search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சாதனை"

    • கீழக்கரையில் தி.மு.க. அரசின் சாதனை விளக்க தெருமுனை பிரசார கூட்டம் இன்று மாலை நடக்கிறது.
    • பஷீர் அகமது தலைமை தாங்குகிறார்.

    கீழக்கரை

    ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை கமுதி பால்கடை அருகில் மாவட்ட செய லாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ ஆலோசனையின் படி தி.மு.க. அரசின் 2 ஆண்டு சாதனை விளக்க தெரு முனை பிரசார கூட்டம் இன்று மாலை 6 மணிக்கு நடக்கிறது. நகர் செயலாளர் எஸ்.ஏ.ஹெச்.பஷீர் அகமது தலைமை தாங்குகிறார்.

    இக்கூட்டத்திற்கு மாநில இளைஞரணி துணைச் செயலாளர்கள் இன்பா ரகு,மதுரை ராஜா ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.நகர் இளைஞரணி அமைப்பாளர், கீழக்கரை நகர் மன்ற துணைத்தலைவர் மற்றும் நிகழ்ச்சி ஒருங்கி ணைப்பாளருமான வக்கீல் ஹமீது சுல்தான், நகர் இளைஞரணி துணை அமைப்பாளர்கள் எபன், சுபியான், அல்லாபக்ஸ், பயாஸ்தீன், நயீம் உள்ளிட்டோர் வரவேற்று பேசுகிறார்கள்.

    ராமநாதபுரம் மாவட்ட தி.மு.க. செயலாளர் காதர் பாட்சா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ., தலைமை கழக பேச்சாளர் பசும்பொன் ரவிச்சந்திரன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு அரசின் 2 ஆண்டு சாதனை குறித்து பேசுகின்றனர்.இதில் கீழக்கரை நகர்மன்ற தலைவர் செஹானஸ் ஆபிதா, மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளர் முகம்மது ஹனிபா, தொழி லாளர் அணி மாவட்ட துணை அமைப்பாளர் அப்துல் காதர், அவைத் தலைவர் ஜமால் பாரூக்,நகர் துணைச் செயலாளர்கள் ஜெய்னுதீன், முனீஸ்வரன், பாண்டியம்மாள்,நகர் பொருளாளர் சித்திக், மாவட்ட பிரதிநிதிகள் தவ்பீக் ராஜா, லதா கென்னடி, நகர் மாணவரணி அமைப்பாளர் இப்திகார் ஹசன், முன்னாள் இளை ஞரணி துணை அமைப்பாளர் கெஜி (எ) கஜேந்திரன், முன்னாள் மாவட்ட பிரதிநிதி மரைக்கா யர் உள்ளிட்ட நிர்வாகிகள், நகர் மன்ற உறுப்பினர்கள், வார்டு செயலாளர்கள், வார்டு பிரதிநிதிகள்,வார்டு இளைஞரணி நிர்வாகிகள் உட்பட ஏராளமானோர் கலந்து கொள்கின்றனர்.

    முடிவில் நகர் இளைஞரணி துணை அமைப்பாளர் 17-வது வார்டு கவுன்சிலர் செய்யது முகம்மது பயாஸ்தீன் நன்றி கூறுகிறார். இதில் கட்சி தொண்டர்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொள்ளுமாறு நகர் இளைஞரணி அமைப்பா ளர் வக்கீல் ஹமீது சுல்தான் அழைப்பு விடுத்துள்ளார்.

    • மாநில அளவிலான கணினி திறனறி தேர்வில் அரசு பள்ளி மாணவர்கள் சாதனை படைத்தனர்
    • இந்த தேர்வில் கொத்தவாசல் நடுநிலைப்பள்ளி மாணவ, மாணவிகள் முதலிடத்தில் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர்

    பெரம்பலூர்:

    திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக தொழில் முனைவோர் மற்றும் திறன் வளர்ப்பு பயிற்சி மையம் சார்பில் தமிழக அளவில் 600 பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு ஓராண்டு கணினி பயிற்சி அளிக்கப்பட்டது. இந்த 600 பள்ளிகளில் 599 பள்ளிகள் தனியார் சி.பி.எஸ்.இ. பள்ளிகளாகும். மீதம் உள்ள ஒரு பள்ளி பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே கொத்தவாசலில் உள்ள அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியாகும். இந்நிலையில் தமிழக அளவில் 600 பள்ளிகளை சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்ற 4 கணினி பாடங்களுக்கான தேர்வு நடைபெற்றது.

    இந்த தேர்வில் கொத்தவாசல் நடுநிலைப்பள்ளி மாணவ, மாணவிகள் முதலிடத்தில் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர் இதில் இப்பள்ளியை சேர்ந்த 5-ம் வகுப்பு மாணவி துவாரகா கம்ப்யூட்டிங் ஸ்கில் பாடத்தில் 300-க்கு 295 மதிப்பெண்கள் பெற்று முதலிடத்தையும், 6-ம் வகுப்பு மாணவி வசுமதி ஆபீஸ் ஆட்டோமேசன் பாடத்தில் 300-க்கு 290 மதிப்பெண்களை பெற்று முதலிடத்தையும், 7-ம் வகுப்பு மாணவி ரம்யா கிராபிக் டிசைன் பாடத்தில் 300-க்கு 287 மதிப்பெண்கள் பெற்று முதலிடத்தையும், 8-ம் வகுப்பு மாணவர் விஷால் வெப் டிசைன் பாடத்தில் 300-க்கு 299 மதிப்பெண்கள் பெற்று முதலிடத்தையும் பிடித்துள்ளனர். இப்பள்ளி மாணவ, மாணவிகளின் சாதனையால் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை 2 மடங்காக உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    • இந்த ஆண்டும் மகசூலில் சாதனை படைக்க வேண்டும்.
    • 5.20 லட்சம் ஏக்கரில் நடவு செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட காவிரி டெல்டா மாவட்டங்களில் முப்போகம் சாகுபடி செய்யப்படும். குறுவை சாகுபடிக்காக ஒவ்வொரு ஆண்டும் மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்படுவது வழக்கம்.

    அதன்படி இந்த ஆண்டு இன்று மேட்டூர் அணையில் இருந்து தண்ணீரை முதல் -அமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்.

    இன்னும் ஓரிரு நாட்களில் அந்த தண்ணீர் கல்லணைக்கு வந்து சேரும்.

    அதன் பிறகு அங்கிருந்து பாசனத்துக்காக காவிரி, கொள்ளிடம் ,கல்லணை கால்வாய், வெண்ணாற்றில் தண்ணீர் திறந்து விடப்படும்.

    இதையொட்டி தற்போது டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன.

    காவிரி நீர் வருவதற்கு முன்பாக கடந்த வாரம் பெய்த மழையை பயன்படுத்தி வயலில் உழவு செய்வது, வரப்புகளை சீரமைப்பது , நாற்றங்கால் தயாரிப்பது உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

    குறுவை சாகுபடியில் கடந்தாண்டை போலவே இந்த ஆண்டும் மகசூலில் சாதனை படைக்க வேண்டும் என்பதால் காவிரி டெல்டா மாவட்டங்களில் வழக்கமாக மேற்கொள்ளப்படும் 3.60 லட்சம் ஏக்கரை விட 5.20 லட்சம் ஏக்கரில் நடவு செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    இதற்கு தேவையான விதைகள், உரங்கள் ஆகியவற்றை வேளாண் விரிவாக்க மையங்கள், கிடங்குகள், தனியார் உர விற்பனை நிலையங்களில் இருப்பு வைத்து விற்பனை செய்து விவசாயிகளுக்கு தேவையான ஆலோ சனைகளை வேளாண்மை துறையினர் வழங்கி வருகின்றனர்.

    இதனால் இந்த ஆண்டும் இலக்கை விஞ்சி குறுவை சாகுபடி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • ராமநாதபுரத்தில் பா.ஜ.க. சார்பில் மத்திய அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி நடந்தது.
    • ஏற்பாடுகளை சவுந்தரபாண்டியன் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

    கீழக்கரை

    ராமநாதபுரத்தில் பிரதமர் மோடியின் 9 ஆண்டு கால ஆட்சி சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சி நடந்தது. இந்த கண்காட்சியை பா.ஜ.க. மாவட்ட தலைவர் தரணி முருகேசன் தொடங்கி வைத்தார்.

    அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அதற்கான பணியை பா.ஜ.க.வினர் தொடங்கி தீவிரமாக மத்திய அரசின் சாதனைகளை மக்களிடம் கொண்டு சேர்த்து தற்போதே தீவிர பிரசாரத்தை தொடங்கி உள்ளனர்.

    இதன் ஒரு கட்டமாக இந்த புகைப்பட கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ராமநாதபுரம் பா.ஜ.க. தகவல் தொழில்நுட்ப அணி மற்றும் வழக்கறிஞர் அணி சார்பில் நடைபெற்ற இந்த கண்காட்சியில் அரசின் சாதனைகளை விளக்கும் வகையில் புகைப்படங்கள் வைக்கப்பட்டிருந்தன.

    நிகழ்ச்சியில் பா.ஜ.க. பொதுச்செயலாளர் ஆத்மா கார்த்திக், நிர்வாகிகள் முருகன், சங்கீதா, குமரன், பாலமுருகன், நகர் தலைவர் கார்த்திகேயன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை சவுந்தரபாண்டியன் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

    • ராஜபாளையத்தில் பா.ஜ.க. சார்பில் சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடந்தது.
    • 9 ஆண்டுகளில் செய்த சாதனைகள் குறித்த கூட்டம் நடைபெற்றது.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் அருகே உள்ள தளவாய்புரம் பேருந்து நிலையம் அருகே பிரதமர் மோடியின் தலைமையில் நடைபெறும் மத்திய அரசின் 9 ஆண்டு கால சாதனைகளை விளக்கி ராஜபாளையம் ஒன்றிய பா.ஜ.க. சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

    கூட்டத்திற்கு வடக்கு ஒன்றிய தலைவர் சிவசக்தி தலைமை வகித்து பேசினார். மாநில செயற்குழு உறுப்பினர் சோலையப்பன், மாவட்ட பொது செயலாளர் போத்திராஜ், பட்டியலின மாவட்ட துணை தலைவர் கதிரேசன் மற்றும் முத்துக்குமார். செல்வராஜ் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் முன்னிலையில் ஏராளமான நிர்வாகி கள் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் மத்திய அரசு 9 ஆண்டுகளில் செய்த சாதனைகள் குறித்த கூட்டம் நடைபெற்றது.

    • தனியார் பள்ளியில் எல்கேஜி படித்து வருகிறார்.
    • சிறுமிக்கு அவார்டு, மெடல் மற்றும் சர்டிபிகேட் ஆகியவை வழங்கி பாராட்டினர்.

    அவினாசி :

    திருப்பூர் மாவட்டம் அவினாசியை அடுத்து கருவலூரை சேர்ந்தவர்கள் விக்னேஷ் -ரோகினி. இவர்களது மகள் இனியா (வயது 5).

    இவர் அவினாசியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் எல்கேஜி படித்து வருகிறார் .இந்த நிலையில் சீர்காழியில் நடந்த ஜாக்கி புக் ஆப் வோல்டு ரெக்கார்ட நிறுவனம் நடத்தும் 10நிமிட சவால் நிகழ்ச்சியில் ஆன்லைன் மூலம் கலந்து கொண்டு 10 நிமிடத்தில் 135 திருக்குறள் ஒப்புவித்து சாதனை படைத்துள்ளார். இதனைப் பாராட்டி ஜாக்கி புக் ஆப் வேர்ல்டு ரெக்கார்ட் நிறுவனம் சிறுமிக்கு அவார்டு, மெடல் மற்றும் சர்டிபிகேட் ஆகியவை வழங்கி பாராட்டினர்.

    • மதுரையில் நடக்கும் அ.தி.மு.க. மாநாடு கின்னஸ் சாதனையில் இடம் பிடிக்கும்.
    • முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பேட்டியளித்தார்.

    மதுரை

    மதுரை மாவட்டம் வளையங்குளம் கருப்பசாமி கோவில் மைதானத்தில் வருகிற ஆகஸ்டு மாதம் 20-ந்தேதி அ.தி.மு.க. மாநாடு நடக்கிறது. இதற்கு அனுமதி கேட்டும், பாதுகாப்பு அளிக்க கோரியும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவபிரசாத்தி டம் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார், எம்.எல்.ஏ.க்கள் ராஜன் செல்லப்பா, பெரிய புள்ளான், தகவல் தொழில் நுட்ப பிரிவின் மதுரை மண்டல செயலாளர் ராஜ் சத்யன் மற்றும் நிர்வாகிகள் மனு அளித்தனர். பின்னர் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, நிருபர்களிடம் கூறியதா வது:-

    அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மிகச்சிறப்பாக கட்சியை வழி நடத்தி வருகி றார். ஆகஸ்டு 20-ந்தேதி மதுரை வளையங்குளம் பகுதியில் மிகப்பெரிய அளவில் அ.தி.மு.க. மாநில மாநாடு நடைபெறுகிறது.

    இந்த மாநாடு நடத்த அனுமதிக்க கோரியும், பாதுகாப்பு அளிக்க கோரியும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுவிடம் மனு அளித்துள்ளோம். இந்தியாவில் இதுவரை நடக்காத அளவில் இந்த மாநாட்டை நடத்தவும், கின்னஸ் சாதனையில் இடம் பிடிக்க வைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

    இந்தியாவே திரும்பி பார்க்கும் வகையில் நடத்தப் படும் இந்த மாநாட்டில் 60 லட்சம் அ.தி.மு.க. தொண்டர் கள் பங்கேற்க உள்ளனர்.

    இவவாறு அவர் கூறினார்.

    • மாநில அளவிலான போட்டியில் அருப்புக்கோட்டை பள்ளி மாணவர்கள் சாதனை படைத்தனர்.
    • ஒரு லட்சத்து 15 ஆயிரம் மாணவர்கள் கலந்து கொண்டு 26 ஆயிரத்து 750 யோசனைகளை சமர்ப்பித்திருந்தனர்.

    அருப்புக்கோட்டை

    பள்ளிக்கல்வித்துறை, குறு-சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை சார்பில் அறிவியல் கண்டுபிடிப்புகளை உருவாக்கும் போட்டிகள் மாவட்ட அளவிலும், மண்டல அளவிலும் நடைபெற்றன. இதில் அருப்புக்கோட்டை எஸ்.பி.கே. மேல்நிலைப் பள்ளியின் ஐன்ஸ்டீன் குழுவைச் சேர்ந்த 11-ம் வகுப்பு மாணவர்கள் லலித்குமார், கோபிநாத், அபிஷேக் அடங்கிய குழு சமர்பித்த யோசனை ட்ரான்ஸ்பார்மர் செக்யூரிட்டி மாவட்ட அளவில் முதல் 10 இடங்களுக்குள் தேர்வு செய்யப்பட்டு, ஜனவரி மாதம் மண்டல அளவில் நடைபெறும் போட்டியில் விருதுநகர் மாவட்டம் சார்பாக கலந்து கொள்ள தேர்வு செய்யப்பட்டது. வெற்றி பெற்ற மாணவர்களையும், உறுதுணையாக இருந்த அறிவியல் ஆசிரியர் சரவணகுமார் அருப்புக்கோட்டை நாடார்கள் உறவின்முறை தலைவர் காமராஜர் ஏ.பி.கே. கல்விக்குழும தலைவர் ஜெயக்குமார், பள்ளி தலைவர் சிவராமகிருஷ்ணன், பள்ளிச் செயலாளர் மணி முருகன், தலைமை ஆசிரியர் ஆனந்தராஜன் மற்றும் ஆசிரியர்கள் மாணவர்களை பாராட்டினர்.

    கடந்த மே 6-ந்தேதி கிருஷ்ணன் கோவிலில் உள்ள கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற மாநில அளவிலான இறுதிப்போட்டியில் பங்கேற்று 3-ம் இடத்தை பெற்று ஒரு லட்சம் ரூபாய் ரொக்க பரிசினையும், முதல்வர் விருதினையும் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளனர். விரைவில் சென்னையில் நடைபெறும் விழாவில் முதல்-அமைச்சரிடம் விருது பெற உள்ளனர்.

    முன்னதாக இந்த போட்டியில் தமிழ்நாடு முழுவதும் ஒரு லட்சத்து 15 ஆயிரம் மாணவர்கள் கலந்து கொண்டு 26 ஆயிரத்து 750 யோசனைகளை சமர்ப்பித்திருந்தனர்.

    • 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் இலுப்பூர் மதர் தெரசா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி சாதனை படைத்துள்ளது
    • 100 சதவீத தேர்ச்சிக்கு உழைத்த முதல்வர் மற்றும் ஆசிரியர்களையும் பள்ளியின் நிறுவனத் தலைவர் இரா.சின்னத்தம்பி, தாளாளர் ஆர்.சி. உதயகுமார் மற்றும் இயக்குனர் மா. பூங்குன்றன் ஆகியோர் பாராட்டினர்.

    புதுக்கோட்டை.

    புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரில் உள்ள மதர் தெரசா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர். அதேபோன்று பிளஸ் 2 பொதுத் தேர்விலும் 600 க்கு 571 மதிப்பெண் இப்பள்ளி சாதனை படைத்துள்ளது. பிளஸ் 2-வில் முகமது ஆதில் என்ற மாணவன் வணிகவியல் கணினி பயன்பாடுகள் பாடத்தில் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்றும், தீக்ஷா என்ற மாணவி வணிகவியல் பாடத்தில் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்றும் பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளனர்.

    10ம் வகுப்பு பொதுத்தேர்வில் எம்.ஸ்ரீனிவாசன், எஸ். ஸ்ரீநிதி, எம்.பிரவீன் ஆகிய மாணவ மாணவிகள் சிறப்பிடம் பெற்று பள்ளிக்கும் பெற்றோர்களுக்கும் பெருமை சேர்த்துள்ளனர். சிறப்பிடம் பெற்ற மாணவர்களையும், 100 சதவீத தேர்ச்சிக்கு உழைத்த முதல்வர் மற்றும் ஆசிரியர்களையும் பள்ளியின் நிறுவனத் தலைவர் இரா.சின்னத்தம்பி, தாளாளர் ஆர்.சி. உதயகுமார் மற்றும் இயக்குனர் மா. பூங்குன்றன் ஆகியோர் பாராட்டினர்.

    • 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் விராலிமலை விவேகா மெட்ரிக் பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை பெற்றது
    • சிறப்பிடம் மற்றும் 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற அனைத்து மாணவர்களையும் பள்ளி முதல்வர், நிர்வாகிகள், ஆசிரியர்கள், அலுவலர்கள், பெற்றோர்கள் வாழ்த்துக்கள் கூறி பாராட்டினர்.

    விராலிமலை,

    புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் உள்ள விவேகா மெட்ரிக். மேல் நிலைப்பள்ளி 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளது. குறிப்பிடத்தக்க வகையில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில், மாணவி சொர்ணராகினி வணிகவியல், கணக்குப்பதிவியல், கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் ஆகிய பாடங்களில் 100-க்கு 100 மதிப்பெண்கள் பெற்று பள்ளிக்கு பெருமை தேடி தந்துள்ளார்.

    மேலும் மாணவி ஹரிலட்சுமி பயாலஜி பாடத்தில் 100-க்கு 100 மதிப்பெண்கள் பெற்று மேலும் பெருமை சேர்த்துள்ளார். இதே போல 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் மாணவிகள் தர்ஷினி 477 மதிப்பெண்களும், பவதாரிணி 475 மதிப்பெண்களும், குணபிரியா 473 மதிப்பெண்களும் பெற்று சிறப்பிடம் பெற்று தேர்ச்சியடைந்ததோடு, பள்ளியின் புகழை பறைசாற்றி உள்ளனர்.சிறப்பிடம் மற்றும் 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற அனைத்து மாணவர்களையும் பள்ளி முதல்வர், நிர்வாகிகள், ஆசிரியர்கள், அலுவலர்கள், பெற்றோர்கள் வாழ்த்துக்கள் கூறி பாராட்டினர்.

    10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் தொடர்ந்து 100 சதவீதம் வெற்றி கண்டு சாதனை படைத்து வரும் விராலிமலை விவேகா மெட்ரிக். மேல் நிலைப்பள்ளியில் தற்போது பிரிகேஜி முதல் 9-ம் வகுப்பு மற்றும் 11-ம் வகுப்பு வரையில் மாணவர் சேர்க்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.இது குறித்த மேலும் விவரங்களுக்கு 04339-220087, 04339 221380, 89402 43366, 89402 43377, 89402 43388 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    • 3 மணி நேரம் தொடர்ந்து சிலம்பம் சுற்றி மாணவர் சாதனை படைத்தார்.
    • இளைய மன்னர் நாகேந்திர சேதுபதி உலக சாதனை சான்றிதழ் வழங்கி கவுரவித்தார்.

    கீழக்கரை

    ராமநாதபுரத்தில் நோபல் உலக சாதனை மற்றும் கனி சிலம்ப விளையாட்டு, சிலம்பக்கலை அகாடமி இணைந்து இடைவிடாமல் 3 மணி நேரம் சிலம்பம் சுற்றும் சாதனை நிகழ்ச்சி செய்யாலூர் ஆர்.கே.சாமி கல்லூரியில் நடந்தது.

    சிலம்ப விளையாட்டுப் பள்ளியின் நிறுவனர் அகமது மரைக்கா, கனி சிலம்பப்பள்ளி நிறுவனர் வரிசை கனி ஆகியோர் தலைமை தாங்கினர். இதில் 3 மணிநேரம் உலக சாதனைக்காக 6 பள்ளி களைச் சேர்ந்த மாணவ- மாணவிகள் பங்கேற்று சிலம்பம் சுற்றினர்.

    ராமநாதபுரம் முஹம்மது சதக் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் 7-ம் வகுப்பு மாணவர் முகமது அப்துல் ஹாலித், ஆர்.கே. சாமி கல்லூரியில் இருந்து நல்லாங்குடி கிராமம் வரையிலும், பின்னர் நல்லாங்குடியில் இருந்து ஆர்.கே.சாமி கல்லூரி வரையிலும் மொத்தம் 10 கிலோமீட்டர் தூரத்தை 1 மணி நேரம் ஸ்கேட்டிங் மற்றும் சிலம்பம் சுற்றியபடி சாதனை படைத்தார்.

    இந்த மாணவருக்கு ராமநாதபுரம் இளைய மன்னர் நாகேந்திர சேதுபதி உலக சாதனை சான்றிதழ் வழங்கி கவுரவித்தார். இதில் திருப்பூரை சேர்ந்த சோழன் சிலம்பம் மற்றும் விளை யாட்டு அகாடமி மாண வர்கள் கலந்துகொண்டு சிலம்பம் சுற்றினர்.

    • மாணவி மரியம் தமிழில் 92 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.
    • வேதியியல் பாடத்தில் மாணவி அனுசியா 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.

    தென்காசி:

    பிளஸ்-1 பொதுத்தேர்வை இலஞ்சி பாரத் மாண்டிசோரி பள்ளி மாணவ-மாணவிகள் மொத்தம் 63 பேர் எழுதினர். மாணவி ஹரிணி சமஸ்கிருதத்தில் 99 மதிப்பெ ண்களும், ஆங்கிலத்தில் 95 மதிப்பெண்களும், வணிகவியலில் 76 மதிப்பெ ண்களும், கணக்குப் பதிவியலில் 92 மதிப்பெண்களும், பொருளியலில் 98 மதிப்பெண்களும், வணிக கணிதத்தில் 80 மதிப்பெண்களும் பெற்று முதலிடத்தில் சாதனை படைத்தனர். மாணவி மரியம் தமிழில் 92 மதிப்பெண்களும், ஆங்கிலத்தில் 91 மதிப்பெ ண்களும், இயற்பியலில் 92 மதிப்பெண்களும், வேதியலில் 94 மதிப்பெண்களும், உயிரியலில் 97 மதிப்பெண்களும், கணிதத்தில் 73 மதிப்பெண்களும் பெற்று 2-ம் இடத்தை பிடித்துள்ளார். மாணவி அனுசியா தமிழில் 75 மதிப்பெண்களும், ஆங்கிலத்தில் 86 மதிப்பெ ண்களும், இயற்பியலில் 97 மதிப்பெண்களும், வேதியலில் 100 மதிப்பெண்களும், உயிரியலில் 90 மதிப்பெண்களும், கணிதத்தில் 87 மதிப்பெண்களும் பெற்று 3-ம் இடத்தை பிடித்துள்ளார்.

    மேலும் பாடவாரியாக தமிழில் 92 மதிப்பெண்களும், ஆங்கிலத்தில் 96 மதிப்பெ ண்களும், சமஸ்கிருதத்தில் 99 மதிப்பெண்களும், இயற்பியலில் 97 மதிப்பெண்களும், வேதியலில் 100 மதிப்பெண்களும், உயிரியலில் 97 மதிப்பெ ண்களும், பொருளியலில் 98 மதிப்பெண்களும், கணக்குப் பதிவியலில் 92 மதிப்பெண்களும் பெற்றுச் சாதனை படைத்தனர்.

    பிளஸ்-1 பொதுத்தேர்வில் சாதனை படைத்த மாணவ, மாணவிகளை பாரத் கல்விக் குழுமத் தலைவர் மோகனகிருஷ்ணன், செயலாளர் காந்திமதி மோகனகிருஷ்ணன், இயக்குநர் ராதாபிரியா, ஆலோசகர் உஷா ரமேஷ் ஆகியோர் பாராட்டினர்.

    ×