search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டியூசன்"

    • வடசேரி காவல் நிலையத்தில் மாணவியின் தந்தை புகார்
    • போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் காமராஜர்புரத்தை சேர்ந்த 14 வயது மாணவி ஒருவர், நாகர்கோவிலில் உள்ள மகளிர் பள்ளி ஒன்றில் 8ம் வகுப்பு படித்து வருகிறார். சம்பவத்தன்று மாணவி, அந்த பகுதியில் டியூசன் படிக்க சென்றார். ஆனால் அவர் வீடு திரும்பி வர வில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவியின் பெற்றோர், டியூசனுக்கு சென்று கேட்ட போது மாணவி டியூசனுக்கு வர வில்லை என்றனர். இதனால் அதிர்ச்சி அடைந்து மாணவியின் தோழிகள், உறவினர்கள் வீடுகளில் விசாரித்தனர். ஆனால் மாணவி பற்றி எந்த தகவலும் இல்லை. இதையடுத்து வடசேரி காவல் நிலையத்தில் மாணவியின் தந்தை புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். மாணவி, கடத்தப்பட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது. இது தொடர்பாக பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    அரசு பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்கள் தனியாக டியூசனோ, சிறப்பு வகுப்புகளோ நடத்தக்கூடாது என புதுச்சேரி பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
    புதுச்சேரி:

    புதுச்சேரி அரசு பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் தனியாக டியூசன் நடத்துவதாக அம்மாநில பள்ளிக்கல்வி துறைக்கு ஏராளமான புகார்கள் சென்றன. இதனை அடுத்து, அரசு பள்ளி ஆசிரியர்கள் தனியாக டியூசன், பயிற்சி வகுப்பு, சிறப்பு வகுப்புகள் நடத்த அரசு தடை விதித்துள்ளது.

    இந்த உத்தரவை மீறும் ஆசிரியர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    ×