search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 215693"

    • குமாரபாளையம் அருகே உள்ள பல்லக்கா பாளையத்தில் அதிகாலை 3 மணியளவில் தன் வீட்டின் முன்பு உள்ள காலி இடத்தில் லாரியை நிறுத்தி விட்டு தூங்க சென்றார்.
    • காலை 6 மணியளவில் வந்து பார்த்த போது நிறுத்தி வைக்கப்பட்ட லாரி காணவில்லை.

    குமாரபாளையம், அக்.28-

    குமாரபாளையம் அருகே உள்ள பல்லக்கா பாளையத்தை சேர்ந்தவர் தினேஷ்குமார் (வயது 31). இவர் லாரி வைத்து தொழில் நடத்தி வந்தார். கடந்த 25-ந்தேதி அதிகாலை 3 மணியளவில் தன் வீட்டின் முன்பு உள்ள காலி இடத்தில் லாரியை நிறுத்தி விட்டு தூங்க சென்றார். காலை 6 மணியளவில் வந்து பார்த்த போது நிறுத்தி வைக்கப்பட்ட லாரி காணவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்காததால், குமாரபாளையம் போலீசில் தினேஷ்குaமார் இது குறித்து புகார் கொடுத்தார்.

    இது குறித்து மாவட்ட எஸ்.பி.சாய்சரண் தேஜஸ்வி உத்திரவின் பேரில், இன்ஸ்பெக்டர் ரவி தலைமையில், சப்- இன்ஸ்பெக்டர் சதீஸ்குமார், எஸ்.எஸ்.ஐ.க்கள் முருகேசன், இளமுருகன், போலீஸ் சரவணன் உள்ளிட்ட தனிப்படை அமைக்கப்பட்டு காணாமல் போன லாரியை தேடி வந்தனர். காவேரி நகர் புதிய பாலம் அருகே தனிப்படை போலீசார் ரோந்து மேற்கொண்டபோது, ஆம்னி காரும், பின்னால் லாரி ஒன்றும் வந்து கொண்டிருந்தது. போலீசார் மடக்கி பிடித்த போது அது காணாமல் போன லாரி என்பது தெரியவந்தது. லாரி மற்றும் மாருதி ஆம்னி கார் பறிமுதல் செய்யபட்டது.

    காரை ஓட்டி வந்த பவானி சாகரை சேர்ந்த கவியரசு (24), லாரியை ஓட்டி வந்த காரமடை ஜேசுராஜ் (36), அதே லாரியில் வந்த திருமுருகன்பூண்டியை சேர்ந்த கண்ணன், (38) ஆகிய 3 பேரை விசாரணை செய்ததில் லாரியை திருடியதை ஒப்புக்கொண்டனர். இவர்கள் 3 பேரும் கைது செய்யப்பட்டு குமார பாளையம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட னர்.

    இது குறித்து இன்ஸ்

    பெக்டர் ரவி கூறியதாவது:

    காணாமல் போன லாரியை பிடிக்க எனது தலைமையில் தனிப்படை அமைக்கபட்டது. காவேரி நகர் பகுதியில் ஆய்வு செய்த போது, போலீஸ் யாராவது இருக்கிறார்களா? என்பதை அறிந்து கொள்ள மாருதி ஆம்னி காரில் முன்னால் வந்து யாரும் இல்லை என்பதை அறிந்து, லாரியை எடப்பாடி கொண்டு செல்ல முயற்சித்தனர். இதை தனிப்படை ேபாலீ சார் கண்டுபிடித்து லாரி கடத்தலில் ஈடுபட்ட 3 ேபரையும் கைது செய்தனர். இவ்வாறு அவர் கூறினார்.

    • குமாரபாளையம் அருகே உள்ள பல்லக்கா பாளையத்தில் அதிகாலை 3 மணியளவில் தன் வீட்டின் முன்பு உள்ள காலி இடத்தில் லாரியை நிறுத்தி விட்டு தூங்க சென்றார்.
    • காலை 6 மணியளவில் வந்து பார்த்த போது நிறுத்தி வைக்கப்பட்ட லாரி காணவில்லை.

    குமாரபாளையம், அக்.28-

    குமாரபாளையம் அருகே உள்ள பல்லக்கா பாளையத்தை சேர்ந்தவர் தினேஷ்குமார் (வயது 31). இவர் லாரி வைத்து தொழில் நடத்தி வந்தார். கடந்த 25-ந்தேதி அதிகாலை 3 மணியளவில் தன் வீட்டின் முன்பு உள்ள காலி இடத்தில் லாரியை நிறுத்தி விட்டு தூங்க சென்றார். காலை 6 மணியளவில் வந்து பார்த்த போது நிறுத்தி வைக்கப்பட்ட லாரி காணவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்காததால், குமாரபாளையம் போலீசில் தினேஷ்குaமார் இது குறித்து புகார் கொடுத்தார்.

    இது குறித்து மாவட்ட எஸ்.பி.சாய்சரண் தேஜஸ்வி உத்திரவின் பேரில், இன்ஸ்பெக்டர் ரவி தலைமையில், சப்- இன்ஸ்பெக்டர் சதீஸ்குமார், எஸ்.எஸ்.ஐ.க்கள் முருகேசன், இளமுருகன், போலீஸ் சரவணன் உள்ளிட்ட தனிப்படை அமைக்கப்பட்டு காணாமல் போன லாரியை தேடி வந்தனர். காவேரி நகர் புதிய பாலம் அருகே தனிப்படை போலீசார் ரோந்து மேற்கொண்டபோது, ஆம்னி காரும், பின்னால் லாரி ஒன்றும் வந்து கொண்டிருந்தது. போலீசார் மடக்கி பிடித்த போது அது காணாமல் போன லாரி என்பது தெரியவந்தது. லாரி மற்றும் மாருதி ஆம்னி கார் பறிமுதல் செய்யபட்டது.

    காரை ஓட்டி வந்த பவானி சாகரை சேர்ந்த கவியரசு (24), லாரியை ஓட்டி வந்த காரமடை ஜேசுராஜ் (36), அதே லாரியில் வந்த திருமுருகன்பூண்டியை சேர்ந்த கண்ணன், (38) ஆகிய 3 பேரை விசாரணை செய்ததில் லாரியை திருடியதை ஒப்புக்கொண்டனர். இவர்கள் 3 பேரும் கைது செய்யப்பட்டு குமார பாளையம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட னர்.

    இது குறித்து இன்ஸ்

    பெக்டர் ரவி கூறியதாவது:

    காணாமல் போன லாரியை பிடிக்க எனது தலைமையில் தனிப்படை அமைக்கபட்டது. காவேரி நகர் பகுதியில் ஆய்வு செய்த போது, போலீஸ் யாராவது இருக்கிறார்களா? என்பதை அறிந்து கொள்ள மாருதி ஆம்னி காரில் முன்னால் வந்து யாரும் இல்லை என்பதை அறிந்து, லாரியை எடப்பாடி கொண்டு செல்ல முயற்சித்தனர். இதை தனிப்படை ேபாலீ சார் கண்டுபிடித்து லாரி கடத்தலில் ஈடுபட்ட 3 ேபரையும் கைது செய்தனர். இவ்வாறு அவர் கூறினார்.

    • இந்த வண்டிகள் அதிக வேகத்துடன் செல்வதால் பல விபத்துகள் நடைபெறுகிறது.
    • பொதுமக்கள் வந்ததும் லாரி டிரைவர் வண்டியை நிறுத்திவிட்டு தப்பி ஓடிவிட்டார்.

    கன்னியாகுமரி:

    குமரி மாவட்டத்தில் இருந்து தினமும் இரவு நேரங்களில் அதிக பாரத்துடன் டாரஸ் லாரிகளில் கல், எம் சான்ட் போன்ற கனிம வளங்கள் பூதப்பாண்டி, திட்டுவிளை, தடிக்காரன்கோணம் சுருளோடு, பொன்மனை, குலசேகரம் வழியாக கேரளாவுக்கு கொண்டு செல்கிறார்கள். இந்த வண்டிகள் அதிக வேகத்துடன் செல்வதால் பல விபத்துகள் நடைபெறுகிறது.

    நேற்று இரவு அருமனை பகுதியை சேர்ந்த ரெவிகுமார் (வயது 38) என்பவர் பூதப்பாண்டி பகுதியில் பியூட்டி பார்லர் வைத்து நடத்தி வருகிறார். தினமும் குலசேகரம் வழியாக தனது இருசக்கர வாகனத்தில் அங்கு சென்று வருவது வழக்கம். நேற்று இரவு கடையை மூடி விட்டு சுருளோடு பகுதியில் வரும்போது நாகர்கோவிலில் இருந்து அதிக கல் பாரத்துடன் கனரக வாகனம் ஒன்று அதிவேகமாக வந்து கொண்டு இருந்தது. இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டு இருந்த ரெவிகுமார் மீது உரசியது. இதில் அவர் கீழே விழுந்ததில் பலத்த காயம் அடைந்தார். அவரின் அலறல் சத்தம் கேட்டு அந்த பகுதி பொதுமக்கள் வந்ததும் லாரி டிரைவர் வண்டியை நிறுத்திவிட்டு தப்பி ஓடிவிட்டார்.

    உடனே ரெவிகுமாரை அந்த பகுதி பொதுமக்கள் மீட்டு நாகர்கோவில் தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ரெவிகுமார் கொடுத்த புகாரின்பேரில் குலசேகரம் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் அதங்கோடு பகுதியை சேர்ந்த லாரி டிரைவர் விஜயகுமார் என்பது தெரியவந்தது. தலைமறைவான லாரி டிரைவர் விஜயகுமாரை போலீசார் தேடி வருகிறார்கள்.

    • கடலை எண்ணெய் லோடு ஏற்றிக்கொண்டு கோவை நோக்கி சேலம் கோவை புறவழிச்சாலையில் குமாரபாளையம் அருகே கத்தேரி பிரிவு பகுதியில் சென்று கொண்டிருந்தார்.
    • இரவில் லாரி நிற்பது தெரியாமல், எண்ணெய் லோடு லாரி கரும்பு லோடு லாரியின் மீது மோதியதில், லாரி ஓட்டுனர் கால்களில் எலும்பு முறிவு ஏற்பட்டு பலத்த காயமடைந்தார்.

    குமாரபாளையம்:

    மத்திய பிரதேச மாநிலம் ராஜ்காட் மாவட்டத்தை சேர்ந்தவர் ஸ்ரீநாத்( வயது25). இவர் கடலை எண்ணெய் லோடு ஏற்றிக்கொண்டு கோவை நோக்கி சேலம் கோவை புறவழிச்சாலையில் குமாரபாளையம் அருகே கத்தேரி பிரிவு பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது, சாலையின் ஓரமாக எவ்வித சிக்னலும் போடாமல் கரும்பு லோடு லாரி ஒன்று நின்று கொண்டிருந்தது.

    இரவில் லாரி நிற்பது தெரியாமல், எண்ணெய் லோடு லாரி கரும்பு லோடு லாரியின் மீது மோதியதில், லாரி ஓட்டுனர் ஸ்ரீநாத் கால்களில் எலும்பு முறிவு ஏற்பட்டு பலத்த காயமடைந்தார். லாரி பலத்த சேதமடைந்த நிலையில் ஓட்டுனரை வெளியே எடுக்க முடியாததால், குமாரபாளையம் தீயணைப்பு படையினர் நேரில் வந்து போராடி ஓட்டுனரை மீட்டு ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    கரும்பு லோடு லாரியில் தூங்கி கொண்டிருந்த கள்ளக்குறிச்சி மாவட்டம் சிருவன்கூர் பகுதியினை சேர்ந்த டிரைவர் செல்வம், (30)என்பவரும் காயமடைந்தார். இவரை குமாரபாளையம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். இந்த விபத்து குறித்து குமாரபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    • அரசால் தடை செய்யப்பட்ட 300 கிலோ புகையிலை பொருட்கள் இருப்பது தெரியவந்தது.
    • டிரைவர் லோகேஸ்வரனை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    பல்லடம் :

    திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள காரணம்பேட்டை நால்ரோடு பகுதியில் பல்லடம் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த கண்டெய்னர் லாரியை நிறுத்தி சோதனையிட்டனர். அப்போது அதில் ரகசிய அறை அமைக்கப்பட்டு இருந்தது. சந்தேகம் அடைந்த போலீசார் சோதனை மேற்கொண்டதில் அரசால் தடை செய்யப்பட்ட 300 கிலோ புகையிலை பொருட்கள் இருப்பது தெரியவந்தது.

    இதையடுத்து லாரியை பறிமுதல் செய்து பல்லடம் போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் அந்த லாரி பல்லடம் அருகேயுள்ள பருவாய் சாலை பகுதியை சேர்ந்த ஜெபர்சன் வைஸ் (வயது 33) என்பவருக்கு சொந்தமானது என தெரியவந்தது. அதனை தேனி மாவட்டம் உத்தமபாளையம் கன்னிசேரவாடி பகுதியைச் சேர்ந்த ஈஸ்வரன் மகன் லோகேஸ்வரன் (23) என்பவர் ஓட்டி வந்துள்ளார். லோகேஸ்வரன் தற்போது சின்ன கோடங்கிபாளையம் கிராமத்தில் உள்ள பி.சி.ஆர் தோட்டத்தில் வசித்து வருகிறார். அவர் கண்டெய்னர் லாரியை எடுத்துக் கொண்டு காரணம்பேட்டை வந்தபோது போலீசாரின் வாகன சோதனையில் சிக்கியுள்ளார். டிரைவர் லோகேஸ்வரனை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் புகையிலை பொருட்களை எங்கிருந்து கடத்தி கொண்டு வந்தார். அதனை யாரிடம் கொடுக்க இருந்தார் என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    • கல் குவாரியில் அதிக அளவில் விதிமீறல்கள் உள்ளதாக பொதுமக்கள் தொடர்ந்து புகார் தெரிவித்து வருகின்றனர்.
    • பொதுமக்கள் துங்காவி பகுதிக்கு வந்து உடுமலை-தாராபுரம் நெடுஞ்சாலையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    உடுமலை :

    மடத்துக்குளம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஏராளமான கல் குவாரிகள் செயல்பட்டு வருகிறது. இதில் பல கல் குவாரிகளில் விதி மீறல்கள் இருப்பதாக பொதுமக்கள் தொடர்ந்து புகார் தெரிவித்து வருகின்றனர்.இந்த நிலையில் மடத்துக்குளத்தையடுத்த துங்காவி மலையாண்டிபட்டினம் பகுதியில் செயல்பட்டு வரும் கல் குவாரியில் அதிக அளவில் விதிமீறல்கள் உள்ளதாக பொதுமக்கள் தொடர்ந்து புகார் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று காலை கல்குவாரிக்கு சென்ற 2 லாரிகளை பொதுமக்கள் சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.ஆனால் சம்பவ இடத்துக்கு அதிகாரிகள் யாரும் வராததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் துங்காவி பகுதிக்கு வந்து உடுமலை-தாராபுரம் நெடுஞ்சாலையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:- கல் குவாரியில் கற்களை உடைக்க, விதிகளை மீறி அதிக சக்தி வாய்ந்த வெடி வைக்கப்படுகிறது.மேலும் அனுமதியற்ற பகுதிகளிலும் தொடர்ச்சியாக அதிக ஆழத்தில் கற்கள் எடுக்கப்பட்டு வருகிறது.மேலும் இரவு பகலாக கனரக வாகனங்கள் தொடர்ந்து அதிக வேகத்தில் இயக்கப்படுகிறது.குறிப்பாக இரவு நேரத்தில் அதிக எண்ணிக்கையில் வாகனங்கள் இயக்கப்பட்டு வருகிறது.இதனால் ரோடு முழுவதும் சேதமடைந்து குண்டும் குழியுமாக மாறி விட்டது. மேலும் லாரிகளில் அதிக அளவில் கற்கள் ஏற்றப்பட்டு கொண்டு செல்லப்படுகிறது.மேடு பள்ளங்களில் லாரி ஏறி இறங்கும்போது கற்கள் ரோட்டில் விழுகிறது.

    இதனால் ரோட்டில் செல்லும் பொதுமக்களுக்கு உயிருக்கு உத்தரவாதமற்ற சூழல் நிலவுகிறது.இதுவரை கற்கள் விழுந்து பலர் காயமடைந்துள்ளனர்.தோள்பட்டையில் கல் விழுந்து பலத்த காயமடைந்தவரைப் பற்றி நிர்வாகத்தினரிடம் கூறிய போது,தோளில் தானே விழுந்தது.தலையில் விழவில்லையே என்று அலட்சியமாக பதில் சொல்கின்றனர். விதிமீறல்கள் குறித்து தாசில்தார்,ஆர்டிஓ, கலெக்டர், கனிமவளத்துறை என அனைத்து அதிகாரிகளுக்கும் புகார் தெரிவித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தற்போது தண்ணீர் லாரியை ஓட்டி வந்த டிரைவர்,பிரேக் பிடிக்கலை என்று கூச்சலிட்டு எதிரே வருபவர்களை விலகச் சொல்லியபடியே வந்திருக்கிறார். அப்போது எதிரில் மோட்டார் சைக்கிள் ஓட்டி வந்த ஒருவர் முட்புதருக்குள் வண்டியை விட்டதால் உயிர் தப்பினார்.இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் லாரிகளை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    ஆனால் பல மணி நேரம் காத்திருந்தும் அதிகாரிகள் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வரவில்லை.எனவே வேறு வழியில்லாமல் சாலை மறியலில் ஈடுபட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.எனவே கல் குவாரியில் ஆய்வு செய்து விதி மீறல்களைத் தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.பழுதடைந்த ரோட்டை உடனடியாக சீரமைக்க வேண்டும்.கல் குவாரிக்கு இயக்கப்படும் வாகனங்களை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.பொதுமக்களின் பாதுகாப்புக்கு உறுதியளிக்க வேண்டும்'என்று பொதுமக்கள் கூறினர்.சம்பவ இடத்துக்கு தாசில்தார் உட்பட உயர் அதிகாரிகள் யாரும் வராத நிலையில் வருவாய் ஆய்வாளர் மற்றும் சப் இன்ஸ்பெக்டர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.இதனால் ஆவேசமடைந்த பொதுமக்கள் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.பின்னர் விரைவில் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததைத் தொடர்ந்து பொதுமக்கள் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனர்.

    • மாணவர்கள் மூவரும் இன்று காலை கும்பகோணத்தில் இருந்து மன்னார்குடி நோக்கி வந்த அரசு பேருந்தில் ஏறி வந்தனர்.
    • ஒரு லாரி முந்தி சென்ற போது பஸ் மீது உரசியதில் 3 மாணவர்களும் காயம் அடைந்தனர்.

    மன்னார்குடி:

    திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் பகுதி நார்த்தாமலை தளபதி மகன் கோகுல் (வயது18), ஜீவானந்தம் மகன் கோகுல் (17). இவர்கள் இருவரும் கோட்டூர் தொழில் பயிற்சி நிலையத்தில் படித்து வருகிறார்கள்.

    நரசிங்கம்பேட்டையை சேர்ந்த திருமாறன் (16). மன்னார்குடி தனியார் பள்ளியில் படித்து வருகிறான். இந்த மாணவர்கள் மூவரும் இன்று காலை கும்பகோணத்தில் இருந்து மன்னார்குடி நோக்கி வந்த அரசு பேருந்தில் ஏறி வந்தனர்.

    பஸ்ஸை டிரைவர் தவக்குமார் (45) என்பவர் ஓட்டி வந்தார். பஸ் மன்னார்குடி தேரடி அருகே வரும்போது ஒரு லாரி முந்தி சென்ற போது பஸ் மீது உரசியதில் 3 மாணவர்களும் காயம் அடைந்தனர்.

    உடனடியாக அவர்களை மீட்டு மன்னார்குடி தலைமை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதுகுறித்து டவுன் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் வீரன் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்.

    • விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து மேற்கொண்டு விசாரணை செய்து வருகிறார்கள்.
    • விபத்தில் சோமசுந்தரம் மற்றும் சக்திவேல் ஆகியோர் பலத்த அடிபட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

    பல்லடம்:

    பல்லடம் அருகே உள்ள கணபதிபாளையத்தை சேர்ந்த ராயப்ப செட்டியார் என்பவரது மகன் சோமசுந்தரம் (வயது 70 ). அதே ஊரைச் சேர்ந்த சவுண்டப்பன் என்பவரது மகன் சக்திவேல் ( 40 ). இவர்கள் இருவரும் நேற்று கணபதிபாளையத்திலிருந்து மோட்டார் சைக்கிளில் பல்லடம் -உடுமலை ரோட்டில் உள்ள வாவி பாளையம் கருப்பராயன் கோவிலுக்கு சென்றுள்ளனர். அப்போது அந்த வழியாக மின்கம்பத்தை ஏற்றுக் கொண்டு ஜேசிபி வாகனம் ஒன்று வந்துள்ளது. இதனை எதிர்பாராத இவர்களது மோட்டார் சைக்கிள் மின் கம்பம் கொண்டு சென்ற வாகனத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சோமசுந்தரம் மற்றும் சக்திவேல் ஆகியோர் பலத்த அடிபட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இதுகுறித்து காமநாயக்கன்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இருவரது உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து மேற்கொண்டு விசாரணை செய்து வருகிறார்கள்.

    • அத்துமீறி குவாரிக்குள் நுழைந்து லாரியை தடுத்து நிறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
    • பல்லடம் போலீசில் புகார் செய்தார்.

    பல்லடம் :

    பல்லடம் அருகே உள்ள கோடங்கிபாளையத்தில் தனியார் கல்குவாரி செயல்பட்டு வருகிறது.

    இந்நிறுவனத்தின் லாரி குவாரியில் இருந்து மண் எடுத்து வரும்போது அவிநாசியை சேர்ந்த விஜயகுமார் ,சக்திவேல், விஜயன், கணேஷ் , மகாசாமி உள்ளிட்ட 5 நபர்கள் அத்துமீறி குவாரிக்குள் நுழைந்து லாரியை தடுத்து நிறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக குவாரி மேற்பார்வையாளர் திருநாவுக்கரசு பல்லடம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.  

    • ஏற்காடு சோதனைச்சாவடி வன ஊழியர் இடமாற்றம் செய்யப்பட்டார்.
    • ஏற்காடு அடிவார பகுதியில் பணியில் இருக்கும் வன ஊழியர்கள் சரியான முறையில் கண்காணிக்காமல் மரலோடு லாரிகளை விட்டு வந்தததாக புகார் எழுந்தது.

    சேலம்:

    சேலம் மாவட்டம் ஏற்காடு மலையில் இருந்து முறையான அனுமதி பெறாமல் தனியார் எஸ்டேட்களில் இருந்து பல வகை மரங்களை வெட்டி கடத்துவதாக புகார்கள் எழுந்தது. மலைப் பாதை வழியே மர லோடு ஏற்றி வரும் லாரிகளை சோதனையிட அடிவாரப்பகுதியில் வனத்து றையின் சோதனைச்சாவடி இருக்கிறது.

    இங்கு பணியில் இருக்கும் வன ஊழியர்கள் சரியான முறையில் கண்காணிக்காமல் மரலோடு லாரிகளை விட்டு வந்தததாக கூறப்படுகிறது.

    இது பற்றி மாவட்ட வன அலுவலர் (பொறுப்பு) கவுதம் விசாரணை நடத்தினார். அதனடிப்படையில் ஏற்காடு அடிவார சோதனைசாவடியில் பணியாற்றி வந்த வனக் காப்பாளர் புகழேந்தியை அஸ்தம்பட்டி சந்தன மர குடோனுக்கு அதிரடியாக இடமாற்றி உத்தரவிட்டுள்ளார். அேதபோல் சேர்வராயன் தெற்கு வனச்சரகத்தில் பணியாற்றி வந்த வனக் காப்பாளர் அசோகனை ஏற்காடு சோதனைசாவடிக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளார்.

    • ஜம்பையில் இருந்து கொங்கர்பாளையத்திற்கு மக்காச்சோளம் தட்டு ஏற்றிக்கொண்டு ஒரு மினி லாரி வந்து கொண்டு இருந்தது.
    • அத்தாணி-சத்தி ரோட்டில் வந்த போது லாரியின் பின் பக்க டயர் திடீரென வெடித்ததில் லாரி நிலைதடுமாறி சாலையில் கவிழ்ந்தது.

    ஆப்பக்கூடல்:

    ஆப்பக்கூடல் அடுத்த அத்தாணி-சத்தி ரோட்டில் ஜம்பையில் இருந்து கொங்கர்பாளையத்திற்கு மக்காச்சோளம் தட்டு ஏற்றிக்கொண்டு ஒரு மினி லாரி வந்து கொண்டு இருந்தது.

    லாரியில் கொங்கர் பாளையத்தை சேர்ந்த தொழிலாளர்கள் அர்ஜூனன், முத்துசாமி, ராசன், விஜயா, முருகேசன், சுந்தரி, சாந்தி, பழனிச்சாமி மற்றும் வாணிப்புத்தூரை சேர்ந்த டிரைவர் சபேஷ்குமார் உள்பட 9 பேர் வந்தனர்.

    அப்போது அத்தாணி-சத்தி ரோட்டில் தனியார் திருமண மண்டபம் அருகே வந்த போது லாரியின் பின் பக்க டயர் திடீரென வெடித்தது. இதனால் மினி லாரி நிலைதடுமாறி சாலையில் கவிழ்ந்தது.

    இதில் லாரியின் பின்பக்கத்தில் சோளத்தட்டு பாரத்தின் மேல் அமர்ந்து இருந்த அனைவரும் கீழே விழுந்தனர். தொழிலாளிகள் உள்பட 9 பேருக்கும் இடுப்பு மற்றும் கால்களில் அடிபட்டு காயம் எற்பட்டது.

    உடனே அருகில் இருந்தவர்கள் ஓடிவந்து அவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

    இச்சம்பவம் குறித்து ஆப்பக்கூடல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • இன்று காலை கருப்பூர் அருகே ஊத்து ஓடை பகுதியில் உள்ள மில்லில் இருந்து டிப்பர் லாரியில் வெள்ளக்கல் கடத்துவதாக தகவல் கிடைத்தது.
    • அதில் 7 டன் எடையுள்ள வெள்ளைக்கல் இருப்பது தெரியவந்தது.

    சேலம்:

    சேலம் சுரங்கத்துறை உதவி பொறியாளர் பிரகாஷ் -க்கு இன்று காலை கருப்பூர் அருகே ஊத்து ஓடை பகுதியில் உள்ள மில்லில் இருந்து டிப்பர் லாரியில் வெள்ளக்கல் கடத்துவதாக தகவல் கிடைத்தது. இதை யடுத்து பிரகாஷ் உப்பு கிணறு பகுதியில் வந்து கொண்டிருந்த ஒரு டிப்பர் லாரியை வழிமறித்து சோதனையிட்டதில் அதில் 7 டன் எடையுள்ள வெள்ளைக்கல் இருப்பது தெரியவந்தது.இதையடுத்து டிப்பர் லாரியையும் அதை ஓட்டி வந்த ஓமலூர் புதூர் காட்டுவளவு பகுதியை சேர்ந்த பெருமாள் (வயது 44) என்பவரையும் கருப்பூர் போலீசில் ஒப்படைத்தனர்.போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

    ×