கம்பிகள் அறுந்ததில் உயிர் சேதம் ஏதும் ஏற்படாதவாறு கிராம இளைஞர்கள் மின்மாற்றிக்கு சென்று மின்சாரத்தை துண்டித்தனர்.

    ஊராட்சி மன்ற தலைவர், ஒன்றிய பெருந்தலைவர் இணைந்து மரத்தை அகற்றியும் மின்சாரத்தை சரி செய்து கொடுத்தனர்.

    எனவே உயிர் சேதம் ஏதும் ஏற்படும் முன்பு ஆபத்தான விழும் நிலையில் உள்ள மரத்தை விரைந்து வெட்ட வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.இதே மனுவை திருவை யாறு தொகுதி எம்.எல்.ஏ துரை சந்திரசேகரனிடமும் பொதுமக்கள் அளித்துள்ளனர்.

    ×