என் மலர்
நீங்கள் தேடியது "கடன் தள்ளுபடி"
- இந்திய கூட்டுறவு வாரவிழா சிறப்பாக நடத்தப்பட இருக்கிறது.
- பயிர்க்கடன் ரூ.10 ஆயிரத்து 292 கோடி கொடுக்கப்பட்டது.
சென்னை :
கோவையில் வருகிற 19-ந் தேதி நடைபெற உள்ள அகில இந்திய கூட்டுறவு வாரவிழா தொடர்பாக கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி சென்னை தலைமைச்செயலகத்தில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-
அகில இந்திய கூட்டுறவு வாரவிழா வருகிற 14-ந் தேதி முதல் 20-ந் தேதி வரை தமிழகத்தில் சிறப்பாக நடத்தப்பட இருக்கிறது. கூட்டுறவு அமைப்புகளை வலுப்படுத்துவதற்கும், கூட்டுறவு சங்கங்களில் சிறப்பாக பணியாற்றியவர்களை கவுரவிப்பதற்கும், கூட்டுறவு நோக்கத்தை மக்களிடத்தில் கொண்டுசேர்த்து, அதை சிறப்பாக வழிநடத்துவதற்கும் இந்த கூட்டுறவு வார விழா மிகப்பயனுள்ளதாக இருக்கும்.
கூட்டுறவின் நோக்கம் என்பது பொருளாதாரத்தில் அடித்தட்டில் இருக்கின்ற மக்களுக்கு அவர்கள் செய்கின்ற விவசாயமாக இருந்தாலும், நெசவுத்தொழிலாக இருந்தாலும், கைவினைஞர்களாக இருந்தாலும், அவர்களே உறுப்பினர்களாக பதிவு செய்து ஒரு கூட்டமைப்பாக ஒரு சங்கத்தை உருவாக்கி அதன் மூலம் குறைந்த வட்டியில் அவர்களுக்கு கடனை வழங்கி சேவை செய்வதாகும்.
தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் விவசாயிகளுக்கு உரிய நேரத்தில் வட்டியில்லாமல் கடன் வழங்கியதிலும் தமிழகம்தான் முன்னோடி. முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதிதான் வட்டியில்லாமல் தொடக்க வேளாண்மை வங்கிகளில் கடன் வழங்கும் திட்டத்தை கொண்டுவந்தார். எவ்வளவு பொருளாதார நெருக்கடி இருந்தாலும், தேர்தலின்போது கொடுத்த வாக்குறுதிகளான நகைக்கடன் தள்ளுபடியில் ரூ.5,018 கோடி கணக்கெடுத்து, இதுவரை ரூ.4,888.88 கோடி அளவுக்கு கடன் தள்ளுபடி செய்யப்பட்டு உள்ளது. சுயஉதவி குழு கடனை பொறுத்தவரை ரூ.2,755 கோடி வரை கடன் தள்ளுபடி அறிவிக்கப்பட்டு கொடுத்திருக்கிறோம். பயிர்க்கடன் ரூ.10 ஆயிரத்து 292 கோடி கொடுக்கப்பட்டது.
கடந்த 2020-ம் ஆண்டு கூட்டுறவுத்துறையில் இருந்த வைப்பீடு ரூ.67 ஆயிரம் கோடிதான்.
இந்த ஆண்டு இந்த 6 மாத காலத்தில் ரூ.66 ஆயிரம் கோடி வந்துவிட்டது. அந்த அளவுக்கு மக்களுக்கு நம்பிக்கை இருப்பதால்தான் மக்கள் இதில் வைப்பீடு செய்கிறார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின்போது கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன், கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சண்முகசுந்தரம் ஆகியோர் உடன் இருந்தனர்.
- ரூ.30.29 லட்சம் தள்ளுபடி
- நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்
ஆரணி:
ஆரணி அடுத்த சம்புவராய நல்லூர் நடுக்குப்பம் சுற்றுவட்டார கிராமத்தில் 22 மகளிர் சுய உதவிக் குழுக்கள் செயல்பட்டு வருகின்றன.
மேலும் இந்த சுய உதவிக் குழுக்களுக்கு தொடக்க வேளாண்மை கூட்டுறவு துறையின் மூலம் 30 லட்சம் ரூபாய் கடன் உதவி அளிக்கப்பட்டு இருந்தன.
தற்போது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மகளிர் சுய உதவிக் குழுக்கள் கடன் தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்தார்.
இதன் அடிப்படையில் இந்த 30 லட்சத்து 29ஆயிரம் ரூபாய் மகளிர் சுய உதவிக் குழு கடன்கள் தள்ளுபடியானது.
இந்த கடன் தள்ளுபடி அரசானை சான்றிதழை ஒன்றிய செயலாளர் எஸ்.எஸ்.அன்பழகன் தலைமையில் பயனா ளிகளுக்கு வழங்கினார்கள்.
- கூட்டுறவுத் துறையின் இணை பதிவாளர் எஸ்.சீனிவாசன் வரவேற்று பேசினார்,
- கூட்டுறவு துறையினர், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையினர் உட்பட தி.மு.க. நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
வெள்ளகோவில்:
வெள்ளகோவில் முத்தூர் ரோட்டில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் கூட்டுறவுத்துறையின் மூலம் மகளிர் சுய உதவி குழுக்கள் பெற்ற கடனுக்கான தள்ளுபடி சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி திருப்பூர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் அ.லட்சுமணன் தலைமையில் திருப்பூர் மாநகராட்சி 4ம் மண்டல குழு தலைவர் இல.பத்மநாபன் முன்னிலையில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் கூட்டுறவுத் துறையின் இணை பதிவாளர் எஸ்.சீனிவாசன் வரவேற்று பேசினார், தமிழக செய்தி துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் காங்கேயம், வெள்ளகோவில் பகுதிகளை சேர்ந்த 103 மகளிர் சுய குழுக்களை சேர்ந்த ஆயிரத்து 31 நபர்களுக்கு ரூ.1 கோடியே 87 லட்சத்திற்கான கடன் தள்ளுபடிக்கான சான்றிதழ்களை வழங்கினார்.மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் மொத்தம் ரூ. 5 லட்சத்து 42 ஆயிரத்து 541 மதிப்பிலான 3 நபர்களுக்கு பேட்டரி வீல் சேர், 9 நபர்களுக்கு செல்போன், 15 நபர்களுக்கு தையல் எந்திரம் என மொத்தம் 27 நபர்களுக்கு வழங்கினார்.
முன்னதாக வெள்ளகோவில் ஒன்றியம், வேலப்பநாயக்கன்வலசு ஊராட்சியில் சடையப்பா நகர் மற்றும் கொங்கு நகர் ஆகிய பகுதிகளில் பகுதி நேர நியாய விலை கடையை திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் வெள்ளகோவில் நகர் மன்ற தலைவர் மு.கனியரசிமுத்துக்குமார். திருப்பூர் தெற்கு மாவட்ட தி.மு.க. துணைச் செயலாளர் ராசி கே. ஆர்.முத்துக்குமார், ஒன்றிய செயலாளர் மோளகவுண்டன்வலசு கே.சந்திரசேகரன், நகர செயலாளர் சபரி எஸ்.முருகானந்தன், தாராபுரம் வருவாய் கோட்டாட்சியர் குமரேசன் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள்,வருவாய்த்துறையினர், கூட்டுறவு துறையினர், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையினர் உட்பட தி.மு.க. நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
- சேலம் கலெக்டர் அலுவலகம் அருகில் இன்று காலை ஆர்ப்பாட்டம் நடந்தது.
- ஆர்ப்பாட்டத்தில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய பயிர் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்பன பல கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
சேலம்:
தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் சேலம் கலெக்டர் அலுவலகம் அருகில் இன்று காலை ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் வேல்முருகன் வரவேற்றார். மாநிலத் தலைவர் வேலுச்சாமி தலைமை தாங்கினார்.
மாநில பொதுச்செயலாளர் பழனிமுருகன், மாநிலச் செயலாளர் வேலுநாயக்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய பயிர் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும்.
100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் வேலை செய்யும் ஆட்களை, விவசாயகளின் தோட்டத்திற்கு வேளாண் பணிக்கு அனுப்ப வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.
- உச்சநீதிமன்றத்தின் தடை ஜோ பைடனுக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது
- தள்ளுபடி ரத்தால் 40 மில்லியன் மாணவர்கள் பாதிக்கப்பட வாய்ப்பு
அமெரிக்காவில் மாணவர்கள் தங்களது கல்லூரி படிப்பிற்கான செலவுகளுக்கு வங்கிகளிலும், அரசாங்க அமைப்புகளிலும் கடன் பெற்று படித்து வந்தனர்.
மந்தமான பொருளாதார சூழ்நிலையுடன் வேலையின்மை அதிகரித்து வருவதாலும், விலைவாசி உயர்வினாலும், இந்த கடன் மத்திய தர பொருளாதார வகுப்பினருக்கும் அதற்கும் கீழ் உள்ளவர்களுக்கு, மிகப்பெரும் கவலையளிக்கும் சுமையாக சில வருடங்களாகவே நிலவி வந்தது.
2021 தேர்தல் பிரச்சாரத்தில் இந்த பிரச்னையை முன்னெடுத்திருந்த ஜோ பைடன் தாம் அதிபரானால் மாணவர்கள் கடனை தள்ளுபடி செய்வதற்கு வேண்டிய அனைத்தும் செய்யப்படும் என வாக்களித்திருந்தார். அவர் பிரசாரத்தில் மிகவும் முக்கிய வாக்குறுதியாக இது அனைவரையும் கவர்ந்திருந்தது.
இதனை நிறைவேற்றும் விதமாக, பைடன் ஆகஸ்ட் 2022ல், கல்வித்துறையிடம் கடன் பெற்றவர்களுக்கு, வருடத்திற்கு தனிநபர் சுய வருமானமாக ரூ. 1,25,000 அமெரிக்க டாலர் அல்லது குடும்ப வருமானமாக 2,50,000 கிடைத்து இருந்தால், அவர்களுக்கு 10,000 அமெரிக்க டாலர் கடன் தள்ளுபடி செய்யப்படும் என்றும், பெல் கிராண்ட் (Pell Grant) எனப்படும் மானியம் பெற்று பயின்றோர்களுக்கு 20,000 அமெரிக்க டாலர்கள் தள்ளுபடி செய்யப்படும்" என்றும் அறிவித்திருந்தார்.
கல்விக்கடன் தள்ளுபடியால் சுமார் 40 மில்லியன் மாணவர்கள் பயனடையும் நிலை இருந்தது. ஆனால், இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் அந்நாட்டு உச்சநீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தபோது இந்த தள்ளுபடி செல்லாது என அறிவித்து விட்டது.
இதனால் அவர் அளித்த வாக்குறுதியை காக்க தவறிவிட்டாரா? என்ற கேள்விக்கு, மறுப்பு தெரிவித்து ஜோ பைடன் கூறியதாவது-
குடியரசு கட்சியினரால் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிகாரிகளின் போலித்தனமே இதற்கு காரணம். கோவிட் தொற்று நோய் பரவல் காலத்தில் வியாபார நிறுவனங்களுக்கு கொடுக்கப்பட்ட கடன்களை முழுமையாகவும் பகுதியாகவும், தள்ளுபடி செய்ய முடிந்தவர்களுக்கு உழைத்து வாழும் கோடிக்கணக்கான அமெரிக்க குடும்பங்களுக்கு உதவும் வகையில் கல்வி கடன் தள்ளுபடி செய்யப்படுவது பிடிக்காமல் அதற்கு எதிராக அவர்கள் அனைத்தையும் செய்கிறார்கள்" என தெரிவித்தார்.
இந்த தீர்ப்பை எதிர்கொள்ளும் விதமாக பைடன் மாற்று வழிகளை தீவிரமாக ஆய்வு செய்து வருகிறார்.
இதன்படி, 1965 உயர்கல்விக்கான சட்டத்தின் வழியாக தீர்வு தேடுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மாணவர்கள் கடனை கட்ட தவறும் பட்சத்தில் அவர்களின் கடன் வாங்கும் தகுதிக்கான தரம் (credit rating) வீழ்ந்துவிடும். இதனை தவிர்க்க, 12-மாதத்தில் கல்விக்கடனை அடைக்கும் விதத்தில் வழிவகை செய்யவும் அவர் ஆராய்வதாக தெரிகிறது.
இந்த நடவடிக்கைகள் செயல்படுத்தப்படும்போது அதன் தாக்கம் அந்நாட்டு பொருளாதாரத்தில் எவ்வாறு இருக்கும் என நிபுணர்கள் கவனித்து வருகின்றனர்.
- கூட்டுறவு கடன் சங்கத்தில் 5 பவுனுக்கு கீழ் தங்க நகை அடமானம் வைத்து கடன் பெற்றவர்களுக்கு கடன் முழுமையாக தள்ளு படி செய்து கடந்த 2021 ல் தமிழக அரசு உத்தரவிட்டது.
- பேளுக்குறிச்சி கூட்டுறவு சடன் சங்கத்தில் மொத்தம் 311 நகைக்கடன் காரர்கள் இந்த திட்டத்தில் பயனாளிகளாக கண்டறியப்பட்டனர்.
நாமக்கல்:
நாமக்கல் மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் துணை பதிவாளர் கர்ணன், கடந்த 2 தினங்களுக்கு முன்பு மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறையில் ஒரு புகார் மனு கொடுத்தார். அந்த மனுவில் கூறி இருப்பதாவது-
சேந்தமங்கலம் தாலுகா பேளுக்குறிச்சியில் உள்ள தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தில் கோவிந்தராஜ் (55) என்பவர் கடந்த 2021 ஆண்டு முதல் பொறுப்பு செயலாளராக பணியாற்றி வருகிறார்.
தமிழகத்தில் உள்ள கூட்டுறவு கடன் சங்கத்தில் 5 பவுனுக்கு கீழ் தங்க நகை அடமானம் வைத்து கடன் பெற்றவர்களுக்கு கடன் முழுமையாக தள்ளு படி செய்து கடந்த 2021 ல் தமிழக அரசு உத்தரவிட்டது. 2021 மார்ச் 31-ந் தேதி வரை கடன் பெற்றவர்களுக்கு மட்டும் இந்த சலுகை என அரசு அறிவித்திருந்தது.
பேளுக்குறிச்சி கூட்டுறவு சடன் சங்கத்தில் மொத்தம் 311 நகைக்கடன் காரர்கள் இந்த திட்டத்தில் பயனாளிகளாக கண்டறியப்பட்டனர். கடந்த ஆண்டு மார்ச் மாதம் செயலாளராக (பொறுப்பு) பணியாற்றிய கோவிந்தராஜ் சங்க உறுப்பினர் யுவராணியிடம் ரூ. 4 ஆயிரம் லஞ்சம் கொடுத்தால் அவரது பெயரில் 29.1.2021 ந் தேதியில் 30 கிராம் தங்க நகையை வைத்து பெறப்பட்ட 99 ஆயிரம் கடனை தள்ளுபடி செய்து தருவதாக கூறி உள்ளார். மேலும் அதே சங்கத்தில் நகை கடன் பெற்றிருந்த கீர்த்தனா, சீனிவாசன், சந்திரா, பெருமாள், மற்றும் சிலம்பரசன் ஆகியோரிடமும் நகைக்கடன் தள்ளுபடி சான்றிதழ் வழங்க லஞ்சம் கேட்டுள்ளார். மேலும் கந்த சாமி என்பவரிடம் நகைக்கடன் தள்ளுபடி செய்ய கடந்த 28.3.2022 அன்று ரூ.1500 லஞ்சமாக பெற்றுள்ளார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி இருந்தார்.
இந்த புகார் குறித்து மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறை டி.எஸ்.பி. சுபாஷினி விசாரணை நடத்தினார். இதையடுத்து கோவிந்தராஜ் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து அவரை கைது செய்யும் நடவடிக்கையில் லஞ்ச ஒழிப்பு போலீசார் இறங்கி உள்ளனர்.
- $430 பில்லியன் டாலர் கடனை பைடன் ரத்து செய்ததை உச்ச நீதிமன்றம் தடுத்தது
- இதுவரை $138 பில்லியன் மதிப்பிலான மாணவர் கடனை பைடன் ரத்து செய்துள்ளார்
அமெரிக்காவில் மாணவர்கள் கடன் $1.73 டிரில்லியன் என உள்ளது.
கடந்த முறை அதிபர் தேர்தலில் இரு கட்சிகளின் தேர்தல் வாக்குறுதிகளில் மாணவர் கடன் முக்கிய இடம் பிடித்தது.
முதல் முறையாக அதிபரான ஜோ பைடன், சுமார் $430 பில்லியன் டாலர் மதிப்பிலான கடனை தள்ளுபடி செய்ய முயன்று போது உச்ச நீதிமன்றம் அதனை ரத்து செய்தது.
இதனையடுத்து, "மதிப்புமிக்க கல்விக்கு சேமிப்போம்" (Saving on a Valuable Education) எனும் திட்டத்தை கொண்டு வந்தார். இத்திட்டத்தில் 7.5 மில்லியன் பயனாளிகள் பதிவு செய்துள்ளனர்.
இன்று, ஜோ பைடன் அரசின் கல்வி துறை, 1,53,000 மாணவர்களின் கல்வி கடனை தள்ளுபடி செய்துள்ளது.
இன்று தள்ளுபடி செய்யப்படும் கடன் தொகை சுமார் $1.2 பில்லியன் என மதிப்பிடப்பட்டுள்ளது.
$12,000 அல்லது அதற்கும் கீழே கடன் பெற்று கடந்த 10 வருடங்களுக்கும் குறையாமல் தவணைகளை செலுத்தி வரும் மாணவர்களில், அதிபர் பைடன் கடந்த வருடம் கொண்டு வந்த "ஸேவ்" (SAVE) திட்டத்தில் பதிவு செய்தவர்கள் அனைவருக்கும் கடன் தள்ளுபடி செய்யப்பட்டது.
"யாருக்கு மிக அதிக தேவை உள்ளதோ அவர்களுக்கு கடன் நிவாரணம் வழங்கப்படுகிறது. மேலும், இப்பிரச்சனைக்கு அடிப்படை தீர்வு காணவும் நாங்கள் முயன்று வருகிறோம். கல்லூரி படிப்பிற்கான செலவு மிக அதிகமாகி வருகிறது. இதனை கட்டுப்படுத்த வேண்டும்" என இது குறித்து பேசிய கல்வி துறை செயலர் தெரிவித்தார்.
பைடன் பதவி ஏற்றதில் இருந்து தற்போது வரை $138 பில்லியன் மதிப்பிலான மாணவர் கடனை ரத்து செய்துள்ளார். இதன் மூலம் இதுவரை 3.9 மில்லியன் மாணவர்கள் பயன் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- மன்மோகன் சிங் ஆட்சிக் காலத்தில் விவசாயிகளின் ரூ.70,000 கோடி கடன்களை தள்ளுபடி செய்தோம்
- இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால், விவசாயிகளின் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும்.
மகாராஷ்டிராவின் நாசிக் மாவட்டத்தில் நடைபெற்ற ராகுல்காந்தியின் இந்திய ஒற்றுமை நீதி பயணத்தில் சரத் பவார், சிவசேனா எம்பி சஞ்சய் ராவத் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அப்போது பேசிய ராகுல்காந்தி, "மன்மோகன் சிங் ஆட்சிக் காலத்தில் விவசாயிகளின் ரூ.70,000 கோடி கடன்களை தள்ளுபடி செய்தோம். ஆனால் விவசாயிகளின் கடனை பாஜக ஒருபோதும் தள்ளுபடி செய்யவில்லை. பாஜக அரசு ஒரு சில பணக்காரர்களின் ரூ.16 லட்சம் கோடி கடன்களை தள்ளுபடி செய்துள்ளது. பாஜக அரசால் பணக்காரர்களின் கடன்களை தள்ளுபடி செய்ய முடியுமானால், விவசாயிகள், தொழிலாளர்கள், சிறு வணிகர்களின் கடன்களை ஏன் தள்ளுபடி செய்ய முடியவில்லை.
விவசாயிகள் தற்போது டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர், ஆனால் விவசாயிகளின் குறைகளை தீர்க்க பாஜக அரசுக்கு நேரமில்லை. இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால், விவசாயிகளின் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும். விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை வழங்க பாஜக அரசு தவறி விட்டது. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை வழங்குவோம்.
அதானி 18 சதவீத ஜி.எஸ்.டி செலுத்துகிறார். அதே சமயம் விவசாயிகள் கூட ஜி.எஸ்.டி செலுத்துகின்றனர். ஜி.எஸ்.டி மட்டுமில்லாமல், விவசாயிகள் பல்வேறு வகையான வரிகளால் சிரமப்படுகின்றனர். இது விவசாயிகளின் வருமானத்தை கணிசமாக குறைக்கிறது. நாங்கள் ஆட்சிக்கு வந்தால், விவசாயிகள் ஏதேனும் ஒரு வரி மட்டும் செலுத்துவதை உறுதிசெய்வோம். மேலும், ஜிஎஸ்டி வரி வரம்பிலிருந்து விவசாயிகளுக்கு விலக்கு அளிக்க முயற்சிப்போம்" என்று அவர் தெரிவித்தார்.
- 16 கோடி இளைஞர்களுக்கு ₹1 லட்சம் சம்பளத்துடன் வேலை கொடுத்திருக்கலாம்.
- இந்திய ராணுவத்தின் 3 ஆண்டுகளுக்கான செலவை செய்திருக்கலாம்
பிரதமர் மோடி தனது கோடீஸ்வர நண்பர்களுக்கு தள்ளுபடி செய்த ₹16 லட்சம் கோடியில் என்னென்ன செய்திருக்கலாம் என்று தனது எக்ஸ் பக்கத்தில் காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி பதிவிட்டுள்ளார். அதில்,
"இந்த ₹16 லட்சம் கோடி பணத்தை வைத்து,
16 கோடி இளைஞர்களுக்கு ₹1 லட்சம் சம்பளத்துடன் வேலை கொடுத்திருக்கலாம்.
16 கோடி பெண்களுக்கு ஆண்டுக்கு ₹1 லட்சம் உதவித்தொகை வழங்கியிருக்கலாம்.
இந்திய ராணுவத்தின் 3 ஆண்டுகளுக்கான செலவை செய்திருக்கலாம்.
10 கோடி விவசாயிகளின் குடும்பங்களுக்கு கடன் தள்ளுபடி செய்து பல தற்கொலைகளை தடுத்திருக்கலாம்.
20 ஆண்டுகளுக்கு ஒட்டுமொத்த நாட்டுக்கும் ₹400-க்கு கேஸ் சிலிண்டர்கள் கொடுத்திருக்கலாம்.
பட்டியலின, பழங்குடியின, பிற்படுத்தப்பட்ட சமூக மாணவர்களுக்கு பட்டப்படிப்பு வரை இலவச கல்வி வழங்கியிருக்கலாம்" என்று அவர் தெரிவித்துள்ளார்.
- கல்விக்கடனை வசூலிக்க இயலாத காரணத்தால் தள்ளுபடி செய்வதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
- ரூ.48.95 கோடியை சிறப்பினமாக கருதி முழுவதுமாக தள்ளுபடி செய்யப்படுவதாக அறிவிப்பு.
ஆதிதிராவிடர், பழங்குடியினர், கிறிஸ்துவ ஆதிதிராவிடர் மாணவ- மாணவிகளுக்கு வழங்கப்பட்ட கல்விக்கடன் ரூ.48.95 கோடி தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, 1972- 1973 முதல் 2002- 2003 வரையிலான காலங்களில் அனைத்து படிப்புகளுக்கும் வழங்கப்பட்ட கல்விக் கடன்கள் தள்ளுபடி செய்யப்படுகிறது.
இதேபோல், 2003- 2004 முதல் 2009-2010 வரையிலான காலங்களில் வழங்கப்பட்ட கல்விக்கடன் நிலுவைத் தொகை தள்ளுபடி செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மருத்துவம், மருத்துவம் சார்ந்த படிப்புக்கு வழங்கப்பட்ட கல்விக்கடனை வசூலிக்க இயலாத காரணத்தால் தள்ளுபடி செய்வதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
கல்விக்கடன் வழங்கப்பட்ட மாணவர்கள் தொடர்பான ஆவணங்கள் இல்லாததால், நபர்களை அடையாளம் காண முடியாததால் தள்ளுபடி செய்யப்படுவதாக கூறப்பட்டுள்ளது.
ரூ.48.95 கோடியை சிறப்பினமாக கருதி முழுவதுமாக தள்ளுபடி செய்யப்படுவதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
- ஒரு பக்கம், தாங்கள் விரும்பியதைப் பெறும் பணக்காரர்கள் உள்ளனர்
- ஏழை மக்கள், தொழிலாளர்கள், விவசாயிகள் மற்றும் சிறு வணிகர்களுக்காண குரல் இன்னும் இருக்கிறதென்றால் அதற்கு அரசியலமைப்பே காரணம்.
மக்களவை எதிரிகட்சித் தலைவர் ராகுல் காந்தி இரண்டு நாள் பயணமாக நேற்று (வியாழக்கிழமை) உத்தரப் பிரதேசத்துக்கு வருகை தந்தார்.
ரேபரேலியில் பேரணியின்போது பேசிய அவர், இரண்டு இந்தியாக்கள் உருவாக்கப்படுகின்றன. ஒரு பக்கம், தாங்கள் விரும்பியதைப் பெறும் பணக்காரர்கள் உள்ளனர். அவர்களுக்காக கொரோனாவின் போது, லட்சக்கணக்கான பெருநிறுவன கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.
மறுபுறம், விவசாயிகள், வேலையில்லாத இளைஞர்கள் மற்றும் கடின உழைப்பாளிகளுக்கான இந்தியா உள்ளது. நமக்கு இரண்டு இந்தியாக்கள் இருக்க முடியாது. நமக்கு ஒரே இந்தியா வேண்டும்.
நாம் எப்படி இந்த நிலையை அடைந்தோம்?. மோடி அரசாங்கம் பணமதிப்பிழப்பு போன்ற கொள்கைகளை செயல்படுத்தியதன் மூலம் சிறு வணிகங்களை முடிவுக்குக் கொண்டு வந்தது. இந்த நாட்டில் ஏழை மக்கள், தொழிலாளர்கள், விவசாயிகள் மற்றும் சிறு வணிகர்களுக்காண குரல் இன்னும் இருக்கிறதென்றால் அதற்கு அரசியலமைப்பே காரணம்.
காந்தி, அம்பேத்கர், நேரு ஆகியோர் இந்த அரசியலமைப்பை நமக்குக் கொடுத்தார்கள். அவர்கள் சிறைக்குச் சென்று ஆங்கிலேயர்களுக்கு எதிராகப் போராடினார்கள்.
இன்று, ஆட்சியில் இருப்பவர்கள் இந்த அரசியலமைப்பைத் தாக்குகிறார்கள். யாராவது இந்தியாவைப் பிரிக்க முயற்சித்தால், அதை நீங்கள் நிறுத்த வேண்டும். இந்த நாட்டை வெறுப்பு நிறைந்ததாக மாற்றும் அவர்களின் முயற்சியை ஏற்றுக்கொள்ளாதீர்கள். இந்த நாடு அன்பின் நாடு, எப்போதும் அன்பின் ஒன்றாகவே இருக்கும் என்று தெரிவித்தார்.
தொடர்ந்து தலித் மாணவர்களுடன் உரையாடிய ராகுல் காந்தி, ஆங்கிலம் கற்க வேண்டிய அவசியம் குறித்து எடுத்துரைத்தார். ஆர்எஸ்எஸ் தலைவர் ஆங்கிலம் பேச மாட்டேன் என்று கூறுகிறார். தலித் மாணவர்கள் ஆங்கிலம் கற்று உயர் இடங்களுக்கு சென்றுவிடக்கூடாது என்பதே ஆர்எஸ்எஸ் எண்ணம். அதிகாரத்துக்கு வர ஆங்கிலம் ஒரு கருவி என்று தெரிவித்தார்.
இந்தியாவில் உள்ள உயர் கல்வி நிறுவனங்களின் எத்தனை தலித் தலைவர்கள் இருக்கிறார்கள் என கேள்வி எழுப்பிய ராகுல், இந்த அமைப்பு உங்களை ஒவ்வொரு நாளும் தாக்குகிறது, பாதிக்கும் மேற்பட்ட நேரங்களில் அது உங்களை எப்படித் தாக்குகிறது என்பது கூட உங்களுக்குத் தெரியாது.
அரசியலமைப்பின் சித்தாந்தம்தான் உங்கள் சித்தாந்தம் என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். இந்த நாட்டில் தலித்துகள் இல்லையென்றால், இந்த நாட்டிற்கு அரசியலமைப்புச் சட்டம் கிடைத்திருக்காது என்பதை நான் உறுதியாகச் சொல்ல முடியும் என்று தெரிவித்தார்.
தமிழக விவசாய சங்கங்களின் கூட்டியக்க மாநில துணை தலைவர் கக்கரை சுகுமாறன் தலைமையில் தஞ்சை தலைமை தபால் நிலையம் முன்பு மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் 20-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டு பிரதமர் மோடியின் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் உதவித்தொகை வழங்கும் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷம் எழுப்பினர்.
பின்னர் பிரதமர் மோடி விவசாய கடனை தள்ளுபடி செய்யாமல் ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் உதவித்தொகை கொடுத்து ஏமாற்றபார்க்கிறார். இந்த திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.17 மட்டுமே கிடைக்கும் என்றும், இந்த திட்டம் விவசாயிகளுக்கு பயனளிக்காதது என்றும் பிரதமருக்கு உணர்த்தும் வகையில் அவருக்கு ரூ.17 மணியார்டர் செய்தனர்.
இதைத் தொடர்ந்து கக்கரை சுகுமாறன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட்டில் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படும். அது 3 தவணையாக விவசாயிகள் வங்கி கணக்கில் செலுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது விவசாயிகளை அதிருப்தி அடைய வைப்பதாக உள்ளது.
இயற்கை பேரிடரால் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் கடன் முழுவதையும் தள்ளுபடி செய்ய வேண்டும். கரும்பு நிலுவை தொகையை உடனே வழங்கவேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைளை நிறைவேற்றாமல் பிரதமர் மோடி விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படும் என்று அறிவித்து இருப்பது அவர்களை ஏமாற்றும் செயலாகும். இதற்கு தமிழக முதல்-அமைச்சர் ஆதரவு தெரிவிப்பது கண்டிக்கத்தக்கது. மத்திய அரசு திட்டத்தால் விவசாயிகளுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.17 விதம்தான் கிடைக்கும் என்பதை தெரிவிக்கும் வகையில் பிரதமருக்கு விவசாயிகள் ரூ.17 மணியார்டர் மூலம் அனுப்பி உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.