search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 217482"

    • கடந்த சில மாதங்களாக பெருமாளின் இடத்தையொட்டி மழைநீர் கால்வாய் அமைக்கும் பணி நடைபெற்று வந்தது.
    • மழைநீர் கால்வாய் அமைக்கும் பணியின் போது ராட்சத கிரேன் மூலம் கிணற்றுக்குள் மணல் கொட்டி மூடி மாயமாகி இருப்பது தெரிந்தது.

    திருவொற்றியூர்:

    மணலிபுதுநகர் குடிசை மாற்று வாரிய குடியிருப்பு 5-வது பிளாக்கில் வசித்து வருபவர் பெருமாள். இவருக்கு சொந்தமான இடம் மணலி 200அடி சாலையோரம் சி.பி.சி.எல். தொழிற்சாலை மதில் சுவரையொட்டி உள்ளது.

    அந்த இடத்தில் சுமார் 25 அடி ஆழத்தில் உறை கிணறு ஒன்று இருந்தது. கடந்த சில மாதங்களாக பெருமாளின் இடத்தையொட்டி மழைநீர் கால்வாய் அமைக்கும் பணி நடைபெற்று வந்தது. இந்நிலையில் இந்த பணிகள் முடிந்த நிலையில் பெருமாள் தனது இடத்தை பார்க்க வந்தார்.

    அப்போது அங்கு இருந்த கிணற்றை காணவில்லை. மழைநீர் கால்வாய் அமைக்கும் பணியின் போது ராட்சத கிரேன் மூலம் கிணற்றுக்குள் மணல் கொட்டி மூடி தரையோடு தரையாக மாயமாகி இருப்பது தெரிந்தது. இதைத்தொடர்ந்து பெருமாள், மாயமான தனது கிணற்றை கண்டு பிடித்து, பயன்படுத்தும் வகையில் சீரமைத்து தரவேண்டும் என்று மாநகராட்சி மணலி மண்டல உதவி ஆணையரிடம் கோரிக்கை மனு அளித்தார். அதில் மழைநீர் வடிகால்வாய் பணியில் ஈடுபட்ட ஒப்பந்ததாரர் மீதும் குற்றம் சாட்டியுள்ளார்.

    இதனால் அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர். தரையோடு தரையான கிணற்றை எப்படி மீட்பது என்பது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் ஆலோசித்து வருகிறார்கள்.

    • பக்கவாட்டு சுவற்றில் இருந்து கல் ஒன்று சரிந்து விழுந்ததில் மஞ்சுநாதன் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
    • ரத்தினசாமி மகன் சண்முகராஜ் மற்றும் மாரியப்பன் மகன் மனோஜ் குமார் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களை தேடி வருகின்றனர்.

    சங்கரன்கோவில்:

    தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள வென்றிலிங்காபுரம் கிராமத்தை சேர்ந்தவர் வீரபத்திரன். இவரது மகன் முருகன். இவரது விவசாய தோட்டத்தில் கிணறு உள்ளது.

    இந்த கிணற்றில் ஆழப்படுத்தும் பணியில் தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே உள்ள மாம்பட்டியை சேர்ந்த மஞ்சுநாதன், கிருஷ்ணகிரியை சேர்ந்த மாரிமுத்து மற்றும் வேலு ஆகியோர் ஈடுபட்டு வந்துள்ளனர்.

    அவர்கள் எந்த விதமான பாதுகாப்பு உபகரணங்கள், தலைக்கவசம், வலைகள் உள்ளிட்ட எந்தவித பாதுகாப்பு வசதிகளும் இல்லாமல் பணியில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது.

    இந்நிலையில் நேற்று அவர்கள் 3 பேரும் கிணற்றில் இறங்கி சரளை கற்களை அள்ளும் பணியில் ஈடுபட்டனர். அப்போது பக்கவாட்டு சுவற்றில் இருந்து கல் ஒன்று சரிந்து விழுந்ததில் மஞ்சுநாதன் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். வேலு காயங்களுடன் உயிர் தப்பினார். உடனே அங்கிருந்தவர்கள் வேலுவை தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    தகவல் அறிந்து அங்கு வந்த சின்னகோவி லான்குளம் போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து மஞ்சுநாதன் மனைவி சரண்யா(22) கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் முருகன், வீரசிகாமணியை சேர்ந்த ரத்தினசாமி மகன் சண்முகராஜ் மற்றும் மாரியப்பன் மகன் மனோஜ் குமார் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களை தேடி வருகின்றனர்.

    சங்கரன்கோவில் பகுதியில் கடந்த சில மாதங்களாக வட மாவட்டங்களில் இருந்து கிணறு வெட்டும் பணிக்காக ஒவ்வொரு குழுவினராக வந்து இங்கு தங்கி அனைத்து பகுதிகளுக்கும் சென்று கிணறு ஆழப்படுத்தும் பணி உள்ளதா என கேட்டு அதை செய்து வருகின்றனர். அவர்களாகவே சென்று வேலை கேட்கும்போது வேலை கொடுப்பவர்கள் எந்தவித பாதுகாப்பு விதிமுறைகளையும் பின்பற்றாமல் வேலை வழங்குவதாக கூறப்படுகிறது.

    எனவே சம்பந்தப்பட்ட துறையினர் இதனை முறைப்படுத்தி கிணறு ஆழப்படுத்தும் வேலைக்கான பணிகளை செய்யும்போது முறையான அனுமதி மற்றும் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் சரியாக உள்ளதா? என கவனித்து அதன் பின் அனுமதி வழங்கினால் இதுபோன்ற உயிரிழப்புகளை தடுக்க முடியும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • 60 அடி ஆழம் கிணறு இருந்ததால், மேலே வர முடியாமல் மயில் தண்ணீரில் தத்தளித்தது.
    • தீயணைப்பு நிலைய வீரா்கள் கயிறு கட்டி கிணற்றில் இறங்கி மயிலை உயிருடன் மீட்டனா்.

    காங்கயம் :

    காங்கயம் அருகே, செம்மங்காளிபாளையம் கிராமத்தில் தனியாருக்குச் சொந்தமான விவசாயக் கிணற்றில் ஆண் மயில் விழுந்துள்ளது. 60 அடி ஆழம் கிணறு இருந்ததால், மேலே வர முடியாமல் மயில் தண்ணீரில் தத்தளித்தது. தகவலின்பேரில் காங்கயம் தீயணைப்பு நிலைய வீரா்கள் சம்பவ இடத்துக்கு சென்று, கயிறு கட்டி கிணற்றில் இறங்கி மயிலை உயிருடன் மீட்டனா்.

    மீட்கப்பட்ட மயில் காங்கயம் வனத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டு, பின்னா் ஊதியூா் காப்புக்காட்டில் பாதுகாப்பாக விடப்பட்டது. 

    • 500 ஆண்டுகளுக்கு முன்பு கேரளாவை ஆண்ட மன்னரால் இந்த கிணறு வெட்டப்பட்டது.
    • தண்ணீர் எடுப்பதால் இங்குள்ள மக்கள் யாரும் மாநகராட்சிக்கு குடிநீர் கட்டணம் செலுத்துவதில்லை.

    திருவனந்தபுரம்:

    கேரளாவின் கோட்டயம் மாநகராட்சிக்கு உட்பட்ட தெக்கூர் சமஸ்தான பகுதியில் கமலநீராழி என்ற பழங்கால கிணறு உள்ளது. 500 ஆண்டுகளுக்கு முன்பு கேரளாவை ஆண்ட மன்னரால் இந்த கிணறு வெட்டப்பட்டது.

    அப்போது அந்த பகுதி மக்கள் அனைவரும் இந்த கிணற்றில் இருந்துதான் குடிநீர் எடுத்து பயன்படுத்தி வந்தனர். மன்னராட்சி மறைந்து மக்களாட்சி வந்த பின்னரும் இந்த கிணறு மக்களின் தாகம் போக்கி வருகிறது.

    அதாவது கோட்டயம் தெக்கூர் சமஸ்தான பகுதியில் இப்போது 300 குடும்பங்கள் வசித்து வருகிறார்கள். இங்குள்ள பெரும்பாலான வீடுகளுக்கு மாநகராட்சியின் குடிநீர் இணைப்பு இல்லை. ஆனால் அவர்கள் அனைவருக்கும் தினமும் தட்டுப்பாடு இல்லாமல் தண்ணீர் கிடைத்து வருகிறது.

    இந்த கிணற்றை கோட்டயம் மாநகராட்சி நிர்வகித்து வருகிறது. இந்த கிணற்றில் இருந்து 300 குடும்பங்களின் வீடுகளுக்கும் குழாய் இணைப்பு கொடுக்கப்பட்டு உள்ளது. கிணற்றை பராமரிக்க இப்பகுதியை சேர்ந்த மூதாட்டி ஒருவர் நியமிக்கப்பட்டு உள்ளார். தினமும் காலை 6 மணிக்கு அவர் கிணற்றில் இருந்து மோட்டார் மூலம் தண்ணீர் திறந்து விடுவார். மதியம் வரை அனைத்து வீடுகளுக்கும் தண்ணீர் தாராளமாக கிடைக்கும். அதன்பின்பு மறுநாள் தண்ணீர் வழக்கம் போல தண்ணீர் விடப்படும்.

    இக்கிணற்றில் இருந்து தண்ணீர் எடுப்பதால் இங்குள்ள மக்கள் யாரும் மாநகராட்சிக்கு குடிநீர் கட்டணம் செலுத்துவதில்லை. 500 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட கிணறு இப்போதும் கோட்டயம் பகுதி மக்களின் தாகம் தணித்து வருவது ஆச்சரியமாக இருப்பதாக அப்பகுதி மக்கள் கூறினர்.

    • மேலகிருஷ்ணன்புதூர் ஊராட்சி மன்ற தலைவர் ராஜன் தொடங்கி வைத்தார்
    • 15-வது மத்திய நிதி குழு மானியத்திலிருந்து ஒதுக்கீடு செய்து பணியை தொடங்கி வைத்தார்.

    கன்னியாகுமரி:

    மேலகிருஷ்ணன்புதூர் ஊராட்சிக்குட்பட்ட காளியாயன் விளை கிராமத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் ஊராட்சி மன்ற தலைவர் ராஜனை அணுகி தங்கள் பகுதியில் தண்ணீர் தட்டுப்பாடு உள்ளதால் ஒரு ஆழ்குழாய் கிணறு அமைத்து தர வேண்டும் என கோரிக்கை வைத்தனர். அந்த கோரிக்கையை ஏற்று ஊராட்சி மன்ற தலைவர் ராஜன் 15-வது மத்திய நிதி குழு மானியத்திலிருந்து ரூ.3.26 லட்சம் ஒதுக்கீடு செய்து பணியை தொடங்கி வைத்தார். ஊராட்சி மன்ற துணை தலைவர் மகாதேவி ரவிச்சந்திரன், 1-வது வார்டு உறுப்பினர் ராஜகுமாரி கலைக்கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    நிகழ்ச்சியில் ரவிக்குமார், அனந்தகிருஷ்ணன், தியாகராஜன், அழகேசன், முத்துக்குட்டி, முருகன் மற்றும் வார்டு உறுப்பினர்கள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    • அரசு பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தார்.
    • திருப்பூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    பல்லடம் :

    பல்லடம் அருகே தொங்குட்டிபாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட மசநல்லாம்பாளையத்தை சேர்ந்தவர் சுப்ரமணி (வயது 45). இவரது மகள் வைஷ்ணவி (13). இவர் அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில் நேற்று மாலை தங்களது மகளை காணவில்லை என பெற்றோர் பல இடங்களில் தேடி உள்ளனர். அப்போது அருகில் இருந்த தனியாருக்கு சொந்தமான விவசாய தோட்டத்தின் கிணற்றில் விழுந்திருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டது. உடனடியாக இதுகுறித்து திருப்பூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் வந்து தேடியதில் கிணற்றில் வைஷ்ணவியின் உடலை கண்டுபிடித்து மீட்டு மேலே கொண்டு வந்தனர்.

    இது குறித்து அவினாசிபாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மாணவி வைஷ்ணவி உடலை பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மாணவி இறந்ததற்கான காரணம் என்ன? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • முத்து வீரப்பனும்,கணேசனும் கிணற்றில் குளித்துள்ளனர்.
    • கணேசன் உயிருக்கு போராடியபடி கத்தி கூச்சலிட்டார்.

    நெல்லை:

    சங்கரன்கோவில் அருகே உள்ள கரிவலம்வந்த நல்லூரை அடுத்த பெருமாள்பட்டி நடுத்தெருவை சேர்ந்தவர் முத்து வீரப்பன்(வயது 29). கூலி தொழிலாளி. இவரது நண்பர் கணேசன். இவர்கள் 2 பேரும் நேற்று வேலைக்கு சென்றுவிட்டு பெருமாள்பட்டி-மாங்குடி சாலையில் உள்ள கிணற்றில் குளித்துள்ளனர். அப்போது முத்துவீரப்பன் தண்ணீரில் மூழ்கி இறந்தார். கணேசன் உயிருக்கு போராடியபடி கத்தி கூச்சலிட்டார். உடனே தோட்டத்தில் நின்றிரு ந்தவர்கள் அங்கு ஓடி வந்து கிணற்றில் குதித்து கணேசனை மீட்டனர்.

    இதுகுறித்து கரிவல ம்வந்தநல்லூர் போலீசாருக்கு தகவல் தெரி விக்கப்பட்டது. போலீசார் அங்கு விரைந்து வந்து முத்துவீரப்பன் உடலை மீட்டனர். கணேசனுக்கு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    • மழை, வெள்ளம், புயல் உள்ளிட்ட இயற்கை பேரிடரின் போது, பேரிடர் மேலாண்மை திட்டம் செயல்படுத்தப்படுகிறது
    • 1,292 பிராணிகளை தீயணைப்புத்துறையினர் மீட்டுள்ளனர்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்டத்தில், திறந்தவெளி கிணற்றில் விழுந்து கடந்த மூன்றாண்டில் மட்டும் 336 பேர் இறந்துள்ளனர்.மழை, வெள்ளம், புயல் உள்ளிட்ட இயற்கை பேரிடரின் போது மக்களை பாதுகாக்கவும், முன்னெச்சரிக்கை நடவடி க்கை மேற்கொள்ளவும், பேரிடர் மேலாண்மை திட்டம் செயல்படுத்தப்படுகிறது.அந்தந்த மாவட்ட நிர்வாகங்களின் நேரடி கண்காணிப்பில், அந்தந்த மாவட்டங்களில், பேரிடர் சார்ந்து மக்கள் எதிர்கொ ள்ளும் முக்கியமான பிரச்சினைகள் மீது நடவடிக்கை எடுக்க அரசு அறிவுறுத்தியுள்ளது.திருப்பூர் மாவட்டத்தை பொறுத்தவரை கிராம,நகர்ப்புறங்களில் உள்ள குளம், குட்டைகளில் குளிக்க, மீன்பிடிக்க செல்லும் பள்ளி மாணவ, மாணவியர் மற்றும் பொதுமக்கள் பலர் நீரில் சிக்கி பலியாகின்றனர்.நெடுஞ்சாலை ஓரங்களில் திறந்து நிலையிலும், வேலி அமைக்கப்படாத கிணற்றிலும் தவறி விழுந்து பலரும் உயிரிழக்கின்றனர்.

    உயரும் பலி எண்ணிக்கை : கடந்த 2020ல் 104 பேர், திறந்தவெளி கிணறு, குளங்களில் விழுந்து இறந்துள்ளனர். 2021ல் 109 பேர்; 2022ல் 123 பேர் என மூன்றாண்டில் மட்டும் 336 பேர் பலியாகியுள்ளனர்.மாவட்டத்தில் உள்ள தீயணைப்பு நிலையங்க ளுக்கு கடந்த 2020ல் குளம் மற்றும் கிணற்றில் தவறி விழுந்தவர்களை மீட்க கேட்டு 687 அழைப்புகள் வந்துள்ளன. 2021ல் இது 1,308,2022ல் இது 2032 அழைப்புகளாக அதிகரித்துள்ளது.இதில் 80 சதவீதம் அழைப்புகள் திறந்தவெளி கிணற்றில் விழுந்தவர்களை மீட்பது தொடர்பாக தான்.மனிதர்கள் மட்டுமின்றி பூனை, நாய், மான் உள்ளிட்ட பிராணிகளும் அவ்வபோது திறந்தவெளி கிணற்றில் விழுகின்றன.கடந்த 2020ல் 356, 2021ல், 846, கடந்த 2022ல், 1,292 பிராணிகளை தீயணைப்புத்துறையினர் மீட்டுள்ளனர்.

    • பெண்கள் இருவரும் கிணற்றில் உள்ள பைப்பை பிடித்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர்
    • காப்பாற்றிய டி.எஸ்.பி. நவீன்குமார், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சிவகுமார் இருவரையும் போலீசார் பாராட்டினர்.

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் பார்வதி புரம் சானல்கரை பகுதியில் உள்ள சுமார் 30 அடி ஆழமுள்ள கிணற்றிலிருந்து நேற்று நள்ளிரவு பெண்க ளின் அபாய சத்தம் கேட்டது.

    இதையடுத்து அந்த வழியாக சென்றவர்கள் நாகர்கோவில் போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து கட்டுப்பாட்டு அறை போலீசார், நாகர்கோவில் சப்-டிவிஷனுக்குட்பட்ட பகுதியில் ரோந்து பணியில் இருந்த போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    அதன்பேரில் டி.எஸ்.பி. நவீன்குமார், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சிவகுமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அப்போது கிணற்றில் 2 பெண்கள் தத்தளித்து கொண்டிருந்தது தெரியவந்தது. உடனடியாக சப்-இன்ஸ்பெக்டர் சிவகுமார் கிணற்றுக்குள் குதித்தார். அப்போது பெண்கள் இருவரும் கிணற்றில் உள்ள பைப்பை பிடித்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர். அவர்களை போலீசார் மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர்.

    பின்னர் அவர்கள் இருவரிடமும் விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையில் அவர்கள் பார்வதிபுரம் பகுதியை சேர்ந்த தாய்-மகள் என்பது தெரியவந்தது. அவர்கள் எதற்காக தற்கொலைக்கு முயன்றார்கள் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தினார்கள்.

    விசாரணையில் கிணற்றுக்குள் குதித்து தற்கொலைக்கு முயன்ற பெண்ணை வடிவீஸ்வரம் பகுதியில் திருமணம் செய்து கொடுத்துள்ளனர். கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட பிரச்சினை காரணமாக அந்த பெண் தாயார் வீட்டில் வசித்து வந்துள்ளார். ஏற்கனவே கணவன் திட்டியதாக மகளிர் போலீசில் புகார் செய்திருந்தார்.

    விசாரணைக்கு சென்றபோது கணவருடன் வந்த சிலர் தாயாரையும் தங்களையும் திட்டியதால் மன வருத்தம் அடைந்ததாகவும், இதனால் ஏற்பட்ட வருத்தத்தில் கிணற்றில் குறித்து தற்கொலைக்கு முயன்றதாகவும் தெரிவித்துள்ளனர்.

    இதுதொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். நள்ளிரவில் கிணற்றுக்குள் குதித்து தற்கொலைக்கு முயன்ற 2 பெண்களை போலீசார் காப்பாற்றிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பெண்களை காப்பாற்றிய டி.எஸ்.பி. நவீன்குமார், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சிவகுமார் இருவரையும் சக போலீசார் பாராட்டினர்.

    • ஆறு மாதத்திற்கு ஒரு முறை பாசனத்திற்கு நீர் வழங்கப்படுகிறது.
    • தண்ணீர் திருட்டு அபரிமிதமாக நடந்து வருகிறது.

    திருப்பூர் :

    பி.ஏ.பி., பாசன திட்டத்தின் கீழ், கோவை, திருப்பூர் மாவட்டத்திலுள்ள, 3.77 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. பாசன நிலங்கள் நான்கு மண்டலமாக பிரிக்கப்பட்டு, ஆறு மாதத்திற்கு ஒரு முறை பாசனத்திற்கு நீர் வழங்கப்படுகிறது.

    திருமூர்த்தி அணையிலி ருந்து பாசனத்திற்கு நீர் செல்லும், 132 கி.மீ., நீளம் உள்ள பிரதான கால்வாய், ஆயிரம் கி.மீ., நீளம் உடைய கிளைக்கால்வாய்கள் மற்றும் பகிர்மான கால்வாய்களில், நேரடியாகவும், ஓஸ் அமைத்தும், கரையோரம் கிணறு அமைத்து, சைடு போர் முறை என, தண்ணீர் திருட்டு அபரிமிதமாக நடந்து வருகிறது.

    இந்நிலையில், பி.ஏ.பி., பாசன நீர் திருட்டை கட்டுப்படுத்தவும், பாசன விவசாயிகளுக்கு முறையாக பயிர் சாகுபடிக்கு உரிய நீர் வழங்க வேண்டும், என விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர். இது குறித்து, சென்னை உயர் நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டது.

    உயர் நீதிமன்ற உத்தரவு அடிப்படையில், திருப்பூர், கோவை மாவட்டங்களில், பி.ஏ.பி., கால்வாயில் மேற்கொள்ளப்பட்ட கூட்டு நடவடிக்கை குழுவினர், கள ஆய்வு மேற்கொண்டு அறிக்கை தாக்கல் செய்துள்ளனர். அந்த அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

    கடந்த பிப்., 27ம் தேதி நிலவரப்படி, கோவை, திருப்பூர் மாவட்டத்துக்கு உட்பட்ட பி.ஏ.பி., பாசனம் உள்ள வருவாய் கிராமங்களில், மொத்தம், 2,069 இடங்களில் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

    இதில், பாசன கால்வாய்களுக்கு அருகில், 2,895 கிணறுகள் இருப்பது கண்டறியப்பட்டது. விதி மீறி மின் இணைப்பு பெற்றதாக, 1,004 கிணற்றின் உரிமையாளர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.

    மேலும், 884 கிணறுகள் தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டதில், 780 கிணறுகளில் விதிமீறல் உறுதி செய்யப்பட்டது. அதோடு, 288 கிணறுகளின் மின் இணைப்பு துண்டிக்க நோட்டீஸ் வினியோகிக்க ப்பட்டுள்ளது. தற்போது வரை,21 கிணறுகளின் மின் இணைப்பு துண்டிக்கப்ப ட்டுள்ளது. விதிமீறல் தொடர்பாக, 33 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு, அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    • குலசேகரம் தீயணைப்பு நிலைய தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கயிறு கட்டி உடலை மீட்டனர்.
    • திருவட்டார் போலீசார் பிணத்தை கைப்பற்றி ஆசாரிப்பள்ளம் ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    கன்னியாகுமரி:

    திருவட்டார் அருகே நெல்லி விளை புத்தன்வீடு, இட்டகவேலி பகுதியை சேர்ந்தவர் குமாரசுவாமி. இவரது மகன் அனிக்குட்டன் (வயது 37), தொழிலாளி. இவருக்கு இன்னும் திருமணமாக வில்லை. அனிக்குட்டனுக்கு உடல்நிலை பாதிப்பு இருந்ததாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று குமாரசுவாமி வெளியே சென்று பின்னர் வீட்டிற்கு வந்தபோது அனிக்குட்டனை காணவில்லை.

    அவரை பல்வேறு இடங்களில் தேடி பார்த்தும் கண்டு பிடிக்க முடியவில்லை. இந்நிலை யில் அனிக்குட்டன் வீட்டின் பின்புறம் உள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதையடுத்து குலசேகரம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கயிறு கட்டி அனிக்குட்டன் உடலை மீட்டனர்.

    குமாரசுவாமி கொடுத்த புகாரின் பேரில் திருவட்டார் போலீசார் பிணத்தை கைப்பற்றி ஆசாரிப்பள்ளம் ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அனிக்குட்டன் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஷகிலா வேலைக்கு சென்று சேர்த்த பணத்தில் சமீபத்தில் ஒரு நிலம் வாங்கினார். அ
    • தாயும், மகன்களும் சேர்ந்து கிணறு தோண்டி அதில் தண்ணீரும் வந்த தகவல் ஊர் முழுவதும் பரவியது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் மலப்புரத்தை அடுத்த குட்டிப்புரம் பகுதியை சேர்ந்தவர் ஷகிலா (வயது 40).

    ஷகிலாவுக்கு 2 மகன்கள் மட்டும் உள்ளனர். அவர்கள் பிளஸ்-2 மற்றும் 8-ம் வகுப்பு படித்து வருகிறார்கள். 3 பேரும் அந்த பகுதியில் ஒரு வாடகை வீட்டில் வசித்து வந்தனர்.

    ஷகிலா வேலைக்கு சென்று சேர்த்த பணத்தில் சமீபத்தில் ஒரு நிலம் வாங்கினார். அங்கு வீடு கட்ட முடிவு செய்தார். அதற்கு தண்ணீர் தேவை என்பதால் தனது நிலத்தில் சொந்தமாக கிணறு தோண்ட முடிவு செய்தார்.

    அதற்கு அதிக பணம் தேவைப்பட்டதால் அவர் தனது மகன்களுடன் சேர்ந்து தன்னந்தனியாக கிணறு தோண்ட முடிவு செய்தார்.

    இதையடுத்து கடந்த மாதம் கிறிஸ்துமஸ் விடுமுறை விடப்பட்டபோது அவர் தனது 2 மகன்களுடன் சேர்ந்து கிணறு தோண்டும் பணியை தொடங்கினார். இதற்கான கருவிகளை வாடகைக்கு எடுத்து பணி செய்தார். தினமும் காலை 9 மணிக்கு வேலை தொடங்கினால் மாலை 6 மணிவரை இடைவிடாது மூவரும் வேலை செய்தனர்.

    இப்படி 22 நாட்களில் அவர் முழு கிணற்றையும் தோண்டி முடித்தனர். 22-வது நாள் இறுதியில் அவர்கள் தோண்டி கொண்டிருந்தபோது கிணற்றில் தண்ணீர் ஊற்றெடுத்து பெருகியது. இதை கண்டு தாயும், மகன்களும் மகிழ்ச்சியில் துள்ளி குதித்தனர்.

    தாயும், மகன்களும் சேர்ந்து கிணறு தோண்டி அதில் தண்ணீரும் வந்த தகவல் ஊர் முழுவதும் பரவியது. தகவல் அறிந்த மக்கள் அங்கு சென்று பார்த்ததுடன் ஷகிலாவையும், அவரது 2 மகன்களையும் பாராட்டினர்.

    இதுபற்றி ஷகிலா கூறும்போது, கிணறு தோண்டி களைத்திருக்கும்போது எனது மகன்கள் பாட்டு பாடி உற்சாகப்படுத்துவார்கள். அதில் களைப்பை மறந்து மீண்டும் வேலை செய்வோம்.

    கிணற்றில் தண்ணீர் வந்தது மகிழ்ச்சியாக இருக்கிறது. இதுபோல கஷ்டப்பட்டு எப்படியாவது வீட்டையும் கட்ட திட்டமிட்டு உள்ளோம், என்றார்.

    ×