search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 211596"

    • அழுகிய நிலையில் கிடந்த முதியவர் உடல் மீட்கப்பட்டது.
    • வீட்டுக்குள் இருந்து துர்நாற்றம் வீசியது.

    மதுரை

    மதுரை கிருஷ்ணாபுரம் காலனி பாரதிநகர் கோகுலம் கார்டனை சேர்ந்தவர் அப்துல் காதர் ஜெய்லானி (வயது73). இவருக்கு 2 மனைவிகள் உள்ளனர். இவர் தனது 2-வது மனைவியுடன் வீட்டில் வசித்து வந்தார். அவர் கடந்த சில நாட்களாக தனியாக வீட்டில் இருந்துள்ளார்.

    இந்த நிலையில் அவரது வீட்டுக்குள் இருந்து துர்நாற்றம் வீசியது. இதனால் சந்தேகமடைந்த பொதுமக்கள் தல்லாகுளம் போலீசில் புகார் செய்தனர். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்த்தனர். அப்போது அப்துல் காதர் ஜெய்லானி உடல் அழுகிய நிலையில் இருந்தது. அவரது உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரது சாவில் மர்மம் உள்ளதா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அதிவேமாக சென்ற மோட்டார் சைக்கிள் நின்றிருந்த லாரி மீது மோதி முதியவர் பலியானார்.
    • சிவகாசி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள பேர் நாயக்கன் பட்டியை சேர்ந்தவர் மோகன் (58). இவர் சம்பவத்தன்று வெம்பக்கோட்டை மெயின் ரோட்டில் மோட்டார் சைக்கிளில்அதி வேகமாக சென்றுள்ளார். அப்போது மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் நின்றிருந்த லாரி மீது பலமாக மோதியது. இதில் படுகாயமடைந்த மோகன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    இந்த விபத்து குறித்துதகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மோகன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். லாரி டிரைவர் கருப்பசாமி கொடுத்த புகாரின் பேரில் சிவகாசி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வயிற்று வலி காரணமாக பாட்டமூப்பன் குருணை மருந்தை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார்.
    • கடத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அடுத்த ஒடையகவுண்டன்பாளையம் பகுதியை சேர்ந்தவர் பாட்டமூப்பன் (76). தனது மருமகள், பேரனுடன் வசித்து வருகிறார்.

    இந்நிலையில் சம்பவத்தன்று மாலை வயிற்று வலி காரணமாக பாட்டமூப்பன் வீட்டில் இருந்த குருணை மருந்தை (விஷம்) சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்று உள்ளார்.

    வாயில் நுரை தள்ளிய நிலையில் கிடந்த அவரை மீட்டு சிகிச்சைக்காக சத்தியமங்கலத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.

    பின்னர் மேல் சிகிச்சைக்காக அவரை சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே பாட்டமூப்பன் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இது குறித்து கடத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன.

    • திருவிழாவுக்கு வந்த முதியவர் மயங்கி விழுந்து இறந்தார்.
    • திலகர் திடல் போலீசார் வழக்குப்பதிவு செய்து முதியவரை மீட்டு, மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    மதுரை

    மதுரை மேல வெளி வீதி ெரயில் நிலைய பஸ் நிறுத்தத்தில் முதியவர் மயங்கி கிடந்தார். இதுகுறித்து மேலமதுரை கிராம உதவியாளர் பழனி கொடுத்த புகாரின்பேரில் திலகர் திடல் போலீசார் வழக்குப்பதிவு செய்து முதியவரை மீட்டு, மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி முதியவர் பரிதாபமாக இறந்தார். விசாரணையில் இறந்த முதியவர் சிவகாசி முஸ்லிம் தெருவை சேர்ந்த பாஸ்கரன்(63) என்பதும், சித்திரை திருவிழா பார்ப்பதற்காக மதுரைக்கு வந்திருந்தபோது ெரயில் நிலைய பஸ் நிறுத்தம் அருகே மயங்கி விழுந்து சிகிச்சை பலனின்றி இறந்ததும் தெரியவந்தது.

    • மதுரை அருகே 10 வயது சிறுமிக்கு, முதியவர் பாலியல் தொல்லை கொடுத்தார்.
    • மதுரை தெற்கு அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து முதியவரை கைது செய்தனர்.

    மதுரை

    மதுரை பழங்காநத்தம், நேரு நகரை சேர்ந்தவர் சண்முகநாதன் (வயது 65). இவர் அதே பகுதியில் வசிக்கும் தனது உறவுக்கார பெண் குடும்பத்துடன் பழகி வந்தார். அவர் அடிக்கடி உறவினர் வீட்டுக்கு சென்று வருவார்.

    இந்தநிலையில் சண்முக நாதன், உறவுப்பெண்ணின் 10 வயது மகளை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. அவர் சிறுமியிடம் இது பற்றி வெளியில் சொன்னால், கொலை செய்து விடுவேன் என்று மிரட்டல் விடுத்துள்ளார். இதனால் அச்சமடைந்த அந்த சிறுமி இது தொடர்பாக யாரிடமும் சொல்லவில்லை.

    இதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்ட சண்முகநாதன் கடந்த 2 ஆண்டுகளாக தொடர்ந்து அந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். ஒரு கட்டத்தில் இந்த விஷயம் உறவுக்கார பெண்ணின் குடும்பத்தினருக்கு தெரியவந்தது.

    பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய், இது தொடர்பாக மதுரை தெற்கு அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். இதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சண்முகநாதனை கைது செய்தனர்.

    • விருதுநகர் மாவட்டத்தில் வியாபாரி-முதியவர் தற்கொலை செய்தனர்.
    • பஜார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள அத்திக்குளத்தை சேர்ந்தவர் மயிலரசன் (வயது 41). பழைய இரும்பு வியாபாரம் செய்து வந்தார். இவர் வீட்டுக்கு செலவுக்கு பணம் கொடுப்பதில்லை என கூறப்படுகிறது. ஒரு வாரமாக வேலைக்கு செல்லாமல் வீட்டிலேேய இருந்துள்ளார். அதுகுறித்து அவரது மனைவி அவரிடம் கேட்டுள்ளார். இதனால் கோபித்துக் கொண்டு மயிலரசன் வீட்டைவிட்டு வெளிேய சென்றார். ஆனால் மீண்டும் வீடு திரும்பவில்லை.

    இந்த நிலையில் ஸ்ரீவில்லிபுத்தூர் திருமுக்குளம் அருகே மயிலரசன் விஷம் குடித்து மயங்கி கிடப்பதாக தகவல் வந்தது. உடனடியாக உறவினர்கள் அங்கு சென்று அவரை மீட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து மயிலரசன் மனைவி செண்பகவல்லி கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவ செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர் அருகே உள்ள கட்டையாபுரத்ைத சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் (69). இவரது மனைவி ஏற்கனவே இறந்து விட்டார். உறவினர் பராமரிப்பில் இருந்து வந்தார். இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக நோய் பாதிப்பால் அவதிப்பட்டு வந்தார். இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த அவர் வீட்டில்யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து உறவினர் கொடுத்த புகாரின்பேரில் விருதுநகர் பஜார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • கடந்த மாதம் 15-ந் தேதி சுமார் 60 வயது மதிக்கத்தக்க நபர், மயங்கி கிடந்தார்.
    • 108 ஆம்புலன்ஸ் மூலம், சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    சேலம்:

    சேலம் புதிய பஸ் நிலையத்தில், கடந்த மாதம் 15-ந் தேதி சுமார் 60 வயது மதிக்கத்தக்க நபர், மயங்கி கிடந்தார். அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம், சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    அவரை பரிசோதித்த டாக்டர்கள், முதியவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரி வித்தனர். உயிரிழந்த முதியவர் யார்? எந்த பகுதியை சேர்ந்தவர் என்பது தெரி யவில்லை. இதுகுறித்து பள்ளப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மாயமான முதியவர் பிணமாக மீட்கப்பட்டார்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை மலையரசன் கோவில் தெருவை சேர்ந்தவர் கருப்பசாமி(63). சம்பவத்தன்று வீட்டில் இருந்து வெளியே சென்றவர் அதன் பின்னர் வீடு திரும்பவில்லை.

    பல இடங்களில் தேடிப்பார்த்தும் கிடைக்கவில்லை. இந்த நிலையில் ஸ்ரீவில்லிபுத்தூர் டவுன் போலீசார் கருப்பசாமி வீட்டிற்கு போன் செய்து திருவண்ணாமலை ரோட்டில் உள்ள செங்கல் சூளை அருகே முதியவர் ஒருவர் இறந்து கிடந்ததாகவும், அவருடைய உடல் சவக்கிடங்கில் உள்ளதாகவும், அது கருப்பசாமியா? என்பதை உறுதிப்படுத்துமாறும் தகவல் அளித்தனர்.

    உறவினர்கள் அங்கு சென்று பார்த்தபோது அது கருப்பசாமி என்பது தெரியவந்தது. இதுகுறித்து கருப்பசாமியின் மனைவி கலா ஸ்ரீவில்லிபுத்தூர் டவுன் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வாலிபர்-முதியவர் பலியாகினர்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    விருதுநகர்

    சிவகாசி அருகே போடுரெட்டியபட்டியைச் சேர்ந்தவர் வரதராஜ். இவரது மகன் ராமானுஜன் (வயது 22). இவர் மது போதைக்கு அடிமையாகி கடந்த ஒரு ஆண்டாக வேலைக்கு செல்லாமல் இருந்து வந்ததாக கூறப்படு கிறது.

    இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு ராமானுஜம் மது குடித்து விட்டு வீட்டிற்கு வந்தார். பின்னர் அவர் வல்சாபுரத்தில் உள்ள தனது சித்தி சித்ரா வீட்டுக்கு செல்வதாக கூறி சென்றார். இந்த நிலையில் நேற்று காலை துலுக்கன்குறிச்சி அருகில் ரோட்டோரம் நெற்றில் காயத்துடன் ராமானுஜம் இறந்து கிடந்துள்ளார்.

    இதனை கண்ட மாரிச்சாமி என்பவர் ராமானுஜத்தின் தந்தை வரதராஜிடம் தெரிவித்தார். இதைத்தொடர்ந்து வரதராஜ் சம்பவ இடத்திற்கு சென்று ராமானுஜம் உடலை மீட்டு சிவகாசி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார்.

    அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுதொடர்பாக வெம்பக்கோட்டை போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அதில், ராமானுஜம் மோட்டார் சைக்கிளில் ஓட்டிச் சென்றபோது விபத்தில் சிக்கி இறந்து விட்டதாக கூறப்பட்டுள்ளது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருச்சுழி அருகே கீழ இடையன்குளம் பகுதியை சேர்ந்தவர் முனியாண்டி (52). இவர் சென்ற மோட்டார் சைக்கிள் திடீ ெரன பழுதாகி விட்டது. அவர் சாலையோரமாக நின்றபோது அந்த வழியாக வந்த லாரி மோதியது.

    இதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுபற்றி தகவலறிந்த அவரது மகள் திவ்யா முனீஸ்வரி நரிக்குடி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • முதியவர் உடல் நலக்குறைவால் அவதி பட்டு வந்தார்.
    • விஷம் குடித்த ஜெயராஜை மீட்டு சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரிக்குகொண்டு சென்றனர்.

    மயிலாடுதுறை:

    மயிலாடுதுறை மாவட்டம் சேந்தங்குடி தென்பாதி தெருவை சேர்ந்தவர் ஜெயராஜ் (வயது70).

    இவர் கடந்த 3 மாதமாக சிறுநீரக பிரச்சினை தொடர்பாக சிகிச்சை பெற்று வந்தார்.

    இதனால் மிகுந்த மன உளைச்சலில் இருந்த ஜெயராஜ் வீட்டில் இருந்த பூச்சிக்கொல்லி மருந்தை (விஷம்) குடித்துமயங்கி விழுந்தார்.

    இதைக்கண்ட அவரது குடும்பத்தினர் ஜெயராஜை மீட்டு சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரிக்குகொண்டு சென்றனர்.

    அங்கு சிகிச்சை பலனின்றி ஜெயராஜ் இறந்தார்.

    இது குறித்து மயிலாடுதுறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • முதியவர் ஒருவர் நேற்றிரவு சாலையை கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக சென்று ஒரு வாகனம், அவர் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது.
    • இதில் படுகாயம் அடைந்த அந்த முதியவர், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

    நாமக்கல்:

    நாமக்கல் - சேலம் ரோட்டில் சண்முகா ஓட்டல் அருகில் முதியவர் ஒருவர் நேற்றிரவு சாலையை கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக சென்று ஒரு வாகனம், அவர் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் படுகாயம் அடைந்த அந்த முதியவர், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

    தகவல் அறிந்த நாமக்கல் நகர போலீசார், அங்கு விரைந்து சென்று அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் விபத்தில் இறந்த அந்த முதியவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர் என்ற விவரம் தெரியவில்லை. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • மதுரை அருகே முதியவரை தாக்கிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • பொதும்புவை சேர்ந்த ஸ்ரீமான் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.

    மதுரை

    மதுரை தெற்குவெளி வீதி பழைய மகாளிப்பட்டி ரோட்டை சேர்ந்தவர் லட்சுமணன்(வயது72). இவருக்கும், தெற்குமாசி வீதி ஜடாமுனி கோவில் தெருவை சேர்ந்த ராஜகோபாலன் (47) என்பவருக்கும் தங்களது மூதாதையர் சொத்து சம்பந்தமாக முன்விரோதம் இருந்து வந்தது. இந்தநிலையில் ராஜகோபாலன் 4 பேருடன் சென்று லட்சுமணனை அவதூறாக பேசி தாக்கியதாக கூறப்படுகிறது.

    இந்த சம்பவம் குறித்து லட்சுமணன் தெற்குவாசல் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜகோபாலன், ரங்கன் ஆசாரி தெரு ரமேஷ், அவரது மனைவி ராதிகா (43),பொதும்புவை சேர்ந்த மகேந்திரன் (63) ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். பொதும்புவை சேர்ந்த ஸ்ரீமான் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.

    ×