என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாதுகாப்பு படை"

    • தளபதி ஹிட்மா மற்றும் பட்டாலியன் தலைவர் தேவா உள்ளிட்ட உயர் நக்சல் தலைவர்கள் இருக்கும் இடம் குறித்து அறிந்தனர்.
    • இப்பகுதியில் ஏராளமான IED வெடிகுண்டுகள் புதைக்கப்பட்டுள்ளதாகக் கூறினர்.

    மூன்று மாநிலங்களைச் சேர்ந்த 20,000க்கும் மேற்பட்ட பாதுகாப்புப் படையினர் சத்தீஸ்கரின் பிஜாப்பூரில் 1,000க்கும் மேற்பட்ட நக்சல்களைச் சுற்றி வளைத்துள்ளதாக பாதுகாப்புத்துறை தெரிவிக்கின்றன.

    சத்தீஸ்கர், தெலுங்கானா மற்றும் மகாராஷ்டிராவைச் சேர்ந்த பாதுகாப்புப் படையினர் ஈடுபட்ட இந்த நடவடிக்கையில் இதுவரை குறைந்தது 5 நக்சல்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, நக்சலிசத்தை ஒழிக்க மார்ச் 31, 2026 வரை காலக்கெடு நிர்ணயித்த நிலையில், இந்த மிகப்பெரிய நடவடிக்கையில் பாதுகாப்புப் படை இறங்கியுள்ளது.

    சத்தீஸ்கர்-தெலுங்கானா எல்லையில் அமைந்துள்ள கர்ரேகுட்டா மலைகளை பாதுகாப்புப் படையினர் சுற்றி வளைத்து, நக்சல்கள் தப்பிக்கும் அனைத்து வழிகளையும் துண்டித்துள்ளனர்.

    தலைமறைவான மற்றும் மிகவும் தேடப்படும் தளபதி ஹிட்மா மற்றும் பட்டாலியன் தலைவர் தேவா உள்ளிட்ட உயர் நக்சல் தலைவர்கள் இருக்கும் இடம் குறித்த உளவுத்துறை தகவல்களின் அடிப்படையில் இந்த நடவடிக்கை தொடங்கப்பட்டுக் கடந்த 48 மணி நேரத்திற்கும் மேலாக நடந்து வருகிறது. 

    அடர்ந்த காடுகள் மற்றும் தொடர் மலைகளால் சூழப்பட்ட இந்தப் பகுதி, மாவோயிஸ்டுகளின் பட்டாலியன் எண் 1 இன் தளமாகக் கருதப்படுகிறது.

    சில நாட்களுக்கு முன்பு, நக்சல்கள் ஒரு செய்திக்குறிப்பை வெளியிட்டு, மலைப்பகுதிகளுக்குள் நுழைய வேண்டாம் என்று கிராம மக்களை எச்சரித்தனர். மேலும் இப்பகுதியில் ஏராளமான IED வெடிகுண்டுகள் புதைக்கப்பட்டுள்ளதாகக் கூறினர் என்று கூறப்படுகிறது.

    • மத்திய ரிசர்வ் பாதுகாப்பு படையினர் நக்சலைட்டுகளை தேடும் பணியில் ஈடுபட்டனர்.
    • அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்குள் நக்சலைட்டுகளை முற்றிலும் ஒழித்து விடுவோம்

    ஜார்க்கண்ட் மாநிலம் பொகாரோ மாவட்டத்தின் லால்பானியாவில் உள்ள லுகு மலைப் பகுதிகளில் மத்திய ரிசர்வ் பாதுகாப்பு படையினர் மற்றும் போலீசார் இணைந்து இன்று அதிகாலை 5.30 மணியளவில் நக்சலைட்டுகளை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது பதுங்கி இருந்த நக்சலைட்டுகள் துப்பாக்கியால் சுட்டனர் இதனால் பாதுகாப்புப் படையினர் பதில் தாக்குதல் நடத்தினர். இரு தரப்புக்கும் இடையே பயங்கர துப்பாக்கிச் சண்டை நடந்தது. இதில் 8 நக்சலைட்டுகளை மத்திய பாதுகாப்பு படையி னர் சுட்டு கொன்றனர், பாதுகாப்புப் படையினருக்கு எந்த காயமும் ஏற்பட வில்லை.

    சுட்டுக் கொல்லப்பட்டவர்களில் நக்சலைட்டுகளின் தலைவன் ஒருவனும் அடங்கும். அவனது தலைக்கு அரசு ரூ.1 கோடி அறிவித்து இருந்தது. என்கவுண்டர் நடந்த இடத்தில் இருந்து துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. தொடர்ந்து நக்சலைட்டுகளை தேடும் பணி நடைபெற்று வருகின்றன.

    சமீபகாலமாக, சத்தீஸ்கர், ஜார்கண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் நக்சல்களுக்கு எதிரான நடவடிக்கைகளை பாதுகாப்புப் படையினர் தீவிரப்படுத்தி உள்ளது.

    அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்குள் நக்சலைட்டுகளை முற்றிலும் ஒழித்து விடுவோம் என்று மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா சமீபத்தில் தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • தற்கொலைப் படையைச் சேர்ந்த பயங்கரவாதி, தனது வாகனத்தில் இருந்த வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்ததில், பாதுகாப்பு படையினரின் வாகனமும் வெடித்து சிதறியது.
    • பலுச் விடுதலை படை நடத்திய ரெயில் கடத்தலில் 90 வீரர்கள் கொல்லப்பட்டதாக அவ்வமைப்பு கூறியிருந்தது.

    பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் கடந்த வாரம் ரெயிலை கடத்திய பிரிவினைவாத பலுச் விடுதலை படை, நேற்று பாதுகாப்புப் படையினர் சென்ற ராணுவ வாகனத்தின் மீது தற்கொலை தாக்குதல் நடத்தியது.

    இந்த தாக்குதலில் 5 வீரர்கள் உயிரிழந்தனர். இந்த தாக்குதலின் பரபரப்பூட்டும் வீடியோவை பலுச் விடுதலை படை தற்போது வெளியிட்டுள்ளது.

    நேற்று காலையில் நோஷிகி பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் துணை ராணுவப் படையினர் வாகனங்களில் சென்றபோது, கான்வாயில் புகுந்த ஒரு வாகனம் திடீரென வெடித்தது. தற்கொலைப் படையைச் சேர்ந்த பயங்கரவாதி, தனது வாகனத்தில் இருந்த வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்ததில், பாதுகாப்பு படையினரின் வாகனமும் வெடித்து சிதறியது. 5 பேர் உயிரிழந்த நிலையில் 10 பேர் படுகாயமடைந்தனர்.

    அவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. முன்னதாக பலுச் விடுதலை படை நடத்திய ரெயில் கடத்தலில் 90 வீரர்கள் கொல்லப்பட்டதாக அவ்வமைப்பு கூறியிருந்தது.  

    கடந்த வாரம் இதே மாகாணத்தில், பலுச் விடுதலை படையினர், கூடலார் மற்றும் பிரு குன்ரி மலைப்பகுதிக்கு அருகே 440 பயணிகளை ஏற்றி சென்ற ஜாஃபர் எக்ஸ்பிரஸ் ரெயில் மீது தாக்குதல் நடத்தி பயணிகளை சிறைபிடித்தனர்.

    அதில் பெரும்பாலானோர் பாதுகாப்பு ஊழியர்கள் ஆவர். மறுநாள் ராணுவம் நடத்திய மீட்பு நடவடிக்கையில் 33 பயங்கரவாதிகளையும் கொல்லப்பட்டனர். அதற்கு முன்பு, 21 பயணிகளையும் நான்கு துணை ராணுவ வீரர்களையும் பயங்கரவாதிகள் கொன்றனர் என்று அரசு தரப்பில் கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

    • நாகராஜா கோவில் திடலில் மேடை அமைப்பு பணியை பாதுகாப்பு படையினர் ஆய்வு
    • புதிய மாநகராட்சி அலுவலகத்தையும் பார்வையிட்டனர்

    நாகர்கோவில் :

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், குமரி மாவட்டத்தில் வருகிற 6 மற்றும் 7-ந் ேததிகளில் சுற்றுப்பயணம் செய்து பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.

    நாளை மறுநாள் (6-ந் தேதி) மாலை நாகர்கோவில் நாகராஜா கோவில் திடலில் தோள்சீலை போராட்டத்தின் 200-வது ஆண்டு நிறைவு பொதுக்கூட்டம் நடக்கிறது. இதில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்க உள்ளார்.

    இந்த கூட்டத்தில் கேரள முதல்-மந்திரி பினராய் விஜயன் மற்றும் பலரும் பங்கேற்கின்றனர். மறுநாள் (7-ந் தேதி) நாகர்கோவிலில் புதிதாக கட்டப்பட்டுள்ள மாநகராட்சி அலுவலகத்தை முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைக்கி றார். தொடர்ந்து ஒழுகின சேரியில் உள்ள மாவட்ட தி.மு.க. அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் சிலையையும் அவர் திறந்து வைக்கிறார்.

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 2 நாள் சுற்றுப்பயணத்தை முன்னிட்டு குமரி மாவட்டத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அவர் பங்கேற்கும் நிகழ்ச்சி நடைபெறும் இடங்களை தென் மண்டல போலீஸ் ஐ.ஜி. அஸ்ரா கார்க் நேற்று ஆய்வு செய்தார்.

    இந்த நிலையில் இன்று (சனிக்கிழமை) காலை முதல்-அமைச்சரின் பாதுகாப்பு படையினர் குமரி மாவட்டம் வந்து ஆய்வு செய்தனர். அவர்கள் முதலில் நாகராஜா கோவில் திடலில் அமைக்கப்பட்டு வரும் மேடை அமைப்பு பணிகளை பார்வையிட்ட னர். அங்கு செய்ய வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத்துடன் ஆலோசனை நடத்தினர். தொடர்ந்து முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் பங்கேற்கும் விழா நடைபெறும் இடங்களான மாநகராட்சி அலுவலகம், தி.மு.க. மாவட்ட அலுவல கம் பகுதிகளிலும் பாது காப்பு படையினர் ஆய்வு செய்தனர். இந்த ஆய்வின் போது, அமைச்சர் மனோ தங்கராஜ், மேயர் மகேஷ், முன்னாள் எம்.எல்.ஏ.வும் தி.மு.க. துணை அமைப்பு செயலாளருமான ஆஸ்டின் மற்றும் பலர் உடனிருந்தனர்.

    • அக்னிபாத் திட்டம் கடந்த ஆண்டு ஜூன் 14ம் தேதி அன்று மத்திய அரசால் தொடங்கப்பட்டது.
    • ரவி கிஷன் தனது மகள் குறித்த செய்திகளை ட்விட்டரில் பதிவிட்டு வருபவர்களுக்கு நன்றி தெரிவித்து வருகிறார்.

    பாஜக எம்.பி ரவி கிஷானின் மகள் இஷிதா சுக்லா (21). இவர் மத்திய அரசின் அக்னிபாத் திட்டத்தின் கீழ் பாதுகாப்பு படையில் சேர்ந்துள்ளார். பிரபலத்தின் மகளாக இருந்தாலும் வித்தியாசமான வாழ்க்கைப் பாதையைத் தேர்ந்தெடுத்ததற்காக எம்.பி ரவி கிஷானுக்கும், அவரது மகள் இஷிதா சுக்லாவிற்கும் சமூக வலைத்தளத்தில் பாராட்டுகள் குவிந்து வருகிறது.

    அக்னிபாத் திட்டம் கடந்த ஆண்டு ஜூன் 14ம் தேதி அன்று மத்திய அரசால் தொடங்கப்பட்டது. அறிமுகம் செய்யப்பட்ட ஆரம்ப காலத்தில் எதிர்ப்புகள் கிளம்பியது. இதற்கிடையே, ஜூன் 16ம் தேதி அன்று, அக்னிபாத் திட்டத்தின் மூலம் ஆட்சேர்ப்பு செய்வதற்கான வயது வரம்பை 21 ஆண்டுகளில் இருந்து 23 ஆண்டுகளாக மத்திய அரசு நீட்டித்தது.

    இந்த திட்டத்திற்கு எதிர்ப்புகள் இருந்தாலும், ஏராளமான இளைஞர்கள் அக்னிபாத் திட்டத்தின் கீழ் இணைந்து வருகின்றனர். இந்நிலையில், பாஜக எம்.பி ரவி கிஷானின் மகள் இஷிதா சுக்லாவும் அக்னிபாத் திட்டத்தின் கீழ் பாதுகாப்பு படையில் சேர்ந்துள்ளார்.

    ரவி கிஷான் தனது மகள் குறித்த செய்திகளை ட்விட்டரில் பதிவிட்டு வருபவர்களுக்கு நன்றி தெரிவித்து வருகிறார்.

    இந்த மாத தொடக்கத்தில், ஜம்மு மற்றும் காஷ்மீர் லைட் காலாட்படையின் (JAKLI) முதல் பிரிவு அக்னிவீரர்களுக்கு ஸ்ரீநகரில் நடந்த விழாவில் சான்றளிக்கப்பட்டது.

    • காயமடைந்தவர்கள் அல்லது கொல்லப்பட்டவர்களை நக்சலைட்டுகள் காட்டுக்குள் இழுத்துச் சென்றனர்.
    • அப்பகுதியில் தேடுதல் வேட்டை நடந்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள சுக்மா மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருக்கும் நக்சலைட்டுகளுக்கும் இடையே இன்று கடுமையான துப்பாக்கிச்சூடு சண்டை நடந்தது. இதில், 4 முதல் 6 நக்சலைட்கள் மீது துப்பாக்கி குண்டு பாய்ந்துள்ளது. ஆனால், இதில் இவர்கள் உயிருடன் இருக்கிறார்களா அல்லது படுகாயங்களுடன் உயிர் தப்பியுள்ளனரா என்று தெரியாமல் அதிகாரிகள் குழம்பியுள்ளனர்.

    காரணம், துப்பாக்கிச்சூடுக்கு பிறகு அந்த இடத்தில் நக்சலைட்களின் உடல்கள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    காயமடைந்தவர்கள் அல்லது கொல்லப்பட்டவர்களை நக்சலைட்டுகள் காட்டுக்குள் இழுத்துச் சென்றதாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

    சிந்தாகுஃபா மற்றும் கிஸ்டாரம் காவல் நிலைய எல்லையில் உள்ள மாவோயிஸ்டுகளின் கோட்டையான சோடேகெட்வால் கிராமத்தின் வனப்பகுதியில் நடந்த இந்த என்கவுண்டரில் மாநில காவல்துறையின் மாவட்ட ரிசர்வ் காவலர் (டிஆர்ஜி) மற்றும் மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் எலைட் கமாண்டோ பட்டாலியன் ஃபார் ரெசல்யூட் ஆக்ஷன் (கோப்ரா) ஆகியவற்றைச் சேர்ந்த பணியாளர்கள் ஈடுபட்டனர்.

    இந்நிலையில், அப்பகுதியில் தேடுதல் வேட்டை நடந்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மெட்ரோ ரெயில் மற்றும் நிலையங்களில் காலை மற்றும் மாலை அலுவலக நேரங்களில் கூட்டம் அதிகமாக உள்ளது.
    • தேவையற்ற அரட்டை, பேச்சுகள் இடம் பெறுவதால் அதனை பெண் பயணிகள் வெறுக்கின்றனர்.

    சென்னை:

    சென்னையில் மெட்ரோ ரெயில் 2 வழித்தடங்களில் தற்போது இயக்கப்படுகிறது. தினமும் சராசரியாக 3 லட்சம் பேர் பயணம் செய்கிறார்கள். நாளுக்கு நாள் மெட்ரோ ரெயிலில் பயணம் செய்வோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

    மெட்ரோ ரெயில் மற்றும் நிலையங்களில் காலை மற்றும் மாலை அலுவலக நேரங்களில் கூட்டம் அதிகமாக உள்ளது, டிக்கெட் பெறக்கூடிய கவுண்டர், உள்ளே நுழையக் கூடிய பகுதியில் நீண்ட வரிசையும் காணப்படுகிறது.

    ஒவ்வொரு மெட்ரோ ரெயிலிலும் 4 பெட்டிகள் உள்ளன. அதில் 3 பெட்டிகள் பொதுவானவை. ஒரு பெட்டி மட்டும் பெண்கள் பயணம் செய்ய ஒதுக்கப்பட்டுள்ளது. ஒரு சிலர் பெண்கள் பெட்டியில் பயணம் செய்து இடையூறு செய்வதாக புகார்கள் வருகின்றன.

    மெட்ரோ ரெயில் நிர்வாகம் பயணத்தின் போது மகளிர் பெட்டியில் ஆண்கள் பயணிக்கக்கூடாது என அறிவிப்பையும் வெளியிடுகிறது.

    ஆனாலும் சிலர் தெரியாமலும் ஒரு சிலர் தெரிந்தே அதில் பயணம் செய்வதால் பெண் பயணிகளுக்கு இடையூறு ஏற்படுகிறது.

    கல்லூரி மாணவர்கள், ஐ.டி. நிறுவன ஊழியர்கள், ஆண்-பெண் ஒன்றாக மகளிர் பெட்டி யில் பயணம் செய்கின்றனர். இதனால் தேவையற்ற அரட்டை, பேச்சுகள் இடம் பெறுவதால் அதனை பெண் பயணிகள் வெறுக்கின்றனர்.

    மேலும் ரெயில் நிலையங்களிலும் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் தனியாக நின்று பேசுவது, உட்கார்ந்து இருப்பது போன்றவை தற்போது அதிகரித்து வருகிறது.

    இந்த நிலையில் பெண் பயணிகளின் பாதுகாப்பை மேம்படுத்துவதற்காக இளஞ்சிவப்பு படை (பிங்க் ஸ்குவாட்) தொடங்கப்பட்டு உள்ளது.

    பெண் பயணிகளின் குறைகளை நிவர்த்தி செய்யும் வகையில் இத்திட்டம் இன்று தொடங்கி வைக்கப்பட்டது. இளஞ்சிவப்பு படையில் கராத்தே தற்காப்பு பயிற்சி பெற்ற பெண்கள் இடம் பெற்றுள்ளனர். 25 பெண்கள் தேர்வு செய்யப்பட்டு மெட்ரோ ரெயில் மற்றும் நிலையங்களில் ஈடுபடுத்தப்படுகின்றனர். இவர்கள் தற்காப்பு கலைகளில் பிரவுன் பெல்ட் பெற்றவர்கள். பெண் பயணிகளின் பாதுகாப்பை எவ்வாறு மேம்படுத்துவது என்பது குறித்து அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு உள்ளது.

    அவர்கள் ஒவ்வொரு ரெயில் மற்றும் நிலையத்திலும் 24 மணி நேரமும் பணியில் ஈடுபடுவார்கள் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

    கடந்த ஆண்டு மேற்கொள்ளப்பட்ட பெண் பயணிகளின் பாதுகாப்பு குறித்த ஆய்வின் அடிப்படையில் இளஞ்சிவப்பு படை உருவாக்கப்பட்டுள்ளது. 12 ஆயிரம் பெண் பயணிகளிடம் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. பெரும்பாலான பெண்கள் மெட்ரோ ரெயில் பயணம் பாதுகாப்பாக இருப்பதாக தெரிவித்து இருந்தனர்.

    ஆனாலும் சில இடையூறுகள் இருப்பதாக ஆய்வில் உறுதியானது. இந்த இளஞ் சிவப்பு படையிடம், பெண் பயணிகள் பாதுகாப்பு குறித்த புகார்களை தெரிவிக்கலாம். அவற்றை அவர்கள் உடனே சரி செய்ய நடவடிக்கை எடுப்பார்கள் என்று அதிகாரி தெரிவித்தார்.

    நந்தனத்தில் இன்று நடந்த நிகழ்ச்சியில் இளஞ்சிவப்பு பாதுகாப்பு படையை மெட்ரோ ரெயில் நிர்வாக இயக்குனர் சித்திக் தொடங்கி வைத்தார்.

    • உயிரிழந்த மாவோயிஸ்டுகளின் உடல்கள் கைப்பற்றப்பட்டு அவர்களிடம் இருந்த ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
    • சமீப காலமாக சத்தீஸ்கரில் நடந்து வரும் ஆன்டி மாவோயிஸ்ட் ஆபரேஷனில் இதுவரை ஏராளமான மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.

    சத்தீஸ்கர் மாநிலத்தில் பாதுகாப்பு படையினரால் 7 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொள்ளப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாராயன்பூர்- தண்டேவாடா- கொண்டாகவுன் ஆகிய பகுதிகள் சந்திக்கும் எல்லையில் மாவோயிஸ்ட்டுகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் நேற்று ஜூன் 7 ஆம் தேதி இரவு நடந்த மோதலில் இந்த என்கவுண்டர் நிகழ்ந்துள்ளது.

    இந்த மோதலில் பாதுகாப்புப் படையினர் மூவர் காயமடைந்துள்ள நிலையில் அவர்கள் கிழக்கு பஸ்தர் பகுதியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். உயிரிழந்த மாவோயிஸ்டுகளின் உடல்கள் கைப்பற்றப்பட்டு அவர்களிடம் இருந்த ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

     

    நெடுங்காலமாக சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகளின் ஆதிக்கம் நிலவி வருவது மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு தலைவலியாக இருந்து வருகிறது. அடர் கானகத்துக்குள் இவர்கள் இருப்பு கொண்டுள்ளதால் அவர்களை தேடுவதில் நடைமுறை சிக்கல்கள் உள்ளது.

    இதற்கிடையில் அவ்வப்போது மாவோயிஸ்டுகளுக்கும் பாதுகாப்பு படைக்கும் இடையில் நடக்கும் மோதலில் உயிரிழப்புகள் ஏற்படுவது தவிர்க்கமுடியாததாக உள்ளது. சமீப காலமாக சத்தீஸ்கரில் நடந்து வரும் ஆன்டி மாவோயிஸ்ட்  ஆபரேஷனில் இதுவரை ஏராளமான மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.  

    • 3 பெண்களின் உடல்களும், மேலும் 1 பெண் மற்றும் 2 குழந்தைகளின் உடல்களும் கொண்டுவரப்பட்டது
    • பாதுகாப்பு படைக்கு அனைத்து அதிகாரமும் வழங்கும் AFSPA சட்டம் அமல் படுத்தப்பட்டுள்ளது.

    இனக்கலவரத்தால் துண்டாடப்பட்டு வரும் மணிப்பூரில் ஒரு வருடம் ஆகியும் இயல்பு நிலை திரும்பவில்லை. குக்கி மற்றும் மெய்தேய் இனத்தைச் சேர்ந்த ஆயுதமேந்திய கிளர்ச்சியாளர்கள் அங்குள்ள கிராமங்களை எரித்தும் மக்களை கொலை செய்தும் கடத்திச் செல்வதுமாக வன்முறை வெறியாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.

    கடந்த வாரம் முதல் தலைநகர் இம்பாலில் இருந்து 120 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஜிர்பாம் மாவட்டத்தில் வன்முறை சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. ஜிர்பாமில் மார் பழங்குடி சமூகத்தினர் அதிகம் வசிக்கும் அரமாய் தெங்கோல் பகுதியில் உள்ள கிராமத்தில் கடந்த நவம்பர் 7 ஆம் தேதி புகுந்த கிளர்ச்சியர்கள் வீடுகளுக்கு தீ வைத்தனர்.

    மேலும் மூன்று குழந்தைகளுக்கு தாயான 31 வயது ஆசிரியை ஒருவரை சித்ரவதை செய்து உயிருடன் எரித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. தொடர்ந்து கடந்த திங்களன்று ஜிர்பாம் பகுதியில் மெய்த்தேய் இனத்தைச் சேர்ந்த 3 குழந்தைகள் உட்பட 6 பேர் காணாமல் போயினர். உயிருடன் எரிக்கப்பட்ட இரண்டு மெய்த்தேய் முதியவர்களின் சடலமும் அன்றைய தினம் கண்டெடுக்கப்பட்டது.

    இந்நிலையில் அவர்கள் கடத்தப்பட்டு 5 நாட்கள் கழித்து, காணாமல் போனவர்கள் என சந்தேகிக்கப்படும் 3 பேரின் உடல்கள் மணிப்பூர்-அசாம் எல்லையின் ஜிரி நதி மற்றும் பராக் நதி சங்கமிக்கும் இடத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் இன்று தெரிவித்துள்ளனர். அவர்களின் உடல்கள் பிரேதப் பரிசோதனைக்காக நேற்று இரவு அசாம் சில்கார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

     

    இதற்கிடையே சில்கார் மருத்துவமனைக்கு 3 பெண்களின் உடல்களும், மேலும் 1 பெண் மற்றும் 2 குழந்தைகளின் உடல்களும் கொண்டுவரப்பட்டுள்ளதாக என்டிடிவி களத் தகவல் தெரிவிக்கிறது. அழுகிய நிலையில் உள்ள உடல்களை அடையாளம் காணும் பணி நடந்து வருவதாக கூறப்படுகிறது.

    கடத்தப்பட்ட 6 பேரில் லாய்ஷராம் ஹெரோஜித் என்ற மாநில அரசு கீழ்நிலை ஊழியரின் மனைவி, 2 குழந்தைகள், மாமியார் மற்றும் மனைவியின் சகோதரி ஆகியோர் அடங்குவர். எனவே உடல்களை அடையாளம் காண அவர் விரைத்துள்ளார் என்று தகவல் தெரிவிக்கிறது. இவர்கள் அனைவரும் மெய்த்தேய் இனத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

    அதிகரித்து வரும் வன்முறை சம்பவங்களை கட்டுப்படுத்த மத்திய அரசு கூடுதலாக 2000 மத்திய ஆயுதக்காவல் படை வீரர்களை மணிப்பூருக்கு அனுப்பி வைத்துள்ளது.

    மேலும் மணிப்பூரில் உள்ள அனைத்து பாதுகாப்பு படையினரும் நிலைமையை கட்டுப்படுத்த முடுக்கி விடப்பட்டுள்ளனர் என்றும் அமைதியை மீட்டெடுக்க தேவையான நடவடிக்கை எடுக்குமாறு அவர்ளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் மத்திய அரசு இன்று அறிக்கை வெளியிட்டுள்ளது.

    மணிப்பூரில் 6 மாவட்டங்களில் எந்த தடையும் இன்றி பாதுகாப்பு படை சோதனை நடத்தி நடவடிக்கை எடுக்க அதிகாரம் வழங்கும் AFSPA சட்டம் அமல் படுத்தப்பட்டுள்ளது

    • சிஆர்பிஎஃப் நடத்திய என்கவுன்டரில் 10 பேர் கொல்லப்பட்டனர்
    • அமைச்சர்கள் வீடுகள் முற்றுகை இட்டது தொடர்பாக 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    இனக்கலவரத்தால் பாதிக்கப்பட்ட மணிப்பூருக்கு மத்திய அரசு மேலும் 10,000 வீரர்களை அனுப்பும் உள்ளதாக தலைமை பாதுகாப்பு ஆலோசகர் தெரிவித்துள்ளார். மாநில தலைநகர் இம்பாலில் செய்தியாளர்களிடம் பேசிய பாதுகாப்பு ஆலோசகர் குல்தீப் சிங்,

    மணிப்பூரில் ஏற்கனவே உள்ள படைகளுடன் 10,800 வீரர்களைக் கொண்ட மேலும் 90 கம்பெனி மத்தியப் படைகள் சேர்க்கப்பட உள்ளது என்றும் அந்த வகையில் மணிப்பூரில் உள்ள கம்பெனி படைகளின் எண்ணிக்கை மொத்தம் 288 ஆக உயரும் என்று தெரிவித்தார்.

    இந்த 90 படைகளில் ஏற்கனவே கணிசமாக பகுதியினர் இம்பால் வந்தடைந்துள்ளனர். மக்களின் உயிரையும் உடைமைகளைப் பாதுகாக்க, அதிக பதற்றம் உள்ள பகுதிகளை கண்டறிந்து அங்கு கண்காணிப்பு பணிகளில் ஈடுபட படைகளை அனுப்புகிறோம் என்று குல்தீப் சிங் கூறியுள்ளார். அனைத்து பகுதிகளையும் ஒரு சில நாளில் முற்றிலுமாக கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டு வருவோம் என்று அவர் தெரிவித்துள்ளார்.

    காவல்துறை, மத்திய ரிசர்வ் போலீஸ் படை (CRPF), எல்லைப் பாதுகாப்புப் படை (BSF), ராணுவம், அசாம் ரைபிள்ஸ், இந்தோ-திபெத்திய எல்லைக் காவல் (ITBP) மற்றும் சஷாஸ்த்ரா சீமா பால் ஆகியவை இணைந்து செயல்படுகின்றன என்று அவர் கூறினார்.

     

    நவம்பர் 7 அன்று ஜிரிபாமின் ஜைரான் கிராமத்தில் ஹ்மார் பழங்குடியினத்தைச் சேர்ந்த ஒரு ஆசிரியை மெய்தேய் போராளிகளால் கொல்லப்பட்டதாகக் கூறப்பட்டதைத் தொடர்ந்து பதற்றம் அதிகரித்தது. இதற்கு பதிலடியாக 20க்கும் மேற்பட்ட குக்கி போராளிகள் நவம்பர் 11 அன்று ஜிரிபாமின் போரோபெக்ராவைத் தாக்கினர்.

    சிஆர்பிஎஃப் நடத்திய என்கவுன்டரில் 10 பேர் கொல்லப்பட்ட நிலையில், மீதி இருந்தவர்கள் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேரை பிணைக் கைதிகளாக பிடித்துக்கொண்டு தப்பினர். அதற்கு முன்னதாக அந்த கிராமத்தில் 2 மெய்தேய் முதியவர்கள் எரித்துக் கொல்லப்பட்டனர்.

    இதற்கிடையே ஒரு கைக்குழந்தை உட்பட ஆறு பிணைக் கைதிகளின் உடல்கள் ஆற்றில் கண்டெடுக்கப்பட்டன. இதனால் மக்கள் வீதியில் இறங்கி அரசியல்வாதிகள் வீட்டை சூறையாடுவது, முதல்வர் வீட்டை முற்றுகை இடுவது என கலவரங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

    பாஜக எம்எல்ஏக்கள், அமைச்சர்கள் வீடுகள் முற்றுகை இட்டது தொடர்பாக 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த மே 2023 முதல் மணிப்பூர் வன்முறையில் 258 பேர் இறந்துள்ளனர். போலீசிடம் இருந்து திருடப்பட்ட 3000 ஆயுதங்கள் இதுவரை மீட்கப்பட்டுள்ளன. 

    • இம்ரான்கான் ஆதரவாளர்கள் போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டது.
    • இந்த வன்முறையில் 6 பாதுகாப்பு வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.

    இஸ்லாமாபாத்,

    பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் (72), மீது ஊழல், அதிகார துஷ்பிரயோகம் உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதில் தோஷகானா ஊழல் வழக்கில் இம்ரான்கானுக்கு கோர்ட் ஜாமீன் வழங்கியது. மற்ற வழக்குகளில் சிறை தண்டனை பெற்று வருவதால் தொடர்ந்து சிறையில் உள்ளார். ஆனால், இம்ரான்கானை விடுதலை செய்ய அவரது ஆதரவாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

    இதற்கிடையே, தலைநகர் இஸ்லாமாபாத் நோக்கி பேரணி நடத்த இம்ரான்கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சியினர் அழைப்பு விடுத்தனர்.

    முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தலைநகர் செல்லும் அனைத்து சாலைகளும் மூடப்பட்டன. பாதுகாப்பு கருதி ராணுவ வீரர்கள், போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்புகள் பலப்படுத்தப்பட்டன. பஞ்சாப் மாகாணத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

    இதனைப் பொருட்படுத்தாத இம்ரான்கானின் ஆதரவாளர்கள் ஆயிரக்கணக்கானோர் இஸ்லாமாபாத்தை நோக்கி பேரணியாக சென்றனர். பஞ்சாப் மாகாணத்தில் நுழைந்தபோது போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது.

    அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் தடியடி மற்றும் கண்ணீர் புகைக்குண்டு வீசி போராட்டக்காரர்களை கலைத்தனர். போராட்டத்தில் பங்கேற்ற சுமார் 4,000 பேரை போலீசார் கைதுசெய்ததால் பெரும் பதற்றம் ஏற்பட்டது.

    இம்ரான்கான் ஆதரவாளர்களின் போராட்டத்தில் வெடித்த வன்முறையில் 4 துணை ராணுவ வீரர்கள் மற்றும் 2 போலீசார் உயிரிழந்தனர். 100-க்கும் மேற்பட்ட பாதுகாப்பு வீரர்கள் காயமடைந்தனர்.

    இந்நிலையில், பாகிஸ்தானில் வன்முறையில் ஈடுபடும் போராட்டக்காரர்களைக் கண்டதும் சுட அந்நாட்டு ராணுவத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது என அரசு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

    • பாதுகாப்பு படையினர் பயங்கரவாதிகளை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தி பதிலடி கொடுத்தனர்.
    • துப்பாக்கி சூடு சம்பவத்தில் 2 ராணுவ வீரர்கள் படுகாயமடைந்துள்ளனர்.

    ஜம்மு காஷ்மீர் மாநிலம் குல்காம் மாவட்டத்தில் பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் பாதுகாப்பு படையினர் கொடுத்த பதிலடியில் 5 பயங்கரவாதிகள் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    குல்காம் மாவட்டத்தின் பெஹிபாக் பகுதியில் உள்ள காடரில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக கிடைத்த ரகசிய தகவலைத் தொடர்ந்து, பாதுகாப்புப் படையினர் தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டனர்.

    அப்போது, பயங்கரவாதிகள் பாதுகாப்புப் படையினர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். அங்கு, தேடுதல் நடவடிக்கை என்கவுண்டராக மாறியது. இதனால், பாதுகாப்பு படையினர் பயங்கரவாதிகளை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தி பதிலடி கொடுத்தனர்.

    இந்த சம்பவத்தில் 5 பயங்கரவாதிகள் உயிரிழந்துள்ளதாகவும், 2 ராணுவ வீரர்கள் படுகாயமடைந்துள்ளதாகவும் முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

    ×