என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "slug 214555"
- 36 முதல் 59 வயது வரை உள்ளவர்களுக்கு 3 கி.மீ நடைபயணம் நிர்ணயம்.
- முதல் பரிசாக ரூ. 5 ஆயிரம், 2-ம் பரிசாக ரூ. 3 ஆயிரம் மற்றும் 3-ம் பரிசாக ரூ. 2 ஆயிரம் நிர்ணயம்.
தஞ்சாவூர்:
தஞ்சாவூர் இன்னர் வீல் சங்கத்தின் பொன்விழா ஆண்டை முன்னிட்டு இன்னர் வீல் சங்கமும், வீ.கே.சி. பிரைடு நிறுவனமும் இணைந்து வருகிற 18-ந்தேதி காலை 7 மணிக்கு தஞ்சை பெரிய கோவிலிருந்து அனைத்து மகளிருக்கான "புடவையில் ஓர் நடைப்பயணம்", பாரம்பரிய உடைகளுக்கான கவுரவத்தை மீட்டெடுக்கும் ஓர் உன்னத முயற்சியாக நடத்த இருக்கிறது.
நிகழ்ச்சியை தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தொடங்கி வைக்கிறார்.
மாநகராட்சி ஆணையர் சரவணகுமார் மற்றும் மேயர் சண். இராமநாதன் ஆகியோர் கலந்து கொள்கின்றனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை இன்னர் வீல் சங்கத்தின் பொன்விழா ஆண்டின் குழுத்தலைவர் டாக்டர். உஷா நந்தினி, தலைவர் டாக்டர். சோபியா மற்றும் இன்னர் வீல் சங்கத்தின் உறுப்பினர்கள் செய்து வருகின்றனர்.
இதில் 18 முதல் 35 வயது வரை உள்ளவர்களுக்கு 4 கி.மீ நடைபயணமும், 36 முதல் 59 வயது வரை உள்ளவர்களுக்கு 3 கி.மீ நடைபயணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வெற்றி பெறுவர்களுக்கு முதல்பரிசாக ரூ. 7 ஆயிரத்து 500-ம், 2-ம் பரிசாக ரூ. 5 ஆயிரமும், 3-ம் பரிசாக ரூ. 2 ஆயிரத்து 500-ம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மேலும், 60 வயதிற்கு மேல் உள்ளவர்களுக்கு 1 கி.மீ தூரம் நிர்ணயம் செய்யப்பட்டு, முதல் பரிசாக ரூ. 5 ஆயிரம், 2-ம் பரிசாக ரூ. 3 ஆயிரம் மற்றும் 3-ம் பரிசாக ரூ. 2 ஆயிரம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் ஆதார் அட்டையுடன் ரூ. 100 பதிவு கட்டணத்தை இன்று மாலைக்குள் செலுத்தி பதிவு செய்து கொள்ள வேண்டும்.
போட்டியன்று பதிவு செய்பவர்களுக்கு பதிவுக்கட்டணம் ரூ. 200 ஆகும்.
மேலும், கல்லூரி மாணவிகளுக்கு பதிவுக்கட்டணம் இல்லை. ஆனால், கல்லூரி அடையாள அட்டை கொண்டு வர வேண்டும். நிகழ்வில் பங்கேற்பவர்கள் கண்டிப்பாக புடவை அணிந்து வர வேண்டும்.
இதுகுறித்த விபரங்களுக்கு நிகழ்வு ஒருங்கிணைப்பாளர்கள் சண்முகவடிவு தொலைபேசி எண். 9730669869 மற்றும் புவனா தொலைபேசி எண். 9894866277 ஆகியோரை தொடர்பு கொள்ளலாம்.
- விளையாட்டு, இலக்கிய போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை கலெக்டர் வழங்கினார்.
- மாவட்ட வருவாய் அலுவலர் ரவிகுமார், திட்ட அலுவலர் (மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) திலகவதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
விருதுநகர்
விருதுநகர் கலெக்டர் அலுவலக வளர்ச்சி மன்ற கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் ஜெயசீலன் தலைமையில் நடந்தது.
இலவச வீட்டுமனை பட்டா மற்றும் பட்டா மாறுதல், குடும்ப அட்டை, வேலைவாய்ப்பு, முதியோர், விபத்து நிவாரணம், மாற்றுத்திறனாளிகள், நலிந்தோர் நலத்திட்டம், விதவை உதவித்தொகை, திருமண உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மனுக்கள் பெறப்பட்டன.
மேலும் ஆதிதிராவிடர் நலத்துறையின் சார்பில், வன்கொடுமையால் பாதி க்கப்பட்டு உயிரிழந்த சிவகாசி வட்டம் கீழத்திருத்தங்கல் கிராமத்தைச் சேர்ந்த டேவிட் செல்வம் என்பவரின் வாரிசுதாரரான அவரது மனைவி கல்பனாவுக்கு சமையலர் பணிக்கான ஆணையையும், ரூ.20 ஆயிரம் மதிப்பிலான இலவச வீட்டுமனைப் பட்டாவையையும், உயிரிழந்தவரின் தாயாருக்கு வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீ மாதாந்திர ஓய்வூதியமாக ரூ.5 ஆயிரம் மற்றும் அகவிலைப்படி பெறுவதற்கான ஆணை யையும் கலெக்டர் வழங்கினார்.
மாவட்ட மாற்றுத்தி றனாளி நலத்துறையின் மூலம் 12 பயனாளிகளுக்கு தலா ரூ.2 ஆயிரம் பராமரிப்புத்தொகை பெறுவதற்கான ஆணைகளையும், 2 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1 லட்சத்து 40 ஆயிரம் மதிப்பிலான செயற்கை கால்களையும், செவித்திறன் குறைபாடுடைய 6 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.78 ஆயிரம் மதிப்பில் பிரத்தி யேகமாக வடிவமைக்கப்பட்ட செல்போன்களையும் கலெக்டர் வழங்கினார்.
மாவட்ட பிற்படு த்தப்பட்டேர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் மூலம் 9 பயனாளிகளுக்கு ரூ.1 லட்சத்து 35 ஆயிரம் மதிப்பில் இலவச வீட்டுமனைப் பட்டாக்களையும், 6 பயனாளிகளுக்கு தலா ரூ.5478 வீதம் மொத்தம் ரூ.32 ஆயிரத்து 868 மதிப்பிலான இலவச தையல் எந்திரங்களையும், பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நல பள்ளி மற்றும் கல்லூரி விடுதிகளில் தங்கிப் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு 2022-2023-ம் கல்வியாண்டிற்கான கலைத்திருவிழாவில் நடத்தப்பட்ட இலக்கியப் போட்டிகள் மற்றும்
விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற 20 பேருக்கு பரிசுகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை கலெக்டர் ஜெயசீலன் வழங்கினார்.
இதில் மாவட்ட வருவாய் அலுவலர் ரவிகுமார், திட்ட அலுவலர் (மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) திலகவதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- விபத்தை தடுத்திட, பொது போக்குவரத்தை பலப்படுத்தி பொதுத்துறையை பாதுகாத்திட வலியுறுத்தி மாரத்தான்.
- 2 பிரிவுகளிலும் தலா 7 பேருக்கு ஆறுதல் பரிசு.
தஞ்சாவூர்:
சுற்றுசூழலை பாதுகாத்திட வேண்டும். விபத்தை தடுத்திட, பொது போக்குவரத்தை பலப்படுத்தி பொதுத்துறையை பாதுகாத்திட வலியுறுத்தி தஞ்சை அன்னை சத்யா விளையாட்டு மைதானத்தில் இன்று காலை தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சங்கம்- சி.ஐ.டி.யூ தொழிற்சங்கம் சார்பில் விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நடைபெற்றது.
மண்டல தலைவர் காரல்மார்க்ஸ், பொது செயலாளர் மணிமாறன் ஆகியோர் தலைமை தாங்கினர். போட்டியை மாவட்ட கலெக்டர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவர், மேயர் சண்.ராமநாதன் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.
இதில் ஆண்கள், பெண்களுக்கு தனி தனி பிரிவுகளாக போட்டி நடைபெற்றது. ஏராளமானோர் கலந்து கொண்டு மாரத்தான் ஓடினர்.
போட்டியில் ஆண்கள் பிரிவில் முதல் 3 இடங்களை பிடித்தவர்களுக்கு முறையே ரூ.8000, ரூ.6000, ரூ.5000 மற்றும் பெண்கள் பிரிவில் முதல் 3 இடங்களை பிடித்தவர்களுக்கு ரூ.6000, ரூ.5000, ரூ.3000 மற்றும் 2 பிரிவுகளிலும் தலா 7 பேருக்கு ஆறுதல் பரிசு வழங்கப்பட்டது.
பரிசுகளை டி.கே.ஜி.நீலமேகம் எம்.எல்.ஏ, மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன், சி.ஐ.டி.யூ தமிழ்நாடு மாநில துணை பொது செயலாளர் திருச்செல்வன், மாநில செயலாளர் ஜெயபால், அரசு போக்குவரத்து கழகம் கும்பகோணம் மண்டலம் பொது மேலாளர் ஜெபராஜ் நவமணி, மாவட்ட விளையாட்டு அலுவலர் டேவிட்டேனியல், சின்னை.பாண்டியன் ஆகியோர் வழங்கி பாராட்டினர்.
போட்டியை தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மாவட்ட செயலாளர் என்.வி.கண்ணன், சி.ஐ.டி.யூ மாவட்ட தலைவர் கண்ணன், எஸ்.இ.டி.சி- சி.ஐ.டி.யூ மாநில துணை தலைவர் வெங்கடேசன், சி.ஐ.டி.யூ மாவட்ட துணை செயலாளர்கள் அன்பு, செங்குட்டுவன், எஸ்.எப்.ஐ. மாவட்ட செயலாளர் சந்திரசேகர், ஜீவா, திருநாவுக்கரசு ஆகியோர் ஒருங்கிணைத்தனர். இதில் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
முடிவில் மண்டல பொருளாளர் ராமசாமி நன்றி கூறினார்.
- உலக ஈர நில தின விழாவில் நடந்த விழிப்புணர்வு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசு புலிகள் காப்பக துணை இயக்குநர் வழங்கினார்.
- அதனையும் சுற்றுச் சூழலையும் பாதுகாப்பது முக்கிய கடமையாகும்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூட்டரங்கில் மாவட்ட வன அலுவலகம் சார்பில் உலக ஈரநில தின விழா நடந்தது. இதையொட்டி பல்வேறு விழிப்புணர்வு போட்டிகள் நடந்தன.
இதில் வெற்றி பெற்ற பள்ளி மற்றும் கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு புலிகள் காப்பக துணை இயக்குநர் திலீப்குமார் பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கினார். பின்னர் அவர் பேசியதாவது:-
ஈர நிலங்கள் அரிய வகை பறவைகள், விலங்குகள், தாவரங்கள் மற்றும் பூச்சிகளுக்கு பொருத்தமான வாழ்விடத்தை வழங்குகிறது.
சதுப்பு நிலங்கள் குளிர்கால பறவைகள் மற்றும் பல்வேறு விலங்கினங்களுக்கான புகலிடமாகவும் உள்ளது. சதுப்பு நிலங்கள் நீர் சேமிப்பு செயல்பாடுகளில் முக்கிய பங்குவகிப்பது மட்டுமின்றி வெள்ளத்தில் அதிகப்படியான நீரை தேக்கி வைப்பதன் மூலம் வெள்ள அபாயத்தையும் குறைக்கிறது. ஈரநிலங்கள் ''பூமியின் நுரையீரல்'' ஆகும். அவை வளிமண்டலத்தில் உள்ள மாசுகளை சுத்தம் செய்கின்றன.அதனடிப்படையில், ஆண்டு தோறும் பிப்ரவரி 2-ந்தேதி உலக ஈர நிலநாள் கொண்டாடப்படுகிறது. பூமிக்கு ஈரநிலங்களின் முக்கிய பங்கு பற்றிய விழிப்புணர்வை மக்களி டையே ஏற்படுத்துவதே இந்த நாளை கொண்டாடுவதன் நோக்கமாகும். மேற்கு தொடர்ச்சி மலைகள் பல்வேறு குளங்களின் நீர் ஆதாரமாக இருக்கி ன்றன. அதனையும் சுற்றுச் சூழலையும் பாதுகாப்பது முக்கிய கடமையாகும்.
இவ்வாறு அவர் பேசினார்.இந்த நிகழ்ச்சியில், திட்ட இயக்குநர் (மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) திலகவதி உள்பட வன சரக அலுவலர்கள், அரசு அலுவலர்கள், மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர்.
- இதில் 15 லட்சத்து 60 ஆயிரத்து 503 பேர் பொங்கல் பரிசு பணம் வாங்கினர்.
- தமிழ்நாடு முழுவதும் 4 லட்சத்து 39 ஆயிரத்து 669 குடும்ப அட்டைதாரர்கள் பொங்கல் பரிசு தொகை வாங்கவில்லை.
தஞ்சாவூர்:
தமிழ்நாடு முழுவதும் உள்ள ரேசன் கடைகளில் பொங்கல் பரிசு தொகை 1000 ரூபாய், 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை வழங்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த மாதம் உத்தரவிட்டிருந்தார்.
அதன்படி தகுதியுள்ள 2 கோடியே 18 லட்சத்து 86 ஆயிரத்து 123 குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1000 பணம் ஒதுக்கப்பட்டு அந்த தொகை ரேசன் கடைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந் தது.ஆனால் இந்த பணத்தை பெரும்பாலான மக்கள் வாங்கினாலும் ஒருசிலர் இந்த பணம் வேண்டாம் என்று வாங்காமல் இருந்து விட்டனர்.
தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட டெல்டா மாவடடங்களில் 15 லட்சத்து 88 ஆயிரத்து 937 குடும்ப அட்டைக்கு ரூ.1000 பணம் வழங்க அந்தந்த ரேசன் கார்டுகளுக்கு பணம் அனுப்பி வைக்கப்பட்டது.
இதில் 15லட்சத்து 60 ஆயிரத்து 503 பேர் பொங்கல் பரிசு பணம் வாங்கினர்.
மிதம் 28 ஆயிரத்து 434 பேர் ரூ.1000 வாங்க வில்லை.
இதைப்போல் தமிழ்நாடு முழுவதும் 4 லட்சத்து 39 ஆயிரத்து 669 குடும்ப அட்டைதாரர்கள் பொங்கல் பரிசு தொகை வாங்காததால் அரசுக்கு ரூ.43 கோடியே 96 லட்சத்து 69 ஆயிரம் பணம் திரும்பி வந்துவிட்டது.
இந்த தொகையை அரசு கருவூலத் தில் அதிகாரிகள் செலுத்தி விட்டனர்.
- சோழவந்தானில் மாநில அளவிலான கூடைப்பந்து போட்டி நடந்தது.
- இதில் அமைச்சர் மூர்த்தி கலந்து கொண்டு பரிசு வழங்கினார்.
சோழவந்தான்
மதுரை மாவட்டம் சோழ வந்தான் அரசர் சண்முகனார் அரசு மேல்நிலைப் பள்ளி விளை யாட்டு மைதானத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மாநில அளவிலான கூடைப்பந்து போட்டி நடந்தது.
சோழவந்தான் தி.மு.க. சார்பில் நடந்த இந்த போட்டியில் மதுரை, கோவை, ஏற்காடு, ஸ்ரீவில்லிபுத்தூர், ெநல்லை, தூத்துக்குடி, வத்தலகுண்டு, திண்டுக்கல், சோழவந்தான் உள்பட 18 அணிகள் கலந்து கொண்டன. இதில் 12 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு ஒரு பிரிவாகவும், 14 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு ஒரு பிரிவாகவும் போட்டிகள் 3 நாட்கள் நடந்தன.
நேற்று இரவு இறுதிப் போட்டி நடந்தது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா நடந்தது. விழாவிற்கு வெங்கடேசன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். பேரூராட்சி தலைவர்கள் (சோழவந்தான்) ஜெயராமன், (வாடிப்பட்டி) பால்பாண்டி, துணைத்தலைவர்கள் லதா கண்ணன், கார்த்தி, ஆனையூர் பகுதி செயலாளர் மருது பாண்டியன், பொதுக்குழு உறுப்பினர்கள் ஸ்ரீதர், ஒன்றிய செயலாளர் பசும்பொன்மாறன், வடக்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் வெற்றிச்செல்வன், மாவட்ட பிரதிநிதி பெரியசாமி, கவுன்சிலர்கள் டாக்டர் மருது பாண்டியன், சிவா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நகரச் செயலாளர் கவுன்சிலர் வக்கீல் சத்ய பிரகாஷ் வரவேற்றார். இதில் சிறப்பு விருந்தினராக வணிகவரி மற்றும் பத்திரப் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி கலந்து கொண்டு வெற்றி பெற்ற அணிகளுக்கும், சிறந்த ஆட்டக்காரர்களுக்கும் பரிசுகள் மற்றும் கேட யங்களை வழங்கினார்.
விழா ஏற்பாடுகளை ஜெ.ஜெ.கூடைப்பந்து போட்டி கிளப் தலைவர் முரளி சோழகர் செய்திருந்தார்.
- முதுகுளத்தூர் காமராஜர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 33-ம் ஆண்டு பரிசளிப்பு விழா நடந்தது.
- முதல் 3 இடங்களில் வென்ற மாணவ, மாணவிகளுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.
முதுகுளத்தூர்
முதுகுளத்தூர் காமராஜர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 33-ம் ஆண்டு பரிசளிப்பு விழா நடந்தது. நாடார் உறவின்முறை தலைவர் ஏ.எம்.டி. சிவகுமார் தலைமை தாங்கினார். பேரூராட்சி உதவி சேர்மன் வயணப்பெருமாள், ராமமூர்த்தி, கணேசன், அசோகன், செல்வகுமார், பெருமாள் முன்னிலை வகித்தனர். பள்ளியின் தாளாளர் அய்யாசாமி வரவேற்றார். 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பில் கூடுதல் மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பேரூராட்சி உதவி சேர்மன் வயணப் பெருமாள் பரிசு வழங்கி பாராட்டினார். விளையாட்டுப் போட்டியில் முதல் 3 இடங்களில் வென்ற மாணவ, மாணவிகளுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடந்தன. பரிசளிப்பு விழாவில் தாசில்தார் சிவகுமார், டி.எஸ்.பி. சின்னகண்ணு, பள்ளியின் பொருளாளர் எஸ்.முத்து முருகன், தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி மேலாளர் காந்தி ராஜன், பேரூராட்சி செயல் அலுவலர் மாலதி, முன்னாள் என்.சி.சி. அலுவலர் எஸ். துரைப்பாண்டியன், கல்விக்குழு உறுப்பினர்கள் மணிக்குமார், பாண்டி குமரன், நாகராஜன், மாதவன், ஜெயபிரகாஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர். மேலாளர் டி.ரவீந்திரன் நன்றி கூறினார்.
- செவரக்கோட்டையில் மினி மாரத்தான் போட்டி நடந்தது.
- முதல் மூன்று இடங்களைப் பிடித்த வெற்றியாளர்களுக்கு பரிசு மற்றும் ஊக்கத்தொகை விழா குழு சார்பில் வழங்கப்பட்டது.
திருப்பத்தூர்
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள செல்வரசன் கோட்டை என்ற செவரக்கோட்டையில் 74-ம் ஆண்டு குடியரசு தின விழாவை முன்னிட்டு குரு இளைஞர் நற்பணி மன்றத்தின் சார்பில் மது, புகையிலை தடுப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் முதலாம் ஆண்டு மினி மாரத்தான் போட்டி நடைபெற்றது.
இப்போட்டியில் மாவட்ட த்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து நூற்றுக்கணக்கான இளைஞர்கள், மாணவ மாணவிகள் ஆர்வடன் கலந்து கொண்டனர். இதில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த வெற்றி யாளர் களுக்கு பரிசு மற்றும் ஊக்கத்தொகை விழா குழு சார்பில் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் கல்லல் காவல் ஆய்வாளர் பாஸ்கரன், உதவி ஆய்வாளர் பிரபாகரன் மற்றும் குரு இளைஞர் நற்பணி மன்ற நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- போட்டியில் மோகன்பிரவீன் வெற்றி பெற்று முதலிடம் பிடித்தார்.
- நான்காம் இடத்தை பிரகாஷ் அர்ஜுன் பிடித்தார்.
தஞ்சாவூர்:
தஞ்சையில் துரோணாஸ் பேட்மிட்டன் கிளப் சார்பில் இன்னர் கிளப் பேட்மிண்டன் போட்டிகள் நடத்தப்பட்டது.
கிளப்பின் உரிமையாளர் ஆனந்த் தலைமை தாங்கினார்.
போட்டியை சந்திரசேகர் வழி நடத்தினார்.
இந்த போட்டியில் மோகன்பிரவீன் வெற்றி பெற்று முதலிடம் பிடித்தார்.
இரண்டாம் இடத்தை ஜெயராம் அசோகன், மூன்றாம் இடத்தை உதயன் தீபக் சூர்யா, நான்காம் இடத்தை பிரகாஷ் அர்ஜுன் ஆகியோர் பிடித்தனர்.
வெற்றி பெற்றவர்களுக்கு பொறியாளர் சிவப்பிரகாசம் பரிசுகள் வழங்கி பாராட்டினார்.
இப்போட்டியில் தஞ்சை பகுதியை சுற்றி உள்ள ஏராளமான பேட்மிட்டன் வீரர்கள் பங்கு பெற்றனர்.
- ஆண்களுக்கு 7 கி.மீ. தூரம் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
- வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கினர்.
பேராவூரணி:
தஞ்சை மாவட்டம், பேராவூரணியில் ழ பவுண்டேஷன் சார்பில் மினி மாரத்தான் போட்டி நேற்று நடைபெற்றது. போட்டியை பேராவூரணி அசோக்குமார் எம்.எல்.ஏ கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
போட்டி தாசில்தார் அலுவலகம் அருகில் உள்ள மைதானத்தில் இருந்து தொடங்கி கொன்றைக்காடு ரெயில்வே கேட் வரை 7 கி.மீ. தூரம் நடைபெற்றது. போட்டியானது ஆண்கள், பெண்கள் மற்றும் 10 வயதுக்குட்பட்ட சிறுவர், சிறுமிகள் என நான்கு பிரிவுகளில் நடைபெற்றது.
சிறுவர்களுக்கு 3 கி.மீ. தூரமும், பெண்களுக்கு 5 கி.மீ. தூரமும் மற்றும் ஆண்களுக்கு 7 கி.மீ. தூரமும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இதில் சுமார் 2500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
அதனை தொடர்ந்து, நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் பட்டுக்கோட்டை அண்ணாதுரை எம்.எல்.ஏ. மற்றும் பேராவூரணி அசோக்குமார் எம்.எல்.ஏ., கல்வியாளர் ஜீவகன் ஆகியோர் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கினர்.
தேசிய விருது பெற்ற திரைப்பட இயக்குனர் காதல் கோட்டை அகத்தியன் உள்பட 11 பேருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது ழ பவுண்டேஷன் சார்பில் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை ழ பவுண்டேஷன் நிறுவனர் கார்க்கி அசோக்குமார் மற்றும் நண்பர்கள் செய்திருந்தனர்.
இதில் பட்டுக்கோட்டை கோட்டாட்சியர் பிரபாகரன், பேராவூரணி பேரூராட்சி தலைவர் சாந்தி சேகர், சேதுபாவாசத்திரம் ஒன்றிய தலைவர் முத்துமாணிக்கம், மணமேல்குடி ஒன்றிய தலைவர் பரணி கார்த்திகேயன், மருத்துவர்கள் நீலகண்டன், சந்திரசேகரன், சவுந்தரராஜன், ராமலிங்கம் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
- எட்டயபுரம் பாரதி ஆவண காப்பகம் சார்பில் பாரதி விழா நடந்தது.
- விழாவில், போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
விளாத்திகுளம்:
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் சார்பில் விளாத்திகுளம் அருகே உள்ள எட்டயபுரம் பாரதி மணிமண்டபம் வளாகத்தில் உள்ள பாரதி ஆவண காப்பகம் சார்பில் பாரதி விழா நடந்தது. விழாவிற்கு நாகர்கோவில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக முதுநிலை விரிவாக்க மைய இயக்குனர் ஸ்டீபன் தலைமை தாங்கினார்.
மனோன்மணியம் சுந்தரனார் தமிழியல் துறை தலைவர் (பொறுப்பு) ஜாஸ்மின் சுதா வரவேற்று பேசினார். விழாவில் பாரதியும், சூழலிலும் என்ற தலைப்பில் பேராசிரியர் அப்துல் சமது பேசினார். விழாவில் பல்கலைக்கழக எல்கைகுட்பட்ட அனைத்து கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன.
போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. பல்கலைக்கழக தமிழியல் துறை உதவி பேராசிரியர் ஜோதி முருகன் நன்றி கூறினார். இதில் உதவி பேராசிரியர்கள், சமூக ஆர்வலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- ஒயிலாட்டம், பெருஞ்சலங்கை ஆட்டம், சிலம்பாட்டம், கரகாட்டம் என பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
- பொதுப் பொங்கல் வைத்து கும்மியாட்டம் நடைபெற்றது.
அனுப்பர்பாளையம்:
தமிழா் பண்பாடு கலாசாரப் பேரவை சாா்பில் திருமுருகன்பூண்டி அம்மாபாளையத்தில் கலாசாரப் பெரு விழா கொண்டாடப்பட்டது. இதில் பொதுப் பொங்கல் வைத்து கும்மியாட்டம் நடைபெற்றது. இதைத் தொடா்ந்து, பேச்சு, கவிதை, கட்டுரைப் போட்டிகள் நடைபெற்றன. இதையடுத்து ஒயிலாட்டம், பெருஞ்சலங்கை ஆட்டம், சிலம்பாட்டம், கரகாட்டம் என பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் பங்கேற்ற கலைஞா்கள், மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்