search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வருத்தம்"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பூரி ஜெகன்நாதர் கடவுளே எங்கள் மோடியின் பக்தர்தான்.
    • சம்பித் பத்ரா கைகூப்பி மன்னிப்பு கேட்க வேண்டும் என காங்கிரஸ் வலியுறுத்தல்.

    ஒடிசா மாநிலத்தில் உள்ள பூரி ஜெகன்நாதர் கோவிலுக்கு கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு பிரதமர் மோடி சென்று வழிபட்டார்.

    கோயிலுக்குச் சென்ற புகைப்படத்தை பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். அதில், "நான் பூரியில் உள்ள ஸ்ரீஜெகன்நாதரிடம் பிரார்த்தனை செய்தேன். அவருடைய ஆசீர்வாதம் எப்போதும் நம் மீது இருக்கட்டும், மேலும் முன்னேற்றத்தின் புதிய உயரங்களை அடைய வழிகாட்டட்டும்" என்று பதிவிட்டுள்ளார்.

    இதுதொடர்பாக கருத்து தெரிவித்த ஒடிசா மாநில பாஜக தலைவர் சம்பித் பத்ரா, "பூரி ஜெகன்நாதர் கடவுளே எங்கள் மோடியின் பக்தர்தான்" என்று கூறினார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

    ஒடிசா பாஜக தலைவர் பேச்சுக்கு ஒடிசா காங்கிரஸ், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்திருந்தனர்.

    மேலும் அவரது பேச்சுக்காக தேசிய ஊடகங்கள் மற்றும் ஒடிசாவின் ஒவ்வொரு குடிமகன் முன்பும் சம்பித் பத்ரா கைகூப்பி மன்னிப்பு கேட்க வேண்டும் என காங்கிரஸ் கட்சி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டது.

    இந்நிலையில், பூரி ஜெகன்நாதர் பற்றி பேசிய கருத்துக்கு வருத்தும் தெரிவித்து 3 நாட்கள் விரதம் இருக்கப்போவதாக பூரி மக்களவை தொகுதி பாஜக வேட்பாளர் சம்பித் பத்ரா அறிவித்துள்ளார்.

    மோடி பூரி ஜெகன்நாதரின் பக்தர் என சொல்வதற்கு பதிலாக பூரி ஜெகன்நாதர் மோடியின் பக்தர் என தவறுதலாக கூறிவிட்டதாக வருத்தம் தெரிவித்து விளக்கம் அளித்துள்ளார்.

    விமான நிலையத்தில் நேற்று பேட்டியளித்த போது ரஜினிகாந்த் ஒருமையில் பேசியதாக எழுந்த குற்றச்சாட்டை அடுத்து, யாரையும் புண்படுத்தும் எண்ணம் என்க்கு இல்லை என ரஜினிகாந்த் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். #Rajinikanth
    சென்னை:

    தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் பாதிக்கப்பவர்களை சந்தித்து விட்டு நேற்று சென்னை திரும்பியபோது ரஜினிகாந்த் விமான நிலையத்தில் பேட்டியளித்தார். அப்போது, சில கேள்விகளுக்கு ஆவேசத்துடன் பதிலளித்த அவர் “ஏய் வேறு ஏதாவது கேள்வி இருக்கா?” என கூறினார்.

    இதற்கு கண்டனம் தெரிவித்த பத்திரிகை சங்கம் ஒன்று ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக அறிவித்தது. இதனை அடுத்து, இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் ரஜினிகாந்த் பதிவிட்டுள்ளதாவது, “விமானநிலையத்தில் நேற்று அளித்த பேட்டியின் போது நான் மிரட்டல் தொனியில்,ஒருமையில் பேசியதாக சென்னை பத்திரிக்கையாளர் சங்கம் தெரிவித்துள்ளது. யாரையும் புண்படுத்தும் எண்ணம் எனக்கு இருந்ததில்லை, அப்படி எந்த பத்திரிக்கை அன்பர்களின் மனதாவது புண்பட்டுருந்தால் அதற்காக நான் வருந்துகிறேன்.” என அவர் தெரிவித்துள்ளார்.
    ×