search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பார்சல்"

    • பார்சலில் கடத்தல் பொருட்கள் இருப்பதால் உங்களுக்கு வாட்ஸ் அப் மூலமாகவே வாரண்டை அனுப்பி கைது செய்ய முடியும் என்று மிரட்டல் விடுக்கிறார்கள்.
    • வெளிநாடுகளில் இருந்து வெளி மாநிலங்களில் இருந்தும் மிகப்பெரிய ‘நெட்வொர்க்’ அமைத்து மோசடியை அரங்கேற்றி வருகிறார்கள்.

    சென்னை:

    செல்போன்கள் மூலமாக இன்று இருந்த இடத்தில் இருந்தே எல்லா வேலைகளையும் செய்துவிட முடிகிறது. அதே நேரத்தில் செல்போன் வழியாக பல்வேறு இழப்புகளையும் சந்திக்க நேரிடுகிறது.

    செல்போனில் தொடர்பு கொண்டு பேசும் நபர்கள் சம்பந்தப்பட்ட நபர்களின் வங்கி கணக்கில் இருந்து விதவிதமான வழிகளில் பணத்தை உருவிக் கொண்டிருக்கிறார்கள்.

    உங்களது ஏ.டி.எம். கார்டு செயல் இழந்துவிட்டது. அதனை சரிசெய்ய வேண்டும் என்று பேசி வங்கி கணக்கு விவரங்களை கேட்டு பணத்தை சுருட்டி வந்த மோசடி பேர்வழிகள் நாளுக்கு நாள் புதுப்புது வழிகளில் பொதுமக்களின் வங்கி கணக்கில் இருக்கும் பணத்தை வாரிச் சுருட்டிக் கொண்டே இருக்கிறார்கள். இதுபோன்ற மோசடிக்காரர்கள் வெளிநாடுகளில் இருந்து வெளி மாநிலங்களில் இருந்தும் மிகப்பெரிய 'நெட்வொர்க்' அமைத்து மோசடியை அரங்கேற்றி வருகிறார்கள். இதனால் அவர்களை பிடிப்பது என்பது சவாலாகவே இருந்து வருகிறது.

    இந்நிலையில் இந்த ஆன்லைன் மோசடி கும்பல் பொதுமக்களின் வங்கி கணக்கில் இருந்து தற்போது புதிதாக நூதன முறையில் பலரை ஏமாற்றி பணத்தை அபகரிக்க தொடங்கி உள்ளனர்.

    உங்களது முகவரிக்கு தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் பார்சலில் வந்துள்ளது. நாங்கள் கண்டுபிடித்துவிட்டோம். போதை பொருள் தடுப்பு பிரிவில் இருந்து பேசுகிறோம் என்று மோசடி ஆசாமி ஒருவன் முதலில் போனில் பேசுகிறார். பின்னர் பேசும் நபர் போலீஸ் அதிகாரி என்று கூறுகிறார்.

    இதனால் எதிர்முனையில் பேசிக் கொண்டிருக்கும் அப்பாவி மக்கள் அரண்டு விடுகிறார்கள். இதுபோன்று சென்னையை சேர்ந்த தொழில் அதிபர் ஒருவர் 62 லட்சம் பணத்தை இழந்துள்ளார்.

    தொழில் அதிபரின் செல்போனுக்கு அறிமுகம் இல்லாத புதிய நம்பரில் இருந்து அழைப்பு வந்துள்ளது. அதில் பேசிய நபர் மும்பை துணை கமிஷனர் பேசுவதாக கூறியுள்ளார். உங்களது பெயரில் மும்பையில் உங்களது பெயரில் மும்பையில் இருந்து தாய்லாந்துக்கு கூரியர் மூலமாக பார்சல் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது. அதில் 5 பாஸ்போர்ட்டுகள் 3 கிரெடிட் கார்டுகள் மற்றும் போதை பொருட்கள் உள்ளன என்றும் இதனால் உங்கள் மீது நடவடிக்கை எடுக்கப் போகிறோம் என்றும் அந்த நபர் எச்சரித்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த சென்னை தொழில் அதிபர், நான் சென்னையில் இருக்கிறேன். எனது பெயரை யாரோ தவறாக பயன்படுத்தி உள்ளனர். எனக்கும், அந்த பார்சலுக்கும் சம்பந்தம் இல்லை என்று கூறியுள்ளார்.

    இருப்பினும் மோசடி ஆசாமி போனில் மிரட்டி, நாங்கள் சொல்லும் வங்கி கணக்குக்கு பணம் அனுப்ப வேண்டும் என்று கூறியுள்ளார். இதனால் பயந்து போன சென்னை தொழில் அதிபர் ரூ.62 லட்சத்து 99 ஆயிரம் பணத்தை அனுப்பி உள்ளார்.

    இதுபற்றி யாரிடமும் கூறக்கூடாது என்று மிரட்டல் விடுத்த மோசடி கும்பல் பின்னர் தொடர்பை துண்டித்துவிட்டது. முன்னதாக தொழில் அதிபர் திரும்ப திரும்ப தொடர்பு கொண்டு பேச முற்பட்டுள்ளார். ஆனால் அதற்கு பயன் கிடைக்கவில்லை.

    இந்த மோசடி தொடர்பாக சென்னை சைபர் கிரைம் போலீஸ் துணை கமிஷனர் கீதாஞ்சலி கூறியதாவது:-

    இதுபோன்ற சைபர் கிரைம் மோசடி பேர்வழிகள் அதிக சம்பளம் வாங்கும் நபர்களை கண்காணித்து அவர்களிடமிருந்து பணத்தை பறிக்கிறார்கள்.

    பார்சலில் கடத்தல் பொருட்கள் இருப்பதால் உங்களுக்கு வாட்ஸ் அப் மூலமாகவே வாரண்டை அனுப்பி கைது செய்ய முடியும் என்று மிரட்டல் விடுக்கிறார்கள். இந்த யோசனைகள் 'ஸ்கைப்' செயலி மூலமாக அரங்கேற்றப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது.

    இந்த மோசடி பேர்வழிகள் ஆரம்பத்தில் பணத்தை கேட்பது இல்லை. வங்கி கணக்குகள் மற்றும் அதன் உள்ளே நுழையக்கூடிய வழிகளை மிரட்டி கேட்டுப் பெற்று வருகிறார்கள். இதன் பிறகே வங்கி கணக்கில் இருந்து பணத்தை எடுக்கிறார்கள் அல்லது மிரட்டி பணத்தை பரி மாற்றம் செய்ய சொல்கிறார்கள். தாய்லாந்து மற்றும் ஹாங்காங் பகுதியில் இருந்தே இந்த மோசடிகள் அரங்கேற்றப்பட்டு வருகிறது.

    எனவே இதுபோன்ற நபர்களிடம் பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையோடு இருக்க வேண்டும்.

    ஆன்லைன் மூலமாக பணத்தை இழந்துவிட்டால் உடனடியாக சைபர் கிரைம் உதவி எண்ணை 1930-ல் உடனடியாக புகார் செய்தால் அந்த பணம் கிடைப்பதற்கு வாய்ப்பு ஏற்படும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    இதுபோன்ற சைபர் கிரைம் மோசடி பேர்வழிகளிடம் ஏமாறும் பொது மக்கள் www.cybercrime gov.in என்ற முகவரியிலும் புகார் செய்யலாம் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பிரதிபா மற்றும் அவரது குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர்.
    • ஓட்டலை அதிகாரிகள் மூடிய சம்பவம் மலப்புரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் ஏலூர் பகுதியை சேர்ந்தவர் பிரதிபா. சம்பவத்தன்று இவர் முத்தூரில் உள்ள பரோட்டா கடையில் 4 பிரியாணி பார்சல்கள் வாங்கியிருக்கிறார்.

    அவற்றை குடும்பத்துடன் சாப்பிட வீட்டுக்கு எடுத்து வந்திருக்கிறார். வீட்டில் வைத்து பிரியாணி பார்சல்களை பிரித்த போது, அதில் ஒரு பார்சலில் பிரியாணிக்குள் கோழியின் முழு தலை கிடந்தது. அதனைப்பார்த்து பிரதிபா மற்றும் அவரது குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர்.

    பிரியாணிக்குள் கோழி தலை கிடந்தது குறித்து திரூர் நகராட்சியின் உணவு பாதுகாப்பு அதிகாரிகளிடம் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் சம்பந்தப்பட்ட ஓட்டலில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். பின்பு அந்த ஓட்டலுக்கு சீல் வைத்து மூடினர்.

    பிரியாணிக்குள் கோழியின் முழு தலை கிடந்த விவகாரத்தில் ஓட்டலை அதிகாரிகள் மூடிய சம்பவம் மலப்புரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • வீட்டிற்கு சென்று சாப்பிடுவதற்காக பரோட்டா மற்றும் குருமா பார்சலை பிரித்துள்ளளார்.
    • கவனக்குறைவாக செயல்பட்டதாக கூறி கடைக்கு அபராதம் விதித்தனர்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அடுத்த தருமகுளம் கடைவீதியில் பெருந்தோட்டத்தை சேர்ந்தவர் அசைவ உணவகம் நடத்தி வருகிறார்.

    இந்நிலையில், இவரது கடையில் கீழப்பெரும்பள்ளம் கிராமத்தை சேர்ந்த மூர்த்தி என்பவர் நேற்று பரோட்டா வாங்கி சென்றுள்ளார்.

    வீட்டில் சென்று சாப்பிடுவதற்காக பரோட்டா மற்றும் குருமா பார்சலை பிரித்து பார்த்த போது குருமாவில் பூரான் ஒன்று இறந்த நிலையில் கிடந்துள்ளது.

    இதனை கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக இதுகுறித்து கடையின் உரிமையாளரிடம் கேட்டபோது அவர்கள் முறையாக பதில் அளிக்க வில்லை என கூறப்படுகிறது.

    இதனைஅடுத்த மூர்த்தி இதுகுறித்து உணவு பாதுகாப்பு துறைக்கு புகார் அளித்ததார்.

    புகாரின்பேரில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் உணவகத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    பின்னர், கவனக்குறைவாக செயல்பட்டதாக கூறி கடைக்கு அபராதம் விதித்தனர்.

    மேலும், கடையை முறையாக பராமரிக்காததால் அதனை சீரமைத்த பின்னரே கடையை திறக்க வேண்டும் எனக்கூறி கடையை மூடி சென்றனர்.

    இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    • விமான நிலையங்களில் சுங்க அதிகாரிகள் கண்காணிப்பை பலப்படுத்தினர்.
    • பொடி வடிவில் 410 கிராம் தங்கம் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

    திருவனந்தபுரம்:

    வளைகுடா நாடுகளில் இருந்து கேரளாவுக்கு தங்கம் கடத்தி வரும் சம்பவங்கள் அடிக்கடி நடந்தது. இதையடுத்து விமான நிலையங்களில் சுங்க அதிகாரிகள் கண்காணிப்பை பலப்படுத்தினர்.

    இதையடுத்து கடத்தல் காரர்கள் விமான பார்சல் மூலம் தங்கம் கடத்த தொடங்கினர். அதனையும் சுங்க அதிகாரிகள் கண்டுபிடித்து பறிமுதல் செய்து வந்தனர். இந்நிலையில் ஐக்கிய அரபு நாட்டில் இருந்து கேரளாவின் மலப்புரத்தை சேர்ந்தவருக்கு ஒரு பார்சல் வந்தது. அதனை அதிகாரிகள் சோதித்து பார்த்தபோது, அதில் பொடி வடிவில் 410 கிராம் தங்கம் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

    அதனை அதிகாரிகள் பறிமுதல் செய்ததோடு, அந்த பார்சலை அனுப்பியது யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த மாதத்தில் மட்டும் கேரளாவுக்கு விமான பார்சல் மூலம் தங்கம் கடத்தி வர முயன்றது இது 4-வது முறையாகும்.

    • சங்க 34-வது கோட்ட அளவிலான கூட்டம் நடைபெற்றது.
    • உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு ஏற்ப ஊழியர்களுக்கு மாதம் ரூ.12 ஆயிரம் வழங்க வேண்டும்.

    திருவாரூர்:

    திருவாரூரில் தபால்துறை யின் அகில இந்திய ஆர்எம்எஸ், எம்எம்எஸ் ஊழியர் சங்க 34-வது கோட்ட அளவிலான கூட்டம் நடைபெற்றது.

    கூட்டத்திற்கு கோட்டப்பொறியாளர் வெங்கடசுப்பிரமணியன் தலைமை வகித்தார். மாநில முன்னாள் அமைப்பு செயலாளர் தர்மதாஸ் தேசிய கொடியேற்றினார். சம்மேளனக் கொடியை மாநில செயலாளர் ரமேஷ் ஏற்றி வைத்தார். முன்னாள் மாநிலத்தலைவர் கணேசன் கூட்டத்தை தொடங்கி வைத்தார். நாகை மாலி எம்எல்ஏ, மாநில செயலாளர் பரந்தாமன், எழுத்தாளர் சுரேஷ் பிரதீப் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

    நிகழ்ச்சியில் திருவாரூர் அஞ்சலகத்தில் ஸ்பீடு போஸ்ட், பார்சல் பிரிவு ஆகியவற்றை ஏற்படுத்த வேண்டும். உச்சநீதி மன்ற தீர்ப்புக்கு ஏற்ப ஊழியர்களுக்கு மாதம் 12 ஆயிரம் வழங்க வேண்டும் என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முன்னதாக கோட்ட துணைத் தலைவர் மனோஜ் குமார் வரவேற்றார்.

    முடிவில் கிளைச்செயலாளர் சத்தியராஜ் நன்றி கூறினார்.

    • கொரியர் நிறுவனங்களுக்கு எஸ்.பி. வேண்டுகோள்
    • கஞ்சா, குட்கா உள்ளிட்டபோதை பொருட்கள் விற்பனையை தடுக்கும் வகையில் போலீசார் நடவடிக்கை

    நாகர்கோவில்:

    தமிழகத்தில் கஞ்சா, குட்கா உள்ளிட்டபோதை பொருட்கள் விற்பனையை தடுக்கும் வகையில் போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்.

    குமரி மாவட்டத்தில் எஸ்.பி. ஹரிகிரண் பிரசாத் உத்தரவின் பேரில் கஞ்சா விற்பனையை தடுக்க பல் வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கஞ்சா விற்பனை தொடர்பாக கைது செய்யப்படும் நபர்களிடம் விசாரணை மேற்கொண்டு, அவர்களுக்கு கஞ்சா எங்கிருந்து கிடைத்தது? சப்ளையர் யார்? என்பது தொடர்பாக விசாரிக்கப் பட்டு தொடர் கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சமீப காலமாக கொரியர் சர்வீஸ் மூலமும், பார்சல் சர்வீஸ் சென்டர்கள் மூலமும் கஞ்சா வருவதாக காவல் துறைக்கு தகவல் வந்தது. அதன் பேரில் கொரியர் அலுவலகங்களில் எஸ்.பி., நேரடியாக சென்று ஆய்வு செய்தார்.

    இந்நிலையில் நேற்று மாவட்ட காவல் கண்கா ணிப்பாளர் அலுவலகத்தில் மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டு ஹரிகிரண் பிரசாத் தலைமையில், பார்சல் சர்வீஸ் மற்றும் கொரியர் ஊழியர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலான விழிப்புணர்வு கூட்டம் நடந்தது. இதில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் பேசுகையில், போலீசார் மட்டும் கஞ்சா விற்பனையை தடுக்க முடி யாது. பொதுமக்கள், வியாபாரிகள் உள்பட அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். தற்போது போலீசார் சோதனை தீவிரமாகி உள்ளதால் வெளிமாநிலங்களில் இருந்து கொரியரில் கஞ்சா, புகையிலை பொருட்கள் வருவதாக தகவல் கிடைத்துள்ளது.

    எனவே கஞ்சா விற்பனை பற்றி தகவல் தெரிந்தால் மாவட்டத்தில் அறிமுகப்படுத்தியுள்ள 7010363173 என்ற எண்ணுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். கொரியரில் பார்சல் அனுப்ப வருபவர்கள், பார்சலை பெற வருபர்வர்களிடம் எதாவது ஒரு ஆவண நகல் (ஆதார், ஓட்டுநர் உரிமம்) வாங்கி கொண்டு பார்சலை பெற்று கொள்ளுங்கள்.

    வெளி மாநிலங்களில் இருந்து வரும் பார்சல்களை நன்கு கண்காணித்து அதில் கஞ்சா மற்றும் வேறு ஏதேனும் போதை பொருட்கள் உள்ளதா? என்பதை பரிசோதித்து உரியவரிடம் வழங்க வேண்டும். பார்சல்களில் இருக்கும் முகவரி போலியான முகவரியாக இருந்தாலோ, மேலும் சந்தேகத்திற்கு இடமாக ஏதேனும் பார்சல்கள் இருந்தாலோ. உடனே அருகில் இருக்கும் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்றார்.

    • சுதந்திர தினவிழாவை முன்னிட்டு நாடு முழுவதும் ரெயில்களில் புதுடெல்லிக்கு பார்சல் அனுப்ப தடைவிதிக்கப்பட்டுள்ளது.
    • மற்ற ஊர்களுக்கு அனுப்பப்படும் பார்சலும் பலத்த பரிசோதனைக்கு பின்பே ரெயில்களில் ஏற்றப்படுகின்றன.

    சேலம்:

    சுதந்திர தினவிழாவை முன்னிட்டு நாடு முழுவதும் ரெயில்களில் புதுடெல்லிக்கு பார்சல் அனுப்ப தடைவிதிக்கப்பட்டுள்ளது.

    வழக்கமாக சேலம் ரெயில்வே கோட்டத்தில் இருந்து நூல், பனியன், பட்டு வேஷ்டி, சேலை, இருசக்கர வாகனம், கொசுவலை உள்ளிட்டவை புதுடெல்லிக்கு பார்சல் அனுப்பப்படுகின்றன.

    தற்போது இவற்றை அனுப்ப நாளை வரை தடைவிதிக்கப்பட்டுள்ளது. மற்ற ஊர்களுக்கு அனுப்பப்படும் பார்சலும் பலத்த பரிசோதனைக்கு பின்பே ரெயில்களில் ஏற்றப்படுகின்றன.

    • வருவாயை அதிகரிக்கும் நோக்கில், அரசு விரைவு பஸ்களில் கூரியர், பார்சல் அனுப்பும் திட்டம் துவங்கப்பட உள்ளது.
    • பஸ்சுக்கு மூன்று சரக்கு பெட்டி இணைக்கப்படுகிறது.

    திருப்பூர் :

    வருவாயை அதிகரிக்கும் நோக்கில், அரசு விரைவு பஸ்களில் நாளை 3ம் தேதி முதல் கூரியர், பார்சல் அனுப்பும் திட்டம் துவங்கப்பட உள்ளது. அதற்காக பஸ்சின் பக்க வாட்டில் 2 சரக்கு பெட்டி, பஸ்சுக்கு பின்னால் ஒரு சரக்கு பெட்டி என, பஸ்சுக்கு மூன்று பெட்டி இணைக்கப்படுகிறது. அதன்படி நாள் அல்லது மாத வாடகையில் சரக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது.

    இதற்கு 250 கிராமுக்கு, 50 ரூபாய் என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.திருப்பூர் அரசு போக்குவர–த்து கழக வணிகப்பிரிவு அதிகாரிகள் கூறுகையில், ''எஸ்.இ.டி.சி., டிப்போ கோவையில் தான் உள்ளது. திருப்பூரில் இருந்து சென்னை, திருப்பதிக்கு இரண்டு பஸ்கள் மட்டுமே இயக்கப்படுகிறது.நாகர்கோ–வில், மார்த்தாண்டம், திருநெல்வேலி, பெங்களூரு வழித்தடத்தில் இயக்கப்படும் பஸ்கள், அந்தந்த கிளையில் இருந்து இயக்கப்படுகிறது. கிளைகளில் பார்சல், கூரியர் முன்பதிவு செய்வது குறித்து விரிவான அறிவிப்பு பின்னர் வரும்'' என்றனர்.

    • பார்சல்களை சோதனை செய்து எடுக்க வேண்டும்
    • குமரி. போலீஸ் சூப்பிரண்டு எச்சரிக்கை

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் கஞ்சா விற்பனையை தடுக்க போலீசார் அதிரடி நடவ டிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்.

    நேசமணி நகர் சப்-இன்ஸ்பெக்டர் விஜய குமார் தலைமையிலான போலீசார் நெசவாளர் காலனி பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்ட போது அங்கு வந்த மேல ராமன்புதூர் பகுதியைச் சேர்ந்த வீரமணி (வயது 20), ராமன்புதூர் நாஞ்சில் நகரைச் சேர்ந்த தீபு(19) ஆகிய இருவரையும் பிடித்து விசாரணை செய்தனர்.

    அப்போது அவர்களிடம் கஞ்சா பொட்டலங்கள் இருந்தது தெரியவந்தது. அவர்களிடம் இருந்த ஒரு கிலோ 50 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். இதையடுத்து வீரமணி, தீபு இருவரையும் கைது செய்தனர்.

    இதேபோல் ராஜா க்கமங்கலம் சப்-இன்ஸ்பெக்டர் லூயிஸ் லாரன்ஸ் தலைமையிலான போலீசார் எறும்புகாடு பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக கிடைத்த தகவல் அடிப்படையில் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

    அங்கு நின்று கொண்டி ருந்த ஆசாரி பள்ளத்தை சேர்ந்த ஜெனிஸ் (24), எறும்புகாட்டைச் சேர்ந்த வினோத்(28), மேலரா மன்புதூர் பகுதியைச் சேர்ந்த பிரிஜின் பிரகாஷ் (22) ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.

    அவர்களிடம் இருந்து ஒரு கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

    மேலும் செல்போன், 3 மோட்டார் சைக்கிளையும் போலீசார் பறிமுதல் செய்தனர். கைது செய்ய ப்பட்ட மூன்று பேரிடமும் விசாரணை நடத்தியபோது கூரியர் நிறுவனம் மூலமாக வெளியூர்களிலிருந்து கஞ்சாவை வாங்கி விற்பனை செய்தது தெரிய வந்தது.

    இதையடுத்து இவர்க ளுக்கு வந்த கஞ்சா பொட்டலங்கள் எங்கிருந்து வந்தது என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் கஞ்சா பொட்டலங்கள் ஹைதராபாத்திலிருந்து நாகர்கோவிலில் உள்ள ஒரு கூரியர் நிறுவனத்திற்கு வந்தது தெரியவந்தது.

    இதையடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரன் பிரசாத் தலைமை யிலான போலீசார் அந்த கூரியர் நிறுவனத்திற்குச் சென்று அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

    நிறுவன ஊழியரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதை தொடர்ந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரன் பிரசாத் நிருபர்களிடம் கூறியதாவது:-

    குமரி மாவட்டத்தில் கஞ்சா விற்பனையை தடுக்க பல்வேறு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம். தற்போது கஞ்சா புழக்கம் கட்டுக்குள் வந்துள்ளது.

    வெளியூர்களில் இருந்து பஸ்கள் மற்றும் ெரயில்களில் கொண்டுவரப்படும் கஞ்சாவும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் கூரியர் பார்சல் மூலமாக கஞ்சா விற்பனை நடைபெறுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. கூரியர் நிறுவனத்திற்கு வரும் பார்சல்களை அனுப்பு ம்போது அனுப்புனர், பெறுநர், முகவரி சான்று, செல்போன் எண் போன்றவை கண்டிப்பாக வாங்கி வைத்திருக்க வேண்டும்.

    முறையான பதிவேடுகளை பராமரிக்க வேண்டும். முகவரி சான்று இல்லாமல் பார்சல்களை அனுப்பவோ, வினியோகம் செய்யவோ கூடாது.

    பார்சல்கள் அனுப்பும் போது சந்தேகம் ஏற்பட்டால் பரிசோதனை செய்த பிறகே பார்சலை அனுப்ப வேண்டும்.

    விதிமுறைகளை கடை பிடிக்காத கூரியர் நிறுவனம் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.அனைத்து அலுவலகங்களிலும் கண்டிப்பாக கண்காணிப்பு கேமரா பொருத்தப்ப ட்டிருக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • போலீசார் தீவிர விசாரணை
    • குமரி மாவட்டத்தில் கஞ்சா பழக்கத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் கஞ்சா பழக்கத்தை கட்டுப்படுத்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகரன் பிரசாத் உத்தரவின்பேரில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் நாகர்கோவிலில் உள்ள கொரியர் நிறுவனத்திற்கு வெளியூரிலிருந்து கஞ்சா பார்சல்கள் வந்திருப்பதாக கோட்டார் போலீசுக்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து கோட்டார் போலீசார் சம்பந்தப்பட்ட கொரியர் நிறுவனத்திற்கு விரைந்து சென்றனர். ஆனால் கொரியர் நிறுவனம் மூடப்பட்டு இருந்தது.

    இதையடுத்து அதன் உரிமையாளரை போலீசார் தொடர்பு கொள்ள முயன்றனர். பலமுறை தொடர்பு கொண்டும் அவர் செல்போனை எடுக்கவில்லை.

    இதையடுத்து போலீசார் கஞ்சா பதுக்கி வைத்திருந்த கொரியர் நிறுவனத்தை திறந்து சோதனை நடத்த நடவடிக்கை மேற்கொண்டனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    உலக அளவில் பிரபலமான டப்பாவாலாக்கள் சாப்பாடு மட்டுமல்ல கொரியர், பார்சல் ஆகியவையும் வீடு வீடாக டெலிவரி செய்ய அதிரடி திட்டமிட்டுள்ளனர். #Dabbawalas
    மும்பை:

    சுடச்சுட நமது மனைவி அல்லது தாயார் கைகளால் அன்பொழுக சமைக்கப்பட்ட சாப்பாட்டை வீடு தேடி வந்து பெற்றுக்கொண்டு சம்பந்தப்பட்ட நபரிடம் குறிப்பிட்ட நேரத்திற்குள் சேர்ப்பதுதான் டப்பாவாலாக்களின் வேலை. இதற்காக மாதாமாதம் ஒரு தொகையை இவர்கள் சம்பளமாக பெற்றுக்கொள்கின்றனர்.

    இந்தியாவில் மும்பை, டெல்லி போன்ற பெருநகரங்களில் அதிகளவில் இயங்கி வரும் டப்பாவாலாக்களுக்கு தனியாக சங்கம் இருப்பது குறிப்பிடத்தக்கது. எம்.பி.ஏ. பாடங்களில் கூட ‘பொருளை துல்லியமாக கொண்டு போய் சேர்ப்பது மற்றும் நேரம் தவறாமை’ ஆகிய தலைப்புகளில் டப்பாவாலாக்கள் உதாரணமாக கூறப்பட்டுள்ளனர்.

    அந்த நபர், ரெயில், பஸ், ஆட்டோ மற்றும் சைக்கிள் என எந்த வழியிலாவது சென்று மதியத்திற்குள் ‘டிங் டாங்’ என சேர வேண்டிய இடத்தில் சாப்பாடு கேரியர்களை சேர்க்கின்றார்.

    கேரியரை உரியவரிடம் சேர்ப்பதோடு அவர்களின் பணி முடியவில்லை. வாடிக்கையாளர் சாப்பிட்டு முடிந்ததும் மீண்டும் கேரியரை பெற்றுக்கொண்டு அவர்கள் வீட்டில் ஒப்படைக்கிறார்கள். போக்குவத்து நெரிசல், மழை, வெள்ளம் என எந்த இடர்பாடுகள் வந்தாலும் டப்பாவாலாக்கள் சேவையில் சோர்ந்து போனதே கிடையாது.


    சுமார் 60 கி.மீ சுற்றளவில் இயங்கும் டப்பாவாலாக்கள் ஒரு நாளைக்கு குறைந்தது 2 லட்சம் சாப்பாடு கேரியர்களில் கையாளுகின்றனர்.

    “அடேங்கப்பா! 2 லட்சமா, கேரியர் மாறி வேறு ஆட்களிடம் சேர்ந்து விடாதா?” என கேட்கிறீர்களா. அதற்கு வாய்ப்பே இல்லை. ஒவ்வொரு வீட்டுக்கும் ஒரு அடையாளம் என ரகசிய குறியீடுகளை சாப்பாடு கேரியரின் எழுதி வைத்துள்ளனர்.

    தொழில்நுட்பம் பெரிதும் வளர்ந்து விட்ட இந்நாட்களில் அடையாள அட்டை, செல்போன், எஸ்.எம்.எஸ். என தங்களை அப்டேட் செய்து கொண்ட டப்பாவாலாக்கள் ஆரம்ப காலம் முதல் கொண்ட செயல் முறையை இன்னும் மாற்றவே இல்லை.
    எல்லாவற்றிலும் புகுந்துள்ள புதுமை யோசனைகள் இந்த டப்பாவாலாக்களின் செயல் முறையையிலும் ஒரு புரட்சியை தற்போது கொண்டு வந்துள்ளது.

    சாப்பாடு மட்டுமல்ல பார்சல் மற்றும் கொரியர் டெலிவரி செய்ய அவர்கள் திட்டமிட்டுள்ளனர். இதற்கான ஆரம்ப கட்ட பணிகள் சங்கம் மூலமாக நடந்து வருவதாகவும், விரைவில் சேவை தொடங்கப்படும் என டப்பாவாலாக்கள் தெரிவித்துள்ளனர்.
    ×