search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 211596"

    • முதியவர் மர்மமான முறையில் இறந்தார்.
    • மனைவியுடன் பேச்சுவார்த்தை இல்லாமல் இருந்ததாக கூறப்படுகிறது.

    விருதுநகர்

    அருப்புக்கோட்டை அருகேயுள்ள ராமசாமிபுரத்தை சேர்ந்தவர் ராஜகோபால்(வயது64). இவரது முதல் மனைவி பிரிந்து சென்று விட்டார். அதன் பின்னர் 2-வது திருமணம் செய்தார். கடந்த சில வருடங்களாக மனைவியுடன் பேச்சுவார்த்தை இல்லாமல் இருந்ததாக கூறப்படுகிறது.

    இந்தநிலையில் அருப்புக்கோட்டை அண்ணா சிலை அருகேயுள்ள குப்பை தொட்டி ஒன்றில் இறந்து கிடந்தார். இதைப்பார்த்த அவரது உறவினர் ராஜகோபாலின் மகன் முத்துக்குமாருக்கு தகவல் தெரிவித்தார். முத்துக்குமார் அங்கு வந்து பார்த்தபோது ரத்த காயங்களுடன் ராஜகோபால் இறந்து கிடந்தார். தகவல் அறிந்து வந்த போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து முத்துக்குமார் கொடுத்த புகாரின் பேரில் அருப்புக்கோட்டை டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து முதியவர் எப்படி இறந்தார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • 65 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் இறந்து கிடந்தார்.
    • தகவல் அறிந்த அரசு ஆஸ்பத்திரி போலீசார் முதியவரின் உடலை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரி பிணவறைக்கு அனுப்பி வைத்தனர்.

    சேலம்:

    சேலம் அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் 65 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் இறந்து கிடந்தார். தகவல் அறிந்த அரசு ஆஸ்பத்திரி போலீசார் முதியவரின் உடலை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரி பிணவறைக்கு அனுப்பி வைத்தனர். அவரது 2 கால் முட்டி பகுதிகளில் காயத்தழும்பு உள்ளன. முதியவர் இறந்தது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து முதியவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சமூக வலைத்தளங்களில் வேடிக்கையான, வினோதமான வீடியோக்கள் ஏராளமாக பரவும்.
    • 95 வயது முதியவர் ஒருவர் திருமண விழா ஒன்றில் எல்லோர் முன்னிலையிலும் தப்பட்டை வாசிக்கிறார்.

    சமூக வலைத்தளங்களில் வேடிக்கையான, வினோதமான வீடியோக்கள் ஏராளமாக பரவும். ஆனால் உணர்ச்சிகரமான வீடியோக்கள் அரிதாகவே காணக்கிடைக்கும். சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் ருத்விக் பாண்டே என்பவர் பதிவிட்ட ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.

    அதில் 95 வயது முதியவர் ஒருவர் திருமண விழா ஒன்றில் எல்லோர் முன்னிலையிலும் தப்பட்டை வாசிக்கிறார். சில சமயம் அவர் தரையில் அமர்ந்து இருக்கிறார். 95 வயதிலும் தனக்கும், தன் குடும்பத்திற்காகவும் அயராது உழைக்கும் இந்த முதியவரின் வீடியோவை பார்த்த வலைதள வாசிகள் அவரை பாராட்டி கருத்துக்களை பதிவிடுவதோடு அவருக்கு உதவி செய்யவும் முன்வந்துள்ளனர். இந்த வீடியோ 1.7 கோடி பார்வைகளை பெற்றுள்ளது.

    • வாகனம் மோதி மூதாட்டி-முதியவர் பலியானார்.
    • 63691 63622, 94981 80129 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

    மதுரை

    மதுரை மாட்டுத்தாவணி ரிங்ரோட்டில் தனியார் கட்டுமான நிறுவனம் அருகே வாகனம் மோதி அடையாளம் தெரியாத 60 வயது மதிக்கத்தக்க பெண் தலையில் காயமடைந்து இறந்து கிடந்தார். இது குறித்து தகவல் அறிந்த போக்குவரத்து புலனாய்வு இன்ஸ்பெக்டர் தனலட்சுமி, சப்- இன்ஸ்பெ க்டர் ஞானபிரபாகரன் ஆகியோர் சம்பவ இடத்தி ற்கு வந்து பெண்ணின் உடலை மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அந்தப் பெண் சிவப்பு வண்ண சேலை அணிந்திருந்தார். இடது பக்க கன்னத்தில் கருப்பு மச்சமும் வலது முழங்காலில் காயத்தளும் இருந்தது. மதுரை காமராஜர் சாலையில் தனியார் வங்கி அருகே வாகனம் மோதி 72 வயது மதிக்கத்தக்க முதியவர் கணுக்காலில் பலத்த காயத்துடன் மயங்கிய நிலையில் கிடந்தார். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் அவரை மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சை க்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். போலீசார் நடத்திய விசாரணையில் அவரது பெயர் குப்புசாமி என்பது மட்டும் தெரிய வந்தது. அவரது வலது கால் தொடையில் ஒரு கருப்பு மச்சமும், வலது பக்க விலாவில் கருப்பு மச்சமும் இருந்தது. இவர்களை பற்றி தகவல் தெரிய வந்தால் 63691 63622, 94981 80129 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

    • பேரக்குழந்தைகளுடன் அனைவரும் நேற்று திருமண வீட்டுக்கு சென்று விட்டனர்
    • மாதன் கட்டிலில் பேச்சு மூச்சு இன்றி கிடந்தார்.

    ஈரோடு, 

    ஈரோடு மாவட்டம் கோபி அடுத்த சின்ன களியூர், பகவதி நகரை சேர்ந்தவர் மாதன்(70). இவருக்கு திருமணமாகி ஒரு மகள் உள்ளார். மகளுக்கு திருமணம் ஆகி தாய் தந்தையுடன் ஒரே வீட்டில் வசித்து வருகிறார்.

    இந்நிலையில் கடந்த 3 மாதமாக மாதனுக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்துள்ளது. இதனால் அவர் மன வேதனையில் இருந்துள்ளார்.

    இந்நிலையில் பக்கத்து தெருவை சேர்ந்த உறவினருக்கு திருமணம் என்பதால் மாதன் மனைவி அவரது மகள் பேரக்குழந்தைகளுடன் அனைவரும் நேற்று திருமண வீட்டுக்கு சென்று விட்டனர். வீட்டில் மாதன் மட்டும் தனியாக இருந்தார்.

    இந்நிலையில் மாதனுக்கு சாப்பாடு கொடுப்பதற்காக அவரது பேரன் வீட்டுக்கு வந்தார். அப்போது மாதன் கட்டிலில் பேச்சு மூச்சு இன்றி கிடந்தார்.

    இது குறித்த அவரது பேரன் அக்கம் பக்கத்தினர் குடும்பத்திற்கு தகவல் தெரிவித்தார். அனைவரும் வீட்டுக்கு வந்து பார்த்தபோது வீட்டில் விவசாயத்திற்காக வைக்கப்பட்டிருந்த குருணை மருந்தை எடுத்து குடித்து மாதன் தற்கொலைக்கு முயன்றது தெரிய வந்தது.

    உடனடியாக அவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக கோபி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர் ஏற்கனவே வரும் வழியிலேயே மாதன் இறந்து விட்டதாக தெரிவித்தார்.

    இது குறித்து பங்களாபுதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 11 வயது பள்ளி மாணவி குளிர்பானம் வாங்க கடைக்கு வந்துள்ளார்.
    • வீட்டிற்கு சென்று பெற்றோர்களிடம் சம்பவத்தை தெரிவித்துள்ளார்.

    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகில் உள்ள மாப்பிள்ளைகுப்பத்தை சேர்ந்தவர் கார்த்திகேயன் (வயது 75). இவர் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர். இவர் அதே பகுதியில் பள்ளிக்கூடத்திற்கு எதிரே ஒரு பெட்டிக்கடை நடத்தி வருகிறார்.

    சில தினங்களுக்கு முன்பு இவரது கடைக்கு அதே ஊரைச் சேர்ந்த 11 வயது பள்ளி மாணவி குளிர்பானம் வாங்க வந்துள்ளார்.

    குளிர்பானம் வாங்க வந்தபோது கடையில் பொதுமக்கள் யாரும் இல்லாததால், துணிச்சல் அடைந்த கார்த்திகேயன் சிறுமியை கடைக்கு உள்ளே அழைத்துச் சென்று அவளுக்கு பாலியல் தொல்லை கொடுக்க முயன்றதாக தெரிகிறது.

    இதில் அதிர்ச்சி அடைந்த அச்சிறுமி அங்கிருந்து தப்பித்து ஓடி தனது வீட்டிற்கு சென்று பெற்றோர்களிடம் சம்பவத்தை தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக சிறுமியின் தாய் நன்னிலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து தலைமை ஆசிரியர் கார்த்திகேயனை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் இப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தி வருகிறது.

    • முதியவர் உள்பட 3 பேரிடம் பணம்-செல்போன் பறிக்கப்பட்டது.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து சுராஜ்குமாரை கைது செய்தனர்.

    மதுரை

    மதுரை சத்தியசாய் நகர் குறிஞ்சி தெருவை சேர்ந்தவர் சின்னமணி (வயது 29).இவர் சம்பவத்தன்று ெஜய்ஹிந்த்புரம் பகுதியில் நடந்து சென்றார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் 3 பேர் சின்னமணியை தாக்கி செல்போன்,ரூ.2 ஆயிரத்தை பறித்து சென்றனர்.

    எம்.கே.புரம் முத்துத்தேவர் தெருவை சேர்ந்தவர் பைசல் பாபா (28). இவர் வில்லாபுரம் ஹவுசிங் போர்டு மின்வாரியம் அருகே நடந்து சென்றபோது, 17 வயதுடைய நபர் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்து சென்றான். அவனியாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவனை கைது செய்தனர்.

    எஸ்.எஸ்.காலனி காளிமுத்து நேதாஜி தெருவை சேர்ந்தவர் பாண்டி (68). இவர் பை-பாஸ் ரோட்டில் நடந்து சென்றபோது ஜார்க்கண்ட் மாநிலத்ைத சேர்ந்த சுராஜ்குமார் (21) உள்பட 2 பேர் செல்போனை பறித்துக் கொண்டு தப்பினர். இதுகுறித்த புகாரின்பேரில் எஸ்.எஸ்.காலனி போலீசார் வழக்குப்பதிவு செய்து சுராஜ்குமாரை கைது செய்தனர். தப்பியோடியவரை தேடி வருகின்றனர்.

    • குப்புசாமிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
    • ஆம்புலன்ஸ் மூலம் காங்கேயம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    வெள்ளகோவில் :

    மூலனூர் அருகே உள்ள கிழாங்குண்டல் பகுதியைச் சேர்ந்த குப்புசாமி (வயது 70) என்பவர் நேற்று வெள்ளகோவில் ஒழுங்குமுறை விற்பனை கூடம் அருகில் ரோட்டில் நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக வந்த மொபட் மோதிவிட்டது.

    இதனால் குப்புசாமிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனே அருகில் இருந்தவர்கள் குப்புசாமியை மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் காங்கேயம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே குப்புசாமி இறந்து விட்டதாக கூறியுள்ளனர். இந்த விபத்து குறித்து வெள்ளகோவில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • முதியவர் உள்பட 2 பேர் தற்கொலை செய்தனர்.
    • திருநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை

    மதுரை வில்லாபுரம் வேலுபிள்ளை தெருவை சேர்ந்தவர் அரிஹரன்(வயது59). இவருக்கு குடிப்பழக்கம் இருந்தது. இதனால் மன அழுத்தத்தில் இருந்த அரிஹரன் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவனியாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருநகர் 3வது ஸ்டாப் லயன் சிட்டியை சேர்ந்தவர் காளிராஜன். இவர் மனைவியுடன் ஏற்பட்ட பிரச்சினையில் விரக்தியுடன் காணப்பட்டார். சம்பவத்தன்றும் கணவன்-மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது. வாழ்க்கையில் வெறுப்படைந்த காளிராஜன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். திருநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தனியார் நிறுவன ஊழியர்-முதியவர் பரிதாபமாக இறந்தார்.
    • நெல்லை கோடீஸ்வரன் நகரை சேர்ந்த நரேன் என்பவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள ஓ.மேட்டுப்பட்டி பாண்டி யன்நகரை ேசர்ந்தவர் கமலக்கண்ணன்(வயது36). இவர் விருதுநகரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். தினமும் வேலைக்கு மோட்டார் சைக்கிளில் செல்வது வழக்கம். அதன்படி நேற்று இரவு கமலக்கண்ணன் வேலையை முடித்துவிட்டு வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார்.

    விருதுநகர்-மதுரை ரோட்டில் வந்தபோது அந்த வழியாக சென்ற அடையாளம் தெரியாத வாகனம் அவர் மீது மோதியது. இதில் கமலக்கண்ணன் ரத்த வெள்ளத்தில் படுகாயமடைந்தார். உடனே அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். உடல்நிலை மோசமாகவே மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார்.ஆனால் வழியலேயே கமலக்கண்ணன் பரிதாபமாக இறந்தார். இது தொடர்பாக அவரது மனைவி சேர்மா தேவி கொடுத்த புகாரின்பே ரில் விருதுநகர் மேற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திய வாகனத்தை தேடி வருகின்றனர்.

    முதியவர்

    சாத்தூர் அருகே உள்ள பெரிய ஓடைப்பட்டியை சேர்ந்தவர் சுப்புராஜ்(67). இவர் சம்பவத்தன்று வெளியே சென்றுவிட்டு வீட்டுக்கு நடந்து வந்து கொண்டிருந்தார். சாத்தூர்- கோவில்பட்டி ரோட்டை கடக்க முயன்ற போது வேகமாக வந்த கார் மோதியது. இதில் தூக்கிவீசப்பட்ட சுப்புராஜ் படுகாயமடைந்து பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து சாத்தூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து காரை ஓட்டி வந்த நெல்லை கோடீஸ்வரன் நகரை சேர்ந்த நரேன் என்பவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மரியநேசம் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
    • வீட்டின் வெளியே சமையலறை கம்பியில் ஜோக்கியன் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார்

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் மேல ராமன் புதூர் திருகுடும்ப கோவில் தெருவை சேர்ந்தவர் ஜோக்கியன் (வயது 73). இவர் தனது இளைய மகனுடன் வசித்து வந்தார். ஜோக்கியனுக்கு குடிப்பழக்கம் இருந்து வந்தது. மேலும் அவர் உடல்நிலை பாதிப்பால் அவதிப்பட்டு வந்தார். இதற்காக நாகர்கோவிலில் உள்ள ஆஸ்பத்திரி ஒன்றில் சிகிச்சை பெற்று வந்தார். சம்பவத்தன்று ஜோக்கியன் வீட்டில் சாப்பிட்டு விட்டு வெளியே சென்றார். நீண்ட நேரம் ஆகியும் வராததால் அவரது மனைவி மரியநேசம் அங்கு சென்று பார்த்தார்.

    அப்போது வீட்டின் வெளியே சமையலறை கம்பியில் ஜோக்கியன் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார். இதுகுறித்து நேசமணிநகர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    இன்ஸ்பெக்டர் ஜெயலட்சுமி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தூக்கில் தொங்கிய ஜோக்கியன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து மரியநேசம் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    ஜோக்கியன் எதற்காக தற்கொலை செய்து கொண்டார்? என்பது குறித்து போலீசார் விசா ரணை நடத்தி வருகிறார்கள். ஜோக்கியன் உடல் பிரேத பரிசோதனை இன்று ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரி யில் நடக்கிறது. இதையடுத்து அவரது உறவினர்கள் ஏராளமானோர் அங்கு திரண்டு இருந்தனர்.

    • ஊரணியில் மூழ்கி முதியவர் பலியானார்.
    • மூழ்கி பலியானவர் சாத்தங்குடியைச் சேர்ந்த அய்யர் என்பது தெரியவந்தது.

    திருமங்கலம்

    மதுரை மாவட்டம் திருமங்கலம்-உசிலம்பட்டி சாலையில் உள்ள சாத்தங்குடி பஸ் நிறுத்தம் அருகே ஊரணி உள்ளது. இந்த ஊரணியில் இன்று காலை 65 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் பிணமாக மிதப்பது தெரியவந்தது. இதுபற்றி பொதுமக்கள் திருமங்கலம் தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து முதியவர் பிணத்தை மீட்டனர்.

    விசாரணையில் ஊரணியில் மூழ்கி பலியானவர் சாத்தங்குடியைச் சேர்ந்த அய்யர் என்பது தெரியவந்தது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×