search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 215693"

    • படுகாயமடைந்தவரை மீட்டு ஆசாரிபள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
    • விபத்து குறித்து தென்தாமரைக்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கன்னியாகுமரி:

    கயத்தாறு தெற்கு ஆத்திகுளத்தை சேர்ந்தவர் மகேஷ்வரன் (வயது 42). இவர் குடும்பத்துடன் நாகர்கோவில் ராமன்புதூர் சற்குண வீதியில் தங்கி இருந்து கடைகளுக்கு பலகாரங்கள் சப்ளை செய்யும் தொழில் செய்து வருகிறார்.

    மகேஷ்வரன் தனது மோட்டார் சைக்கிளில் கீழ மணக்குடியிலிருந்து மேல மணக்குடி நோக்கி சென்று கொண்டு இருந்தார். அப்போது கீழமணக்குடி பாலத்தில் செல்லும்போது எதிரே வடக்கன்குளம் பூஞ்சோலை தெருவை சேர்ந்த அந்தோணி ராஜேந்திரன் (வயது 34) என்பவர் ஓட்டி வந்த டாரஸ் லாரி எதிர்பாராதவிதமாக மகேஷ்வரன் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    இதில் மகேஷ்வரனுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அந்த வழியாக சென்றவர்கள் மகேஷ்வரனை மீட்டு ஆசாரிபள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து தென்தாமரைக்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சேலம் கொண்டலாம் பட்டி, போஸ்ட் ஆபீஸ் தெரு பகுதியைச் சேர்ந்தவர் நேற்று இரவு அவர் உறவினரை பார்க்க, தனது ஸ்கூட்டரில் நெத்திமேடு பகுதிக்கு வந்து கொண்டிருந்தார்.
    • எதிரே வந்த கண்டெய்னர் லாரியும், ஸ்கூட்டரும் எதிர்பாராத விதமாக மோதியதில் ரத்த வெள்ளத்தில் படுகாயமடைந்த மணிராஜ பெருமாள் சம்பவ இடத் திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

    அன்னதானப்பட்டி:

    சேலம் கொண்டலாம் பட்டி, போஸ்ட் ஆபீஸ் தெரு பகுதியைச் சேர்ந்தவர் மணிராஜ பெருமாள் ( வயது 32). ப்ளக்ஸ் டிசைனிங் நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வந்தார். இந்த நிலையில் நேற்று இரவு அவர் உறவினரை பார்க்க, தனது ஸ்கூட்டரில் நெத்திமேடு பகுதிக்கு வந்து கொண்டிருந்தார். அப்போது கரிய பெருமாள் கரடு நுழைவு ரோடு அருகே, எதிரே வந்த கண்டெய்னர் லாரியும், ஸ்கூட்டரும் எதிர்பாராத விதமாக மோதி விபத்துக்குள்ளானது. இதில் ரத்த வெள்ளத்தில் படுகாயமடைந்த மணிராஜ பெருமாள் சம்பவ இடத் திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார். அவரது உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோத னைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து அன்னதானப்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • லாரி மோதி தனியார் நிறுவன ஊழியர் பலியானார்.
    • ரேசன் அரிசி மூடைகளை ஏற்றி வந்த லாரி எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    மதுரை

    மதுரை முனிச்சாலை சி.எம்.ஆர். ரோட்டை சேர்ந்தவர் நாகராஜ் (வயது 35). தனியார் நிதி நிறு வனத்தில் பணியாற்றி வந்த இவர் தினமும் மோட்டார் சைக்கிளில் வேலைக்கு செல்வது வழக்கம். அதன்படி இன்று காலை நாகராஜ் மோட்டார் சைக்கிளில் வேலைக்கு புறப்பட்டார்.

    கூடல்நகர் மேம்பாலத்தில் சென்றபோது அந்த வழியாக ரேசன் அரிசி மூடைகளை ஏற்றி வந்த லாரி எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. லாரியின் முன்பக்கம் நாகராஜ் தலை மோதியது. இதில் அவர் மண்டை உடைந்து சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார்.

    விபத்து குறித்து தகவல் அறிந்த மாநகர போக்கு வரத்து போலீசார் சம்பவ இடம் வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோத னைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை சோலையழகு புரம் மகாலட்சுமி கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜாமுகமது (46). இவர் சுப்பிரமணியபுரம் ராஜா தெருவில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்குள்ள பள்ளி அருகே சென்றபோது அந்த வழியாக வந்த கார் ராஜாமுகமது மீது மோதியது.

    இதில் படுகாயம் அடைந்த அவர் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி இறந்தார். விபத்து குறித்து போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கார் டிரைவர் அருள்தாஸ்புரத்தை சேர்ந்த சுந்தரபாண்டியன் (31) என்பவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ரெயில் நிலையங்களில் பாசஞ்சர், எக்ஸ்பிரஸ் ரெயில்கள் நிறுத்தப்பட்டன.
    • விசாரணையில் பொதுப்பணித்துறைக்கு டீசல் பிடித்து செல்லும் லாரி என்பது தெரியவந்தது.

    சுவாமிமலை:

    திருவிடைமருதூர் அருகே ஆடுதுறை- தரங்கம்பாடி சாலையில் உள்ள ரெயில்வே கேட்டில் லாரி மோதியதால் ஓ.எச்.டி லைன் அறுந்து விழுந்து கேட் சிக்னல் பழுதானது.

    இதனை சீரமைக்கும் பணியை ரெயில்வே பணியாளர்கள் இரவில் உடனடியாக மேற்கொண்டனர். சிக்னல் சீரமைக்கும் பணியில் தாமதம் ஏற்பட்டதால் ஆடுதுறை, குத்தாலம், மயிலாடுதுறை, கும்பகோணம் உள்ளிட்ட ரெயில் நிலையங்களில் பாசஞ்சர், எக்ஸ்பிரஸ் ரெயில்கள் நிறுத்தப்பட்டன. 

    இதனால் திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ், திருப்பதி, ராமேஸ்வரம் உள்ளிட்ட பல்வேறு ரெயில்கள் சுமார் 3 மணி நேரம் தாமதமாக செல்லும் நிலை ஏற்பட்டது.விபத்து ஏற்படுத்திய லாரி ஓட்டுனரிடம் ரெயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டதில் பொதுப்பணித்துறைக்கு டீசல் பிடித்து செல்லும் லாரி என்பது தெரிய வந்தது.

    இதைத்தொடர்ந்து காலை சீரமைப்பு பணிகள் முடிவடைந்ததை அடுத்து ஆடுதுறை கேட்பகுதியை கடக்க ஏதுவாக மாற்று ஏற்பாடாக ரெயில்களில் டீசல் என்ஜின் பயன்படுத்தி இயக்கப்பட்டது.

    • ரூ. 5 லட்சம் மதிப்புள்ள கம்பிகளை, மர்பநபர்கள் திருடி சென்றனர்.
    • சி.சி.டி.வி. காமிராவில் கம்பியை திருடி சென்ற காட்சி பதிவாகியது.

    பாபநாசம்:

    தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே தஞ்சை குடந்தைதேசிய நெடு ஞ்சாலை திருப்பாலை த்துறையில் தவீடுகள் கட்டுமான பொருட்கள் விற்பனை செய்யும்கடையை முகமது நிசார் நடத்தி வருகிறார். இவர் வழக்கம்போல் வியாபாரம் முடித்துவிட்டு இரவு கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றுள்ளார்.

    காலையில் கடையை திறக்க வரும்போது, முன்பக்க கேட்டின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்த நிலையில் காணப்பட்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.உடனே கடையின் உள்ளே சென்று பார்த்த போது, வீடு கட்டுவதற்காக விற்பனைக்காக வைத்திருந்த சுமார் 7 டன்னுக்கு மேல் எடை உள்ள 5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள கம்பிகளை, மர்பநபர்கள் திருடி சென்றது தெரிய வந்தது.

    இது குறித்து கடையில் உள்ள சிசிடிவி கேமராவை ஆய்வு செய்தபோது லாரியை கடைக்கு உள்ளே கொண்டு வந்து கம்பியை திருடி சென்ற காட்சி பதிவாகியுள்ளது. இது குறித்து பாபநாசம் காவல் நிலையத்தில் முகமது நிசார் புகார் அளித்துள்ளார். சம்பவம் குறித்து பாபநாசம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • தாரமங்கலம் அருகே புறவழிச்சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்டிபோது அந்த வழியாக வந்த டிப்பர் லாரியை நிறுத்தி சோதனையிட்டதில் லாரியில் உரிய அனுமதியின்றி 3 யூனிட் கிராவல் மண் கடத்தி வந்தது தெரியவந்தது.
    • இதையடுத்து அதிகாரிகள் வாகனத்தை பறிமுதல் செய்து தாரமங்கலம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

    தாரமங்கலம்:

    சேலம் மாவட்ட கனிம வளத்துறை அதிகாரி பிரசாத் தலைமையிலான அதிகாரிகள் குழு தாரமங்கலம் அருகே புறவழிச்சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு டிப்பர் லாரியை நிறுத்தி சோதனையிட்டதில் லாரியில் உரிய அனுமதியின்றி 3 யூனிட் கிராவல் மண் கடத்தி வந்தது தெரியவந்தது.

    இது பற்றி டிரைவரிடம் விசாரிக்க முயன்ற போது டிரைவர் அங்கிருந்து தப்பி ஓடினார். இதையடுத்து அதிகாரிகள் வாகனத்தை பறிமுதல் செய்து தாரமங்கலம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

    இதையடுத்து போலீசார் அரசுக்கு இழப்பு ஏற்படுத்தியதாக வண்டியின் உரிமையாளர் மற்றும் டிரைவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • லாரிகளில் அதிக பாரம் ஏற்றி செல்வதால் ரோடுகள் பழுதடைந்து மோசமாக இருக்கிறது. இந்த லாரிகளில் அதிக வேகத்துடன் செல்வதால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுகிறது
    • 2 கனரக லாரிகளில் அதிக பாரம் ஏற்றி குலசேகரம் வழியாக கேரளாவுக்கு போகும்போது குலசேகரம் போலீசார் அரச மூட்டில் வைத்து மடக்கிபிடித்து எடை போட்டார்கள்

    கன்னியாகுமரி :

    குமரி மாவட்டத்தில் இருந்து தினமும் கேராளவுக்கு அதிக அளவில் எம்.சான்ட், என். சான்ட், ஜல்லி, கல் போன்றவைகள் ஏற்றிக்கொண்டு அதிக பாரத்துடன் கேராளவுக்கு செல்கிறது.

    சித்திரங்கோடு அருகில் உள்ள கல்குவாரிகளில் இருந்து தினமும் நூறுக்கும் மேற்பட்ட கனரக லாரிகளில் அதிக பாரம் ஏற்றி இரவு நேரங்களில் செல்கிறது. கேராளவுக்கு களியாக்கவிளை வழி யாகவும் களியல், நெட்டா வழியாகவும் லாரிகள் செல்கிறது.

    இந்த லாரிகளில் அதிக பாரம் ஏற்றி செல்வதால் ரோடுகள் பழுதடைந்து மோசமாக இருக்கிறது. இந்த லாரிகளில் அதிக வேகத்துடன் செல்வதால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுகிறது. குமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் மற்றும் நெல்லை மாவட்டத்தில் இருந்தும் தினமும் 500-க் கும் மேற்பட்ட லாரிகளில் கேரளாவுக்கு லோடு ஏற்றி கொண்டு செல்கிறார்கள். இதனால் உள்ளூரில் உள்ளவர்களுக்கு வீடு கட்டிடம் கட்டுவதற்கு கட்டுமான பொருள்கள் கிடைப்பது இல்லை. அதிக விலை கொடுத்து வாங்கவேண்டிய நிலை உள்ளது. இதனால் கட்டிட தொழிலாளர்கள் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள்.

    இதேபோல் நேற்று இரவு 2 கனரக லாரிகளில் அதிக பாரம் ஏற்றி குலசேகரம் வழியாக கேரளாவுக்கு போகும்போது குலசேகரம் போலீசார் அரச மூட்டில் வைத்து மடக்கிபிடித்து எடை போட்டார்கள் அதில் அரசு நிர்ணயித்த எடையை விட கூடுதலாக அதிக எடை இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. இதனால் 2 லாரிகளுக்கும் ரூ. 97 ஆயிரம் அபராதம் விதித்தனர்.

    குலசேகரம் போலீ சாரின் இந்த அதிரடி நட வடிக்கையால் அதன் பிறகு பின்னால் வரவேண்டிய வாகனங்கள் எதுவும் வரவில்லை.

    • நாக்பூர் அருகே நடைபெற்ற பயணத்தில் பங்கேற்ற யாத்திரை கணேசன் லாரி மோதி இறந்தார்.
    • தொடர்ந்து கணேசனின் இறுதி சடங்கு நடைபெற்றது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை கீழவாசல் பூமால் ராவுத்தன் கோவில் தெருவை சேர்ந்தவர் யாத்திரை கணேசன் (வயது 57). இவர் ராகுல்காந்தி மேற்கொள்ளும் நடைபயணத்தில் கன்னியாகுமரியில் இருந்து தொடர்ந்து அவருடன் நடந்து சென்று கொண்டிருந்தார். மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூர் அருகே நடைபெற்ற பயணத்தில் பங்கேற்ற யாத்திரை கணேசன் லாரி மோதி இறந்தார்.

    இதையடுத்து அங்கிருந்து நேற்று அவரது உடல் தஞ்சைக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு வரப்பட்டது.

    பின்னர் அவரது உடலுக்கு எம்.பி.க்கள் திருநாவுக்கரசர், ஜோதிமணி, எம்.எல்.ஏ.க்கள் துரைசந்திரசேகரன், டி.கே.ஜி.நீலமேகம், மேயர்கள் சண்.ராமநாதன் (தஞ்சாவூர்), சரவணன் (கும்பகோணம்) , முன்னாள் மாவட்ட காங்கிரஸ் தலைவர் நாஞ்சி கி.வரதராஜன், நிர்வாகிகள் அலாவூதீன், கோவி.மோகன், பூபதி, சதா.வெங்கட்ராமன், செல்வம் மற்றும் பலர் செலுத்தினர். இதனை தொடர்ந்து கணேசனின் இறுதி சடங்கு நடைபெற்றது.

    வாகன ஓட்டிகள்,பாதசாரிகள் அதிர்ஷ்டவசமாக காயம் இன்றி உயிர்த்தப்பினர்.

    கடலூர்:

    கடலூரில் இருந்து நேற்று நள்ளிரவு பண்ருட்டிக்கு லாரி ஒன்று லோடு ஏற்றிக்கொண்டுஅதிவேகமாக வந்தது. இந்த லாரிபண்ருட்டி கடலூர் ரோடு யூனியன் அலுவலகம் அருகில் வேகமாக வந்து சாலையின் நடுவே அமைக்கப்பட்டிருந்த தடுப்பு கட்டையில் மோதி நின்றது.அப்போது அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள்,பாதசாரிகள் அதிர்ஷ்டவசமாக காயம் இன்றி உயிர்த்தப்பினர்.

    இது பற்றி தகவல் அறிந்ததும் பண்ருட்டி போலீசார் சம்பவத்துக்கு விரைந்து சென்று வழக்கு பதிவு செய்து அதிவேகமாக வாகனம்ஓட்டிய லாரி டிரைவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • பலத்த காயமடைந்த சுரேஷ்கிருஷ்ணா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
    • சேவூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அவினாசி :

    ஈரோடு மாவட்டம், புன்செய்புளிய ம்பட்டி சுல்தான் வீதியைச் சோ்ந்தவா் ஆறுமுகம் மகன் சுரேஷ்கிருஷ்ணா (24). இவா், அன்னூா் அருகே பொங்கலூரில் உள்ள ஒரு தனியாா் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.

    இந்நிலையில் புன்செய்பு ளியம்பட்டி யிலிருந்து அன்னூா் நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தாா். சேவூா், பெத்தநாயக்கன்பாளையம் அருகே வரும்போது, அன்னூரிலிருந்து, அந்தியூா் நோக்கி சென்ற லாரியும், இவரது இருசக்கர வாகனமும் மோதி விபத்துக்குள்ளானது. இதில் பலத்த காயமடைந்த சுரேஷ்கிருஷ்ணா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதையடுத்து சேவூா் போலீஸாா் லாரியை ஓட்டி வந்த அந்தியூா், சின்னத்தம்பிபாளையம் புதுமேட்டூரைச் சோ்ந்த அருள் (26) மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தா.பழூர் அருகே உள்ள இடங்கண்ணி காலனி தெருவை சேர்ந்த வர் சதீஷ்குமார்(வயது 32).
    • இதில் தூக்கி வீசப்பட்ட சதீஷ்குமார் மீது லாரியின் முன் சக்கரம் ஏறி இறங்கியது.

    அரியலூர் :

    அரியலூர் மாவட்டம், தா.பழூர் அருகே உள்ள இடங்கண்ணி காலனி தெருவை சேர்ந்த கலியபெருமாளின் மகன் சதீஷ்குமார்(வயது 32). கூலித் தொழிலாளி.

    இவர் நேற்று முன்தினம் நள்ளிரவு ஜெயங்கொண்டம்-கும்பகோணம் சாலையில் தா.பழூர் கடைவீதி பகுதியில் நடந்து வந்தார். அப்போது பின்னால் கடலூர் மாவட்டம் திட்டக்குடியில் இருந்து காரைக்கால் நோக்கி வந்த லாரி, சதீஷ்குமார் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட சதீஷ்குமார் மீது லாரியின் முன் சக்கரம் ஏறி இறங்கியது. இதில் அவர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    இது பற்றி தகவல் அறிந்த தா.பழூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, சதீஷ்குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து லாரி டிரைவர் கடலூரை சேர்ந்த இளங்கோவனை கைது செய்தனர்.

    • லாரி மோதி மின்கம்பம் சேதமடைந்தது.
    • வீடுகளில் மின் தடை ஏற்பட்டது.

    புதுக்கோட்டை

    புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியிலிருந்து குளந்திரான்பட்டு செல்லும் சாலையில் தனியார் சிமெண்ட் விற்பனை நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த சிமெண்ட் விற்பனை நிலையத்திற்கு கரூரிலிருந்து சிமெண்ட் மூட்டைகளை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று சென்றுள்ளது. அப்போது குளந்திரான்பட்டு நரங்கியப்பட்டு செல்லும் சாலையில் லாரி சென்ற போது அந்த சாலையின் ஓரத்தில் இருந்த மின்கம்பத் தில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் மின்கம்பம் அடியோடு உடைந்து சாலையில் விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதில் அதிர்ஷ்டவசமாக கரூர் பகுதியை சேர்ந்த லாரி டிரைவர் அபுதாஹிர் உயிர் தப்பினார். ' இந்நிலையில் லாரி மோதியதில் மின்கம்பம் அடியோடு உடைந்து சாலையில் விழுந்ததால் அந்த பகுதியில் உள்ள நூற்றுக்கும் மேற் பட்ட வீடுகளில் மின் தடை ஏற்பட்டது. உடைந்த மின் கம்பத்தை மாற் றி புதிய மின்கம்பம் அமைக்கும் பணியில் மின்வாரிய ஊழியர்கள் ஈடுபட்டனர்.

    ×