search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 217364"

    • 151 குடும்பங்களுக்கு நிவாரண உதவி வழங்கினார்.
    • பேரிடர் காலங்களில் பாதிக்கப்படும் குடும்பங்களுக்கும் நிவாரண உதவி.

    திருத்துறைப்பூண்டி:

    திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டியில் வடகிழக்கு பருவமழையால் பாதிக்கப்பட்ட கூரை வீடுகளில் வசிக்கும் ஏழை விவசாய தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்கும் நிகழ்ச்சி நகர்மன்ற தலைவர் கவிதா பாண்டியன் தலைமையில் நடைபெற்றது.

    நிகழ்ச்சியில் பாலம் சேவை நிறுவன செயலாளர் செந்தில்குமார் அனைவரையும் வரவேற்றார். மாரிமுத்து எம்.எல்.ஏ. சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு 151 குடும்பங்களுக்கு நிவாரண உதவி வழங்கினார்.

    முத்தூட் குழும சமூக பொறுப்பு திட்ட மேலாளர் ஜெயக்குமார் நலத்திட்டம் குறித்து பேசும்போது:-

    முத்தூட் குழுமம் சமூக பொறுப்பு திட்டத்தின் மூலம் ஏழை குடும்பங்களுக்கு மருத்துவ உதவி, டயாலிசிஸ், கல்வி உதவி, விதவைகளின் பெண்கள் திருமண உதவி, மாற்றுத்திறனாளிகள் வாழ்வாதார உதவி மற்றும் பேரிடர் காலங்களில் பாதிக்கப்படும் குடும்பங்களுக்கும் நிவாரண உதவி வழங்கப்படுகிறது.

    டெல்டா மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழையால் பாதிக்கப்பட்ட திருப்பாலி, சோலைக்குளம், நெய் குன்னம், நல்ல நாயகிபுரம் கிராமங்களில் கூரை வீடுகளில் வசிக்கும் ஏழை விவசாய தொழிலாளர்களுக்கு ரூ.2.13 லட்சம் மதிப்பில் தார்பாய் வழங்கப்பட்டுள்ளது என்றார்.

    இதில், நகர்மன்ற துணைத்தலைவர் ஜெயப்பிரகாஷ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நகர செயலாளர் சுந்தர், மாவட்ட பேரிடர் ஆலோசனைக்குழு உறுப்பினர் செல்வகணபதி, முத்தூட் தஞ்சாவூர் கிளை மேலாளர் வினோத் ரமேஷ், கிளை மேலாளர் அகல்யா, கவுன்சிலர் வசந்த் மற்றும் 100-க்கும் மேற்பட்ட விவசாய தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.

    முடிவில் பாலம் திட்ட அலுவலர் பரந்தாமன் நன்றி கூறினார்.

    • ஆதாருடன் மின் இணைப்பு எண்ணை இணைக்க மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்
    • தவறான முறையில் மின்விநியோகம் இருக்கக் கூடாது

    அரியலூர்:

    அரியலூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் பொது சுகாதாரத்துறை நூற்றாண்டு விழா நடைபெற்றது, பொது சுகாதாரத்துறை துணை இயக்குனர் கீதாராணி வரவேற்று பேசினார், திருமாவளவன்எ எம்.பி கலந்து கொண்டு பேசினார். நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ.க்கள் சின்னப்பா, கண்ணன், நகராட்சி தலைவர் சாந்தி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    பின்னர் திருமாவளவன் எம்.பி. நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: எதிர்க்கட்சியாக நாங்கள் தான் செயல்படுகிறோம் என்பதை காட்டிக்கொள்ளவே எடப்பாடி பழனிச்சாமி ஆளுநரை சந்தித்துள்ளார். எதிர்க்கட்சியாக உள்ள அ.தி.மு.க.வை பின்னுக்கு தள்ளி, நாங்கள் தான் எதிர்க்கட்சியாக செயல்படுகிறோம் என்ற முயற்சியில் பா.ஜ.க. ஈடுபட்டு வருகிறது. அ.தி.மு.க. தலைமைக்கு எதிராக அ.தி.மு.க.விலேயே விமர்சனங்கள் எழுகின்ற நிலையில், இந்த சந்திப்பை எடப்பாடி பழனிச்சாமி நடத்தி இருப்பதாக நினைக்கிறேன்.

    தவறான முறையில் மின்விநியோகம் இருக்கக் கூடாது. அனைவருக்கும் மின்விநியோகம் வழங்க வேண்டும் என்ற முயற்சியின் காரணமாகவே ஆதார் எண்ணை மின் இணைப்பு எண்ணுடன் இணைக்க வேண்டும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்கு மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். ஜல்லிக்கட்டுக்கு எதிராக விலங்குகள் நல ஆணையம் உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு எதிர்பார்த்த ஒன்றுதான். ஜல்லிக்கட்டை மீட்டெடுக்கும் வகையில் மக்கள் போராட்டம் தொடரும். தமிழக அரசின் சட்ட போராட்டத்தின் மூலம், நமது பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டை காப்பாற்ற எல்லா முயற்சிகளும் மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • 68 மனுக்கள் வரப்பெற்றதில் 26 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது.
    • உதவித்தொகையான மாதம் ரூ. 1000க்கான உத்தரவு நகலை வழங்கினார்.

    பல்லடம்  : 

    பல்லடம் அருகே உள்ள பொங்கலூர் தொங்குட்டி பாளையம் ஊராட்சியில் தமிழக அரசின் மக்கள் தொடர்பு முகம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், ஊராட்சி மன்ற தலைவர் பிரியா நடராஜன் வரவேற்றார். பொங்கலூர் ஒன்றிய குழுத் தலைவர் வக்கீல் எஸ். குமார், துணைத் தலைவர் அபிராமி அசோகன், ஒன்றிய கவுன்சிலர் ஜோதிபாசு ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மாவட்ட சப்- கலெக்டர் ஸ்ருதன் ஜெய் நாராயணன் தலைமை தாங்கி நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

    இந்த நிகழ்ச்சியில் மொத்தம்68 மனுக்கள் வரப்பெற்றதில் 26 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது. மீதம் 42 மனுக்கள் பரிசீலனையில் உள்ளது. நிகழ்ச்சியின் போது விபத்தில் காயம் அடைந்த தொங்குட்டி பாளையத்தைச் சேர்ந்த சாமிநாதன் (வயது 61) என்பவர் ஆட்டோவில் இருந்து இறங்கி வர முடியாமல் அங்கேயே அமர்ந்திருந்தார். இதனை அறிந்த சப் கலெக்டர் ஸ்ருதன் ஜெய் நாராயணன் நேரடியாக ஆட்டோவின் அருகில் சென்று அவருக்கு விபத்து உதவித்தொகையான மாதம் ரூ. 1000க்கான உத்தரவு நகலை வழங்கினார். தொடர்ந்து அவர் முகாமில் கலந்து கொண்டு பேசும்போது, கல்வியின் அவசியம் குறித்து பெற்றோர்கள் குழந்தைகளுக்கு தெரிவிப்பதுடன் அவர்களை தினசரி கண்காணித்து ஊக்கப்படுத்த வேண்டும். குப்பை இல்லாத ஊராட்சியாக மாற்றுவதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று தெரிவித்தார். இந்த மக்கள் தொடர்பு முகாமில் ஒன்றிய கவுன்சிலர் பாலுசாமி, ஊராட்சி துணைத் தலைவர் பத்மா ஆனந்தன், பொங்கலூர் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர். சுந்தரவேல், தனி தாசில்தார் (ஊட்டச்சத்து) கோவிந்தராஜ், (சமூக பாதுகாப்பு திட்டம்) பாபு, வருவாய் ஆய்வாளர் மா.கருணாநிதி, கிராம நிர்வாக அலுவலர் ரமேஷ், ஊராட்சி செயலர் ஆனந்த் மற்றும் கால்நடை, தோட்டக்கலைத்துறை, வேளாண்மை துறை, சுகாதாரத்துறை உட்பட பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    • மகா ப்ரத்யங்கிரா ஹோமம் 21-ந் தேதி முதல் 23-ந் தேதி வரை 3 நாட்கள் நடக்கிறது.
    • 12 ராசி 27 நட்சத்திர ஹோமம் நடக்கிறது.

    தாராபுரம் :

    ஆல் இந்தியா தமிழ் அன்னை அறக்கட்டளை சார்பில் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் வட்டம் நஞ்சியம்பாளையம் கிராமத்தில் உலக மக்கள் நலன் வேண்டியும் அனைத்து ஜீவராசிகளின் நலம் வேண்டியும் மகா அதர்வண பத்ரகாளி, மகா ப்ரத்யங்கிரா ஹோமம் நாளை 21-ந்தேதி முதல் 23-ந்தேதி வரை 3 நாட்கள் நடக்கிறது.

    இதையொட்டி நாளை 21-ந்தேதி (திங்கட்கிழமை) காலை 6மணிக்கு மங்கள இசை, மகா கணபதி பூஜை, அனுக்ஞை, மகா சங்கல்பம், புண்யாகவாசனம், வாஞ்சாகல்ப மகா கணபதி ஹோமம், பூர்ணாஹூதி, தீபாராதனை , கோ பூஜை நடக்கிறது. காலை 10-30மணிக்கு மகா ப்ரத்யங்கிரா ஹோமம், சூலினி துர்கா ஹோமம், 12 ராசி 27 நட்சத்திர ஹோமம் நடக்கிறது.

    மாலை 5மணிக்கு சதுஷ்டி யோகினி பலி பூஜை, பைரவ பலி, சரபேஷ்வர ஹோமம், 27 நட்சத்திர ஹோமம், 12 ராசி ேஹாமம், மகா சனீஸ்வர ஹோமம், மகா ப்ரத்யங்கிரா ஹோமம், ஆயுள் தேவதா ஹோமம், சித்ரகுப்த ஹோமம், சூலினி துர்காஹோமம், இரவு 9மணிக்கு மகா பூர்ணாஹூதி , தீபாராதனை நடக்கிறது.

    22-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 7மணிக்கு கணபதி பூஜை, மகா சங்கல்பம், புண்யாகவாசனம், கோபூஜை , காலை 10மணிக்கு காரிய சித்தி கணபதி ஹோமம், மகா ப்ரத்யங்கிரா ஹோமம், சூலினி துர்கா ஹோமம், மகா சனீஸ்வர ேஹாமம், ஆயுள் தேவதா ஹோமம், யமதர்மராஜா ஹோமம், சித்ர குப்த ஹோமம், 12ராசி 27 நட்சத்திர ஹோமம், மகா பூர்ணாஹூதி, தீபாராதனை நடக்கிறது.

    மாலை 5மணிக்கு ஸ்ரீகணபதி பூஜை, புண்யாஹவாசனம், வேதிகா அர்ச்சனை, கணபதி ஹோமம், மகா ப்ரத்யங்கிரா ஹோமம், சூலினி துர்கா ஹோமம், மகா சனீஸ்வர ஹோமம், ஆயுள் தேவதா ஹோமம், எமதர்மராஜா ஹோமம், சித்ரகுப்த ஹோமம், சரபேஸ்வர ஹோமம், 12 ராசி, 27 நட்சத்திரங்கள் ஹோமம் நடக்கிறது. இரவு 9மணிக்கு பூர்ணாஹூதி, தீபாராதனை நடக்கிறது.

    23-ந்தேதி (புதன்கிழமை) காலை 6மணிக்கு மங்கள இசை, 7மணிக்கு கணபதி பூஜை, வருண பூஜை, மகா சங்கல்பம், புண்யாகவாசனம், கோ பூஜை , வேதிகா அர்ச்சனை நடக்கிறது. 10மணிக்கு சங்கடஹர மகா கணபதி ஹோமம், நவக்ரஹ ஹோமம், 12 ராசி 27 நட்சத்திரங்கள் ஹோமம், அஷ்ட பைரவ ஹோமம், மகா ப்ரத்யங்கிரா ஹோமம், சரபேஸ்வர ஹோமம், சூலினி துர்கா ஹோமம், மகா சனீஸ்வர ஹோமம், எமதர்மராஜ ஹோமம், சித்ரகுப்த ஹோமம், சுயம்வர பார்வதி ஹோமம், சுதர்சன ஹோமம், குபேர மகாலட்சுமி ஹோமம், வஸோர்தாரா ஹோமம், இரவு 9மணிக்கு மகா பூர்ணாஹூதி, தீபாராதனை நடக்கிறது.  

    • மக்கள் பாதிக்காத வகையில் நடவடிக்கை - அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்
    • தமிழகத்தில் எவ்வளவு மழை பெய்தாலும்

    திருச்சி:

    தமிழக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என். நேரு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது;-

    சென்னை மட்டுமல்ல தமிழகம் முழுவதும் மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள அரசு அலுவலர்களுக்கு முதலமைச்சர் மு.க .ஸ்டாலின் அறிவுறுத்தி உள்ளார். எவ்வளவு மழை பெய்தாலும் மக்கள் பாதிக்காத வகையில் நடவடிக்கை எடுக்க தமிழக அரசு தயார் நிலையில் இருக்கிறது.

    சென்னையில் இரண்டு இடங்களில் மட்டுமே பெரிய அளவுக்கு பாதிப்பு ஏற்பட்டது. அதுவும் தற்போது சரி செய்யப்பட்டுள்ளது. வரும் காலங்களில் பாதிப்பு ஏற்படாத வண்ணம் கால்வாய்கள் வெட்டவும் உத்தேசிக்கப்பட்டுள்ளது. அனைத்து தற்காப்பு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது.

    திருச்சி மாவட்டத்தில் நடவுப் பணிகள் முடியும் தருவாயில் யூரியா தட்டுப்பாடு இருப்பதாக சொன்னார்கள்.

    இது தொடர்பாக துறை அமைச்சரிடம் பேசி இருக்கின்றேன். விவசாயிகளுக்கு யூரியா கிடைக்க ஏற்பாடு செய்யப்படும்.அனைத்து கூட்டுறவு சங்கங்களிலும் விவசாயிகளுக்கு கடன் தர கூட்டுறவுத்துறை அமைச்சரிடமும் பேசி இருக்கின்றேன். அதற்கான நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது.

    கடந்த அ.தி.மு.க ஆட்சியில் சம்மட்டி வைத்து அடித்து விட்டதால் காவிரி பாலத்தின் பேரிங் உட்கார்ந்து விட்டது.

    அதனை மாற்றும் பணிகள் நடந்து வருகிறது.

    இந்த மாதிரியான தொழில்நுட்ப பணிகளை வேகமாக முன்னெடுக்க இயலாது. அதனால் தான் தாமதம் ஏற்படுகிறது. இன்னும் இரண்டு மாத காலத்தில் காவிரி பாலத்தில் போக்குவரத்து தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    மாநகராட்சி அடிப்படை பணியாளர்களை அவுட்சோர்சிங் முறையில் எடுப்பதற்கு அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    தற்போது அதற்கு எதிர்ப்புகள் வந்துள்ளதால் பழைய முறைப்படி பணி நியமனம் செய்ய தமிழக முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்றிருக்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார் அவர் கூறினார்.

    • கனமழையால் அப்பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கி போனது.
    • ஆற்றில் இணைப்பு எற்படுத்தி அடைப்புகளை சரிசெய்து மழை நீரை வடிகட்டினார்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை ஒன்றியம், பட்டமங்கலம் ஊராட்சி, சீனிவாசபுரம் குடியிருப்பு பகுதிகளில் விடிய விடிய பெய்த கனமழையால் மழைநீர் சூழ்ந்து கொண்டது.

    இதனால் அப்பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கி போனது. இதையடுத்து தி.மு.க. மாவட்ட துணைச் செயலாளரும், ஊராட்சி மன்ற தலைவர் செல்வமணி பொக்லைன் கொண்டு தண்ணீரை பள்ளவன் ஆற்றில் இணைப்பு எற்படுத்தி அடைப்புகளை சரிசெய்து மழை நீரை வடிகட்டினார்.

    இதில் ஊராட்சி மன்ற துணைத் தலைவர், கிராம அலுவலர் நெப்போலியன், வார்டு உறுப்பினர்கள் உள்ளிட்டோர் மழை நீரை வடிகட்டும் பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

    • கடன் நிலுவை வசூல் என்ற பேரில் மிரட்டி அதிரடி வசூல்.
    • வீடுகளை பூட்டி மழைக்காலத்தில் மக்களுக்கு இழைக்கும் அராஜகம்.

    நீடாமங்கலம்:

    திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வட்டம் ஆலங்குடியில் உள்ள சுற்றுவட்டார பகுதிகளில் தனியார் பைனான்ஸ்
    நிறுவனங்களால் நடக்கக்கூடிய ஒரு சில நிறுவனங்கள் கடன் நிலுவை வசூல் என்ற அடிப்படையில் மிரட்டி அதிரடி வசூலில் ஈடுபடுகின்றனர்.

    இதனால் ஏழைமற்றும் தாழ்த்தப்பட்ட இனத்தை குறிவைத்து கோர்ட் உத்தரவுகளை பெற்று வீடுகளை பூட்டி மழைக்கா லத்தில் மக்களுக்கு இழைக்கும் அராஜக போக்கை கண்டித்து ஆலங்குடி ஊராட்சி மன்ற தலைவர் ஏ.எம்.மோகன் தலைமையில் ஒத்தக்கடை என்ற பகுதியில் சாகும் வரை உண்ணாவிரத அறப்போ ராட்டத்தை தொட ங்கினார்.

    இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    • ஏற்காட்டில் கடந்த 2 தினங்களாக இடைவிடாத சாரல் மழையும், கடுமையான பனிப் பொழிவும் நிலவி வருகிறது.
    • இந்த சாரல் மழை காரணமாக காப்பி பழங்கள் அழுகும் நிலை ஏற்பட்டு உள்ளது.

    ஏற்காடு:

    வடகிழக்கு பருவ மழை தமிழகம் முழுவதும் பரவலாக பெய்து வரும் நிலையில் ஏற்காட்டில் கடந்த 2 தினங்களாக இடைவிடாத சாரல் மழையும், கடுமையான பனிப் பொழிவும் நிலவி வருகிறது.

    ஏற்காட்டில் அதிகப்படி யாக காப்பி விவசாயம் செய்யப்படுகிறது. இந்த சாரல் மழை காரணமாக காப்பி பழங்கள் அழுகும் நிலை ஏற்பட்டு உள்ளது. இதனால் காப்பி விவ சாயிகள் வேத னையடைந்து உள்ளனர். மேலும் பனிப்பொழிவு அதிகமாக காணப்படுவதால் காப்பி தோட்ட பணிகளும் பாதிக்கப்பட்டு உள்ளது. முன்னால் செல்லும் வாகனங்கள் தெரியாத அளவிற்கு பனிமூட்டம் காணப்படுவதால், முகப்பு விளக்குகளை எரிய விட்ட படி வாகனங்கள் இயக்கப்படுகிறது.

    மேலும் கடுமையான குளிரும் காணப்படுகிறது. இதனால் பகல் நேரங்களில் கூட ஸ்வட்டர், ஜர்க்கின் உள்ளிட்டவை அணியாமல் வெளியில் வரமுடியாது நிலை உள்ளது. பள்ளி செல்லும் குழந்தைகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். தொடர் மழையால், இப்பகுதியில் ஏராளமானோர் சளி, காய்ச்சல் தொல்லையால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

    ஏற்காட்டில் இடைவிடாத சாரல் மழை, கடுமையான பனிப்பொழிவு காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது.

    • மணிக்கூண்டு மற்றும் தம்பிதுரை பூங்கா சிதிலமடைந்து காணப்படுகிறது.
    • பூங்கா சீரமைக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும்.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் நகரின் அடையாளமாக அமைந்துள்ள மணிக்கூண்டு மற்றும் தம்பிதுரை பூங்கா சிதிலமடைந்து காணப்படுகிறது. அதை சீரமைத்து பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டுமென்பது மக்களின் நீண்டகால கோரிக்கையாக உள்ளது.

    இது தொடர்பாக நாகை எம்.எல்.ஏ ஷாநவாஸ் அங்கு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, விரைவில் மணிக்கூண்டு மற்றும் பூங்கா சீரமைக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என்று உறுதியளித்தார்.

    ஆய்வின் போது, நாகை நகர்மன்ற தலைவர் மாரிமுத்து, நகராட்சி ஆணையர் ஸ்ரீதேவி, விடுதலை சிறுத்தை கட்சி மாவட்டப் பொறுப்பாளர் ரவிச்சந்திரன், நகரச் செயலாளர் முத்துலிங்கம் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

    • வாய்க்காலில் தேங்கும் கழிவுநீரால் மக்கள் அவதியடைந்து வருகின்றனர்.
    • போர்க்கால அடிப்படையில் சீரமைக்க வேண்டும்

    கரூர்:

    கரூரில் இருந்து கோவை மற்றும் ஈரோடு செல்லும் சாலையில் திருக்காம் மியூர் பிரதான வாய்க்கால் நகரின் பல்வேறு பகுதிகளுக்கு செல்கிறது. இதில் அதிகளவு கழிவு நீர் தேங்கி சுகாதார கேடு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. இதனை சீரமைக்க வேண்டும் என இந்த பகுதியினர் பலமுறை கோரிக்கை விடுத்தும் அதிகாரிகள் இது வரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. கழிவு நீர் தேக்கத்தால் இப்பகுதி குடியிருப்புவாசிகள் பல்வேறு தொல்லைகளை அனுபவித்து வருகின்றனர். எனவே, போர்க்கால அடிப்படையில் வாய்க்காலை சீரமைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அனைத்து தரப்பினரும் எதிர்பார்க்கின்றனர்.

    • கலெக்டர் அரவிந்த் பேச்சு
    • மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு த்துறையின் சார்பாக அமைக்கப்பட்டிருந்தது

    நாகர்கோவில்:

    குழித்துறை நகராட்சிக்கு ட்பட்ட பம்மம் பகுதியில் தமிழக அரசின் சாதனைகள் மற்றும் சிறப்பு திட்டங்கள் குறித்து பொதுமக்கள் அறிந்து கொண்டு பயன்பெறும் வகையில், மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு த்துறையின் சார்பில் புகைப்படக்கண்காட்சி இன்று நடைபெற்றது.

    இது குறித்து மாவட்ட கலெக்டர் அரவிந்த் தெரிவித்ததாவது:-

    தமிழக அரசு ஏழை எளிய கிராமப்புற மக்களுக்காக பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

    முதல்-அமைச்சர் தொடங்கி வைத்த திட்டங்களான, முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தில் சிகிச்சை அளிக்கும் திட்டம், மக்களை தேடி மருத்துவம், கூட்டுறவு வங்கிகளில் 5 பவுன் நகைக்கடன் தள்ளுபடி திட்டம், நரிக்குரவர்கள் மற்றும் இருளர் இனத்தை சேர்ந்தவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கியது, கன்னியாகுமரி மாவட்டத்தில் கனம ழையினால் பாதிக்கப்பட்ட இடங்கள் போர்க்கால அடிப்படையில் சீரமைக்க ப்பட்டதை நேரில் பார்வையிட்டது.

    இன்னுயிர் காப்போம்,– நம்மைக் காக்கும் 48 திட்டம், விவசாயிகளுக்கு புதிய மின் இணைப்புகள் வழங்கும் திட்டம், கலைஞரின் வரும்முன் காப்போம் திட்டம், நமக்கு நாமே திட்டம் மற்றும் நகர்ப்புற வேலைவாய்ப்புத்திட்டம்,

    காணி பழங்குடியினர்க ளுக்கு நிலஉரிமை ஆணை வழங்கியது, மீனவர்களின் நலன் கருதி பனிக்கட்டி நிலையங்களை திறந்து வைத்தல், மகளிர் சுய உதவிக்குழுவினர்களுக்கு கடனுதவிகள் வழங்கியது,

    முதல்-அமைச்சரின் ஊட்டம் தரும் காய்கறித் தோட்டம் திட்டம், புதிய வேளாண் காடு வளர்ப்புத் திட்டம், மின்சாரத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பணியின்போது காலமானவர்களின் வாரிசுதாரர்களுக்கு பணிநியமன ஆணை வழங்கியது, பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு இலவச மிதிவண்டிகள் வழங்கியது, காலை உணவுத்திட்டம்,

    புதுமைப்பெண் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் குறித்து மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு த்துறையின் சார்பாக அமைக்க ப்பட்டிருந்த புகைப்பட கண்காட்சியினை பொதுமக்கள் பார்வையிட்டு அரசின் திட்டங்களை தெரிந்துகொண்டு அனைத்துத் திட்டத்தின்கீழ் வழங்கப்படும் அரசு நலத்திட்ட உதவிகளை பெற்று பயன்பெற வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கரூர் ஜவகர்பஜாரில் மக்கள் குவிந்தனர்.
    • தீபாவளி பொருட்கள் வாங்குவதற்காக

    கரூர்

    தீபாவளி பண்டிகை நாளை (திங்கட்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி கரூர் கடைவீதிகளில் பொதுமக்கள் ஜவுளி, பட்டாசு உள்ளிட்ட பொருட்களை வாங்க குவிந்தனர். தீபாவளியை முன்னிட்டு கரூர் ஜவகர் பஜார், கல்யாண பசுபதீஸ்வரர் கோவில் சுற்றி உள்ள இடங்கள் உள்ளிட்ட பகுதிகளில் தற்காலிக கடைகள், தரைக்கடைகள் அமைக்கப்பட்டு விற்பனை நடைபெற்று வருகிறது. இதில் ஜவுளி கடைகள், பட்டாசு கடைகள், காலணி கடைகள், வளையல் கடைகள் உள்ளிட்ட ஏராளமான கடைகள் அமைக்கப்பட்டுள்ளது.

    இந்தக் கடைகளில் தங்களுக்கு தேவையான பொருட்களை பொதுமக்கள் குடும்பம் குடும்பமாக வருகை புரிந்து வாங்கி செல்கின்றனர். இதனால் இந்த பகுதிகளில் பொதுமக்களின் கூட்டம் அதிக அளவில் இருந்தது.பொதுமக்களின் கூட்டத்தை கட்டுப்படுத்த போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் ஜவகர் பஜார் உள்ளிட்ட பகுதிகளில் பேரிகார்டு அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்"

    ×